السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 28 April 2026

எறும்பும்_இறைஞானியும்

 

எறும்பும்_இறைஞானியும்


ஒருமுறை அபூபக்கர் ஷிப்லி அவர்கள் கடைவீதியில் ஒரு பை நிறைய கோதுமையை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பினார்கள்.


 வீட்டிற்கு வந்து பையைத் திறந்தபோது, கோதுமை மணிகளுக்கு இடையே ஒரு சிறிய எறும்பு அங்குமிங்கும் பதற்றமாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

அந்தக் காட்சியைக் கண்டதும் இமாம் அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள்.

அவர்கள் சிந்தித்துப் பார்த்தார்கள்:


"இந்த எறும்பு கடைவீதியில் உள்ள ஒரு கடையிலிருந்து இங்கு வந்துவிட்டது. இப்போது இது தன் குடும்பத்திலிருந்தும், தன் கூட்டத்திலிருந்தும் பிரிந்து தவிக்கிறது. நான் அறியாமல் செய்த இந்தச் செயலால் ஒரு ஜீவன் அதன் இருப்பிடத்தை இழந்துவிட்டதே!"


#கருணை_மிகுந்த_செயல்


சற்றும் தாமதிக்காமல், அந்த ஒரு சிறிய எறும்புக்காக மீண்டும் கடைவீதிக்குச் செல்ல முடிவு செய்தார்கள். அவர்கள் வந்த தூரம் குறைவானது அல்ல, ஆனாலும் அந்த உயிரினத்தின் மீது கொண்ட கருணையால் மீண்டும் கோதுமைப் பையைத் தூக்கிக்கொண்டு கடைவீதிக்கு நடந்தார்கள்.


அங்கு சென்று, தான் எந்தக் கடையிலிருந்து கோதுமை வாங்கினார்களோ, அதே இடத்திலேயே அந்த எறும்பை மென்மையாக இறக்கி விட்டார்கள். தன் கூட்டத்தோடு இணைந்த அந்த எறும்பைப் பார்த்த பின்னரே இமாம் அவர்கள் நிம்மதியடைந்தார்கள்.


#மரணத்திற்குப்_பின்_கிடைத்த_கூலி


அபூபக்கர் ஷிப்லி அவர்கள் காலமான பிறகு, ஒருவர் அவர்களைக் கனவில் கண்டார். அப்போது அவரிடம், "இறைவன் உங்களை எப்படி நடத்தினான்?" என்று கேட்கப்பட்டது.


அதற்கு ஷிப்லி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்:


"இறைவன் என்னிடம், 'ஷிப்லியே! உனது எந்தச் செயலுக்காக உனக்கு சொர்க்கத்தை வழங்கினேன் என்று தெரியுமா?' எனக் கேட்டான். நான் எனது வணக்க வழிபாடுகள், தர்மங்கள் மற்றும் புனிதப் பயணங்களைக் கூறினேன். ஆனால் இறைவன் 'இல்லை' என்று கூறிவிட்டான்."

இறுதியாக இறைவன் கூறினான்:

"ஒரு குளிரான நாளில், தன் கூட்டத்தைப் பிரிந்து தவித்த அந்தச் சிறிய எறும்பின் மீது நீ காட்டிய கருணைக்காகவும், அதை மீண்டும் அதன் இருப்பிடத்தில் சேர்த்த உனது அந்தப் பண்பிற்காகவும் உன்னை நான் மன்னித்து சொர்க்கத்தை வழங்கினேன்."


#நாம்_கற்கும்_பாடம்

சிறிய நன்மையும் பெரிது: நாம் செய்யும் ஒரு மிகச்சிறிய நல்ல காரியம், இறைவனின் பார்வையில் மிகப் பெரியதாக இருக்கலாம்.


#படைப்பினங்கள்_மீது_அன்பு: மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அற்பமாகத் தெரியும் எறும்பு போன்ற உயிரினங்களுக்கும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது.


#பணிவு: 

ஒரு பெரிய ஞானியாக இருந்தும், ஒரு எறும்புக்காகத் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவழித்த அந்தப் பணிவே உயரிய பண்பு.


இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கு மிகப் பெரிய காரியங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை; உண்மையான மனதுடன் செய்யப்படும் சிறு நற்செயலே போதுமானது என்பதை இந்த வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


ஆதாரம் - تذكرة الأولياء , الرسالة القشيري)

 தத்கிரத்துல் அவ்லியா,

அர்-ரிஸாலத்துல் குஷைரிய்யா

நற்காலை உறக்கம்: மார்க்க மற்றும் மருத்துவப் பார்வை

நற்காலை உறக்கம்: மார்க்க மற்றும் மருத்துவப் பார்வை

 நற்காலை உறக்கம்: மார்க்க மற்றும் மருத்துவப் பார்வை


​نومة الصبحة: نظرة شرعية وطبية


தொகுப்பு : மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ 


​அதிகாலை நேரம் என்பது பரக்கத் (அருள்) நிறைந்த நேரமாகும். அந்த நேரத்தில் உறங்குவது குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களை இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.


​1. அடிப்படைச் சட்டம் (الحكم الشرعي الأساسي)

فالنوم بعد الصبح قد كرهه بعض أهل العلم نظرا لما يترتب عليه من آثار صحية وغيرها إلا إذا كان لعارض أو ضرورة، والأصل جواز النوم في هذا الوقت.


பஜர் தொழுகைக்குப் பின் உறங்குவதை அறிஞர்களில் சிலர் வெறுக்கத்தக்கதாக (மக்ரூஹ்) கருதுகின்றனர். 


இதற்கு உடல்நலப் பாதிப்புகள் மற்றும் இதர காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன.


 எனினும், ஒருவருக்குத் தேவை அல்லது கட்டாயம் ஏற்படும் போது அவ்வாறு உறங்குவது அனுமதிக்கப்பட்டதே (முபாஹ்).


 அடிப்படையில் இந்த நேரத்தில் உறங்குவது தடுக்கப்பட்ட ஒன்றல்ல.


​2. இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களின் விளக்கம் (كلام ابن القيم رحمه الله)

قال ابن القيم: ونوم الصبحة يمنع الرزق، لأن ذلك وقت تطلب فيه الخليقة أرزاقها، وهو وقت قسمة الأرزاق، فنومه حرمان إلا لعارض أو ضرورة.


இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகையில்: "அதிகாலை உறக்கம் வாழ்வாதாரத்தைத் தடுக்கிறது.


 ஏனெனில், அது படைப்பினங்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடும் மற்றும் அவை பங்கிடப்படும் நேரமாகும்.


 எனவே, ஒரு காரணமோ அல்லது தேவையோ இன்றி அந்த நேரத்தில் உறங்குவது அந்த அருள்களை இழப்பதாகும்" என்கிறார்.


​3. பகல் உறக்கத்தின் வகைகள் (أقسام نوم النهار)

قيل: نوم النهار ثلاثة: خُلق، وخُرق، وحُمق. فالخُلق: نومة الهاجرة (القيلولة). والخرق: نومة الضحى، تشغل عن أمر الدنيا والآخرة. والحمق: نومة العصر.

பகல் நேர உறக்கத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:


​நற்பண்பு (خُلق): 


இது 'கைலூலா' எனப்படும் நண்பகல் உறக்கம் (நபிவழி).


​அறியாமை (خُرق): 


இது முற்பகல் (ளுஹா) நேரத்து உறக்கம்; இது துனியா மற்றும் மறுமையின் வேலைகளில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.


​முட்டாள்தனம் (حُمق): 


இது அஸர் தொழுகைக்குப் பின் உறங்குவது. இது புத்தியைக் குறைக்கும் என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.


​4. முன்னோர்களின் அறிவுரை (نصائح السلف الصالح)

رأى عبد الله بن عباس ابنا له نائما نومة الصبحة، فقال له: قم، أتنام في الساعة التي تقسم فيها الأرزاق؟ وعن عمر رضي الله عنه: إياك ونومة الغداة فإنها مبخرة مجفرة.


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தனது மகன் அதிகாலையில் உறங்குவதைக் கண்டபோது: "எழுந்திரு! வாழ்வாதாரங்கள் பங்கிடப்படும் நேரத்தில் நீ உறங்குகிறாயா?" என்று கேட்டார்கள்.


 உமர் (ரலி) அவர்களும் அதிகாலை உறக்கத்தை எச்சரித்துள்ளார்கள், அது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, சோம்பலை உண்டாக்கும் என்பது அவர்களின் கருத்தாகும்.


​5. (الخاتمة)

சுருக்கமாகக் கூறுவதானால், அதிகாலையில் உறங்குவது ஹராம் அல்ல என்றாலும், அந்த நேரத்தை இபாதத்களிலும், வாழ்வாதாரத் தேடலிலும் செலவிடுவது சிறந்தது.


 "யா அல்லாஹ்! 

🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

என் உம்மத்தினருக்கு அவர்களின் அதிகாலை நேரத்தில் பரக்கத் செய்வாயாக" எனும் நபிமொழிக்கேற்ப நடப்பது நமது ஈருலக வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

Tuesday, 21 April 2026

எலும்புகளை குப்பையில் வீசலாமா ؟

 


எலும்புகளை குப்பையில் வீசலாமா ? 

********************************************


#எலும்புகளை குப்பையில் வீசும்போது “பிஸ்மில்லாஹ்” சொல்ல மறக்காதீர்கள்.

ஏனெனில் அது மீண்டும் இறைச்சி சேர்வதற்கான காரணமாகி, முஸ்லிம் ஜின்னுகளுக்கான உணவாக ஆகும்.


தொகுப்பு : 

மெளலவி HM யூசுப் முஸ்தபி, காதிரி

Muhammed Yoosuf Musthafi 


இதனை ஒரு சதகா (தர்மம்)என நினைத்து, நல்லதும் சுத்தமானதுமான உணவாக முஸ்லிம் ஜின்னுகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று நினையுங்கள்.


இந்த முஸ்லிம் ஜின்னுகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உணவை கேட்டபோது, அவர் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட ஒவ்வொரு எலும்பும் உங்களுக்கு (உணவாக) கிடைக்கும்.”


அதனால், நீங்கள் சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, பின்னர் அந்த எலும்பை எறிந்தால், முஸ்லிம் ஜின்னுகள் அதனைப் பெறும்போது, அது மீண்டும் இறைச்சியுடன் இருப்பதாக மாறி, அவர்கள் அதனை உண்பார்கள்.


அதனால் தான், நீங்கள் உணவின் தொடக்கத்தில் “பிஸ்மில்லாஹ்” சொல்ல மறந்துவிட்டால்:

“பிஸ்மில்லாஹ் அவ்வலஹு வ ஆகிரஹு”(ஆரம்பத்திலும் முடிவிலும் அல்லாஹ்வின் பெயர்) என்று சொல்ல வேண்டும்.


ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் அந்த இறைச்சியை உண்டு, எலும்பை எறிந்தால், முஸ்லிம் ஜின்னுகள் அதிலிருந்து உணவுபெற முடியாது; அது காஃபிர் ஜின்னுகளுக்குச் சென்று விடும்.


இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஜின்னுகள் வந்து உணவு கேட்டபோது, அவர் கூறினார்கள்:


 “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்ட ஒவ்வொரு எலும்பும் உங்களுக்கு, அது மிகுந்த இறைச்சியுடன் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு மலமுமே உங்கள் மிருகங்களுக்கு தீவனமாகும்.”


அதன்பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:

“அவற்றினால் (எலும்பும், மலமும்) நீங்கள் இஸ்திஞ்ஜா செய்யாதீர்கள்; ஏனெனில் அவை உங்கள் சகோதரர்களின் உணவாகும்.”

 (ஸஹீஹ் முஸ்லிம்)


இது எலும்புகளுடன் தொடர்பான மறைந்து போன ஒரு அழகான இஸ்லாமிய ஒழுக்கமாகும் ❤️ செய்ஹுமார்கள் உஸ்தாதுமார்கள் நாதாக்கள் அஹ்லுபைத்துக்கள் கற்றுக் கொடுத்த பண்பாடுகளாகும். 


“நினைவூட்டுங்கள்; நிச்சயமாக நினைவூட்டல் நம்பிக்கையாளர்களுக்கு பயன் தரும்.”


தொடரும் ...


#உலகில் #ஒழுக்கம் #மறுமையை #உரிமை #فضائل_قيام_الليل #உழை #நன்மை #உலக #உணவு #الشيخ #எலும்பு #ஜின் #ஷைத்தான்

Sunday, 19 April 2026

ஜப்பானின் முதல் முஸ்லிம் அப்துல் ஹலீம் நோடா


 👉ஜப்பானின் முதல் முஸ்லிம் அப்துல் ஹலீம் நோடா 


டோக்கியோ ஜப்பானிய வரலாற்றில் இஸ்லாத்தைத் தழுவிய முதல் நபராகப் பத்திரிகையாளர் அப்துல் ஹலீம் நோடா ஷோதாரோ நோடா அடையாளப்படுத்தப்ட்டுள்ளார். 


⭐1891-ல் எர்டுகுருல் கப்பல் விபத்து நிதியுதவிக்காக துருக்கி சென்ற அவர், அங்கு சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதைச் சந்தித்தார்.


⭐பிரிட்டிஷ் அறிஞர் அப்துல்லாஹ் குயிலியமின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்டு, ஜூன் 1891-ல் அவர் இஸ்லாத்தை ஏற்றார். இவரைத் தொடர்ந்து டோராஜிரோ யமாடா மற்றும் ஹஜ் பயணம் செய்த முதல் ஜப்பானியரான உமர் யமாவோகா ஆகியோர் ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றில் தடம் பதித்தனர். 


⭐1972-ல் உமர் மிட்டா குர்ஆனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்த வரலாற்றுத் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுக்காகப் பகிரப்பட்டு வருகின்றன.



யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின்

 


யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின் வரலாறுகளை ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை வாசித்தேன். அற்புதமாக இருந்தது.


1. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தாயார் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தந்தை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.


2. யூசுஃப் நபியின் சரிதை தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உரையாடலுடன் தொடங்குகிறது. மூஸா நபியின் சரிதை தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்புடன் தொடங்குகிறது.


3. யூசுஃப் நபியை சொந்த சகோதரர்கள் குடும்பத்தை விட்டு பிரித்தனர். மூஸா நபியை சொந்த சகோதரி குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்.


4. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தந்தை நபியாக இருந்த பின்பும் அவர் தன் மகனுடன் மீண்டும் இணைவாரா என்று கூறப்படவில்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தாயார் நபியாக இல்லாத போதும் அவர் தன் மகனுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.


5. யூசுஃப் நபியின் சரிதையில் தந்தை துக்கக் கண்ணீர் வடிக்கிறார். மூஸா நபியின் சரிதையில் தாயார் மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கிறார்.


6. யூசுஃப் நபி தேங்கி நிற்கும் தண்ணீரில் (கிணறு) வீசப்படுகிறார். மூஸா நபி ஓடும் தண்ணீரில் (ஆறு) வீசப்படுகிறார்.


7. யூசுஃப் நபி ஓர் ஆண் மூலம் (எகிப்து அமைச்சர்) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார். மூஸா நபி ஒரு பெண் மூலம் (அன்னை ஆசியா) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார்.


8. யூசுஃப் நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஓர் ஆண் (அமைச்சர்) தமது மனைவியிடம் கூறுகின்றார். மூஸா நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஒரு பெண் (அன்னை ஆசியா) தன் கணவரிடம் கூறுகின்றார்.


9. யூசுஃப் நபியின் வாழ்வு அடிமையாகத் தொடங்கி அதிகாரத்தில் முடிகிறது. மூஸா நபியின் வாழ்வு அரண்மனையில் தொடங்கி அழைப்பாளராக முடிகிறது.


10. யூசுஃப் நபிக்கு ஒரு சிறப்புப் பண்பு (தோற்றம்) வழங்கப்பட்டது. மூஸா நபிக்கும் ஒரு சிறப்புப் பண்பு (வலிமை) வழங்கப்பட்டது.


11. அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அமைச்சர் மனைவியுடன் யூசுஃப் நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அதிகாரிகளிடம் மூஸா நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.


12. குற்றம் நடப்பதற்கு முன்பே யூசுஃப் நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார். குற்றம் நடந்த பின்னரே மூஸா நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்.


13. நிரபராதியான யூசுஃப் நபி சட்டத்தால் கைது செய்யப்படுகிறார். குற்றம் செய்த மூஸா நபி சட்டத்திலிருந்து தப்பி ஓடினார்.


14. சிறையில் இருந்த யூசுஃப் நபிக்கு 2 ஆண்கள் உதவினர். தப்பியோடிய முஸா நபிக்கு 2 பெண்கள் உதவினர்.


15. ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரக்கூடாது என்பதை யூசுஃப் நபியின் வரலாற்றில் கூறும் அல்லாஹ், ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரவேண்டும் என்பதை மூஸா நபியின் வரலாற்றில் கூறுகிறான்.


16. யூசுஃப் நபி சிறைக் கைதிகளுக்கு அழைப்புப் பணி செய்து உதவி பெறுகிறார். (வார்த்தையின் வலிமை). மூஸா நபி இரு பெண்களுக்கு உதவி செய்து உதவி பெறுகிறார். (செயலின் வலிமை)


17. யூசுப் நபி அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். மூஸா நபியும் அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். 


18. யூசுஃப் நபி அரசனால் கண்ணியம் பெறுகிறார். மூஸா நபியோ அரசனால் அவமானம் அடைகிறார்.


19. யூசுஃப் நபி சகோதரர் பின்யாமீனுடன் மீண்டும் இணைகிறார். மூஸா நபி சகோதரர் ஹாரூனுடன் மீண்டும் இணைகிறார்.


20. ஒரு ஸஜ்தாவின் மூலம் யூசுஃப் நபியின் குடும்பத்தார் மீண்டும் இணைகிறார்கள். ஒரு ஸஜ்தாவின் மூலம் (சூனியக்காரர்கள்) மூஸா நபி வெற்றிபெறுகிறார்.


21. யூசுஃப் நபியின் சரிதையில் சட்டை முக்கிய இடம் பெறுகிறது. மூஸா நபியின் சரிதையில் கைத்தடி முக்கிய இடம் பெறுகிறது.


22. இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) எகிப்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை யூசுஃப் நபியின் வரலாறு விளக்குகிறது. இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு எவ்வாறு வெளியேறினார்கள் என்பதை மூஸா நபியின் வரலாறு விளக்குகிறது.


அல்லாஹு அக்பர்! அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள் எத்தனை எத்தனை வாழ்க்கைப் பாடங்களைத்தான் கற்றுத் தருகிறது! அத்தனையும் அற்புதம்!


✍️ நூஹ் மஹ்ழரி


Friday, 13 March 2026

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்

 


♥️♥️♥️💫💫💫✍️✍️✍️

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்


வரலாறு என்பது வெறும் போர் வெற்றிகளால் ஆனது மட்டுமல்ல; அது மனிதப் பண்புகளின் உன்னதமான தருணங்களால் செதுக்கப்பட்டது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வீரமிக்கப் பெண்மணி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வு, இன்றும் மனிதகுலத்திற்குப் பெரும் பாடமாகத் திகழ்கிறது.


உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் எனது குழந்தையைச் சுமந்தவளாக, எவ்விதத் துணையுமின்றி மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிப் பாலைவனத்தில் தனியாகப் பயணம் செய்தேன். கடும் வெயிலும் நீண்ட தூரமும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தபோது, வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் உஸ்மான் பின் தல்ஹா."

அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை; சொல்லப்போனால் இஸ்லாத்தின் தீவிர எதிரிகளில் ஒருவராகவே கருதப்பட்டார். ஆனால், அவரிடமிருந்த 'பண்பாடு' மற்றும் 'கண்ணியம்', ஒரு பெண்ணைத் துணையின்றிப் பாலைவனத்தில் விடுவதற்கு இடம் கொடுக்கவில்லை.


மக்காவிலிருந்து மதீனா வரையிலான சுமார் 450 கிலோமீட்டர் தூரம் அவர் எனக்கு உதவியாக நடந்து வந்தார். 


இந்தப் பயணத்தில் அவர் காட்டிய ஒழுக்கம் வியப்பிற்குரியது:

ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து அவர் முன்னே நடக்க, நான் அதன் மேல் அமர்ந்து வந்தேன்.

பயணத்தின் ஒரு தருணத்தில் கூட அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை என்னுடன் பேசவுமில்லை.

ஓய்வெடுக்கும் இடங்களில், நான் ஒட்டகத்தை விட்டு இறங்கும் வரை தள்ளி நின்று, நான் பாதுகாப்பாக அமர்ந்த பின்பு தூரமான வேறொரு மரத்தடியில் ஒதுங்கிக் கொள்வார்.

புகழ்பெற்ற அரபுக் கவிஞர் அன்தரா கூறிய, "என் அண்டை வீட்டுப் பெண் மறையும் வரை என் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறேன்" என்ற வரிகளுக்கு இலக்கணமாக உஸ்மான் பின் தல்ஹா திகழ்ந்தார்.


இன்றைய காலத்தில் ஒரு சிறிய நற்செயலைச் செய்தாலும் அதனை உலகறியச் செய்யத் துடிக்கும் மனநிலை பெருகியுள்ளது. ஆனால், உஸ்மான் பின் தல்ஹா அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மதீனாவின் எல்லை வரை கொண்டு சேர்த்தார். "இதோ உன் கணவர் இந்த ஊரில் இருக்கிறார், நீ பாதுகாப்பாகச் செல்" என்று கூறிவிட்டு, ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மீண்டும் மக்காவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


தான் செய்த இந்த மாபெரும் உதவியைப் பற்றி அவர் யாரிடமும் தம்பட்டம் அடிக்கவில்லை; எந்தப் புகழையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறந்த வீரராகவும் வணிகராகவும் இருந்தும், தனது நேரத்தையும் உழைப்பையும் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காகச் செலவிட்ட அந்த மனிதநேயம் மகத்தானது.


உஸ்மான் பின் தல்ஹாவின் இந்தக் கண்ணியமான செயலை அல்லாஹ் வீணாக்கவில்லை. மக்கா வெற்றியின் போது அவர் இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் சாவியை மீண்டும் உஸ்மான் பின் தல்ஹாவிடமே ஒப்படைத்தார்கள். இன்றும் கஃபாவின் சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரது வம்சத்தினர் (பனூ ஷைபா) வசமே இருப்பது, அன்று அவர் காட்டிய அந்தத் தூய பண்பிற்கு கிடைத்த அழியாத அங்கீகாரமாகும்.


முடிவுரை:

மனிதாபிமானமும் பெண்மையை போற்றுவதும் மதங்களைக் கடந்தது; அது ஓர் ஆணின் கண்ணியத்தால் ஆனது. பெண்களைப் பாதுகாப்பதும் கண்ணியப்படுத்துவதுமே உண்மையான வீரம்!

📚 البداية والنهاية

📚زاد المعاد في هدي خير العباد..


🖊️தமிழாக்கம் : இம்ரான் ( நூரி)

     LIKE & SHARE