السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 8 March 2026

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.



 இந்த போர்டில் காணப்படுவது

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.  


போர் நடந்த களத்தில் ஷஹீதானவர்கள் 13 ஸஹாபிகள். 


14 பேர் என்பதற்கு  ஒரு காரணம் உண்டு.


உபைதா இப்னுல் ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

போரில் படுகாயமடைந்து, போர் முடிந்து திரும்பும் வழியில் 'சஃப்ரா' எனும் இடத்தில் ஷஹீதானார்கள்.


*உபைதிப்னு ஹாரிஸ்* (ரழியல்லாஹு அன்ஹு)*


பத்ருப் போரின் ஆரம்பத்தில் எதிரணியில் உத்பா, ஷைபா, வலீத் ஆகிய மூவரும் தன்னோடு மோதுவதற்காக இஸ்லாமிய படை வீரர்களில் மூவரை சவால் விட்டு அழைத்தனர். 


அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு), அலீ(ரழியல்லாஹு அன்ஹு), உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய மூவரையும் எதிரிகளோடு மோதுவதற்கு அனுப்பிவைத்தார்கள். 


இம்மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகோதரர்கள். 


 இந்த இரு அணியினரின் மோதலைக் குறித்துதான் இறைவன் தன் திருமறையில்


هُذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ


"இந்த இரு தரப்பினரும் தங்கள் இறைவன் பாதையில் மோதிக்கொண்டவர்களாகும்" என்று கூறுகிறான்.


அலீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வலீதையும்,


 ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷைபாவையும்,


 உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) உத்பாவையும் எதிர்கொண்டனர்.


 அலி(ரழியல்லாஹு அன்ஹு), ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் தன்னோடு மோதிய எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். 


உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னோடு மோதிய ஷைபாவினால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். 


போர் முடிந்து திரும்பியபோது 'ஸஃப்ரா' என்ற இடத்தில் உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்தார்கள்.


 ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் 'நாஜியீன்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்  "அல்லாஹ்வின் 

தாதரே! நாங்கள் கஸ்தூரி வாடையை சுவாசிக்கிறோம். இது எங்கிருந்து வருகிறது? என்று வினவினர்கள்.


 அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இந்த இடத்தில் உபைதிப்னு ஹாரீஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரு இருக்கும்போது எப்படி உங்களுக்கு அந்த நறுமணம் வராமல் இருக்கும்" என்று பதில் கூறினார்கள்.


நூல்: வஃபாவுல் வஃபா, 1025/3


பத்ரு ஸஹாபிகளின் திருநாமங்களை ஓதி வசீலாவாக முன்வைத்து துஆ செய்வோம். அல்லாஹ் நம் அனைவரின் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக ஆமீன்.

Sunday, 8 February 2026

மக்காம்மடி சியாரத்தில் சிரமதானம்

 
















✍️மக்காமடி எனும் இடத்தின் பூர்வீக வரலாற்றை கொண்ட சடையர் அப்பா (வலியுல்லாஹ்) மக்காம் இன்று அழிவின் நுனியில் - நாளை சிரமதானம் 

“மக்காம்” அடி - என்ற தள அடையாளம் மருவி மக்காமடி ஆகி அதன் பெயரில் பாடசாலை,  வீதி, மக்காமடி வட்டாரம் என்றெல்லாம் அடையாள பெயரிட காரணமான “மக்காம் ‘எனும் ஒரு பூர்வீக  இடத்தின் இருப்பு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பராமரிப்பு இன்றி அழிவின் விழிம்பில் நிற்பது கவலை தான் - சில நாட்களாக என் மனதில் எழுந்த இந்த இடம் பற்றிய தேடல் - நேற்று நேரில் சென்று பார்த்த போது மிகவும் கவலை கொடுத்தது - 
இந்த விவகாரம் பற்றிய என் தனிப்பட்ட நிலைப்பாடு தொடர்பில் உங்கள் கொள்கை குழாயடி சண்டை கண்ணோட்டத்தில் இதை யாரும் நோக்க தேவை இல்லை - 

ஒரு இடத்தின் பூர்வீக வரலாற்று தளமாக 
மக்காமடி சடையரப்பா வலியுல்லாஹ் மக்காம் எனும் பகுதி பல வருடங்களாக யார் கண்ணிலும் படாத மூடு மந்திரமாக இருந்து வந்த நிலையில் அண்மையில் குறித்த அமைவிடத்தை அண்டிய பள்ளிவாசலில்  ஒழுங்கு செய்யபட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது இந்த இடம் பற்றி தெரிந்து கொண்டாலும் அதற்குள் நுழைய முடியவில்லை - சிறுவர்களாக இருந்த அந்தக்கால கட்டத்தில் அந்த இடத்தில் கொடியேற்றம்,  கந்தூரி,  பக்கீர் சாகச நிகழ்வுகள் என  களைகட்டிய பழைய நினைவுகள் மனதை குடைய பள்ளிவாசல் நிருவாக அனுமதியுடன் எனது இளைஞசர் குழுவுடன் நுழைந்து செல்லும் போது அப்பகுதி நீண்ட காலமாக கைவிடப்பட்டு பராமரிப்பு இன்மையால் மிகவும் மோசமாக காணப்பட்டது 

மனது குடைந்தது - இது ஒரு நகரப்புறம், என்னை அங்கீகரித்து வெற்றி பெற செய்த மக்காமடி என்ற பகுதியில் அவரவர் மனதின் சரி பிழைகளுக்கு அப்பால் குறைந்தது அழிவுற்று மோசமாக காணப்படும் இந்த வரலாற்று இடத்தை ஓர் சிரமதான ஏற்பாட்டு பணியின் ஊடாக சுத்தம் செய்து - இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள 
சிதைவை உடன் சீர் செய்யும் பொறுப்பை ஏற்று உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளேன் 

இங்கு என் பதிவு சிந்தனை / கொள்கை என இரண்டு தரப்பிற்கு இடையே மாறுபடும் என்பதால் முரண்பட வாய்ப்பு உள்ளது - அது அவரவர் விருப்பு வெறுப்பு - எதிர்மறை விமர்சனங்களை நீங்கள் இந்த பதிவிலோ அல்லது எனக்குள் திணிக்கவோ தேவை இல்லை - இறைவன் உதவியால் எதற்காகவும் எடுத்த பணியை விட்டு பின் வாங்கி நிற்பவனும் நான் கிடையாது, 

விமர்சனம் செய்ய எண்ணுவோர் உங்களில் யாரையும் புதிதாக ஒரு இடத்தை அமைத்து இந்த இடத்திற்கு வந்து தரிசியுங்கள்,  தொட்டு முத்தமிடுங்கள்,  கந்தூரி, காணிக்கை இடுங்கள் என்று கரம் பற்றி தர தர என இழுத்து வரவும் இல்லை - 
இந்த அழிவுற்ற பூர்வீக இடம் எனது அரசியல் பதவிக்காலத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளது,  இதை அழியட்டும் என கண்டும் காணாமல் கடந்து போகும் மோசமான மனோநிலையிலும் நான் இல்லை - எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சீர் செய்து இந்த தளத்திற்கு உரித்தான தரப்பின் பூரண அங்கீகாரம் ஊடாக இந்த இடத்தை பராமரிக்க முன்வரும் அணியிடம் பாரம் கொடுத்த மறு கணம் என் பணி முடியும் - இத்தனைக்கும் நான் திட்டமிட்டு இருப்பது வெறும் 3 நாட்களே!  

நான் ஒன்றும் கொள்கை ரீதியான அடிப்படைவாதியாகவோ,  இவவிடத்தின் நிருவாக தலைவராக ஆட்சி செய்யவோ நினைக்கவில்லை, எது எது எப்படி இருந்ததோ அதை அதை அப்படியே இருக்கச் செய்தவனாக இன்னொரு பணியுடன் கடந்து செல்வேன் , 
அவ்வளவே 
இன்ஷா அல்லாஹ் 

அன்பான மக்காமடி உறவுகளே! 
இந்த இடம் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்கும் அதே வேளை இதை சர்ச்ச்சை விவகாரம் ஆக்காமல் 
குறைந்தபட்சம் இவ்வாறான இடங்களை பூர்வீகத்தின் , இருப்பின் அத்தாட்சியாக சரி ஏற்று கொள்ளுங்கள் ! என்றோ ஒரு நாள் 
நம் சமூகத்தின் நிலையான  இருப்புக்கு அவைகள் அத்தியவசியமானவை என்பதை கொஞ்சமேனும் உணர்ந்து கொண்டவர்கள் மாத்திரம் 

நாளை திங்கட்கிழமை காலை 7 மணி முதல் இவ்விடத்தில் முன்னெடுக்க உள்ள சீரமைப்பு பணியில் இணைந்து கொள்ளுங்கள் -

நன்றி வஸ்ஸலாம் 
அஸ்மி - நகர சபை உறுப்பினர் 
மக்காமடி வட்டாரம்


Saturday, 7 February 2026

ஏர் ஊரின் சொல்ல மறந்த கதை.

 



ஏர்  ஊரின் சொல்ல மறந்த கதை.

 ஊரில் முதலாவது ஜனாஷா

௮றிவித்தல்  .

                       

ஓட்டுப்பள்ளி   யூசுப் மோதினார்

௮ன்று காலை தஹஜ்ஜத் தொழவந்தவர்களிடம்  கேக்கிறார்  சலாரை காணவில்லை  ௭ன்று.

சுபஹ்  தொழுதுவிட்டும்  பார்க்கிறார்  சலார்  ௭ன்று  செல்லமாக  ௮ழைக்கப்படும் ௮லிமுஹம்மது  வை  காணவில்லை  ஒட்டமாக  வீட்டை  நோக்கி  மனைவி ஆசியா ௨ம்மாவிடம்  கேக்கிறார்  சலார்  ௭ன்ன  பள்ளிக்க  வரவில்லை.

மனைவியின்  பதில் இஷா  தொழுதுட்ட

சாப்பிடையும் இல்ல  துங்கின  இன்னு  ௭ழும்பவில்லை.

௨டனே  கட்டிலில்  பார்க்கிறார் தக்பீர்  கட்டியவராக  தூங்கிறார் ௮சைத்துப்பார்த்த  நாடி பிடித்தவர்  வீட்டாரிடமும்  சொல்லாமல்   பதற்றத்துடன்  பள்ளியை  நோக்கி  ஓடி  மைக்கில்  இவ்வளவுதான்  சொன்னார்.

சலார்  மெளத்தாகிவிட்டார்  

innalillhi  wainna ilahi  rajiuoon..

இது தான்  முதல் ௮றிவிப்பு.

இவர்.

மரஹும்.  ராசா  ஹாஜி  ௮ரிசிஆலை

சின்னலெவ்வை ஹாஜி

நெல்  வியாபாரி

மர்ஹும்  கா௫ன்

காலித்தீன்  காக்கா.

இவர்களின்  தகப்பனார்.

௮லிமுஹம்மது.


யூசுப்  மோதினாரின் ஊர் பற்று

மோதினார் ௭ப்படி இ௫க்க வேண்டும்.

மோதினார்  ௭ப்படி வாழ வேண்டும்.

௭ன்பதற்கு  முன்  ௨தாரணம்.


மோதினார் ஓட்டுப்பள்ளியில் சம்பளம்  பெறும் போது 5 சதம் முத்திரையில் கையொப்பமிட்ட சம்பளம் பெற்ற ரிஸிப்ட் முதல் தலைவர் சக உறுப்பினர் களை கூட்டத்தக்க அழைப்பிதல்  வரை.


பாதுகாப்பாக இருக்கிறது என்னிடம்.


தேர்தல் காலத்தில் பரீத் மீராலெப்பை அவர்களின் உத்தியோகப்பற்றற்ற 'பொடி காட் "அவரது முன் வீட்டில் வசித்த மோதினார். பரீத் அவர்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பார். தேர்தல் காலத்தில் பரீத் அவர்களின் வீட்டைத்தாக்க வந்த குழுவினர் மீது இவர் தனக்குச் சொந்தமான அனுமதி பெற்ற துப்பாக்கிமூலம், துப்பாக்கிப் பிரயோகம் செய்ததன் காரணமாக வீதியில் நின்ற காதர் ஆசிரியர் (வஹியா ஆசிரியையின் கணவர்)

காயமடைந்தார்.

மோதினார் எதிராளிகளிடம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கொ

ச்சிக்காய் தூள் வைத்திருப்பார். அதனால் இவரை "மசாலாத்தூள் மோதின்" என்ற பட்டப் பெயர் கூட சூட்டினார்கள். இவர் வீதியில் செல்லும்போது துப்பாக்கியை தனது கையோடு சங்கிலியால் இணைத்திருப்பார்.வெறும் எவரும் பறித்துச் செல்லாத வகையில் இப்படியொரு தந்திரோபா

யத்தை செய்திருந்தார்.

வீதியால் செல்லும்போது எதிராளிகள் மறைந்திருந்து, (சுட்டுவிடுவார் என்ற பயத்தில்) 'மோதீன் புச்சித் துவக்கு கொண்டுபோறான் "என்று சத்தமிடுவதை எனது காதுகளால் கேட்டுள்ளேன். இவர் ஒரு சிறந்த சமையல் கலை நிபுணர். பரீத் வயல் பகுதிகளுக்கு சமைத்துச் சாப்பிடச்சென்றால் மோதினார்தான் பிரதம சமையல்காரர்.


Muhamed Nadheem fb

Tuesday, 3 February 2026

புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்



 #புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்


#தற்காலத்து_வஹ்ஹாபிஷ_கர்ணிகளும்_வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியும்


புகஹாஉத் தாபியீன்

فقهاء التابعين 

ஸலபுஸ் ஸாலிஹீன்களான சிறந்த நூற்றாண்டு என்று வர்ணிக்கப்பட்ட காலத்திற்கு உட்பட்டவர்களான தாபியீன்களில் பலர் மார்க்க சட்ட மேதைகளாக திகழ்ந்தார்கள்..


மதீனாவை எடுத்துக்கொண்டால் அங்கு பிரபலமான 7 மார்க்க சட்ட மேதைகளான தாபியீன்கள் பேசப்படுவார்கள்..குறிப்பாக #செய்யிதுத்_தாபியீன் தாபியீன்களின் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஹழ்ரத் #சயீத்_இப்னுல்_முஸய்யப் ரழியல்லாஹு அன்ஹு....

இன்னும் பல....


மக்காவை எடுத்துக்கொண்டால் குறிப்பாக 

#அதாஉ_இப்னு_அபீ_ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு 

இன்னும் பல.....


கூபாவை எடுத்துக்கொண்டால் #அல்கமத்_இப்னு_கைஸ்_அந்_நகஃயி ரழியல்லாஹு அன்ஹு ..

இன்னும் பல.....


பஸராவை எடுத்துக்கொண்டால் ஹஸனுல் பஸரி ரழியல்லாஹு அன்ஹு ..

இன்னும் பல......


இப்படி தாபியீன்கள் பல பாகங்களிலும் பரந்து காணப்பட்டார்கள்..அந்த அந்த பிரதேசங்களில் அவர்கள் பிரபலமாக மார்க்க சட்ட மேதைகளாக காணப்பட்டார்கள்..


அந்த வகையில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15 ம் இரவு ( அதாவது பராஅத் இரவு) 


அவ்விரவில் தாபியீன்கள் வணக்க வழிபாடுகளால் அவ்விரவை உயிர்ப்பித்தார்கள் என்ற செய்திகளை நாம் பல கிதாபுகளில் காணலாம்...


1- காலித் இப்னு மஃதான் ரழியல்லாஹு அன்ஹு 

இவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்களிலும் ஒருவர்...இவர்கள் #ஷாம் தேசத்தில் சிரியாவில் பிரபலமாக அறியப்பட்டவர்கள்..ஏறத்தாள 70 ஸஹாபாக்களை சந்தித்து இருக்கிறார்கள்...

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு,முஆவியா ரழியல்லாஹு அன்ஹு,அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா,அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா இப்படி பல ஸஹாபாக்கள் வழியாக ஹதீஸ்களை அறிவிப்பவர்..

ஹிஜ்ரி 103 ல் வபாத் ஆனார்கள்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..


2- மக்ஹுல் அஸ் ஷாமி ரழியல்லாஹு அன்ஹு 

ஹிஜ்ரி 112 ல் வபாத் ஆனார்கள்..இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்க சட்டமேதை..

இவர்களும் நிறைய ஸஹாபாக்கள் மூலமாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள்..இவர்கள் யமனைச் சேர்ந்தவர்கள்..


அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அபீ உமாமத்தல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு 

வாஸிலத் இப்னு அல் அஸ்கஃ ரழியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்களிடம் படித்தவர்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...


3- லுக்மான் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு..

ஹிஜ்ரி 111 ல் வபாத் ஆனார்கள்..

இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட தாபியி..


இவர்களைப் பற்றியும் நிறையவே ஹதீஸ்கலை மேதைகள் பேசி இருக்கிறார்கள்...


இந்த தாபியீன்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களான இவர்கள் ஷஃபான் மாதத்தின் பராஅத்துடைய இரவை வணக்க வழிபாடுகளால் உயிர்பித்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிஞர் பெருமக்களான இமாம்கள் எழுதி இருப்பதை பார்க்கலாம்...


#வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியின் பக்கம் கவனத்தை திருப்புங்கள்..


இப்னு தைமியா தன்னுடைய #அல்_பதாவா_அல்_குப்ரா வில் பாகம் 05 பக்கம் 344 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு ஓர் செய்தியை சொல்கிறார்.


وأما ليلة النصف من شعبان ففيها فضل وكان في السلف من يصلى فيها 


நிச்சயமாக ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவிற்கு அதாவது 15 வது இரவு ( பராஅத் இரவு) அவ்விரவிற்கு என்று சிறப்பு உண்டு.

அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்..

கீழே நிழற் படம் பார்வையிடலாம்...


அதே இப்னு தைமியா தன்னுடைய #இக்திழாஉஸ்_சிராத்தில்_முஸ்தகீம் என்ற நூலில் பாகம் 02 பக்கம் 136, 137 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு_ஓர் சுபச்செய்தியை சொல்கிறார்..


ليلة النصف من شعبان فقد روى في فضلها من الاحاديث المرفوعة والآثار ما يقتضي انها ليلة مفضلة 

وان من السلف كان يخصها بالصلاة فيها 


#சாரம் ..ஷஃபான் மாத நடுப்பகுதியான இரவிற்கு ( பராஅத்துடைய இரவு) அதற்கு என்று சிறப்புகள் உண்டு..பல ஹதீஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழுகையின் முலம் அவ்விரவை குறிப்பாக்கி இருக்கிறார்கள்..நிழற் படம் பார்வை இடவும்...


வஹ்ஹாபிகளே! பராஅத்துடைய இரவிற்கு எந்த சிறப்புமே இல்லை என்றீர்களே!உங்க மூலகுருநாதர் சிறப்பு இருக்கு என்றல்லவா சொல்கிறார்...


வாழைப்பழத்தையும் பேரீச்சம் பழத்தையும் ரொட்டியையும் விட்டுட்டு உங்க தலைவருக்கு பகிரங்கமாக உங்க பெயருக்கு பின்னால் உள்ள பட்டங்களோடு மறுப்பையும் தீர்ப்பையும் சொல்வீர்களா..???


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

+94 77 444 77 57

பராஅத் ரொட்டியும் 3 யாசீனும்

 


#சூரா_யாஸீனும்_பராஅத்_துஆவும்


இன்றைய இந்த புனிதமிக்க நாளை தவறவிடாமல்  நற்காரியங்களை செய்து பராஅத் இரவை வணக்கங்களால் உயிர்ப்பிப்போமாக!!


#மூன்று_யாஸீன்_ஓதுதல்...


காரணம் பராஅத்துடைய இரவு துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இரவு, தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் இரவு,பாவமன்னிப்பு வழங்கப்படும் இரவு....


இவைகளை மையக்கருவாக கொண்டு நடைமுறையில் இருப்பது தான் மூன்று யாஸீன் ஓதுதல்...


யாஸீன் சூராவை ஒரு முறை தான் ஓதினாலும் அவர் குற்றவாளி அல்ல...முப்பது முறை ஓதினாலும் குற்றவாளியல்ல...மாற்றமாக ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்து வீதம் நன்மை வழங்கப்படும்..அல் குர்ஆன் ஓதலை கேட்டுக்கொண்டு இருப்பவருக்கும் நன்மை வழங்கப்படும் அது தான் அல் குர்ஆன் என்பது மறுமை வரை அழியாத ஓர் அற்புதம்..


1-ஸாலிஹான நல் வணக்கவழிபாடுகளுடன் வாழ் நாள் அதிக்கரிக்க வேண்டி ஓர் நிய்யத் வைத்து ஒரு முறை சூரா யாஸீன் ஓதிய பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..வாழ் நாள் அதிகரிப்பு என்ற எண்ணம் வைக்க காரணம் இந்த பராஅத்துடைய இரவில் தான் ஒரு மனிதனுடைய பட்டோலை புதுப்பிக்கப்படுகிறது.மாற்றப்படுகிறது.


2-வரக்கூடிய ஆபத்துக்களை விட்டும்,சோதனைகளை விட்டும்  பாதுகாப்புத் தேடுவதை நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத் துஆவை ஓதப்படல் வேண்டும்..


3- மக்களிடம் தேவையற்றவனாக இருக்க வேண்டும்,அல்லாஹ் ரிஸ்க்கை விஸ்தீரணமாக்க வேண்டும் என்ற நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..


ஹதீஸ்களையும் ஹதீஸ் கலை அடிப்படை சட்டங்களையும் அல் குர்ஆனுடைய விளக்கங்களையும் தொகுத்து தந்த இமாம்களை மதிக்காமல் அவர்களுக்கு தேவையாகும் போது ஹதீஸ் ஸஹீஹ்,ழயீப் என்று ஊழையிடும் நரக நாய்களான வஹ்ஹாபிஷ கர்ணிகளுக்கு இவைகள் ஒரு போதும் பலனை கொடுக்காது...


மேற்குறித்த தகவல் #முஜர்ரபாதுத்_தைரபியில்_கபீர்  என்ற நூலில் பக்கம் 20 ல்   இமாம் அஹ்மத் அத் தைரபி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்..


அதே போல் மக்காவைச் சேர்ந்த #முப்தில்_ஹரமைன் என்று போற்றப்பட்ட #ஸைனி_தஹ்லான் ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் மாணவர் இமாம் அப்துல் காதிர் குத்ஸ் அல் மக்கி ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

كنز النجاح والسرور 

#கன்ஸுன்_நஜாஹி_வஸ்_ஸுருர் என்ற நூலில் பக்கம் 165 ல் பதிவு செய்திருக்கிறார்கள்..

ஹரம் ஷரீபில் 30 வருடங்களாக பாடம் நடத்தியவர்கள்..ஜன்னதுல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்...


அதே சமயம் சூரா யாஸீன் குறித்து ஏகப்பட்ட ஹதீஸ்கள் இடம் பெருகிறது.யாஸீன் சூராவின் அகமியங்கள் குறித்து தனியாக கிதாபுகளே எழுதப்பட்டுள்ளது..சூரா யாஸீன் எந்த தேவை குறித்து இஃலாஸான நிய்யத்தோடு  ஓதப்படுகிறதோ அந்த தேவை நிறைவேற்றப்படும்...


#பராஅத்_துஆ 

கீழே அந்த துஆவை இணைக்கிறேன்.சூரா யாஸீனையும் பராஅத் துஆ இன்னும் பல சூராக்கள், துஆக்கள்,ஸலவாத்துகள் என்பவைகளை பொதிந்த சிறிய தொகுப்பு  நம்முடைய நாட்டில் மட்டும் அல்ல அது உலகெங்கும்  பரவலாக உண்டு..அது இலகுக்காகவே தவிர வேறில்லை..ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சிறு தொகுப்பாக வெளியிட்டார்களா.?என்று வஹ்ஹாபிஷ யூத ஏஜன்ட் பேசுகிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு அறிவு,ஆய்வுத்திரன் ஸுப்ஹானல்லாஹ்....


கீழே இணைக்கப்பட்ட  பராஅத் துஆ எகிப்து கைரோவில் வெளியிடப்பட்ட சிறு தொகுப்பு....


இந்த பராஅத்துடைய துஆ என்பது ஸஹாபியே ரஸுல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா  அவர்கள் ஓதிய துஆ..மட்டுமல்ல அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் சொன்னார்கள் ""யார் இதை ஓதுகிறார்களோ அவருக்கு அல்லாஹ் வாழ்க்கையில்  விசாலத்தை  கொடுப்பான்..அதாவது அவனுடைய வாழ்க்கையில் பரகத்தையும்,ரிஸ்கில் விஸ்தீரணத்தையும் கொடுப்பான்..

அதனால் தான் பராஅத்துடைய இரவில் பட்டோலை புதுப்பிக்கப்படுவதால் மேற்கூறிய நிய்யத்துக்களை வைத்து யாஸீன் ஓதீ குறிப்பிட்ட அப்துல்லாஹ் இப்னு  மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஓதிய இந்த துஆவை பராஅத்துடைய இரவில் ஓதப்படுகிறது..


இந்த செய்தி எந்த கிதாபில் இடம் பெருகிறது தெரியுமா..?வஹ்ஹாபிஷ விஷ ஜந்துக்களே இந்த கிதாப் பார்ப்பது இருக்கட்டும் கேள்விப்பட்டாது இருப்பீர்களா..??


அபீ அப்துர் ரஹ்மான் முஹம்மத் இப்னு புழைல் இப்னு ஙஸ்வான் அல் ழப்பயி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய 

#கிதாபுத்_துஆ என்ற நூலில் பக்கம் 217, 218 ல்  பதிவு செய்கிறார்கள்..


இவர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்கள் தான் இவர்கள்...

ஹிஜ்ரி 195 ல் வபாத் ஆனார்கள்..


ஹிஜ்ரி 140, 149 ல் வபாத் ஆனார்கள் என்ற கருத்தும் உண்டு..

இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் ,யஹ்யா இப்னு மயீன் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எல்லாம் இவர்களை உறுதியானவர் என்று சொல்லப்பட்டவர் தான் இந்நூலுக்குரியவர்கள்..


ஒரு வழியை திறந்து தருகிறேன்...


இவர்கள் ஷீஆ என்ற ஓர் விமர்சனம் உண்டு.... வஹ்ஹாபிஷ விஷமிகளே! முடியுமானால் இதையாவது தூக்கிட்டு வாங்க பேசலாம்...


எனவே நரக நாய்களான வஹ்ஹாபிகளின் பேச்சைக் கேட்டு உங்கள் நேரங்களை வீணாக்காமல் உங்கள் ஈமானை இழக்காமல் இன்றைய சிறப்புமிக்க பராஅத்துடைய இரவை வணக்கங்களால் உயிர்பிப்போம்...


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

+94 77 444 77 57










மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்

மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்

 மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்


ஒரு மனிதன் தவறு செய்வது இழிவானது அல்ல; ஆனால் அந்தத் தவறிலேயே திளைத்திருப்பதும், பாவங்களைச் செய்வதற்குத் துணிவதும் தான் இழிவானதாகும்.


ஒருவன் தனது குறையை உணர்ந்து, அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) தேடினால், அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவனது பாவத்தை அழித்துவிடுகிறான்.


இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:


"நிச்சயமாக நான், எவர் (பாவத்திலிருந்து) மீண்டு, ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிந்து, பின்னர் நேர்வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு மிக மன்னிப்பவன்." (அல்குர்ஆன் 20:82)


பாவமன்னிப்பின் இத்தகைய முக்கியத்துவத்தினால், தவ்பா செய்பவர்களை ஏற்றுக்கொள்வதில் இறைவனின் பரந்த அருளை உறுதிப்படுத்தும் வகையில், நபிகளார் ﷺ அவர்களின் சுன்னாவில் சில கதைகள் இடம்பெற்றுள்ளன.


அதில் ஒன்றுதான் 'அல்கிஃப்ல்' என்பவரின் வரலாறு


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறக் கேட்டேன்:


"பனூ இஸ்ரவேலர்களில் 'அல்கிஃப்ல்' என்பவர் எத்தகைய பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டார். அவரிடம் ஒரு பெண் வந்தபோது, அவளுடன் தவறாக நடப்பதற்காக அறுபது தீனார்களை அவளுக்கு வழங்கினார். ஒரு கணவன் தன் மனைவியிடம் அமருவது போல அவர் அந்தப் பெண்ணிடம் அமர்ந்தபோது, அவள் நடுங்கி அழுதாள். அவர் அவளிடம்: 'ஏன் அழுகிறாய்? உன்னை நான் வற்புறுத்தினேனா?' என்று கேட்டார். அதற்கு அவள்: 'இல்லை, ஆனால் இது நான் இதுவரை செய்திராத செயல். வறுமை மட்டுமே என்னை இதற்குத் தூண்டியது' என்றாள்.


அதற்கு அவர்: 'நீயே இதைக் கண்டு அஞ்சும்போது, நான் அஞ்சமாட்டேனா? நீ போகலாம், அந்தப் பணம் உனக்கே சேரட்டும்' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இதற்குப் பிறகு நான் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யமாட்டேன்' என்றார்.


அன்றிரவே அவர் மரணமடைந்தார்.


காலையில் அவரது வீட்டு வாசலில்: 'நிச்சயமாக அல்லாஹ் அல்கிஃப்லை மன்னித்துவிட்டான்' என்று எழுதப்பட்டிருந்தது." (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்).


அவர் தன் மீது அநீதி இழைத்துக்கொண்டு பாவங்களில் மூழ்கியிருந்தவர். ஆனால் விபச்சாரம் போன்ற ஒரு பெரும் பாவத்தைச் செய்ய முனைந்தபோது, அல்லாஹ்வின் கருணை அவரைத் தடுத்தது. அவர் திருந்தியபோது, அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்குப் பெரும் கண்ணியத்தை வழங்கினான்.


இக்கதையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்:


ஒரு முஸ்லிம் ஏதேனும் பாவத்தில் விழுந்துவிட்டால், உடனே தவ்பா செய்து வருந்த வேண்டும். செய்த பாவத்திற்குப் பகரமாக அதற்கு நேர்மாறான நன்மைகளில் ஈடுபட வேண்டும்.


தவ்பா என்பது: செய்த தவறுக்காக வருந்துவது, மீண்டும் அதைச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வது மற்றும் இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது ஆகும்.


உண்மையான வருத்தத்தின் அடையாளம்: இதயம் மென்மையாதல், படைப்பினங்கள் மீது இரக்கம் காட்டுதல் மற்றும் மக்களின் (குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையுடையோரின்) குறைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.


உயிரோட்டமான வருத்தம் இருக்கும்போது, பாவத்தை விடும் உறுதி பிறக்கும். ஒருவேளை இச்சையின் காரணமாக ஒருவனால் பாவத்தை விட முடியாவிட்டால், அவன் செய்ய வேண்டிய இரண்டாவது கடமை: தீமையைத் துடைத்தெறியும் நன்மைகளைச் செய்வது. அத்தகைய நன்மைகள் மூன்று வகைப்படும்:


1- உள்ளத்தால் செய்யும் நன்மை: மன்னிப்பு வழங்கும்படி அல்லாஹ்விடம் உருக்கமாக வேண்டுவது.


2- நாவால் செய்யும் நன்மை: நாவினால் பாவத்தை ஒப்புக்கொண்டு, "யா அல்லாஹ்! நான் எனக்கு அநீதி இழைத்துக்கொண்டேன், தீமை செய்துவிட்டேன், என் பாவங்களை மன்னிப்பாயாக" போன்ற பிரார்த்தனைகளை (இஸ்திஃபார்) அதிகம் ஓதுவது.


3- உறுப்புகளால் செய்யும் நன்மை: ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வது மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது."


-கலாநிதி அலி ஜும்ஆ-