السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 19 April 2026

ஜப்பானின் முதல் முஸ்லிம் அப்துல் ஹலீம் நோடா


 👉ஜப்பானின் முதல் முஸ்லிம் அப்துல் ஹலீம் நோடா 


டோக்கியோ ஜப்பானிய வரலாற்றில் இஸ்லாத்தைத் தழுவிய முதல் நபராகப் பத்திரிகையாளர் அப்துல் ஹலீம் நோடா ஷோதாரோ நோடா அடையாளப்படுத்தப்ட்டுள்ளார். 


⭐1891-ல் எர்டுகுருல் கப்பல் விபத்து நிதியுதவிக்காக துருக்கி சென்ற அவர், அங்கு சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதைச் சந்தித்தார்.


⭐பிரிட்டிஷ் அறிஞர் அப்துல்லாஹ் குயிலியமின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்டு, ஜூன் 1891-ல் அவர் இஸ்லாத்தை ஏற்றார். இவரைத் தொடர்ந்து டோராஜிரோ யமாடா மற்றும் ஹஜ் பயணம் செய்த முதல் ஜப்பானியரான உமர் யமாவோகா ஆகியோர் ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றில் தடம் பதித்தனர். 


⭐1972-ல் உமர் மிட்டா குர்ஆனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்த வரலாற்றுத் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுக்காகப் பகிரப்பட்டு வருகின்றன.



யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின்

 


யூசுஃப் நபி, மூஸா நபி ஆகியோரின் வரலாறுகளை ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை வாசித்தேன். அற்புதமாக இருந்தது.


1. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தாயார் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தந்தை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.


2. யூசுஃப் நபியின் சரிதை தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உரையாடலுடன் தொடங்குகிறது. மூஸா நபியின் சரிதை தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்புடன் தொடங்குகிறது.


3. யூசுஃப் நபியை சொந்த சகோதரர்கள் குடும்பத்தை விட்டு பிரித்தனர். மூஸா நபியை சொந்த சகோதரி குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார்.


4. யூசுஃப் நபியின் சரிதையில் அவரது தந்தை நபியாக இருந்த பின்பும் அவர் தன் மகனுடன் மீண்டும் இணைவாரா என்று கூறப்படவில்லை. மூஸா நபியின் சரிதையில் அவரது தாயார் நபியாக இல்லாத போதும் அவர் தன் மகனுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.


5. யூசுஃப் நபியின் சரிதையில் தந்தை துக்கக் கண்ணீர் வடிக்கிறார். மூஸா நபியின் சரிதையில் தாயார் மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கிறார்.


6. யூசுஃப் நபி தேங்கி நிற்கும் தண்ணீரில் (கிணறு) வீசப்படுகிறார். மூஸா நபி ஓடும் தண்ணீரில் (ஆறு) வீசப்படுகிறார்.


7. யூசுஃப் நபி ஓர் ஆண் மூலம் (எகிப்து அமைச்சர்) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார். மூஸா நபி ஒரு பெண் மூலம் (அன்னை ஆசியா) அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறார்.


8. யூசுஃப் நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஓர் ஆண் (அமைச்சர்) தமது மனைவியிடம் கூறுகின்றார். மூஸா நபியை மகனாக ஏற்றுக்கொள்ளும்படி ஒரு பெண் (அன்னை ஆசியா) தன் கணவரிடம் கூறுகின்றார்.


9. யூசுஃப் நபியின் வாழ்வு அடிமையாகத் தொடங்கி அதிகாரத்தில் முடிகிறது. மூஸா நபியின் வாழ்வு அரண்மனையில் தொடங்கி அழைப்பாளராக முடிகிறது.


10. யூசுஃப் நபிக்கு ஒரு சிறப்புப் பண்பு (தோற்றம்) வழங்கப்பட்டது. மூஸா நபிக்கும் ஒரு சிறப்புப் பண்பு (வலிமை) வழங்கப்பட்டது.


11. அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அமைச்சர் மனைவியுடன் யூசுஃப் நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார். அந்த சிறப்புப் பண்பின் காரணத்தால் அதிகாரிகளிடம் மூஸா நபி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.


12. குற்றம் நடப்பதற்கு முன்பே யூசுஃப் நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார். குற்றம் நடந்த பின்னரே மூஸா நபி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்.


13. நிரபராதியான யூசுஃப் நபி சட்டத்தால் கைது செய்யப்படுகிறார். குற்றம் செய்த மூஸா நபி சட்டத்திலிருந்து தப்பி ஓடினார்.


14. சிறையில் இருந்த யூசுஃப் நபிக்கு 2 ஆண்கள் உதவினர். தப்பியோடிய முஸா நபிக்கு 2 பெண்கள் உதவினர்.


15. ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரக்கூடாது என்பதை யூசுஃப் நபியின் வரலாற்றில் கூறும் அல்லாஹ், ஓர் ஆணும் பெண்ணும் எப்படி ஒன்று சேரவேண்டும் என்பதை மூஸா நபியின் வரலாற்றில் கூறுகிறான்.


16. யூசுஃப் நபி சிறைக் கைதிகளுக்கு அழைப்புப் பணி செய்து உதவி பெறுகிறார். (வார்த்தையின் வலிமை). மூஸா நபி இரு பெண்களுக்கு உதவி செய்து உதவி பெறுகிறார். (செயலின் வலிமை)


17. யூசுப் நபி அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். மூஸா நபியும் அரசவைக்குத் திரும்பி அரசனை எதிர்கொள்கிறார். 


18. யூசுஃப் நபி அரசனால் கண்ணியம் பெறுகிறார். மூஸா நபியோ அரசனால் அவமானம் அடைகிறார்.


19. யூசுஃப் நபி சகோதரர் பின்யாமீனுடன் மீண்டும் இணைகிறார். மூஸா நபி சகோதரர் ஹாரூனுடன் மீண்டும் இணைகிறார்.


20. ஒரு ஸஜ்தாவின் மூலம் யூசுஃப் நபியின் குடும்பத்தார் மீண்டும் இணைகிறார்கள். ஒரு ஸஜ்தாவின் மூலம் (சூனியக்காரர்கள்) மூஸா நபி வெற்றிபெறுகிறார்.


21. யூசுஃப் நபியின் சரிதையில் சட்டை முக்கிய இடம் பெறுகிறது. மூஸா நபியின் சரிதையில் கைத்தடி முக்கிய இடம் பெறுகிறது.


22. இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) எகிப்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை யூசுஃப் நபியின் வரலாறு விளக்குகிறது. இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு எவ்வாறு வெளியேறினார்கள் என்பதை மூஸா நபியின் வரலாறு விளக்குகிறது.


அல்லாஹு அக்பர்! அல்குர்ஆன் கூறும் அழகிய சரிதைகள் எத்தனை எத்தனை வாழ்க்கைப் பாடங்களைத்தான் கற்றுத் தருகிறது! அத்தனையும் அற்புதம்!


✍️ நூஹ் மஹ்ழரி


Friday, 13 March 2026

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்

 


♥️♥️♥️💫💫💫✍️✍️✍️

பெண்மையைப் போற்றுவதே உண்மையான வீரம்


வரலாறு என்பது வெறும் போர் வெற்றிகளால் ஆனது மட்டுமல்ல; அது மனிதப் பண்புகளின் உன்னதமான தருணங்களால் செதுக்கப்பட்டது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வீரமிக்கப் பெண்மணி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வு, இன்றும் மனிதகுலத்திற்குப் பெரும் பாடமாகத் திகழ்கிறது.


உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் எனது குழந்தையைச் சுமந்தவளாக, எவ்விதத் துணையுமின்றி மக்காவிலிருந்து மதீனாவை நோக்கிப் பாலைவனத்தில் தனியாகப் பயணம் செய்தேன். கடும் வெயிலும் நீண்ட தூரமும் எனக்குப் பெரும் சவாலாக இருந்தபோது, வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் உஸ்மான் பின் தல்ஹா."

அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை; சொல்லப்போனால் இஸ்லாத்தின் தீவிர எதிரிகளில் ஒருவராகவே கருதப்பட்டார். ஆனால், அவரிடமிருந்த 'பண்பாடு' மற்றும் 'கண்ணியம்', ஒரு பெண்ணைத் துணையின்றிப் பாலைவனத்தில் விடுவதற்கு இடம் கொடுக்கவில்லை.


மக்காவிலிருந்து மதீனா வரையிலான சுமார் 450 கிலோமீட்டர் தூரம் அவர் எனக்கு உதவியாக நடந்து வந்தார். 


இந்தப் பயணத்தில் அவர் காட்டிய ஒழுக்கம் வியப்பிற்குரியது:

ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து அவர் முன்னே நடக்க, நான் அதன் மேல் அமர்ந்து வந்தேன்.

பயணத்தின் ஒரு தருணத்தில் கூட அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவுமில்லை என்னுடன் பேசவுமில்லை.

ஓய்வெடுக்கும் இடங்களில், நான் ஒட்டகத்தை விட்டு இறங்கும் வரை தள்ளி நின்று, நான் பாதுகாப்பாக அமர்ந்த பின்பு தூரமான வேறொரு மரத்தடியில் ஒதுங்கிக் கொள்வார்.

புகழ்பெற்ற அரபுக் கவிஞர் அன்தரா கூறிய, "என் அண்டை வீட்டுப் பெண் மறையும் வரை என் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறேன்" என்ற வரிகளுக்கு இலக்கணமாக உஸ்மான் பின் தல்ஹா திகழ்ந்தார்.


இன்றைய காலத்தில் ஒரு சிறிய நற்செயலைச் செய்தாலும் அதனை உலகறியச் செய்யத் துடிக்கும் மனநிலை பெருகியுள்ளது. ஆனால், உஸ்மான் பின் தல்ஹா அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மதீனாவின் எல்லை வரை கொண்டு சேர்த்தார். "இதோ உன் கணவர் இந்த ஊரில் இருக்கிறார், நீ பாதுகாப்பாகச் செல்" என்று கூறிவிட்டு, ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் மீண்டும் மக்காவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


தான் செய்த இந்த மாபெரும் உதவியைப் பற்றி அவர் யாரிடமும் தம்பட்டம் அடிக்கவில்லை; எந்தப் புகழையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிறந்த வீரராகவும் வணிகராகவும் இருந்தும், தனது நேரத்தையும் உழைப்பையும் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காகச் செலவிட்ட அந்த மனிதநேயம் மகத்தானது.


உஸ்மான் பின் தல்ஹாவின் இந்தக் கண்ணியமான செயலை அல்லாஹ் வீணாக்கவில்லை. மக்கா வெற்றியின் போது அவர் இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் சாவியை மீண்டும் உஸ்மான் பின் தல்ஹாவிடமே ஒப்படைத்தார்கள். இன்றும் கஃபாவின் சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரது வம்சத்தினர் (பனூ ஷைபா) வசமே இருப்பது, அன்று அவர் காட்டிய அந்தத் தூய பண்பிற்கு கிடைத்த அழியாத அங்கீகாரமாகும்.


முடிவுரை:

மனிதாபிமானமும் பெண்மையை போற்றுவதும் மதங்களைக் கடந்தது; அது ஓர் ஆணின் கண்ணியத்தால் ஆனது. பெண்களைப் பாதுகாப்பதும் கண்ணியப்படுத்துவதுமே உண்மையான வீரம்!

📚 البداية والنهاية

📚زاد المعاد في هدي خير العباد..


🖊️தமிழாக்கம் : இம்ரான் ( நூரி)

     LIKE & SHARE

Sunday, 8 March 2026

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.



 இந்த போர்டில் காணப்படுவது

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.  


போர் நடந்த களத்தில் ஷஹீதானவர்கள் 13 ஸஹாபிகள். 


14 பேர் என்பதற்கு  ஒரு காரணம் உண்டு.


உபைதா இப்னுல் ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

போரில் படுகாயமடைந்து, போர் முடிந்து திரும்பும் வழியில் 'சஃப்ரா' எனும் இடத்தில் ஷஹீதானார்கள்.


*உபைதிப்னு ஹாரிஸ்* (ரழியல்லாஹு அன்ஹு)*


பத்ருப் போரின் ஆரம்பத்தில் எதிரணியில் உத்பா, ஷைபா, வலீத் ஆகிய மூவரும் தன்னோடு மோதுவதற்காக இஸ்லாமிய படை வீரர்களில் மூவரை சவால் விட்டு அழைத்தனர். 


அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு), அலீ(ரழியல்லாஹு அன்ஹு), உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய மூவரையும் எதிரிகளோடு மோதுவதற்கு அனுப்பிவைத்தார்கள். 


இம்மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகோதரர்கள். 


 இந்த இரு அணியினரின் மோதலைக் குறித்துதான் இறைவன் தன் திருமறையில்


هُذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ


"இந்த இரு தரப்பினரும் தங்கள் இறைவன் பாதையில் மோதிக்கொண்டவர்களாகும்" என்று கூறுகிறான்.


அலீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வலீதையும்,


 ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷைபாவையும்,


 உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) உத்பாவையும் எதிர்கொண்டனர்.


 அலி(ரழியல்லாஹு அன்ஹு), ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் தன்னோடு மோதிய எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். 


உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னோடு மோதிய ஷைபாவினால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். 


போர் முடிந்து திரும்பியபோது 'ஸஃப்ரா' என்ற இடத்தில் உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்தார்கள்.


 ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் 'நாஜியீன்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்  "அல்லாஹ்வின் 

தாதரே! நாங்கள் கஸ்தூரி வாடையை சுவாசிக்கிறோம். இது எங்கிருந்து வருகிறது? என்று வினவினர்கள்.


 அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இந்த இடத்தில் உபைதிப்னு ஹாரீஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரு இருக்கும்போது எப்படி உங்களுக்கு அந்த நறுமணம் வராமல் இருக்கும்" என்று பதில் கூறினார்கள்.


நூல்: வஃபாவுல் வஃபா, 1025/3


பத்ரு ஸஹாபிகளின் திருநாமங்களை ஓதி வசீலாவாக முன்வைத்து துஆ செய்வோம். அல்லாஹ் நம் அனைவரின் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக ஆமீன்.

Sunday, 8 February 2026

மக்காம்மடி சியாரத்தில் சிரமதானம்

 
















✍️மக்காமடி எனும் இடத்தின் பூர்வீக வரலாற்றை கொண்ட சடையர் அப்பா (வலியுல்லாஹ்) மக்காம் இன்று அழிவின் நுனியில் - நாளை சிரமதானம் 

“மக்காம்” அடி - என்ற தள அடையாளம் மருவி மக்காமடி ஆகி அதன் பெயரில் பாடசாலை,  வீதி, மக்காமடி வட்டாரம் என்றெல்லாம் அடையாள பெயரிட காரணமான “மக்காம் ‘எனும் ஒரு பூர்வீக  இடத்தின் இருப்பு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பராமரிப்பு இன்றி அழிவின் விழிம்பில் நிற்பது கவலை தான் - சில நாட்களாக என் மனதில் எழுந்த இந்த இடம் பற்றிய தேடல் - நேற்று நேரில் சென்று பார்த்த போது மிகவும் கவலை கொடுத்தது - 
இந்த விவகாரம் பற்றிய என் தனிப்பட்ட நிலைப்பாடு தொடர்பில் உங்கள் கொள்கை குழாயடி சண்டை கண்ணோட்டத்தில் இதை யாரும் நோக்க தேவை இல்லை - 

ஒரு இடத்தின் பூர்வீக வரலாற்று தளமாக 
மக்காமடி சடையரப்பா வலியுல்லாஹ் மக்காம் எனும் பகுதி பல வருடங்களாக யார் கண்ணிலும் படாத மூடு மந்திரமாக இருந்து வந்த நிலையில் அண்மையில் குறித்த அமைவிடத்தை அண்டிய பள்ளிவாசலில்  ஒழுங்கு செய்யபட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது இந்த இடம் பற்றி தெரிந்து கொண்டாலும் அதற்குள் நுழைய முடியவில்லை - சிறுவர்களாக இருந்த அந்தக்கால கட்டத்தில் அந்த இடத்தில் கொடியேற்றம்,  கந்தூரி,  பக்கீர் சாகச நிகழ்வுகள் என  களைகட்டிய பழைய நினைவுகள் மனதை குடைய பள்ளிவாசல் நிருவாக அனுமதியுடன் எனது இளைஞசர் குழுவுடன் நுழைந்து செல்லும் போது அப்பகுதி நீண்ட காலமாக கைவிடப்பட்டு பராமரிப்பு இன்மையால் மிகவும் மோசமாக காணப்பட்டது 

மனது குடைந்தது - இது ஒரு நகரப்புறம், என்னை அங்கீகரித்து வெற்றி பெற செய்த மக்காமடி என்ற பகுதியில் அவரவர் மனதின் சரி பிழைகளுக்கு அப்பால் குறைந்தது அழிவுற்று மோசமாக காணப்படும் இந்த வரலாற்று இடத்தை ஓர் சிரமதான ஏற்பாட்டு பணியின் ஊடாக சுத்தம் செய்து - இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள 
சிதைவை உடன் சீர் செய்யும் பொறுப்பை ஏற்று உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளேன் 

இங்கு என் பதிவு சிந்தனை / கொள்கை என இரண்டு தரப்பிற்கு இடையே மாறுபடும் என்பதால் முரண்பட வாய்ப்பு உள்ளது - அது அவரவர் விருப்பு வெறுப்பு - எதிர்மறை விமர்சனங்களை நீங்கள் இந்த பதிவிலோ அல்லது எனக்குள் திணிக்கவோ தேவை இல்லை - இறைவன் உதவியால் எதற்காகவும் எடுத்த பணியை விட்டு பின் வாங்கி நிற்பவனும் நான் கிடையாது, 

விமர்சனம் செய்ய எண்ணுவோர் உங்களில் யாரையும் புதிதாக ஒரு இடத்தை அமைத்து இந்த இடத்திற்கு வந்து தரிசியுங்கள்,  தொட்டு முத்தமிடுங்கள்,  கந்தூரி, காணிக்கை இடுங்கள் என்று கரம் பற்றி தர தர என இழுத்து வரவும் இல்லை - 
இந்த அழிவுற்ற பூர்வீக இடம் எனது அரசியல் பதவிக்காலத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளது,  இதை அழியட்டும் என கண்டும் காணாமல் கடந்து போகும் மோசமான மனோநிலையிலும் நான் இல்லை - எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சீர் செய்து இந்த தளத்திற்கு உரித்தான தரப்பின் பூரண அங்கீகாரம் ஊடாக இந்த இடத்தை பராமரிக்க முன்வரும் அணியிடம் பாரம் கொடுத்த மறு கணம் என் பணி முடியும் - இத்தனைக்கும் நான் திட்டமிட்டு இருப்பது வெறும் 3 நாட்களே!  

நான் ஒன்றும் கொள்கை ரீதியான அடிப்படைவாதியாகவோ,  இவவிடத்தின் நிருவாக தலைவராக ஆட்சி செய்யவோ நினைக்கவில்லை, எது எது எப்படி இருந்ததோ அதை அதை அப்படியே இருக்கச் செய்தவனாக இன்னொரு பணியுடன் கடந்து செல்வேன் , 
அவ்வளவே 
இன்ஷா அல்லாஹ் 

அன்பான மக்காமடி உறவுகளே! 
இந்த இடம் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்கும் அதே வேளை இதை சர்ச்ச்சை விவகாரம் ஆக்காமல் 
குறைந்தபட்சம் இவ்வாறான இடங்களை பூர்வீகத்தின் , இருப்பின் அத்தாட்சியாக சரி ஏற்று கொள்ளுங்கள் ! என்றோ ஒரு நாள் 
நம் சமூகத்தின் நிலையான  இருப்புக்கு அவைகள் அத்தியவசியமானவை என்பதை கொஞ்சமேனும் உணர்ந்து கொண்டவர்கள் மாத்திரம் 

நாளை திங்கட்கிழமை காலை 7 மணி முதல் இவ்விடத்தில் முன்னெடுக்க உள்ள சீரமைப்பு பணியில் இணைந்து கொள்ளுங்கள் -

நன்றி வஸ்ஸலாம் 
அஸ்மி - நகர சபை உறுப்பினர் 
மக்காமடி வட்டாரம்


Saturday, 7 February 2026

ஏர் ஊரின் சொல்ல மறந்த கதை.

 



ஏர்  ஊரின் சொல்ல மறந்த கதை.

 ஊரில் முதலாவது ஜனாஷா

௮றிவித்தல்  .

                       

ஓட்டுப்பள்ளி   யூசுப் மோதினார்

௮ன்று காலை தஹஜ்ஜத் தொழவந்தவர்களிடம்  கேக்கிறார்  சலாரை காணவில்லை  ௭ன்று.

சுபஹ்  தொழுதுவிட்டும்  பார்க்கிறார்  சலார்  ௭ன்று  செல்லமாக  ௮ழைக்கப்படும் ௮லிமுஹம்மது  வை  காணவில்லை  ஒட்டமாக  வீட்டை  நோக்கி  மனைவி ஆசியா ௨ம்மாவிடம்  கேக்கிறார்  சலார்  ௭ன்ன  பள்ளிக்க  வரவில்லை.

மனைவியின்  பதில் இஷா  தொழுதுட்ட

சாப்பிடையும் இல்ல  துங்கின  இன்னு  ௭ழும்பவில்லை.

௨டனே  கட்டிலில்  பார்க்கிறார் தக்பீர்  கட்டியவராக  தூங்கிறார் ௮சைத்துப்பார்த்த  நாடி பிடித்தவர்  வீட்டாரிடமும்  சொல்லாமல்   பதற்றத்துடன்  பள்ளியை  நோக்கி  ஓடி  மைக்கில்  இவ்வளவுதான்  சொன்னார்.

சலார்  மெளத்தாகிவிட்டார்  

innalillhi  wainna ilahi  rajiuoon..

இது தான்  முதல் ௮றிவிப்பு.

இவர்.

மரஹும்.  ராசா  ஹாஜி  ௮ரிசிஆலை

சின்னலெவ்வை ஹாஜி

நெல்  வியாபாரி

மர்ஹும்  கா௫ன்

காலித்தீன்  காக்கா.

இவர்களின்  தகப்பனார்.

௮லிமுஹம்மது.


யூசுப்  மோதினாரின் ஊர் பற்று

மோதினார் ௭ப்படி இ௫க்க வேண்டும்.

மோதினார்  ௭ப்படி வாழ வேண்டும்.

௭ன்பதற்கு  முன்  ௨தாரணம்.


மோதினார் ஓட்டுப்பள்ளியில் சம்பளம்  பெறும் போது 5 சதம் முத்திரையில் கையொப்பமிட்ட சம்பளம் பெற்ற ரிஸிப்ட் முதல் தலைவர் சக உறுப்பினர் களை கூட்டத்தக்க அழைப்பிதல்  வரை.


பாதுகாப்பாக இருக்கிறது என்னிடம்.


தேர்தல் காலத்தில் பரீத் மீராலெப்பை அவர்களின் உத்தியோகப்பற்றற்ற 'பொடி காட் "அவரது முன் வீட்டில் வசித்த மோதினார். பரீத் அவர்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பார். தேர்தல் காலத்தில் பரீத் அவர்களின் வீட்டைத்தாக்க வந்த குழுவினர் மீது இவர் தனக்குச் சொந்தமான அனுமதி பெற்ற துப்பாக்கிமூலம், துப்பாக்கிப் பிரயோகம் செய்ததன் காரணமாக வீதியில் நின்ற காதர் ஆசிரியர் (வஹியா ஆசிரியையின் கணவர்)

காயமடைந்தார்.

மோதினார் எதிராளிகளிடம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கொ

ச்சிக்காய் தூள் வைத்திருப்பார். அதனால் இவரை "மசாலாத்தூள் மோதின்" என்ற பட்டப் பெயர் கூட சூட்டினார்கள். இவர் வீதியில் செல்லும்போது துப்பாக்கியை தனது கையோடு சங்கிலியால் இணைத்திருப்பார்.வெறும் எவரும் பறித்துச் செல்லாத வகையில் இப்படியொரு தந்திரோபா

யத்தை செய்திருந்தார்.

வீதியால் செல்லும்போது எதிராளிகள் மறைந்திருந்து, (சுட்டுவிடுவார் என்ற பயத்தில்) 'மோதீன் புச்சித் துவக்கு கொண்டுபோறான் "என்று சத்தமிடுவதை எனது காதுகளால் கேட்டுள்ளேன். இவர் ஒரு சிறந்த சமையல் கலை நிபுணர். பரீத் வயல் பகுதிகளுக்கு சமைத்துச் சாப்பிடச்சென்றால் மோதினார்தான் பிரதம சமையல்காரர்.


Muhamed Nadheem fb