எலும்புகளை குப்பையில் வீசலாமா ?
********************************************
#எலும்புகளை குப்பையில் வீசும்போது “பிஸ்மில்லாஹ்” சொல்ல மறக்காதீர்கள்.
ஏனெனில் அது மீண்டும் இறைச்சி சேர்வதற்கான காரணமாகி, முஸ்லிம் ஜின்னுகளுக்கான உணவாக ஆகும்.
தொகுப்பு :
மெளலவி HM யூசுப் முஸ்தபி, காதிரி
Muhammed Yoosuf Musthafi
இதனை ஒரு சதகா (தர்மம்)என நினைத்து, நல்லதும் சுத்தமானதுமான உணவாக முஸ்லிம் ஜின்னுகளுக்கு கொடுக்கிறீர்கள் என்று நினையுங்கள்.
இந்த முஸ்லிம் ஜின்னுகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உணவை கேட்டபோது, அவர் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட ஒவ்வொரு எலும்பும் உங்களுக்கு (உணவாக) கிடைக்கும்.”
அதனால், நீங்கள் சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, பின்னர் அந்த எலும்பை எறிந்தால், முஸ்லிம் ஜின்னுகள் அதனைப் பெறும்போது, அது மீண்டும் இறைச்சியுடன் இருப்பதாக மாறி, அவர்கள் அதனை உண்பார்கள்.
அதனால் தான், நீங்கள் உணவின் தொடக்கத்தில் “பிஸ்மில்லாஹ்” சொல்ல மறந்துவிட்டால்:
“பிஸ்மில்லாஹ் அவ்வலஹு வ ஆகிரஹு”(ஆரம்பத்திலும் முடிவிலும் அல்லாஹ்வின் பெயர்) என்று சொல்ல வேண்டும்.
ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லாமல் அந்த இறைச்சியை உண்டு, எலும்பை எறிந்தால், முஸ்லிம் ஜின்னுகள் அதிலிருந்து உணவுபெற முடியாது; அது காஃபிர் ஜின்னுகளுக்குச் சென்று விடும்.
இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஜின்னுகள் வந்து உணவு கேட்டபோது, அவர் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்ட ஒவ்வொரு எலும்பும் உங்களுக்கு, அது மிகுந்த இறைச்சியுடன் கிடைக்கும். மேலும், ஒவ்வொரு மலமுமே உங்கள் மிருகங்களுக்கு தீவனமாகும்.”
அதன்பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
“அவற்றினால் (எலும்பும், மலமும்) நீங்கள் இஸ்திஞ்ஜா செய்யாதீர்கள்; ஏனெனில் அவை உங்கள் சகோதரர்களின் உணவாகும்.”
(ஸஹீஹ் முஸ்லிம்)
இது எலும்புகளுடன் தொடர்பான மறைந்து போன ஒரு அழகான இஸ்லாமிய ஒழுக்கமாகும் ❤️ செய்ஹுமார்கள் உஸ்தாதுமார்கள் நாதாக்கள் அஹ்லுபைத்துக்கள் கற்றுக் கொடுத்த பண்பாடுகளாகும்.
“நினைவூட்டுங்கள்; நிச்சயமாக நினைவூட்டல் நம்பிக்கையாளர்களுக்கு பயன் தரும்.”
தொடரும் ...
#உலகில் #ஒழுக்கம் #மறுமையை #உரிமை #فضائل_قيام_الليل #உழை #நன்மை #உலக #உணவு #الشيخ #எலும்பு #ஜின் #ஷைத்தான்



























