السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 8 March 2026

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.



 இந்த போர்டில் காணப்படுவது

பத்ரு போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் பெயர்கள்.  


போர் நடந்த களத்தில் ஷஹீதானவர்கள் 13 ஸஹாபிகள். 


14 பேர் என்பதற்கு  ஒரு காரணம் உண்டு.


உபைதா இப்னுல் ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

போரில் படுகாயமடைந்து, போர் முடிந்து திரும்பும் வழியில் 'சஃப்ரா' எனும் இடத்தில் ஷஹீதானார்கள்.


*உபைதிப்னு ஹாரிஸ்* (ரழியல்லாஹு அன்ஹு)*


பத்ருப் போரின் ஆரம்பத்தில் எதிரணியில் உத்பா, ஷைபா, வலீத் ஆகிய மூவரும் தன்னோடு மோதுவதற்காக இஸ்லாமிய படை வீரர்களில் மூவரை சவால் விட்டு அழைத்தனர். 


அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு), அலீ(ரழியல்லாஹு அன்ஹு), உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய மூவரையும் எதிரிகளோடு மோதுவதற்கு அனுப்பிவைத்தார்கள். 


இம்மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சகோதரர்கள். 


 இந்த இரு அணியினரின் மோதலைக் குறித்துதான் இறைவன் தன் திருமறையில்


هُذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ


"இந்த இரு தரப்பினரும் தங்கள் இறைவன் பாதையில் மோதிக்கொண்டவர்களாகும்" என்று கூறுகிறான்.


அலீ(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வலீதையும்,


 ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷைபாவையும்,


 உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) உத்பாவையும் எதிர்கொண்டனர்.


 அலி(ரழியல்லாஹு அன்ஹு), ஹம்ஸா(ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் தன்னோடு மோதிய எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். 


உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னோடு மோதிய ஷைபாவினால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். 


போர் முடிந்து திரும்பியபோது 'ஸஃப்ரா' என்ற இடத்தில் உபைதிப்னு ஹாரிஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்தார்கள்.


 ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் 'நாஜியீன்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்  "அல்லாஹ்வின் 

தாதரே! நாங்கள் கஸ்தூரி வாடையை சுவாசிக்கிறோம். இது எங்கிருந்து வருகிறது? என்று வினவினர்கள்.


 அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "இந்த இடத்தில் உபைதிப்னு ஹாரீஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கப்ரு இருக்கும்போது எப்படி உங்களுக்கு அந்த நறுமணம் வராமல் இருக்கும்" என்று பதில் கூறினார்கள்.


நூல்: வஃபாவுல் வஃபா, 1025/3


பத்ரு ஸஹாபிகளின் திருநாமங்களை ஓதி வசீலாவாக முன்வைத்து துஆ செய்வோம். அல்லாஹ் நம் அனைவரின் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி வைப்பானாக ஆமீன்.