السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 24 April 2024

அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி

 


காத்தான்குடி வாழும் மகான் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் 


இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு பிரதான காரணம் இந்த பதிவின் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் சில தினங்ளாக அதிகளவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதை அவதானித்துடன் அப்போது சில வளர்ந்து வரும் இன்றைய இளைய சமூகத்தினர் இந்த இடம் காத்தான்குடியில் எங்கு உள்ளது , இவ்விடத்திற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு , இவ்விடத்தின் சொந்தக்காரர் யார், காத்தான்குடி வரலாற்றில் இவ்விடத்தின் முக்கியத்துவம் என்ன? மற்றும் இவ்விடம் காத்தான்குடி முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தின போன்ற பல கோள்விகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தமையுமாகும். எனவே இச்சிறு கட்டுரை அதற்கான ஓரளவு தெளிவை தரும் என என்னுகிறேன்.


இவ்விடம் காத்தான்குடியில் எங்கு அமையப்பெற்றுள்ளது


குழந்தையும்மா கபுரடி என அழைக்கப்படும் இவ்விடம் நபி (ஸல்) அவர்களுடைய பரம்பரையைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்களும் அவர்களின் குடும்பதை சேர்ந்த 24 சாதாத்மார்கள் வாழ்ந்து இவ்வுலகை விட்டுப்பிரிந்து மண்ணரைவாழ்வுக்கு சென்ற இடமாகும்.


இவ்விடம் காத்தான்குடி பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) பள்ளிவாயலை சூழ உள்ள பகுதியாகும். இதன் பரப்பளவு வரலாற்று ரீதியாக அராய்கின்ற போது மிக விசாலமுடையதாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அதாவது பின்பக்கமாக (கடற்கரை பகுதி) உமர் ஷரீப் பள்ளிவாயல் வரை இதன் பரப்பளவு நீண்டு செல்வதுடன் இவ்விடம் எமது முன்னோர்கள் மற்றும் மௌலானா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இப்பாரம்பரிய சொத்து பின்வந்த அவர்களது பரம்பரையால் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. துரதிருஷ்டவசமாக இன்று அவர்களுடைய மக்பரா உள்ள பகுதி மாத்திரமே இன்று எஞ்சியுள்ளது.


இவ்விடத்தின் சொந்தக்காரர் யார்?


மண்ணறைகளில் உயிர்

வாழும் காத்தான்குடி கபுறடியில்

சமாதி கொண்டிருக்கும் அஹ்லுல்

பைத்துக்களில் "அஸ்ஸெய்யித்

அப்துல் காதிர் பெரிய மௌலானா (ரழி)

அவர்களே இவ்விடத்தின் சொந்தக்காரர் ஆவார்கள் 


 இவர்களது வம்ச பரம்பரையினர் “ஹழர” மௌத்தைச்சேர்ந்த நாயகம் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலில் நின்றும்உள்ளஅஹ்துல்பைத்தைச்சேர்ந்தவர்களாவார்கள். இவர்களின் பரம்பரையைப் பற்றி "மவ்லிதுஸ் செய்யித் அப்துல் காதிர் பாரி"எனும் கிரந்தத்தில் கசாவத்தைஆலிம் புலவர் (றஹ்) அவர்கள்குறிப்பிடும்போது ''செய்யித் செய்னுல் ஹழ்ரமிய்யி (ரஹ்) " அவர்களின் மகன் செய்யித் உமர்மௌலானா பாரிய்யில் பாஅலவிய்யி(ரஹ்) ஆவார்கள். அவர்களது புதல்வர் தான் செய்யிதினாஉஸ்தாதுனா செய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா (ரழி) அவர்கள் என குறிப்பிடுகின்றார்.


மௌலானா அவர்கள் பல்காமம் என அழைக்கப்பட்ட வெலிகாமத்தில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 1271 ஸபர் மாதம் பிறை 21ல் காத்தானி என்றழைக்கப்பட்ட காத்தான்குடியில் வபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது அவர்கள் வபாத்தாகி 172 வருடங்களா கின்றன.


தரீக்கத், ஹகீகத் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கிய மௌலானா (வலி) அவர்கள் அலவியத்துல் காதிரிய்யஹ் ''தரீக்கஹ்வின் ஷெய்கு நாயகமாக இருந்து தன்னை நாடி வரும் முரீதீன்களுக்கு பைஅத் (தீட்சை) வழங்கினார்கள்."அலவிய்யதுல் காதிரிய்யஹ் தரீக்கஹ்வின்" செய்கு நாயகமாக தான் விளங்குவதற்கான காரணத்தை அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் மௌலானா (வலி) அவர்கள் விளக்குகையில் அஷ் ஷெய்கு அஹ்மது இப்னு அப்துல்லாஹ் பாபகீஹ்(ரஹ்) மூலமாகவும், அவர்கள் அஸ்ஸெய்யிது ஷெய்குல் ஜிப்ரி(ரலி) குத்பின் மூலமாகவும். இந்தத் தரீகத்தைப் பெற்றார்கள். என குறிப்பிடுகிறார்கள். பெரிய மௌலானா (வலி) அவர்கள் தக்- ஷீர் உடைய அறிவில் மிகவும் சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் "பைஅத்" பெற்றவர்களில் அக்குறணையில் சமாதிகொண்டிருக்கும் கசாவத்தை ஆலிம் புலவர்(ரஹ்) அவர்கள் குறிப்பிடதக்கவராவார்கள்.


செய்யித் அப்துல் காதிர் மௌலானா அவர்களுக்கு முஸ்தபா, யாஸீர், அஹ்மது. சக்காப் என நான்கு புத்திரர்கள் இருந் தார்கள். அஸ்செய்யித் முஸ்தபா மெளலானா அவர்களின் மகன் செய்யித் செய்னுதீன் என்பவராகும். இவர்களே ஸெய்ன் மௌலானா என அழைக்கப்பட்டார்கள். தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சம்மாந்துறைக்கருகில் மாவடிப்பள்ளி எனுமிடத்தில் சமாதி கொண்டிருக்கிறார்கள்.


ஸெய்ன் மௌலானா தைக்கஹ் என்ற பெயரில் காத்தான்குடியில் ஒரு பள்ளி வாயல் அமைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா (வலி ) அவர்களின் பேரப்பிள்ளையே செய்ன் மெளலானா என்பவர்களாகும்


இவர்களுடைய இஸ்லாமிய அகீதாவை பொருத்தவரை கலிமாவிற்கு தூய விளக்கம் வழங்கியவர்களாக திகழ்கின்றார்கள். அதாவது ஒரு மனிதனை 24 மணி நேரமும் இறை சிந்தனையில் வைத்திருக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் மெய்ப்பொருள் ஒன்றே எனும் வஹ்ததுல் வுஜூத் இறை ஞானத்தை உலகறியச் செய்யும் பணியை அயராது மேற்கொண்டார்கள்.


இவ்விடத்திற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுடன் கூடிய தொடர்புள்ள ஒரு நாடாக ஏமன் நாட்டை காண்கின்றோம். ஏமன் நாடு பெருமைக்குரிய ஒரு நாடு அது பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் அவர்களால் புகழ்ந்துறைக்கப்பட்டிருப்பதாக ஹதீஸ்கள் எடுத்துக் கூறுகின்றன.


இதன்படி ஏமன் நாட்டவர்கள் இலங்கை வரலாற்றுடன் முக்கியமான மூன்று விடயங்களில் தொடர்புபட்டுள்ளவர்களாக உள்ளனர்.


 இலங்கைக்கு ஆதியில் பெருமளவு வர்த்தகத்தை கொண்டு வந்ததுடன் இலங்கையின் முக்கியத்துவத்தை சகல நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தியவர்கள். (இலங்கைக்கு பாரசீகர்கள் ,ரோமர்கள், கிரேக்கர்கள்) என்று எத்தனையோ நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து போய் இருப்பினும் இலங்கையுடன் இரண்டறக் கலந்தவர்கள் அரபியர்கள் மாத்திரமே


இரண்டாவதாக இலங்கைக்கு வந்து குடியேறிய அராபியர்கள் முஸ்லிம்களுள் அதிக தொகையினர் 


மூன்றாவது இலங்கைக்கு இஸ்லாத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கை வகித்தவர்கள்.


இதில் மூன்றாவது பகுதியின் படியே பல வலீமார்கள் இலங்கைக்கு வந்ததுடன் குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்திற்கும் வருகை தந்துள்ளனர்.

உ-ம்

நொச்சி முனையில் உள்ள கபுறுஸ்தானமும் மட்டக்களப்பு கோட்டை முனையில் உள்ள கபுறுஸ்தானமும் குறிப்பிடப்படல் வேண்டும் . இப்பெரியார்கள் இலங்கையின் கிழக்கு கரைக்கு வருகின்ற போது இவர்கள் வந்த கப்பல் உடைந்து மூழ்கியதில் இவர்களும் இறந்து விட்டார்கள் என்றும் ,அன்றிரவு காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு பெரியாரின் கனவில் தோன்றி இந்தச் செய்தி சொல்லப்பட்டதாகவும் இவரும் மற்றவர்களும் கனவில் சொல்லப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்த போது குறித்த நொச்சிமுனை கோட்ட முனை ஆகிய இடங்களில் இரண்டு ஜனாஸாக்களும் கரை ஒதுங்கி இருக்கக் கண்டு அவர்களுக்குச் சொல்லப்பட்ட படி அதே இடங்களில் அந்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுவதுடன் இவர்கள் இருவரும் ஏமன் தேசத்தை சேர்ந்தவர்களாகும்.


அதேபோல் காத்தான்குடியில் அடங்கப்பட்டுள்ளஅஸ்ஸெய்யித் அப்துல் காதிர் பெரிய மௌலானா யமனி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்களும் ஏமன் நாட்டின் ஹழரமௌத் எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே


எனவே காத்தான்குடியில் அமையப்பெற்றுள்ள இவ்விடம் ஏமன் தேசத்திற்கும் இலங்கைக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்பை எடுத்துக்காட்டுவதாக அமைவதுடன்‌ குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்களின் இருப்பு வரலாற்று ரீதியாக தொன்மையானது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.


காத்தான்குடி வரலாற்றில் இவ்விடத்தின் முக்கியத்துவம் என்ன?


வரலாற்று ரீதியாக நாம் இவ்விடத்தை நோக்குகின்ற போது காத்தான்குடி சமூக, அரசியல் ,பொருளாதார மற்றும் சமய ரீதியான விடயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.


சமூக ரீதியாக நோக்குகின்ற போது முந்தைய காலத்தில் கடற்கரை பிரபல்யமடையாமல் இருந்ததால் மௌலானா கபுரடி மைதானம் சாதாரண பொதுமக்கள் மற்றும் கல்விமான்கள் என பலரும் மாலை வேளையில் அணி அணியாக அல்லது சிறு குழுக்களாக ஒன்று கூடி ஊர் சமூக சார் பிரச்சனைகளை கலந்துரையாடி மாற்றுத்தீர்வகளை பெரும் பிரதான இடமாக திகழ்ந்தது.


அரசியல் ரீதியாக நோக்குகின்ற போது

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடாத்தும் இடங்களில் மிகப் பிரதானமான மௌலானா கபுரடி மைதானம் அமைந்ததுடன் பிரபலமான அரசியல் வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்த இடமாகவும் திகழ்ந்தது.

உ-ம். பதியுதீன் மஹ்மூத் , பாரூக் சின்னலெப்பை


பொருளாதார ரீதியாக நோக்குகின்ற போது

மௌலானா கபுரடியை சூழ‌உள்ள பகுதியில் ‌அதிகளவான கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை காத்தான்குடி பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்ததன.


குறிப்பாக இக்கடைதத் தொகுதிகள் ஒன்று பொழுதுபோக்கிற்காக ஒன்று கூடும் மக்களின் தேவையை‌ கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டன.


அடுத்து கந்துரி மற்றும் மீலாத் விழாக்களை மையப்படுத்தியும் பல தெருவொர அங்காடி உருவாக்கப்படன. இக்கடைகளின் மூலம் காத்தான்குடி மக்கள் மாத்திரமன்றி அதை சூழ உள்ள பிரதேசங்களான படுவாங்கரை ,காங்கனோடை , பாலமுனை, கொக்கட்டிச்சோலை போன்ற பிரதேச மக்களும் பொருளாதார ரீதியாக பயனடைந்தனர்.


காத்தான்குடியிருப்பு

கனதூரம் என்றிருந்தேன்

கப்பலுக்குச் சுக்கான்

கயிறிழித்தாற் போலிருக்கு


அப்பம் சுடும் காத்தான்குடி

அவலிடிக்கும் காரைதீவு

முட்டி தூக்கும் சம்மாந்துறை

முகப்பழக்கம் நிந்தவூரு


குழந்தை உம்மா கபுறடிக்கு

கூட்டு வண்டி எறிவந்து

கந்தூரி குடுப்பேன் அல்லவா

எங்கட கஷ்டம் எல்லாம் தீருமெண்டா


காத்தான்குடி வாழும் 

கருணை உள்ள குழந்தை உம்மா

பிள்ளையொண்டு கிடச்சிதெண்டால்

புருசனுடன் நான் வருவேன்.


தொடரும்....


M.L Lathfan Rosin

University of Peradeniya

Tuesday, 23 April 2024

தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.






 ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்.


செய்தி:-

**********

ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு

===================================

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் நாளை (24) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


உமா ஓயா திட்டமானது 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டத்திற்கு சேர்க்கின்றதோடு, குறித்த திட்டத்திற்காக 529 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது


அதன்படி ஒரு நாள் விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Sunday, 21 April 2024

ஹஸன் பஸரீ. رحمة الله

 


ஓர் அடிமையின் மகனான அவர் மதினா நகரில் 642- ம் ஆண்டு பிறந்தார்.சிறுவயது முதலாக ஆன்மிகத்தில் மிகுந்த தேடல்கொண்டிருந்தார். அவரது தீவிரமான ஈடுபாடு,  மெய்ஞ்ஞானத்தின் ஆழ்நிலைகளுக்கு அவரை இட்டுச்சென்றது. நேர்மையின் உருவமாக இருந்த காரணத்தால், மனத்தில் பட்டதை யாரிடமும் வெளிப்படையாகப் பேசும் துணிவு அவரிடம் எப்போதும் இருந்தது.


“தான் காணும் யாவரும் தன்னைவிட மேலானவர் என்று கருதுவதே உண்மையான பணிவு” என்று தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் கூறுவார். ஒருநாள் தன்னுடைய சீடர்களுடன் வெளியே சென்றிருந்தபோது ஒருநாய் எதிரில் வந்தது. அப்போது ஒரு சீடர் அவரிடம், “தாங்கள் மேலானவரா? அந்த நாய் மேலானதா?” என்றுகேட்டார்.


“இறைவனின் தண்டனையிலிருந்து நான் விடுதலை அடையும்வரை, என்னைவிட அந்த நாயே மேலானது” என்று கூறினார். மேலும், தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நாய் பசித்திருக்கும். பசித்திருத்தல் துறவிகளின் நற்பண்பாகும். துறவிகளைப் போன்று அதற்கென்று தங்குவதற்கு இடம் கிடையாது. துறவிகளைப் போன்று இரவில் சிறிது நேரமே அது தூங்கும்.


துறவிகளைப் போன்று அதற்கென்று உடைமையோ உறவோ கிடையாது. இறைவன் அளிக்கும் சோதனைகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் துறவியைப் போன்று, தன்னை அடிக்கும் எசமானரையும் அது புன்னகையுடன் எதிர்கொள்ளும். எனவே, நாய் என்று அதை இழிவாகக் கருதாமல், அதனிடம் இருக்கும் நற்பண்புகளை உங்கள் இயல்பாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.


தனிமையிலேயே இருங்கள்


மறுமையைக் குறித்து அவருள் மிகுந்திருந்த அச்சத்தின் காரணமாக, சிரிப்பதையே அவர் மறந்திருந்தார். தவறுகளைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருவதைவிடத் தவறுகளைச் செய்யாது கட்டுப்பாட்டுடனும் மாண்புடனும் வாழ்வதே நன்று என்பதே ஹஸனின் கொள்கை.


தனது வாழ்க்கையையும் இந்தக் கொள்கைப்படியே அமைத்துக்கொண்டார். பிறருக்காக அன்றி தனது உள அமைதிக்காக அவர் தவறுகளற்று வாழ்ந்தார். தெரியாமல் நிகழ்ந்த சிறு தவறுக்கும் மனம்வருந்திப் பல நாட்கள் வாய்விட்டுக் கதறி அழுவது அவரது  வாடிக்கையாக இருந்தது. தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டார்.


“ஒருவரின் குறை மற்றொருவருக்குத் தெரிய வந்தால் அதன் காரணமாக நம்பிக்கையிழப்பும் பகைமையும் ஏற்படும். எனவே, இறைவனிடம் உங்கள் குறைகளைச் சொல்லும்போது தனிமையிலேயே இருங்கள்” என்று தன்னுடைய சீடர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்தார்.


ஒருமுறை இறந்த ஒருவரை அடக்கம் செய்துவிட்டு எல்லாரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, இவர் மட்டும் திரும்பிச் செல்லாமல், அங்கேயேஅமர்ந்திருந்து வாய்விட்டுக் கதறி அழுதுகொண்டு இருந்தார். அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.


அவர் அழுவதைப் பார்த்து,அவருடைய சீடர்களும் அழத் தொடங்கினர். அங்கிருந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த முதிய மனிதர் ஒருவர் ஹஸனைப் பிடித்து உலுக்கி அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்.


  “இந்தப் பிறப்பின் முடிவும் மறுமையின் தொடக்கமும் இந்தப் புதைகுழிதான். உங்களது வாழ்வின் முடிவு இதுவாக இருக்கும்போது இதுகாறும் நீங்கள் எதைக் கண்டு பெருமையடைந்தீர்கள்? மறுமையின் தொடக்கமும் இந்தக் குழிதான் எனும்போது, நீங்கள் எதைக்கண்டு அச்சமற்றவராக வாழ்ந்தீர்கள்?” என்று அந்த முதியவரிடம் ஹஸன் திருப்பிக் கேட்டார். அதைக் கேட்டுஅங்கிருந்த மக்கள் அனைவரும் வாய்விட்டு அழத் தொடங்கினர்.


சிறிது நேரம் கழித்து அங்கிருந்த மக்களை நோக்கி, “செம்மறியாடுகூட, இடையனின் சத்தம் கேட்டதும், மேய்வதை விட்டுவிட்டு, அவனது திசை நோக்கிக் குதித்து ஓடும். ஆனால், மனிதனோ தனது மன இச்சைக்கு அடிபணிந்து, இறைவனையே மறக்கும் நிலைக்குச் செல்கிறான். மனத்தின் இச்சையை அகற்றாவிட்டால் இறைவனைக் காண முடியாது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” என்று கூறினார்.


துறவியாக இருந்தபோதும் பல்வேறு மார்க்கப் போர்களில் ஹசன் பங்கேற்றுள்ளார். எப்போதும் தூய ஆடைகளையே அவர் அணிவார். அவருள் நிறைந்திருக்கும் ஞானத்தால், அவரது அழகிய முகம் எப்போதும் ஒளிர்ந்தவிதமாக இருக்கும்.


இனிய குரலுக்குச் சொந்தக்காரர். அவர் ஆற்றும் உரை, கேட்பவரை மெய்மறக்கச் செய்யும், ஞானக்கடலில் நீந்தச்செய்யும், கடவுளுள் கரையச்செய்யும். மக்களை ஆன்மிகப் பாதையில் மடைமாற்றிவிட அவரது பார்வை ஒன்றே போதுமானதாக இருந்தது.


சூபி உலகுக்கு ராபியா பஸரீ போன்ற எண்ணற்ற ஞானிகளை அவரது சொல்லும் வாழ்வும் அளித்துள்ளது. திருக்குர்ஆனுக்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரை, இன்றும் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  அவர்அளவுக்குப் பெயரும் புகழும் கொண்ட ஞானி எவரும், இந்த உலகில் இதுகாறும் பிறக்கவில்லை.


கி.பி. 728- ல் இவ்வுலகைவிட்டு அவர் மறைந்தார்


Monday, 8 April 2024

காணவில்லை


ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவா்கள் ஸஹாபாக்களுடன் 

உரையாடிக் கொண்டிருக்கும் போது

ஒருவா் மிக வேகமாக ஒடி வந்து , சபையி்ல் கவலை கலந்த முகத்தோடு சொன்னாா்.


யா ரஸூலல்லாஹ் ! "என் மகனைக் 

காணவில்லை,

பல இடங்களில்

தேடியும் கிடைக்கவில்லை,

தாங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிராா்த்தனை

செய்யுமாறு வேண்டி கேட்டுக்

கொண்டாா்". 


அப்பொழுது அந்த சபையிலிருந்த ஒரு

ஸஹாபி எழுந்து சொன்னாா் ..

யா ரஸூலல்லாஹ்! எனக்கு இவருடைய

மகனைத் தெரியும், 

அந்தக் குழந்தை 

நான் வருகின்ற பாதையில்தான்

விளையாடிக் கொண்டிருக்கிறது".


"அதைக் கேட்ட குழந்தையின் தந்தை 

அவசர, அவசரமாகப் புறப்பட ஆயத்தமானாா்.


"நபி (ஸல்) அவா்கள் அவரை அழைத்துக் கேட்டாா்கள்


"தாங்களுக்கு இவ்வளவு அவசரமா ? 


அவா் கூறினாா் 

" யா ரஸூல்லாஹ்!  

தாங்களுக்குத் தெரியாதா ஒரு 

தந்தையின் மனதேனை "


"என்னுடைய மகனை காணாமல் 

நானும் என்னுடைய மனைவியும்

மிகவும் சோகத்திலுள்ளோம்"


"என் மனனவி, மன வருத்தத்துடன் என் மகனை எதிர்நோக்கி வாசலில்

காத்துக் கொண்டிருக்கின்றாள். ஆகவே

நான் அவசரமாக அவனை பாா்க்கப் போகின்றேன்" 


நபி(ஸல்) அவா்கள் கூறினாா்கள், 

தாங்கள்

மகனைக் காணாத மனவேதனையில்

இருக்கின்றீர்கள் என்பது தெரியும்,

ஆனால் தாஙகள் உங்களுடைய 

மகனை நேரில் சந்திக்கும போது,

தாங்களுக்கும் அறியாது, பாசத்தின்

இனிமையில், அன்பால் அவனைக் கொஞ்ச 

நேரிடும்,


"ஆனால் விளையாடிக் கொண்டு

இருக்கும் குழந்தைகளின் கூட்டத்தில்

சில சமயங்களில் யத்தீமான (அனாதையான) குழந்தைகளும் இருக்கலாம்" ..


"அது உங்களுக்குத் தெரியாது,

அன்போடு,

 மகனே ! என்று அழைத்து உறவாடும் போது யத்தீம் மக்களின் 

மனது வேதனைப்படலாம்" ..


" என்னுடைய தந்தை இருந்திருந்தால்

இதுபோல் என்னையும் அன்போடு

அழைத்து கொஞ்சி இருப்பாரே என்று பிஞ்சு இதயம் வலிக்கக்கூடும்".


"எனவே தாங்களின் வீட்டிற்குச் சென்று

மகனின் மீதுள்ள அன்பை 

வெளிப்படுத்துங்கள்" என்றார்கள்.


" நினைவில் வைத்துக் கொள்வோம்"


இதேபோல விதவையின் முன்னில் வைத்து தன்

மனைவியோடு அன்பு பாராட்டாதீர்கள்.


ஏழைகளின் முன்னில் தன்னுடைய செல்வத்தைக் குறித்து பெருமையாக பேசாதீர்கள் " ..


" அல்லாஹ், ரப்புல் ஆலமீன் 

நம்முடைய குழந்தைகளை 

ஸாலிஹான மக்களாக ஆக்கி,

நாட்டிற்கும், சமுதாயத்திற்கும்,

வீட்டிற்கும் நன்மை சோ்க்கும் மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.♥️

Friday, 5 April 2024

ஏறாவூரும் செய்ஹுனாவும்

#இன்று ஏறாவூர் #மீராகேணி கலந்தர் வீதியில் அமைந்துள்ள ஹமத் மஸ்ஜிதில் இன்றைய தினத்தில் மறைந்த  மரியாயாதைக்குரிய எங்கள் செய்ஹு நாயகம் ஞான பிதா அஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸுபி காதிரி வர் ரிபாயீ மற்றும் மறைந்து வாழும் அவர்களின் கலீபாக்களின் மீதும் மற்றும் இப்பள்ளிவாயலை கட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த மர்ஹும் எனது நண்பர் மெளலவி ரிஸ்வி முஸ்தபி அவர்களுக்கும் இப்பள்ளிவாயலுக்கு உதவிகள் செய்த அனனவருக்கும் சங்கையான மாதத்தில் புனிதமான தினத்தில் புனித அல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்பட்டது. 


#இந்நிகழ்சிக்கு சிறப்பாக நடைபெற உதவிகள் செய்தவர்களுக்கும் இப்பள்ளிவாயலைச் சுற்றியுள்ள ஏழைகளுக்கு நோன்பு திறக்க கன்ஜி கொடுத்து உதவிகள் செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹுவின் அருள் கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்யப்பட்டது.


#இறுதியாக எங்கள் அப்துல்காதிர் ஸூபி நாயகத்தைப் பற்றியும் அவர்களின் கராமத் பற்றியும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.


#சங்கைக்குரிய மெளலவி முன்னால் ஏறாவூர் உலமா சபைத்தலைவர், முன்னால் காழி நீதிபதி,முன்னால் நகர சபை முதல்வர் மெளலவி அப்துல் மஜீத் மிஸ்பாஹி காதிரி 


இப்தார் ஸலவாத்துடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.