Monday, 24 November 2014
Saturday, 15 November 2014
Sunday, 9 November 2014
விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு
நோய் குணப்படும் மருத்துவக்கலை ஒரிரவில் உருவாக்கப்படவில்லை.அது ஆயிரம் ஆயிரம் பங்களிப்பாளர்களின் முயற்ச்சியின் விளைவாக உருவான உச்ச அடைவு மட்டமாகும். இம் முயற்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டன.இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறைக்கும் ஒரு நாகரிகத்திலிருந்த இன்னுமென்றுக்கும் கையளிக்கப்பட்டது.
இஸ்லாத்திற்கு முன்பிருந்தே வைத்திய முறை நடை முறையிலிருந்தது. மருத்துவத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஹிப்போக்கிரட்ஸ் போன்றவர்களால் மகத்தான பங்களிப்பாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவரின் பெயர் பரவலாகப் பிரபல்யமான சத்தியப்பிரமாணம் என்ற ஆவணத்துடன் தொடர்புபட்டிருந்து.அவரின் “அல்கமியோன் “என்ற நூல் கிரோக்க இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாவாக இருக்கக்கூடும்.
மூளைக்கும் புலன் அங்கங்களுக்கு மிடையேயுள்ள தொடர்புகளை விருத்தியாக்குதல் என்பதே அவரின் காத்திரமான பங்களிப்பாகும்.மனதின் அங்கமே மூளை,அது உணர்ச்சிகளை அறிவதற்கு மட்டுமல்லாமல்,
சிந்தனை,ஞாபகசக்தி என்பவற்றிக்குப் பொறுப்பானதாகும் உள்ளது.
வரலாற்றில் அதிஉயர் விஞ்ஞானி,தத்துவஞானியாகக் கருதப்பட்ட அரிஸ் டொட்டில்,அல்கமியோன், உடன்பாடக் காணப்படவில்லை.அவர் உணர்ச்சிகளின் மையப்பகுதி மூளை அல்ல. இதயமே என நம்பினர்.
கி.பி 711 இல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு 80 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் ஜரோப்பாவை ஊடறுத்து ஸ்பெயின் அன்டலூசியாவை ஆட்சி புரிந்தனர்.
அங்கு அவர்கள் 700 வருடங்ககுக்கு மேலாகத் தங்கியிருந்தனர்.இஸ்லாமியப் பேரரசு மேற்கில் அத்திலாந்திக் சமூகத்திருந்து கிழக்கில் சீனாவின் எல்லை வரை வியாபித்திருந்தது. இஸ்லாத்தின் போதனைகள்,கற்றலின் முக்கியத்துவம், அழிவுகளைத்தடுத்தல்,தனியாள் சுகாதாரம்,சுத்தம் என்பவற்றை உக்கப்படுத்துதல் ஒழுக்கத்தைக் கண்ணியப்படுத்துதல் ஏனைய மதங்களுடனான தாராள மனப்பான்மை போன்ற விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
முதலாம் நிலை
7ஆம் 9ஆம் நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள முதல் நிலை
இது அந்நிய நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள அரபியில் மொழி பெயர்க்கும் காலம்.முஸ்லிம் விஞ்ஞானிகள் பொதுவாகச் சிறப்பான நூல்களை பாதுகாத்து வைப்பதில் ஆர்வமுடையவர்களாகக்காணப்படுகின்றனர்.
இரண்டாம் நிலை
9 ஆம் 13 ஆம் நிலை நூற்றாண்டுகளுக்கிடையேயான இரண்டாம் நிலைமை. .இது முதலாவது நிலையில் பெற்றுக்கொண்டவற்றை கட்டியெழுப்பும் நிலை மருத்துவத்தில் புதிய அத்தியாயங்களை தோற்றுவித்த முன்னணித் தலைவர்களாகிய முஸ்லிம் மருத்துவர்களின் நேர்மையானதும் சிறப்பானதுமான பங்களிப்பைக்காட்டும் நிலை.இது ஐரோப்பாவிற்கும் உலகின் ஏனைய நாடுகளு்கும் அறிவை வழங்கிய காலம்
மூன்றாம் நிலை
13 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய நிலை - மருத்துவமும் ஏனைய விஞ்ஞானத்தின் கிளைகளும் பின் தங்கியதும் மந்தமானதுமான நிலை.இதுதான் மேற்குலகின் கை ஒங்கிய நிலை.
தொடரும்............
(By:அபு இஸ்ஸா )
Monday, 3 November 2014
விஷேட மார்க்க சொற்பொழிவு
இமாம் ஸெய்யிதுஷ் ஷூஹதா ஸெய்யிதுனா ஹூஸைன் ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்களின் மனாகிப் மஜ்லிசும் விஷேட மார்க்க சொற்பொழிவும்
இடம் - புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி
காலம் – 04-11-2014 செய்வாய்க் கிழமை
நேரம் – காலை 10 மணி
தலைப்பு – பெருமானாரும் பேரர் ஹூஸைனின் பெறுமையும்
வளவாளர் – சங்கைக்குரிய மௌலவி அல் ஹாஜ் இப்றாஹீம் அஹ்மத் அஸீஸி ரப்பானி
அதிபர் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி புத்தளம்
இமாமுனா ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்
இன்று03-11-2014 இஷாஃ தொழுகையின்பின் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கலாசாலையில் புனித முஹர்றம் ஆஷூரா தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஜாமிஆவில் இருக்கும் மனாருல் ஹூதா பள்ளிவாயலில் புனித ஹஸன் ஹூஸைன் மெளலீத் ஓதப்பட்டு விஷேட துஆ பிரார்தனையும் சிறப்பாகநடை பெற்றது.இந் நிகழ்வில்மாணவர்களும் உஸ்தாதுமார்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
















