**تعليم المتعلم وطريق التعلم
*மாணவனின் கற்றல் ஒழுக்கம்*
•••••••••••••••••••••••••••••••••.
நூலின் பெயர்:
தஃலீமுல் முத அல்லிம் வதரீக்குத் தஅல்லும்.
تعليم التعلم وطريقة التعلم
ஆசிரியர்:
புர்ஹானுத்தீன் ஸர்னூஜி
றஹ்மத்துள்ளாஹிஅலைஹி.
மறைவு :
ஹிஜ்ரி 593
நாடு : உஸ்பெகிஸ்த்தான்.
மொழி: அரபு:
தமிழில் :
மௌலவி பாஸில் *ஏ . எல். பதுறுத்தீன்* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக் ஷபந்தி.
************************
உலகம் முழுவதிலுமுள்ள மார்க்க கலாசாலைகளில் இந்த நூல் போதிக்கப்படுகின்றது, இந்தநூலில்கூறப்படுவதைமுதலில் ஆசிரியர்களும், மாணவர்களும் பேணி நடந்தார்கள், அதனால் அவர்களின் அறிவிலும், நடத்தையிலும் அபிவிருத்தியும், தக்வாவும் மிளிர்ந்தன.
ஆனால்,
தற்காலத்தில் மார்க்கல்வி போதிக்கப்படும் மத்ரஸாக்களிலுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் மார்க்கக் கல்வியின் நோக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை யிலிருந்து வெகு தூரம் அன்னியமாகிச் செல்வதற்கானகாரணம், இந்த நூல் போதனையில் மட்டும் இருப்பதும், செயலில் இல்லாதிருப்பதுமாகும்,
ஆசிரியர்கள் ஊதியத்திற்காக கற்பிக்கின்றனர், மாணவர்கள் பெற்றோரின்வற்புறுத்தலுக்காக கற்கின்றனர்.
இருவரின் நோக்கமும் கல்வியின் பயனை அடையத் தவறிவிட்டன , ஆகவேதான், இப்போது மத்ரஸாக்களில்கற்றுவெளியேறுபவர்களின் அறிவில் அபிவிருத்தி இல்லை, நடத்தையில் சீர்மை இல்லை, எண்ணத்தில் பரிசுத்த மில்லை.
மார்க்க கல்வி தாழ்ந்து தேய்ந்து செல்லும் இக்காலத்தில் இந்நூலின் தேவை அதிகம் உணரப்படுகின்றது,
தற்காலத்தில் மத்ரஸாக்களின் கல்வி, ஒழுக்கம் தாழ்ந்து செல்வதை அனைவரும் அனுபவ ரீதியாக ஏற்றுக்கொண்டாலும் அதற்கான காரணத்தை அறியத் தவறி விடுகின்றனர்.
இந்த நூல் அந்த காரணத்தை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது, எனவேதான் இதைப் படித்து மாணவர்களும் , ஏனையவர்களும் பயன் பெற வேண்டும் என்பதை நாடி இதனை தமிழாக்க முடிவு செய்தேன்.
கிருபையுள்ள றஹ்மான் எனது முயற்ச்சியை நிறைவேற்றித் தருவானாக! ஆமீன்,
இந்த நூலில் உள்ளபடி ஒழுகி நடக்க , படிக்கின்றவர்களுக்கு தௌபீக் செய்வானாக ஆமீன்.
•••••••••••••••••••••••••••••••••. (1)
மனிதர்களை அறிவாலும் நற்செயலாலும் அகிலத்தார்கள் அனைவரையும் விட சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஸலவாத்தும், சலாமும் அரபிகள், அரபுகளல்லாத அனைவருக்கும் நாயகமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மீதும், இன்னும், அறிவு,, ஞானத்தின் ஊற்றுக்களான அன்னாரின் குடும்பத்தினர்கள், இன்னும், அன்னாரின் தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
ஹம்து, ஸலவாத்திற்குப்பின்,
எனது காலத்தில் அதிகமான மாணவர்களைப் பார்க்கின்றேன், அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக கடினமாக முயற்சி செய்கிறார்கள், அறிவையோ, அதன் செயல், அதை ப் போதித்தல் உள்ளிட்ட அதன் பலாபலன்களை அடையாமல் இருக்கின்றனர், இதற்கான அடிப்படைக்காரணம் அறிவைப் பெற்றுக்கொள்ளும் வழிகளில் தவறு செய்கின்றனர்,
இன்னும், அதன் நிபந்தனைகளை ப் பேணாமலிருக்கின்றனர்,
பிழையான வழியை எடுத்துக் கொள்ளும் எவரும் வழிதவறவே செய்வார்கள், சொற்பமான, அல்லது மகத்தான எதையும் அவர்கள் அடைய மாட்டார், ஆகவே, நான் நூற்களில் படித்த, இன்னும், அறிவும், ஞானமுமிக்க எனது ஆசான்களிடமிருந்த நான் செவிமடுத்த கற்றல் வழிகளை அவர்களுக்கு விளக்கவேண்டும் என்று என் மனம் விரும்பியது, இதனால் , எனக்கும், அதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் மறுமையில் வெற்றியும், விமோசனமும் கிடைக்க வேண்டி பிரார்த்தித்து அல்லாஹுத்த ஆலா விடத்தில் உதவி தே டியவனாக இந்த நூலை ஆரம்பம் செய்கின்றேன்.
இந்த நூலுக்கு تعليم التعلم طريق التعلم
"மாணவனின் கற்றல், கற்றலின் வழிகள் " என்று பெயர் வைத்தேன். அதனை பல பிரிவுகளாக்கினேன்,
பிரிவு:- 1
ஃபிக்ஹு ஞானத்தின் வரைவிலக்கணமும், அதன் சிறப்புக்கள் பற்றிய விளக்கமும்.
பிரிவு. : 2-
கற்கும் காலத்திலுள்ள எண்ணம் பற்றிய விளக்கம்.
பிரிவு : 3-
தேர்வு செய்யும் அறிவு, ஆசிரியர், வகுப்பில் தேர்வு செய்யும் நண்பன், நிலையான மனப்பக்குவம் பற்றிய விளக்கம்.
பிரிவு: 4-
அறிவையும், அறிவாளிகளையும் கண்ணியப் படுத்துவது பற்றிய விளக்கம்.
பிரிவு: 5-
கடின முயற்சி, ஒழுக்கம், உயர்ந்த குறிக்கோள் பற்றிய விளக்கம்.
பிரிவு :6-
“பாடத்தைத் தொடங்குவது, அதன் அளவு (எவ்வளவு படிக்கவேண்டும்), படிப்பின் நிலைத்தன்மை மற்றும் அதன் ஒழுங்கு பற்றிய விளக்கம்.”
பிரிவு 7--
தவக்குல் (அல்லாஹ்வில் பாரம் சாட்டுவது )பற்றிய விளக்கம்
பிரிவு : 8-
“அறிவைப் பெறுவதற்கு ஏற்ற நேரங்கள் பற்றிய விளக்கம்.”
பிரிவு : - 9-
“அன்பு, கருணை மற்றும் பிறருக்கான நல விருப்பம் பற்றிய விளக்கம் .
பிரிவு: - 10-
“அறிவு தொடர்பான கேள்விகளை முன்வைப்பது, மற்றும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது பற்றிய விளக்கம்.
பிரிவு 11-
“மாணவர் பருவத்தில் தக்வா (அல்லாஹ்வின் அச்சம் ) தூய்மை மற்றும் பக்தியுடன் இருப்பது பற்றியவிளக்கமம்.
பிரிவு 12 '
“நினைவாற்றலை வலுப்படுத்தும் காரணங்கள் மற்றும் மறதியை ஏற்படுத்தும் காரணங்கள் பற்றியவிளக்ககம்
பிரிவு 13-
“வாழ்வாதாரத்தை (ரிஸ்க்) பெற உதவும் காரணங்களும், அதைத் தடை செய்யும் (கிடைக்காமல் செய்யும்) காரணங்களும் பற்றிய விளக்கம்.
இதற்கான நல்லுதவி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கும், அவனிடமே பாரம்சாட்டுகின்றேன், அவன் பக்கமே மீளுகின்றேன்.
*பிரிவு :1-*
*அறிவு, மற்றும் பிக்ஹின் வரைவிலக்கணமும், அதன் சிறப்புக்களும்.**********************
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
طلب العلم فريضة على كل مسلم ومسلمة
அறிவைப் பெற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலாருக்கும் பர்ழாகும்
விளக்கம்:
இந்த ஹதீது சுனன் இப்னு மாஜாவின் முன்னுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, . ஆயினும், அதில் مسلمة "முஸ்ஸிலிமான பெண்" என்ற வார்த்தை இல்லை,
மேலதிகமான இந்த சொல் எந்தவொரு ஸஹீஹான ஹதீதிலும் பதிவு செய்யப்படாவிட்டாலும் அதன் பொருள் சரியானதுதான் என்று அல்லாமா ஸகாவி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களின்"மகாஸிதுல் ஹஸனா " என்ற நூல் பக்கம் 275ல் குறிப்பிடுகின்றார்கள்.
ஹதீது ஷரீபில் குறிப்பிடப்படும் "அறிவு" மார்க்கம் தொடர்பானது தவிர, உலகியல் கல்வி அல்ல! பர்ழு என்பது, "பர்ழு ஐன்" ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதைக் குறிக்கும், முஸ்லிம்களில் ஆண், பெண் இருவர் மீதும் ஈமான், மார்க்க கடமைகளில் தன்மீது பர்ழானவையையும், அது தொடர்பானவை யையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவு அறிவைக் கற்பது பர்ழு ஐன், ஏனையவை பர்ழு கிபாயா, இதை
சமூகத்தில் ஒருவர் அல்லது சிலர் கற்றிருப்பது போதும்.
இமாம் பஙவி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களின் ஷறஹுஸ்ஸுன்னா நூல் பக்கம் 90 ல் பின்வருமாறு எழுதுகின்றார் கள்,.
மார்க்கம் தொடர்பான அறிவுகள் இருவகைப்படும்.
1- இல்முல் உஸூல்: علم الاصول
( அடிப்படைகள் பற்றிய அறிவு)
2- இல்முல் புறூஃ علم الفروع
( கிளைச் சட்டங்கள் பற்றிய அறிவு)
முதல் வகையில் ,
அல்லாஹுத்த ஆலா வின் தௌஹீத், மற்றும் பண்புகளை அறிவது பற்றிய அறிவு,
நபிமார்களை அறிதல் மற்றும் றஸூமார்களைஉண்மைப்படுத்தல், உள்ளிட்டவை " அறிவைத் தேடுவது பர்ழு" என்பதற்குள் அடங்கும்,
இரண்டாம் வகை மார்க்கத்தின் சட்டங்களை அறிவது பற்றியதாகும்,
இதுவும் இருவகைப்படும்,
1- பர்ழு ஐன்.
2- பர்ழு கிபாயா
சுத்தம், நஜீஸ்கள், தொழுகை, நோன்பு உள்ளிட்டவை யின் சட்டங்கள், அன்றாட மார்க்கம் தொடர்பான அவசியமான சட்டங்களை அறிவது பர்ழு ஐன், (மேலதிகமாக க்கற்று) ஆலிமாகுவது, முப்தியாகுவது பர்ழு கிபாயாவிற்குள் அடங்கும்.
இலக்கண அறிவு , பிக்ஹு தப்ஸீர், ஹதீது உள்ளிட்டவையின் உஸூல்களை அறிவது இந்த அறிவுத்துறையோடு நேரடியாகத் தொடர்பானவையல்ல, இவை அவற்றை அறிவதற்கான கருவிகளாகும்.
தொடரும்....







