மன்னிக்கவும், சிரியா யுத்தம் பற்றிய பின்வரும் தகவல்களை உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதில்லை:
- தற்போது யுத்தம் நடக்கும், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு கிழக்கே உள்ள புறநகர்ப் பகுதியான கூத்தா (Ghouta) கடந்த ஐந்தாண்டுகளாக இரண்டு கிளர்ச்சிக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
- இதற்கு முன்னர் இடிலிப் பிரதேசத்தை நோக்கி சிரியப் படைகள் முன்னேறிய நேரம், அங்கிருந்த கிளர்ச்சிக் குழுக்கள் துருக்கி மத்தியஸ்த்தத்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்றன.
- ஒரு வாரத்திற்கு முன்னர், கூத்தா மீது யுத்தப் பிரகடனம் செய்த சிரிய அரசு இடிலிப் பாணி சமரசத்திற்கு முன்வந்திருந்தது. ஆனால், இம்முறை கிளர்ச்சிக் குழுக்கள் வெளியேற மறுத்தன. அத்துடன் மக்களையும் வெளியேற விடாமல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
- கூத்தா பிரதேசத்தை மீட்பதற்கான சிரிய, ஈரானிய கூட்டுப்படை நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிரிய இராணுவப் பிரிவான "புலிப் படை" தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்ய விமானங்களும் குண்டு வீசியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நெருக்குதலால் ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி தீர்மானம் எடுத்தது. அதற்கு ரஷ்யாவும் ஒத்துழைத்தது. உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப் பட வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.
- சிரிய அரசு மட்டுமே ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவித்தது. இதற்கு கிளர்ச்சிக் குழுக்களை பொறுப்பேற்க வைக்க முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் பயங்கரவாத அமைப்புகளாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. சிரிய அரசு அந்த சாட்டை பயன்படுத்தி மீண்டும் போரைத் தொடங்கியது.
- ஐ.நா., சிரிய அரசின் மீது போர்நிறுத்த மீறல் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப் பட வேண்டிய அவசியம் இல்லை.
- கூத்தா பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப் பட்டு நான்கு பெரிய மற்றும் சிறிய இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, தனித் தனியாகவோ செயற்படுகின்றன.
- இவற்றில் மிகப்பெரிய இயக்கமான அல் நுஸ்ராவின் முந்திய பெயர் அல் கைதா. மிகத் தீவிரமான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்பது சொல்லாமலே புரியும். ஏனைய இயக்கங்களும் அப்படித் தான்.
- சிரியப் படைகளின் எறிகணை வீச்சுக்கும், விமானக் குண்டுகளுக்கும் இதுவரை ஐநூறு பொதுமக்கள் பலியாகியுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள்.
- அங்குள்ள மக்கள் விருப்பத்திற்கு மாறாக கிளர்ச்சியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்குவதற்கு முன்னர் அரச ஊழியர்கள் டமாஸ்கஸ் சென்று வர அனுமதித்திருந்தனர். ஆனால், "பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு" பெண்களும், குழந்தைகளும் வெளியேற அனுமதிக்கவில்லை.
- சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா மீது அமெரிக்க விமானங்கள் குண்டு போட்டன.ஒரு கட்டிடம் கூட மிச்சமில்லாமல் தரைமட்டமாகின. அன்று பலியான குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது பற்றி உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.
see more