السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 15 January 2026

பிலால் (ரழி) அவர்களின் அந்த உருக்கமான வரலாறு


 அண்ணல் நபி அவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் மதீனாவை விட்டுச் சென்ற ஹழ்ரத் பிலால் (ரழி) அவர்களின் அந்த உருக்கமான வரலாற்றை இங்கே காண்போம். 


 மதீனாவை நனைத்த கண்ணீர்: பிலால் (ரழி) அவர்களின் பிரிவு பெருமானார் அவர்களின் மறைவுக்குப் பிறகு மதீனா நகரம் பிலால் (ரழி) அவர்களுக்குப் பாழடைந்ததாகத் தோன்றியது. எந்தத் திசையைப் பார்த்தாலும் நபியவர்களின் நினைவுகள் அவரை வாட்டின. குறிப்பாக, பாங்கு சொல்லும் போது "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்" என்ற இடத்திற்கு வரும்போது, அவர் விம்மி விம்மி அழத் தொடங்கிவிடுவார். அவரால் பாங்கைத் தொடர முடியவில்லை.


"நபியவர்கள் இல்லாத மதீனாவில் என்னால் இருக்க முடியவில்லை" என்று கூறிவிட்டு, சிரியாவின் (ஷாம்) திசை நோக்கிப் பயணமானார். பல ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டார்.


அந்தத் தூக்கமும்... அந்தத் தூதுச் செய்தியும்

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இரவு, பிலால்(ரழி) அவர்களின் கனவில் ரசூலுல்லாஹ் அவர்கள் தோன்றினார்கள். மிகவும் கனிவான குரலில் கேட்டார்கள்: "பிலாலே! இது என்ன பிடிவாதம்? என்னைச் சந்திக்க உமக்கு ஆசை வரவில்லையா?" திடுக்கிட்டு விழித்த பிலால் (ரழி) அவர்களின் உடல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. "யா ரசூலுல்லாஹ்! இதோ வந்துவிட்டேன்" என்று அலறியபடி, அந்த இரவிலேயே மதீனாவை நோக்கித் தனது ஒட்டகத்தைச் செலுத்தினார். மதீனாவின் தெருக்களில் ஒரு குரல் நீண்ட பயணத்திற்குப் பிறகு மதீனா வந்து சேர்ந்த பிலால் (ரழி) அவர்கள், நேராக நபியவர்களின் ரவ்ழா ப் (கல்லறை) அருகே சென்று தேம்பித் தேம்பி அழுதார்கள். அவரது அழுகுரல் மதீனாவின் அமைதியைக் கலைத்தது.


அப்போது நபியவர்களின் பேரப்பிள்ளைகளான ஹஸன் (ரழி) மற்றும் ஹுஸைன் (ரழி) அங்கு வந்தார்கள். அவர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட பிலால் (ரழி) அவர்களிடம், அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள்: "பிலால் அவர்களே! உங்கள் குரலில் பாங்கு கேட்டுப் பல வருடங்களாகிவிட்டது. எங்களுக்காக ஒருமுறை பாங்கு சொல்லக் கூடாதா?" விண்ணை முட்டிய அந்தப் பாங்கு பேரப்பிள்ளைகளின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், பிலால் (ரழி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் மேடையில் ஏறினார்கள். "அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்..." -முதல் சத்தம் கேட்டதும் மதீனாவே அப்படியே ஸ்தம்பித்தது. "பிலால் வந்துவிட்டாரா?" என மக்கள் வீதிக்கு வந்தனர். "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்..." -மக்கள் கூட்டம் மஸ்ஜிதை நோக்கி ஓடி வந்தது. "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்..." - இந்த வார்த்தையை பிலால் (ரழி) அவர்கள் சொல்லியபோது, மதீனாவின் வீடுகளில் இருந்த பெண்கள் கூட கதறி அழுதுகொண்டு வீதிக்கு வந்தனர்.


"நிச்சயமாக ரசூலுல்லாஹ் அவர்கள்

மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டார்கள்" என்று மக்கள் எண்ணுமளவுக்கு அந்தப் பாங்கு அவர்களின் நினைவுகளை மீட்டெடுத்தது. மதீனா மாநகரம் அன்றைய தினம் அழுத அழுகையை வரலாறு அதற்கு முன் கண்டதில்லை.


இந்தச் சம்பவம், ஒரு நேசர் தனது தலைவன் மீது கொண்டிருந்த உண்மையான அன்பிற்குச் சான்றாகும்.


சஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைகிவசல்லம் அவர்கள் மீது கொண்ட நேசம் போன்று நாங்களும் நபி ஸல்லல்லாஹூ அலைகிவசல்லம் அவர்கள் மீது நேசம் கொள்வோம். ❤️❤️

Monday, 12 January 2026

இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம்




 #இறைஞானத்தை போதித்த இறைஞானிகள்.


தொடர் 30


ரஜப் பிறை 15ம் நாள் நினைவுபடுத்தப்பட வேண்டிய இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம்


இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 83ம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் பின்னேரம் கோமான் நபீயின் குலவழி செழிக்க, கொடியாய் நின்ற சீலர் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் வழிப்பேரர் ஆவார்கள். அதாவது அஸ்ஸெய்யித் முஹம்மத் பாகர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்..


பாட்டனார் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, தனது பேரனுக்கு 'ஜஃபர் ஸாதிக்' என்ற திருநாமத்தை சூட்டினார்கள். அது மாத்திரமன்றி, தனது பாட்டனாரிடமே அண்ணல் ஜஃபர் ஸாதிக் நாயகம் ஞானக்கலைகள் அனைத்தையும் கற்றார்கள்.


பாட்டனார் அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் நாயகம், இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் 12 வயதை அடைந்த போது வபாத்தானார்கள். பிறகு அண்ணல் ஜஃபர் ஸாதிக் நாயகம், தனது தந்தை இமாம் பாகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே, அவர்களின் வபாத் வரை கற்றார்கள். 30 வயதை தாண்டும் போது, தந்தை இமாம் பாகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வபாத்தானார்கள்.


அதன் பிறகு, புனித மதீனாவில் ஒரு கல்விக்கூடத்தை நிறுவினார்கள். அக் கல்விக் கூடத்தில் சேர்வதற்கு ஹிஜாஸ், இராக், குராஸான், சிரியா ஆகிய பல பகுதிகளிலிருந்தும், கிட்டத்தட்ட 4000 மாணவர்கள் வந்தார்கள் என ஒரு வரலாற்று குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒருமுறை இமாம் அவர்கள் பள்ளிக்கு சென்று தொழுது முடித்துவிட்டு, அவ்விடத்திலேயே வீற்றிருந்த போது, அங்கே தொழுது முடித்த அயலூர்வாசி ஒருவர் தனது பயணப் பொருட்களை தொலைத்து விட்டு, இமாம் அவர்களை பிடித்துக் கொண்டார். தன் பொருட்களை திருடி விட்டதாக இமாம் அவர்கள் மீது பழி சுமத்தினார். அவரின் அவல நிலையை கண்ட இமாம் அவர்கள், அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று 2000 பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அவர் கையில் கொடுத்து வழியனுப்பினார்கள்.


இழந்தது என்னவோ 1000 பொற்காசுகளே என்றிருக்க, 2000 பொற்காசுகள் கிடைத்திருப்பதை நினைத்து வியப்பும், திகைப்பும் மேலிட விரைந்து சென்றார். சற்று நேரத்தில் இமாம் அவர்களின் வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த போது, அந்த நபர் கதறி அழுதவாறு கைகள் இரண்டிலும் இரு பைகளைப் பிடித்தவாறு இமாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வேண்டி நின்றார். பள்ளியில் தான் இழந்த பை தனக்கு கிடைத்துவிட்டது என்றும், தங்களை வீணாக சந்தேகப்பட்டு விட்டேன் என்றும் கதறினார்.


இமாம் அவர்கள் தன் மீது வீண் பழி சுமத்தியதை பொருட்படுத்தவில்லை. அந்த மனிதர் இமாம் அவர்கள் கொடுத்த 2000 பொற்காசுகள் கொண்ட பையை கொடுத்த போது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர் புன்னகையுடன் கூறினார்கள் : "நாங்கள் கொடுத்த அன்பளிப்பை திரும்ப பெறுவதில்லை" என்று..


 இமாம் ஜஃபர் ஸாதிக் நாயகம் எக்கட்டத்திலும் ஆட்சியாளர்களின் தவறுக்கு தலை சாய்க்கவோ, அவைகளுக்கு ஒத்துப் போகவோ இல்லை..

அதனாலேயே பல இன்னல்களை சந்தித்தார்கள். அப்படியான பல சோதனைகளில், ஒன்றாக இமாம் அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது.. அதையும் இறைவிதியாய் ஏற்றுக்கொண்டு, தன் இன்னுயிரை நீத்தார்கள்..


 ஹிஜ்ரீ 83ம் ஆண்டு ரபீயுனில் அவ்வல் மாதம், பிறை 17, திங்கள் பின்னேரம் பிறந்த இமாம் அவர்கள், ஹிஜ்ரீ 148 ரஜப் பிறை 15ல் தங்களது 65வது வயதில் வபாத்தாகி ஜன்னத்துல் பகீயில் அவர்களின் தந்தை மற்றும் பாட்டனாருக்கு அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.


தொகுப்பு : மௌலவீ AMM. அப்துல் மலிக் நஜாஹீ

விபச்சாரம் (ஷினா -زنا )

 


#விபச்சாரம் (ஷினா -زنا )


அல்லாஹ்வின் பெயரில் ஆரம்பிக்கிறேன்.

தயவு செய்து முழுமையாக வாசியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.


தொகுப்பு மெளலவி யூசுப் முஸ்தபி,காதிரி 

Muhammed Yoosuf Musthafi 


இமாம் ஷம்ஸுத்தீன் அல்-தஹபி (ரஹ்மத்துல்லாஹ்) அவர்களின் அல்-கபாயிர் என்ற நூலில் வருவது:


திருமணமான பெண்ணுடன் விபச்சாரம் செய்த ஆணுக்கும், அந்தப் பெண்ணுக்கும்,

 கபரில் இந்த உம்மத்தின் பாதி தண்டனை ஏற்படும்.


 கியாமத் நாளில்:


அந்த பெண்ணின் கணவருக்குத் தெரியாமல் நடந்திருந்தால்,

அல்லாஹ் அவளது கணவரின் நற்செயல்களிலிருந்து தீர்ப்பு வழங்குவான்.


அந்த கணவருக்குத் தெரிந்தும், அவர் மௌனம் காத்திருந்தால்,

அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை ஹராமாக்குவான்.


ஏனெனில், சொர்க்க வாசலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:


தயூத் (தன் குடும்பத்தில் அசிங்கத்தை அறிந்தும் பொறாமை இல்லாதவன்) மீது சொர்க்கம் ஹராம்.


தயூத் என்பவன் 

தன் குடும்பத்தில் நடக்கும் அசிங்கத்தை அறிந்தும்,பொறாமை கொள்ளாமல், தடுக்காமல் இருப்பவன்.மேலும் கூறப்பட்டுள்ளது:


தனக்கு ஹலால் அல்லாத பெண்ணை ஆசையுடன் தொடும் ஒருவன்

  கியாமத் நாளில் அவனது கை கழுத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வருவான்.


அவளை முத்தமிட்டால்

  அவனது உதடுகள் நரகத்தில் கத்தரிக்கப்படும்.


அவளுடன் விபச்சாரம் செய்தால்

  அவனது தொடைகள் பேசும்

  “நான் ஹராமுக்காக ஏறினேன்” என்று சாட்சி சொல்லும்.


அப்போது அல்லாஹ் அவனை கோபத்தின் பார்வையால் நோக்குவான்;

அவனது முகத்தின் மாமிசம் உதிரும்.


அவன் மறுப்பான்:

“நான் எதுவும் செய்யவில்லை!”


அப்போது:


அவனது நாவு ஹராம் பேசினேன்”

அவனது கைகள் “ஹராம் தொட்டேன்”

அவனது கண்கள்: “ஹராம் பார்த்தேன்”

அவனது கால்கள்: “ஹராம் நோக்கி நடந்தேன்”

அவனது மறைவிடம்“நான் செய்தேன்”

ஒரு மலக்“நான் கேட்டேன்”

மற்றொரு மலக்“நான் எழுதினேன்”


என்று கூறுவார்கள்.


அப்போது அல்லாஹ் தஆலா கூறுவான்:


“நான் பார்த்தேன்… ஆனாலும் மறைத்தேன்.”


பின்னர் அல்லாஹ் கூறுவான்:


“என் மலக்குகளே! அவனைப் பிடியுங்கள்;

 என் தண்டனையை அவனுக்கு சுவைக்கச் செய்யுங்கள்.

என் முன்னிலையில் வெட்கமில்லாதவனின் மீது

 என் கோபம் கடுமையாகியுள்ளது.”


இன்றைய நிலை:


ஆடை இல்லாமல் சூரியக் குளியல் செய்யும் பெண்

 நிர்வாண ஆணை கட்டிப்பிடிக்கும் பெண்

 பெண்ணை விரும்பும் பெண் (சிஹாக்)

ஆணை விரும்பும் ஆண் (லிவாத்)

திருமணமானவளுக்கு காதலன் – விபச்சாரம்

 அசிங்கப் படங்களைச் சேமித்து பகிர்பவன்

 அசிங்கப் படங்களுடன் சிகரெட், மது…


“சரி… நாங்கள் FREE!”

என்று சொல்கிறோம்.


ஆனால் மாறியது என்ன?


👉 நமது கொள்கைகள்

👉 நமது மார்க்கம்

👉 நமது இயல்பு (பித்ரா – இஸ்லாமிய இயல்பு)


நாம் அரிதாகவே குர்ஆன் வாசிக்கிறோம்.

அதில் சிலருக்கே சரியாக வாசிக்கத் தெரியும்.


இன்று சமூக வலைதளங்களில்:


* அரைநிர்வாணப் படங்கள்

* அணைப்பு, முத்தம்

* வெளிப்படை பாவங்கள்


 நான் பயப்படுவது இரண்டு விஷயங்கள் மட்டும்:


1. “அவர்கள் தீமையைச் செய்து கொண்டிருந்தும்,

   ஒருவருக்கொருவர் தடுத்துகொள்ளவில்லை”

   என்று என் பதிவில் எழுதப்படுவதை.


2. அல்லது “பாவங்களை வெளிப்படையாகச் செய்தவர்கள்”

   என்று உங்கள் பதிவில் எழுதப்படுவதை.


நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்** அவர்கள் கூறினார்கள்:


“என் உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள்;

பாவங்களை வெளிப்படையாகச் செய்பவர்கள் தவிர.”


நம்மில் மிகவும் நெருக்கமானவர்கள் கூட

இந்தப் படங்களைப் பகிர்வதைப் பார்க்கிறோம்.


ஒரு விஷயம் நினையுங்கள்:

நாம் மரணித்த பிறகும்,

அவை பாவங்களாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.


#ஒரு நினைவூட்டல்:


* ஒரு பெண் தோழியை தவறான வழிக்குத் தள்ளுகிறாள்

* ஒரு குழந்தை iPad கேட்டு அழுகிறது

* ஒரு பெண் அவமானப் படங்களைப் பதிவேற்றுகிறாள்

* பணம் இல்லாதவர்கள் தங்களை விற்பனை செய்கிறார்கள்

* ஒரு தாய் காதலனுக்காக மகளை கொல்கிறாள்

* திருமணத்தை மறுக்கும் பெண்

* ஆண்மை இழக்கும் ஆண்

* கிப்லா எங்கே என்று தெரியாமல், ஆயத்தும் ஹதீஸும் பகிர்வோர்


*புத்திசாலிகளுக்கான வார்த்தைகள் மட்டுமே.

நினைவில் கொள்ளுங்கள்:

*அல்லாஹ்வின் இரக்கத்திலிருந்து விரட்டப்படலாம்.


எச்சரிக்கை:


* கையில் உள்ள கடிகாரத்தை ஒருவர் கழற்றுவார்

* காரின் கதவை ஆம்புலன்ஸ் ஊழியர் திறப்பார்

* சட்டையின் பொத்தானை கப்ரு ஊழியர் திறப்பார்

* கண்களை மூடுவோம்…

  மீண்டும் திறப்பது வானங்களும் பூமியும் ஆட்சி செய்யும் அல்லாஹ்வின் முன் – கியாமத் நாளில்.**


👉 ஆகையால், உங்கள் செயல்களைச் சீராக்குங்கள்.

Sunday, 11 January 2026

பிலால் ரலி

 


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், யா ரசூலல்லாஹ்! பிலாலுடைய பாங்கு சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பிலால் "அஷ்ஹது" என்பதற்குப் பதிலாக, "அஸ்ஹது" என்று சொல்கிறார். பிலால் அவர்கள் அப்படித்தான் பாங்கு சொல்லுவார்கள் என்று நபியவர்களுக்கும் தெரியும். உமையா என்பவனிடம் பிலால் அவர்கள் அடிமையாக இருந்தபொழுது, அவர்களின் நாவில் நெருப்புக் கங்கை வைத்து வேதனை செய்தான் உமையா. அதிலே பாதிக்கப்பட்ட அவர்களின் நாவிலே "ஷீன்" வராது.

    உமரே! அதற்கு என்ன செய்யலாம்? என நபியவர்கள் கேட்டார்கள். யா ரசூலல்லாஹ்! வேறு முஅத்தினை மாற்றிவிடலாம் என்று துணிந்து சொல்லிவிட்டார்கள். இந்த வார்த்தையை வேறு யாரும் சொல்லியிருந்தால் நபியவர்கள் பெரிதாக எடுக்கமாட்டார்கள். உமர் அவர்கள் ஒரு ஆலோசனையை கொண்டுவந்தார்கள் என்றால், அதற்குப் பிறகு அல்லாஹ் அதையே சட்டமாக கொண்டுவந்துவிடுவான்.

    எனவே, ஒருவேளை இது அல்லாஹ்வின் கருத்தாக இருக்குமோ என நபியவர்கள் எண்ணினார்கள். சரி, கூப்பிடுங்கள் பிலாலை. பிலால் ரலியல்லாஹு அன்ஹு வந்தார்கள். இனி நீங்கள் பாங்கு சொல்லவேண்டாம் என்று சொன்னவுடன், சரி நாயகமே என்று பிலால் அவர்கள் போய்விட்டார்கள்.

    இரவு அனைவரும் தூங்குகிறார்கள். இரவு ...நீண்டுகொண்டே செல்கிறது. தஹஜ்ஜத் நேரம் கடந்து வெளிச்சம் வரவேண்டும். நபியவர்கள் வானத்தின் வெளிச்சத்தைப் பார்க்கிறார்கள். வானம் வெளிச்சம் தரவில்லை. மீண்டும் தஸ்பீஹ் செய்கிறார்கள். வெளிச்சம் வரவில்லை. இரவு நீண்டுகொண்டே செல்வதால் உமர் அவர்கள் பயந்தவர்களாக பள்ளியை நோக்கி ஓடிவருகிறார்கள். அல்லாஹ்வின் வஹீயை எதிர்பார்த்து நபியவர்கள் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தபொழுது, வலது பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தது..."ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்."

     யா ரசூலல்லாஹ்! இரவு நீண்டுகொண்டே போகிறதே என்றா நினைக்கிறீகள். இல்லை நாயகமே, இரவை பிலாலுக்காக அல்லாஹ் நிறுத்திவைத்திருக்கிறான் நாயகமே! ஒவ்வொரு நேர பிலாலின் பாங்கிற்காக ஒவ்வொரு மலக்குமார்களும் ஏங்கிக் கிடப்போம் நாயகமே! இனி பிலால் பாங்கு மேடையில் ஏறினால் மட்டுமே பூமியில் பகல். இல்லையென்றால் பகல் இல்லை என்று அல்லாஹ் சொல்லிவிட்டான் நாயகமே! உங்கள் முடிவை மாற்றுங்கள் நாயகமே! சொல்லிவிட்டு ஒரு வார்த்தைச் சொன்னார்கள்,

    "யா ரசூலல்லாஹ்! அல்லாஹ் தன் சட்டத்தையே உடைக்கிறான். இனி பிலால் 'ஸீன்' என்று சொன்னாலே, அல்லாஹ்விடம் 'ஷீன்' நாயகமே.!"

    துடித்துப்போன ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், பிலால் எங்கே? எனத் தேடுகிறார்கள். பிலால் அவர்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல், மஸ்ஜிதுன் நபவியிலே சுஜுதில் அழுதுகொண்டிருக்கிறார்கள், யா அல்லாஹ்! நான் என்ன பாவம் செய்தேன். இந்த உலகத்தில் பாக்கியங்கள் பறிக்கப்படுவதற்கு பாவங்கள் காரணமாக இருக்கும்...

    "நாம் விளங்கவேண்டிய விஷயம், மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பவரோடு அல்லாஹ்வின் தொடர்பும் நெருக்கமாக இருக்கும்."

பிறருக்கும் பகிர்ந்து அதிக நன்மைகளை பெறலாம் 🌹🌹🌹🌹🌹🌹 மாஷாஅல்லாஹ்


நபித்தோழர் வரலாறு

பிலால் (ரலி)


பிலால் (ரலி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரலி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.


பிலால் (ரலி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரலி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.


ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரலி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரலி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரலி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட “'அஹதுன் அஹதுன்" என்றே கூறினார்கள்.


இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரலி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரலி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரலி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரலி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரலி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரலி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.


மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரலி)அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரலி) என நாம் அறிகிறோம்.


பிலால் (ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் (ரலி) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரலி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரலி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரலி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரலி) பிலால் (ரலி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் (ரலி) அவர்கள்.

பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரலி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.


படிப்பினை :


அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.


நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரலி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக

Starlink எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாக மாறி உள்ளது!

 


ஈரான் இணைய சேவை நிறுத்தம் துவங்கிய சில மணி நேரங்களில் Elon Musk தனது Starlink -யை ஈரான் மீது Activate செய்து விட்டதாக அறிவித்தார்.


இதற்கு முன்பு 2022 -ல் இதேபோல் ஈரான் 🇮🇷 உள்ளே நடந்த கலவரத்திற்கு ஆதரவாக Starlink -யை திறந்து விட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Starlink -இணையத்தை உலகில் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் அதன் சிறப்பு!!


அதனால் தான் அதற்கு விலையும் அதிகம், பங்குச்சந்தை ஏற்றமும் அதிகம்!


இப்போது விசயத்துக்கு வருவோம்!


2022 ல் செய்தது போலவே நேற்று முன்தினமும்

Starlink -யை இலவசமாக திறந்து விட்டு கெத்து காட்ட துவங்கினார் Elon musk.


ஏற்கனவே 

அந்த பழைய அனுபவம் இருந்த காரணத்தால் இதனை முன்பே எதிர்பார்த்து காத்திருந்துள்ளது ஈரான் 🇮🇷 


Elon musk அறிவித்த சில மணி நேரங்களில் எல்லாம் ஒட்டுமொத்த Starlink - யை Jammer வைத்து தடுத்து விட்டது ஈரான் 🇮🇷.


தங்களின் 80% சேவை

 ஈரான் 🇮🇷 முழுவதும் தடைப்பட்டது என்று Starlink ஒப்புக் கொண்டு உள்ளது!


ஒரே நேரத்தில் 5,000 கி.மீ -க்கு‌ அளவுக்கு ஈரான் தனது 

Jammer -யை‌ பயன்படுத்தி உள்ளது!


இது ரஷ்யா 🇷🇺 ‌, சீனா 🇨🇳 உதவியுடன் நடந்ததாக மேற்குலக ஆட்கள் கூறினாலும்..,

இல்லை... இப்படி கூறுவது எங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் திறமையை இழிவு படுத்தும் செயல்.


இது எங்களின் உள்நாட்டு தயாரிப்பு என்கிறார்கள் ஈரான் உள்ளே இருப்பவர்கள்.


இதுவரை உலகில் எந்த அரசும் தடுக்கவில்லை என்று பெருமை பீற்றிய அமெரிக்க தயாரிப்பு இப்போது Starlink எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாக மாறி உள்ளது!

ரஜப்_பிறை_27_ல்_இஸ்ராவும்_மிஃறாஜும்_மிஃறாஜ்_நோன்பும்

 

#ரஜப்_பிறை_27_ல்_இஸ்ராவும்_மிஃறாஜும்_மிஃறாஜ்_நோன்பும்


மீள்பதிவு


உம்மத்தே முஹம்மதிய்யா என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயத்தினர் என்று பெருமையாக பேசுகிறார்கள் ஆனால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த திகதி தெரியவில்லை.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை எப்போது போனார்கள் என்பது தெரியவில்லை..


என்றால் இந்த ஷரீஅத்திற்கு சொந்தமான ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எப்படி போதிக்கிரீர்கள்..?

எப்படி பெருமையாக உம்மத்தே முஹம்மதிய்யா என்று சொல்லிக்கொள்கிரீர்கள்..?என்பதே வினோதம்!!


மார்க்க கல்வியை சரிவர ஆழ படித்தால் ஏன் இந்த குழப்பம்.?ஹதீஸில் வரக்கூடிய ஓர் அறிவிப்பாளரின் தரவுகளை எப்படி பெற்றீர்கள்..?உதாரணமாக ஒருவரைப் பற்றி சில ஹதீஸ் கலை வல்லுனர்கள் #குறை சொல்கிறார்கள்.பலர் #நிறைவாக பேசுகிறார்கள் எனும் போது இதில் என்ன தீர்ப்பை எடுப்பது.? இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அல் ஹாபிழ் இமாம் ஹாகிம் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்பார்கள்.அதே ஹதீஸை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் ழயீப் என்பார்கள்..இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது..?


இதே அடிப்படையில் நேர்கோட்டில் வாருங்கள்...


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்று நாம் சொல்கிறோம்.ஆனால் வேறு திகதிகளையும் சொல்லிக்காட்டுகிறார்கள்...இது வரலாற்று ஆசிரியர்களிடத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு.


அஸ்ஸீரதுன் நபவிய்யா இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் அல் பிதாயா வன் நிஹாயா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுல் ஹலபிய்யா நூருத்தீன் அல் ஹலபி ரஹ்மஹுல்லாஹ் அஸ்ஸீரதுன் நபவிய்யா இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் இப்படி பல வரலாற்று நூற்களைப் பாருங்கள் வரக்கூடிய கருத்துக்களை சொல்லிவிட்டு அதில் #பிரபலமான_சொல் #அதிகப்படியான_இமாம்களிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல் ரபிஉல் அவ்வல் பிறை 12 என்பதே!!

இருக்கா..?இல்லியா..?என்பதை பாருங்கள்..இது தவிர பிறை 12 ல் தான் பிறந்தார்கள் என்பதற்கு வேறு பல செய்திகளையும் நாம் சொல்வோம் அதுவல்ல இப்பதிவு....


அதே சமயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆனது தான் ரபிஉல் அவ்வல் பிறை 12 அதில் மாற்றுக்கருத்து இல்லை.தெளிவான ஆதாரம் அது என்று சொல்கிரீர்கள்..அப்ப நீங்க கிதாப் வாசிக்கல்ல...நுனிப்புல் மேய்ந்த எருமை மாடுகள் என சொல்லலாம்....


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆன திகதி விஷயத்தில் இமாம் அல் ஹாபிழ் இப்னு கதீர் ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய அல் பிதாயா வன் நிஹாயா வை பாருங்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரிய வரும்....


அதே போல் #இஸ்ரா எனும் பயணம் அதாவது கஃபா ஷரீபில் இருந்து பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா வரை #மிஃறாஜ் எனும் பயணம் அதாவது பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவில் இருந்து விண்ணுலகம் வரை நடந்த இந்த நிகழ்வுக்கு வாருங்கள்..


விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழவில்லை என்றொரு வியாதி..அப்படி என்றால் மிஃறாஜ் எப்போது நிகழ்ந்தது.?சரியான திகதி நாள் இல்லையாம்..இதென்ன புதிர்...?


#மிஃறாஜ்_விண்ணுலக_யாத்திரை


மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதையும் அவ்விரவு #லைலதுல்_மிஃறாஜ் என்றும் சொல்கிறார்கள்.


இமாம் ஙஸ்ஸாலி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( ஹிஜ்ரி 450 - 505) தங்களுடைய #இஹ்யாஉ_உலூமுத்தீன் 1/ 361 

அல் ஹாபிழ் இமாம் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 510 - 597 ) தங்களுடைய #அல்_வபா_பிதஃரீபி_பழாஇலில்_முஸ்தபா 1/ 162 


இமாம் இமாதுத்தீன் அல் அஸ்பஹானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் ( 519 - 597 ) தங்களுடைய #அல்_பத்ஹுல்_குஸ்ஸீ_பில்_பத்ஹில்_குத்ஸீ 

பக்கம் 73

பதிவு நீண்டு செல்கிறது என்பதால் சுருங்க சொல்கிறேன்..

عمدة القاري شرح صحيح البخاري 4/39

لمحات الانوار ونفحات الازهار 3/1329 

النوادر السلطانية 135

روضة الطالبين 10/ 206 

وفيات الأعيان 7 / 179

مرآة الجنان وعبرة اليقظان 3/ 344 

البداية والنهاية 14/ 228 

الأنس الجليل بتاريخ القدس والخليل 2 /33

الإقناع في حل ألفاظ ابي شجاع 2/ 556 

مغني المحتاج 6 /3 

تفسير روح البيان 5/ 103 

لوامع الانوار البهية 2/ 280 

تحفة الحبيب 2/ 10 

حاشية الطحطاوي على مراقي الفلاح 1/ 114

حاشية ابن عابدين 1/ 352 

نهاية الايجاز في سيرة ساكن الحجاز 1/ 138 

الآثار المرفوعة في أخبار الموضوعة 1/ 77

إظهار الحق 4/ 1017 

رحمة للعالمين 1/ 64 


இன்னும் நிறைய கிதாப்களில் மிஃறாஜ் எனும் விண்ணுலக யாத்திரை ரஜப் பிறை 27 ல் நிகழ்ந்தது என்பதை எழுதிக்காட்டுகிறார்கள்..


அதே சந்தர்ப்பம் இஸ்ராஃ மிஃறாஜ் என்பது ரஜப் மாதத்தில் தானா. ?நிகழ்ந்தது என்பது பற்றியும் கருத்து வேறுபாடுகள் உண்டு.

அதில் 15 விதமான கருத்துக்களை சொல்லி மிகப் பிரபலமானதும் ஏகோபித்ததும் ரஜப் மாதத்தில் தான் என்பதை அல்லாமா அல் ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#அல்_ஆயதுல்_குப்றா_பீ_ஷரஹி_கிஸ்ஸதில்_இஸ்ரா என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


ஹழ்ரத் ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கருத்தை "ஹிஜ்ரத்திற்கு ஒன்றரை வருடத்திற்கு முன் ரஜப் மாதத்தில் நிகழ்ந்தது,, என்ற கருத்தை அபூ ஹய்யான் அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் தங்கள் தப்ஸீர் #அல்_பஹ்ருல்_முஹீத் 9/ 7 அதே போல் அக்கருத்தை ஏற்று இமாம் இப்னு அதிய்யா அல் அந்துலுஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_முஹர்ரருல்_வஜீஸ் 3/ 435-436 ல் பதிவு செய்கிறார்கள்..


அதே போல் இப்னு குதைபா ரஹ்மஹுல்லாஹ் ( இப்னு குதைபா என்று ஷீஆ இயக்கத்திலும் ஒருவர் இருக்கிறார் அதே பெயர் அதே பெயர் கொண்ட கிதாப் அதனால் அதில் விழிப்பாக இருக்க வேண்டும்..யார் என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஷீஆக்கள் இதோ உங்கள் இமாம் தானே சொல்கிறார் என்று சொல்வார்கள்.. எச்சரிக்கை!!) இமாம் இப்னு அப்துல் பர் அல் மாலிகி ரஹ்மஹுல்லாஹ் அவர்களும் இதே கருத்தை( ரஜப் ) என்று தான் சொல்கிறார்கள்..அதை இமாம் கஸ்தலானீ ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அல்_மவாஹிபுல்_லதுன்னிய்யா 2/ 70 ம் அதே போல் #தாரீக்ஃ_கமீஸ் 1/ 307 ம் பதிவு செய்கிறார்கள்..


மேற் சொன்னது போல் இஸ்ராஃ மிஃறாஜ் ரஜப் 27 ல் தான் நிகழ்ந்தது என்பதில் அதிகப்படியான இமாம்களின் கருத்தும் ஏகோபித்த முடிவும் அது தான் என்பதையும் அதன் படி தான் முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை இமாம் அல் ஹாபிழ் அபுல் பரஜ் இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

المنتظم في تاريخ الملوك والامم 3/26 

என்ற நூலில் சொல்லிக்காட்டுகிறார்கள்..


#மிஃறாஜ்_நோன்பு 


  من صام يوم سبع وعشرين من رجب كتب له صيام ستين شهرا

யார் ரஜப் மாதம் பிறை 27 வது நாள் நோன்பு நோற்கிறாரோ 60 மாதம் நோன்பு நோற்ற நன்மை அவருக்கு எழுதப்படுகிறது என்று ஒரு ஹதீஸ் உண்டு. 


இந்த ஹதீஸை இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

#தப்யீனுல்_அஜப்_பிமா_வரத_பீ_ஷஹ்ரி_ரஜப் 

تبيين العجب بما ورد في شهر رجب 

என்ற நூலில் கொண்டுவந்திருக்கிறார்கள்..


இந்த ஹதீஸிக்கு கீழ் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

وهذا موقوف ضعيف الاسناد 

இது #மவ்கூப் ஆன செய்தி..அதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அறிவிப்பாளர் வரிசை செல்லாது.ஸஹாபாக்களின் சொல் செயல் அங்கீகாரத்தோடு தொடர்புடையது..ஸஹாபாக்கள் வரை அத்தொடர் செல்லக்கூடியது..

இதை நாம் #மவ்கூபான_ஹதீஸ் என்போம்..

குராஸானியீன்களின் ஹதீஸ் கலை வல்லுனர்களின் சொல் வழக்கத்தில் இதை #அதர் என்று சொல்வார்கள்..

மவ்கூபான ஹதீஸைப் பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம்...தனித்தனி கிதாபுகளே உண்டு..இன்னொரு சமயம் பார்க்கலாம்..


மவ்கூபான ஹதீஸ் சில சமயம் ஸஹீஹான ஹதீஸாகவும் ஹஸனான ஹதீஸாகவும் மாறுவதற்கு வழி உண்டு...அந்த சட்டமும் இப்போ தேவையேற்படாது இன்னொரு சமயம் பார்க்கலாம்...

இங்கே #இஸ்னாத் பலஹீனம் என்பதையும் அல் ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்லிக்காட்டுகிறார்கள்..


எனவே பலஹீனமான ஹதீஸை வைத்து அமல் செய்யலாமா.?என்பது பற்றி ஏலவே ஓர் ஹதீஸ் பற்றி பேசுகையில் மூன்று தொடராக எழுதியதில் பார்வையிடலாம் அதன் லிங்க் இதோ!!


https://www.facebook.com/share/p/1GgR3UQ6Bv/


மட்டுமல்ல எகிப்தின் பத்வா குழு #தாருல்_இப்தாஉல்_மிஸ்ரிய்யாவினால் மேற்கூறிய ஹதீஸ் அடிப்படையில் பலஹீனமானாலும் அமல் செய்யலாம் என்ற உஸூலின் பிரகாரம் ரஜப் பிறை 27 ல் நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்ற பத்வாவையும் சொல்லி இருக்கிறார்கள்..


அதே சமயம் மார்க்க சட்டமேதைகளான #புகஹாக்களின் பக்கம் கவனத்தை செலுத்தினால் அங்கே 


#ஹாஷியதுல்_பர்மாவி_அலா_ஷரஹி_இப்னு_காஸிம் 


#இஆனதுத்_தாலிபீன்

#ஹாஷியதுல்_பாஜூரி

#ஹாஷியதுல்_ஜமல்

#அல்_ஙுன்னிய்யா

#இஹ்யாஉ_உலூமுத்தீன்

#பத்ஹுல்_அல்லாம்

#பதாவா_அஷ்ஷாலியாதீ 


போன்ற நூற்களில் எல்லாம் #சவ்முல்_மிஃறாஜ் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது விரும்பத்தக்கது என்று சொல்லி இருக்கிறார்கள்..


அது மட்டுமல்ல இமாமுல் அஃழம் இமாம் அபூ ஹனீபா ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மிஃறாஜுடைய நோன்பு நோற்பது முஸ்தஹப்பானது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று இமாம் ஷிஹாபுத்தீன் அல் கராபீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அத்தகீரா ( الذخيرة ) என்ற நூலில் 2/ 532 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்..

அல்லாமா கலீல் ரஹ்மஹுல்லாஹ் தங்களுடைய #அத்_தவ்ழீஹ் ( التوضيح ) என்ற நூலிலும் 2/ 461 ல் மிஃறாஜுடைய நோன்பு நோற்பதை முஸ்தஹப் என்று சொல்லிக்காட்டுகிறார்கள்..


அதே சமயம் இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறிய ஹதீஸின் பின் இன்னொரு விஷயத்தை சொல்கிறார்கள் 

وهو أمثل ما ورد في هذا المعنى 

என்று சொல்கிறார்கள்...


ஹதீஸ் கலை அறிஞர்களிடம் இதே போல் வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்துவது கனிஷமாக உண்டு.அதை அதிகமாக ஸுனனுத் திர்மிதியில் இமாம் திர்மிதி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் 

هذا أصح شيئ في الباب 

என்று பாவித்திருப்பார்கள்..

இதை உபயோகப்படுத்தியதால் அந்த ஹதீஸ் #ஸஹீஹ் என்று கருத்தல்ல..அல் ஹாபிழ் இமாம் நவவீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் கூட அதற்கு நல்ல விளக்கம் ஒன்று சொல்வார்கள்...

அவைகளை எல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்...

எனவே இமாம் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் உபயோகித்த வார்த்தையின் எதார்த்தம் என்ன...?என்பதை திறந்த மனதோடு தேடுங்கள் பதில் கிடைக்கும் குழப்பமும் வராது...


அதே சமயம் #மப்ஹும்_முகாலபா #மப்ஹும்_முவாபகா ( مفهوم مخالفة - مفهوم موافقة ) 

இப்படி இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு....

சான்றோடு தெளிவோடு தேடுங்கள் சரியான தெளிவு கிடைக்கும்....


#இறுதியாக_பொது_விதி ஒன்றுக்கு வாருங்கள் 


மேற்கூறிய வெவ்வேறு கருத்துக்களில் ""ஸலபுகளிடம் இவ்வாறு வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டால் இது தான் #தர்ஜீஹ் ஆனது என்பது நிருவப்படவில்லை என்றால் அவ்வமல் எதன் பக்கம் சேர்க்கப்படும்....??என்ற கேள்வியோடு......


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

+94 77 444 77 57