السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 30 November 2015

தப்லீக் உலமாக்களே! இது உங்களுக்கு தெரியுமா? 03

 முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?


முகல்லித் வஹ்ஹாபிகளான தப்லீக் இயக்க உலமாக்களே! இது உங்களுக்குத் தெரியுமா?

மேற்க்கூறிய நிகழ்வைப் பதிவு செய்த பின்னர் மௌலவி முனாளிர் அஹ்சன் கைலானிக்கு மரணமான ஒருவர் நபியாக இருந்தாலும்கூட அவரால் உயிர் உள்ள ஒருவருக்கு உதவிட முடியும் என நம்பினால் அது ஷிர்க் ஆகும். குப்ர் ஆகும் என்ற தேவபந்துகளின் அகீதா நினைவுக்கு வருகிறது. அதனால் இந்த சம்பவத்தினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என யோசித்து, மேற்க்கூறிய நிகழ்வை அவர் ஏற்க மறுப்பதுடன் மரணமான வலிமார்களினால் உதவ முடியும் எனும் தலைப்பில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினரின் முடிவு எதுவோ அதுவே தேவபந்த் உலமாக்களின் தீர்ப்பாகும் என்றும் அவர் அடிக் குறிப்பில் அவர் கருத்தினைப் பதிவு செய்த பின்னர் பின்வருமாறு அவர் அணியினரிடம் வினாவொன்றையும் அவ்விடத்தில் கேட்கிறார்.

விண்ணுலகப் பயணத்தில் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நபிமார்கள் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். நபியுல்லாஹ் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நமக்கு தொழுகைகளை குறைப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். எனவே நல்லடியார்களின் ஆத்மாக்கள் இவ்வுலகில் அவதிப்படும் ஒரு விசுவாசிக்கு உதவுவது எந்த குரானின் வசனத்திற்கும் எந்த நபி மொழிக்கும் மாற்றமாக இது இருக்கிறதென்று அக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வலிமார்களின் ஆத்மாக்கள் உதவி சையும் என்பதை நாம் மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இன்னும் மனிதனுக்கு வந்து சேரும் உதவிகள் யாவும் இன்னுமொரு வஸ்துவினால்தான் அவனை சென்றடைகிறது. பால் பசுவின் உதவியினால்தான் நமக்கு கிடைகிறது என்ற தத்துவமும் அவர் பேசுகிறார்.

சுபானல்லாஹ்! மரணமான நபிமர்கள்கூட இன்னுமொருவருக்கு உதவ முடியாதென்று பல தசாப்தங்களாக கூறிவரும் தேவபந்த் சகோதரர்கள் தங்களுடைய இமாம் மரணமான பின்னர் உதவி செய்துள்ளார் என்றதும் கதையை எவ்வாறு திசை திருப்புகிறார்கள் என்று பார்த்தீர்களா?

மரணித்த நல்லடியார்களின் ஆத்மாக்கள் மூலமாக உதவி பெறுதல் தொடர்பில் தேவபந்த் அணியின் முக்கிய மற்றுமொரு பிரமுகர் மௌலவி மன்லூர் சாஹிப் நுமானி, அல் புர்கான் எனும் மாதாந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.

அல்லாஹ் அல்லாத இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் எதுவும் இல்லை. எல்லா படைப்புக்களும் அல்லாஹ்வின் தேவை உள்ளனவாகும். இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஆலமுல் அஸ்பாப் என்று பெயர் இருப்பதால் எந்த தேவை நிறைவேற வேண்டுமாக இருந்தாலும் இன்னொமொரு நபரின் அல்லது பொருளின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பிறரிடம் உதவி கோருவதில் எவ்வித ஷிர்க்கும் இல்லை. ஆனாலும்கூட இன்னுமொருவருக்கு அல்லது இன்னுமொரு பொருளுக்கு சுய ஆற்றல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதும் சுயமாக இயங்கும் ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாகவும் நம்புவது ஷிர்க் ஆகும் என்று குறுப்பிடுகிறார்.

(இதைத்தானே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினரும் காலமெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள்.)

பின்னர் மௌலவி நூமான் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டு கப்ருகளை வணங்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஷைத்தான் வழிகாட்டியாக இருக்கிறான். ஷைத்தானின் பிடியில் அவர்கள் சிக்கிக்கொண்டு இருப்பதால் அல்குரான் அல்ஹதீதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார் இல்லை. இவ்வாறானவர்களைக் கண்டுதான் கடந்த காலத்து மக்களின் ஷிர்கினை புரிந்துகொள்ள என்னால் முடிந்தது. இல்லையென்றால் அதைப்பற்றி அறிந்துகொள்ள சிரமப்பட்டு இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ( அல் புர்கான் பக்கம் 30. 1372 ம் ஹிஜ்ரி ஆண்டு. )

மௌலவி மன்லூர் அவர்களுக்கு அவர் உள் வீட்டு நிகழ்வுகளே தெரியாதவராக இருக்கிறார். அவர் வீட்டின் உள்ளேயே ஷிர்க்கான காரியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததை அவரால் கண்டுகொள்ளாமல் பிறரில் தேடுகிறார்.

இதே நிலைதான் இன்றுள்ள தேவபந்த் நலன் விரும்பிகளின் அகீதாவுமாக இருக்கிறது. இன்றுள்ள தப்லீக் இயக்க ஆதரவாலர்கள் அவ்வியக்க அதிபர்களின் அகீதாவை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு இல்லாத ஆற்றல் தேவபந்த் தேசியத் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

தொடரும்.........