அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதுஹ_
நவமணி பத்திரிகையில் இந்தியாவைச் சேர்ந்த அண்ணன் பிஜே அவர்கள் வருகையைப்பற்றி அன்மையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதில் பொய்யான தகவள்களை சேர்த்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
1990ல் இந்தியாவில் காதியானிகளோடு விவாதம் நடை பெற்று வெற்றியீட்டியது போலவும் காதியானிகளை விரட்டி அடித்தது போலவும் பொய்யான தகவள்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மையான தகவள்:
காதியானிகளோடு கோவையில் விவதம் நடத்தும் போது அங்கு காதியானிகளுடைய பள்ளிவாயல் கிடையாது. ஆனால் விவாதத்துக்கு பின் 900 காதியானிகள் தனியான பள்ளிவாயல்கள் உள்ளன.அண்ணன் பிஜே அவர்கள் விவாதம் நடத்தும் போது ஜாக் சார்பாகத்தான் கலந்து கொண்டார். அந்த விவாதத்தில் ஜாக் சார்பாக நடுவாராக கலந்து கொண்ட பிஜே தரப்பு சகோதரர் ஷேக் முக்தார் என்ன சகோதரர் தற்போது என்ன கொள்கையில் உள்ளார்?
இஸ்லாத்தை விட்டு வெளியேரி காதியானிகளையும் தாண்டி இந்து மதத்தின் இஷாயோகாவாக மாறியுள்ளார் என்ற செய்தியே உண்மை.
அடுத்தது இன்று வரைக்கும் காதியானிகளோடு சேர்ந்து அவர்களை வளர்த்தவர்கள் தவ்ஹீவாதிகள்தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?
இஸ்லாத்தை விட்டு வெளியேருபவர்கள் போலித்போலித் தவ்ஹீத்வாதிகள்தான் என்பது உலகரிந்த உண்மை.
அந்த விவாத்தில் கலந்து கொண்ட பிஜே தரப்பைச் சேர்ந்த அப்பாஸ் என்ன சகோதரர் தற்போது காதியானிகளோடு சேர்ந்து இருக்கின்றார். இந்தியாவைச் சேர்ந்த எனது நன்பர் கோவை பைஷல் அவர்கள் காதியானிகளோடு விவாதம் செய்வதற்கு அழைப்பு கொடுக்க சென்ற போது அந்த அப்பாஸ் என்ற சகோதரர் சொன்னார் நானும் முன்னாடி ஜாக்குத்தான். விவாதத்துக்கு பின்புதான் நான் காதியானிகளோடு சேர்ந்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார்.அது மட்டுமல்லாமல் அந்த காதியானி பள்ளிவாயலில் தற்போதும் அந்த விவாத சிடியை அங்கு செல்பவர்களுக்கு இன்றுவரைக்கு இலவசமாக வினியோகித்து அவர்கள் கொள்கைக்கு மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை எத்தனை சகோதரர்களுக்கு தெரியும்?
இஸ்லாத்தை விட்டும் வெளியேரிய காதியானி கூட்டத்தை வளர்த்த பெருமை அண்ணன் பிஜே என்பவரையே போய்ச் சேரும் என்பதுவே உண்மை.