#புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்
#தற்காலத்து_வஹ்ஹாபிஷ_கர்ணிகளும்_வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியும்
புகஹாஉத் தாபியீன்
فقهاء التابعين
ஸலபுஸ் ஸாலிஹீன்களான சிறந்த நூற்றாண்டு என்று வர்ணிக்கப்பட்ட காலத்திற்கு உட்பட்டவர்களான தாபியீன்களில் பலர் மார்க்க சட்ட மேதைகளாக திகழ்ந்தார்கள்..
மதீனாவை எடுத்துக்கொண்டால் அங்கு பிரபலமான 7 மார்க்க சட்ட மேதைகளான தாபியீன்கள் பேசப்படுவார்கள்..குறிப்பாக #செய்யிதுத்_தாபியீன் தாபியீன்களின் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஹழ்ரத் #சயீத்_இப்னுல்_முஸய்யப் ரழியல்லாஹு அன்ஹு....
இன்னும் பல....
மக்காவை எடுத்துக்கொண்டால் குறிப்பாக
#அதாஉ_இப்னு_அபீ_ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு
இன்னும் பல.....
கூபாவை எடுத்துக்கொண்டால் #அல்கமத்_இப்னு_கைஸ்_அந்_நகஃயி ரழியல்லாஹு அன்ஹு ..
இன்னும் பல.....
பஸராவை எடுத்துக்கொண்டால் ஹஸனுல் பஸரி ரழியல்லாஹு அன்ஹு ..
இன்னும் பல......
இப்படி தாபியீன்கள் பல பாகங்களிலும் பரந்து காணப்பட்டார்கள்..அந்த அந்த பிரதேசங்களில் அவர்கள் பிரபலமாக மார்க்க சட்ட மேதைகளாக காணப்பட்டார்கள்..
அந்த வகையில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15 ம் இரவு ( அதாவது பராஅத் இரவு)
அவ்விரவில் தாபியீன்கள் வணக்க வழிபாடுகளால் அவ்விரவை உயிர்ப்பித்தார்கள் என்ற செய்திகளை நாம் பல கிதாபுகளில் காணலாம்...
1- காலித் இப்னு மஃதான் ரழியல்லாஹு அன்ஹு
இவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்களிலும் ஒருவர்...இவர்கள் #ஷாம் தேசத்தில் சிரியாவில் பிரபலமாக அறியப்பட்டவர்கள்..ஏறத்தாள 70 ஸஹாபாக்களை சந்தித்து இருக்கிறார்கள்...
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு,முஆவியா ரழியல்லாஹு அன்ஹு,அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா,அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா இப்படி பல ஸஹாபாக்கள் வழியாக ஹதீஸ்களை அறிவிப்பவர்..
ஹிஜ்ரி 103 ல் வபாத் ஆனார்கள்..
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
2- மக்ஹுல் அஸ் ஷாமி ரழியல்லாஹு அன்ஹு
ஹிஜ்ரி 112 ல் வபாத் ஆனார்கள்..இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்க சட்டமேதை..
இவர்களும் நிறைய ஸஹாபாக்கள் மூலமாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள்..இவர்கள் யமனைச் சேர்ந்தவர்கள்..
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அபீ உமாமத்தல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு
வாஸிலத் இப்னு அல் அஸ்கஃ ரழியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்களிடம் படித்தவர்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
3- லுக்மான் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு..
ஹிஜ்ரி 111 ல் வபாத் ஆனார்கள்..
இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட தாபியி..
இவர்களைப் பற்றியும் நிறையவே ஹதீஸ்கலை மேதைகள் பேசி இருக்கிறார்கள்...
இந்த தாபியீன்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களான இவர்கள் ஷஃபான் மாதத்தின் பராஅத்துடைய இரவை வணக்க வழிபாடுகளால் உயிர்பித்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிஞர் பெருமக்களான இமாம்கள் எழுதி இருப்பதை பார்க்கலாம்...
#வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியின் பக்கம் கவனத்தை திருப்புங்கள்..
இப்னு தைமியா தன்னுடைய #அல்_பதாவா_அல்_குப்ரா வில் பாகம் 05 பக்கம் 344 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு ஓர் செய்தியை சொல்கிறார்.
وأما ليلة النصف من شعبان ففيها فضل وكان في السلف من يصلى فيها
நிச்சயமாக ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவிற்கு அதாவது 15 வது இரவு ( பராஅத் இரவு) அவ்விரவிற்கு என்று சிறப்பு உண்டு.
அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்..
கீழே நிழற் படம் பார்வையிடலாம்...
அதே இப்னு தைமியா தன்னுடைய #இக்திழாஉஸ்_சிராத்தில்_முஸ்தகீம் என்ற நூலில் பாகம் 02 பக்கம் 136, 137 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு_ஓர் சுபச்செய்தியை சொல்கிறார்..
ليلة النصف من شعبان فقد روى في فضلها من الاحاديث المرفوعة والآثار ما يقتضي انها ليلة مفضلة
وان من السلف كان يخصها بالصلاة فيها
#சாரம் ..ஷஃபான் மாத நடுப்பகுதியான இரவிற்கு ( பராஅத்துடைய இரவு) அதற்கு என்று சிறப்புகள் உண்டு..பல ஹதீஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது..
அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழுகையின் முலம் அவ்விரவை குறிப்பாக்கி இருக்கிறார்கள்..நிழற் படம் பார்வை இடவும்...
வஹ்ஹாபிகளே! பராஅத்துடைய இரவிற்கு எந்த சிறப்புமே இல்லை என்றீர்களே!உங்க மூலகுருநாதர் சிறப்பு இருக்கு என்றல்லவா சொல்கிறார்...
வாழைப்பழத்தையும் பேரீச்சம் பழத்தையும் ரொட்டியையும் விட்டுட்டு உங்க தலைவருக்கு பகிரங்கமாக உங்க பெயருக்கு பின்னால் உள்ள பட்டங்களோடு மறுப்பையும் தீர்ப்பையும் சொல்வீர்களா..???
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி
+94 77 444 77 57
















