السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 3 February 2026

புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்



 #புனிதமிக்க_பராஅத்_இரவும்_ஸலபுஸ்_ஸாலிஹீன்களான_தாபியீன்களும்


#தற்காலத்து_வஹ்ஹாபிஷ_கர்ணிகளும்_வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியும்


புகஹாஉத் தாபியீன்

فقهاء التابعين 

ஸலபுஸ் ஸாலிஹீன்களான சிறந்த நூற்றாண்டு என்று வர்ணிக்கப்பட்ட காலத்திற்கு உட்பட்டவர்களான தாபியீன்களில் பலர் மார்க்க சட்ட மேதைகளாக திகழ்ந்தார்கள்..


மதீனாவை எடுத்துக்கொண்டால் அங்கு பிரபலமான 7 மார்க்க சட்ட மேதைகளான தாபியீன்கள் பேசப்படுவார்கள்..குறிப்பாக #செய்யிதுத்_தாபியீன் தாபியீன்களின் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஹழ்ரத் #சயீத்_இப்னுல்_முஸய்யப் ரழியல்லாஹு அன்ஹு....

இன்னும் பல....


மக்காவை எடுத்துக்கொண்டால் குறிப்பாக 

#அதாஉ_இப்னு_அபீ_ரபாஹ் ரழியல்லாஹு அன்ஹு 

இன்னும் பல.....


கூபாவை எடுத்துக்கொண்டால் #அல்கமத்_இப்னு_கைஸ்_அந்_நகஃயி ரழியல்லாஹு அன்ஹு ..

இன்னும் பல.....


பஸராவை எடுத்துக்கொண்டால் ஹஸனுல் பஸரி ரழியல்லாஹு அன்ஹு ..

இன்னும் பல......


இப்படி தாபியீன்கள் பல பாகங்களிலும் பரந்து காணப்பட்டார்கள்..அந்த அந்த பிரதேசங்களில் அவர்கள் பிரபலமாக மார்க்க சட்ட மேதைகளாக காணப்பட்டார்கள்..


அந்த வகையில் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15 ம் இரவு ( அதாவது பராஅத் இரவு) 


அவ்விரவில் தாபியீன்கள் வணக்க வழிபாடுகளால் அவ்விரவை உயிர்ப்பித்தார்கள் என்ற செய்திகளை நாம் பல கிதாபுகளில் காணலாம்...


1- காலித் இப்னு மஃதான் ரழியல்லாஹு அன்ஹு 

இவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்களிலும் ஒருவர்...இவர்கள் #ஷாம் தேசத்தில் சிரியாவில் பிரபலமாக அறியப்பட்டவர்கள்..ஏறத்தாள 70 ஸஹாபாக்களை சந்தித்து இருக்கிறார்கள்...

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு,முஆவியா ரழியல்லாஹு அன்ஹு,அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா,அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா இப்படி பல ஸஹாபாக்கள் வழியாக ஹதீஸ்களை அறிவிப்பவர்..

ஹிஜ்ரி 103 ல் வபாத் ஆனார்கள்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..


2- மக்ஹுல் அஸ் ஷாமி ரழியல்லாஹு அன்ஹு 

ஹிஜ்ரி 112 ல் வபாத் ஆனார்கள்..இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட மார்க்க சட்டமேதை..

இவர்களும் நிறைய ஸஹாபாக்கள் மூலமாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள்..இவர்கள் யமனைச் சேர்ந்தவர்கள்..


அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அபீ உமாமத்தல் பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு 

வாஸிலத் இப்னு அல் அஸ்கஃ ரழியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்களிடம் படித்தவர்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...


3- லுக்மான் இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு..

ஹிஜ்ரி 111 ல் வபாத் ஆனார்கள்..

இவர்களும் ஷாம் தேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட தாபியி..


இவர்களைப் பற்றியும் நிறையவே ஹதீஸ்கலை மேதைகள் பேசி இருக்கிறார்கள்...


இந்த தாபியீன்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களான இவர்கள் ஷஃபான் மாதத்தின் பராஅத்துடைய இரவை வணக்க வழிபாடுகளால் உயிர்பித்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிஞர் பெருமக்களான இமாம்கள் எழுதி இருப்பதை பார்க்கலாம்...


#வஹ்ஹாபிகளின்_மூலகுருநாதர்_இப்னு_தைமியா_அல்_ஹர்ரானியின் பக்கம் கவனத்தை திருப்புங்கள்..


இப்னு தைமியா தன்னுடைய #அல்_பதாவா_அல்_குப்ரா வில் பாகம் 05 பக்கம் 344 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு ஓர் செய்தியை சொல்கிறார்.


وأما ليلة النصف من شعبان ففيها فضل وكان في السلف من يصلى فيها 


நிச்சயமாக ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவிற்கு அதாவது 15 வது இரவு ( பராஅத் இரவு) அவ்விரவிற்கு என்று சிறப்பு உண்டு.

அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்..

கீழே நிழற் படம் பார்வையிடலாம்...


அதே இப்னு தைமியா தன்னுடைய #இக்திழாஉஸ்_சிராத்தில்_முஸ்தகீம் என்ற நூலில் பாகம் 02 பக்கம் 136, 137 ல் #உலக_வஹ்ஹாபிகளுக்கு_ஓர் சுபச்செய்தியை சொல்கிறார்..


ليلة النصف من شعبان فقد روى في فضلها من الاحاديث المرفوعة والآثار ما يقتضي انها ليلة مفضلة 

وان من السلف كان يخصها بالصلاة فيها 


#சாரம் ..ஷஃபான் மாத நடுப்பகுதியான இரவிற்கு ( பராஅத்துடைய இரவு) அதற்கு என்று சிறப்புகள் உண்டு..பல ஹதீஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அவ்விரவில் ஸலபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் தொழுகையின் முலம் அவ்விரவை குறிப்பாக்கி இருக்கிறார்கள்..நிழற் படம் பார்வை இடவும்...


வஹ்ஹாபிகளே! பராஅத்துடைய இரவிற்கு எந்த சிறப்புமே இல்லை என்றீர்களே!உங்க மூலகுருநாதர் சிறப்பு இருக்கு என்றல்லவா சொல்கிறார்...


வாழைப்பழத்தையும் பேரீச்சம் பழத்தையும் ரொட்டியையும் விட்டுட்டு உங்க தலைவருக்கு பகிரங்கமாக உங்க பெயருக்கு பின்னால் உள்ள பட்டங்களோடு மறுப்பையும் தீர்ப்பையும் சொல்வீர்களா..???


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

+94 77 444 77 57

பராஅத் ரொட்டியும் 3 யாசீனும்

 


#சூரா_யாஸீனும்_பராஅத்_துஆவும்


இன்றைய இந்த புனிதமிக்க நாளை தவறவிடாமல்  நற்காரியங்களை செய்து பராஅத் இரவை வணக்கங்களால் உயிர்ப்பிப்போமாக!!


#மூன்று_யாஸீன்_ஓதுதல்...


காரணம் பராஅத்துடைய இரவு துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இரவு, தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் இரவு,பாவமன்னிப்பு வழங்கப்படும் இரவு....


இவைகளை மையக்கருவாக கொண்டு நடைமுறையில் இருப்பது தான் மூன்று யாஸீன் ஓதுதல்...


யாஸீன் சூராவை ஒரு முறை தான் ஓதினாலும் அவர் குற்றவாளி அல்ல...முப்பது முறை ஓதினாலும் குற்றவாளியல்ல...மாற்றமாக ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்து வீதம் நன்மை வழங்கப்படும்..அல் குர்ஆன் ஓதலை கேட்டுக்கொண்டு இருப்பவருக்கும் நன்மை வழங்கப்படும் அது தான் அல் குர்ஆன் என்பது மறுமை வரை அழியாத ஓர் அற்புதம்..


1-ஸாலிஹான நல் வணக்கவழிபாடுகளுடன் வாழ் நாள் அதிக்கரிக்க வேண்டி ஓர் நிய்யத் வைத்து ஒரு முறை சூரா யாஸீன் ஓதிய பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..வாழ் நாள் அதிகரிப்பு என்ற எண்ணம் வைக்க காரணம் இந்த பராஅத்துடைய இரவில் தான் ஒரு மனிதனுடைய பட்டோலை புதுப்பிக்கப்படுகிறது.மாற்றப்படுகிறது.


2-வரக்கூடிய ஆபத்துக்களை விட்டும்,சோதனைகளை விட்டும்  பாதுகாப்புத் தேடுவதை நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத் துஆவை ஓதப்படல் வேண்டும்..


3- மக்களிடம் தேவையற்றவனாக இருக்க வேண்டும்,அல்லாஹ் ரிஸ்க்கை விஸ்தீரணமாக்க வேண்டும் என்ற நிய்யத் வைத்து ஒரு யாஸீன் ஓதி பின் பராஅத்துடைய துஆ ஓதப்படல் வேண்டும்..


ஹதீஸ்களையும் ஹதீஸ் கலை அடிப்படை சட்டங்களையும் அல் குர்ஆனுடைய விளக்கங்களையும் தொகுத்து தந்த இமாம்களை மதிக்காமல் அவர்களுக்கு தேவையாகும் போது ஹதீஸ் ஸஹீஹ்,ழயீப் என்று ஊழையிடும் நரக நாய்களான வஹ்ஹாபிஷ கர்ணிகளுக்கு இவைகள் ஒரு போதும் பலனை கொடுக்காது...


மேற்குறித்த தகவல் #முஜர்ரபாதுத்_தைரபியில்_கபீர்  என்ற நூலில் பக்கம் 20 ல்   இமாம் அஹ்மத் அத் தைரபி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்..


அதே போல் மக்காவைச் சேர்ந்த #முப்தில்_ஹரமைன் என்று போற்றப்பட்ட #ஸைனி_தஹ்லான் ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் மாணவர் இமாம் அப்துல் காதிர் குத்ஸ் அல் மக்கி ஷாபிஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய 

كنز النجاح والسرور 

#கன்ஸுன்_நஜாஹி_வஸ்_ஸுருர் என்ற நூலில் பக்கம் 165 ல் பதிவு செய்திருக்கிறார்கள்..

ஹரம் ஷரீபில் 30 வருடங்களாக பாடம் நடத்தியவர்கள்..ஜன்னதுல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்...


அதே சமயம் சூரா யாஸீன் குறித்து ஏகப்பட்ட ஹதீஸ்கள் இடம் பெருகிறது.யாஸீன் சூராவின் அகமியங்கள் குறித்து தனியாக கிதாபுகளே எழுதப்பட்டுள்ளது..சூரா யாஸீன் எந்த தேவை குறித்து இஃலாஸான நிய்யத்தோடு  ஓதப்படுகிறதோ அந்த தேவை நிறைவேற்றப்படும்...


#பராஅத்_துஆ 

கீழே அந்த துஆவை இணைக்கிறேன்.சூரா யாஸீனையும் பராஅத் துஆ இன்னும் பல சூராக்கள், துஆக்கள்,ஸலவாத்துகள் என்பவைகளை பொதிந்த சிறிய தொகுப்பு  நம்முடைய நாட்டில் மட்டும் அல்ல அது உலகெங்கும்  பரவலாக உண்டு..அது இலகுக்காகவே தவிர வேறில்லை..ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சிறு தொகுப்பாக வெளியிட்டார்களா.?என்று வஹ்ஹாபிஷ யூத ஏஜன்ட் பேசுகிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு அறிவு,ஆய்வுத்திரன் ஸுப்ஹானல்லாஹ்....


கீழே இணைக்கப்பட்ட  பராஅத் துஆ எகிப்து கைரோவில் வெளியிடப்பட்ட சிறு தொகுப்பு....


இந்த பராஅத்துடைய துஆ என்பது ஸஹாபியே ரஸுல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா  அவர்கள் ஓதிய துஆ..மட்டுமல்ல அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் சொன்னார்கள் ""யார் இதை ஓதுகிறார்களோ அவருக்கு அல்லாஹ் வாழ்க்கையில்  விசாலத்தை  கொடுப்பான்..அதாவது அவனுடைய வாழ்க்கையில் பரகத்தையும்,ரிஸ்கில் விஸ்தீரணத்தையும் கொடுப்பான்..

அதனால் தான் பராஅத்துடைய இரவில் பட்டோலை புதுப்பிக்கப்படுவதால் மேற்கூறிய நிய்யத்துக்களை வைத்து யாஸீன் ஓதீ குறிப்பிட்ட அப்துல்லாஹ் இப்னு  மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஓதிய இந்த துஆவை பராஅத்துடைய இரவில் ஓதப்படுகிறது..


இந்த செய்தி எந்த கிதாபில் இடம் பெருகிறது தெரியுமா..?வஹ்ஹாபிஷ விஷ ஜந்துக்களே இந்த கிதாப் பார்ப்பது இருக்கட்டும் கேள்விப்பட்டாது இருப்பீர்களா..??


அபீ அப்துர் ரஹ்மான் முஹம்மத் இப்னு புழைல் இப்னு ஙஸ்வான் அல் ழப்பயி ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய 

#கிதாபுத்_துஆ என்ற நூலில் பக்கம் 217, 218 ல்  பதிவு செய்கிறார்கள்..


இவர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மஹுல்லாஹ் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர்கள் தான் இவர்கள்...

ஹிஜ்ரி 195 ல் வபாத் ஆனார்கள்..


ஹிஜ்ரி 140, 149 ல் வபாத் ஆனார்கள் என்ற கருத்தும் உண்டு..

இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மஹுல்லாஹ் ,யஹ்யா இப்னு மயீன் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் எல்லாம் இவர்களை உறுதியானவர் என்று சொல்லப்பட்டவர் தான் இந்நூலுக்குரியவர்கள்..


ஒரு வழியை திறந்து தருகிறேன்...


இவர்கள் ஷீஆ என்ற ஓர் விமர்சனம் உண்டு.... வஹ்ஹாபிஷ விஷமிகளே! முடியுமானால் இதையாவது தூக்கிட்டு வாங்க பேசலாம்...


எனவே நரக நாய்களான வஹ்ஹாபிகளின் பேச்சைக் கேட்டு உங்கள் நேரங்களை வீணாக்காமல் உங்கள் ஈமானை இழக்காமல் இன்றைய சிறப்புமிக்க பராஅத்துடைய இரவை வணக்கங்களால் உயிர்பிப்போம்...


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

+94 77 444 77 57










மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்

மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்

 மனிதனின் தவறும் இறைவனின் மன்னிப்பும்


ஒரு மனிதன் தவறு செய்வது இழிவானது அல்ல; ஆனால் அந்தத் தவறிலேயே திளைத்திருப்பதும், பாவங்களைச் செய்வதற்குத் துணிவதும் தான் இழிவானதாகும்.


ஒருவன் தனது குறையை உணர்ந்து, அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) தேடினால், அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவனது பாவத்தை அழித்துவிடுகிறான்.


இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:


"நிச்சயமாக நான், எவர் (பாவத்திலிருந்து) மீண்டு, ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிந்து, பின்னர் நேர்வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு மிக மன்னிப்பவன்." (அல்குர்ஆன் 20:82)


பாவமன்னிப்பின் இத்தகைய முக்கியத்துவத்தினால், தவ்பா செய்பவர்களை ஏற்றுக்கொள்வதில் இறைவனின் பரந்த அருளை உறுதிப்படுத்தும் வகையில், நபிகளார் ﷺ அவர்களின் சுன்னாவில் சில கதைகள் இடம்பெற்றுள்ளன.


அதில் ஒன்றுதான் 'அல்கிஃப்ல்' என்பவரின் வரலாறு


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறக் கேட்டேன்:


"பனூ இஸ்ரவேலர்களில் 'அல்கிஃப்ல்' என்பவர் எத்தகைய பாவத்தையும் செய்யத் தயங்கமாட்டார். அவரிடம் ஒரு பெண் வந்தபோது, அவளுடன் தவறாக நடப்பதற்காக அறுபது தீனார்களை அவளுக்கு வழங்கினார். ஒரு கணவன் தன் மனைவியிடம் அமருவது போல அவர் அந்தப் பெண்ணிடம் அமர்ந்தபோது, அவள் நடுங்கி அழுதாள். அவர் அவளிடம்: 'ஏன் அழுகிறாய்? உன்னை நான் வற்புறுத்தினேனா?' என்று கேட்டார். அதற்கு அவள்: 'இல்லை, ஆனால் இது நான் இதுவரை செய்திராத செயல். வறுமை மட்டுமே என்னை இதற்குத் தூண்டியது' என்றாள்.


அதற்கு அவர்: 'நீயே இதைக் கண்டு அஞ்சும்போது, நான் அஞ்சமாட்டேனா? நீ போகலாம், அந்தப் பணம் உனக்கே சேரட்டும்' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இதற்குப் பிறகு நான் ஒருபோதும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யமாட்டேன்' என்றார்.


அன்றிரவே அவர் மரணமடைந்தார்.


காலையில் அவரது வீட்டு வாசலில்: 'நிச்சயமாக அல்லாஹ் அல்கிஃப்லை மன்னித்துவிட்டான்' என்று எழுதப்பட்டிருந்தது." (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்).


அவர் தன் மீது அநீதி இழைத்துக்கொண்டு பாவங்களில் மூழ்கியிருந்தவர். ஆனால் விபச்சாரம் போன்ற ஒரு பெரும் பாவத்தைச் செய்ய முனைந்தபோது, அல்லாஹ்வின் கருணை அவரைத் தடுத்தது. அவர் திருந்தியபோது, அல்லாஹ் அவரை மன்னித்து அவருக்குப் பெரும் கண்ணியத்தை வழங்கினான்.


இக்கதையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்:


ஒரு முஸ்லிம் ஏதேனும் பாவத்தில் விழுந்துவிட்டால், உடனே தவ்பா செய்து வருந்த வேண்டும். செய்த பாவத்திற்குப் பகரமாக அதற்கு நேர்மாறான நன்மைகளில் ஈடுபட வேண்டும்.


தவ்பா என்பது: செய்த தவறுக்காக வருந்துவது, மீண்டும் அதைச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வது மற்றும் இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது ஆகும்.


உண்மையான வருத்தத்தின் அடையாளம்: இதயம் மென்மையாதல், படைப்பினங்கள் மீது இரக்கம் காட்டுதல் மற்றும் மக்களின் (குறிப்பாக ஏழைகள் மற்றும் தேவையுடையோரின்) குறைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.


உயிரோட்டமான வருத்தம் இருக்கும்போது, பாவத்தை விடும் உறுதி பிறக்கும். ஒருவேளை இச்சையின் காரணமாக ஒருவனால் பாவத்தை விட முடியாவிட்டால், அவன் செய்ய வேண்டிய இரண்டாவது கடமை: தீமையைத் துடைத்தெறியும் நன்மைகளைச் செய்வது. அத்தகைய நன்மைகள் மூன்று வகைப்படும்:


1- உள்ளத்தால் செய்யும் நன்மை: மன்னிப்பு வழங்கும்படி அல்லாஹ்விடம் உருக்கமாக வேண்டுவது.


2- நாவால் செய்யும் நன்மை: நாவினால் பாவத்தை ஒப்புக்கொண்டு, "யா அல்லாஹ்! நான் எனக்கு அநீதி இழைத்துக்கொண்டேன், தீமை செய்துவிட்டேன், என் பாவங்களை மன்னிப்பாயாக" போன்ற பிரார்த்தனைகளை (இஸ்திஃபார்) அதிகம் ஓதுவது.


3- உறுப்புகளால் செய்யும் நன்மை: ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வது மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது."


-கலாநிதி அலி ஜும்ஆ-