✍️மக்காமடி எனும் இடத்தின் பூர்வீக வரலாற்றை கொண்ட சடையர் அப்பா (வலியுல்லாஹ்) மக்காம் இன்று அழிவின் நுனியில் - நாளை சிரமதானம்
“மக்காம்” அடி - என்ற தள அடையாளம் மருவி மக்காமடி ஆகி அதன் பெயரில் பாடசாலை, வீதி, மக்காமடி வட்டாரம் என்றெல்லாம் அடையாள பெயரிட காரணமான “மக்காம் ‘எனும் ஒரு பூர்வீக இடத்தின் இருப்பு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பராமரிப்பு இன்றி அழிவின் விழிம்பில் நிற்பது கவலை தான் - சில நாட்களாக என் மனதில் எழுந்த இந்த இடம் பற்றிய தேடல் - நேற்று நேரில் சென்று பார்த்த போது மிகவும் கவலை கொடுத்தது -
இந்த விவகாரம் பற்றிய என் தனிப்பட்ட நிலைப்பாடு தொடர்பில் உங்கள் கொள்கை குழாயடி சண்டை கண்ணோட்டத்தில் இதை யாரும் நோக்க தேவை இல்லை -
ஒரு இடத்தின் பூர்வீக வரலாற்று தளமாக
மக்காமடி சடையரப்பா வலியுல்லாஹ் மக்காம் எனும் பகுதி பல வருடங்களாக யார் கண்ணிலும் படாத மூடு மந்திரமாக இருந்து வந்த நிலையில் அண்மையில் குறித்த அமைவிடத்தை அண்டிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யபட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது இந்த இடம் பற்றி தெரிந்து கொண்டாலும் அதற்குள் நுழைய முடியவில்லை - சிறுவர்களாக இருந்த அந்தக்கால கட்டத்தில் அந்த இடத்தில் கொடியேற்றம், கந்தூரி, பக்கீர் சாகச நிகழ்வுகள் என களைகட்டிய பழைய நினைவுகள் மனதை குடைய பள்ளிவாசல் நிருவாக அனுமதியுடன் எனது இளைஞசர் குழுவுடன் நுழைந்து செல்லும் போது அப்பகுதி நீண்ட காலமாக கைவிடப்பட்டு பராமரிப்பு இன்மையால் மிகவும் மோசமாக காணப்பட்டது
மனது குடைந்தது - இது ஒரு நகரப்புறம், என்னை அங்கீகரித்து வெற்றி பெற செய்த மக்காமடி என்ற பகுதியில் அவரவர் மனதின் சரி பிழைகளுக்கு அப்பால் குறைந்தது அழிவுற்று மோசமாக காணப்படும் இந்த வரலாற்று இடத்தை ஓர் சிரமதான ஏற்பாட்டு பணியின் ஊடாக சுத்தம் செய்து - இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள
சிதைவை உடன் சீர் செய்யும் பொறுப்பை ஏற்று உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளேன்
இங்கு என் பதிவு சிந்தனை / கொள்கை என இரண்டு தரப்பிற்கு இடையே மாறுபடும் என்பதால் முரண்பட வாய்ப்பு உள்ளது - அது அவரவர் விருப்பு வெறுப்பு - எதிர்மறை விமர்சனங்களை நீங்கள் இந்த பதிவிலோ அல்லது எனக்குள் திணிக்கவோ தேவை இல்லை - இறைவன் உதவியால் எதற்காகவும் எடுத்த பணியை விட்டு பின் வாங்கி நிற்பவனும் நான் கிடையாது,
விமர்சனம் செய்ய எண்ணுவோர் உங்களில் யாரையும் புதிதாக ஒரு இடத்தை அமைத்து இந்த இடத்திற்கு வந்து தரிசியுங்கள், தொட்டு முத்தமிடுங்கள், கந்தூரி, காணிக்கை இடுங்கள் என்று கரம் பற்றி தர தர என இழுத்து வரவும் இல்லை -
இந்த அழிவுற்ற பூர்வீக இடம் எனது அரசியல் பதவிக்காலத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளது, இதை அழியட்டும் என கண்டும் காணாமல் கடந்து போகும் மோசமான மனோநிலையிலும் நான் இல்லை - எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சீர் செய்து இந்த தளத்திற்கு உரித்தான தரப்பின் பூரண அங்கீகாரம் ஊடாக இந்த இடத்தை பராமரிக்க முன்வரும் அணியிடம் பாரம் கொடுத்த மறு கணம் என் பணி முடியும் - இத்தனைக்கும் நான் திட்டமிட்டு இருப்பது வெறும் 3 நாட்களே!
நான் ஒன்றும் கொள்கை ரீதியான அடிப்படைவாதியாகவோ, இவவிடத்தின் நிருவாக தலைவராக ஆட்சி செய்யவோ நினைக்கவில்லை, எது எது எப்படி இருந்ததோ அதை அதை அப்படியே இருக்கச் செய்தவனாக இன்னொரு பணியுடன் கடந்து செல்வேன் ,
அவ்வளவே
இன்ஷா அல்லாஹ்
அன்பான மக்காமடி உறவுகளே!
இந்த இடம் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்கும் அதே வேளை இதை சர்ச்ச்சை விவகாரம் ஆக்காமல்
குறைந்தபட்சம் இவ்வாறான இடங்களை பூர்வீகத்தின் , இருப்பின் அத்தாட்சியாக சரி ஏற்று கொள்ளுங்கள் ! என்றோ ஒரு நாள்
நம் சமூகத்தின் நிலையான இருப்புக்கு அவைகள் அத்தியவசியமானவை என்பதை கொஞ்சமேனும் உணர்ந்து கொண்டவர்கள் மாத்திரம்
நாளை திங்கட்கிழமை காலை 7 மணி முதல் இவ்விடத்தில் முன்னெடுக்க உள்ள சீரமைப்பு பணியில் இணைந்து கொள்ளுங்கள் -
நன்றி வஸ்ஸலாம்
அஸ்மி - நகர சபை உறுப்பினர்
மக்காமடி வட்டாரம்





















