السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 7 December 2025

இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்.‌‌


 *இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்.‌‌*


பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.


“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.


சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.


“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.


தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.


“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.


“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்


“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.


அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே.


ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.


வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்.


🎤தகவலாக..,!

                       ✍🏼 மதுரை.,இஸ்மாயில்.

கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த தவஸ்ஸுல் 🌹

 


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த தவஸ்ஸுல் 🌹
🌹 கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்த தவஸ்ஸுல் 🌹


حدثنا ‏ ‏أحمد بن منصور بن سيار ‏ ‏حدثنا ‏ ‏عثمان بن عمر ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏عن ‏ ‏أبي جعفر المدني ‏ ‏عن ‏ ‏عمارة بن خزيمة بن ثابت ‏ ‏عن ‏ ‏عثمان بن حنيف

أن رجلا ضرير البصر أتى النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏فقال ادع الله لي أن يعافيني فقال إن شئت أخرت لك وهو خير وإن شئت دعوت فقال ‏ ‏ادعه ‏ ‏فأمره أن يتوضأ فيحسن وضوءه ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك ‏ ‏بمحمد ‏ ‏نبي الرحمة يا ‏ ‏محمد ‏ ‏إني قد توجهت بك إلى ربي في حاجتي هذه ‏ ‏لتقضى اللهم شفعه في


நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உஸ்மான் பின் ஹுனைஃப் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:


 ஓர் கண் பாரவையற்ற மனிதர் அண்ணல் நபி ﷺ அவர்களிடம் வந்து, “அல்லாஹ்விடம் என்னை குணப்படுத்தும்படி துஆ செய்யுங்கள்,நாயகமே ! ” என்றார்.


அண்ணல் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நீர் விரும்பினால் (இம்மையில் குணமாகாமல்) ஆகிரத்திற்காக உன் நற்கூலியைச் சேமித்து வைப்பது உனக்கு மிகவும் சிறந்தது. அல்லது நீ விரும்பினால் உனக்காக நான் துஆ செய்கிறேன்.”


அம்மனிதர், “துஆ செய்யுங்கள்,நாயகமே ! ” என்றார்.


அப்போது அண்ணல் நபி ﷺ அவர்கள் அம்மனிதரிடம் நன்றாக ஒளூ செய்யும்படியும், இரண்டு ரக்அத்கள் தொழும்படியும் கட்டளையிட்டு, பின்வரும் துஆவை ஓதும்படி கூறினார்கள்:


«அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக வ அதவஜ்ஜஹு இலைக பி முஹம்மதின் நபிய்யிர் ரஹ்மா. யா முஹம்மது இன்னீ கத் தவஜ்ஜஹ்து பிக இலா ரப்பீ ஃபீ ஹாஜதீ ஹாதிஹி லிதுக்ளா. அல்லாஹும்ம ஃபஷஃப்பிஃஹு ஃபிய்ய>>


பொருள் (தமிழில்):


“இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், கருணை நபி முஹம்மத் ﷺ அவர்கள் மூலமாக உன் பக்கம் திரும்புகிறேன்.  

யா முஹம்மது ﷺ ! இந்த என் தேவையை நிறைவேற்றுவதற்காக தங்களை வைத்து என் இறைவன் பக்கம் திருக்கிறேன்.  

இறைவா! எனக்காக அவரது பரிந்துரையை (ஷஃபாஅத்) ஏற்றருள்வாயாக.”


இப்னு மாஜாவில் இந்த ஹதீதை குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து பின்வருமாறு எழுதப்பட்டுள்ளத ,


قال ‏ ‏أبو إسحق ‏ ‏هذا ‏ ‏حديث صحيح


இமாம் அபூ இஷ்ஹாக் رضي الله عنه அவர்கள் " இந்த ஹதீஸ் ஸஹீஹானது " என்று அறிவித்தார்கள்.

ஆதார நூல் 📕 ஸுனன் இப்னு மாஜா,பக்கம் 197,ஹதீஸ் எண்: 1385


#தவஸ்ஸுல் #இஸ்திஙாஸா #ஷஃபாஅத் #வஸீலா #அஹ்லுஸ்ஸுன்னா #sufiacademy #ahlusunnahwaljamaah #islamicpost #islamicreminder #tamilislam #tamilmuslim #islam #tasawwuf

Thursday, 4 December 2025

உடனடி விழிப்புணர்வு:

 


உடனடி விழிப்புணர்வு: இயற்கையின் வடிகால்கள் மீது பொதுமக்கள் கை வைக்கலாமா? நீர்பாசனம் மற்றும் வடிகால் அமைப்பு பற்றிய உண்மைகள்!


இயற்கை வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளை அத்துமீறி எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்வது, இலங்கையில் உள்ள பல சட்டங்களின்படி கடுமையான குற்றமாகும்.


இன்று ஒரு மிக முக்கியமான கேள்வியைக் கேட்கிறேன்:


நாம் வாழும் நிலப்பகுதியில் ஓடும் இயற்கையான வடிகால்களையோ (Natural Drainage Canals/Waterways) அல்லது கழிவுநீர் கால்வாய்களையோ (Stormwater Drains) இடைமறித்து, அதன் மீது கட்டுமானங்களை (Construction) மேற்கொள்ள சட்டப்படி அனுமதி உண்டா?


இதற்கு ஒரே வார்த்தையில் பதில் : அனுமதி இல்லை! அதுவும் இலங்கையில், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.


ஏன் தடுக்கப்படுகிறது? (சட்டரீதியான விளக்கம்)


இயற்கை வடிகால் அமைப்புகளைத் தடுப்பதோ, திசை திருப்புவதோ அல்லது ஆக்கிரமிப்பதோ பல சட்டங்களின் கீழ் குற்றமாகும். இது ஒருவரது தனிப்பட்ட காணியாக இருந்தாலும், இந்த நீர்நிலைகளின் உரிமை பொதுவானது!


1. நீர்ப்பாசனச் சட்டம் (Irrigation Ordinance) & நீர் பாதுகாப்புச் சட்டம்:


#நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளின் உரிமையையும் பாதுகாப்பையும் இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. இவற்றில் அத்துமீறி எந்தவொரு வேலையையும் செய்வது சட்டவிரோதமானது.


#விளைவு: கால்வாயின் ஓட்டம் தடைபடுவதால், கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்தச் சட்டம் நீர்ப்பாசனத் திணைக்களம் (Department of Irrigation) மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.


2. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டம் (Urban Development Authority - UDA Act):


#நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள்: UDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில், நீர்நிலைகள் மற்றும் வெள்ளப் பெருக்கு மண்டலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (Reserved Areas) குறிக்கப்படுகின்றன. 


இந்தக் கோடுகளை மீறி எந்தவொரு நிர்மாணப் பணியையும் மேற்கொள்ள UDA அனுமதி வழங்காது.


#ஆக்கிரமிப்பு நீக்கம்: சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் (Encroachments) UDA ஆல் இடித்து அகற்றப்படலாம்.


3. உள்ளூராட்சி மன்றங்களின் கட்டளைச் சட்டங்கள் :


#சுகாதாரமும் பாதுகாப்பும்: வீதிகள், பாதைகள், பொது வடிகால்கள் மற்றும் திறந்த கால்வாய்கள் மீது அத்துமீறி நிர்மாணம் செய்வது வெள்ள அபாயத்தையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும்.


#அனுமதி: உள்ளூராட்சி சபை (மாநகர சபை, பிரதேச சபை) அனுமதி இல்லாமல் வடிகால் பாதையை அடைக்கும் எந்தவொரு வேலையும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.


4. கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம்: (குறிப்பாக கடலோர மாவட்டங்களில்)


#சதுப்பு நிலங்கள் (Marshes), கழிமுகங்கள் (Estuaries) மற்றும் ஏனைய நீரோட்டப் பகுதிகளின் பாதுகாப்பை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.


இதன் உடனடி ஆபத்துகள் என்ன?


#பயங்கரமான வெள்ளப் பெருக்கு: வடிகால் பாதை குறுகுவதாலோ அல்லது அடைக்கப்படுவதாலோ, அதிக மழையின் போது நீர் வடிந்தோட முடியாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனத்த வெள்ளம் ஏற்படும். பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு உங்கள் வீடு உட்பட பலரின் உடைமைகள் சேதமடையும்.


#கட்டிடத்தின் பாதுகாப்பு: நீர்நிலையின் மீது கட்டப்படும் அத்திவாரம் பலவீனமடைந்து, கட்டிடமே சரிந்து விழும் அபாயம் உள்ளது. (இதற்கு பல உதாரணங்கள் இலங்கையில் உள்ளன!)


#சுகாதாரப் பிரச்சினைகள்: தேங்கி நிற்கும் நீர் டெங்கு உட்பட பல நோய்களைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி மையமாக மாறும்.


#சட்டரீதியான நடவடிக்கை: உள்ளூராட்சி மன்றம் அல்லது நீர்ப்பாசனத் திணைக்களம் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, உங்கள் செலவில் நிர்மாணத்தை அகற்ற உத்தரவிடலாம்.


நீங்களும் ஒரு பாதுகாவலர்! (உடனே என்ன செய்ய வேண்டும்?)


#கட்டுமானத்திற்கு முன்: எப்போதுமே உங்கள் காணியில் உள்ள நீர்நிலைகள் பற்றி உள்ளூராட்சி மன்றம் அல்லது நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் அதிகாரபூர்வமான வரைபடத்தைக் கேட்டுப் பெற்று, சரியான அனுமதி பெறுங்கள்.


#சட்டவிரோத நிர்மாணம்: உங்கள் பகுதியில் யாராவது வடிகால்களை அடைத்து நிர்மாணம் செய்தால், உடனடியாக உள்ளூராட்சி மன்றம், UDA அல்லது நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுங்கள். உங்கள் ஒரே ஒரு முறைப்பாடு பல வீடுகளை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றலாம்!


இது நமது எதிர்காலத் தலைமுறையினருக்கான பாதுகாப்பு...!


இலங்கை இயற்கையின் ஆசீர்வாதம் பெற்றது. அதன் நீரோட்டத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் சமூகப் பொறுப்பு.


இந்தத் தகவலை ஒவ்வொரு இலங்கையருக்கும் கொண்டு செல்லுங்கள்...!


#SriLanka #சட்டஅறிவு #வெள்ளத்தடுப்பு #இயற்கைவடிகால் #UDASriLanka #நீர்ப்பாசனம் #பொதுவிழிப்புணர்வு #ViralPost #இலங்கைசட்டம்


இலங்கையின் நீரோட்டத்தைப் பாதுகாப்போம்...!

Tuesday, 2 December 2025

ஸல்மானுல் பாரிஸ் ரலியல்லாஹுவின் பணிவு

 



சித்தீகத்தும் தாழ்மையும் நிறைந்த ஸல்மான் ஃபார்ஸி( ر ضی الله عنه) பற்றிய அருமையான வரலாறு

*****************************


தொகுப்பு : மெளலவி HMM

யூசுப் முஸ்தபி ,காதிரி 


அமீருல் முஃமினீன் ஸையிதுனா உமர் இப்னுல் கத்தாப் (رضی الله عنه)  ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு வரலாறு.


சாம் நாட்டில் இருந்த ஒரு வணிகர், இஸ்லாமிய படைகளின் வெற்றிக்குப் பிறகு  அல்-மதாயின்  நகரத்திற்கு வணிகத்துக்காக வந்தார். சந்தைக்கு சென்று தமக்குத் தேவையான பொருட்களையும், குதிரைக்கான தீவனங்களையும் வாங்கி முடித்தபின், அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு "சுமைதூக்கும் மனிதரை (ஹம்மால்)" தேடத் தொடங்கினார்.


சிறிது நேரத்தில், மிகவும் உயரமான, பலமான, ஆனால் மிகவும் எளிமையான, பழைய ஆடைகளை அணிந்த ஒருவரை காண்டார்.


அவரைப் பார்த்து வணிகர் குரல் கொடுத்தார்:

«ஏய்! இதைக் கட்டி கொண்டு என்னைப் பின்தொடருங்கள்»


அந்த மனிதர் அமைதியாக வந்து பொருட்களை தூக்கிக் கொண்டு, வணிகரின் குதிரையின் பக்கத்தில் நடந்து, குதிரையின் கட்டுப்பாட்டைப் பிடித்து நடந்தார்.


வழியில் சென்றபோது, அங்கு வாழ் மக்கள் அந்த ஹம்மாலைப் பார்த்து:

அஸ்ஸலாமு அலைக்கும் என்று மரியாதை கொடுத்தார்கள்.


அவர் பதிலளிக்க, மக்கள் சொல்லுவார்கள்:

«வ அலைக்குமு ஸ்ஸலாம் யா அமீர்!» (அமைச்சரே!)


வணிகருக்கு அதிர்ச்சி

“இவர்கள் என்னை ‘அமீர்’ என்று நினைக்கிறார்களா?” என நினைத்தார்.


சிறிது தூரம் சென்றபின், வீட்டின் முன் அமர்ந்திருந்த சிலர் எழுந்து நிற்கவும், «தயவு செய்து அமீரே, உள்ளே வாருங்கள்» என்று மரியாதை செய்ததும், வணிகரின் குழப்பம் அதிகமானது.


இவ்வளவு மரியாதை ஏன்? யாருக்காக?


ஆனால் விரைவில் உண்மை தெரிந்தது…

அவர்கள் ஒரு குழு முஸ்லிம் படையினரைக் கண்டார்கள். ஜவான்கள் ஓடிவந்து அந்த மனிதரின் கைகளிலிருந்த பாரத்தைப் பிடிக்க முற்பட்டனர்:


«யா அமீர், அதை விடுங்கள்! எங்களுக்கு கொடுங்கள்!»


வணிகர் அதிர்ச்சியடைந்தார்:

«அமீர் யார்?!»


அதற்கு ஜவான்கள் பதில்:


«இவர்தான் ‘அமீர் அல்-மதாயின்’ – ஸல்மான் அல்-ஃபார்ஸி (رضی الله عنه), நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரியத் தோழர்!»


வணிகர் குதிரையிலிருந்து இறங்கி அதிர்ச்சி–வியப்புடன்:


மன்னித்து விடுங்கள்  அமீரே! நான் அறியாமல் உங்களுக்கு வேலை சொல்லி விட்டேன்… இந்தப் பொருட்களை எனக்கு கொடுத்து விடுங்கள்»


ஆனால் ஸல்மான் ஃபார்ஸி (رضی الله عنه) அவர்களின் பதில்:


இல்லை. அல்லாஹ்வின் பெயரால் சொல்கிறேன், உன்னை உன் வீட்டிற்கு சேர்த்துவிடும் வரை நான் இதைத் தூக்குவேன்.


அவர்கள் உண்மையிலேயே அனைத்து பொருட்களையும் தூக்கி, வணிகரை அவரது வீட்டில் பாதுகாப்பாக சேர்த்து வைத்தார்கள்.


📚ஆதாரங்கள்


1. *தாரீக் திமஷ்க்* – இப்னு அஸாகிர்

2. *ஷுஅப் அல்-ஈமான்* – அல்-பைஹகீ

3. *அத்தபகாத் அல்-குப்ரா* (தொகுதி 4) – இப்னு ஸஅத்

4. *ஹில்யத்துல் அவ்லியா* (தொகுதி 1) – அபூ நுஐம் அல்-இஸ்பஹானி

5. *ரிஜாலு ஹவ்லர் ரசூல்* – காலித் முகம்மத் காலித்


 🌹 கற்றுக் கொண்ட பாடம் என்ன?


அதிகாரமோ, நிலைமையோ, செல்வமோ மனிதனை உயர்த்தாது.

உண்மையான உயர்வு தாழ்மை, சேவை, மற்றும் அல்லாஹ்வின் பயம்.


முழுமையாக வாசித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்

எனக்காகவும் துஆஃ செய்து கொள்ளுங்கள்.


நன்றி

வஸ்ஸலாம்

02/12/2025



Monday, 1 December 2025

1425ஆம் ஆண்டில் நடந்த உண்மை வரலாற்றுச் சம்பவம். இல: 07

 

1425ஆம் ஆண்டில் நடந்த உண்மை வரலாற்றுச் சம்பவம். இல: 07


1425ஆம் ஆண்டில் நடந்த உண்மை வரலாற்றுச் சம்பவம். இல: 07

சுல்தான் அல்-அஷ்ரப் சைஃபுத்தீன் பர்ஸ்பாய் வீர வரலாறு 

*************************************


தொகுப்பு :Moulavi HMM

Muhammed Yoosuf Musthafi Qadiri 


 * சம்பவம்: 1425-1426 ஆம் ஆண்டு, எகிப்திய வணிகர் அக்மத் இப்னு அல்-ஹமீம் என்பவரின் கப்பல் சரக்குகள், கிப்ரஸ் நாட்டின் சிலுவைச் சேனைக் கப்பல்களால் கொள்ளையடிக்கப்பட்டது.


 * அரசரின் நிலைப்பாடு: எகிப்தின் சுல்தான், அல்-அஷ்ரப் சைஃபுத்தீன் பர்ஸ்பாய் (Al-Ashraf Sayf ad-Din Barsbay), இதனை 'ஒரு சாதாரண எகிப்திய முஸ்லிம் வணிகரின் மீது நடந்த தாக்குதல் என்பது, மமலூக் அரசு முழுவதின் கண்ணியத்தின் மீது நடந்த தாக்குதல்' எனக் கருதினார்.


 * ஆணையும் வெற்றியும்: பர்ஸ்பாய் உடனடியாக முழு மமலூக் கடற்படையையும் அனுப்பி, 1426 ஆம் ஆண்டில் கிப்ரஸ் தீவை முழுமையாக வென்று, கிப்ரஸ் மன்னர் ஜானுஸ் லுசினியன் (Janus of Cyprus) உட்பட அனைவரையும் இரும்புக் கட்டுகளுடன் கைரோவுக்குக் கொண்டு வந்தார்.

 * கற்பித்த பாடம்: இதன் மூலம் உலகிற்கு "ஒரு முஸ்லிம்மீது கை வைப்பது அனுமதிக்கப்படாது" என்ற பாடம் கற்பிக்கப்பட்டது.


 முஸ்லிம் வரலாற்றில் ஒரே ஒரு முஸ்லிமின் கண்ணியத்திற்காக எழுந்த அரசுகள்:


பர்ஸ்பாய் அவர்களின் செயலை ஒத்த, முஸ்லிம்களின் கண்ணியத்தைப் பாதுகாத்த வரலாற்றுச் சம்பவங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:


 * நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்): ஒரு முஸ்லிம் பெண்மணியின் மரியாதைக்காக பனூ கைனுகா யூதக் கூட்டத்தின் மீது படையை அனுப்பினார்கள்.


 * யஸீத் இப்னு முஆவிய்யா: அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரலி) அவர்களின் கல்லறைக்கு அருகே சென்றால், ரோமானிய நகரத்தை இடித்துவிடுவோம் என எச்சரித்தார்.


 * உமர் இப்னு அப்துல் அஸீஸ்: ஒரு முஸ்லிம் சிறைப்பட்டிருப்பதை அறிந்தவுடன் ரோம மன்னனை எச்சரித்தார்.


 * ஹாரூன் அல்-ரஷீத் மற்றும் அல்-முஅ்தசிம்: முஸ்லிம் பெண்களின் ஒரு அழுகுரலுக்காக ரோமானிய நகரங்களை நொறுக்கினர் (குறிப்பாக ஹாரூன் அல்-ரஷீத், 'நவூரா' என்ற பெண்ணின் அழுகுரலுக்காக பைசாந்திய மன்னனை எச்சரித்தார். அல்-முஅ்தசிம், 'அம்முரிய்யா' நகரத்தின் மீதான தாக்குதலின் போது பிரபலமானார்கள்).


 சுருக்கம்: இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும், ஒவ்வொரு முஸ்லிம் உயிரும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்ட பொற்காலம் இருந்ததை நினைவூட்டுகின்றன.


இந்தத் தொகுப்பு இஸ்லாமிய வரலாற்றில் தலைவர்கள் தங்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை வலியுறுத்துகிறது. 


முழுமையாக வாசித்த உங்களுக்கு ஜஸகல்லாஹு கைரா 

எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். 


நன்றி 

வஸ்ஸலாம்

எகிப்தியர்களின் எலும்பு மேலே தோண்டப்பட்ட நதி

 🌀 சூயஸ் கால்வாய்… 

  எகிப்தியர்களின் எலும்பு மேலே தோண்டப்பட்ட நதி!

*************************



தொகுப்பு: 

மெளலவி HMM Muhammed Yoosuf Musthafi ,காதிரி 


1859 ஆம் ஆண்டு… எகிப்தில் இயந்திரங்களோ, பெரிய தோண்டுபவர்களோ எதுவும் இல்லை. இருந்தது ஒன்றே ஒன்று —

ஒரு கோடரி… மற்றும் முடிவற்ற பொறுமை!


அறிவிப்பு வந்தது: "மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கும் கால்வாய் தோண்டப்பட வேண்டும்." ஆனால் யார் தோண்டப்போகிறார்கள்?


எகிப்தின் ஏழை விவசாயிகள்…

தங்கள் நிலத்தை, குடும்பத்தை கைவிட்டு…

காய்ந்த மணலில்  வலுக்கட்டாயமாக அட்டகாசமாக தள்ளப்பட்டவர்கள்!


👈 1854 இல், சையித் பாஷா, பிரெஞ்சு முதலீட்டாளர்களின் "சூயஸ் கால்வாய் நிறுவனம்"-க்கு பல்லாயிரக்கணக்கான எகிப்திய தொழிலாளர்களை வழங்கும் சட்டத்தை பிறப்பித்தார்.

ஆனால் அது "வேலை" அல்ல…

அடிமைத்தனம் என்பது தான் உண்மை!


300,000-க்கும் அதிகமான எகிப்தியர்கள் சுஹ்ரா (வலுக்கட்டாய உழைப்பு) முறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

வேலைக்குச் செல்வதற்கு மறுப்பவர்களுக்கு?

சிறை, அடிகள், அவமானம் — எதுவும் குறைவில்லை.


பகலில் கொடுமையான கும்பி (குர்பாஜ்) அடிகள்…

இரவில் பசி, நோய், மரணம்…

நிற்க முடியாமல் விழுந்தாலுமே கூட—

மீண்டும் எழுப்ப கும்பி பயன்படுத்தப்பட்டு, எழ முடியாவிட்டால்—

அவர் விழுந்த அந்த இடமே கல்லறை.


⏳ 10 ஆண்டுகள் முழுவதும் (1859–1869)

பல ஆயிரம் பேர் தங்கள் வீட்டையும், குழந்தைகளையும், பெற்றோரையும் கூட பார்க்காமல்…

மணலில் புதைந்தனர்.


உணவும் போதாது…

மருந்தும் இல்லை…

இரவு தங்க இடம் கூட இல்லை…

சூரியனும், பசியும், தொற்றுநோய்களும்—

மரணத்தை வேலைவிடமே நீண்டதாக்கின.


💔 ஒரு நாளில் 30–40 தொழிலாளர்கள் வரை இறந்ததாக பதிவுகள் கூறுகின்றன.

அவர்களில் பலருக்கு ஒரு கல்லறை கூட இல்லை—

அவர்கள் தோண்டிய கால்வாயின் மணலே அவர்களை விழுங்கியது.


அவர்களின் குடும்பங்களுக்கு சென்ற ஒரே செய்தி:


உங்கள் மகன் இறந்துவிட்டார்.”

எந்த உடலும் இல்லை…

அடக்கமே இல்லை…

நன்றி சொல்லும் ஒரு வரி கூட இல்லை!

இறந்தவனின் குடும்பத்திற்கு—

ஒரு காசும் கொடுக்கப்படவில்லை.


சில கணக்குகள் 60,000 பேர் உயிரிழந்ததாக,

சிலவை 120,000-ஐத் தாண்டியதாக கூறுகின்றன.

பெயரில்லாத, கல்லறையில்லாத, நினைவு இல்லாத உயிர்கள்!


📉 இதன் முடிவு என்ன?


கால்வாயை கட்டியவர்கள் எகிப்தியர்கள்…

ஆனால் கால்வாயின் உரிமை?

பிரெஞ்சு நிறுவனத்திற்கே!


1869 முதல் 1956 வரை—

87 ஆண்டுகள் முழுவதும் எகிப்து புறக்கணிக்கப்பட்டது.

சில ஆண்டுகளில் எகிப்து பெற்ற லாபம் 15% கூட இல்லை!

மீதியெல்லாம் ஐரோப்பாவுக்கே.


ஏன் இந்த அநியாயம்?


அனைத்திற்கும் காரணம்:

சையித் பாஷா கையொப்பமிட்ட அதிகாரப் பறிப்பு ஒப்பந்தம்!


அதில்:


• பிரெஞ்சு நிறுவனம் 99 ஆண்டுகள் கால்வாயை சொந்தமாகக் கொள்வது.

• எகிப்து தொழிலாளர்களை இலவசமோ, அவமானமாகக் குறைவான சம்பளத்திலோ வழங்க வேண்டும்.

• எகிப்து அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும்.

• லாபத்தின் பெரும்பாலானது வெளிநாட்டுக்கே.


கால்வாய் ஒரு நீர்வழி அல்ல…

ஆயிரக்கணக்கான எகிப்தியர்களின் கல்லறை!


அது நீரால் திறக்கப்படவில்லை…

அவர்களின் குரல், வலி, ரத்தம், பசி— இவையால்தான் திறக்கப்பட்டது.


> கால்வாய் இரண்டு முறை திருடப்பட்டது:

முதலில் தோண்டியவர்களின் உயிர்கள் கொள்ளையடிக்கப்பட்ட போது…

பின்னர் அதன் லாபம் வெளிநாடுகளுக்கு சென்ற போது!


⚡ 26 ஜூலை 1956

ஜமால் அப்துல் நாசர்

கால்வாயை தேசியமயமாக்கினார்.


💥 அதற்கு பதிலாக

பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் இஸ்ரேல் சேர்ந்து

மும்முனைத் தாக்குதல் நடத்தின —

இந்த முடிவுக்கே பழிவாங்க!


⚰️ ஆனால்…

தோண்டி உயிரிழந்த ஏழைகளுக்கா?

இன்றும் கல்லறை இல்லை…

அடக்கம் இல்லை…

ஆவணம்கூட இல்லை.


மண்ணில் புகுந்தவர்களுக்கு வரலாறு விட்டுச் சென்றது…

வேதனை மட்டுமே.


உங்கள் கருத்து என்ன?

இந்த வரலாறு நீதி பெறும் நாளை நாமொன்றாக காண முடியுமா?