السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 5 January 2026

ஆப்ரிக்க கடலோரம் இந்த மஸ்ஜித்..!



 ஆப்ரிக்க கடலோரம் இந்த மஸ்ஜித்..!

********************************************


கிழக்கு ஆப்ரிக்கா


எரித்திரியா பிரதேசத்தில் கடற்கரையோரமாக இந்த புராதன மஸ்ஜிது உள்ளது.


நபித்தோழர்கள் ஆப்ரிக்க நாடுகளில் கால் பதித்த போது இறைவனை வழிபட அவர்களால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல் தான் இது..!


இன்றும் பழமை மாறாமல் அப்படியே பாதுக்காக்கப்பட்டு வருகிறது.


(சரித்திர சம்பவங்களை ஷேர் செய்து பிறர் அறிந்து கொள்ள உதவுங்கள்.) 


#saudi_to_africa #Eritrea #SahabaStories

மாபெரும் சஹாபியின் மஸ்ஜிது..!


 மாபெரும் சஹாபியின் மஸ்ஜிது..!

*******************************************


ஹஜ்ரத் ஜுபைர் இப்னு அவாம் ரலியல்லாஹு அன்ஹு


குறைஷி குலத்தைச் சேர்ந்த இவர்கள் ஆரம்ப காலத்திலேயே தீன் நெறியில் தன்னை இணைத்துக் கொண்டவர்கள்.


ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்தவர்கள்.


"ஒவ்வொரு நபிக்கும் ஒரு ஹவாரிய்யூன் இருப்பார்கள். எனக்கு ஹவாரிய்யூன் ஜுபைர் அவர்கள்." என ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் புகழப்பட்டவர்கள்.


இவர்கள் ஈராக் நாட்டில் உள்ள பஸராவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்கள்.


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் சுவர்க்கவாதி என நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் இவரும் ஒருவர்.


இவரால் கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள மஸ்ஜிது இது.


இதில் சில காலம் அவர்களின் தோழர் மிகப்பெரிய உஸ்தாத் அவர்கள் இந்த மஸ்ஜிதில் பாடம் நடத்தி வந்தார்கள்.


அவர்களிடம் ஆயிரக்கணக்கானோர் பயின்று மிகப்பெரும் மார்க்க அறிஞர்களாக திகழ்ந்தார்கள்.


(வரலாற்று சம்பவங்களை பிறர் அறிய ஷேர் செய்து உதவுங்கள்.)


#iraq_basara #hazrathzubairibnuawwamrali

#Jadairmasjidatbasara

இறைவன் குர்ஆனில் கூறும் கிணறு.




 இறைவன் குர்ஆனில் கூறும் கிணறு.

********************************************


நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து மத்யன் நகரை நோக்கி வந்த போது அங்கு ஒரு நீர் நிலை (கிணறை) கண்டார்கள்.


அங்கு பலர்கள் தங்களது கால்நடைகளுக்கு தண்ணீர் எடுத்து புகற்றிக் கொண்டிருந்தார்கள்.


அவர்கள் செல்லும் வரை அங்கு இரு பெண்கள் தங்களது ஆடுகளுக்கு நீர் புகட்ட காத்திருந்தார்கள்.


பெண்களால் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து புகட்ட முடியாத சூழலில் தனது பயணக்களைப்பையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்களின் கால்நடைகளுக்கு நீர் எடுத்துக் கொடுத்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவினார்கள்.


அந்த இரு பெண்கள் நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளாவார்கள்.


இந்த உதவியின் மூலம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.


இறைவன் தனது அருள்மறையில் இந்த நீண்ட சரித்திரத்தை (28:22 TO 42 வரை) குறிப்பிடுகிறான். தயை கூர்ந்து அதை படியுங்கள்.


இந்த இடம் மக்கா முகர்ரமா நகரில் இருந்து வடமேற்குப் பகுதியில் செங்கடல் (RED SEA) பகுதியில் அமைந்துள்ளது.


(வரலாற்று செய்தியை பிறர் அறிய ஷேர் செய்து உதவுங்கள்)


#Nabimoosaali #redsea #nadishuaibali

#holyquran_histry

Friday, 2 January 2026

இளைஞர்களே! உங்கள் இலக்கு என்ன?

இளைஞர்களே! உங்கள் இலக்கு என்ன?


இளைஞர்களே! உங்கள் இலக்கு என்ன?

ஆக்கம் : மருதூர் ஜமால்தீன்

மனித குலத்தின் ஆரம்பம் காலத்தை முன்னவைத்து குழந்தையாக அவன் உருவாக்கப்பட்ட உலகில் எளிதாக அவனுக்கு ஏற்படும் சகல நோக்கங்களும் இஸ்லாமிய அத்திவார நற்சித்தை உருவாக்குவதற்கே ஆகும்.

உலகில் சகல உயிரினங்களையும் அல்லாஹ் வாழ்வதற்குத் தேவையான சகல வசதிகளையும் உருவாக்கிய இறைவன் மனிதனையே உலகின் சகலத்துக்கும் பிரதிநிதியாகத் தோற்றுவித்தான்.


இத்தகைய உயர்வையும் தன்னகத்தே தாங்கியவனாக மனிதன் வாழ்விலிருந்து நாம் ஜனமாகின்றோம். எம்மை சுற்றியுள்ள தாயாகவள் எமது குழந்தைப் பருவத்திலே பல ஆசைகளையும் கனவுகளையும் நமதில் விதைக்கொண்டும் இருக்கின்றாள்.


இளைஞர்களின் பணியே சமூக அத்திவாரங்களைக் களையத் துடிப்பதாகும். இளைஞர்களாகிய எம்மிடமே அடுக்கி நிறைந்த காணப்படும் போது நாம் எங்கனம்? சமூக மாற்றச் சிந்திக்க முடியுமா?


சமுதாய இஸ்லாமிய இளைஞர்களின் இறையியல் இலக்குகள் சிறு நோக்கோமாயின் இஸ்லாமிய புத்தகவை தீச்செயல்கள், அநாகரிகங்கள் மூலமாக எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய போக்குகள் எவ்வளவு தூரம் எமது வாழ்க்கையும் இலக்கையும் பாதிப்பதற்கு இடமளிக்கின்றன என்பதை தெளிவாக உணர மறக்கிறோம் என்பதே தெளிவாகும்.


இளைஞர்களின் சமூகத்திற்கான கடன் தீர்க்காலத்தில் விரிவடைந்துள்ளது. கல்வி, தொழில்துறை, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, திருமணம் போன்ற விடயங்களுக்கு எமது பங்களிப்பையும் துணிவையும் சமூக எதிர்பார்க்கிறது. இஸ்லாம் எம் கட்டமைப்பாகும். எனவே இத்தகைய சிந்தனைகளில் இனிவரும் காலங்களிலாவது நமது இளைஞர்கள் செயல்படுவார்கள் என நம்பத்தக்க வழியில் காணத்தக்க வகையில் செயற்பட வேண்டும்.

இளைஞர்களின் பணியே சமூக செயல்பாடுகளில் செயல்திறனை அதிகரித்துக் களையத் தூண்டப்படுவது. இளைஞர்களாகிய எம்மிடமே அடுக்கி நிறைந்த காணப்படும் போது நாம் எங்கனம்? சமூக மாற்றச் சிந்திக்க முடியுமா?


குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களின் இறையியல் இலக்குகள் சிறு நோக்கோமாயின் இஸ்லாமிய புத்தகவை தீச்செயல்கள், அநாகரிகங்கள் மூலமாக எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இத்தகைய போக்குகள் எவ்வளவு தூரம் எமது வாழ்க்கையும் இலக்கையும் பாதிப்பதற்கு இடமளிக்கின்றன என்பதை உணர மறக்கிறோம் என்பதே தெளிவாகும்.


இளைஞர்களின் சமூகத்திற்கான கடன் தீர்க்காலத்தில் விரிவடைந்துள்ளது. கல்வி, தொழில்துறை, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, திருமணம் போன்ற விடயங்களுக்கு எமது பங்களிப்பையும் துணிவையும் சமூக எதிர்பார்க்கிறது.


சீர்கெடுக்கும் சமூக அவலங்களை களைவதற்கு உறுதி பூண்டு வேண்டும். இவற்றைச் சீர்திருத்த இஸ்லாமிய வாழ்க்கைப் பாதையை முன்வைத்து சமூக சேவைகளை இலக்காகக் கொண்டு த.வா. அழைப்புக்களின் மூலமாக எம்மால் முடியும் பணிகளை சமூகத்திற்கு வழங்கி சிறந்த பணிகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.


எனவே கடந்த காலங்களில் எமது வாழ்வு பலவாறான சிந்தனைகளில் தீச் செயல்களில் உட்படிருந்தாலும் இனிமேலாவது அவற்றை விட்டொழித்து எமது திருத்தி எமது சமூகமும் நாமும் வலிமை பெறுவதோடு முக்கியமாக ஒரு சிறந்த இஸ்லாமிய வாழ்விற்கு எம்மை அமைத்துக்கொள்ள முயற்சிப்போம்.


இவ்வாறு இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான அவசியத் தேவையாகும்.






Thursday, 1 January 2026

ஹதீஸ் கலையின் பேரரசர் 2



 ஹதீஸ் கலையின் பேரரசர்: 


றயீஸுல் முஹத்திதீன், நக்காஷுல் ஹதீதின் நபவிய்யிஷ்ஷரீப்

இமாம் அல்-புஹாரி (ரஹ்) - ஓர் வரலாற்றுப் பார்வை.


தொடர்:- 02


தொகுப்பு:-


 மெளலவீ HMM.பஸ்மின் றப்பானீ.


​இஸ்லாமிய வரலாற்றில் திருமறை குர்ஆனுக்கு அடுத்தபடியாக மிகவும் புனிதமானதாகவும், ஆதாரப்பூர்வமானதாகவும் போற்றப்படும் நூல் 'ஸஹீஹ் அல்-புஹாரி'. 


இந்த மகத்தான பொக்கிஷத்தை உலகிற்குத் தந்தவர் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்-புஹாரி (ரஹ்) அவர்கள். 


ஹதீஸ் கலை, அறிவிப்பாளர் ஆய்வு மற்றும் சட்டத்துறையில் இமயமாகத் திகழ்ந்த அவர்கள், வரலாற்றில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்துள்ளார்கள்.


​இளமையும் கல்விப் பயணமும்.


​ஹிஜ்ரி 194-இல் புஹாரா நகரில் பிறந்த அவர்கள், சிறு வயதிலேயே தந்தையை இழந்து அநாதையாக வளர்ந்தார்கள்.


 எனினும், கல்வியின் மீது கொண்ட தாகத்தினால் மிக இளம் வயதிலேயே ஹதீஸ்களைக் கற்கத் தொடங்கினார்கள். 


இதற்காக இஸ்லாமிய உலகின் மூலை முடுக்கெல்லாம் அவர்கள் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டார்கள்.


 தங்களின் வாழ்நாளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்களிடம் பாடம் பயின்ற அவர்கள், ஏறத்தாழ ஆறு லட்சம் ஹதீஸ்களைத் திரட்டி ஒரு மாபெரும் சாதனை படைத்தார்கள்.


​பதினாறு ஆண்டு கால அர்ப்பணிப்பு

​இமாம் அவர்கள் தொகுத்த "அல்-ஜாமிஉஸ் ஸஹீஹ்" எனும் நூல், இஸ்லாமிய உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. 


ஹதீஸ்களை மட்டும் தனித்துவமாகத் தொகுத்து முதன்முதலில் ஒரு நூலை உருவாக்கிய பெருமை அவர்களையே சாரும். 


இந்த ஒரு நூலை மட்டும் செம்மைப்படுத்த அவர்கள் 16 ஆண்டுகளைச் செலவிட்டார்கள். ஒவ்வொரு ஹதீஸையும் பதிவு செய்வதற்கு முன்பும் அவர்கள் குளித்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, இறைவனிடம் நற்கூலியை வேண்டிய பிறகே எழுதினார்கள் என்பது அவர்களின் இறையச்சத்திற்குச் சான்றாகும்.


​அறிஞர்களின் அங்கீகாரம்.


​இமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் அபாரமான நினைவாற்றலையும், நுணுக்கமான ஆய்வுத் திறனையும் கண்டு அவர்களது காலத்து அறிஞர்கள் வியந்து போனார்கள். 


இதன் காரணமாக, "ஹதீஸ் கலையில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்" (அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீஸ்) என்ற உயரிய பட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 


இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் இவர்களிடம் மாணவர்களாகப் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


​சோதனைகளும் இறுதி நாட்களும்

​அறிவில் சிறந்து விளங்கிய அதே வேளையில், வாழ்வின் இறுதிக்காலத்தில் அவர்கள் பெரும் சோதனைகளையும் எதிர்கொண்டார்கள். 


பொறாமை மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த ஊரான புஹாராவிலிருந்தும், நைஸாபூரிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். 


இறுதியில், சமர்கந்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்கியிருந்தபோது, ஹிஜிரி 256-இல் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.


​இமாம் அல்-புஹாரி (ரஹ்) அவர்கள் மறைந்தாலும், அவர்கள் தொகுத்தளித்த ஹதீஸ் தொகுப்புகள் இன்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.


இன்ஷா அல்லாஹ்  தொடரும்...

ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுப்பது

 


"ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒருவருடைய தூய எண்ணத்தைப் (நிய்யத்) பொறுத்தது என்றால், ஆசியா (அலை) அவர்கள் பிர்அவ்னை மணந்திருக்க மாட்டார்.


​ஒரு நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு ஆணின் ஞானத்தைப் பொறுத்தது என்றால், நூஹ் (அலை) அவர்கள் சத்தியத்திற்குத் துரோகம் செய்த ஒரு பெண்ணை மணந்திருக்க மாட்டார்.


​ஒரு மகனின் நற்பண்போ அல்லது சீர்கேடோ ஒரு தந்தையின் வளர்ப்பினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்றால், உலுல் அஸ்ம் (மன உறுதிமிக்க) தூதர்களில் ஒருவருடைய மகன் நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்து மூழ்கியிருக்க மாட்டார்.


​உண்மையில், இவை அனைத்தும் சோதனைகளே; யார் பொறுமையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவே இவ்வாறான சோதனைகள் வழங்கப்படுகின்றன."


​இந்த வரிகளின் பின்னணி:


​இந்த மேற்கோள் சில முக்கிய வரலாறுகளைச் சுட்டிக்காட்டுகிறது:


​ஆசியா & பிர்அவ்ன்: ஆசியா (அலை) அவர்கள் மிகச்சிறந்த பெண்மணி, ஆனால் அவருடைய கணவன் பிர்அவ்ன் மிகப்பெரிய கொடுங்கோலன்.


​நூஹ் (அலை): இறைத்தூதராக இருந்தும், அவருடைய மனைவி அவருக்கு எதிராகச் செயல்பட்டார்.


​நூஹ் (அலை) அவர்களின் மகன்:


 தந்தை நபியாக இருந்தும், மகன் நேர்வழி பெறாமல் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தான்.


​சுருக்கம்: 


நற்பண்புகள் இருப்பதாலேயே ஒருவருக்கு கஷ்டங்கள் வராது என்று அர்த்தமல்ல, சில நேரங்களில் சிறந்த மனிதர்களுக்கும் மிகக் கடினமான உறவுகள் சோதனையாக வழங்கப்படுகின்றன.