السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 5 January 2026

இறைவன் குர்ஆனில் கூறும் கிணறு.




 இறைவன் குர்ஆனில் கூறும் கிணறு.

********************************************


நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து மத்யன் நகரை நோக்கி வந்த போது அங்கு ஒரு நீர் நிலை (கிணறை) கண்டார்கள்.


அங்கு பலர்கள் தங்களது கால்நடைகளுக்கு தண்ணீர் எடுத்து புகற்றிக் கொண்டிருந்தார்கள்.


அவர்கள் செல்லும் வரை அங்கு இரு பெண்கள் தங்களது ஆடுகளுக்கு நீர் புகட்ட காத்திருந்தார்கள்.


பெண்களால் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து புகட்ட முடியாத சூழலில் தனது பயணக்களைப்பையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்களின் கால்நடைகளுக்கு நீர் எடுத்துக் கொடுத்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவினார்கள்.


அந்த இரு பெண்கள் நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகளாவார்கள்.


இந்த உதவியின் மூலம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.


இறைவன் தனது அருள்மறையில் இந்த நீண்ட சரித்திரத்தை (28:22 TO 42 வரை) குறிப்பிடுகிறான். தயை கூர்ந்து அதை படியுங்கள்.


இந்த இடம் மக்கா முகர்ரமா நகரில் இருந்து வடமேற்குப் பகுதியில் செங்கடல் (RED SEA) பகுதியில் அமைந்துள்ளது.


(வரலாற்று செய்தியை பிறர் அறிய ஷேர் செய்து உதவுங்கள்)


#Nabimoosaali #redsea #nadishuaibali

#holyquran_histry