السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 30 May 2016

அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான்


ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்: “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆவள் கொண்டேன். எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தேன். மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டேன். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.
இவ்வளவு அற்புதங்களை அல்லாஹ் ஈக்களில் வைத்திருக்கின்றான் என்றால் ஈயைவிடவும் பன்பமடங்கு பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எத்துனை எத்துனை அற்புதங்களை அல்லாஹ் வைத்திருக்க வேண்டும்
: ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில் அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான நுண் கிரிமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள் எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான். ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம் கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள்.
.
நபியவர்கள் கூறினார்கள் “உங்கள் குடிபானத்தில் ஈ வீழ்ந்தால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்துவிடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றையதில் நிவாரணமும் உள்ளது” (புஹாரீ, அபூதாவூத்)
ஈக்களின் ஒளி ஊடுபுகும் விதத்தில் அமைந்திருக்கும் இறகுகள் மிக விரைவாகப் பறப்பதற்கு ஏற்றவிதத்தில் உறுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. அத்தோடு கண்களுக்குத் தென்படாத அமைப்பில் மிக மெல்லிய இரத்த நரம்புகள் நூற்றுக் கணக்கில் அவற்றில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பொலித்தீன் போன்று மிக மெலிதாக அவ் இறக்கைகள் இருந்தாலும் பறக்கும்போது அவை பிய்ந்துவிடாத வண்ணம் அல்லாஹ் பாதுகாத்துவைத்துள்ளான்.

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துச்சென்றாலும் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பப் பறித்துக்கொள்ளவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமானவர்களே!” (22:73)





Friday, 27 May 2016

றமழானே‬ வருக புனித றமழானே வருக

புன்னியம் பூத்து குழுங்கும் றமழானை வரவேற்கும் முகமாக எமது ‪#‎ஏறாவூர்‬ மண்ணில் எதிர்வரும் ஜூன் 3ம். திகதி நடைபெற இருக்கும் றமழானை‬ வரவேற்போம்‬ எனும்‪ ‎தொனிப்பொருளில்‬ நடைபெற இருக்கும் ‪ மாநாட்டில்‬அனைத்து சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம்.ஏறாவூர் பெண் சந்தை வீதி றகுமானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில்.
காலம்;;ஜூன் 3ம் திகதி பிற்பகல். 3.00Pm ---10.00pm வரை
ஏற்பாடு;;அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள்.

றமழானே‬ வருக புனித றமழானே வருக

றமழானே‬ வருக புனித றமழானே வருக

Sunday, 22 May 2016

‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

 ‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

 ‪வெள்ள‬ ‪‎நிவாரண‬ ‪சேகரிப்பு‬

ஏறாவூர் சம்மேளனத்தின் வழி நடத்தலுடன் ஒருங்கினைக்கப்பட்ட சமூகத்தால் முன்னெடுக்கப் படும் ‪#‎வெள்ள‬ ‪#‎நிவாரண‬ ‪#‎சேகரிப்பு‬இன்று 21-05-2016 அஸர் தொழுகையிலிருந்து இஷா வரை சகல பள்ளிவாசல்களிலும் மேற் கொள்ளப் பட்டதில்
பெருந்தொகையான பொருட்களும், பணமும் பெற்றுக்கொண்டோம்.
இன்று மாலை பள்ளிவாசல்கள் மூலம் கிடைத்த நிதி நிலைமை
முகைதீன் ஜும்ஆ பள்ளி - 41830/=
றிபாய் பள்ளி ---------------28000/=
ஷாபி பள்ளி--------------16141/=
ஜின்னா பள்ளி ------------16110/=
ஜாமிஉல் அக்பர் ---------15740/=
அக்பர் பள்ளி ------------15235/=
ஓட்டுப்பள்ளி -----------14785/=
ஆற்றங்கரை பள்ளி --14470/=
ஸாவியா ------------14400/=
காட்டுப்பள்ளி -------11070/=
மையத்துப்பிட்டி ----9950/=
மீராகேணி ---------8350/=
சதாம் குசைன் -----7500/=
வாளியப்பா -------4700/=
ஷாதுலி பள்ளி --3217/=
ஹசன் ஹுசைன் --2560/=
மஜீத் மாவத்தை -----2320/=
________________________________
மொத்தம் 226378/=
—----—---------------------------
நேற்று ஜும்ஆ பள்ளிகள் ஊடாகவும் இன்று பிரதான வீதி கடைகள் மற்றும் அமைப்புக்கள் ஊடாக சேகரிக்கப் பட்ட நிதி
609235/= ஆகும்.
தற்போதைய இருப்பு :
609235 +226378 = 835613/= ரூபாவாகும்.
(‪#‎எட்டு‬ ‪#‎லட்சத்து‬ ‪#‎முப்பத்தையாயிரத்து‬ ‪#‎அறுநூற்றி‬ ‪#‎பதிமூன்று‬‪#‎ரூபா‬.)
இவை பணமாக சேகரிக்கப் பட்டது .
பெருமளவு உலர் உணவு பொருட்களும் பால்மா பக்கற்களும் இதர அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளது .
அதே போல் வெளி நாடு வாழ் ஏறாவூர் சகோதரங்களால் சேகரிக்கப்பட்ட நிதியும் பெரும்பாலும் நாளை வந்தடையும்
இன்ஷா அல்லாஹ் - ஒரு பாரிய பங்களிப்பை ஏறாவூர் சமூகம் செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்
நாளை காலை 8 மணி முதல் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலிள் வைத்து பொருட்களை தரம் பிரித்து பொதியிடும் பணி இடம் பெற உள்ளது . இயலுமான சகோதர்கள் நாளை இந்த சமூக பணியில் தங்களை இணைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
அல்லாஹ் அனைவரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை பொருந்திக் கொள்வதோடு ஒரு மகத்தான பணிக்காக வேற்றுமைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு எமக்குள் ஏற்படுத்தி உள்ள இந்த ஒற்றுமையை நிலைத்து நிற்க செய்திடுவாயாக ....

Monday, 16 May 2016

ஏறாவூர் மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 இன்று அல்லாஹ்வின் அருளாலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருனையாலும் செய்குமார்களின் துஆ பரக்கத்தாலும் சிறப்பாக நடந்து முடிந்த ஏறாவூர் சூபிமன்சில் மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின்
 مغانيم المصطفی الجامعة العربية மத்றஸாவில் 13பட்டமளிப்பு விழாவும் 14வது தலைப்பாகை சூட்டும் நிகழ்வும் .

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா



 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

 ஏறாவூர்  மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Monday, 25 April 2016

ஸஹாபாக்கள் ஓதிய மௌலிதை வஹாபிகள் ஓத தயாரா?

ஸஹாபாக்கள் ஓதிய மௌலிதை வஹாபிகள் ஓத தயாரா?

ஸுப்ஹான மவ்லிது ஓதுவது (ஷிர்க் பித்அத்) என்றால், உத்தம ஸஹாபாக்கள் ஓதிய (மவ்லித்) கவி வரிகளை மாத்திரம் ஓதுவதற்க்கு வஹ்ஹாபிகள் தயாரா?
 மௌலித் ஓதுவது ஷிர்க் - பித்அத், மௌலித் கிதாபுகளில் வரம்பு மீரப்பட்ட ஷிர்க்கான கவி வரிகள் உள்ளன என்றெல்லாம் சில தந்திர வார்த்தைகளை உபயோகித்து மவ்லித் ஓதுவது கூடாது (ஷிர்க் பித்அத்) என்று கிருக்கு பிடித்தவர்களாக விமர்சிக்கும் வஹ்ஹாபிகளே! நீங்கள் குர்ஆன் ஹதீஸ்களை சரியாக விளங்காத மடயர்கள்.
அது ஒரு பக்கம் இருக்க ஒரு வாதத்திற்கு உங்கள் கருத்தின் பிரகாரம் ஸுப்ஹான மவ்லிது ஓதுவதை விட்டுவிட்டாலும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓத தயாரா? மேலே குறிப்பிட்டது போன்று ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள மௌலித் கவி வரிகளை ஒரு கிதாபாக கோர்வை செய்து உங்கள் பள்ளிவாசல்களில் ஓத தயாரா?
 ஆகவே அல்குர்ஆனில் ' எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் (ஸஹாபாக்கள், இமாம்கள்) செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம் அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் : 4:115)
 இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100)
இறைவன் இந்த நீண்ட இரு வசனத்திலும் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்கும், சுவர்க்கம் கிடைக்கும், ஆகவே முழுமையாக மார்க்கம் குர்ஆன் ஆகும். அந்த குர்ஆனில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழுமை பெற்ற மார்க்கத்தில்தான் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஸஹாபாக்கள் பாடிய கவி வரிகளை (மௌலித்) மாத்திரம் ஓதுவதற்க்கு தயங்குவது ஏனோ.. !
 மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'உத்தம உயிர் தோழர்களை முழுமையாக பின்பற்றி நடப்பது நம் அனைவர்கள் மீது அவசியமாகும். ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உங்களில் ஒருவர் நேர்வழியில் செல்ல நாடினால், உங்கள் முன் மரணமானவர்களின் பாதையில் செல்லுங்கள். உயிரோடுள்ளோர்கள் குழப்பத்தில் உள்ளாக்கப்படலாம். இறையடி சேர்ந்தவர்கள் எம் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதத் தோழர்களாகும். அவர்கள் இந்தச் சமுதாயத்தின் சிரேஷ்ட மாணவர்களும் ஆழமான அறிவுகளையும் நல்ல மனப்பக்குவம் உள்ளவர்களாகவும் முற்றிலும் இக்லாஸ் உடையவர்களாகவும் காணப்பட்டனர்.
அல்லாஹ் அவர்களை அவனது ஹபீபின் தோழமைக்காகவும், அவனது மார்க்கத்தை நிலை நிறுத்தவும் தேர்ந்தெடுத்தான். அவர்களை உயர்ந்த நன்மக்களாக நம்புங்கள். அவர்கள் சென்ற வழியைப் பின் தொடருங்கள். முடியுமானவரை அவர்களது குணங்களையும் வாழ்க்கை நெறியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியிலேயே இருந்தார்கள்'.
ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: மிஷ்காத்

Tuesday, 12 April 2016

அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் !!!!

அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் !!!!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் !!!!
குத்புல் ஹிந் ஹழ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!
வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் குத்புல் ஹிந் ஹழ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17 -04-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை ரஜப் பிறை 10-- 1437 அன்று மிக விமர்சையாக நடைபெற உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் யா நபி பைத்து, யாசீன் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில்
பாக்கவி ஹழ்ரத் கிப்லா ,மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன் ஹழ்ரத்
மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின்,
சீரிய தலைமையில் நடைபெறும்.
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்....
வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.