السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 10 November 2023

கொழும்பு சாஹிரா கல்லூரி

 

கொழும்பு சாஹிரா கல்லூரி

 எந்த சூழ்நிலையில் எதற்காக அன்று உருவாக்கினார்கள் எமது முன்னோர்கள் என்பதை காணலாம் வாருங்கள்.


ஆமாம் 19 ஆம் நூற்றாண்டு காலம். அது . இலங்கை இந்தியாவை போர்த்துகீசியர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து அவரவர் மதங்களை திணிப்பு செய்த காலம் அது. 


இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18 1822 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பிறந்தார். காலப்போக்கில் அவர்கள்.  சைவமும் தமிழும் என் இரண்டு கண்கள் அவை இரண்டும் ஒலி குன்றாமல் இறுதி வரை காத்து பயன் பெறச் செய்யும் நோக்கை தனது வாழ்நாளில் குறிக்கோளாக கொண்டு முதல் முதலில் வண்ணார் பண்ணை சைவ பிரகாச வித்தியா என்ற பாடசாலையை 1864 இல் ஆரம்பித்தார்.


இவரைத் தொடர்ந்து 1864 செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் பிறந்த அனகாரிக தர்மபாலா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை திருநாட்டில்  கிருஸ்தவ மதம் மேலோங்கி இருந்ததை கண்டு புத்த மத நெறிகளை பாதுகாக்க  பெளத்த தேசியத்தை நிலை நாட்ட  கொழும்பு ஆனந்தா கல்லூரியை உருவாக்கினார்.


இந்த சூழலில்  தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழ் சங்கங்கள் மூலம் நடக்கும் தமிழ் பாடசாலைகளிலும், சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் சிங்கள பாடசாலைகளும் கல்வி கற்கும் நிலை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது.


 இந்த நிலையில் தமிழ் சங்கங்களில்  கட்டுண்டு கிடந்த முஸ்லிம்களின் கல்வியை மீட்டெடுக்க,

* ஓராபி பாஷா, 

* மு. கா. அறிஞர் சித்தி லெப்பை,  

* வாப்பிச்சி மரைக்கார், 

*  மாப்பிள்ளை லெப்பை ஆலிம்.

போன்றோர்கள் பல முயற்சிகளை செய்து கொண்டு இருக்கும் போது.


எகிப்து அல் அஸர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ,  அந்த பல்கலைக்கழகத்தின் எம் ஏ பட்டதாரியுமான ( சேக் அப்துல்லா பின் பாதிம்  அல் கொமனி )அவர்கள் மார்க்க நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைக்க கேரளா  வந்தார்கள். பிறகு, இலங்கை வந்து இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்கு  எடுத்துரைத்து கொண்டு இருந்தார்கள்.


அப்போது, இவர்களின் மாணவராக இருந்த சேர் ராசிக் பரீட் அவர்களின் பாட்டனார்  பாபுஜி மரைக்கார் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் மற்றும்  தனித்துவம் என்பன பாதுகாக்க பட வேண்டும் என அறிவுரைகளையும், ஆலோசனைகளை எடுத்துரைக்க,


எல்லோரும் இணக்க பாட்டுக்கு வந்து  பாடசாலை அமைக்க இடம் தேடிய போது பாபுஜி மரைக்கார் மற்றும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்றவர்கள் 1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மருதானை ஜும்மா பள்ளிவாசல் அமைத்த  இடத்திற்கு அருகில் அமைக்கலாம் என ஆலோசனை முன் வைத்தார்கள். இன்றைய கொழும்பு கோட்டை எப்படி வியாபாரிகள் சந்தையாக இருக்கிறதோ! இதேபோல் தான் அன்று அரேபியர்களின் வியாபார சந்தையாக பிரசித்தி பெற்று விளங்கியது மருதானை.


இதன் பிரகாரம் 22 ஆகஸ்ட் மாதம் 1892 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி உருவாக்கப்பட்டது. 


8000 மாணவர்கள் கற்கும் இட வசதிகளை கொண்ட சாஹீராவில் இன்று ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கற்பிப்பதால் சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.


முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் பெளசி அவர்கள். மற்றும் பாக்கீர் மரைக்கார் அவர்கள் மற்றும் தமிழ் அறிஞர் கார்த்திக் கேசு சிவத்தம்பி மற்றும் தமிழ் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஆகியோர்கள்  இந்த கல்லூரியின் பழைய மாணவர்களாவார்கள்.


 மேலும், இந்த கல்லூரியானது, 

* இஸ்லாமிய சங்கம்.

* அறிவியல் சங்கம்.

* வர்த்தக சங்கம்.

* ஆங்கில இலக்கிய சங்கம்.

* சிங்கள இலக்கியச் சங்கம்.

* தமிழ் இலக்கிய சங்கம்.

* ஐக்கியநாடுகள் இளைஞர் சங்கம்.

* தகவல் தொழில்நுட்ப சங்கம்.

       போன்ற சங்கங்களின் வழி காட்டலின்  பிரகாரம் கொழும்பு மா நகரத்தில் வெற்றி நடை போடுகிறது.

FB Nadheem

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!





🔴நியூஸிலாந்தில்  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? 

New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு இந்த மணியின் வயது?-15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான ‘மெளரி’ இனத்து மக்கள் இது என்னவென்று தெரியமால் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். 

நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த  வரலாற்று ஆய்வாளர் திரு.William Colenso இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளார். 

166mm உயரமும், 155mm   சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது. 

இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி-
‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ 

இஸ்லாமியராயினும் தம் தாய் மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. 

வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.

B.H.Abdul Hameed


 

Thursday, 9 November 2023

Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது


 Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.


ஒரு நாள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான  தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.


உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்? 


அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன்.  உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.


உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்

சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?


நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு

பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.


மேலும் அரசுக் கருவூலப்  (பைத்துல் மால்)  பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும்  குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...


அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!


📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா


📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..

Tuesday, 7 November 2023

மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?

 


மஸ்ஜிதில் நபவி பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது எப்படி?

இஸ்லாமிய நாடுகளில் முதல் முதலில் மின்சாரம் வழங்கப்பட்ட இடம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலாகும். இதற்கும் ஒரு வரலாறு உண்டு.


அதாவது, துருக்கியில் அமைந்துள்ள உஸ்மானியா அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்க ஜெர்மன் நாட்டை சேர்ந்த மின் பொறியாளர்கள் வருகை தந்தார்கள். அப்போது ஆட்சியில் இருந்த இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் சொன்னார்கள் எனது மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்கு முன்னர் மஸ்ஜிதுல் நபவி பள்ளி வாசலுக்கு வழங்குங்கள் என்றார் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள்.


இதன் பிரகாரம் கி, பி 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சுல்தான் அவர்களின் உத்தரவின் பேரில் மஸ்ஜிதில் நபவி பள்ளி வாசலுக்கு மின் குமிழிகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த பள்ளிவாசலுக்கு முதல் முதலில் ஜெனரேட்டர்களை தனது சொந்த செலவில் வழங்கினார்கள் இந்தியா ஹைதராபாத்தை சேர்ந்த நிஜாம்கள்.

Monday, 6 November 2023

முற்றாக அழித்த பலஸ்தீன போராளிகள்

 


98 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த படைகாவி கவசவாகனத்தை ஒன்றரை இலட்சம் பெறுமதி கொண்ட ரொக்கட்டைப் பயன்படுத்தி முற்றாக அழித்த பலஸ்தீனப் போராளிகள்


காலாற்படை வீரர்களை யுத்த களத்துக்கு நகர்த்தும் முழுமையாக மூடப்பட்ட 'PANTHER' கவசவாகனமொன்றின் விலை மூன்று மில்லியன் டொலர்களாகும் (இலங்கை விலை 98 கோடி ரூபா). 


உலகத்தில் காணப்படும் மிகப் பாதுகாப்பான படைகாவி கவசவாகனங்களில் ஒன்றாக PANTHER படைகாவி கருதப்படுகிறது. 


அமெரிக்கத் தயாரிப்பான இந்த கவசவாகனத்தை 2019 இல் இஸ்ரேல் மேம்படுத்த ஆரம்பித்தது.  2021 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தனது இராணுவ சேவையில் அதனை ஈடுபடுத்தி வருகிறது. 


2023 ஒக்டோபர் கடைசியில் PANTHER படைகாவி கவச வாகனம் காஸாவினுள் தரைவழியாக நுழைய முற்பட்ட வேளை போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. கொர்னெட் வகை ரொக்கட்டைப் பயன்படுத்தி அந்த கவசவாகனத்தை போராளிகள் சுக்கு நூறாக்கினர். இதனால் அதனுள்ளிருந்த 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 


ஆயுத சந்தையில் இஸ்ரேலுக்கு நற்பெயரைத் தேடித் தந்த பல்வேறு ஆயுத தளபாடங்கள் பலஸ்தீனப் போராளிகளினால் அழிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இஸ்ரேல் மேலும் பின்னடையும் என கருதப்படுகிறது.


சுற்றி வர அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்ட இந்த கவசவாகனத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள். 


- தேவையான நேரத்தில் எதிரிகளை குறிபார்த்து சுடுவதற்கு வசதியாக பல துளைகளைக் கொண்டிருக்கிறது. 


- 20 படைவீரர்களை காவிச் செல்லக்கூடியது.


- 900 குதிரைவலு சக்தி கொண்டது


- மணித்தியாலத்திற்கு 70 வேகத்தில் பயணிக்கக்கூடியது


- ஒரு படைகாவியின் நிறை பத்தாயிரம் கிலோவாகும் (பத்து டொன்)


- 60 மில்லிமீற்றர் அளவு கொண்ட பீரங்கி தளத்தை கொண்டுள்ளது.


- குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை போதுமானளவு வைத்திருப்பதற்கான சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது

Monday, 19 December 2022

வருடாந்த கந்தூரிவிழா

 

மஃஆனிமுல்_முஸ்தபா_அறபுக்_கல்லூரியின்_வருடாந்த_கந்தூரி_விழா


ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கல்லூரியில்  அஸ்ஸெய்யிது குத்புத்தீன் முத்து கோயா தங்கள் (அந்தரிய்யி), அஸ்ஸெய்யித் முஹம்மது ஜலாலுத்தீன் (பூங்கோயாத் தங்கள்), மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம், ஆகியோரின் ஞாபகார்த்த கந்தூரி விழா 2022-12-18ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையில் (ஸூபி மன்ஸில்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் பீ.ஏ முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம், மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ.நாகூர் மீரான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.எஸ் அபூபக்கர் ஹம்மாது ஆலிம் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் #MS_நழிம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா,   மஃஆனிமுல் முஸ்தபா அறபுக் கலாசாலையின் ஆசிரியர்கள், மௌலவிமார்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


இக்கந்தூரி வைபவத்தில்  கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம், மௌலிது வைபவம், பேருரை, துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதோடு, புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் நட்டு வைக்கப்பட்டது.