السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 8 January 2026

இந்த கதவு எப்போதும் திறந்த நிலையில்

 






இந்த கதவு எப்போதும்
                           திறந்த நிலையில்....!🏦
********************************************

மதீனா முனவ்வரா

மஸ்ஜிதுன்னபவியில் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்லாவை நோக்கி நேராக திறந்த நிலையில் எப்போதும் இந்த பெரிய ஜன்னலை நீங்கள் பார்க்கலாம்.

இன்றும் என்றும் இந்த கதவு திறந்த நிலையில் தான் இருக்கும்.

ஏன்..?!

உம்முஹாதுல் முஃமினீன் ஹஜ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லம் இங்கு தான் இருந்தது.

ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறையழைப்பை ஏற்று இங்கு நல்லடக்கமான பின்னர் அவர்களின் புனித ரவ்லாவை நினைவு வரும் போதெல்லாம் பார்த்துக் கொள்வார்கள்.

ஹஜ்ரத் உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சி காலத்தில் மஸ்ஜிதுன்னபவியை மிகப்பெரிய அளவில் விஸ்தீரணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அப்போது தனது மகளாரான ஹஜ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இந்த இல்லத்தை விட்டுக் கொடுக்க வேண்டுகிறார்கள்.

புனித ரவ்லாவை நோக்கி நேராக இருக்கும் தனது இல்லத்தை வழங்கி விட்டால் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரவ்லாவை பார்க்கும் பாக்கியம் கிடைக்காமல் போய் விடும்.. என வழங்க மறுத்து விடுகிறார்கள்.

மஸ்ஜிதுன்னபவியி விரிவாக்கத்துக்கு எப்படியும் அந்த இடம் வேண்டும் என்பதற்காக தனது மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கான ஒரு இடத்தை தனது மகளார் ஹஜ்ரத் ஹஃப்ஸா அவர்களுக்கு வழங்கி விட்டு அந்த இடத்தை கேட்டார்கள்.

அதற்கு ஹஜ்ரத் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா விதித்த நிபந்தனை

எனது இல்லத்தை மஸ்ஜிதுன்னபவி விரிவாக்கத்துக்கு வழங்குகிறேன். வழக்கம் போல எனது இல்லத்தின் கதவு ரவ்லாவை நோக்கி திறந்தே இருக்க வேண்டும்... என்று கூறினார்கள்.

அதன் படி இன்று வரை

இனி கியாமத் வரை இன்ஷா அல்லாஹ் அந்த கதவு திறந்தே இருக்கும்.

(நீண்ட வரலாறு. உங்களுக்கு சுருக்கமாக கூறியுள்ளேன். பிறர் அறிந்து கொள்ள ஷேர் செய்து உதவுங்கள்.) 

#masjidunnabawi #madeenamunawwara
#hajrathhafsarali #hajrathumerrali


Wednesday, 7 January 2026

திருக்குர்ஆன் விளக்கம் 15

 


*திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ, எல், பதுறுத்தீன்,* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

              தொடர்: 15

              --------------


اولئك الذين اشتروا الضللة بالهدي فما ربحت 

 تجارتهم وما كانوا مهتدين .


2- 16. இவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை வாங்கிக் கொண்டுள்ளனர், அவர்களின் வியாபாரம் இலாபம் தராது ! அவர்கள் நேர்வழி பெறவுமில்லை; 

••••••••••••••••••••••••••••••••••


தொடர்பு: 


இதற்கு முன் முனாபிக்குகளின் சில செயல்களைப் பற்றி விளக்கப்பட்ட பின், இந்த அறிவிலிகள் தங்களைப் புத்திசாலிகளாகக் கருதிக் கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டது, இப்போது அதை மிகச்சிறந்த உதாரணத்தின் மூலமாகக் கூறி அவர்களுக்கு நன்கு புரியவைக்கப்படுகின்றது, 

 அல்லது,இவ்வாறும் கூறலாம்,


முந்திய திருவசனங்களில் முனாஃபிக்குகளின் கேடுகள் விளக்கப்பட்டன, இங்கு அதன் முடிவு கூறப்படுகின்றது, ஒரு வியாபாரிக்கு அவரின் வியாபாரத்தின் தவறுகளைச் சுடடிக்காட்டிய பின், உமது மூலதனத்தோடு உமது வியாபாரம் திவாலாகி விட்டது என்று கூறுவது போன்றுள்ளது, 

 

இறங்கிய காரணம்: 

-------------

 தூய எண்ணத்தில் ஈமான் கொண்ட பின், காபிராகிப் போனவர்கள் விடயதில் அல்லது, ஆரம்பத்திலிருந்து வேதங்களைப் படித்து அதில் குறிக்கப்பட்ட இறுதி நபியின் சிறப்புக்களைப் படித்து ஈமான் கொண்டிருந்த யஹூதிகள் மீது இறங்கியது; இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் நபியாக வருகை தந்த போது அன்னாரை மறுத்து சிலர் வெளிப்படையாக காபிரானார்கள்,


 ;சிலர் முனாஃபிக்குகள் விடயத்தில் இறங்கியதுஎன்கின்றனர், 

;அல்லது அவர்களுக்கு தெளிவான புத்தி வழங்கப்பட்டு, தக்க ஆதாரமும் நிறுவிக் காட்டியும் அறிவு ரீதியாகவும், நியாயத்தோடும் நடந்து கொள்ளாமல் முரண்டு பிடித்து வழிகெட்ட அனைத்துக் காபிர்கள் விடயத்தில் இறங்கியது என்கின்றனர். 


அந்தக் கூட்டம் اؤلئك என்பது,ஒன்றைச் சுட்டிக்காட்டும் பெயர்ச்சொல்(சுட்டுப் பெயர்) முஸ்லிம்களை விட்டும் அன்னியமாகிப் போன முனாபிக்குகளின் பண்புகளை இவ்வாறு குறிப்பிட்டுக் கூறப்படுகின்றது, கற்பனையில் இருக்கும் பொருட்களைக் குறித்து சுட்டிக்காட்டியும் கூறப்படுவதுண்டு, இங்கு முஸ்லிம்களை விட்டும் தரத்தில் வெகுதூரம் விலகிச் சென்றவர்களை ச்சுட்டிக்காட்டப்படுவதால்தான் தூரத்தைக்குறிக்கும் اؤلئك என்ற சொல் கையாளப்பட்டுள்ளது, 


ஒரு விடயத்தில் விருப்பமின்மை மறுவிஷயத்தில் ஆர்வம் காட்டுவதற்கு اشتراء என்ற சொல்லைப் பாவிப்பது முண்டு, ஏனெனில், நேரிய வழியில் செல்வதும், ஈமானை ஏற்றுக்கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படையான பர்ழாகும், காபிர்களும், முனாபிக்குகளும் ஷைத்தானின் வழிகேட்டைக்கற்றுக்கொண்டு அந்தக் கடமையை விட்டுவிட்டனர், ஆகவேதான் ஹிதாயத்தை விட்டு விட்டு வழி கேட்டை தேர்வுசெய்து கொண்ட இந்த மக்களை கொடுக்கல், வாங்கல் செய்தவர்கள் என்ற உதாரணத்தின் மூலம் விளக்கிக் கூறப்படுகின்றது, 


வழிகேடு الضللة என்பதற்கு பல பொருட்கள் உள்ளன.


 1- அநியாயம் செய்தல்,


2- நடுநிலை தவறி தீவிரமாகவும், தாழ்ந்தும் செல்லல், 


3- நேர்வழியைத் தொலைத்து வழிதவறல்,


இங்கு மார்க்கத்தைத் துறந்து மார்க்க மற்றவைகளைத் தேர்வு செய்வதைக் குறிக்கும், இதற்குப் பெயர்தான் வழிகேடாகும்,  

 இந்த ضللة என்ற சொல்லை நபிமார்கள் விடயத்தில் பாவிக்கப்பட்டால், தெய்வீகக் காதலில் ஈர்ப்புப் கொண்டவர், ஒன்றில் கவரப்பட்டவர் உள்ளிட்ட பொருளைக்கொடுக்க வேண்டும், 


 நபிமார்களை வழிகேடர்கள் என்று கூறுவது கொடிய குற்றமும் , வழிகேடுமாகும், இது தொடர்பாக " "நபிமார்களின் பரிசுத்தம் " என்ற தலைப்பில் தனியான ஒரு நூலை நாம் எழுதி சமூகவலைத்தளங்களில் முழுமையாகப் பதிவு செய்துள்ளோம் 


நேர்வழி هداية என்பதற்கான விரிவான பொருளை பாத்திஹா சூறத்தின் விளக்கத்தில் கூறியுள்ளோம்.


وَمَا كَانُوا مُهْتَدِين


என்பதற்கு இரண்டு பொரூளைக்கூறமுடியும், 


1- அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த வியாபாரத்தைப் பற்றி அறியாதவர்களாக இருந்துள்ளார்கள். ஆகவேதான் , சம்பாதிப்பது எப்படி என்ற அடிப்படையே இவர்களின் கையை விட்டும் போய்விட்டது, அப்படியிருக்க இலாபம் எப்படி வரும், ?


2- இவர்கள் இந்த வியாபாரத்தில் வழிகாட்டுதலை ப் பெறவில்லை, 

ஏனைய வியாபாரங்களில் உற்சாகத்தோடு காரியம் ஆற்றுகின்றனர், இந்த வியாபாரத்தில் முழு வெற்றியடைவதற்குப் பதிலாக அடிப்படை மூலதனத்தை யே இழந்து திவாலாகிவிட்டார்கள்.


இத்திருவசனத்தின் சாரம் வருமாறு,


மனிதனுக்கு அறிவு அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது. நல்லதும், கெட்டதும் அவர்களுக்கு முன்னால் இருக்கின்றன; தனது அறிவைப் பாவித்து நல்லதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; தீயதிலிருந்து தவிந்திருக்க வேண்டும், இந்த முனாஃபிக்குகள் தங்களுக்குள் தீய குணங்களை உருவாக்கி எதார்த்தமான சத்திய ஒளியை அணைத்து விட்டு நிரந்தர சோதனைக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்;


தவ்ஹீதின் கலிமாவை உலகாயுதத்தைச் சம்பாதிக்கும் கருவியாக ஆக்கிக் கொண்டனர், மறுமையின் நிஃமத்துக்களுக்கு முன்னால் இவை அற்பமாகும்; ஆனாலும், புத்தியையும், தவ்ஹீதுக்குரிய கலிமாவையும் உலகத்திற்காகவே செலவழித்து அதில் மகிழ்ச்சியு மடைந்து கொண்டனர் , 


;;இவர்கள் விலைமதிப்பற்ற இரத்தினத்தைக் கொடுத்து கூளாங்கல்லை வாங்கியவர்கள் போன்று ஆகிவிட்டனர்; பெறுமதி மிக்கதை கொடுத்து பெறுமதி இல்லாத அற்பத்தனமானதைப் பெற்றுக் கொண்டனர்; இவர்கள் வாணிபத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகி திவாலாகிப்போன அபாக்கியவான்களாவார்கள்.


( தற்காலத்திலும் இவர்களை ஒத்த ஒரு ஆன்மீகம் பேசுவதாகக்கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கின்றது, இவர்கள் கலிமாத்தைய்யிபாவை தங்களின் ஆடம்பர வாழ்வுக்கும் , பொருளீட்டுவதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர், நேர்வழி இதுதான் என்பதை அறியாமல் உலகாயுதக் கவர்ச்சியில் மோகம் கொண்டு அலைகின்றார்கள். இதன் மோகத்தால் நேர்வழியை யும், வழி கேட்டையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத மூடர்களாகிவழிகெட்டார்கள்.) 


பயன்'


இத்திரு வசனத்திலிருந்து بيع تعاطي பரிமாற்ற வியாபாரம் ஆகும் என்பது தெரியவருகின்றது, அதாவது, வாயால் மொழியாமல் வாங்கிக் கொள்வது, மார்க்கத்தில் ஏதாவது பொருளை வாங்குவது 


முனாபிக்கீன்கள் வாயால் கொடுக்கல் , வாங்கல் பற்றி எந்த வார்த்தையையும் மொழியாமல்ஹிதாயத்தை விட்டுவிட்டு வழி கேட்டைத் தேர்வு செய்து கொண்டனர், இதை திருக்குர்ஆன் " வாங்குதல் " என்று கூறுகின்றது, இதனால், ஒருவர் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கியதை விற்றவர் பொருந்திக் கொண்டால் , வியாபாரம் கூடிவிடும் என்பதை புரிந்து கொள்கின்றோம், 


எவராவது ஒருவர் மிகப்பெரிய உலகியல் பிரயோசனங்களைத் துறந்துவிட்டு சாதாரண மார்க்க ப் பயனை அடைவாராயின், அவர் வெற்றிக்குரிய வியாபாரியாவார், இதற்கு மாற்றமாக நடப்பவர் முட்டாள்! இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பயன் ஆகிறத்திற்கு முன் தூசாகும்.


எவராவது ஒருவர் மார்கரீதியான காரியத்தை முகஸ்த்துதிக்காக காரியமாற்றுபவன் அறிவீனன், இவன் முனாபிக்குகளைப் போன்று மக்களை திருப்திப் படுத்த திருக்கலிமாவை மொழிபவனாவான்.ஏனெனில்மார்க்க விடயத்தில் அல்லாஹ்வையும், இன்னும் றஸூலையும் திருப்திப்படுத்தும் மார்க்க விடயங்கள்தான் பெறுமதியானவை,  


எவன் சுன்னத்தானவையை நிறைவேற்றிக் கொண்டு வாஜிபான, பார்ழானவையில் பராமுகமாக இருப்பானாயின், அவனும் முட்டாளாவான்; 


சிலர் அதிகளவில் வழீபாக்கள்,அவ்றாதுகளை ஓதுவார்கள்; கந்தூரி; ஸியாறம் உள்ளிட்டவையில் ஆர்வம் காட்டுவார்கள்; ஆனால், கடமையான தொழுகை, ஸக்காத்; நோன்பு உள்ளிட்டவையில் கவனமில்லாமல் இருப்பார்கள்; இவர்களும் கடுமையான குற்றவாளியாவார்கள்;

( தப்ஸீர் றூஹுல்பயான்).


 கடமையான தொழுகை விதையைப்போன்றது, நபில்கள் அதன் பயனாகும், விதையைத் தவிர்த்துவிட்டு பயனை எதிர்பார்ப்பவன் எப்படி புத்திசாலியாக இருப்பான்?,எனவே,கடமையை விட்டு விட்டு உபரியானதைச் செய்பவன் புத்திசாலியாக ஒருபோதும் 

இருக்க மாட்டான்.


நிர்பந்தத்தில் செலவு செய்யும் நற்காரியத்திற்குக்கூலி கிடைக்க மாட்டாது, ஒரு மனிதன் மன விருப்பத்தோடும், மகிழ்ச்சியாகவும் செய்யும் போது தான் நன்மை கிடைக்கும், .

 முனாபிக்குகள் கலிமாவையும், தொழுகையையும் நிர்பந்தத்தால் செய்த காரணத்தால்தான் அவற்றிலிருந்து எந்தவிதமான பயனையும் அவர்களால் பெற முடியவில்லை. 


விருப்பம் இபாதத்திற்குரிய உப்பாகும் ;சூரியனும், சந்திரனும் நிர்பந்தத்தால் சுற்றுகின்றன; ஆகவே ,அவற்றிற்கு எவ்வித பயனும் கிடையாது!


ஸூபிஸ விளக்கம்: 


மனிதனுக்கு இரண்டு ஹிதாயத்துக்கள் அவசியமாகும்


1- ஆலம் அர்வாஹில் கிட்டிய இயற்கையான வழிகாட்டல், (فطرة) இந்த வழிகாட்டலில்தான் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது,


2- உலகத்தில் கிடைக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் உறவினால் முயன்று சம்பாதித்துக்கொள்ளும் ஹிதாயத் 


ஒருமனிதன் இவ்விரண்டு ஹிதாயத்துக்களையும் இந்த உலகத்தில் பெற்றுக்கொள்வானாயின், அவனுக்கு ஒளிக்கு மேல் ஒளிதான், ஒருவர் இரண்டாவது ஹிதாயத்தை இழந்தால், முதல் ஹிதாயத் அவருக்கு வீண், சூரியனும், கண்ணொளியும் சேர்ந்து பிரயோசனத்தை வழங்குகின்றன, சூரியன் ஒளியைக் கொடுத்து, கண்ணில் ஒளி இல்லையாயின், , அவரால் எதையும் பார்க்கமுடியாது,


கண்ணில் ஒளியிருந்து , மற்றுமொரு ஒளியைப்பெற்றுக்கொள்ள வில்லையாயின், அவர் இருட்டில்தானிருப்பார், அவரும் பார்வையை இழந்தவராவார்,


 இந்த முனாபிக்குகளுக்கு இயற்கையான முதல் ஹிதாயத் இருந்தும், முஸ்தபா மாநபியின் ஒளியிலிருந்து விலகியிருந்ததார்கள், இந்த இயற்கையான ஹிதாயத்தைத் தவிர்த்துவிட்டு வழிகேட்டை எடுத்துக்கொண்டார்கள், ஆகவே , இந்த வியாபாரத்தில் வெற்றியில்லை.

திருக் குர்ஆன் விளக்கம் 14

 


*திருக்குர்ஆன்* 

 *விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில் ,*ஏ.எல். பதுறுத்தீன்.* 

ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

.•••••••••••••••••••••••••••••••

            தொடர் : 14

            ----------------


وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِنْ لَا يَعْلَمُونَ


2- 13.- இன்னும் ஏனைய மனிதர்கள் ஈமான் கொண்டிருப்பது போன்று , நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டா

ல் மூடர்கள் ஈமான்

 கொண்டது போன்று நாங்களும்

  ஈமான் கொள்ள வேண்டுமா? என்று கேட்கின்றனர்; அறிக! 

அவர்கள் தான் மூடர்கள் என்பதை 

அவர்கள் அறிந்து கொள்வதில்ல.

••••••••••••••••••••••••••••••••••


தொடர்பு:


இத்திருவசனம் முந்திய திருவச

னங்களோடு சில வகையில் தொடர்பாகின்றது.


1- முந்திய திருவசனத்தில் முனாஃபிக்குகளின் இரு வகையான குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன, இங்கு மூன்றாவது குறை எடுத்துக்காட்டப்படுகின்றது

படுகிறது; 


2- முனாபிக்குகளைக் குழப்பம் விளைவிப்பதிலிருந்து முஸ்லிம்கள் தடுத்தார்கள்,

 ;அதை 

அவர்கள் ஏற்கவில்லை; இத்திருவசனத்தில்

 உண்மையான ஈமானின் பக்கம் அழைக்கின்றனர்; இதையும் அவர்கள் ஏற்கவில்லை


 முழுமையான பிரச்சாரம் என்பது, வழிகேடர்களைக் கெடுதியிலிருந்து முதலில் தடுக்க வேண்டும், ,அடுத்து நன்மையின் பக்கமாக அழைக்க வேண்டும்; நன்மையின் பக்கம் அழைப்பதை விட, ,தீமையைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஒழுங்கு முறையை முஸ்லிம்களுக்கு இங்கு சுட்டிக்காட்டப்படு

கிறது; ஏனெனில்; குழப்பத்திலிருந்து விலகி இருப்பது எதார்த்தமான ஈமானுக்கு நிபந்தனையாகும்.


விளக்கம் : தப்ஸீர்.


 ஈமான் கொள்ளுங்கள் என்பதன் மூலம் வாயால் ஈமான் கொள்வது செல்லுபடியாகாது, யார் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்று இங்கு கூறப்படவில்லை, அடுத்துவரும் திருவசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது, எவர்மீது மக்கள் ஈமான் கொண்டுள்ளார்களோ அவர்மீது நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்


மனிதர்கள் (الناس) என்பதன் நோக்கம் மனித இனமாகும், இதன்படி இத்திருவசனத்தின் பொருள், மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்

என்பதாகும் இதிலிருந்து சரியான விதத்தில் ஈமான் கொள்ளாதவர்கள் எதார்த்தத்தில் மனிதர்கள் அல்ல,

 அவர்கள் மிருகங்களை விடக் கேடு கெட்டவர்கள், அவைகள் தங்களது எஜமானனை அறிந்தாலும் சரி அறியா விட்டாலும் சரி !


அல்லது குறிப்பான மனிதர்கள் நோக்கமாக இருக்கலாம், இதிலும் சில குறிப்பான சாத்தியங்கள் இருக்கின்றன.


1- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அன்னாரின் அற்பணிப்புள்ள அனைத்து ஸஹாபாக்கள்,


2- ஊரிலுள்ள இக்லாஸான முஃமின்கள், அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களான ஹளறத் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் றழியல்லாஹு அன்ஹு போன்றவர்கள், 


தப்ஸீர் அஸீஸியில் ஸெய்யிதினா ஹளறத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு மா அவர்களின் அறிவிப்பை எடுத்துக்கூறி " மனிதர்கள்" என்பதன் நோக்கம், ஹளறத் அபூபக்கர் , உமர், உதுமான் , அலி றழியல்லாஹு அன்ஹு ம் 

அஜ்ம யீன் ஆவார்கள்,என்று கூறப்பட்டுள்ளது, ஏனெனில் , அந்தக்காலத்தில் இவர்கள்தான் முக்லிஸான முஃமின்கள் என்று அறியப்பட்டிருந்தார்கள், அதனால் இவர்களின் ஈமான் மற்றவர்களின் ஈமானுக்கு அளவுகோலாக இருந்தது, எவருடைய ஈமான் இவர்களின் ஈமானை ஒத்துள்ளதோ அவர் முஃமின், இல்லையேல் முஃமின் அல்ல, 


இத்திருவசனத்தின் பொருள் இவ்வாறு கூறுவது போன்று இருக்கின்றது,


முனாபிக்குகளே! நீங்கள் வெளிப்படையாகக் கொண்டிருக்கும் ஈமான் செல்லுபடியற்றது, நீங்கள் உங்களின் நலனை நாடினால் சித்தீக், பாறூக் போன்றோர் போல் ஈமான் கொள்ளுங்கள், தொழிற்சாலையின் முத்திரை இருக்கும் பொருளுக்குத்தான் சந்தையில் பெறுமதி உண்டு, இவ்வாறே மஹப்பத் என்ற சந்தையில் ஈமானில் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முத்திரையும், சித்தீக், பாறூக் றழியல்லாஹு அன்ஹு மா ஆகியோரின் ஈமானும் இருக்க வேண்டும்,


"முனாபிக்குகள் முஸ்லிம்களை மூடர்கள்' என்று கூறியதற்கு சில காரணங்கள் உள்ளன.


1-அக்காலகட்டத்தில் முஸ்லிம்களில் பெரும்பாலான

வர்கள் ஏழைகளாகவும், வறுமை

யானவர்களாகவும்

 இருந்தார்கள் , முனாஃபிக்குகள் வசதி படைத்த குபேரர்களாக இருந்தார்கள்; எனவே, முஸ்லிம்

களை ஏளனப்படுத்த இந்த வார்த்தையைக் கூறினார்கள்;


2-முனாஃபிக்குகள் இஸ்லாத்தை

ப் பிழையான மார்க்கமாகவும், குப்ரை சத்திய மார்க்கமாகவும் கருதினர், ஆகவே, முஸ்லிம்களை மூடர்கள் என்றார்கள்.


3-முஸ்லிம்கள் உலக வாழ்வை விட, மார்க்கத்திற்கு முக்கியத்து

வம் கொடுத்தனர்; உலகத்தின் பயன் உடனடியானது,

 மார்க்கத்தின் பயன் மறுமையில் கிடைப்பது; எப்போதோ கிடைக்க 

இருப்பதற்காக இப்போதுள்ள

 சுகத்தை இழப்பது முட்டாள் தனம் என்பதாகவும் கூறினர்.


4-உலகத்தின் சுகம் நிச்சயமானது மறுமையின் சுகம் கற்பனையா

னது! கற்பனையானதை நம்பி நிச்சயமானதைத் துறப்பது முட்டாள் வேலை என்பதால் அவ்வாறு கூறினார்கள்.


5-மதீனாவில் காபிர்கள் குடியிருந்தார்கள், எதிர்காலத்தி

லும் குடியிருப்பார்கள்,

முஸ்லிம்கள் பரதேசிகள்! இன்று இருக்கின்றார்கள்

; நாளை வேறு ஓர் இடம் செல்லலாம்; இவர்களின்

 மார்க்கமும் தொடர்ந்து இருக்குமா? இல்லையா?

என்பது கூட நிச்சயமில்லை; ஆகவே, நிச்சய மற்ற

 மார்க்கத்தை நம்பி நிச்சயமான நீடித்த மார்க்கத்தைத் துறப்பவன் மடையன் என்று கருதிக் கூறினார்கள்.


முனாபிக்குகள் தங்களைப் "புத்திசாலிகள்" என்று கூறியதற்கான காரணம், நாங்கள் இருதரப்பாருடனும் உறவைப் பேணுகின்றோம், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினால் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம், காபிர்கள் மிகைத்தால் அவர்களோடு ஒட்டிக்கொள்வோம் , இரு தர்ப்பார் களுடனும் சகஜமாக நல்லுறவு கொள்வதுதான் புத்தி ஜீவிகளின் பண்பாகும்,


றப்புத்த ஆலா இவர்களின் பொய்யான கற்பனையை மிகச்சிறந்த விதத்தில் இவ்வாறு கூறி சுக்கு நூறாக்கினான்.


أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ


அறிக! அவர்களே தான் மூடர்கள்,


 இதில் உள்ள هم،ان(அவர்கள், நிச்சயமாக) என்பதற்கான விளக்கம் முன்னர் கூறப்பட்டுள்ள

து. 


முனாஃபிக்குகளை மூடர்கள் என்று அல்லாஹுத்தஆலா கூறியதற்கு பின்வரும் காரணங்

கள் உள்ளன. 


1-அவர்கள் அழியும் சுகத்தை நம்பி நிலையான சுகத்தை விலக்கு

கின்றனர், இவ்வாறு செய்பவன் படு முட்டாள்.


2-பலமான ஆதாரங்களுக்கு முன், தனது குழப்பமான கற்பனைகளி

களில் நம்பிக்கை வைக்கின்றனர்

இவனும் படு முட்டாள்.


3- அவர்களைப் பற்றிய எதார்த்தத்தை முஸ்லிம்கள் அறியாதவரை அவர்களின் சதி செல்லுபடியாகும்,ஆனால், அல்லாஹுத்தஆலா அவர்களை வேரோடு பிடுங்கி முஸ்லிம்களுக் கு முன்னால் நிறுத்தியுள்ளான், 

;அவர்களின் உள்நோக்கத்தை அல்லாஹுத்த ஆலா முஸ்லிம்க

ளுக்கு தெரியப்படுத்தி விட்டான்.


4-அவர்கள் நபிகள் திலகம் ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லமவர்

களுக்கு மாறு செய்தார்கள்,  

எதார்த்தத்தில் இது அல்லாஹ்வு க்கு எதிரானதாகும்; ரப்புக்கு மாறு செய்கின்றவன் ஒருபோதும் கண்ணியம் பெற முடியாது; சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக

 விஷப்பாம்பை கடிக்க வைத்தவ

ன் போன்று இவர்கள் ஆகிவிட்டார் கள்.


முந்திய திருவசனத்தில்,

 '"அவர்கள் உணர மாட்டார்கள்"' என்று உணர்வு மறுதலிக்கப்பட்ட து, இத்திரு வசனத்தில் "அறியமாட்டார்கள் " என்று கூறி அறிவு, புரிதல் மறுதலிக்கப்படுகிறது,


இதில் சில நுட்பமான விளக்கங்கள் உள்ளன.


1- முதலில் புலனால் உணரக்கூடிய குழப்பத்தைப்பற்றிக் கூறப்பட்டது, இங்கு புத்தியோடு தொடர்பான முட்டாள்தனத்தைப்பற்றிக்கூறப்படுகின்றது,   


2- முனாபிக்குகள் முஸ்லிம்களை முட்டாள்கள் என்றார்கள், அல்லாஹுத்த ஆலா அவர்களை முட்டாள்கள் என்றான், 


3- றப்புத்த ஆலா அவர்களை முட்டாள்கள் என்று கூறி விட்டு அந்த முட்டாள்தனத்தைக்கூட அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்கின்றான், ஏனெனில், அறிவு புத்தியால் வருவது, புத்தியே இல்லாமல் போகும்போது அறிவு எப்படி வரும்? 


தப்ஸீர் றூஹுல் பயானில் இந்த இடத்தில் பின்வரும் விளக்கம் கூ றப்பட்டுள்ளது,


ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்ட தும் ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அறிவு, வெட்கம், புத்தி உள்ளிட்ட மூன்று காணிக்கைகளை ஏந்தியவர்களாக அன்னாரின் சமுகம் வருகை தந்து இவற்றிலிருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டார்கள், ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் புத்தியைத்தேர்வு செய்தார்கள், ஹளறத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் அறிவையும் வெட்கத்தையும் திரும்பிச் செல்லுமாறு பணித்தார்கள், அப்போது இவையிரண்டும் நாங்கள் "ஆலமுல் அர்வாஹில் புத்தியோடு சேர்ந்துதான் இருந்தோம், இப்போதும் சேர்ந்துதான் இருப்போம்" என்றன, புத்தி மூளையிலும், அறிவு மனதிலும், வெட்கம் விழிகளிலும் குடிகொண்டன.


பயன்:


 இத்திருவசனத்தில் பின்வரும் பிரயோசனங்களைப் பெறுகின்றோம்..

1-மார்க்க விடயங்களில் அல்லாஹ்வின் நல்லடியார்களை ப் பின்பற்றுவது அவசியம், ஏனெனில்; நல்லடியார்களைப் போன்று ஈமான் கொள்ளுமாறு இங்கு கட்டளையிடப்பட்டுள்ளது;


2-அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாதான் உண்மையானது! ஏனெனில், இங்கு றஸூலுள்ளா ஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்ளையும்;நல்லடியார் களையும் பின்பற்று மாறு கூறப் பட்டிருக்கிறது.


3-வஹாபி தேவ்பந்தி; மௌதூதி உள்ளிட்ட இயக்க வாதிகள் வழிகேடர்கள்; ஏனெனில், வஹாபிகள் இமாம்களைப் பின்பற்றுவதைக் குறை காண்கின்றார்கள், தேவ்பந்திகள் அகில உலக முஸ்லிம் அறிஞர்கள் நன்மையானவை என்று ஏற்றுக் கொண்டதை ஷிர்க் என்கின்றனர், மௌதூதிகள் இவ்விருவரின் செயல்களையும் ஏற்று வெளிப் படுத்துகின்றனர்.


4-சாலிஹான நல்லடியார்களை குறை காண்பவன் முனாபிக்குக ளின் வழிமுறையிலிருப்பவன், தற்காலத்தில் ஷீஆக்கள் முதல் மூன்று கலீபாக்களையும் , காரிஜி கள் இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும்;

வஹாபிகள் 

முஜ்தஹிதான இமாம்களையும்;தேவ்பந்திகள், மௌதூதிகள் வலிமார் களையும், அறிஞர்களையும் காபிர், முஷ்ரிக் என்கின்றனர்;


 மீலாத் மௌலிதில் றஸூலுள்ளா ஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் புகழ்வதை' ஷிர்க்' என்கிறனர் என்றால், எந்த ஆலிம், வலி இதிலிருந்து தப்ப முடியும்? தக்வியத்துல் ஈமான் என்ற நூலை உற்று நோக்கினால், இஸ்லாத்தையே நம்புவது ஷிர்க்காகத் தெரியவரும்! ந ஊது பில்லாஹ்!


5- இத்திருவசனத்தில் , மார்க்கமற்ற வழிகேடர்கள் தூஷணிப்பையும், ஒதுக்கலையும் பொருட்டாக எடுக்க வேண்டாம், என்று சத்தியத்தில் இருக்கும் ஆலிம்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது, அசத்தியத்திலிருப்பவர்கள் எப்போதும் இந்த நடைமுறையை

யே பின்பற்றுகின்றனர்.

( தப்ஸீர் மதாரிக்) 


 உலமாக்கள் சன்மார்க்கத்தின் காவலர்கள், திருடன் முதலில் காவலாளி மீதுதான் தாக்குதல் நடத்துவான், காவலாளிகள் பலமாக இருந்தால் திருட முடி யாது, ஆகவேதான் இப்போதும் வழிகேடர்களான வஹாபிகள் தீனின் காவலர்களான இமாம்

கள் ,வலி மார்கள், உலமாக்கள் 

உள்ளிட்டோரை குறை கூறி 

இழிவுபடுத்துகின்றனர், 


மக்கள் மத்ஹபு , தரீக்கா வழியில் பற்றுள்ளவர்களாக இருக்கும் வரை முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மார்க்கத்தைத் திருட முடியாது என்பதை அவர்கள் நன்கு விளங்கி வைத்திருக்கின்றனர், அரசாங்கத்தின் ராஜ்ய காவாலா

ளிகள் மீது அரச்சாங்கத்தின் முழுக் கவனமும் இருப்பது போன்று , சன்மார்க்கத்தின் காவலாளிகளான சத்திய உலமாக்களுக்கு முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உதவிக்கரமும், மலக்குகளின் பாதுகாப்பும் இருந்து கொண்டே இருக்கும், ஆகவேதான் வழிகேடர்களின் அணியிலிருந்து பெரும் கொண்ட உலமாக்கள் பல கூறுகளாக சிதறி முகவரியே இல் லாமல் போய்விட்டனர், 


 சத்திய உலமாக்களின் கண்ணியம் , மகத்துவம் மறைந்தும் மங்காமல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன, ஆகவே உலமாக்கள் உளத்தூய்மையோடு மார்க்கத்திற்கு ஊழியம் செய்ய வேண்டும், இதை தனது முழு நேரக் கடமையாக எடுத்துக்

கொள்ள வேண்டும், இவர்கள் உலகத்தைத்தேட வேண்டியதி

ல்லை, உலகம் இவர்கள் காலடி

க்கு வந்து இவர்களின் பாதத்தை முத்தமிடும்.


6- அல்லாஹுத்த ஆலா வின் நல்லடியார்களின் விரோதி உண்மையில் அல்லாஹுத்த ஆலா வின் விரோதியாவான், பாருங்கள்! முனாபிக்குகள் முஸ்லிம்களை முட்டாள்கள் என்றார்கள், அல்லாஹுத்த ஆலாவே இவர்களுக்குப் பதிலாக "அவர்கள்தான் முட்டாள்கள்" என்று கூறினான்.


7- ஸஹாபாக்களைக் குறைகூறுவது முனாபிக்கு

களின் வேலையாகும், இவர்கள் ஸஹாபாக்களை முட்டாள்கள் என்று கூறி தூஷணித்தார்கள்.


ஸூபிஸ விளக்கம்: 


 மனிதன் உலகத்தில் பிரயாணியின் அந்தஸ்த்தில் இருக்கின்றான், தனது சொந்த தேசமான ஆலமுல் அர்வாஹி விருந்து தனது எஜமானிடம் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டு சம்பாதிப்பதற்காக பரதேசியாக இவ்வுலகம் வந்தான், இங்குள்ள நந்தவனங் களையும், எழில்மிகு நீரோடைகளையும் கண்டு அதில் மதிமயங்கி தனது தாய் நாட்டையும், தனது உண்மையான நோக்கத்தையும் மறந்து விட்டான்,


தாய் நாட்டிலிருந்து தொடர்ந்து அஞ்சல்கள் , தகவல்கள் தூதர்கள் மூலமாக , பரதேசியே! அவசரமாக சம்பாதித்து தனது தாய் நாட்டிற்கு அனுப்பிக் கொண்டே இரு! இந்த வாய்ப்பு மீண்டும் கைக்கு எட்டாது , ஆகவே கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு தாய்நாட்டுக்கு செல்வத்தை அனுப்பு என்று தகவல் வந்து கொண்டே இருக்கின்றது.


புத்திசாலி கிடைக்கும் தகவலைக் கேட்டதும் உடனே உஷாரடைந்து விடுகின்றான், முட்டாள் இங்குள்ள போலியான எழில்களிலும், சுகங்களிலும் சொக்கி விடுகின்றான், தாய் நாட்டிலிருந்து வந்த தகவல்கள் எதுவும் அவனின் கண்களைத்திற க்கவில்லை, எவராவது ஒருவர் அவனைச்சந்தித்து இன்னின்ன ஆளைப்போன்று சம்பாதித்து தாய் நாட்டிற்கு ப் பயணம் மேற்கொள்ள தயாறாகு! என்று கூறினால், அதை உபகாரமாகக்

கருதுவதற்கு மாறாக அவனை நையாண்டி பண்ணி ஏளனம் செய்கின்றான், 


 இதயக்கண் திறந்தவர்களை பைத்தியம் என்கின்றனர், பரதேசியாக இங்கு வந்தவர்கள் , தனது தாய் நாட்டைப் பற்றிய எந்த விதமான சிந்தனையுமற்றவர்களாக இவவ்வுக இன்பத்தில் மூழ்கி விட்டனர், இறை நேசர்களின் அழுக்கடைந்த கிழிந்த ஆடையையும், தூஷிபடிந்த மஞ்சணித்த முகத்தையும் பார்க்கி

ன்றார்களே தவிர, அவர்களின் உள்ளத்தின் ஒளியையும் , 

நெஞ்சில் நிறைந்திருக்கும் கருவூலங்க

ளையும் காண்பதில்லை, , 

 உண்மையில் அவர்கள் கதிரவன், சந்திரன் போன்றவர்கள், தூஷிகளும், புளுதிகழும் நிறைந்த வேற்றார்கள் மத்தியில் அவர்கள் மறைந்து வாழ்கின்றார்

கள்..


ஸூபியாக்களின் பார்வையில் , அறிவு இருவகைப்படும்.

1- வெளிப்படையான அறிவு.


2- லதுன்னியான இறையருள் அறிவு.


இதற்கான காரணம் யாதெனில், கல்புக்கு இரு வாசல்கள் உள்ளன,


 1- புறமானது.

2- அகமானது,


புறமான வாசல் ஐம்பொறிகள், இவை மூலமாகவே கல்புக்கு புறமான அறிவு கிடைக்கின்றது, அகமான வாசல் இல்ஹாம் ( உள்ளுணர்வு) ஆகும், இதன் மூலமாகவே அகவியல் ஞானம் கிடைக்கின்றது, எவராவது ஒருவர் புற ஞானத்தின் வாசலை திறந்து கொண்டு அகவியல் வாசலை அடைப்பாராயின், அவர் எத்துணை எழுத்தறிவுள்ள மேதையாக

 இருந்தாலும் ஜாஹிலாகவே இருப்பார், 


இந்த முனாபிக்குகள் உலகத்

தை நன்கு புரிந்து வைத்திருக்கும் சிறந்த சாமர்தியமானவர்கள் , ஆனால், இறையறிவு இல்லாத காரணத்தால் வீணர்கள், ஆகவேதான்:لَا يَعْلَمُونَ அறிவற்ற வர்கள் என்று கூறப்பட்டது, 

 வெளிப்படையான அறிவின் பரிபாஷை களைப்படமாக்கியவரின் கல்பின் வாசல் திறக்கப்படவில்லை யாயி

ன், அவர் அறிவின் பிரகாசங்களைவிட்டும் நிராசை

யானவராவார், அநேகமாக 

 அவர்கள் பாடமாக்கிய 

அதே அறிவுதான் அவர்களுக்கு திரையாகவும் அமையும்

பல்கீஸ் ராணி


 ஸுலைமான் நபியின் அரண்மனையில் ஸபஃ தேசத்தின் ராணி நுழைந்தபோது, கெண்டைக் கால்களுக்கு மேல் தமது ஆடையை உயர்த்திய செயலை குர்ஆன் பதிவு செய்துள்ளது.


குர்ஆன் பதிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த செயலா அது?


ஆம். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபோது, அங்குள்ள கண்ணாடித் தரையை ஓடும் நீர் என்று கருதினார். அதனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, தன்னிச்சையாகவும், தற்செயலாகவும் கெண்டைக் கால்கள் வரை தமது ஆடையை உயர்த்தினார்.


ராணியின் குணத்தையும் உன்னத ஒழுக்கத்தையும் குர்ஆன் இங்கே பதிவு செய்கிறது. 


உடல் வனப்பை வெளிப்படுத்துவதற்காக ஸுலைமான் நபியை அவர் அணுகவில்லை. மாறாக, அறிவாற்றலுடன் அணுகினார்.


தமது தோற்றத்தையும் வசீகரத்தையும் நம்பி அவர் அங்கே வரவில்லை. மாறாக, தமது அரசியல் சக்தியை நம்பி வந்தார்.


பகட்டுக்காகவோ அலங்காரத்துக்காகவோ அவர் அங்கே வரவில்லை. மாறாக, வலிமையான ஓர் உரையாடலுக்காக வந்தார்.


இருப்பினும், அரண்மனை மீதான ஈர்ப்பு ஒரு கண நேரம் அவரை திசை திருப்பியது. இதனால் தன்னை அறியாமலேயே அவர் தன் ஆடையை சற்று உயர்த்தினார்.


அது கண்ணாடி மாளிகையின் தரை என்று அவரிடம் கூறப்பட்டபோது, ஸுலைமான் (அலை) அவர்களின் மகத்துவத்தை அவர் உணர்ந்தார். உடனே கூறினார்:


"என் இறைவனே! (இன்றுவரை) எனக்கு நானே கொடுமை புரிந்துகொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிகிறேன்”. (27:44)


இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னரே அவருடைய ஆடை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் இங்கே விவரிக்கிறது.


அடக்கமும், வெட்கமும் மிக்கதாகவும், ஆடம்பரத்தை வெறுப்பதாகவும், கெண்டைக் கால்கள் வரை மறைக்கப்பட்டதாகவுமே இருந்துள்ளது.


பெண்களின் இயல்பு நிலையே அடக்கம்தான். கெண்டைக் கால்களுக்கு மேல் ஆடையை உயர்த்துவது ஒழுக்கமின்மை, வெட்கமற்ற செயல்.


ஆபத்தும், அருவருப்பும் ஏற்படும்போது நடைபெறும் தன்னிச்சையான தற்செயல்.


ஆனால், இன்று..?


பல பெண்கள் கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்தியவாறுதான் ஆடை அணிகிறார்கள். அது ஆபத்துக்காகவோ, அதிர்ச்சிக்காகவோ அல்ல. 


மாறாக அழகு, ஃபேஷன், கலாச்சார மோகத்தால் ஈர்க்கப்பட்டு செய்கிறார்கள். அதுதான் நாகரிகம், முன்னேற்றம் என்று நம்புகிறார்கள்.


அடக்கமும் நாணமும் பெண்களுக்கே உரித்தான ஓர் உள்ளுணர்வு. அதுதான் இயற்கையானது! அதுதான் அழகானது!


அதுதான் நீடித்து நிற்கும் அலங்காரமே தவிர, ஆடையை உயர்த்துவது அல்ல!


✍️ நூஹ் மஹ்ழரி

08.01.2026

Tuesday, 6 January 2026

மரண நேரத்தில் மான்புமிகு உமர்


 .    *நான் கண்ணீர் சிந்திய சம்பவம்*

              (வரலாறு தந்த பாடம்) 


                உமர் ரலியல்லாஹு அன்ஹு கடைசி காலத்தில் நயவஞ்சகமாக கத்தியால் குத்தப்பட்டு  குற்றுயிராக கிடந்த,அந்த நேரத்தில்,ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து கேட்டார்கள்.,

                                   *நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள், உங்களிடத்தில்,கூறிய,முனாஃபிக்குகள் என்னும் நயவஞ்சகர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கிறதா அல்லாஹ்வுக்காக சொல்லுங்கள்*

                  இதைக் கேட்ட ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு அழுதவாறு ரகசியத்தை உங்களிடம் எப்படி நான் சொல்ல முடியும். *நபி என்னை நம்பி என்னிடத்தில்,தகவல்கூறியுள்ளார்கள்* என்று கேட்டார்கள் 

            நான் எனது கடைசி காலத்தில் இருக்கிறேன் என் பெயரும் அந்த முனாஃபிக்குகள் பட்டியலில் இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்கள்,என்றுமீண்டும்மீண்டும்,கேட்டபொழுது,சொன்னார்கள் 

உங்கள் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை இனி யாருக்கும் நான் தகவல் சொல்ல மாட்டேன் என்று

ஹுதைஃபா ரலியல்லாஹு அன்ஹு

கண்ணீர் மல்க பதிலளித்தார்கள்.

        பிறகு தனது மகன் அப்துல்லாஹ் பின்,உமர்ரலியல்லாஹுஅன்ஹுவை அழைத்து எனக்கு இன்னுமொரு தேவை உள்ளது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று உமர் உங்களிடம் அனுமதி கேட்கிறார் *அமீருல் முஃமினீன் ஜனாதிபதிகேட்கிறார்,என்று,சொல்லாதே,உமர் உங்களிடம் கேட்கிறார்*

*"நீங்கள் அனுமதி அளித்தால்

அவரது தோழர்களோடு அடக்கம் செய்யப்பட அவர் விரும்புகிறார்"*

என்று கேள் என்றார்கள்,உமர் ரலியல்லாஹு அன்ஹு.

                அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுசென்று,அனுமதிகேட்டபோது எனக்காக,அந்தஇடத்தை,வைத்திருந்தேன் எனினும் *உமருக்காக அதை விட்டுத் தருகிறேன்* என்று பதிலளித்தார்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.

                       பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹுதனதுமகனிடம்,சொன்னார்கள்,எனதுஜனாசாவை,தொழவைப்பதற்காக நபியின் உடைய மஸ்ஜிதில் கொண்டு செல்லும்போது.., *ஹுதைஃபா ரலியல்லாஹுஅன்ஹு எனது ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறார்களா என்று பார்

ஏனெனில்,என்மீதுள்ள,கண்ணியத்தால் நான் முனாஃபிக் என்று அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்*.

அவர்கள் கலந்து கொண்டால் எனது ஜனாசாவை நபியின் ரவ்ளாவுக்கு அருகிலே கொண்டு செல்.

மீண்டும்,மையத்தை வீட்டுக்கு வெளியில் வைத்துவிட்டு  ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அனுமதி கேள் *உங்களது மகன் உங்களது வீட்டில் அடக்கம் செய்யப்பட விரும்புகிறார்* என்று கேள்.நான் *அமீருல் முஃமினீன், ஜனாதிபதியாக* இருப்பதால் மறுப்பதற்கு தயங்கியிருக்கலாம் 

அவர்கள் அனுமதி அளித்தால்நபிக்கு அருகிலேயே அடக்கம் செய்,அனுமதி மறுத்துவிட்டால்,பொதுகபரஸ்தானில் என்னை அடக்கம் செய்து விடு

என்று வஸிய்யத் செய்தார்கள் 

உமர் ரலியல்லாஹு அன்ஹு.

                  அதேபோன்று ஹுதைஃபா ரலியல்லாஹ் ஜனாஸாவில் கலந்து கொண்டதைப்பார்த்து,சந்தோஷமடைந்த அப்துல்லாஹ் ரலியல்லாஹ் ஆயிஷா ரலியல்லாஹ்விடம் அனுமதி பெற்று அண்ணல் நபி மற்றும்அபூபக்கர்ரலியல்லாஹ்வோடு உமர் ரலியல்லாஹ் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

                                    *'சுப்ஹானல்லாஹ்*

                      எவ்வளவு பெரிய ஸஹாபீ

நீதமான ஆட்சியால் உலகைஈர்த்தவர்

அல்லாஹ்வுடைய அச்சத்தில் நிரம்பியவர்கள் *சுவனவாசி* என்று நபியின் புனித நாவால் நன்மாறாயம் பெற்றவர்,*ஷஹீத் - உயிர்த்தியாகி* என்று நபியிடம் அந்தஸ்து பெற்றவர் 

இரண்டாம் கலீபா.இவ்வளவு ஏராளமானசிறப்புகளுக்கு,சொந்தக்காரர்  *நான் ஒரு முனாஃபிக் ஆக இருப்பேனோ* எனது அமல்கள் தியாகங்கள் எல்லாம்அல்லாஹ்விடம் ஏற்கப்படாமல் வீணாகி விடுமோ 

என்று பயந்து நடுங்கியுள்ளார்கள் 


நான் இதில் எம்மாத்திரம்..?

நமது ஈமானைக் குறித்து எவ்வளவு அஞ்ச வேண்டும்..?

அந்த சத்திய ஸஹாபாக்களை ரப்புல் ஆலமீன் பொருந்திக் கொள்வானாக 

எனது கடைசி நிலை என்னவாகும் 

நான் உண்மையில் முஸ்லிம் தானா.?

*அல்லாஹ்வே எங்களை மன்னித்து விடு.!*

*அல்லாஹ்வே எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை..!*

*நல்லோர்களோடு சேர்த்து விடு...!*


பிராத்தனையுடன்....!

                            ✍️ மதுரை.,இஸ்மாயில்.

Monday, 5 January 2026

பரகத் நிறைந்த இல்லர வாழ்கை

 




يُحكىٰ في الأثر أن الصحابي طلحة بن عبيد الله رضي الله عنه دخل على زوجته وعلى وجهه الحزن فسألته:


لعلّكَ رابكَ منّا شيءٌ فَنُعتِبكَ! 

فقال: لا، ولنِعمَ حَليلةُ المرءِ المسلمِ أنتِ.


وزوجه هي السيّدة‏ أم كلثوم بنت أبي بكر رضي الله عنهما


#ஒரு வரலாற்றுச் செய்தியில் கூறப்படுவது என்னவென்றால்,ஸஹாபி தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்னஹு)அவர்கள்

ஒருநாள் கடுமையான கவலையுடன் தமது மனைவியிடம் வந்தார்கள்.


அதை கவனித்த அவர்களின் மனைவி கேட்டார்கள்:

எங்களால் உங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டதோ? அப்படி இருந்தால், அதை நாங்கள் சரிசெய்து உங்களைத் திருப்திப்படுத்துவோம்.


அதற்கு தல்ஹா (ரழியல்லாஹு அன்னஹு) அவர்கள் கூறினார்கள்:


“இல்லை.

 நீ ஒரு முஸ்லிம் மனிதனுக்கு மிகச் சிறந்த மனைவியே!”


🔹 அவர்களின் அந்த மனைவி யார் என்றால், ஸய்யிதா உம்மு குல்தூம் பிந்த் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்னஹுமா) ஆவார்கள்.


✨ இது ஸஹாபாக்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த மரியாதை, அன்பு, பரஸ்பர புரிதல்** ஆகியவற்றை வெளிப்படுத்தும்

ஒரு அழகிய எடுத்துக்காட்டாகும்.


 🌿 தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்னஹு)


 🌺 உம்மு குல்தூம் பிந்த் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்னஹுமா)


 வாழ்க்கைப் பாடங்கள் 

****************************


 1️⃣ குடும்பத்தில் உணர்ச்சிகளை மறைக்காமல் பகிர்தல்


தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் துக்கத்துடன் வந்ததை மனைவி உடனே கவனித்தது, தம்பதிகளுக்கிடையிலான ஆழ்ந்த புரிதலை காட்டுகிறது.


 2️⃣ மனைவியின் மென்மையான அணுகுமுறை


“எங்களால் உங்களுக்கு ஏதேனும் வருத்தமா?” என்று கேட்டது,

**குற்றம் சாட்டாமல், அக்கறையுடன் பேசும் முறை** என்பதை கற்றுத் தருகிறது.


 3️⃣ தன்னைத்தானே திருத்தத் தயாரான மனப்பாங்கு


“நாங்கள் உங்களை திருப்திப்படுத்துவோம்” என்ற வார்த்தை,

தன்னை பரிசீலித்து மாற்றத் தயாராக இருப்பது** ஒரு உயர்ந்த குணம் என்பதை உணர்த்துகிறது.


4️⃣ கணவனின் நன்றியுணர்வு


“நீ ஒரு சிறந்த முஸ்லிம் மனைவி” என்று கூறியது,

மனைவியின் மதிப்பை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறது.


5️⃣ நல்ல வார்த்தைகளின் சிகிச்சை சக்தி


ஒரு இனிய வார்த்தை,

**மனச்சோர்வை நீக்கி, உறவை உறுதிப்படுத்தும்** வலிமை கொண்டது.


 6️⃣ ஸஹாபாக்களின் இல்லற வாழ்க்கை — நமக்கான முன்மாதிரி


ஸஹாபாக்களின் வாழ்க்கை

வணக்கத்தில் மட்டுமல்ல, குடும்ப வாழ்விலும் முன்மாதிரி** என்பதை இது காட்டுகிறது.


 7️⃣ இஸ்லாமிய குடும்பம் அன்பும் மரியாதையும் அடிப்படை


அன்பு + மரியாதை + புரிதல்

= பாரகத் நிறைந்த இல்லற வாழ்க்கை.


தொகுப்பு : மெளலவி எச்.எம் யூசுப் 

                        முஸ்தபி ,காதிரி 

Muhammed Yoosuf Musthafi 


நன்றி

ஜஸகல்லாஹு கைரா முழுமையாக வாசித்த உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.