السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 30 June 2016

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு

ரமழான் மாதம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏன் லீவு கொடுக்காங்க மோதினார்?
டியூசன் கிளாஸ் வைக்கிறதுக்கு சார்?
மாணவர்களும் ஆசிரியர்களும் freeya இருந்து அமல்கள் செய்வதற்கு இல்லையா?
அமல்கிமல்லெல்லாம் தெரியா ஸ்கூல் இல்லை டியூஷன் வச்சு லம்பா உழைக்காங்க போல,

ரமழான் அருளப்பட்டதன் நோக்கம் ஏழைகளின் பசியினை அறிவதற்கும் நல்லமல்களை நாம் பெருக்கிக் கொள்வதற்குமே ஆகும்.
அந்த வகையிலேயே நமது நாடு ஒரு பௌத்தநாடாக இருந்தும் கூட நமது மார்க்க கடமையினை செய்வதற்காக ரமழான் மாதத்தில் விஷேட விடுமுறையினை தந்து நம்மை நண்மையின் பக்கம் விரைந்தோட அனுமதியை வழங்கி நிற்கிறது.
நிலமை இவ்வாறிருக்க நம் முஸ்லிம் ஊர்களில் நடப்பது என்ன?
காலை 6.00 - 1.00 மணிவரையும் அதன்பின் 3.00 - 5:30 மணிவரையும் பாடசாலைகளிலும் , தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
(டியூசன் குடுக்கிற sir மாரே உங்களுவளுக்கு நித்திரைகித்திரை டயட்கியட் வாரலியா வாப்பா)
குறைந்தது 2 மணித்தியாலங்களாவது பாடத்தினை சந்திக்க வேண்டியுள்ளது மாணவர்களின் நிலை.
அத்தோடு இவை அனைத்தும் மாணவர்களின் எதிர்கால நல்நோக்கம் கருதி அமைகின்றதா என்று நோக்கினால் பதில் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது.
பாடசாலை தற்போது தனியார் மயப்படுத்தப்பட்ட நிலையினை ஒத்ததாகவே காணப்படுகிறது.
பணம் இல்லாதவனிற்கு படிப்பில்லை என்ற நிலையிலேயே அரச பாடசாலைகளின் இயக்கமும் இருப்பதை பார்க்ககையில் வேதனை மட்டுமே எஞ்சுகிறது.
இம்மேலதிக வகுப்புகளினூடாக மாணவர்கள் சிலர் நோன்பை தவறவிட்ட வரலாறும் இல்லாமலில்லை.
தவிர்க்க முடியாத காரணங்களால் ரமழானில் நோன்பை விட்டு அதை பின்னர் பிடித்தாலும் இம்மாதத்தில் பிடிப்பதற்கு ஈடாகுமா?
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கூச்சலிடும் நாம் அரசபாடசாலைகள் விடயத்தில் பாராமுகமாகவே இருந்து விடுகின்றோம்.
உண்மையில் மாணவர்களின் கல்வியில் ஆர்வமிக்க ஆசான்கள் எவராவது வந்து தைரியமாக சத்தியமிட்டு சொல்லட்டும் நான் மேலதிக வகுப்பு செய்வது பணத்திற்காக அல்ல என்று.
சிலர் விதிவிலக்காக இருந்தாலும் பலரின் நோக்கமே பணம்தான்.
இங்கு நான் சொல்லவருவது,
அரசாங்கம் விடுமுறை தரும் நோக்கத்தையும் , நோன்பின் மகிமையையும் கருத்திற்கொண்டு ரமழான் மாதத்தில் மாணவர்களை நண்மை செய்யத்தூண்டுவதோடு நீங்களும் நண்மையின் பக்கம் விரையுங்கள்.
அல்லாத பட்சத்தில் ரமழான் மாதத்தை பாழாக்கிய பாவத்திற்கு நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மறுமையில் பதில் கூறவேண்டிய நிலை ஏற்படும்.
நானும் ஒரு ஆசிரியனாக கடந்த ஓராண்டாக தொழில் புரிபவன் என்ற வகையில் இவ்வாறான காசுக்காக நோன்பு காலம் வரையரையின்றி டியூசன் கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படி டியூசன் வைக்காட்டி சிலபஸ் முடிக்க முடியாது என்று இவ்வாறான ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானது.
சரி என்றாலும் அதை free யாக செய்யலாமே.
அடுத்து சில ஆசிரியர்கள் ஒரு மணித்தியாலம் கிளாஸ் வைத்தா அதில் முக்கால் மணிநேரம் சும்மா கதையளந்தே நேரத்தை வீணாக்குவது. அவங்கட அருமை பெருமை அடுத்தவன்ட லொட்டு லுசுக்ககுகள் பற்றியே கதைப்பது.
இதில் டபுள் மீனிங் கத வேற.
ஆண் + பெண் பிள்ளைகளை ஒன்றாக ஒரே வகுப்பில் வைத்திருந்து அவர்களுக்குள் சபலத்தை தூண்டுவது.
எனவே நோன்பு காலம் காசு தேவைப்பட்டா கேட்டு வாங்கலாம்.
இப்படி டியூஷன் வைத்து சீரழிக்க வேண்டாம பணிவாய் வேண்டுகிறேன்.