السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday 3 July 2016

ஜும்ஆவும் சும்மாவும்! முஸ்லிம்களின் கவலை!

ஜும்ஆவும் சும்மாவும்! முஸ்லிம்களின் கவலை!

அன்று ஞானிகளும், ஸாலிஹீன்களும் குத்பா மிம்பர்களில் ஏறியதால் ஜும்மா ஜும்மாவாக இருந்தது. 
ஆனால் இன்று சக்கைகளும், சருகுகளும், சாணிகளும் மிம்பரில் ஏறியதால் ஜும்மா சும்மா ஆகிவிட்டது.
.
அன்று அரை ஈமானோடு ஜும்மாவுக்கு போனவர்கள் உபதேசங்களை கேட்டு விட்டு முழு ஈமானோடு திரும்பி வந்தார்கள்.
.
ஆனால் இன்று அரை ஈமானோடு போனவர்கள் இருந்ததையும் பறிகொடுத்து விட்டு வெறுமனே திரும்பி வருகிறார்கள்.
.
வழிகேடர்கள், சக்கைகள், சருகுகள், சாணிகள், பிரிவினைவாதிகள், குழப்பவாதிகள் போன்றவர்கள் தௌஹீத்வாதி என்ற பெயரில் வந்தாலும் அல்லது ஷாபி என்ற பெயரில் வந்தாலும் அல்லாஹ் எமது உள்ளங்களில் போலிகளை அறியும் உணர்வை தந்து எமது ஈமானை பாதுகாப்பானாக! ஆமீன்.
.
ஏனெனில், இன்று முக்கா வஹாபிகளும் ஷாபி, ஹனபி என்ற பெயரில் மிம்பரில் ஏறி வஹாபிஸ கொள்கைகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
.
அதுமட்டுமல்ல சிலர் ஸுன்னத் ஜமாஅத் மதரஸாக்களில் ஓதிவிட்டு, தங்களின் பெயருக்கு பின்னாடி ஸுபி என்று போட்டுக்கொண்டு ஸுபியாக்கள் போதித்த இறைஞானத்தை, இறைஞான கருத்துக்களை காலால் உதைத்து தள்ளி விட்டு, இறைஞானத்தை போதிக்கும் அஹ்லுல் பைத்துக்கள், ஷெய்க்குமார்களை காபிர், முர்த்தத் என்று மிம்பரில் ஏறி பத்வா கொடுத்துக்கொண்டு திரிகிறார்கள் ஒரு சில கயவர்கள். இவர்களிடமும் மிக விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
.
முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்திலுள்ள நல்லவர்களும் மரணித்து விடுவார்கள். இப்படியே படிப்படியாக “ஸாலிஹீன்“ நல்லவர்கள் சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகள் போன்ற அல்லது பேரீத்தம் பழச் சக்கைகள் போன்ற குப்பைகள்தான் எஞ்சியிருப்பர். ஆனால் அல்லாஹ்“ அவர்களை கணக்கெடுக்கவே மாட்டான்.
.
ஸஹிஹுல் புகாரி.


www.Mailofislam