
ஏறாவூர் நகரசபை நிருவாகத்தினரால் மேலதிக நேர #வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்.....
கல்வி அமைச்சின் பாடசாலை நாட்காட்டிக்கமைவாக எதிர்வரும் 29.11.2019 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டு 2020 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 2020.01.02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.இதனடிப்படையில் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 2019.11.30 ஆம் திகதி முதல் 2019.12.31ஆம் திகதி வரை எமது நகரசபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்கள், வீடுகளில் நடத்தப்படும் மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் மேலதிக ஆங்கிலப் பாட வகுப்புக்கள் அனைத்தினையும் மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது...
மேலும் 2020 ஆம் ஆண்டு வீடுகளில் தனியார் மேலதிக நேர வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் ஏறாவூர் நகரசபையில் முன்பதிவு செய்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
இவ்விடயத்தில் தத்தமது வீடுகளில் மேலதிக நேர வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்விடயத்தில் தத்தமது வீடுகளில் மேலதிக நேர வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இவ்வறிவுறுத்தலை மீறி செயற்படுவதனால் ஏற்படும் சட்ட ரீதியான சிக்கல்களை தவிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ...
இவ்வண்ணம்
நிருவாகம்
ஏறாவூர் நகரசபை
நிருவாகம்
ஏறாவூர் நகரசபை