السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 13 June 2024

பெருமானாரின் பாட்டனாரின் கப்ர்

 

இது காஸாவில் அடக்கங்கப்பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முப்-பாட்டனார் ஹாஷிம் இப்னு அப்துல் மனாஃப் அவர்களின் ஸியாரத்தின் பழைய புகைப்படம் இது. 


வியாபார நிமித்தமாக ஷாம் நகருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் காலமானார். தன்னோடிருக்கும் யாரையும் பட்டினியில் தூங்க விடாமாட்டார்கள், தேவைப்படுபவர்களின் கடனை தேடிச் சென்று அடைத்து விடுவார்கள். அல் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளபடி - குளிர்காலம் மற்றும் கோடை காலத்தில் யமன் மற்றும் ஷாம் ஆகிய நாடுகளுக்கு வணிகம் செய்ய சென்ற முதல் குறைஷியும் இவர்களே ஆவார்கள். 


பெருமானார் ﷺ அவர்கள் தனது ஆண் குழந்தைகளை இழந்தபோது, ​​மக்காவின் காஃபிர்கள் சிரித்துக்கொண்டே அவர்களை கேலி செய்ய முயன்றனர். தனது பெயரைக் கட்டிக்காக்க இந்த நபிக்கு ஆண் குழந்தைகள் இல்லையே என்று அவர்கள் சொன்னார்கள். இன்று, பெருமானார் ﷺ அவர்களின் குடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் ஹிஜாஸில் தனியாக மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தபோது, ​​மக்கள் யாரும் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்று சிரித்தார்கள். இன்று அவருக்கு உலகம் முழுவதும் 1.7 பில்லியன் மக்கள் அவர்களைப் பின் தொடர்பவர்களாக உள்ளனர். 

அன்றைய மக்கத்து மக்கள் அவர்களை முஹம்மது (ﷺ) என்று அழைக்க மறுத்து அவருடைய அந்தஸ்தை ஏற்க விரும்பாமல் அவர்களை இழிவுபடுத்த முயன்றனர். இன்று, அவர்களை தெரியாது யாரும் இல்லை, அவர்களுடைய அருள் நிறைந்த முஹம்மது எனும் திரு நாமம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பெயராக அல்லாஹ் சிறப்பாக்கி வைதாதுள்ளான்.


பெருமானார் ﷺ அவர்களுக்கு எதிராக மக்கள் போர் தொடுத்து இஸ்லாத்தை அழிக்க முற்பட்ட போது அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை அளித்து உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக அவர்களது தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை ஆக்கினான். 


வெறுப்பவர்கள், நயவஞ்சகர்கள், சந்தேகம் கொள்பவர்கள் மற்றும் நோயுற்ற இதயங்களைக் கொண்ட மக்கள் வாழ்வார்கள், இறப்பார்கள், மறக்கப்படுவார்கள், ஆனால் நமது தலைவர் அகிலத்தின் முதல் ஒளி, மறுவிலாதெழுந்த முழுமதி நபிகள் கோமான் முஹம்மது ﷺ அவர்களின் பெயர், அவர்களது நினைவு, அவர்களது அன்பர்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள், அவர்களது மார்க்கம், அவர்களுடைய போதனைகள் மற்றும் அவர்களது பதவி உலக முடிவு நாள் வரை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.  


'பெருமானார் ﷺ அவர்களை எதிர்ப்பவர்களுக்கு, பரிகாசம் செய்பவர்களுக்கு அவமானம் விதியாக்கப்பட்டுள்ளது.'