காஸாவின் வைத்தியசாலையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி டொக்டர் அபூ நஜீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். காஸாவைச் சேர்ந்த முஹம்மத் பவ்தா என்ற மனிதர் தான் வாழ்ந்த பகுதியில் குண்டு வீச்சின் காரணமாக தனது வலது கையையும், காலையும் இழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் . முஹம்மத் பவ்தாவை நோக்கும் போது, அவர் தான் எதிர்கொண்டிருந்த பயங்கரமான நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளையை பொருந்திக் கொண்டவர்களாக மிகப் பொறுமையுடன், அல்லாஹ்வுக்கு முழுமையாக நன்றி செலுத்திய நிலையில் இருந்ததாக டொக்டர் அபூ நஜீ அவர்கள் கூறினார்.
சில நேரங்களில் பின்னர் காஸாவைச் சேர்ந்த ஒரு மனிதர் வைத்தியசாலைக்கு வந்து, இங்கு முஹம்மத் பவ்தா என்று ஒருவர் இருக்கிறாரா ? நீங்கள் முஹம்மத் பவ்தாவா ? உங்களுக்கு முஹம்மத் பவ்தாவை தெரியுமா? என்று விசாரித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தார். இறுதியாக அவர் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு வந்து அங்கு டொக்டரிடம் இங்கு முஹம்மத் பவ்தா என்று ஒருவர் இருக்கிறாரா ? என்று கேட்டார். அதற்கு டொக்டர் ஆம் என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர் நான் அவருடன் பேசவேண்டும் என்று கூறினார். பின்னர், அந்த மனிதர் முஹம்மத் பவ்தா இருந்த இடத்தை அடைந்ததும், அவரிடம் "நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. உங்களை நான் இதற்கு முன்னர் கண்டதோ, சந்தித்ததோ இல்லை. ஆனால், நேற்று இரவு நான் கனவில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்டேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள், இந்த வைத்தியசாலைக்கு சென்று, உங்களை தேடி, உங்களிடம்
" அல்லாஹ்வும், அவனது தூதரும் ﷺ நீங்கள் பொறுமையுடன் அல்லாஹ்வின் கட்டளையை பொருந்திக் கொண்டதன் காரணமாக, உங்களை பற்றி சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைவதாக கூறும்படி எனக்கு ஏவினார்கள் " என்று கூறினார். காஸாவின் மக்களே உண்மையான கெளரவமான மக்கள் ஆவர்.
யா ரஸூலுல்லாஹ், நீங்கள் எமது உயிரை விடவும் எமக்கு நெருக்கமாக இருக்கின்றீர்கள். நீங்கள் எங்களுக்காக உங்கள் நாயனிடம் பரிந்துரை செய்யும்படி உங்களிடம் கேட்கின்றோம்🤲...
செய்க் முஹம்மத் அஸ்லம் Shaykh Mohammed Aslam அவர்களின் முகப்புத்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆக்கத்தின் தமிழாக்கம்
இர்பான் fb