இமாம் நபீய் இப்னு அபூ நுஅய்ம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மதீனாவில் 70 வருடங்கள் இமாமாக இருந்தார்கள். மதீனாவின் பிரபல காரியாக இருந்த இவர்கள் மாலிக்கி மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் மாலிக் இப்னு அனஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆசிரியர் ஆவார். இமாம் நபீய் அவர்கள் புனித அல்- குர்ஆனை ஓதும் போதும், பேசும் போதும் அவர்களின் வாயில் இருந்து கஸ்தூரி வாடை வீசிக்கொண்டிருந்தது. நீங்கள் ஓதும் போதும், பேசும் போதும் ஏன் உங்கள் வாயிலிருந்து கஸ்தூரி வாடை வீசுகின்றது. நீங்கள் மக்கள் மத்தியில் ஓதும்போது ஏதாவது நறுமண பூச்சுகளை பாவிக்கின்றீர்களா என இமாம் நபீய் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாம் நபீய் அவர்கள், " நான் நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஒருமுறை கனவில் கண்டேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் என் வாயின் மீது ஓதினார்கள். அந்த நொடி முதல் எனது வாயில் இருந்து கஸ்தூரி வாடை வீசுகின்றது" என இமாம் நபீய் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் ஸுப்ஹானவத்தஆலா எமக்கும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கனவில் பார்க்கும் பாக்கியத்தை வழங்குவானாக, ஆமீன்..!