கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
இஹ்ஸான் என்பதும், இக்லாஸ் என்பதும் ஒத்தகருத்துள்ள சொல்! மனதில் அல்லாஹ் அல்லாதவற்றிற்கு இடம் கொடுக்காமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடிச் செய்யும் செயலை இக்லாஸ் எனப்படும்;
மக்களின் பாராட்டால் மனம் உவகையடையாமல் தூற்றலால் சோர்வடையாமல் இரண்டையும் சமனாகக் கருதும் போது இஹ்ஸான் வரும்;
இஹ்ஸானைக் கெடுப்பது முகஸ்த்துதி! இது
மக்களின் கண்ணியத்தாலும், பாராட்டாலும்தான் வருகிறது.
ஆகவே, இதை இல்லாதொழிக்க அனைத்தும் அல்லாஹ்வின் செயல் என்று கருதி அதை நமது மனதிலிருந்து வேரோடு பிடுங்கி வீசி விடவேண்டும்.
படைப்புக்கு சக்தி உண்டு என்று நம்பும் வரை மனதில் முகஸ்துதி வருவதைத் தடுக்க முடியாது!
ஆகவே,
நமது செயலை அல்லாஹுத்த ஆலா பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை ஆழமாக மனதில் பதித்து அதை சதா நினைவில் பதிக்க வேண்டும்.
நமது மனம் அல்லாஹ்வின் அருள் இறங்கும் இடம்; அவன் காட்சி வெளியாகும் இடம்; ஆகவே அல்லாஹ் அல்லாத வேற்று எண்ணம் என்ற நஜீஸை விட்டும் மனம் பரிசுத்தமாகும் போது இஹ்ஸான் தானே மலரும்.
ஷரீஅத்தின் சட்டங்களைப் பின்பற்றுவதில் இஸ்திகாமத் இருக்க வேண்டும், இஸ்திகாமத் என்பது அல்லாஹ்வுக்காக மன உறுதியோடு செய்வதையும் தனது சந்தோஷங்களையும், விருப்பங்களையும் அல்லாஹ்வுக்காக அற்பணிப்பதையும் குறிக்கும்;
ஆக, முதலில் இஸ்திகாமத் இருக்கவேண்டும், இதிலிருந்துதான் இஹ்ஸான் வளர்கிறது.