29/09/2024 இன்று பொலன்னறுவையின் எல்லைக்கிராமமான பள்ளித்திடல் முர்த்தலிய்யா அஹதிய்யா பாடசாலை மாணவர்களின் மீலாதுன் நபி விழா நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது... அல் ஹம்துலில்லாஹ்!
இந் நிகழ்விற்கு மத்திய சம்மேளனத்தின் உப தலைவர் அல் ஹாஜ் அஸ்வர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள். மேலும் பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ் ஷெய்க்-M M அலாவுதீன் பலாஹி அவர்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் NMA மஜீத் சேர், உப தலைவர் ஓய்வுபெற்ற மௌலவி ஆசிரியர் அஷ் ஷெய்க்- ACM ஜௌபர் ஷர்க்கி, பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் NM முகைதீன் பாவா சேர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மிகவும் அழகான முறையில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர், அழகான பேச்சு,கவிதை , பாடல்கள் , உரையாடல்கள் என அனைத்து நிறைவாக இருந்தது... மூன்று அஹதிய்யா ஆசிரியர்களே இருந்தாலும் வெளி நாடுகளில் வாழும் உறவுகளின் உதவியோடு அனைத்தும் சிறப்புற அமைந்திருந்தது.
கிராம முன்னேற்ற கழகம் மற்றும் பள்ளிவாயல் நிருவாகங்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இன்ஷா அல்லாஹ் உங்களின் இந்த முயற்சிகள் மூலம் ஒரு பிள்ளை நண்மை அடைந்தாலும் அந்த நண்மை உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பக்கபலமாக பறகத்தாக அமையும்.
அனைவருக்கும் ஜஸாக்கமுல்லாஹு ஹைரன்!!!