السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 6 December 2024

4 பறவைகள் பற்றி

 

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இன்றைய (06/12/24) ஃகுத்பாவிலிருந்து:


ஃகதீப்: அல் உஸ்தாத் அல் ஆலிம் அஹ்மத் (மஹ்ழரி) [அதிபர்- அஜ்வாத் அல் ஃபாஸி அரபுக்கல்லூரி, கொழும்பு 12/ பிரதம இமாம்- உம்மு ஸவாயா, கொழும்பு 12/ பிரதம ஃகதீப்- கொழும்பு பெரிய பள்ளிவாசல்]


தொகுப்பு: அஸீம் ழாஹிர், கொழும்பு.

****************************************************


"ஃகலீலுழ்ழாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் நிறைய படிப்பினைகளும், முன்மாதிகளும் உள்ளன" என்று குர்ஆனும், ஹதீஸ்களும் பல இடங்களில் பிரஸ்தாபிக்கின்றன.


"இந்த தீனுல் இஸ்லாம் கூட உங்கள் தந்தையாகிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டவர்" என்று அழ்ழாஹ் குர்ஆனில் கூறுகிறான். ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், "எனது தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்" என்று பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்துள்ளார்கள். மிஃராஜில் ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வானத்தையும் கடந்து செல்லும்போது சந்தித்த அன்பியாக்கள், ரஸுல்மார்கள், "நல்ல நபியே, நல்ல மனிதரே வருக!" என்று அழைக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும்தான், "நல்ல நபியே, நல்ல மகனே வருக!" என்று வரவேற்றார்கள்.


ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினராகிய நாம் செய்யக்கூடிய மீசையைக் கத்தரித்தல், தாடியை வளர்த்தல், மறைவிட முடிகளை அகற்றுதல், நகங்களை வெட்டுதல், ஃகத்னா செய்தல் யாவும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காட்டித்தந்த சுத்தங்களில் உள்ளதாகும்.


மௌத்தானவர்களை/வைகளை மீளுயிர்ப்பிக்கும் அழ்ழாஹ்வின் அதி சக்திவாய்ந்த ஆற்றலை நேரடியாகக் கண்டு உள்ளம் நிம்மதி, அமைதி பெற விரும்பினார்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அழ்ழாஹ், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சில விடயங்களை செய்யுமாறுக் கட்டைளையிட்டான்.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 

முதலில் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை அறுத்துப் பல துண்டுகளாக்கினார்கள். அவற்றின் இறக்கைகளைப் பிய்த்துப் பல பாகங்களாகக் கிழித்தார்கள். பின்னர் நான்கு பறவைகளின் கூறுகளையும் ஒன்றாகக் கலந்தார்கள். அதன்பின் அவற்றைப் பல கூறுகளாகப் பிரித்து ஒவ்வொரு கூறையும் ஒவ்வொரு மலையில் வைத்தார்கள்.


பின்னர் அழ்ழாஹ்வின் கட்டளைப்படி அவற்றை அழைத்துவிட்டு அவை எப்படி உயிர் பெற்று வருகின்றன என்பதை பார்க்கலானார்கள். உடனே அப்பறவைகளின் இறக்கை, இரத்தம், சதை உள்ளிட்ட பாகங்கள் வேறு மலையிலிருந்த அவற்றின் மற்றப் பாகங்களை நோக்கிப் பறந்துச் சென்று, அவற்றுடன் இணைந்துக் கொண்டன. இறுதியில் ஒவ்வொரு பறவையும் உயிர் பெற்றுத் தனித்தனியாக அவர்களிடம் நடந்து வந்தன.


அந்த நான்கு பறவைகள் எவை என்பது தொடர்பாக முஃபஸ்ஸிரீன்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. சில முஃபஸ்ஸிரீன்கள் "மயில், கழுகு, சேவல், காகம் ஆகிய நான்கும்தான் அந்த பறவைகள் என்று எழுதி விட்டு அந்த நான்கு பறவைகளிடம் உள்ள நல்ல குணங்களை மனிதர்களாகிய நாம் எடுத்து நடப்பதுடன் அவைகளிடம் உள்ள கெட்ட குணங்களை நாம் தவிர்ந்த நடக்க வேண்டும் என்பதையே அழ்ழாஹ் சூட்சுமமாக தெளிவுபடுத்துகிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


நல்ல குணங்கள்:

மயில்- பத்தினித்தனம், நல்லதை உண்ணுதல்

கழுகு- கவலை, நேசித்தல்

சேவல்- அதிகாலையில் எழுப்(ம்)புதல்

காகம்- கூட்டாக உண்ணுதல், மரணத்தில் கலந்துக் கொள்ளுதல்.


கெட்ட குணங்கள்:

மயில்- பெருமை, மேலெண்ணம்

கழுகு- கர்வம், அநியாயத்தை விரும்புதல்

சேவல்- இச்சை, சண்டையை விரும்புதல்

காகம்- அசுத்தமானவைகளை உண்ணல், அசுத்தம் செய்தல் 


மேற் சொல்லப்பட்ட இரு வகையான குணங்களையும் சம காலத்து முஸ்லிம் உம்மத்தின் வாழ்வுடன் தொடர்புப்படுத்தி ஃகுத்பாவை அழகாகக் கொண்டுச் சென்ற ஃகதீபின் திறமை பாராட்டுக்குரியது! சிறப்பாகத் தொகுக்கப்பட்ட ஃகுத்பாவை, கம்பீரமான பேச்சு, நல்ல குரல்வளம், அழகான தமிழ் உச்சரிப்புகளுடன், நேர முகாமைத்துவத்தையும் பேணி நிகழ்த்திய அல் உஸ்தாத் அல் ஆலிம் அஹ்மத் (மஹ்ழரி) ஹஸ்ரத் அவர்களின் அறிவிலும் ஆயுளிலும் அழ்ழாஹ் பரக்கத் செய்யட்டும்!

Wednesday, 4 December 2024

முதலாவது பிரசங்கம்

 



முதலாவது பிரசங்கம்


ஹிஜ்ரீ 545 ஆம் வருடம் ஷவ்வால் மாதம் பிறை 2-ல் ரூபாத் என்னுமிடத்தில் கௌதுல் அஃலம் அவர்கள் செய்த உபந்நியாசம்.


(இறைவன் ஏற்படுத்திய 'விதி'யை பொருந்திக் கொள் வது சாலச்சிறந்தது. அல்லாஹ் விதித்த விதியின் மீது கேள் விக்கணை தொடுப்பது மார்க்கக் கொலையாகும்; தௌஹீதை மரணிக்கச் செய்வதாகும்; இக்லாஸை அழித்தொழிப்ப தாகும். மூமினின் உள்ளமோ ஏன், எதற்கு, என்ற கேள்வியைக் கேட்பதில்லை. அதன் கொள்கையோ "கட்ட ளைக்கு மனப்பூர்வமாகப் பணிவதும், அந்தராத்மாவு (நப்ஸு) க்கு மாறு செய்வதுமேயாகும்''.) ஏனெனில் நப்ஸு எனப்படுவது அது உச்சி முதல் உள்ளங்கால் வரை தீமை நிறைந்தது; அதைச் சீர்திருத்த விரும்புபவர் அதனுடன் போராடி அதன் தீமையை விட்டும் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் போராடி வெற்றி காணும்போது கீழ்க்காணும்படி நீ புரிந்து கொள்வாய். அது உச்சி தொடுத்து உள்ளங்கால்வரை நலமானது; உன் வழிபாட்டில் உன்னோடு அது ஒத்துழைக்கும். பாவத்தை விட்டு விடுவதிலே உன் நண்பனாகும்.அப்போது "முக்திபெற்ற ஆத்மாவே! மனத் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நீ உனது இறைவனிடம் மீளுவாயாக என்று ஓர் அசரீரி வாக்கு வரும். இப்பொழுது அதனின் அபிலாசைகள் யாவும் நிறைவேற்றிக் கொடுக்கப் படும், அதன் தீமைகள் நீங்கிவிடும். படைப்புப் பொருள் களில் ஏதாவதொன்றோடு மட்டும் அது தொடர்பு கொண் வரையறைக்குட்படாமல் எல்லாப் பொருள்களும் அதனோ தொடர்புக் கொண்டு நப்ஸோடு இணைந்தவைகளாகி விடு கின்றன. அதனால் தான் அதை இப்ராஹீம் நபியவர்களின் பக்கம் இணைப்பதும் பொருத்தமாகும். அவர்கள் நப்ஸின் ஆட்சி அதிகாரத்தை விட்டும் நீங்கியவர்கள். மனோயிச்சை யின் அடிமைத்தளைகளை விட்டும் உரிமை பெற்றவர்கள். அதனால் தான் அவர்கள் உள்ளம் அமைதி பெற்றது. எல்லோரும் அவர்களுக்கு பணியத் துணிந்ததோடு உத விக்கும் முன்வந்தார்கள். அவர்களது உதவியை ஏற்றுக் கொள்ளாது நீங்கள் உங்களுக்காக உங்களது இறைவ னிடம் உதவி தேடிக் கொள்ளுங்கள்; என் இறைவன் என் நிலையை அறிந்தே இருக்கிறான். நான் யாரிடமும் உதவி கோரவேண்டிய தேவை என்ன இருக்கிறது?" என்று கூறி விட்டார்கள். அவர்களது நம்பிக்கை (தவக்கல்) சரியான உறுதி வாய்ந்தது என்று ஆனபோது பின்வருமாறு கூறப் பட்டது. "நெருப்பே இப்ராஹீம் மீது குளிர்ந்து அவரது ஆரோக்கியத்திற்கு காரணமாய் அமைந்துவிடு." பொறுமையாளர்களுக்கு இவ்வுலகிலும் அல்லாஹ்வின் உதவி அளவற்றதாயிருக்கிறது; அவ்வுலகிலும் அவனது அருள் எல்லையற்றதாயிருக்கிறது. இறைவன் கூறுகிறான்:- நான்


பொறுமையாளர்களுக்கு அளவற்ற நற்கூலி வழங்குவேன்.


அதற்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்பவர்கள் எத் தகைய சிரமங்களைச் சகித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பது அல்லாஹ்வுக்கு தெரியாத விஷயமல்ல. ஒரு வினாடியேனும் நீங்கள் அச்சிரமங்களின் மீது பொறுமை செய்தால் பல்லாண்டு காலம் அவனின் அன்புக்கும் அருளுக்கும் அருகதையுடையவர்களாவீர்கள். ஒரு மணி நேரம் பொறுமை கொள்வதும் வீரத்தன்மையாகும். அல்லாஹ் பொறுமையாளர்களுடனே யிருக்கிறான். அதாவது அவன் உதவியும் ஈடேற்றம் அளிப்பதும் அவர்கள் பக்கமே இருக் கின்றன.


நீங்கள் அவனோடு பொறுமைகொள்ளுங்கள். அதற்கு காக விழிப்புணர்ச்சியடையுங்கள்; அதில் அசட்டை செய்யா தீர்கள். மரணத்தின்பின் விழிப்புணர்ச்சி பெற நினையாதீர் கள். அந்நேரம் விழிப்புணர்ச்சி அடைவது யாதொரு பய னும் தராது. மௌத்து வருவதற்கு முன்னாலேயே உஷா ராகிவிடுங்கள்; உங்களின் இஷ்டமில்லாமலே உணர்வு கொடுத்து எழுப்பு முன்பே விழிப்புணர்ச்சி பெற்றுவிடுங்கள். அந்நேரம் கைசேதப்படுவீர்கள். அங்கே உங்கள் கைசேதம் யாதொரு பிரயோஜனத்தையும் தராது. உள்ளங்களைச் சீர்திருத்துங்கள். அவைகள் சீர்திருந்தி விட்டால் எல்லாமே சீர்திருந்திவிடும். அதனால்தான் நபிகள் (ஸல்) திருவுள மானார்கள் : ஆதமுடைய மகனின் சரீரத்துள்ளே ஒரு சதைக் கட்டி உண்டு. அது சரிப்பட்டால் உடல் முழுவதும் சரிப்பட்டு விடும். அது கெட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும். அது தான் ஹிருதயம். ஹிருதயம் பயபக்தியால் சீர்திருந்துகிறது, அல்லாஹ்வின் பேரில் நம்பிக்கையாலும் தௌஹீதில் நிலையாக தரிப்பட்டிருப்பதாலும் சீர்திருத்தம் பெறுகிறது. மேலும் நல்ல அமல்களாலும் இக்லாஸாலும் சீரடைகிறது. மனம் கெட்டு விடுவது எவ்வாறு? இத்தன்மை களை இழந்துவிடுவதால்தான்.


மனம் என்பது ஒரு பறவை; சிப்பிக்குள் மறைத்து வைத்திருப்பது போன்றும், செல்வத்தைக் கஜானா விற்குள் பூட்டி வைத்திருப்பது போன்றும் மனப்பறவையை உடல் என்ற பஞ்சாரத்தில் கைதியாக்கப்பட்டது என்றால், கவனம் பறவையின் மீது இருக்கவேண்டுமே தவிர பஞ்சா ரத்தில் இருக்கக் கூடாது. கவனம் முத்தின் மீது இருக்க வேண்டுமே தவிர சிப்பியில் இருக்கக் கூடாது. கவனம் செல்வத்தின் மீது இருக்கவேண்டுமே தவிர கஜானாவின் பலகைக் கதவுகளில் அல்ல. (நம் கவனத்தை மனப்பறவை யில் செலுத்த அல்லாஹ் நல்லருள் புரிவானாக.ஓ இறைவா!) எங்கள் உடல் உறுப்புக்களை உன் வழிபாட்டில் திருப்பு


வாயாக, எங்கள் ஜீவிய காலமெல்லாம் எங்கள் உள்ளங் களில் மெய்ஞ்ஞானத்தை நிரப்பி அருள்புரிவாயாக, நல்லோர் வழிநடத்தி, நாங்களும் அவர்கள் அடைந்த நற்பாக்கியங் களை அடைய அன்றுபோல் என்றும் துணையிருப்பாய். அல்லாஹ்வே!


சமுதாயத்தவர்களே! முற்கால ஸாலிஹான மனிதர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்காக ஆகிவிட்டதைப் போன்று நீங்களும் அல்லாஹ்வுக்காக ஆகிவிடுங்கள். அவன் அவர் களுக்கு ஆகியிருந்ததைப்போல் முற்றிலும் அவன் உங்களுக் காக ஆகிவிடுவான். இறைவன் உங்களுக்காக ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவனுக்கு இபாதத் செய்வதிலே ஈடுபடுங்கள். அவன் கொடுத்த சிரமங்களைச் சகித்துக்கொண்டு, அவன் செயல்களை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அச்செயல்கள் உங்களுக்கோ அல்லது மாற்றா ருக்கோ வேதனையும் சோதனையுமாக இருந்தாலும் சரியே.


இந்த ஸாலிஹான சமூகத்தினர் யார் என்றால் அவர்கள் உலகப்பற்றற்றவர்கள். தங்கள் தலைவிதியை தக்வா (பய பக்தி) பரிசுத்த தன்மையால் கைவசமாக்கியவர்கள்; பின்னர் மறுஉலக வாழ்வை நாடினார்கள். அதாவது அதை ஒழுங்கு படுத்த நற்செயல்கள் புரிந்தார்கள். மனோயிச்சைக்கு மாறு செய்து தங்கள் இரக்ஷகனுக்கு வழிபட்டார்கள். தங்களைத் திருத்தியபின் பிறரைச் சீர்திருத்தத் தயாரானார்கள்.


அருமை மகனே! முதலில் உன்னைத் திருத்திக்கொள். பின்பு பிறரைத் திருத்த தயாராகிக்கொள். உன் குணங்கள் மற்றவர் குணங்களைக் கெடுத்துவிடாதவாறு எச்சரிக்கையா யிருந்துகொள் உன்னைச் சீர்படுத்திக்கொள்ளாதவரை அவைகள் உன்னிடமே இருக்கட்டும். நீ குருடனாகயிருந்து கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்று எண்ணுகிறாயே, அது மிகவும் கைசேதமான விஷயம். குரு டன் மற்றவர்களுக்கு எப்படி நேர்வழிகாட்ட இயலும்? பாதை காட்டுபவன் கண்பார்வையுடையவனாக இருப்பது அவசியம்.

கடலில் மூழ்குபவர்களைக் காப்பாற்றும் பணி கரைசேர்க்க பயிற்சி பெற்ற நிபுணனையே சாரும். உலகப்பற்றைத் துறக்கச் செய்து மக்கள் மனதை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவது யார் வேலை? ஆரிப் வலிய்யுல்லாக்களின் வேலை ஞானமற்ற பாமரன் எப்படி வழிகாட்டியாக முடியும் அல்லாஹ்வின் பக்கம் உன்னைத் திருப்புவதற்கு அதிகமாகச் சொல்லவேண்டிய தேவையுமில்லை. நீ எப்பொழுது அவனை முஹப்பத் வைக்கிறாயோ அவனல்லாதவனைத் தவிர்த்து அவனுக்காக அமல் செய்வதவசியம். அவனையே பயப்பட வேண்டும். அவனல்லாதவனுக்கு அஞ்சக்கூடாது. இவ்விஷ யம் மனதால் ஏற்படக் கூடிய நாவன்மை, சொல்லாற்றலால் அல்ல. இவ்விஷயம் ஒன்றாகும் தனிமையால் உண்டாகும். பொது மேடையில் அல்ல. தௌஹீது உள்ளத்தின் கதவரு கில் நின்றுவிட்டு ஷிர்க்கு உள்ளத்தின் உள்ளே நுழைந்து விடும்போது இதுவே முற்றிலும் நிபாக் என்பதை ஞாபகத் தில் வைத்துக்கொள். உன் வாயில் துதிப்பாடலும் உள்ளத் தில் கபடமும், நாவு நன்றி நன்றி என்றுரைக்க இதயத்தில் நன்றி மறந்த திருடனுக்கு இடமளிப்பதும் (உன்மீது) வருந் தத் தக்க விஷயமாகும். ஹதீதே குதுஸியில் இறைவன் கூறு கிறான்: ஆதத்தின் மகனே! உன்பக்கம் என் நன்மைகள் இறங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் உன்னுடைய தீமை -கள் மேல் நோக்கி என் பக்கம் வருகிறது.


நீ அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவன் என்று சொல்லிக் கொண்டு மற்றவைகளை வணங்குவதற்கு தலைசாய்க் -கிறாயே அது வருந்தத்தக்க விஷயம். நீ உண்மையில் அவனு டைய அடியானாகவிருந்தால் உன்னுடைய விருப்பு வெறுப் பான எல்லாச் செயல்களின் அஸ்திவாரமும் அவனுடைய வழிபாட்டில் அமைந்திருக்கவேண்டும். நேர்மையான மூமினான மனிதன் தனது சாவாத்மாவான கெட்ட ஷைத்தா னுக்கு ஒருபோதும் வழிபடமாட்டான். அவன் அந்த ஷைத் தானையே தன் வழிக்குக்கொண்டு வந்து விடுகிறான். அவன் உலகத்தின் கண் இழிவடைந்தவனாக ஆகமாட்டான்.

அவன் உலகை தன் முன் மண்டியிடச் செய்துவிடுகிறான். அவன் துன்யாவின் மூலம் ஆகிரத்தை தேடக்கூடியவன கிறான். ஆகிரம் கிடைத்துவிடும்போது துன்யாவைவிட்ட விடுகிறான். அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியான தன் இறைவனைச் சந்திக்கும் ஆசையுடையவனாயிருக்கிறான். அவன் எந்த நேரமும் கலப்பற்ற உள்ளத்தோடு அவனுடைய இபாதத்தில் மூழ்கிக் கிடக்கிறான்: அவன் தனது எஜமான னின் "வமாஉமிரூ இல்லா லி யஃபுதுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ஹுனபாஅ 98-5 என்ற சொல்லில் கவனம் செலுத்துகிறான். தர்ஜுமா (பொருள்) அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டது இதுதான்; கலப்பற்ற உள்ளத்தோடு அவனுடைய இபாதத்தில் ஓர்மையுடன் முழுக்கவனம் செலுத்தவேண்டும். அல்லாஹ்வுடன் படை பொருள்களை இணைவைப்பதை விட்டுவிடவேண்டும். அனைத்து வகை யும் படைத்தாளும் சர்வ வல்லமையுள்ள நாயனுக்கு மட்டுமே தலைவணங்க வேண்டும். அவன் கைவசமே சர்வ வஸ்த்துக் களும் இருக்கின்றன. அவ்வாறிருக்க மற்றவர்களிடத்தில் பொருள் வேண்டுபவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய். அந்த உண்மை எஜமானனின் கஜானாவில் இல்லாத பொருள் எந்தப்பொருள்? அவனே கூறுகிறான்: "வ இ(ன்)ம்மின் ஷையின் இல்லா இந்தனா கஜாயினுஹு" 15-21 நம்முடைய கருவூலத்தில் கிடைக்காத பொருளே கிடையாது.


குழந்தைகளே! நீர் விழுந்தும் பின் நிழலை வாசஸ்தல மாக்கிக் கொள்ளுங்கள். பொறுமையை தலையணையாக்கிக் கொள்ளுங்கள்.தலைவிதிப்படி நடப்பதை கழுத்துமாலை யாக்கிக் கொள்ளுங்கள். ரஹ்மத்தைக் கவர்ந்திழுக்கும் கருத்தோடு இபாதத் செய்துகொண்டே செல்லுங்கள். இந் நிலை நீடிக்கும்போது விதிவசம் என்ற வானிலிருந்து உன் நம்பிக்கை என்ற நஞ்சையில் அருள் மாரி பொழிந்தருள ஆரம்பிக்கும்.


சமுதாயத்தவர்களே! தலைவிதியை நம்புங்கள்: அந்த நம்பிக்கையில் அப்துல் காதிர் (ஜீலானி) உடன் ஒத்துழைப்பு நல்குங்கள். அந்த ஒத்துழைப்பே அப்துல் காதிரை இறை வனுடன் சந்திக்கவைக்கும். மனிதர்களே! இறைவன். கட்டளைக்கு அடிபணியுங்கள். உங்களின் புற அக இரகசியங் களை அவன் நாட்டத்தின் முன் தலை குனியச் செய்யுங்கள். தக்தீர் (தலைவிதி) என்றால் என்ன? அந்த அரசனின் தூது வனாகும். அந்த தூதுவனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது நமது கடமையாகும். இவ்வாறு நாம் செய்யும் போது தூதுவனே நாம் நாடும் இடத்திற்குச் சேர்த்து வைப் பான். விதியே இறைவன் சந்நிதானத்தில் நமக்கு மேன்மை கிடைக்கவைக்கும்.


"பஹுனாலிகள் வலாயத்து லில்லாஹில் ஹக்கி " 18-44 மேலும் அங்கு இறைவனின் ஆட்சி மட்டுமே உண்டு. அவனின் ஞானக்கடல் நீரைப்பருக உனக்கு கோப்பை தயார் செய்யப்படும். அவனின் அருள் பொங்கும் ஸுப்ரா (விரிப்பு) வில் உன் முன்னே, புசிக்க நிஃமத்துக்களை வைக்கப்படும். அவனின் அன்பு உன்னை போர்த்திக் கொள்ளும். இந்த பெரும் சீதேவித்தன்மை எல்லோருக்கும் கிடைக்கப் போவ தில்லை. லட்சத்திலே கோடியிலே யாரோ ஒருவருக்குத் தான் கிடைக்கும்.


அடியானே! பரிசுத்தத்தையும் பயபக்தியையும் நீ, தனது சேவையாக ஆக்கி கொள்வது அவசியம், அந்த தக்வா இறைவன் வகுத்த சட்ட வரம்பை மீறாதிருத்தல் அவசியம். மனம் போனபோக்கும் மனோயிச்சைக்கு அடிமையாவதும் கூடாது. ஷைத்தானைப் பின்பற்றுவதை விட்டும் முகம் திருப்பிக் கொள்ள வேண்டும். தீய சகவாசங்களை விட்டொழிக்க வேண்டும். மூமின் யார் என்றால், இவை


அனைத்துடனும் அவன் போராடுவான். குதிரையை விட்டுக்


கீழே இறங்காமலும் வாளை உறையில் போடாமலும் அவன்


போராடிக் கொண்டேயிருப்பான். அவனது தூக்கம் சிறு


தூக்கம் தூங்குபவர்களின் தூக்கத்தைப் போன்றது. 

அவன் உணவு பசித்திருத்தலாகும். அவனது பேச்சு மௌனமாகும். அதிகமௌனத்தினால் மூமினானவர்கள் ஊமை எனப்பிரசித்த மடைந்திருக்கின்றனர். உண்மையில் அவர்கள் ஊமைகள் அல்ல அவர்கள் பேசுகிறார்கள். எப்போது? எப்பொழுது கிறானோ அப்போது அவர்களைப் பேசவைக்கப் படுகிறது. அவர்களது பேச்சுக்கு உதாரணம் கியாமத் நாளையில் மனிதர்களின் கை கால், கண்கள் பேசுவதைப் போன்ற தாகும். அதாவது அவர்களைப் பேசவைக்கப்படும் போது பேசுகிறார்கள். மரம், கல், மலைகள் (வாய்மொழி பேசாது ) மௌன மொழியால் பேசுவது போன்று அவர்கள்


பேச்சிருக்கும்.


இறைவன் அவர்களிடத்தில் ஒரு வேலை வாங்க நாடு கிறான். அந்த வேலை தான்:- அடியார்களின் செயல்களின் நன்மை தின்மை பலா பலன்களை அவர்களுக்கு அறிவிக்கச் செய்வது. முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகச் செய்தியை மட்டும் அவர்களுக்குத் தெரிவிப்பது போதாது. அவர்களின் முன் ஆதாரங்களை எடுத்துரைக்க வேண்டும். இந்த விஷயங்கள் தான் நபிமார்களும் ரஸூல்மார்களும் அஸ்திவார மிட்டவைகளாகும். பின் அவர்கள் காட்டிச் சென்ற வழியில் உலமாவான அறிஞர்களும் சீர்திருத்தக் கூட்டத்தினர்களும் எழுந்தருளி தாங்களும் நற்கருமங்கள் செய்து கொண்டு மக்களின் சீர்திருத்தமென்னும் படகையும் ஓட்டிச் சென்றார்கள். அச்சீர்திருத்தவாதிகள் தான் பிரதி நிதிகள் என அழைக்கப்பட்டார்கள். நபிபெருமானவர்கள் மலர்ந்தருளிய "அல்உலமாஉ வரதத்துல் அன்பியாயி உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், என்பதற்கு இதுதான் கருத்து. மனிதர்களே! அல்லாஹ்வின் (நிஃமத்) அருள் கொடைகளின் மீது நன்றி செலுத்துங்கள். பாக்கியங் களெல்லாம் அவனிடமிருந்து வருகின்றன என்று உறுதி கொள்ளுங்கள். அல்லாஹ் கூறுகிறான். "வமா பிக்கும் மின் நிஃமத்தின் பமினல்லாஹி" உங்களை வந்தடையும் ஒவ்வொரு நிஃமத்துக்களும் இறைவன் புறத்திலிருந்து வருவதே.


நிம்மதியற்ற மனிதர்களே! நீங்கள் அவன் அருள் கொடைகளைப் பெற்றுக் கொண்டு அறியாதவர்களைப் போலும், நன்றி மறந்தவர்களாயும் இருக்கிறீர்கள். மேலும் அந்த அருள் கொடைகளை மாற்றார் கையிலிருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறிக்கொள்கிறீர்கள். சில ருந்து பெற்றுக்ற் நிஃமத்துக்களைக் கொஞ்சம் என்று எண்ணமிட்டும் உங்களின் தகுதிக்கு மேல் அதிகமாகத் தேடக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள். சிலசமயம் அந்த நிஃமத்துக்களால் பாவ மான காரியங்களைச் செய்ய உதவி தேடிக்கொள்கிறீர்கள்.


என் மதிப்பிற்குரியவர்களே! உலகத்தில் நிகழும் புரட்சிகளை விட்டு ஒதுங்கி அவரவர் செய்த செயல்களைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதனால் நீங்கள் பாவங்களை விட்டு நீங்க ஆசை பிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். சிந்தனைக் கண்ணோட்டத்தோடு தங்களது நிலைமைகளை ஆராயுங்கள்.அதனால் உங்களைப் படைத்தவனது கருணைக் கண்பார்வை உங்கள் மீது வெளியாகும். மேலும் அவனது சக்தி எல்லாச் சமயங்களிலும் உங்களுக்குக் கட்டாயத் தேவை என்ற அளவுக்கு நீங்கள் அவனது தேவையுடையவர்களாக யிருக்கிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியவரும். நீங்கள் ஜமாஅத்தை விட்டும் பிரிந்திருந்தாலும் சரி அல்லது தனித் திருந்தாலும் சரி, அந்த நப்ஸே அம்மாராவுடைய இச்சை களுடனே பயங்கரப் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுமக்கள் சறுக்கி விழுவதால் நாசமடைகிறார்கள் என்றால் துறவிகள் சிறிதளவு பின் பற்றுதலாலும் நாசமடைகிறார்கள். அப்தால்கள் கவலை யாலும் தனிமையில் மன ஊசலாட்டங்களாலும் அழிவை அடைகிறார்கள். ஸித்தீக்கீன்களின் கேடு மனப்பக்குவத்தில் கவனம் செலுத்தும்போது சில வினாடிகளில் நிகழ்ந்து விடு கிறது. ஏனென்றால் இவர்களின் சுகஸ்தலம் பாதுஷாஹ்வின் தலைவாயிலாகும். மக்காமே தஃவத் என்பது அவர்கள் இருப்பிடமாகும். இவர்கள் இறை ஞானத்தின் பால் மக்களை அழைக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களை நோக் கிப்பேசுகிறார்கள்:- ஹிருதயங்களே! ஆத்மாக்களே!


நாடக் கூடியவர்களே!பாதுஷாஹ்வின் தர்பாருக்கு வாருங்கள். விரைந்து வாருங்கள்; மனநிம்மதியோடு வாருங்கள். தக்வா (பயபக்தி) என்ற பாதத்தோடு வாருங்கள். ஏகத்துவக் கொள்கை, இறை ஞானத்தோடு வாருங்கள் பக்தி என்ற பெரும் காணிக்கையுடன் வாருங்கள். ஆசையற்ற காணிக்கையுடன் வாருங்கள். ஆகிரத்தின் எண்ணத்தைக் கூட விட்டு விடுங்கள். அவன் அல்லாத எல்லா வஸ்த்துக்களையும் விட்டு விடுங்கள். இவைகள் அந்த ஆண் அழகர்களின் குணங்கள் ஆகும். இவைகளின் பக்கம் இந்த புண்ணியாத்மாக்கள் மக்களை அழைக்கிறார்கள். அவர்களின் நோக்கம் மக்களைச் சீர்திருத்துவது, எல்லாக் கூட்டத்தினர்களையும் சீர்திருத்துவது, வானத்திலிருந்து பூமி வரை மட்டுமல்லாது அர்ஷிலிருந்து அதள பாதாளம் வரை, எல்லாமே சீர்திருந்த வேண்டும் என்ற கண்ணோட்டம் அவர்களுக்கு உண்டு. அடியார்களே மனதையும் மனயிச்சை யையும் தொடர்வதை விட்டுவிட்டு அந்த உயர்ந்த மேன் மக்களின் பாதங்களுக்கடியில் பூமியாக ஆகிவிடுங்கள். அவர் களின் கரங்களில் மண்ணைப் போல் ஆகிவிடுங்கள்.


அல்லாஹு தஆலா உயிரற்றதிலிருந்து ஜீவனுள்ள வஸ்த்துக்களை உண்டாக்குகிறான். ஜீவனுள்ள பொருள்களி லிருந்து உயிரற்றவைகளை உற்பத்தி செய்கிறான். ஜீவனற்ற உள்ளம் உடையவர்களான அதாவது ஈமான் உடைய வாழ்க்கை இழந்தவர்களான பெற்றோர்கள் வயிற்றில் இப்ராஹீம் (அலை) அவர்களைப் படைத்தான். உண்மையில் மூஃமின்களின் வாழ்க்கை தான் வாழ்க்கை. காபிர்களின் வாழ்க்கை மரணம் தான். ஹதீதே குதுஸியில் அல்லாஹு தஆலா திருவுளம் பற்றினான்:- என்னுடைய படைப்பு களில் எல்லாவற்றையும் விட முதலில் இறந்தவன் இப்லீஸ். அதாவது எல்லோரையும் விட முதல் காபிரான இவன் பாவத்தால் ஈமானுடைய வாழ்க்கையை இழந்தான். மனிதர்களே! இது கடைசி காலம். இதில் நயவஞ்சகத்தின் தலைவாயில்கள் திறந்துவிட்டன. பொய்க்கும், நம்பிக்கை


துரோகத்திற்கும் சிறகுகள் முளைத்துக் கொண்டன. கபடர்கள், பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்களுடன் சேர்வதைவிட்டு தூரமாக வேண்டும் என்று ஞாபகத்தில் வையுங்கள். அதைப் போன்றே நீங்கள் தங்கள் நப்ஸ் என்ற வஞ்சகர்களை, பொய்யர்களை, கெட்டவர்களை விட்டும் தூர ஓடுங்கள். இதன் கருத்து என்ன வென்றால் - அவை களின் விருப்பத்துக்கு மாறு செய்யுங்கள் என்பதாம். அவை கள் சொல்வதைக் கேளாதீர்கள். அவைகளைச் சிறைப்படுத் துங்கள். அவைகளை மூக்கணாங்கயிறு இல்லாத ஒட்டகம் போல் விட்டுவிடாதீர்கள். உஷாராகயிருந்து அவைகளின் கால்களைக் கட்டி வையுங்கள். அத்துடன் எந்த அளவு உரிமையுடையவைகளாக இருக்கின்றனவோ அந்த அள வுக்கு அவைகளின் அத்தியாவசியத் தேவைகளை அவை களுக்குக் கொடுத்துவிடுங்கள். அவைகளின் நீண்டவேண்டுதல் (மனுக்)களை முஜாஹதாத் என்ற அமல்களின் மூலம் ரத்து செய்துவிடுங்கள். நீங்கள் அவைகளின் மீது சவாரி செய்யுங் கள். சந்தர்ப்பம் பார்த்து அவைகள் உங்கள் மீது சவாரி


செய்துவிடக்கூடாது.


தபீ அத் (மனம்) என்றால் என்ன? அது ஒரு சிறு குழந்தை. அதன் சிநேகமும் நல்லதல்ல. குழந்தைகள் அறிவில்லாதவர் களாயிருப்பது போன்றே அதற்கும் அறிவு இல்லை. நீங்கள் அதனிடத்தில் எதையும் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் குழந்தைகளுக்குமுன்மண்டியிட்டு மரியாதை செய்ய விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.


ஷைத்தான் என்றால் யார்? அவன் உங்களின் பகிரங்க விரோதி, அவனோ உங்கள் மூலப்பிதா ஆதம் (அலை) அவர் களுக்கும் விரோதியாக இருந்தான். அவன் உங்களுக்கு நிம்மதியளிக்க முடியுமா? நீங்கள் அவனுடைய தர்பாருக்கு உகந்தவர்களாகி உங்கள் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ள முடியுமா? உங்களுக்கும் அவனுக்கும் மத்தியிலுள்ள விரோதம் ஆழமானதும் பழமையானதுமாகும். நீங்கள் அவனின் நிழலிலும் வரக்கூடாது. அவன் உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கமுடியாது. 

அவன் உங்களுடைய பாவா ஆதம் (அலை) அவர்களையும் ஏமாற்றிவிட்டிருக்கிறான் உங்களுடைய அன்னை ஹவ்வா (அலை) அவர்களையும் ஏமாற்றியிருக்கிறான். அவனுடைய நேசத்தை நம்பாதீர்கள். எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் உங்களுடைய இரத்தத்தை உறிஞ்சியே விடுவான் உங்களுடைய மரியாதைக்குரிய பெரியோர்களது ஆை களை இரத்தக் காடாக்கியதைப் போன்றே உங்களையும் செய்வான். பயபக்தி என்ற ஆயுதத்தால் நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய தென்னும் ஏகத்துவக் கொள்கையை உங்களுடைய தவ்ஹீ குறிக் கோளாகக் கொள்ளுங்கள். அதற்காக வேண்டி நிஷ்டை- ஓர்மை, தனிமையில் வணக்கம், குணங்களில் தூய்மைகளை உங்களின் நெறியாக ஆக்கிக் கொள்ளுங்கள். மானாலும் உங்களின் இறையோனிடத்தில் எதுவேண்டு கேளுங்கள். அந்த நல்ல குணங்களை உங்களின் பட்டாளங்களாகவும் பயபக்தியை வாளாகவும் ஆக்குங்கள். இந்தப் படைகளே ஷைத்தானை எதிர்த்து வெற்றி கொள்ள போதுமானது. அவனுடைய படைகளைத் தோல்வியடையச் செய்யும். ஏனென்றால், அல்லாஹ்வின் உதவியும், வெற்றியைத் தருவதும் உங்களின் பக்கமே இருக்கிறது. உங்களுக்கே உதவி புரிவான். அவன்


அல்லாஹ்வின் அடியானே! இம்மை மறுமை இரண் டையும் ஒரே தட்டில்வை. அவைகளை ஒரே உறைகல்லில் வை. பின்பு நீ உன் மனதை அந்த எஜமானின் பக்கம் வை. அந்த மனம் இம்மை மறுமையின் ஆசாபாசங்களை விட்டுக் காலியானதாக இருக்க வேண்டும். தன் எஜமானைத் தவிர எந்த வஸ்துவின் பாசத்திற்கும் தன் உள்ளத்தில் இடம் கொடுக்காதே. ஆண்டவனை விட்டு தூரமாகி அடியார்களின் கைப்பாவை ஆகாதே. காரணங்களை விட்டு உன் கவனத்தை திருப்பிவிடு. அர்பாபம் மின் தூனில்லாஹி 3-64 அல்லாஹ் அல்லாத ரக்ஷகர்களை நாடாதீர்கள். முடிந்தால் இம்மையின் ஆசைகளைத் தன் ஆத்மாவரை வவத்துக்கொள். 


மறுமையின் ஆசைகளை உன் உள்ளத்தில் வைத்துக்கொள். உன் எஜமானின் பேரில் உள்ள பற்றை உன் உள்ளத்தின் ஆழ்த்திவை.


அல்லாஹ்வின் அடியார்களே!


அந்த அல்லாஹ்வை தவிர்த்து வேறு எந்தப் பொருளில் மீதும் நீங்கள் பற்றுவைக்கத் தேவை இல்லை. அவன் கிடைத்து விட்டால் எக்காலமும் நீங்காத பொக்கிஷம் கிடைத்து விட்டது. அந்த உன் எஜமானனிடமிருந்து நீ அடையும் நேர்வழி அதற்குப்பின் வழிகேடு இல்லாத நேர்வழியாகும். பாவத்திற்குப் பரிகாரம் தேடி கவனத்தை அவன் பக்கம் வைக்கவேண்டும். ஆனால் தௌபா எப்படி இருக்கவேண்டும்? உள்ளும்புற மும் தௌபாவால் (பாவத்தின் பரிகாரம் தேடப்பட்டதாக) ஆகவேண்டும். அந்த தௌபா உள்ளே (பாத்தினில்) இறங்கும் மருந்து. அது பாவமென்னும் பறந்தாடும் ஆடைகளை அகற்றிவிடும். உலகத்தாருடனில்லாது இறைவனிடத்தில் வெட்கமடை வதைக் கற்பிக்கும். இது உண்மையான வெட்கம். மனி தர்களைக் கண்டு ஏற்படும் வெட்கம் உண்மையானதல்ல. (அது மஜாஸி போலி வெட்கம்) இவைகள் கல்பு (உள்ளத்து) டைய அமல்கள். மேலும் இவைகள் உடலுறுப்புகளின் வெளிப்படையான சுத்தத்துடனும், மார்க்க சுத்தத்துடனும் ஆண்டவனின் தர்பாரில் ஒப்புக்கொள்ளப்பட்டவைகளா கின்றன. எப்பொழுது மனம் உலகப்பாசம் காரணம் என்னும் முள்காட்டு வனாந்தரங்களை விட்டு வெளியேறி விடுகிறதோ அப்போது அது நம்பிக்கை.ஞானக் கடலிலே நீந்தக் கூடியதாகிவிட்டது. ஞானம், நம்பிக்கை என்னும் மைதான (வீர) மனிதனாக ஆகிவிட்டது. எப்பொழுது அது அக்கடலின் நடுவினிலோ அல்லது அந்த மைதானத்தில் அது கரையை விட்டும் தூரமாகிவிடுகிறதோ அப்பொழுது அது இவ்வாறு சொல்லுகிறது: "அல்லதீ கலக்கனீ பஹுவ யஹ்தீனி" 26-78 "யார் என்னைப் படைத்தானோ அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்" அதனால் அது

க்ரையில் இருந்து மறுகரை வரை (இக்கரையிலிருந்து அக்கரைவரை) அல்லது ஓரிடத்திலிருந்து வேறிடம் வரை சில காலம் தவிர்த்துத் திரிந்த போதிலும் கடைசியாக வெகு சீக்கிரத்தில் நேர்வழியில் வந்தே விடுகிறது. கண்ணுக்கும் புலனாகாத ரக்ஷிக்கும் சக்தி அதற்குக் கைகொடுத்து உத வத் தயாராக முன் வந்தே விடுகிறது. இறை நாட்டத்தார் உள்ளம் எண்ணிலடங்காத மைல் தொலை தூரங்களைக் கடக் கிறது. எல்லா வஸ்துக்களையும் தேடுவதின் மூலம் அது அவைகளை அடையப் பெறுவதற்கு நிம்மதியற்று தவிக்கிறது. அதன் உண்மையான தேட்டமும் வீரத்தனமான அதன் துடிப் பின் பலனாக பயத்துடைய நேரத்திலே அழிவதை விட்டும் காப்பாற்றப்படுகிறது. அதனுடைய ஈமான் என்னும் படகு அக்கடலில் மூழ்குவதை விட்டும் அது காப்பாற்றி விடு கிறது. வெறுப்பு பயம் என்னும் கரியமேகங்கள் அதன் கண் களை விட்டும் தூராக்கப்பட்டு அதனிடத்தில் அன்பும் அருளா ளனுக்கு அருகில் நெருங்கும். ஆனந்த ஸுப்ஹு (காலை) வேளையும் உண்டாக ஆரம்பிக்கிறது.


அடியானே! அந்த வழிகேடு அல்லது முஸீபத் (அபாயம்) என்னும் வியாதி உன்னை வந்து சூழ்ந்துகொள்ளும் போது பொறுமையா (ஸப்ரா) ல் அதை தகர்த்து விடுவதுடன், மேலும் அதற்கு பொறுமை என்ற மருந்தின் மூலமே வைத்தி செய்துகொள். நன்றிக் கரங்களால் அந்த மருந்துக் கோப்பை யைப் பருகிவிடு. அதன் பலனாக நீ ஆரோக்கியம் என்னும் பாக்கியத்தால் ஈடேற்றம் அடைந்தவனாகிவிடுவாய், வெற்றி என்னும் உயர்ந்த சிகரத்தை எட்டிப் பிடித்தவனாக ஆகிவிடுவாய்.


கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைக் காண்பது மூமினான மனிதனின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சத்தை உண் டாக்கும். அதே அச்சமாகிறது, அந்த ஆண்டவனின் அன்பு, அருள் என்னும் தலைவாயில்களை அவனுக்காகத் திறந்துவிடுகிறது. அவன் அத்தலைவாயில்களில் நுழையும்போது அவன் உள்ளத்திலே ஆனந்தமும் (பெருமிதமும் தாண் டவமாடுகின்றன. அதன்பின் அந்த அல்லாஹ்வின் ஜலால், கிப்ரியாயி (கோபக்கனல் கொண்ட குணக்) காட்சியைக் காணும் போது அவர்கள் மனங்களிலும் ஆத்மாக்களிலும் முன்பிருந்ததைவிட அதிக அச்சமும் பய உணர்ச்சியும் உண் டாகி விடுகின்றன. அதன்பின் அவர்களுக்காக ஜமால் (அழகு சௌந்தர்யகுணத்) தன்மையின் தலைவாயில் திறக்கு கிறது. இப்பொழுது பரிபூரண நிம்மதியும் சாந்தியும் ஏற் படுகிறது. இதுதான் கடந்து செல்ல வேண்டிய லாஹூத் தின் உயர்ந்த முன்னேற்றப்படி தரஜாவாகும்.


அடிமையே! உணவு, உடை, உறைவிடம், திருமணம் ஆகியவைகள் மட்டும் உனது வாழ்க்கைக் குறிக்கோளாக ஆகிவிடக்கூடாது. உன் மனதுக்கும் உன் ஆத்மாவுக்கும் கூட நோக்கமும் குறிக்கோளும் இருக்கின்றன. இவைகள் எல்லாவற்றையும் விட சிறந்த குறிக்கோள் நீ அறிவாயா. அது ஆத்மீகத்திற்கு எதிர்முறையில் அமுங்கிக்கிடக்கிறது. மிகச்சிறப்பான நோக்கம் இறைவனின் திருப்பொருத்தம் ஆகும். இது உன் வாழ்க்கைக் குறிக்கோளில் அதிக முக்கிய மானது. இதுவே உன் வாழ்க்கையின் உண்மை நோக்கமாக இருக்க வேண்டும். துன்யாவுக்குப் பிரதிபலன் ஆகிரத் படைப்புகளுக்குப் பிரதிபலன் படைத்தவன். நிலையற்ற உல கின் பொருள் ஏதாவது உன்னை விட்டும் தவறிவிட்டால் அதை ஈடுசெய்வதற்கு அதைவிட அதிக உயர்வான பொரு ளான ஆத்மீகத்தால் நீ லாபமடைய முடியும். வாழ்க்கை யில் எஞ்சியுள்ள நாட்கள் எவ்வளவோ அவைகளை மறு உலக நிர்மாண காரியங்களில் கழித்து விடு. மலக்கல் மௌத்து வலைவிரித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக் கிறார். அவ்லியா (இறைநேசர்) களிடத்தில் உலகத்தின் அந்தஸ்து என்ன? மறு உலகத்திற்காக கட்டிச்சாதம் தயார் செய்து கொடுக்கும் சமையல்காரனைப் போன்றதுதான் அது. ஆகிரத்தில் அவர்களுக்காக வாழ்க்கையின் உண்மை நோக்கம் நிர்மாணிக்கப்பெறுகிறது

கம் என்பது என்ன? அதுதான் அவர்களது நாயன் அவர் களைச் சந்திப்பது. அதனால் தான் உண்மையில் அவர்கள் துன்யாவைத் தேடக்கூடியவர்களும் அல்ல; ஆகிரத்தின் பேரில் பேராசைப் பார்வை பார்ப்பவர்களும் அல்ல. செல் வச் செருக்கில் அல்லாஹ்வை நீங்கள் முஹப்பத் வைப்ப தும் வேதனையும், சோதனையும் வரும்போது உங்கள் மனம் அதைவிட்டு ஓடநினைப்பதும் 'அவன் பேரில் அன்புகொண் நேசர்கள் நாங்கள்" என்ற உங்கள் வாதத்தை மெய்ப்படு தும் திரையைக்கிழித்து விடுகிறது. வேதனையிலும் சோதனை யிலும் துணிவுடனும் ஊக்கத்துடனும் நிலைத்து நிற்பீர்களா னால் இதுவே முஹப்பத்தே இலாஹி (இறையன்பு) ஆகும். இப்பொழுது நீங்கள் அவனுடைய மஹ்பூப் (நேசர்) கள்) ஆக ஆகிவிடுகிறீர்கள். அந்தப் பரீட்சையும் உங்க ளுக்கு அவசியமாகவும் இருந்திருந்தது. ஒருமனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து "யாரஸூலல்லாஹ்! நான் உங்களை நேசிக்கிறேன்'' என்று சொன்னார். அப்படியென் றால் வறுமைக்கும் ஏழ்மைக்கும் போர்வை தயார்செய்து கொள் என்று பெருமானார் கூறினார்கள். மற்றொரு மனி தர் அவர்களிடம் வந்து "அல்லாஹ்வை நேசிக்கிறேன்'' என்றுசொன்னார். அப்படியென்றால் முஸீபத்து (சோதனை) களுக்காக போர்வை தயார் செய்துகொள் என்று நபிகள் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் ரஸூல் உடைய முஹப் பத் வறுமை, ஏழ்மை, சோதனைகளுடன் இணைக்கப்பட்டி ருக்கிறது. ஒரு நல்ல மனிதர் எவ்வளவு அருமையாகக் கூறியிருக்கிறார், "குல்லுல் பலாயி பில் வலாயி" முஸீ பத்துக்கள் அடங்கலுக்கும் முஹப்பத்துடனே ஆழமான தொடர்பு உண்டு. நீ அல்லாஹ்வின் நேசனாக வேண்டும் என்றால் முஸீபத்துக்களைச் சகித்துச்செல், பொய்யர்களுக்கு அல்லாஹ்வின் நேசத்தைப்பற்றி மூச்சு விடுவதற்கும் துணிவு பிறக்க மாட்டாது. அவர்கள் பொறுமையில் பாதம் தரிபட்ட வர்களாக ஆகியிருக்கவில்லை என்றால், அதனால் தான் பரதம் தரிபட்டு நிலைத்திருப்பதை முஹப்பத்தே இலாஹியி (இறையன்பி)ன் உரைக்கல்லாக ஆக்கப்பட்டது.

குழந்தைகளுடன்

 

உங்கள் இல்லங்களில் குழந்தைகளின் இரைச்சல் சத்தங்கள் கேட்டு நீங்கள் அதிர்ப்தி அடையாதீர்கள். 


குழந்தைகளின் அன்றாட சத்தங்களையும் சண்டைகளையும் கண்டு முகம் சுழிக்காதீர்கள். 


குழந்தைகளின் குறும்புத்தனங்களையும் கூக்குரல்களையும் ரசித்து வாழுங்கள் 


சாக்லேட்டுக்காவும் சாண்ட்விச்சுக்காவும் அவர்கள் அடித்துக்கொள்வதை, பிடித்துக் கொள்வதை ரசித்து வாழுங்கள். 


கட்டில்களில் ஏறி மிதித்து விளையாடுவதையும், மெத்தையில் துள்ளிக் குதிப்பதையும் ரசித்து வாழுங்கள். 


அவர்கள் சவட்டி வைத்து அறைகளை ஒழுங்குபடுத்தும் போதும், அவர்கள் விளையாடி சிதறிய விளையாட்டுப் பொருட்களை ஒன்று சேர்க்கும் போதும் அவர்கள் சிந்திய சோத்து மணிகளை அள்ளும் போதும் மனதால் சலித்துக் கொள்ளாதீர்கள். 


அதிகாலையில் அவர்களை எழுப்பாடி, குளிப்பாட்டி ஆடைகள் அணிவித்து, தலை வாரி அலங்கரித்து பள்ளிக்கூடம் வழி அனுப்புவதையும், பின்னர் மாலையில் வரவேற்பதையும் ரசித்து வாழுங்கள். 


இராக்கல கதைகளை ரசித்து வாழுங்கள், பகல்கால ஒன்று கூடல்களை ரசித்து வாழுங்கள். 


நாளை ஒருநாள், நீங்கள் பார்த்திருக்க உங்கள் குழந்தைகள் வளர்ந்து, ஆளாவார்கள்.


பெண் பிள்ளைகள் பெருப்பதோடு அவர்களின் பெண்மை உணர்வும் பெருத்துவிடும். 


ஆண் பிள்ளைகள் பெருப்பதோடு அவர்களின் ஆண்மை உணர்வும் பெருத்துவிடும். 


ஒவ்வொருவரும் அவரவர் சொந்த புத்தியில் வாழ ஆரம்பிப்பார்கள். அவர்கள் விரும்பிய வழிகளில் ஒதுங்கிவிடுவார்கள். 

புதிய புதிய பாதைகளை அமைத்துக் கொள்வார்கள்.


ஒருவர் ஒருவராக வீட்டை விட்டும் புறப்பட ஆரம்பிப்பார்கள். 


ஒருவர் திருணம் முடித்து வெகு தூரம் சென்று விடுவார். 


மற்றொருவர் வெளிநாடு பயணாமாவார். 


இன்னொருவர் தன் கனவு நனவாகி கரை சேர காத்திருப்பார்.


கலகலப்பாகவும் ஆரவாரமாகவும் இருந்த உங்கள் இல்லம் திடீரென ஆள் சஞ்சாரம் அற்றதாக மாறிவிடும். 


மிட்டாய்த் துண்டுக்காகவும், கட்டிலில் இடம் பிடிக்கவும் சத்தம் வந்த உங்கள் அறைகள் வெறிச்சோட ஆரம்பிக்கும். 


ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த உங்கள் சிட்டுக்கள் ஊர்விட்டு ஊராக நாடுவிட்டு நாடாக களைந்து சொல்லத் தொடங்குவார்கள். 


ஒரே விட்டில் குதூகலமாக ஓடிப்பிடித்து விளையாடியவர்கள், ஒரே தட்டில் சண்டையிட்டு சாப்பிட்வர்கள் திடீரென உங்கள் வீட்டு விருந்தாளிகள் போல வந்திறங்குவார்கள். 


பின்னர் ஒரு நாள் வரும்,,,

நீங்கள் இருவரும் அதிகாலை வேளைகளிலும் அந்திப் பொழுதுகளிலும் உங்கள் வாசற்படிகளில் அமர்ந்திருப்பீர்கள். 

எந்தப் பிள்ளை எப்போது எங்கள் முகத்தை காண வருவார்களோ என ஏக்கத்துடன் காத்திருப்பீர்கள். 


ஆதலால் நாம் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து வாழ்வோம். வாழ்ந்த காலத்தை ரசித்து வாழ்ந்தோம் என்ற ஆத்துமானந்தம் என்றும் இருக்கட்டும். 


வாழ்வை ரசித்து வாழ வாழ்த்துக்கள்!


✍ தமிழாக்கம் / imran farook

Friday, 22 November 2024

கண்ணியம், கௌரவம் வழங்குவதில் சஹாபாக்களின் நடைமுறை

 

கண்ணியம், கௌரவம் வழங்குவதில் சஹாபாக்களின் நடைமுறை

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி

     தமிழில் : தொடர் : [6]

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு   

  ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 

==================

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு கண்ணியம், கௌரவம்; மகத்துவம் வழங்குவதில் ஸஹாபாக்களின் வழக்கத்தை விளக்கும் ஹதீஸ்கள் அடியில் வருகின்றன,


ஹளறத் அம்றுப்னு ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை மிகைத்த ஒரு நேசர் எனக்கு எவருமே இல்லை, அன்னாரை விட மகத்தான ஒருவர் என் கண்ணில் படவுமில்லை; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மாட்சிமையின் காரணத்தால், நிறைந்த கண்ணால் அன்னாரை என்னால் பார்க்க முடியவில்லை; அன்னாரை வர்ணித்துக் கூறுமாறு எவராவது என்னிடத்தில் வேண்டிக் கொண்டால், அது என்னால் முடியாது! ஏனெனில், அன்னாரை நான் கண்ணிறையப் பார்க்கவில்லை என்று கூறினார்கள்.


ஸஹி முஸ்லிம் கிதாபுல் ஈமான் பாகம் 1 பக் 112


ஹளறத் அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்,


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (வீட்டிலிருந்து) ஸஹாபாக்களில் முஹாஜிர்கள், அன்சாரிகள் இருக்கும் சபைக்குள் வந்தார்கள்; அச்சபையில் ஹளரத் அபூபக்கர், ஹளறத் உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களும் கூடவே இருந்தார்கள்; இவ்விருவரையும் தவிர்த்து வேறு எவரும் கண்ணியத்தின் காரணமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்விருவரையும் பார்த்தார்கள்; இருவரும் பரஸ்பரம் முறுவலித்துக் கொண்டார்கள்.


சுனன் திர்மிதி கிதாபுல் மனாகிப் பாகம் 5 பக்கம் 273


ஹளறத் உஸாமா பின் ஷரீக் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,


நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் வந்தேன், அன்னாரைச் சூழ ஸஹாபாக்கள் இருந்தார்கள்; அவர்கள் தலைக்கு மேல் பறவைகள் இருப்பது போன்று இருந்தது,.


சுனன் அபூதாவூத் கிதாபுத் திப்பு பாகம் -4 பக்கம் -192 ,193.


இன்னும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பண்பின் விடயத்தில் பின்வரும் ஹதீதும் இடம் பெறுகின்றது, 


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால், ஸஹாபாக்கள் தங்களின் தலையை கவிழ்த்திருப்பார்கள்; அவர்களின் தலைக்கு மேல் பறவைகள் இருப்பது போன்றிருக்கும்.


ஹளறத் உர்வத் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,


நான் (ஹுதைபியா உடன்படிக்கையின் போது) குறைஷிகளின் தலைப்பிலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது, ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அதி உச்ச மரியாதை செய்வதை ப்பார்த்தேன், அன்னார் வுழுச் செய்தால், எஞ்சிய நீரைப் பெற்றுக் கொள்வதற்காக விரைகின்றார்கள்; வுழுச் செய்து எஞ்சிய நீரை அல்லது உறுப்புக்களிலிருந்து கொட்டுகின்ற சொட்டு நீரைப் பெற்றுக் கொள்வதற்கு சண்டை போடக்கூடிய அளவு நெருக்கமாகின்றனர்; அன்னார் உமிழ்ந்தால், அல்லது, மூக்குச்சீறினால், விரைவாக அதை கையில் தாங்கி தங்களின் முகத்திலும், உடலிலும் தேய்த்துக் கொள்கிறார்கள்; அன்னாரின் திருமேனியிலிருந்து ஏதும் ஒரு முடி உதிர்ந்தால், விரைந்து சென்று அதை பெற்றுக் கொள்கின்றார்கள்; ஏதும் ஒரு கட்டளையிட்டால், விரைந்து அதை செயல்படுத்துகின்றார்கள்; பேசும்போது அன்னார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் தங்களின் சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றார்கள்; மரியாதையின் நிமித்தம் அன்னாரின் திருமுகத்தை உற்று நோக்காதிருக்கின்றனர்; 


குறைஷிகள் பக்கம் இவர் திரும்பிச் சென்ற போது குறைஷிகளே! நான் பாரசீக மன்னன் கிஸ்ராவிடம் சென்று இருக்கிறேன், இன்னும், நான் ரோம் நாட்டு அரசர் கைசரிடமும் சென்றிருக்கிறேன்; இன்னும், அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷியிடமும் சென்றிருக்கின்றேன்; இறைவன் மீது ஆணையாக! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அவருக்குச் செய்யும் கண்ணியத்தை ஒத்த கண்ணியத்தை எந்த ஒரு அரசவையிலும் நான் கண்டதில்லை; அவரை ஒருபோதும் கைவிடாத; துரோகமிளைக்காத சமுகத்தையே திட்டமாக நான் கண்டேன் என்று கூறினார்.


ஸஹீஹுல் புகாரி : கிதாபுஸ்ஸுறூத் பாகம் 3 பக்கம் 171 


ஹளறத் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,


(ஹஜ்காலத்தில் மினாவில்) ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முடி மழிக்கப்படும் போது ஸஹாபாக்கள் அங்குமிங்கும் வட்டமிட்டு கொண்டிருப்பதை கண்டேன், ஒவ்வொருவரும் நபிகளாரின் திருமுடி பூமியில் விழாது எவராவது ஒருவரின் கரத்தில் விழவேண்டும் என்று நாடினார்கள்;  


ஸஹி முஸ்லிம்: கிதாபுல்

 பழாயில் பாகம் 3 பக்கம் 1812 


இத்தொடரில் இப்படியும் ஒரு நிகழ்வு இருக்கிறது,


ஹளறத் உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவை ஹுதைபியாக் காலத்தில் மக்காவுக்கு அனுப்பிய போது, ஹளறத் உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவை தவாபு செய்வதற்கு குறைஷிகள் அனுமதித்தார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவாபு செய்யும் வரை நான் ஒருபோதும் தவாஃப் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள்.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 4 பக்கம் 135 


ஹளறத் தல்ஹா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது,


   ஸஹாபாக்களில் அறிவு குறைந்த ஓர் அஃராபியிடம் இந்த ஆண்களில் தங்களுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டவர்கள் யார்? என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்குமாறு கூறினார்கள், ஏனெனில், ஸஹாபாக்கள் உச்ச மரியாதையின் காரணமாக அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேள்வி கேட்க அஞ்சிக் கொண்டிருந்தார்கள்; அந்த அஃராபி அதனை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதற்கு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறாமல் அதை புறக்கணித்து விட்டார்கள்; இதற்குள் ஹளரத் அபூ தல்ஹா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அங்கே வந்தார்கள்; அந்த நேரத்தில் இதோ இவரும் நேர்சையை நிறைவேற்றியவர்களுள் ஒருவர் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


சுனன் திர்மிதி : கிதாபுல் மனாகிப் பாகம் 5 பக்கம் 308,309 


ஹளறத் கைலா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது,


இரு தொடைகளையும் வயிற்றில் சேர்த்து இரு கையாலும் இரு கால்களையும் பின்னிக்கொண்டு இருந்த நிலையில் நான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தேன், அன்னாரின் மகத்துவத்தின் காரணமாக எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.


ஹளறத் முஙீறா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு வருகின்றது,


ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அண்ணார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசல் கதவை நகத்தால் தட்டுவார்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதையாவது கேட்கலாம் என்று இருந்தாலும் அச்சத்தின் காரணமாக பல வருடங்கள் அதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று ஹளறத் பர்ராஉ இப்னு ஆஸிப் றழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.


உலூமுல் ஹதீது : பக்கம் 198

மஹப்பத்தின் பொருளும், அதன் எதார்த்தமும் (8)

 

மஹப்பத்தின் பொருளும், அதன் எதார்த்தமும்

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி

     தமிழில் : தொடர் : [8]

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு   

  ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 

==================

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை நேசிப்பதன் பொருள், அதன் எதார்த்தம் பற்றிய விளக்கத்திலும்; அல்லாஹுத்த ஆலாவை மஹப்பத் வைப்பது இன்னும், அவனுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மஹப்பத் வைப்பதற்கான விளக்கம் (தப்ஸீர்) என்ன? என்பதிலும் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன;


இதுதொடர்பான அவர்களின் சொற்றொடர்கள் அதிகம் இருக்கின்றன, ஆயினும், எதார்த்தமான கூற்றுக்களில் கருத்து வேறுபாடு இல்லை, நிலைகளிலும், விதங்களிலும் நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன;


"மஹபத்" என்பது, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதற்குரிய பெயர் என்று ஹளறத் சுப்யானுத்தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், இவர்களின் இக் கூற்று அல்லாஹுத்தஆலாவின் பின்வரும் கூற்றைத் தழுவியது போன்றுள்ளது.


قل ان كنتم تحبون الله فا تبعوني يحببكم الله  


நேசரே கூறுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னை பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான். 3-31 


நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதன் பொருள், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை புரிவதை கடமையாக்கி கொள்வதாகும், இன்னும், சுன்னத்திற்கு எதிரானவர்களை அழிப்பது, சுன்னத்தைப் பின்பற்றுவது, சுன்னத்திற்கு எதிரானதை அஞ்சுவது என்று சில அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


நேசரைப் பற்றி எப்போதும் நினைவு கூறிக் கொண்டே இருப்பதற்குரிய பெயர் தான் "முஹப்பத்" என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர், நேசரின் மீது உயிரை அர்ப்பணம் செய்வது தான் "மஹபத்" என்றும், நேசரிடம் வைத்துக் கொள்ளும் காதலுக்கான பெயர் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.


 மற்றும் சிலர் மஹபத் என்பது மனதால் ரப்பின் நோக்கத்திற்கு நேர்பாடான செயலைச் செய்வது; அதாவது, அவன் விரும்புவதை விரும்புவது, அவன் வெறுப்பதை வெறுப்பது என்கின்றனர், நேசரின் விருப்பத்திற்கு நேர்பாடானதின் பக்கமாக மனம் சாய்வதற்குரிய பெயர் என்று வேறு சிலர் கூறுகின்றனர்;


மேற்கூறப்பட்ட அதிகமான சொற்றொடர்கள் மஹப்பத்தின் பலனைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றதேயன்றி, அதன் எதார்த்தத்தின் பக்கமாக சுட்டிக் காட்டவில்லை.


மஹப்பத்தின் எதார்த்தம் ஒரு மனிதனின் இயல்புக்கு நேர்ப்பாடானதில் அவரின் மனம் ஈர்க்கப்படுவதைக் குறிக்கும், அவரின் பக்கம் மனம் ஈர்க்கப்படுவதை அடைந்து கொள்வதன் மூலம் இன்பம் கிடைக்கும், அழகிய வண்ணமான கோலங்களை பார்ப்பதைப் போன்று, இனிய இராகங்களைக் கேட்பது போன்று, சுவையான ஊண், குடிப்புகளைச் சுவைப்பது போன்று ஒவ்வொரு ஆரோக்கியமான சுபாவமும் அதற்கு நேர்பாடானதில் ஈர்க்கப்படுகின்றது.


அல்லது, புத்தியின் அகப்புலன்களால் மனதிலுள்ள அதியுயர் கருத்துக்களை கிரகிப்பதன் மூலம் அந்த ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கின்றது. உலமாக்கள், ஸாலிஹீன்கள், ஆரிபீன்கள் உள்ளிட்டவர்களை நேசிப்பதில் கிடைக்கும் இன்பத்தைப்போல், இவர்களின் வாழ்க்கை புனிதமானது, சிறப்பானது என்பது பிரசித்தி பெற்றது, இவர்களின் செயல்கள் விரும்பத்தக்கது,


 ஏனெனில், இந்த விடயத்தில் பூரணமான மனிதனின் சுபாவம் இந்த கருமங்களின் பக்கமே சாய்ந்திருக்கின்றது, எதுவரையெனில், ஒரு கூட்டத்தின் மீதுள்ள நேசத்தின் காரணமாக மற்றும் ஒரு கூட்டத்தின் துவேஷம், பிரிவினை வந்து சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, இன்னும், ஒரு கூட்டத்தைப் பாதுகாப்பதன் மூலம் அடுத்தவர்களின் உரிமைகளை எல்லை தாண்டுவதுமுண்டு; அதாவது, அவரின் நேசத்தினால் நாடு துறப்பு, மானபங்கம் ஏற்படுவது, உயிரிழப்பு சேதம் ஏற்படுவது உள்ளிட்டுவை நடப்பதுமுண்டு.


அல்லது, அவரின் நேசம் அவரின் (மன இச்சையைச் சாய்ந்து) அவரின் சுயநலத்திற்காகவே இருக்கும், அதாவது, அவரின் உபகாரம் உதவிகள் உள்ளிட்டவை காரணமாக அவரின் சுபாவம் அவருக்கு நேர்பட்டதாக ஆகிவிடும், ஏனெனில், மனித சுபாவங்கள் தனக்கு உபகாரம் செய்தவருக்கு நேர்பட்டதாகவும், அவரை நேசிக்கக் கூடியதாகுமே படைக்கப்பட்டுள்ளது.


இந்த எதார்த்தத்தை நீ புரிந்து கொண்டிராயின், இந்த அழகிய கோலங்கள், கருத்தியல் பூரணங்கள், கடமைப்பட்ட உபகாரங்கள் உள்ளிட்ட நேசத்திற்கான காரணங்களின் கண்ணோட்டத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விடயத்தில் கூர்ந்து சிந்தனை செய்து பாருங்கள்!


 ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கருத்தியல் ரீதியான இம்முன்று காரணங்களிலும் நேசம் வைப்பதற்குரிய தகுதியின் மொத்த சேகரமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கசடறத் தெரிந்து கொள்வீர்கள்!


 அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பூரணம், நற்குணங்கள், அகவியல் சிறப்புக்கள் பற்றி முதல் பாகத்தில் மேலதிகமான எந்த விளக்கத்திற்கும் தேவையில்லாத விதத்தில் மிகத் தெளிவாக விளக்கம் கூறியுள்ளோம்.  


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களுடைய உம்மத்தின் மீது சொரிந்த உபகாரங்கள், அருள்பாலிப்புக்கள் உள்ளிட்டவை முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, அல்லாஹ் தன்னுடைய அழகிய பண்புகளிருந்து இரக்கத்தையும், கருணையையும் அன்னாருக்கு வழங்கி, அதன் மூலம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மத்தின் மீது இரக்கமாயிருந்ததும், அவர்களுக்கு அருள் பாலித்ததும், அவற்றின் மூலமாக எவ்வாறு அவர்களின் நல்வழிப்படுத்தினார்கள்; எவ்வாறு அவர்கள் மீது பரிவு காட்டினார்கள்; அவர்களின் காரணமாக அவர்களை நரகத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதெல்லாம் முன்னர் கூறப்பட்டுள்ளன.


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களோடு இரக்கமாகவும் (ற ஊபாகவும்) கருணையாகும் (றஹீமாகவும்) இருப்பதோடு அகிலங்களுக்கு அருள் பாலிப்பவராகவும் (றஹ்மதுன் லில் ஆலமீனாகவும்) இருக்கின்றார்கள், அன்னார் நற்செய்தி கூறுபவர்(பஷீர்)ஆகவும்; அச்சமூட்டி எச்சரிப்பவர் (நதீர்) ஆகவும், அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனின் பக்கமாக அழைப்பவராகவும் இருக்கின்றார்கள், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத் 

தஆலாவின் திருவசனங்களை ஓதி காண்பித்தார்கள், அவர்களை பரிசுத்தப்படுத்தினார்கள், இன்னும், அவர்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்; அல்லாஹ்வின் திரு சன்னிதானத்தின் பக்கம் சேர்த்து வைக்கும் நேரிய வழியில் (ஸிராத்துல் முஸ்தகீமில்) வழி காட்டினார்கள்; இன்னும், இதுவல்லாத்தையும் புரிந்தார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.


 ‌எனவே, முஸ்லிம்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபகாரத்தை மிகைத்த சிறப்பும், கண்ணியமான உபகாரத்தையும் விட வேறு உபகாரம் வேறு என்னதான் இருக்கிறது? பிரயோஜனம் என்ற ரீதியில் அனைத்து முஸ்லிம்களிலும் பரவலாக அதிகம் காணப்படும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபகாரத்தை மிகைத்த ஒன்று வேறு என்ன இருக்கின்றது?


 ஏனெனில், அவர்கள்தான் அவர்களின் நல்வழிக்கான வழியாக விளங்கினார்கள், அறியாமை என்ற வழிகேட்டிலிருந்து அவர்களை அவர்கள்தான் வெளியேற்றினார்கள், அண்ணலார் தான் இருலோகத்தின் கண்ணியமான வெற்றியின் பக்கமாக அழைப்பவர்களாக இருந்தார்கள்; தங்களுடைய றப்பின் நெருக்கத்திற்கு இடை துணையாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள், இன்னும், அவர்கள் தரப்பிலிருந்து றப்பிடம் பேசுகின்றவர்களாகவும் உள்ளார்கள், அன்னார் தான் அவர்களுக்கான சாட்சியாகும், அவர்களின் நிரந்தரமான நிலைப்பாட்டிற்கும், முடிவில்லாத அருட்பாக்கியத்திற்கும் காரணமானவர்கள்.


ஸஹீஹான ஹதீதுகளில் நாம் ஏற்கனவே கூறியது போன்று ஷரியத்தின் அடிப்படையில் எதார்த்தமாக நேசம் வைப்பதற்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் தகுதி மிக்கவர்கள் என்பது இப்போது உங்களுக்கு திட்டவட்டமாக தெரிய வந்திருக்கும், நாம் இப்போது கூறியது போன்று வழக்கம், இயல்பு என்று அடிப்படையில் கூட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தான் நேசம் வைப்பதற்கு தகுதியானவர்கள் என்பதும் புரிந்து இருக்கும்; ஏனெனில், அன்னாரின் உபகாரங்கள் பொதுமையானதாகும்; இவ்வுலகில் ஒரு விடுத்தம் அல்லது இருவிடுத்தம் உபகாரம் செய்த மனிதனை சொற்பமான காலத்தில் துன்பம் விளைவிக்கும் அழிவிலிருந்தும், குறைந்த வேளையில் தடைபடும் நஷ்டத்திலிருந்தும் பாதுகாப்பவராக இருந்தால், அவரை மனிதன் இயல்பாகவே நேசிக்கின்றார்; இதற்கு முற்றிலும் மாற்றமாக ஒருபோதும் முற்றுபெறாத அருட்பாக்கியங்களை அள்ளிச்செரிப்பவர், ஒருபோதும் அழிந்து போகாத நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்பவர்தான் நேசம் வைப்பதற்கு மிக்க தகுதியானவர்ளாகும்.


நல்ல பண்புகளைக் கொண்டுள்ள அரசரை, அல்லது நன்நடத்தையில் பிரபலமான அதிகாரியை; அல்லது தூரத்திலிருக்கும் அறிவிலும், நற்குணத்திலும் பெயர் பெற்ற காழியை இயல்பாகவே மனிதன் நேசிக்கிறான்; அப்படியாயின், இந்த நற்குணங்கள் யாவும் சாயுச்சிய நிலையில் கொலு வீற்றிருக்கும் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அதிகமதிகம் நேசம் வைப்பதற்கு தகுதி மிக்கவர்களாகும்; சுபாவம் அவர்களில் தான் ஈர்க்கப்படுகிறது, 


எந்த ஒரு நபரும் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சடுதியாகக் கண்டால், திடுக்கிடுவார், அண்ணாரை நன்கு அறிந்து பழகியவர் பார்த்தாராயின், அண்ணாரை நேசிப்பார் என்று அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள்; அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக சில ஸஹாபாக்கள் பார்வையை அன்னாரின் பக்கமாக திருப்புவதில்லை என்பதை ஏற்கனவே நாம் கூறியுள்ளோம்.

பிறப்பில் குறையுள்ளவனே அஹ்லுல் பைத்தில் குறை காண்பான்

 

பிறப்பில் குறையுள்ளவனே அஹ்லுல் பைத்தில் குறை காண்பான்

➖➖➖➖➖➖➖➖➖➖

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,    

 மௌலவி பாஸில் ஷெய்கு       

  *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

    பரேலவி, ஸூபி, காதிரி..

➖➖➖➖➖➖➖➖

"உங்கள் மத்தியில் இரு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அதனைக் கடைப்பிடித்து நடந்தால் ஒருகாலும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்குர்ஆன், அடுத்தது எனது குடும்பம்" என்று நபிகள் நாதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜில் உரைத்தார்கள்.


நூல் : முஸ்லிம்


ஆதாரபூர்வமான இந்த ஹதீதை வஹாபிகள் ஏற்பதில்லை. இதன்படி நடப்பதில்லை. மாறாக அஹ்லுல் பைத்களின் மேல் சேற்றை அள்ளி வீசுவதில் அதிக பிரியம் கொண்டு அலைகின்றனர்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித குடும்பத்தை பாவமான காரியங்களிலிருந்து பாதுகாப்பதாக திருமறையில் அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான்.


மறுமையில் முதன் முதலில் கௌதர் தடாகத்தில் என்னைச் சந்திப்பவர்கள் எனது குடும்பத்தினர்களும், எனது உம்மத்தில் என்னை நேசித்தவர்களுமாகும்.


ஆதாரம் : தைலமி


அலியே! முதன் முதலில் சுவர்க்கம் புகுவோர் நால்வர்களாகும். 

1. நான் (நபிகள் நாதர்) 


2. நீர் (அலி அவர்கள்) 


3. ஹஸன் 


4. ஹுஸைன் அடுத்து நமது சந்ததியினர்


ஆதாரம் : இப்னு அஸாகிர், தப்றானி கபீர்


எனது குடும்பத்திலிருந்து எவரும் நரகம் செல்லக் கூடாது என்று அல்லாஹ்விடத்தில் கேட்டேன். அதனை அல்லாஹ் ஏற்று எனக்கு வழங்கியுள்ளான்..


ஆதாரம் : கன்ஸுல் உம்மால் - ஹதீது எண் - 34149


பாத்திமா தனது அபத்தைப் பாதுகாத்தார்கள். அதனால் அல்லாஹுத்தஆலா அவர்களது சந்ததிகளை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துள்ளான்.

 

ஆதாரம் : பஸ்ஸார், அபூயஃலா, தப்றானி, ஹாகீம்


இவ்வாறு கணக்கற்ற நபி மொழிகள் உள்ளன.

 அல்குர்ஆனையும் ஹதீதையும் பின்பற்றுவதாக கூறும் இவர்கள், குர்ஆனிலும், ஹதீதிலும் புகழ்ந்துரைக்கப்பட்ட அஹ்லுல் பைத்துக்களின் மேல் ஆத்திரம் கொண்டலைவது ஏன்? 


எவர் எனது குடும்பம், அன்ஸாரிகள், அறபிகள் ஆகியோர்களின் கௌரவத்தை மதித்து நடக்கவில்லையோ அவர் மூன்று குறைபாட்டில் ஏதாவது ஒன்றில் உள்ளவராக இருப்பார்.


1. முனாபிக்  

2. விபச்சாரத்தில் பிறந்தவன் 

3. அவனது தாய் சுத்தமில்லாத மாதவிடாய்க் காலத்தில் அவனைக் கருவுற்றிருப்பாள்.


ஆதாரம் : பைஹகி, ஷுஃபுல் ஈமான், 

பிர்தௌஸ் மௌதூரில் கிதாப் ஹதீ்ஸ் எண் - 5955 பாகம் - 03, பக்கம் - 626


அறுவர் மீது நான் சபித்துள்ளேன். இன்னும் அல்லாஹ்வும் சபித்துள்ளான். ஒவ்வொரு நபிமார்களினதும் துஆவும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும்.


1. அல்லாஹ்வின் வேதத்தில் (இடைசெருகல் செய்து) கூட்டுபவன்


2. அல்லாஹ்வின் விதியை (களாகத்ரை) பொய்யாக்குபவன்


3. தனது அக்கிரமத்தினால் அல்லாஹ் கேவலமாக்கியதை கண்ணியப்படுத்துபவன், அல்லாஹ் கண்ணியமாக்கியதை கேவலமாக்குபவன்.


4. அல்லாஹ் ஹறாமாக்கியதை ஹலாலாக்கியவன்


5. எனது குடும்பத்திற்கு தொல்லை கொடுத்து மரியாதையீனப்படுத்தியவன்.


6. எனது சுன்னத்தை (கேவலமாகக் கருதி) விட்டு விட்டவன்.

 

ஆதாரம் : திர்மிதி ஹதீஸ் எண் - 2161


எவராவது ஒருவர் தனது ஆயுளிலும், அல்லாஹ் தனக்கு வழங்கிய நிஃமத்திலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், எனது குடும்பத்தினருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளா விட்டால், அவர் ஆயுளில் பறக்கத்தும் இருக்காது. மறுமையில் கறுத்த முகத்துடன் என்னிடம் வருவார்.


ஆதாரம் : அபூநுஅய்ம் கன்ஸுல் உம்மால் ஹதீஸ் எண் - 34171


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித குடும்பத்துடன் மரியாதையாக நடக்காதவனின் பிறப்பில் குறைபாடு உண்டு என்றும், அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று கறுத்த முகத்துடன் மறுமையில் நபியவர்கள் முன் நிறுத்தப்படுவான் என்றும் ஹதீதில் வந்துள்ளதை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! 


அஹ்லுல் பைத்துக்களில் குறைகண்டு சொல்லொனாத் துயரைக் கொடுத்த கவாரிஜிகளின் வழியில் வஹாபிகளும் நடைபயில்வதை நன்கு அறியலாம். 


நபி வழியில் நடப்பதாகக் கூறும் வஹாபிகள் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தின் மீதும் புழுதி வாரி இறைப்பது ஏன். இதுதான் நபி வழியா? சிந்தித்துப் பாருங்கள்! 


உயிரை விடவும் மேலாக நபியவர்களை மதிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது. 


எவருக்கு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேரில் நேசம் இல்லையோ அவருக்கு ஈமான் கிடையாது என்று திருநபியவர்கள் கூறியுள்ளார்கள்.


ஆனால் குர்ஆனையும் ஹதீதையும் பி்ன்பற்றுவதாக வாய் கிழியக் கூறும் வஹாபிகள் நபிகளாரைப் புகழ்ந்து கவி பாடுவதை, உரையாற்றுவதை ஷிர்க் என்று கூறி தடை செய்கின்றனர். 


நபிமார்களும் இறைநேசச் செல்வர்களான வலிமார்களும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியார்கள் மனிதனில் முழுமை பெற்றவர்கள். அல்லாஹ்வை நெருங்கும் ஒருவர் நற்பண்புகள் நிறைவாகப் பெற்றவராக இருப்பார். அதனால் இவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களாகவும் இருப்பார். இதனால்தான்


"எல்லாம் நானே என்று என்னளவில் தஞ்சம் கொண்ட நல்லடியார் வழியைப் பின்பற்றுங்கள் என்றும்,

 "உண்மையாளர்களுடன் உறவாய் இருங்கள். வெற்றி பெறுவீர்கள்" என்றும், அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.


ஒரு புகழ் என்பது நற்பண்பின் வெளிப்பாடு, நற்பண்புள்ளவர் புகழுக்குரியவராகின்றார். எனின், நற்குணத்தின் தாயகமான நபிகள் நாயகத்தை புகழ்ந்துரைப்பதை ஒரு முஃமின் வெறுப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!


இஸ்லாம், உலகில் வலிமார்கள், அஹ்லுல் பைத்துக்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியது என்பது எவரும் மறுக்காத பேருண்மையாகும். இஸ்லாத்தை தங்களுக்குக் காட்டித்தந்த இந்த நல்லடியார்கள் மீது நன்றிக் கடனுடன் அவர்களைப் புகழ்ந்து, அவர்கள் பெயரால் நன்மை நாடி அன்னதானம் வழங்குகின்ற நற்செயலை வஹாபிகள் வெறுப்பதின் இரகசியம்தான் என்ன? என்பதை நாம் நன்கு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


வரலாற்றை சற்று பி்ன்நோக்கிப் பாருங்கள். ஸஹாபாக்கள் காலத்திலும், தாபியீன்கள் காலத்திலும் தோன்றிய வழிகேடர்களான கவாரிஜிகளும் முஃதஸிலாக்களும் தவிர வேறு எவராவது நபிகள் நாதரின் புனித குடும்பத்தினரையும், இமாம்களையும் இம்சித்து இழிந்துரைத்த வரலாற்றை நாம் கண்டிருக்கின்றோமா?


வஹாபிகள் வழி தவறியவர்கள் என்பதற்கும் அவர்கள் அல்லாஹ்வி்ன் சாபத்தைப் பெற்ற முனாபிக்குகள் என்பதற்கும் இஸ்லாத்தின் வளர்ச்சியை சகிக்க முடியாத சியோனிஷ வாதிகளின் அடிவருடிகள் என்பதற்கும் மேற்கண்ட விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.