السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 23 December 2024

முஹியித்தீன் பள்ளிவாசல்கள்...!!!*

 


*முஹியித்தீன் பள்ளிவாசல்கள்...!!!*


 கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. 


குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை. 


(இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்) 


சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹ்) அவர்கள் மகத்தான சேவைகளை நிறைவேற்றினார்கள். அவர்கள் இலங்கையில் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள் அடங்கலாக 350 சமய நிறுவனங்களை நிறுவினார்கள்.


முஹியித்தீன் பள்ளிவாசல் என்ற Concept ஐ உருவாக்கியவர் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள். இலங்கையில் மிக உயரமான இடத்திலும், இலங்கயில் மிகவும் தாழ்வான பகுதியிலும் உள்ள முஹியத்தின் பள்ளிவால்களையும் அவர்களே நிர்மாணித்தார்கள். 


முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூ அவர்களின் பணிகளை நினைவுகூறும் வகையிலயே "முஹியித்தின்" பள்ளிவால்கள் உருவாக்கப்பட்டன. 


இலங்கையில் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை " முஹியத்தீன்" பள்ளிவாசல்களே ஒரு ஊரின் 

"தாய் பள்ளியாக" அல்லது " பெரிய பள்ளியாக" கருதப்பட்டன. பல ஊர்களின் முஹியத்தின் பள்ளியிலேயே வெள்ளிக்கிழமை ஜூம்ஆவும் நடத்தப்பட்டது. ஊருடன் தொடர்புபட்ட பிரதான தீர்மானங்களை எடுக்கும் தளமாகவும், வருடாந்த கந்தூரிகள் போன்ற, ஒன்று கூடும் தீர்மானம் மிக்க இடமாகவும் முஹியித்தின் பள்ளிவால்கள் அதன் பணியை நிறைவேற்றி வந்துள்ளது.


பொதுவாக இலங்கையில் உள்ள பெரும்பாலான பெரிய பள்ளிவாசல்கள் Grand Mosques முஹியித்தீன் பள்ளிவாசல்களாகும். சில இடங்களில் சில வெறியர்கள் முஹியத்தீன் என்ற பெயர் சிர்க என்று கூறி அதனை சில முதலாளிகளின் குடும்பத்தவர்களின் பெயர்களால் பிரதியீடு செய்திருக்கிறார்கள். (ஊரான் கோழிய அறுத்து வாப்பாட பெயர்ல கத்தம் ஒதியதைப் போல) முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைமுறை வரலாற்றுக்கான சான்றுகளாகும். அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்போம்.


படத்தில் கடைசியாக உள்ள காலி தலாப்பிட்டிய முஹியத்தீன் பள்ளிவாசல் ஆயிரம் வருடங்களை தாண்டியதாகும். இது உமையாக்களிடமிருந்து அப்பாஸியர்களுக்கு ஆட்சிமாறும் Transitional period பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும். 


ஆயிரம் வருடங்கள் தாண்டிய பெரும்பாலான பள்ளிவாசல்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இவ்வாறான பள்ளிவாசல்களுக்குப் பதிலாக களினி கங்கை, அத்தனகல்ல ஒய என்பவற்றக்கு அருகில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டு அவ்வாறான இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெற்றன. கொழும்பு, கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் இதற்கான தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன. 


இமாமுல் அக்பர் குத்புல் அக்தாப் செய்யிதினா முஹியத்தீன் அப்துல் காதிருல் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களில் காதிரியா ஆன்மீக வழியமைப்பும் இமாம் ஷாபிஈ றஹிமஹூல்லாஹ் அவர்களின் மத்ஹபும் எமது இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வழிகளாக இருந்தன என்பதறாகு இந்தப் பள்ளிவாசல்களே மிகச் சிறந்த சான்றுகளாகும்


மத்ஹபுகள் தரீக்காக்கள் மிம்பர்கள், மினாராக்கள், ஹவ்ழ்கள், கப்றுஸ்தானங்கள், அஸா என்பனவும் எமது அடையாளங்களே


படத்தில் உள்ள பள்ளிவாசல்கள் ஆயிரம் ஆண்டுகள் முதல் 200 வருடங்கள் பழமையான இலங்கையின் முஹியத்தீன் பள்ளிவாசல்களாகும்

மேலும்

மேலும் தெரிந்து கொள்ள


பஸ்ஹான் நவாஸ்

Fazhan Nawas

அலி அஹ்மது ரஷாதிக்கு புத்தி இல்லை

 


*அலி அஹ்மத் றஷாதி புத்தி தடுமாறிப் பேசுகின்றார்.*
=======================
கலீபத்துல் காதிரி,அல்ஹாஜ்,     
 மௌலவி பாஸில் ஷெய்கு   
   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
  பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 
=======================
கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் பெயரால் இலங்கையில் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன, சில ஊர்களில் தப்லீக் ஜமாஅத்தினர் அப்பெயரை இல்லாதொழித்துள்ளனர், ஆயினும், இன்னும் கணிசமான பள்ளிவாசல்களும், தக்கியாக்களும் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன.

இப்பெயர் கொண்ட சகல பள்ளிவாசல்கள், தக்கியாக்களில்  கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் பெயரால் மௌலிதுகள் ஓதப்பட்டு கந்தூரிகள் கொடுக்கப்பட்டு வந்தன, இப்பொழுதும் கணிசமான பள்ளிவாசல்களில் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மௌலவி அலி அஹ்மத் றஷாதி முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்று இந்த உண்மையை மறைத்து  முஹ்யித்தீன் ஆலிம் என்ற வைத்தியரின் பெயரை நாடு பூராகவுமுள்ள பள்ளிவாசல்களில் வைக்குமாறு கண்டி ராஜா கட்டளையிட்டதாக புதுக்கதை பேசுகின்றார்,  

இந்தியாவில் தமிழ் நாடு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும்  முஹ்யித்தீன் மஸ்ஜிதுகள் உள்ளன, அதற்கு என்ன புருடாவை வைத்திருக்கின்றாரோ தெரிய வில்லை,  தடுமாற்றம் முற்றும் போது அதற்கும் ஒரு ராஜா வருவார்.

 இவரதுபேச்சு இவர்  மனதில் இருக்கும்  குத்பு நாயகத்தின் மீதுள்ள வெறுப்பையும், முட்டாள்தனத்தையுமே  வெளிப்படுத்துகின்றது,

இவர் பின்பற்றும் டில்லி தப்லீக் மார்க்ஸின் ஜீ ஸஃதுள்ளாஹ் காந்தலவி    மஸ்ஜிதுல் அக்ஸாவை விட டில்லி மர்கஸ் மேலானது என்று கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மடசாம்பிராணி தப்லீக் வாலாக்களுக்கு இவர் கூறுவது  பொருந்தும்,

 வரலாறு தெரிந்த சாதாரண அடி முட்டாளும் இவர் பேச்சை காது கொடுத்துக் கேட்க மாட்டான்.

இவர் கனடா சென்ற பின், அங்குள்ள குளிர் இவர் அறிவை  உறைய வைத்து விட்டது என்பதற்கு இதுமட்டுமல்ல பூனை வளர்த்தால் ஷைத்தான் வீட்டில் குடியிருக்கும் என்று கூறி உலக நகைப்பு நாயகனாக வலம் வந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 

இதுபோன்று இன்னும் புதுப்புது  நகைப்பான கதைகளையெல்லாம் இவர் அரங்கேற்றுவார், புத்தி தடுமாறினால்  புலம்பல்கள்  முற்றவே செய்யும். புத்தி தடுமாற்றம் எந்தளவு முற்றியுள்ளது என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்,


Saturday, 21 December 2024

பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை

 

பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை - #Pyramid Sceme 


அறிமுகம்


இன்று இலகுவான வழிகளில் அதிகதிகம் சம்பாதித்துக் கொள்வதற்கான புதிய வர்த்தக, வியாபார, பொருளீட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து கொண்டே உழைத்துச் சொத்து சேர்க்க முடியும் என்று கவர்ச்சிப் பிரசாரம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றிலுள்ள முறைகேடுகள், இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் முஸ்லிம்களும் இதில் ஈடுபடுகின்றனர்.


எனினும், முஸ்லிமை பொறுத்தவரை அது பற்றி விசாரித்து, இஸ்லாமிய வரையறைகளை அவதானித்து, ஆலிம்களின், அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றே நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அவசரப்பட்டு காரியத்தில் இறங்கி கைசேதப்படுவதை விடுத்து நிதானமாக செயற்படுவதுதான் ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும்.


இவ்வடிப்படையில், சந்தையில் பல வருடங்களாக உலா வந்து கொண்டிருக்கும் பிரமிட் வியாபாரக் கட்டமைப்பு முறைமை பற்றிய ஷரீஆவின் சட்டத்தை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.


#பிரமிட் வியாபார கட்டமைப்பு முறைமை


பிரமிட் கட்டமைப்பு வியாபார முறைமை குறித்து இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 'பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006' இல.4 எனும் சிற்றேட்டுத் தொடரில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது :


இத்திட்டத்தில் புதிதாக பங்குபற்றுபவர்கள் இணைந்து கொள்வதற்கு முற்பணமாக ஓர் கட்டணத்தை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிகமாக பங்குபற்றுபவர்களின் மூலமாகவும் அதேநேரம் தற்போதுள்ள பங்குபற்றுபவர்களினால் கொண்டுவரப்படும் புதிய பங்குபற்றுபவர்கள் மூலமாகவும் தான் இலாபங்கள் (பணம் அல்லது ஏனைய சலுகைகள்) கிடைக்கும் என பங்குபற்றுபவர்களுக்கு உறுதியளிக்கப்படுகின்றது. எனினும், இத்திட்டங்களானது பெருமளவில் பொருட்கள் அல்லது சேவைகளினை விற்பனை செய்யும் திட்டங்களாக போலியான முறையில் காணப்படுகின்றன.


 

#பிரமிட் வியாபார கட்டமைப்பு முறையின் #இயல்புகள்


✅ 01. இத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிதாக பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது வேலைகளை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தினை முதலீடு செய்யுமாறு வேண்டுகிறார்கள் என்பதுடன் பின்னர் அப்பொருட்களை அல்லது சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களை கொண்டுவருமாறும் வேண்டப்படுகின்றனர்.


✅ 02. சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளரூடாக மட்டுமே இவை கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.


✅ 03. இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக்கட்டணம் பெரும்பாலும் உயர்வாகவே காணப்படும். இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையினூடாக கட்டணமாக விதிக்கப்படலாம்.


✅ 04. இப்பொருட்களுக்கு இரண்டாந் தரச்சந்தை இல்லாதிருப்பதுடன் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனைக்குப் பிந்திய சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.


✅ 05.பங்குபற்றுபவர்களினால் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு வழமையாக வழங்கப்படுவதில்லை ஆனால் அதிகூடிய வருமானங்ளைப் பெற்றுக்கொள்வதானால் புதிதாக பங்குபற்றுபவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகின்றது. ஒரு பங்குபற்றுபவரின் நிதி வருமானங்கள் அவரினால் கொண்டு வரப்படும் புதிய ஆட்சேரப்புக்களின் எண்ணிக்கையிலே தங்கியிருக்கின்றது.


✅ 06. இறுதி நுகர்வோருக்கு பொருட்கள் அல்லது சேவைகளை சில்லறையாக விற்பனை செய்யும் நோக்கம் இத்திட்டத்தில் சிறிதளவாகவே காணப்படுகின்றது.


✅ 07.0பொதுவாக ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர்கள் திட்டத்தின் கம்பனி பற்றிய வதிவிடம், வீதி, விலாசம், அல்லது தொலைபேசி இலக்கம் என்பவற்றை வெளிப்படுத்துவதில்லை.


✅ 08.ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர் நம்பமுடியாத வருமானங்கள் (உ-ம் : சட்டரீதியாக மாதாந்தம் ரூ 100,000 இனைப் பெறுதல்) அல்லது 'வளமானதும் சந்தோச மானதுமான வாழ்க்கை' , 'இலகுவாக ஆட்களை சேர்துக்கொள்ள முடியும்' போன்ற நன்மைகளைப்பெற முடியும் என உறுதிகளை அளிக்கின்றனர்.


✅ 09. திட்டத்தின் அடிமட்டத்தில் இருக்கும் புதிதாக பங்கு பற்றியவர்கள் புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்ய முடியாத நிலை எழும் போது அவர்கள் தமது முதலீட்டை இழக்க வேண்டி நேரிடும் என்பதுடன் அத்திட்டம் முறிவடையும் நிலையையும் அடையும்.


✅ 10. செயற்பாட்டுப் பிரதேசங்கள் பிரிவு அல்லது செயற்களம் தொடர்பான நியாயமான ஓர் திட்டத்தை கொண்டில்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்கள் பொதுவாக எந்தவொரு நியாயமான அல்லது பகுத்தறிவான வறையறைகள் இல்லாமல் அதிகரித்த ஆட்சேர்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.


#பார்க்க: இலங்கை மத்திய வங்கியின்


பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006, இல.4

• தினகரன் வாரமஞ்சரி, 2011.08.07 – பக்கம் :12

 


#பிரமிட் வியாபாரக் கட்டமைப்பு முறைமையின் #வகைகள்:


பிரமிட் வியாபார கட்டமைப்பில் இரண்டு முறைகள் உள்ளன.


🛑 01. வெற்று பிரமிட் கட்டமைப்பு(Naked Pyramid Scheme) என்பது முதலாவது முறைமையாகும். இதன் பின்னணியில் பொருட்கள் இருக்காது. இது வெறும் பணத்தை அடிப்படையாகக் கொண்டது. பணம் செலுத்தி உறுப்பினராகிய பின் பலரை உறுப்பினர்களாக்குவதன் மூலம் பணம் சம்பாதிப்பதாகும்.


🛑 02. பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பிரமிட் கட்டமைப்பாகும். இதற்குMulti-Level அல்லதுNetwork Marketing Scheme என்று செல்லப்படும். இதில் உறுப்பினராகுவதற்கு குறிப்பிட்ட பொருளை வாங்குதல் வேண்டும்.

பார்க்க: (இலங்கை மத்திய வங்கியின் 'பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும், வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் - 2006, இல.4)


 


#பிரமிட் வியாபார கட்டமைப்பு இலங்கையில் #தடை செய்யப்பட்ட ஒன்றாகும்


மத்திய வங்கியின் அறிக்கைப்படி, இவ்வியாபார முறைமை இந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்பதுடன் இத்திட்டத்தில் பங்குபற்றி குற்றவாளியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.


#பிரமிட் மற்றும் வலையமைப்பு வியாபார முறை (Network Marketing) தொடர்பான #ஷரீஆவின் கண்ணோட்டம்


பிரமிட் மற்றும் வலையமைப்பு 'Naked Pyramid Scheme' மற்றும் 'Network Marketing / Multi Level' வியாபார முறைமை குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும் சமகால இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலானோர் இதனை ஹராம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இஸ்லாமிய பொருளியல் துறை அறிஞர்களும் இவ்வியாபார முறைமை ஆகுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.


#ஹராம் எனக் கூறும் அறிஞர்கள் பின்வரும் நியாயங்களை முன்வைக்கின்றனர்


📛 01. வட்டியின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றமை.ஏனெனில், அதிகளவு பணம் சம்பாதிக்கும் நோக்கில் குறைந்தளவு பணம் செலுத்தப்படுகின்றது. விற்கப்படும் பொருட்கள் பணம் கைமாற்றப்படுவதை மறைப்பதற்கான ஒரு யுக்தியாகும். உண்மையில் இப்பொருட்களை வாங்கும் நோக்கம் இருப்பதில்லை. மாறாக, அதில் உறுப்பினராகி அதிக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு பொருளை கொள்வனவு செய்யும் பொழுது அதன் நோக்கத்தையும் அவதானித்தல் வேண்டும் என்று இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமி ரஹிமஹுல்லாஹ் துஹ்ஃபாவில் குறிப்பிடுகின்றார்கள்.


وزعم أن الصحيح مراعاة اللفظ في المبيع لا المعنى غير صحيح بل تارة يراعون هذا وتارة يراعون هذا بحسب المدرك (تحفة المتاج. كتاب البيع )


📛 02. ஒருவகை ஏமாற்றமும் குளறுபடியும் காணப்படுகின்றது.ஏனெனில், இதில் இணைபவர்கள் அதிக இலாபமீட்டலாம் அல்லது ஈட்ட முடியாமலுமாகலாம் என்ற நிச்சயமற்ற தன்மை உள்ளது. என்றாலும், அதிகமானோர் இதில் வெற்றியடைவதில்லை.

عن أبي هريرة رضي الله عنه قال : نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاة وعن بيع الغرر -كتاب البيوع. باب بطلان بيع الحصاة والبيع الذي فيه غرر- صحيح مسلم


நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஏமாற்று வியாபாரத்தைவிட்டும் தடை செய்துள்ளார்கள். நூல் : ஸஹீஹு முஸ்லிம்


 


قال الرملي في نهاية المحتاج (كتاب البيع) : الغرر هو ما احتمل أمرين أغلبهما أخوفهما


ஏமாற்றம் என்பது இரண்டு விடயங்களைக் சாத்தியமானதாக் இருக்கும் அவற்றில் பொரும்பாலும் அச்சுறுத்தலே மேலோங்கியிருக்கும். (நிஹாயதுல் முஹ்தாஜ்)

 

📛 03. பொது மக்களின் சொத்து, செல்வங்களை அநியாயமாக சுரண்டும் வகையில் இவ்வியாபார முறைமை அமைந்திருக்கின்றமை.இவ்வியாபார ஒழுங்கில் ஆரம்பத்தில் இணைந்து கொள்கின்றவர்கள் அவர்களுக்குக் கீழால் இத்திட்டத்தில் இணைந்து கொள்பவர்களின் உழைப்பின் மூலம் கூலியையும் பெற்றுக் கொண்டு அதிகளவில் இலாபமும் அடைவர். கம்பனி கொள்ளை இலாபம் பெறும். இத்திட்டத்தில் கடைசியாக இணைந்து கொள்கின்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர்.

قال الله تعالى : ولا تأكلوا أموالكم بينكم بالباطل (سورة البقرة,188)


அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனில் 'உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்.' (அல்-பகரா:188) என்று கூறுகின்றான்.


📛 04. இதில் ஈடுபடுவர்கள் மற்றவர்களைக் கவர்வதற்காக பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகின்றனர்.


📛 05. சிலர் இதனை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஷதரகு| வியாபார முறையுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் தரகு வியாபார முறையுடன் இது முரண்படுகிறது. ஏனெனில், தரகு வியாபார முறையில் தரகர் பொருளை கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதில்லை. ஆனால், வலையமைப்பு மற்றும் பிரமிட் முறைகளில் தரகர் கட்டாயமாக பொருளைக் கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்.


எனவே, இவ்வியாபார முறைமையில் சந்தேகத்துக்கிடமான, மயக்கமான பல விடயங்கள் இருக்கின்ற அதேவேளை, இது ஒரு வகையான வட்டி, சூதாட்டம், மோசடி, ஏமாற்றம் போலத் தோன்றுவதனாலும், வியாபார ஒழுங்குகள் பேணப்படாதிருப்பதனாலும் இவ்விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை அஞ்சி தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இலலையெனில் ஹராத்தில் வீழ்ந்து எம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலை உருவாகும்.


#வலையமைப்பு ( #networkmarketing Marketing) மற்றும் பிரமிட் வியாபார முறைமைகள் ஹராமென தீர்ப்பு வழங்கிய ஃபத்வா நிலையங்கள் சில பின்வருமாறு:


❤️ 01. ஸஊதி அரேபியாவின் கல்வி, ஆய்வு, ஃபத்வாவுக்குமான ஒன்றியம்(ஃபத்வா இல:22935)


❤️ 02. சூடானிலுள்ள இஸ்லாமிய ஃபிக்ஹ் மையம்


❤️ 03. ஜோர்தான் இஸ்லாமிய ஃபத்வா நிலையம், (ஃபத்வா இல:1995)


❤️ 4. இஸ்லாமிய சட்ட மையம், இந்தியா (ஃபத்வா 16ஃ4)70


❤️ 05. கட்டார் இஸ்லாமிய ஃபத்வா நிலையம்(islamweb.net, ஃபத்வா 35492)

எகிப்தின் ஃபத்வா நிலையம் (ஆரம்பத்தில் பல நிபந்தனைகளுடன் இவ்வியாபாரத்தை அனுமதித்த இந்நிலையம் தற்பொழுது கூடாது என்று பத்வா வழங்கியுள்ளது) (ஃபத்வா இல:3861)


❤️ 06. ஃபத்வா நிலையம், தாருல் உலூம் கராச்சி - பாகிஸ்தான்


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.


அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் கபூரி

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி

செயலாளர், ஃபத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். ஐ. எம். ரிழ்வி முஃப்தி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


31 August 2024

#PyramidScheme #pyramidscam #sgoscam #sgo #ziyadaia

Network marketing அதாவது


 Network marketing அதாவது 

التسويق الشبكي 

( அத்தஸ்வீக்குஷ் ஷபகீ) 

அதே போல் பிரமிட் ( Pyramid) الهرمي ( அல் ஹரமீ )  

அதே போல் 

التسويق التطبيق المعاصرة 

( அத் தஸ்வீக்குத் தத்பீகுல் முஆஸரா) 

சமகால பயன்பாட்டு சந்தைப்படுத்தல்


போன்ற வியாபார முறைமைகள், அதன் பயன்பாடுகள், இதில் உள்ள சாதக பாதக அமைப்புகள், ( அர் ரிப்ஹு) الربح (இலாபம் )அதே போல் ( அர் ரிபா) الربا (வட்டி )இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..? வியாபாரத்தோடு தொடர்புடைய இன்னும் பல...


என்பவைகள் பற்றி தெளிவாக உலமாக்கள் படித்திருந்தால் நாங்கள் ஆய்வு பன்னித்தான் ஹராமா ஹலாலா என்பது பற்றி வெளியிடுவோம் என்று சப்பைக்கட்டு காரணம் சொல்லத் தேவையில்லை...


காரணம் #கிதாபுல்_புயூஃ 

كتاب البيوع 

என்ற வியாபாரத்தைப் பற்றி பேசும் பிக்ஹ் பாடத்தில் அதாவது #முஆமலாத் 

معاملات 

கொடுக்கல் வாங்கல் பற்றிய பிரிவிற்குள் தெளிவாகவே விரிவாகவே இமாம்கள் எழுதி இருக்கிறார்கள்..


மட்டுமல்ல ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னனென்ன வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி ஒவ்வொரு வியாபாரதின் பெயரையும் சொல்லி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள்...


வரக்கூடிய அந்த ஹதீஸ்களின் விரிவுரையில் மேலான இமாம்கள் குறிப்பிட்ட தடை வியாபாரத்தை எடுத்து அப்படி என்றால் என்ன..?அதற்குள் எத்தனை #மஸ்அலாக்கள் அடங்குகிறது என்பவைகளை மிக துள்ளியமாக எழுதி இருக்கிறார்கள்...

அதே போல் எந்த வியாபாரம் ஆகுமானது என்பது பற்றியும் ஹதீஸ்களில் தெளிவாகவே காணமுடியும்..


ஹிஜ்ரி 631 ல் பிறந்து ஹிஜ்ரி 676 ல் வபாத் ஆன ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்ற ஷாபி மத்ஹபின் மிக முக்கியமான இமாம் அல் ஹாபிழ் நவவீ ரஹ்மஹுல்லாஹ் அவர்களுடைய ஷரஹ் முஸ்லிம் அதாவது ஸஹீஹ் முஸ்லிமுடைய விரிவுரையை பார்த்தால் தடை செய்யப்பட்ட வியாபாரம் என்ன.?என்ற ஹதீஸ்களின் விளக்கவுரையில் தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள்....


அதே போல் அவர்களின் அல் மஜ்மூஃ ஷரஹுல் முஹத்தப் 

( المجموع شرح المهذب ) 

என்ற பிக்ஹ் கிதாபிலும் தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள்....


இவைகளை சரிவர படித்திருந்தால் இந்த SGO mine போன்ற புதிய முறை பணம் திரட்டல்கள்,சந்தைப்படுத்தல்கள் எல்லாம் எதில் அடங்கும் என்பது தெளிவாகும்..


நீங்கள் படிக்கவில்லை..வெறுமனே செடுபிகட்டோடு மௌலவி என்று உலாவருகிரீர்கள்.


படித்திருந்தால் ஏன் ஆய்வு பன்ன வேண்டும் பின்பு தான் பத்வாவும் விழிப்புணர்வும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டுகள்....?


முதலில் மார்க்கத்தை நன்றாக படிங்க உலமாக்களே!! கிதாபுகளை வாசியுங்கள்...அறிவை தேடிக்கொண்டே இருங்கள்.அது மௌலவி செட்டுபிகட்டோடடு முடுவுற்றது அல்ல..

மக்களை நல்வழிப்படுத்துங்கள்

ஹராத்தை விட்டும் பாதுகாருங்கள்.

பயான்களில் தெளிவுபடுத்துங்கள்...

@highlight 


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி

#நாவைப் பேனுவோம்

 

நாம் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ விரும்பின் ஒழுக்கம் பற்றிய வரையிலும், பணம்பற்றிய வரையிலும் எச்சரிக்கை யாயிருந்தால் மட்டும் போதாது, நம்முடைய வாயிலிருந்து வெளிவரும் மொழிகள் பற்றிய வரையிலும் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.


எனவே தான் ஓர் அறிஞனும் 'உன்னுடைய பணப் பையையும் வாயையும் எச்சரிக்கையுடன் திற. உன்னுடைய பணமும் புகழும் வளர்ந்தோங்கும்' என்று கூறினான். இதனை அறிவாளிகள் எப்பொழுதும் சிரமேற்கொண்டு செயலாற்று வர். வாழ்வதிலும் சீரான வாழ்வே வாழ்வர். பேசுவதிலும் 'யாரிடம் யாரைப்பற்றி எதனை எப்பொழுது; எங்கே வைத்துக் கூறுகின்றோம்' என்பதை நன்கு சிந்தித்தே பேசுவர்.


முட்டாள்களின் இதயமானது அவர்களின் வாயில் இருக்கும் பொழுது அறிவாளிகளின் வாயானது அவர்களின் இதயத்தில் இருக்கும்.


தாம் நினைப்பதையெல்லாம் முட்டாள்கள் வெளியே கொட்டி விடும் பொழுது, அறிவாளிகள் தாம் சொல்வதை எல்லாம் முதலில் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.


முட்டாள்களின் ஆன்மாவானது அவர்களின் நாவின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களின் இதயம் அவர்களின் உதடுகளில் நாட்டியமாடும் பொழுது, அறிவாளிகளின் ஆன்மா அவர்களின் நாவின் அடியிலே அமைதியாக அடங்கிக் கிடக்கிறது. அவர்களின் நா அவர்களின் மூளையின் கீழே பதுங்கிக் கிடக்கிறது.


அறிவாளிகள் பலர் பல்லாண்டுகளாகத் தங்களுடைய மூளை யை ஒன்று சேர்த்து ஆராய்ந்த போதினும் மறுமொழி கூற இயலாத கேள்விகளை ஒரு முட்டாள் சில நிமிடங்களில் கேட்டு விடுவான். அவர்களுக்கு இறைவன் நாவைப் படைத்தது உணவை ருசிபார்த்து உண்பதற்கேயன்றி உரையாடுவதற்கன்று என்பதை அந்த முட்டாள்கள் உணர்வ தில்லை. தாமாகவே எதையாவது உளறிக் கொண்டிருப்பார் கள். அவர்களின் உளறல்களைக் கேட்பவர்கள் அவர்கள் ஒருவரேயன்றி வேறெவரும் இல்லை என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.


மிருதவான நாவைப் பெற்றிராதவர்கள் கனமான முதுகைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையும் அவர்களுக்கு விளங்காது.


கால் தவறிவிட்டால் மீண்டும் ஒழுங்காக அடியெடுத்து வைத்து நடக்கலாம். நாத்தவறிவிட்டால் மீளமுடியாது என்பதும், முள்ளில்லாத நாவானது முட்களையும் உடைத்துவிடும் என்பதும், அது மூன்று அங்குல நீளமுள்ள தாகவே இருந்த போதினும் ஆறுஅடி உயரமுள்ள மனிதனைக் கொன்றுவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.


ஒருவர் லுக்மான் ஹக்கீம் அவர்களிடம் சென்று மேலான பொருளைக் கொண்டு தம்முடைய பசியை ஆற்று மாறு வேண்டிக் கொண்டார். அவர்களும் ஓர் ஆட்டை அறுத்து அதன் நாவை எடுத்துக் கறி சமைத்து அவர்களுக்கு விருந்தளித்னர்.


அடுத்த நாள் அவர் லுக்மான் ஹக்கீமைப் பார்த்து மிகவும் கெட்ட பொருளைக் 'கொண்டு தன் பசியை ஆற்றுமாறு வேண்டிக் கொண்டார். லுக்மான் ஹக்கீம் அவர்களும் மற்றொரு ஆட்டை அறுத்து அதன் நாவைக் கறி சமைத்து அவரின் முன் வைத்தனர்.


இதைக் கண்டதும் அவருக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. அப்பொழுது லுக்மான் ஹக்கீம் அவர்கள், 'மனிதனிலே உள்ள மிகவும் நல்ல உறுப்பும் நாதான்; மிகவும் கெட்ட உறுப்பும் நாதான். அவற்றைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு அது மனிதனை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்றது' என்று கூறினர்.


உலகில் ஏற்படும் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் இந்த நா தான். அதற்கு ஒருவன் அதிக உரிய யளித்துவிடின் அது அவனைச் சிறை செய்துவிடுகின்றது. யார் தன்னுடைய நாவைச் சிறை செய்து வைக்கவில்லையோ அவனை அவனுடைய நாவே சிறை செய்து விடுகிறது. அறிவாளியாகப் பிறரால் கருதப்பட விரும்புபவன் தன்னு டைய நாவை அடக்கி ஆள்வதில் அறிவாளியாக இருக்க வேண்டும்.


வாய் மூடி அமைதியாக இருப்பது அறிவாளிகளின் ஆபரணம் மட்டுமன்று; அஃது அறிவற்றவர்களுக்கு ஆபரணமாகவும் தற்காப்பாகவும் அமைந்துள்ளது. போதிய அறிவும் திறனும் பெறாதவர்களின் நீங்காத நல்லொழுக்க மாக வாய்மூடி மௌனமாயிருக்கும் தன்மை அமைந்திருக்க வேண்டும்.


ஏனெனில், அது தங்களின் தவறுகளையும் இரகசியங் களையும் மற்றவர்களுக்கு மறைப்பதோடு மற்றவர்களின் தவறுகளை நன்கு கவனிக்க அவர்களுக்கு வாய்ப்பு நல்குகிறது. மேலும் வீண் விவாதத்திலும் பாவத்திலும் ஈடுபடாமல் ஒருவனைக் காப்பாற்று கிறது.இதனை ஒருவன் உணர்ந்தால் அவன் ஒருபோதும் முட்டாளாக இருக்க மாட்டான்.


ஆனால் முட்டாள்களோ இதனை ஒருபோதும் உணர மாட்டார்கள். பேசுவதால் தான் தங்களின் ஆற்றல் வெளியாகின்றது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, ஆற்றல் மிக்கவர்களெல்லாம் வாய் மூடி அமைதியாக இருக்கின்றனர்.


அவர்கள் வாய்மூடி இருக்கும் தன்மையானது அவர் களின் ஆற்றலையும் சக்தியையும் நன்கு வெளி காட்டுகின்றது. அவர்களின் மௌனமானது சண்டமாருத சொற்பொழிவைவிட வன்மையானதாக இருக்கிறது.


ஆனால் அதிகமாகப் பேசுவதென்பது ஒருவிதப் பலவீனமே யன்றி வேறில்லை. அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகப் பேசிப் பற்பல தவறுகளை இழைக்கும் பொழுது. தேவைப்படும் பொழுது அளவோடு பேக்கின்றவர்கள் தவறுகள் செய்வதைவிட்டும் தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.


முட்டாள்கள் ஒரு சிறிய கருத்தை விளக்க அதிகமான மொழி களைப் பயன்படுத்தும் பொழுது அறிவாளிகள் ஒரு பெரும் தத்துவத்தைச் சில மொழிகளில் விளக்கி விடுகின்றார்கள்.


ஆனால் முட்டாள்களோ எதையாவது பேசினால் தான் தங்களை மக்கள் அறிவாளிகள் என்று கருதுவார்கள் என எண்ணிக் கொண்டு எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாயை மூடிக்கொண்டி ருப்பின் மக்கள் அவர்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்வர்.


ஏனெனில், அறிவாளிகள் போன்று பேசுவதைவிட அறிவாளிகள் போன்று தோற்றம் வழங்குவது எளிது. ஆனால் இந்த முட்டாள்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்தவும் எவராலும் இயலாது.


அமைதியாக அடங்கிக் கிடக்கும் நாவே அறிவுள்ள தலையை உண்டு பண்ணுகின்றது என்று உணர்ந்து அறிவாளிகள் அமைதியாய் இருக்கும் பொழுது, முட்டாள்கள் எதையாவது உளறிக் கொண்டிருப்பதே தங்களின் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தச் சிறந்த வழி என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.


தங்களைவிட அறிவாளிகளுடன் பொழுதும், முன்பின் தெரியாத அன்னியர்களுடன் உரையாடும் பொழுதும் மிகவும் எச்சரிக்கையுடன் உரையாட வேண்டும். ஏனெனில் நம் உரையாடலில் காணப்படும். குறைகள் மூலம் அறிவாளிகள் நம்முடைய தரத்தை நிதானித்து அறிந்துவிடுவர். உரையாடு


நாவைப் பார்த்து மருத்துவர்கள் நோயை அறிந்து கொள்வது போன்று அறிவாளிகள் ஒருவனின் நாவைப் பார்த்து அவனுடைய மூளையிலும் இதயத்திலும் உள்ள நோயை அறிந்து கொள்வர்; அன்னியர்கள் நம்மைப் பேச்சில் மிகைத்துவிடப் பார்ப்பார்கள் என்ற உண்மைகளும் இந்த முட்டாள்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள் தங்களையே தாங்கள் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்களை அவர்கள் எவ்வாறு அறிவாளிகளாக எண்ணிக் கொள்வர்?


முட்டாளை மலை உச்சியிலுள்ள மனிதனுக்கு நிகராகக் கூறலாம். அவனுக்கு எல்லோரும் சிறியவராகத் தான்


காணப்படுவர். ஆனால் எல்லோருக்கும் அவன் சிறயவனாகக் காணப்படுவான். எனவே மற்றவர்கள் அவனுக்கே அவனுடைய குறைகளை எடுத்துக் காட்டிய போதினும் அதனை விளங்கிக் கொண்டு அவன் திருந்திக் கொள்ள மாட்டான்.


நாம் எதைச் செய்ய வேண்டாமென்று தடுக்கின் றோமோ, அதனையே முட்டாள்கள் வேண்டுமென்று செய்வார்கள். அவர்க ளுக்குத் தன்புத்தியும் கிடையாது; சொற்புத்தியும் கிடையாது. அவர்களின் செயல் அவர்க ளுக்கு எப்பொழுதும் சரியாகவே தென்படும்.


அவர்களைப் புகழ்வதற்கு அவர்களைவிடப் பெரிய முட்டாள்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் தங்களைத் திறமைசாலிகள் என்றும், தவறே செய்யாத நிறைமனிதர்களென்றும் எண்ணிக் கொள்வார்கள். திறமை சாலிகள் என்றும் நிறை மனிதர்கள் என்றும் தங்களை எண்ணிக் கொள்ளும் இவர்களே வடிகட்டின முட்டாள் களாவார்கள்.


இதனையே புத்த மகானும், "தன்னுடைய முட்டாள் தனத்தை உணரும் முட்டாள் அந்த அளவு வரையில் அறிவாளியேயாவான். ஆனால் தன்னை அறிவாளி என்று எண்ணிக் கொண்டிருக்கும் முட்டாளோ உண்மையில்


கூற முற்படுவார்கள். அவர்கள் தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொள்வதிலிருந்தே அவர்களை முட்டாள்கள் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.


ஏனெனில் முட்டாள்கள் தங்களை அறிவாளிகள் போன்று தானே காட்டிக் கொள்வர். முட்டாள்களின் நூலின் முதல் அத்தியாயம் தன்னைத் தான் அறிவாளியாகக் கருதிக் கொள்வது என்பது தானே.


இந்த முட்டாள்கள் பிறருடைய குற்றம் குறைகளைத் தான் இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பார்க ளேயன்றித் தங்களின் குற்றம் குறைகள் அவர்களின் கண்களுக்கே அணுவேனும் தென்படாது. அவர்கள் தாங்கள் செய்யும் வேடிக்கைகளைப் பார்த்தே சிரித்து மகிழ்வார்கள் டு அவர்களின் அடக்கமற்ற வெடிச்சிரிப்பிலிருந்தே அவர்கள் தங்களை முட்டாள்கள் என்று உலகிற்குப் பறை முழக்கி விடுவார்கள். ஆனால் அதனை அவர்கள் விளங்கிக் கொள்வ தில்லை. அளவற்ற சிரிப்பானது அடுத்தகணமே துன்பத்தை வருவித்துவிடும் என்பதும் அவர்களுக்கு விளங்காது.


இவ்விதம் நான் கூறுவதிலிருந்து மனிதன் சிரிக்கவே கூடாது என்று கூறுவதாக நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டாம். சிரிக்கவே தெரியாதவன், சிரிக்கவே செய்யாத வன், கொலைகாரன், வஞ்சனை யாளன் என்றே நான் கூறுவேன். அவ்விதம் உள்ளவன் எந்தக் கொடும் செயலைச் செய்யவும் தயங்கமாட்டான் என்றும் எடுத்துரைப்பேன்.


ஆனால் நான் கூறுவதெல்லாம், சிரிப்பு அளவோடு தான் இருக்க வேண்டும். வெடிச் சிரிப்புக் கூடாது என்பது தான். ஏனெனில், ஒருவனின் வெடிச் சிரிப்பானது அவனு டைய மூளை காலியாக இருக்கிறது என்பதை உணர்த்து வதோடு அவனுடைய நாகரிகமற்ற தன்மையையும் ஒழுக்கக் குறைவையும் எடுத்துரைக்கிறது. 


அதே பொழுதில் அடிக்கடிப் பல்லை இளித்துக் கொண்டிருப்பவன் முட்டாளாக இருக்க வேண்டும். இதனையே போப் என்ற ஆங்கிலக் கவிஞரும் "ஆழமில்லாத ஓடையானது சலசல என்று ஒலிசெய்து ஓடுவது போன்று எப்பொழுதும் இளித்துக் கொண்டிருப்பவன் தன் மூளை காலியாக இருக்கிறது என்பதைப் பறைமுழக்குகின்றான்" என்று கூறுகின்றார்.


அப்படி அவன் முட்டாளாக இல்லாதிருப்பின் சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுக்கும் நயவஞ்சகனாக இருக்க வேண்டும். தன்னுடைய கள்ள நெஞ்சைச் சிரிப்பென்னும் போர்வையால் மூடியிருக்கும் அவனைப் பற்றியும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.


இதனை ஸ்விப்ட் என்ற ஆங்கில அறிஞரும் "எப்பொழு தும் சிரித்துக் கொண்டிருப்பவனின் முகத்திலிருந்து என்னைப் பதினாயிரம் மைல்களுக்கு அப்பால் அனுப்பி விடு" என்று ஓரிடத்தில் கூறுகின்றார். எனவே தான் செல்சீ அறிஞர் கார்லைலும் 'சிரிப்பிலே எவ்வளவு அடங்கிக் கிடக்கிறது! சிரிப்பு என்னும் கருவியால் நாம் மனிதனையே நிதானித்து அறிந்து விடுகின்றோம்', என்று எடுத்துரைக் கின்றார்.


இதை முட்டாள்கள் உணர்வதில்லை. சிரிப்பார்கள்; சிரிப்பார்கள் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள். வீடு கிடுகிடுக்கச் சிரிப்பார்கள். அயோக்கியன் ஒருவன் தன்னுடைய அயோக்கியச் செயலைப் பற்றி வேடிக்கையாக எடுத்து ரைக்கும் பொழுதும் சிரிப்பார்கள். அப்பொழுது சிரிக்காது தன்னுடைய வெறுப்பைக் காட்டும் முறையில் முகத்தைச் சுளிக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு விளங்காது.


அன்புள்ள தம்பிக்கு 

அப்துர் ரஹீம் அவர்களின் நூலிலிருந்து

Wednesday, 18 December 2024

உதவி தேடலாமா?

 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானியும் தவ்ஹீத்வாதிதான்! அவர் பெயரால் அவர் சொல்லாத செய்திகள் இட்டுக்கட்டப்படுகின்றன - நவீன சலபிக் கும்பல்


❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓


சேற்றில் கால் வைத்துப் பழகிய நீங்கள் நெருப்போடு விளையாடலாமா?


❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌


சுல்தானுல் அவுலியா இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு பிரார்த்திக்கும் படி அறிவுறை சொல்கிறார்கள்.


"இறைவா!அருளான நபிகள் பெருமானாரைக் கொண்டு உன்னை முன்னோக்குகிறேன். 


நாயகமே யா றஸூலல்லாஹ்!உங்களைக் கொண்டு அல்லாஹ்வ்வின் பக்கம் முன்னோக்குகிறேன். அவனது மன்னிப்பை வேண்டுகிறேன். 


யா அல்லாஹ்!நாயகத்தின் ஹக்கைக் கொண்டு என்னை மன்னித்து எனக்கு அருள்புரிவாயாக"


இத்தகவல் யாரோ ஒருவரால் இமாம் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள் பெயரில் சொல்லப்பட்டதோ இட்டுக்கட்டப்பட்டதோ அல்ல. மாறாக 

குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் அன்னவர்களின் "அல் ஙுன்யா" எனும் கிரந்ததில் அவர்களே இதனைப் பதிவு செய்கிறார்கள்.


"இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்" என வாயினிக்கப் பேசும் நவீன சலபிக் கும்பலுக்கு அவர்களின் இக்கருத்து இனிக்குமா கசக்குமா.. அவர்கள்தான் சொல்ல வேண்டும்!

Manas fb Manas Fb