நாம் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ விரும்பின் ஒழுக்கம் பற்றிய வரையிலும், பணம்பற்றிய வரையிலும் எச்சரிக்கை யாயிருந்தால் மட்டும் போதாது, நம்முடைய வாயிலிருந்து வெளிவரும் மொழிகள் பற்றிய வரையிலும் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே தான் ஓர் அறிஞனும் 'உன்னுடைய பணப் பையையும் வாயையும் எச்சரிக்கையுடன் திற. உன்னுடைய பணமும் புகழும் வளர்ந்தோங்கும்' என்று கூறினான். இதனை அறிவாளிகள் எப்பொழுதும் சிரமேற்கொண்டு செயலாற்று வர். வாழ்வதிலும் சீரான வாழ்வே வாழ்வர். பேசுவதிலும் 'யாரிடம் யாரைப்பற்றி எதனை எப்பொழுது; எங்கே வைத்துக் கூறுகின்றோம்' என்பதை நன்கு சிந்தித்தே பேசுவர்.
முட்டாள்களின் இதயமானது அவர்களின் வாயில் இருக்கும் பொழுது அறிவாளிகளின் வாயானது அவர்களின் இதயத்தில் இருக்கும்.
தாம் நினைப்பதையெல்லாம் முட்டாள்கள் வெளியே கொட்டி விடும் பொழுது, அறிவாளிகள் தாம் சொல்வதை எல்லாம் முதலில் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
முட்டாள்களின் ஆன்மாவானது அவர்களின் நாவின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களின் இதயம் அவர்களின் உதடுகளில் நாட்டியமாடும் பொழுது, அறிவாளிகளின் ஆன்மா அவர்களின் நாவின் அடியிலே அமைதியாக அடங்கிக் கிடக்கிறது. அவர்களின் நா அவர்களின் மூளையின் கீழே பதுங்கிக் கிடக்கிறது.
அறிவாளிகள் பலர் பல்லாண்டுகளாகத் தங்களுடைய மூளை யை ஒன்று சேர்த்து ஆராய்ந்த போதினும் மறுமொழி கூற இயலாத கேள்விகளை ஒரு முட்டாள் சில நிமிடங்களில் கேட்டு விடுவான். அவர்களுக்கு இறைவன் நாவைப் படைத்தது உணவை ருசிபார்த்து உண்பதற்கேயன்றி உரையாடுவதற்கன்று என்பதை அந்த முட்டாள்கள் உணர்வ தில்லை. தாமாகவே எதையாவது உளறிக் கொண்டிருப்பார் கள். அவர்களின் உளறல்களைக் கேட்பவர்கள் அவர்கள் ஒருவரேயன்றி வேறெவரும் இல்லை என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
மிருதவான நாவைப் பெற்றிராதவர்கள் கனமான முதுகைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையும் அவர்களுக்கு விளங்காது.
கால் தவறிவிட்டால் மீண்டும் ஒழுங்காக அடியெடுத்து வைத்து நடக்கலாம். நாத்தவறிவிட்டால் மீளமுடியாது என்பதும், முள்ளில்லாத நாவானது முட்களையும் உடைத்துவிடும் என்பதும், அது மூன்று அங்குல நீளமுள்ள தாகவே இருந்த போதினும் ஆறுஅடி உயரமுள்ள மனிதனைக் கொன்றுவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
ஒருவர் லுக்மான் ஹக்கீம் அவர்களிடம் சென்று மேலான பொருளைக் கொண்டு தம்முடைய பசியை ஆற்று மாறு வேண்டிக் கொண்டார். அவர்களும் ஓர் ஆட்டை அறுத்து அதன் நாவை எடுத்துக் கறி சமைத்து அவர்களுக்கு விருந்தளித்னர்.
அடுத்த நாள் அவர் லுக்மான் ஹக்கீமைப் பார்த்து மிகவும் கெட்ட பொருளைக் 'கொண்டு தன் பசியை ஆற்றுமாறு வேண்டிக் கொண்டார். லுக்மான் ஹக்கீம் அவர்களும் மற்றொரு ஆட்டை அறுத்து அதன் நாவைக் கறி சமைத்து அவரின் முன் வைத்தனர்.
இதைக் கண்டதும் அவருக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. அப்பொழுது லுக்மான் ஹக்கீம் அவர்கள், 'மனிதனிலே உள்ள மிகவும் நல்ல உறுப்பும் நாதான்; மிகவும் கெட்ட உறுப்பும் நாதான். அவற்றைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு அது மனிதனை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்றது' என்று கூறினர்.
உலகில் ஏற்படும் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் இந்த நா தான். அதற்கு ஒருவன் அதிக உரிய யளித்துவிடின் அது அவனைச் சிறை செய்துவிடுகின்றது. யார் தன்னுடைய நாவைச் சிறை செய்து வைக்கவில்லையோ அவனை அவனுடைய நாவே சிறை செய்து விடுகிறது. அறிவாளியாகப் பிறரால் கருதப்பட விரும்புபவன் தன்னு டைய நாவை அடக்கி ஆள்வதில் அறிவாளியாக இருக்க வேண்டும்.
வாய் மூடி அமைதியாக இருப்பது அறிவாளிகளின் ஆபரணம் மட்டுமன்று; அஃது அறிவற்றவர்களுக்கு ஆபரணமாகவும் தற்காப்பாகவும் அமைந்துள்ளது. போதிய அறிவும் திறனும் பெறாதவர்களின் நீங்காத நல்லொழுக்க மாக வாய்மூடி மௌனமாயிருக்கும் தன்மை அமைந்திருக்க வேண்டும்.
ஏனெனில், அது தங்களின் தவறுகளையும் இரகசியங் களையும் மற்றவர்களுக்கு மறைப்பதோடு மற்றவர்களின் தவறுகளை நன்கு கவனிக்க அவர்களுக்கு வாய்ப்பு நல்குகிறது. மேலும் வீண் விவாதத்திலும் பாவத்திலும் ஈடுபடாமல் ஒருவனைக் காப்பாற்று கிறது.இதனை ஒருவன் உணர்ந்தால் அவன் ஒருபோதும் முட்டாளாக இருக்க மாட்டான்.
ஆனால் முட்டாள்களோ இதனை ஒருபோதும் உணர மாட்டார்கள். பேசுவதால் தான் தங்களின் ஆற்றல் வெளியாகின்றது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, ஆற்றல் மிக்கவர்களெல்லாம் வாய் மூடி அமைதியாக இருக்கின்றனர்.
அவர்கள் வாய்மூடி இருக்கும் தன்மையானது அவர் களின் ஆற்றலையும் சக்தியையும் நன்கு வெளி காட்டுகின்றது. அவர்களின் மௌனமானது சண்டமாருத சொற்பொழிவைவிட வன்மையானதாக இருக்கிறது.
ஆனால் அதிகமாகப் பேசுவதென்பது ஒருவிதப் பலவீனமே யன்றி வேறில்லை. அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகப் பேசிப் பற்பல தவறுகளை இழைக்கும் பொழுது. தேவைப்படும் பொழுது அளவோடு பேக்கின்றவர்கள் தவறுகள் செய்வதைவிட்டும் தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
முட்டாள்கள் ஒரு சிறிய கருத்தை விளக்க அதிகமான மொழி களைப் பயன்படுத்தும் பொழுது அறிவாளிகள் ஒரு பெரும் தத்துவத்தைச் சில மொழிகளில் விளக்கி விடுகின்றார்கள்.
ஆனால் முட்டாள்களோ எதையாவது பேசினால் தான் தங்களை மக்கள் அறிவாளிகள் என்று கருதுவார்கள் என எண்ணிக் கொண்டு எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாயை மூடிக்கொண்டி ருப்பின் மக்கள் அவர்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்வர்.
ஏனெனில், அறிவாளிகள் போன்று பேசுவதைவிட அறிவாளிகள் போன்று தோற்றம் வழங்குவது எளிது. ஆனால் இந்த முட்டாள்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்தவும் எவராலும் இயலாது.
அமைதியாக அடங்கிக் கிடக்கும் நாவே அறிவுள்ள தலையை உண்டு பண்ணுகின்றது என்று உணர்ந்து அறிவாளிகள் அமைதியாய் இருக்கும் பொழுது, முட்டாள்கள் எதையாவது உளறிக் கொண்டிருப்பதே தங்களின் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தச் சிறந்த வழி என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
தங்களைவிட அறிவாளிகளுடன் பொழுதும், முன்பின் தெரியாத அன்னியர்களுடன் உரையாடும் பொழுதும் மிகவும் எச்சரிக்கையுடன் உரையாட வேண்டும். ஏனெனில் நம் உரையாடலில் காணப்படும். குறைகள் மூலம் அறிவாளிகள் நம்முடைய தரத்தை நிதானித்து அறிந்துவிடுவர். உரையாடு
நாவைப் பார்த்து மருத்துவர்கள் நோயை அறிந்து கொள்வது போன்று அறிவாளிகள் ஒருவனின் நாவைப் பார்த்து அவனுடைய மூளையிலும் இதயத்திலும் உள்ள நோயை அறிந்து கொள்வர்; அன்னியர்கள் நம்மைப் பேச்சில் மிகைத்துவிடப் பார்ப்பார்கள் என்ற உண்மைகளும் இந்த முட்டாள்களுக்கு விளங்குவதில்லை. அவர்கள் தங்களையே தாங்கள் அறிவாளிகளாக எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்களை அவர்கள் எவ்வாறு அறிவாளிகளாக எண்ணிக் கொள்வர்?
முட்டாளை மலை உச்சியிலுள்ள மனிதனுக்கு நிகராகக் கூறலாம். அவனுக்கு எல்லோரும் சிறியவராகத் தான்
காணப்படுவர். ஆனால் எல்லோருக்கும் அவன் சிறயவனாகக் காணப்படுவான். எனவே மற்றவர்கள் அவனுக்கே அவனுடைய குறைகளை எடுத்துக் காட்டிய போதினும் அதனை விளங்கிக் கொண்டு அவன் திருந்திக் கொள்ள மாட்டான்.
நாம் எதைச் செய்ய வேண்டாமென்று தடுக்கின் றோமோ, அதனையே முட்டாள்கள் வேண்டுமென்று செய்வார்கள். அவர்க ளுக்குத் தன்புத்தியும் கிடையாது; சொற்புத்தியும் கிடையாது. அவர்களின் செயல் அவர்க ளுக்கு எப்பொழுதும் சரியாகவே தென்படும்.
அவர்களைப் புகழ்வதற்கு அவர்களைவிடப் பெரிய முட்டாள்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் தங்களைத் திறமைசாலிகள் என்றும், தவறே செய்யாத நிறைமனிதர்களென்றும் எண்ணிக் கொள்வார்கள். திறமை சாலிகள் என்றும் நிறை மனிதர்கள் என்றும் தங்களை எண்ணிக் கொள்ளும் இவர்களே வடிகட்டின முட்டாள் களாவார்கள்.
இதனையே புத்த மகானும், "தன்னுடைய முட்டாள் தனத்தை உணரும் முட்டாள் அந்த அளவு வரையில் அறிவாளியேயாவான். ஆனால் தன்னை அறிவாளி என்று எண்ணிக் கொண்டிருக்கும் முட்டாளோ உண்மையில்
கூற முற்படுவார்கள். அவர்கள் தங்களை அறிவாளிகள் என்று கருதிக் கொள்வதிலிருந்தே அவர்களை முட்டாள்கள் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஏனெனில் முட்டாள்கள் தங்களை அறிவாளிகள் போன்று தானே காட்டிக் கொள்வர். முட்டாள்களின் நூலின் முதல் அத்தியாயம் தன்னைத் தான் அறிவாளியாகக் கருதிக் கொள்வது என்பது தானே.
இந்த முட்டாள்கள் பிறருடைய குற்றம் குறைகளைத் தான் இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பார்க ளேயன்றித் தங்களின் குற்றம் குறைகள் அவர்களின் கண்களுக்கே அணுவேனும் தென்படாது. அவர்கள் தாங்கள் செய்யும் வேடிக்கைகளைப் பார்த்தே சிரித்து மகிழ்வார்கள் டு அவர்களின் அடக்கமற்ற வெடிச்சிரிப்பிலிருந்தே அவர்கள் தங்களை முட்டாள்கள் என்று உலகிற்குப் பறை முழக்கி விடுவார்கள். ஆனால் அதனை அவர்கள் விளங்கிக் கொள்வ தில்லை. அளவற்ற சிரிப்பானது அடுத்தகணமே துன்பத்தை வருவித்துவிடும் என்பதும் அவர்களுக்கு விளங்காது.
இவ்விதம் நான் கூறுவதிலிருந்து மனிதன் சிரிக்கவே கூடாது என்று கூறுவதாக நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டாம். சிரிக்கவே தெரியாதவன், சிரிக்கவே செய்யாத வன், கொலைகாரன், வஞ்சனை யாளன் என்றே நான் கூறுவேன். அவ்விதம் உள்ளவன் எந்தக் கொடும் செயலைச் செய்யவும் தயங்கமாட்டான் என்றும் எடுத்துரைப்பேன்.
ஆனால் நான் கூறுவதெல்லாம், சிரிப்பு அளவோடு தான் இருக்க வேண்டும். வெடிச் சிரிப்புக் கூடாது என்பது தான். ஏனெனில், ஒருவனின் வெடிச் சிரிப்பானது அவனு டைய மூளை காலியாக இருக்கிறது என்பதை உணர்த்து வதோடு அவனுடைய நாகரிகமற்ற தன்மையையும் ஒழுக்கக் குறைவையும் எடுத்துரைக்கிறது.
அதே பொழுதில் அடிக்கடிப் பல்லை இளித்துக் கொண்டிருப்பவன் முட்டாளாக இருக்க வேண்டும். இதனையே போப் என்ற ஆங்கிலக் கவிஞரும் "ஆழமில்லாத ஓடையானது சலசல என்று ஒலிசெய்து ஓடுவது போன்று எப்பொழுதும் இளித்துக் கொண்டிருப்பவன் தன் மூளை காலியாக இருக்கிறது என்பதைப் பறைமுழக்குகின்றான்" என்று கூறுகின்றார்.
அப்படி அவன் முட்டாளாக இல்லாதிருப்பின் சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுக்கும் நயவஞ்சகனாக இருக்க வேண்டும். தன்னுடைய கள்ள நெஞ்சைச் சிரிப்பென்னும் போர்வையால் மூடியிருக்கும் அவனைப் பற்றியும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
இதனை ஸ்விப்ட் என்ற ஆங்கில அறிஞரும் "எப்பொழு தும் சிரித்துக் கொண்டிருப்பவனின் முகத்திலிருந்து என்னைப் பதினாயிரம் மைல்களுக்கு அப்பால் அனுப்பி விடு" என்று ஓரிடத்தில் கூறுகின்றார். எனவே தான் செல்சீ அறிஞர் கார்லைலும் 'சிரிப்பிலே எவ்வளவு அடங்கிக் கிடக்கிறது! சிரிப்பு என்னும் கருவியால் நாம் மனிதனையே நிதானித்து அறிந்து விடுகின்றோம்', என்று எடுத்துரைக் கின்றார்.
இதை முட்டாள்கள் உணர்வதில்லை. சிரிப்பார்கள்; சிரிப்பார்கள் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள். வீடு கிடுகிடுக்கச் சிரிப்பார்கள். அயோக்கியன் ஒருவன் தன்னுடைய அயோக்கியச் செயலைப் பற்றி வேடிக்கையாக எடுத்து ரைக்கும் பொழுதும் சிரிப்பார்கள். அப்பொழுது சிரிக்காது தன்னுடைய வெறுப்பைக் காட்டும் முறையில் முகத்தைச் சுளிக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு விளங்காது.
அன்புள்ள தம்பிக்கு
அப்துர் ரஹீம் அவர்களின் நூலிலிருந்து