கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன.
குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை.
(இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்)
சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹ்) அவர்கள் மகத்தான சேவைகளை நிறைவேற்றினார்கள். அவர்கள் இலங்கையில் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள் அடங்கலாக 350 சமய நிறுவனங்களை நிறுவினார்கள்.
முஹியித்தீன் பள்ளிவாசல் என்ற Concept ஐ உருவாக்கியவர் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள். இலங்கையில் மிக உயரமான இடத்திலும், இலங்கயில் மிகவும் தாழ்வான பகுதியிலும் உள்ள முஹியத்தின் பள்ளிவால்களையும் அவர்களே நிர்மாணித்தார்கள்.
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூ அவர்களின் பணிகளை நினைவுகூறும் வகையிலயே "முஹியித்தின்" பள்ளிவால்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை " முஹியத்தீன்" பள்ளிவாசல்களே ஒரு ஊரின்
"தாய் பள்ளியாக" அல்லது " பெரிய பள்ளியாக" கருதப்பட்டன. பல ஊர்களின் முஹியத்தின் பள்ளியிலேயே வெள்ளிக்கிழமை ஜூம்ஆவும் நடத்தப்பட்டது. ஊருடன் தொடர்புபட்ட பிரதான தீர்மானங்களை எடுக்கும் தளமாகவும், வருடாந்த கந்தூரிகள் போன்ற, ஒன்று கூடும் தீர்மானம் மிக்க இடமாகவும் முஹியித்தின் பள்ளிவால்கள் அதன் பணியை நிறைவேற்றி வந்துள்ளது.
பொதுவாக இலங்கையில் உள்ள பெரும்பாலான பெரிய பள்ளிவாசல்கள் Grand Mosques முஹியித்தீன் பள்ளிவாசல்களாகும். சில இடங்களில் சில வெறியர்கள் முஹியத்தீன் என்ற பெயர் சிர்க என்று கூறி அதனை சில முதலாளிகளின் குடும்பத்தவர்களின் பெயர்களால் பிரதியீடு செய்திருக்கிறார்கள். (ஊரான் கோழிய அறுத்து வாப்பாட பெயர்ல கத்தம் ஒதியதைப் போல) முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைமுறை வரலாற்றுக்கான சான்றுகளாகும். அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்போம்.
படத்தில் கடைசியாக உள்ள காலி தலாப்பிட்டிய முஹியத்தீன் பள்ளிவாசல் ஆயிரம் வருடங்களை தாண்டியதாகும். இது உமையாக்களிடமிருந்து அப்பாஸியர்களுக்கு ஆட்சிமாறும் Transitional period பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
ஆயிரம் வருடங்கள் தாண்டிய பெரும்பாலான பள்ளிவாசல்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இவ்வாறான பள்ளிவாசல்களுக்குப் பதிலாக களினி கங்கை, அத்தனகல்ல ஒய என்பவற்றக்கு அருகில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டு அவ்வாறான இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெற்றன. கொழும்பு, கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் இதற்கான தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன.
இமாமுல் அக்பர் குத்புல் அக்தாப் செய்யிதினா முஹியத்தீன் அப்துல் காதிருல் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களில் காதிரியா ஆன்மீக வழியமைப்பும் இமாம் ஷாபிஈ றஹிமஹூல்லாஹ் அவர்களின் மத்ஹபும் எமது இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வழிகளாக இருந்தன என்பதறாகு இந்தப் பள்ளிவாசல்களே மிகச் சிறந்த சான்றுகளாகும்
மத்ஹபுகள் தரீக்காக்கள் மிம்பர்கள், மினாராக்கள், ஹவ்ழ்கள், கப்றுஸ்தானங்கள், அஸா என்பனவும் எமது அடையாளங்களே
படத்தில் உள்ள பள்ளிவாசல்கள் ஆயிரம் ஆண்டுகள் முதல் 200 வருடங்கள் பழமையான இலங்கையின் முஹியத்தீன் பள்ளிவாசல்களாகும்
பஸ்ஹான் நவாஸ்
Fazhan Nawas