முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானியும் தவ்ஹீத்வாதிதான்! அவர் பெயரால் அவர் சொல்லாத செய்திகள் இட்டுக்கட்டப்படுகின்றன - நவீன சலபிக் கும்பல்
❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
சேற்றில் கால் வைத்துப் பழகிய நீங்கள் நெருப்போடு விளையாடலாமா?
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
சுல்தானுல் அவுலியா இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பின்வருமாறு பிரார்த்திக்கும் படி அறிவுறை சொல்கிறார்கள்.
"இறைவா!அருளான நபிகள் பெருமானாரைக் கொண்டு உன்னை முன்னோக்குகிறேன்.
நாயகமே யா றஸூலல்லாஹ்!உங்களைக் கொண்டு அல்லாஹ்வ்வின் பக்கம் முன்னோக்குகிறேன். அவனது மன்னிப்பை வேண்டுகிறேன்.
யா அல்லாஹ்!நாயகத்தின் ஹக்கைக் கொண்டு என்னை மன்னித்து எனக்கு அருள்புரிவாயாக"
இத்தகவல் யாரோ ஒருவரால் இமாம் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள் பெயரில் சொல்லப்பட்டதோ இட்டுக்கட்டப்பட்டதோ அல்ல. மாறாக
குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி நாயகம் அன்னவர்களின் "அல் ஙுன்யா" எனும் கிரந்ததில் அவர்களே இதனைப் பதிவு செய்கிறார்கள்.
"இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ்" என வாயினிக்கப் பேசும் நவீன சலபிக் கும்பலுக்கு அவர்களின் இக்கருத்து இனிக்குமா கசக்குமா.. அவர்கள்தான் சொல்ல வேண்டும்!
Manas fb Manas Fb