*அலி அஹ்மத் றஷாதி புத்தி தடுமாறிப் பேசுகின்றார்.*
=======================
கலீபத்துல் காதிரி,அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
=======================
கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் பெயரால் இலங்கையில் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன, சில ஊர்களில் தப்லீக் ஜமாஅத்தினர் அப்பெயரை இல்லாதொழித்துள்ளனர், ஆயினும், இன்னும் கணிசமான பள்ளிவாசல்களும், தக்கியாக்களும் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன.
இப்பெயர் கொண்ட சகல பள்ளிவாசல்கள், தக்கியாக்களில் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் பெயரால் மௌலிதுகள் ஓதப்பட்டு கந்தூரிகள் கொடுக்கப்பட்டு வந்தன, இப்பொழுதும் கணிசமான பள்ளிவாசல்களில் கொடுக்கப்பட்டு வருகின்றன.
மௌலவி அலி அஹ்மத் றஷாதி முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்று இந்த உண்மையை மறைத்து முஹ்யித்தீன் ஆலிம் என்ற வைத்தியரின் பெயரை நாடு பூராகவுமுள்ள பள்ளிவாசல்களில் வைக்குமாறு கண்டி ராஜா கட்டளையிட்டதாக புதுக்கதை பேசுகின்றார்,
இந்தியாவில் தமிழ் நாடு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முஹ்யித்தீன் மஸ்ஜிதுகள் உள்ளன, அதற்கு என்ன புருடாவை வைத்திருக்கின்றாரோ தெரிய வில்லை, தடுமாற்றம் முற்றும் போது அதற்கும் ஒரு ராஜா வருவார்.
இவரதுபேச்சு இவர் மனதில் இருக்கும் குத்பு நாயகத்தின் மீதுள்ள வெறுப்பையும், முட்டாள்தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது,
இவர் பின்பற்றும் டில்லி தப்லீக் மார்க்ஸின் ஜீ ஸஃதுள்ளாஹ் காந்தலவி மஸ்ஜிதுல் அக்ஸாவை விட டில்லி மர்கஸ் மேலானது என்று கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மடசாம்பிராணி தப்லீக் வாலாக்களுக்கு இவர் கூறுவது பொருந்தும்,
வரலாறு தெரிந்த சாதாரண அடி முட்டாளும் இவர் பேச்சை காது கொடுத்துக் கேட்க மாட்டான்.
இவர் கனடா சென்ற பின், அங்குள்ள குளிர் இவர் அறிவை உறைய வைத்து விட்டது என்பதற்கு இதுமட்டுமல்ல பூனை வளர்த்தால் ஷைத்தான் வீட்டில் குடியிருக்கும் என்று கூறி உலக நகைப்பு நாயகனாக வலம் வந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இதுபோன்று இன்னும் புதுப்புது நகைப்பான கதைகளையெல்லாம் இவர் அரங்கேற்றுவார், புத்தி தடுமாறினால் புலம்பல்கள் முற்றவே செய்யும். புத்தி தடுமாற்றம் எந்தளவு முற்றியுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,