السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 1 May 2018

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

eravur

“இவ்விரவில் தீர்க்கமான காரியங்கள் அனைத்தும் பிரிக்கப்படுகின்றன.” அல்குர்ஆன் அத்தியாயம் 44 வசனம் 04

அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையின் பொருட்டினால் நமது வாழ்நாளில் மற்றுமொரு சங்கைமிகுந்த புனித ரமழான் மாதம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். அதனை வரவேற்கும் விதத்தில் அதற்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தினை நாம் சங்கைப்படுத்த வேண்டியுள்ளது. இது நபி வழியாகும். 

ரமழான் மாதத்திற்கு முந்திய மாதமான ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது நபிகள் நாயகம் ஸல்லல்லதஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களால் வலியுறுத்திக் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் அமலாகும். ரமழான் மாதம் அல்லாததொரு மாதத்தில் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆஹி வசல்லம் அவர்கள் அதிகம் நோன்பு நோற்ற மாதம் என்றால் அது ஷஃபான் மாதம் அன்றி வேறில்லை.

அருமை நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தில் கூடுதலாக நோன்பு நோற்றிருக்கின்றார்கள் என்பதற்குரிய பல சான்றுகள் புகாரி முஸ்லிம் போன்ற நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகியிருந்தபோதிலும் அவ்வாறு நோன்பிருந்ததற்கான காரணத்தை பின்வரும் நபி மொழிகளினூடாக அறிய முடிகிறது.

ரமழானை வரவேற்றல்.

“ரமழானுக்குப் பின்னர் நோற்கப்படும் நோன்புகளில் எது சிறந்த நோன்பாகும் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோதுää ரமழானை கண்ணியப்படுத்தி ஷஃபானில் நோற்கப்படும் நோன்பாகும்” என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (திர்மிதி)

அமல்கள் உயர்த்தப்படும் மாதம்

ஹழ்ரத் உஸாமா ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிப்பதாவதுää அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு இருப்பதை நான் கண்டதில்லை. என்று கூறினேன். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ரஜபுக்கும் ரமழானுக்கும் மத்தியில் இருக்கும் அந்த மாதத்தினை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும்போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவதை நான் வெகுவாக விரும்புகின்றேன் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (அபூதாவூத்ää நசாயீ)

ஷஃபானுடைய மாதத்தில் மட்டும்தான் ந மது அமல்கள் அல்லாஹ்வின் சன்னிதானத்திறகு உயர்த்தப்படுவதாக நாம் எண்ணிவிடக்கூடாது. ரமழான் மாதத்தில் உயர்த்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு இரவும் பகலும் உயர்த்தப்படுவதாகவும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. அவ்வாறே கிழமையில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் உயர்த்தப்படுவதாகும் மற்றுமொரு நபிமொழி ஸஹீஹ் முஸ்லிமில் பதவிவாகியுள்ளது.

கிப்லா மாற்றப்பட்ட மாதம்

இந்த மாதத்தின் நடுப் பகுதியில்தான் கஃபாவை முன்னோக்கித் தொழுவதற்கான அனுமதி ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக இமாம் குர்துபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தமது தப்சீருல் குர்ஆனில் குறிப்பிடுகிறார்கள்.

ஸலவாத்தின் மாதம்

“நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது அமரர்களும் நபி நாயகம் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்) மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்களும் அவர் மீது ஸலவாத்ää சலாம் சொல்லுங்கள் என்ற திருமறை வசனம் ஷஃபான் மாதத்தில் இறங்கியதாக இமாம் ஷிஹாபுத்தீன் அல் கஸ்தலானீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அல் மவாஹிப் என்ற நூலில் பதிவு செய்கின்றார்கள்.

இதுபோன்ற காரணங்களுக்காக ஷஃபான் மாதத்தில் அதிகமான நோன்புகளை ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நோற்றிருக்கும்போது நம்மில் எத்தனை பேர் நபி வழியைப் பின்பற்றி இந்த மாதத்தில் நோன்பாளிகளாக இருக்கின்றோம் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னதுபோன்று இந்த மாதத்தினை மக்கள் மறந்து விடுவதையே அதிகம் காண முடிகிறது.

ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கையில் விசேட கவணம் செலுத்தப்பட்ட நிலையில் நோற்கப்பட்ட ஷஃபான் மாத நோன்பினை நாம் மறந்துபோயுள்ள இச்சநத்தர்ப்பத்தில் மீண்டும் அந்த ஸ{ன்னத்தினை பேணிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர்களான நமக்கிருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

“எனக்குப் பின் மறக்கடிக்கப்பட்ட எனது ஸ{ன்னதினை யாராவது மீள கட்டியெழுப்பி அதனை பிறர்கள் செயல்படுத்துவார்களானால் அவர்களுக்கு வழங்கப்படும் அதே கூலி மீளக் கட்டியெழுப்பியவருக்கும் வழங்கப்படும் என்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (திர்மிதி)

நபி வழியைப் பின்பற்றி இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்ப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் ஒரு நோன்பாவது நாம் இம்மாதத்தில் நோற்க வேண்டாமா? இதனடிப்படையில் ஷஃபான் மாதத்தில் ஒரு நோன்பாவது நோற்று ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அந்த ஸ{ன்னத்தினை ஹயாத்தாக்க விரும்புகின்றவர்கள் இம்மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பிருப்பது சிறந்ததாகும். ஷஃபான் மாதம் பிறை 16 ஆம் தினத்திலிருந்து வழமைக்கு மாற்றமான எந்தவொரு நோன்பினையும் நோற்கலாகாது. காரணம்ää

ரமழான் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மீதி இருக்கும்போது (ஷஃபானின் இறுதியில்) நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். (திங்கள்ää வியாழன்) வழமையாக நோன்பு நோற்பவர் தவிரää அவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம் என்று நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.  (புகாரி)

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின் நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்றும் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி) எனவே ஆகக் குறைந்தது இம்மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பிருக்க முயற்சிப்பதுடன் நமக்காகவும் பிறர்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும் வேண்டும்.

இதுபோன்றதொரு இரவில் நாயகம் ஸல்லல்லஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஜன்னதுல் பகீஃ எனப்படும் அடக்கஸ்தளம் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள். (திர்மிதிää இப்னு மாஜா)

முஷ்ரிக் மற்றும் சமூகத்தில் குழப்பங்களையும் பிரிவிணைகளையும் உருவாக்குகின்றவர்ää குடும்ப உறவுகளைத் துண்டித்து வாழ்பவர்ää பெற்றோர்களுக்கு அநீதிழைப்பவர்கள்ää மதுவுக்கு அடிமையானவர் போன்றவர்களை தவிரவுள்ள ஏனைய சகலரின் பாவங்களையும் அல்லாஹ் இவ்வாறான இரவில் மன்னிக்கின்றான் என்றும் ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (அஹ்மத்ää பைஹகீ)

ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியில் விசேட அமல்கள் புரிவது தொடர்பான பல தகவல்கள் தபரானி, திர்மிதி, பைஹகீ, முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் அஹமத் ஆகிய நபி மொழிக் கிரந்தங்களில் பதிவாகியுள்ளதைக் காண முடிகிறது. இதுபோன்ற இரவின் சிறப்புக்கள் அடங்கிய பல நபிமொழிகள் பதிவாகியுள்ளதாகவும் இவ்வாறனதொரு இரவில் முன்னோர்கள் தனித்தனியாக விசேட தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அஷ்ஷெய்கு இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார்.

ஷஃபான் மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பு நோற்று விசேட வணக்கம் புரிவது தொடர்பாகப் பதிவான தகவல்கள் பொய்யானது என்றும் அவை இட்டுக்கப்பட்ட தகவல்கள் என்றும் கூறி அவையாவும் அணாச்சாரம் என்று சொல்வோமாக இருந்தால் மேற்சொன்ன அறிஞர்களெல்லாம் நரகவாதிகளாகவும் நரகம் செல்வதற்கான வழிகளை அவர்கள் காட்டிச் சென்றதாகவும் சொல்ல நேரிடும்.

எனவே எதிர் வரும் புதன் கிழமை 02-05-2018 ஆம் நாள் நோன்பு நோற்பதோடு இயலுமான வணக்கங்களிலும் ஈடுபடுவதுடன் குடும்ப உறவுகளைப் பேணுவதற்குரிய வழிகளையும் கையாழ்வதற்கு வல்லவன் அல்லாஹ் நம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக! ஆமீன்

அபூ தூபா
அந்நிழாமிய்யா மக்ஃபிய்யா அரபிக் கல்லூரி
ஏறாவூர்

  



Tuesday, 10 April 2018

தாபியீன்களில் சிறந்த உவைஸுல் கர்னி

ஸையிதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது, “தொழுகையின்போது பணிவடக்கமாக எது கருதப்படுகிறது?”
ஸையிதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள், “ஓர் அம்பு உங்களை ஊடுறுவி சென்றால்கூட உங்களுக்கு அது தெரியக்கூடாது. அந்த அளவுக்கு நீங்கள் தொழுகையில் மெய்மறந்து இருக்க வேண்டும்.”
இவர்கள் தாபியீன்களில் மிகச் சிறந்தவர்கள்.
ஸஹாபா பெருமக்கள் நபிகள் பெருமானார் முஹம்மத் ﷺ அன்னவர்களிடம் கேட்டார்கள், “உவைசுல் கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உங்களை கண்டிருக்கிறார்களா நாயகமே?”
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “இல்லை, அவர்களின் ஜடத்துவ கண்களால் என்னை அவர்கள் காணவில்லை. (கண்டிருந்தால் ஸஹாபா என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பார்கள்) ஆயினும் அவர்கள் என்னை தன் ஆத்மீகக் கண்களால் கண்டுள்ளார்கள்.”
ஸஹாபா பெருமக்கள் மாநபிகளார் ﷺ அன்னவர்களிடம் கேட்டார்கள், “எங்களுக்கு அவர்களை காணக்கிடைக்குமா நாயகமே?”
நபிகள் கோமான் முஹம்மத் ﷺ அன்னவர்கள் ஸையிதுனா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்துக் கூறினார்கள், “நீங்கள் அவர்களைக் காணமாட்டீர்கள். உமரும் அலியும் (ரலியல்லாஹு அன்ஹும்) அவர்களைக் காணுவார்கள்.”
- [ ] பின் அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறினார்கள், “(அவர்களின் அடையாளம்) அவர்களின் உடலெங்கும் ரோமம் நிறைந்திருக்கும். அவர்களின் இடது கை உள்ளங்கையில் ஒரு திர்ஹத்தின் அளவு வெள்ளை அடையாளம் இருக்கும். அது வெண்குஷ்டத்தின் அடையாளம் அல்ல. அவர்களைக் கண்டவுடன் என்னுடைய சலாத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். என்னுடைய உம்மத்தவர்களான என் சமூகத்துக்கு அவர்களை துஆ செய்யச் சொல்லுங்கள். அவர்கள் அவ்லியாக்களில் ‘அத்கியா’ வானவர்கள். (பாதுகாப்பு பரணைப் போன்றவர்கள்) அவர்கள் மிக்கப் பரிசுத்தமானவர்கள்.”
‎صلى الله عليه وعلى آله وصحبه وسلم
‎رضوان الله عليهم أجمعين
அல்லாஹ் عزوخل நாளை மறுமையிலே ஸையுதுனா உவைஸ் அல்-கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோழமையை எமக்குத் தந்து அருள்பாலிப்பானாக.
நன்றி: AWLIYA ALLAH (NOORULHUDA)
தமிழில்:அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்
When asked; 'What is considered as modesty during prayer?'
Sayyiduna Uways al-Qarani رضي الله عنه said; 'For you to be so attuned that even if an arrow pierces you, you remain unaware of it.'
Best of the Tabi'een
The Sahaba al-Kiraam asked the Prophet Muhammad ﷺ ; "Have Sayyiduna Uways al-Qarani Radhi Allahu’Anhu seen you?"
The Prophet Muhammadﷺ said; "Not with his physical eyes (If he did he would become a Sahabi), but he has seen me with his spiritual eyes."
Sahaba al-Kiraam asked the Prophet Muhammadﷺ; "Can we see him?"
The Prophet Muhammadﷺ said to Sayyiduna Abu Bakr as-Siddiq Radhi Allahu’Anhu; "You will not see him, but Sayyiduna Umar ibn al-Khattab and Sayyiduna Ali ibn Abi Talib Radhi Allahu’Anhu will see him. His entire body is covered with hair. On the palm of his hand and left side is a white spot, the size of a Dirham, which is not the mark of leprosy. When you meet him, convey my Salaam to him and tell him to make Du'a for my Ummah (Nation). Among the Awliya' those who are the Atqiyaa (a very loft category of Awliya'), he is the holiest."'
‎صلى الله عليه وعلى آله وصحبه وسلم
‎رضوان الله عليهم أجمعين
May Allah ‎عزوجل give us the company of Sayyiduna Uways al-Qarani on the Day of Judgement, Ameen!

வாயடைத்துப்போக ஒரு பதில்

கலாநிதி டாலியா முஜாஹித் ஹிஜாப் அணிந்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்தவர்.
‘அவர்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவுகூர்மையோடு ஒத்துப்போகவில்லையே’ என்று அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது.
‘ஹிஜாப் என்பது அறியாமை காலத்து யுகத்தின் ஆடை’ என்ற கருத்திலேயே இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது.
டாலியா முஜாஹித் அவர்கள் இவ்வினாவுக்கு மிக அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்கள்:
“முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகை ஆடைகளின் பயன்பாட்டை கண்டுபிடித்து, அவற்றை அணியவும் கற்றுக்கொண்டான். இவ்வாறு மனித குலம் ஆடை அணியத் தொடங்கி முன்னேறியதின் பலனாக, நாகரிகத்தின் உச்சக்கட்ட ஆடையான ஹிஜாபைதான் இப்போது நான் அணிந்து உள்ளேன். ஆகவே இது ஒரு பிற்போக்கு ஆடையல்ல.
எனவே, ‘நிர்வாணகோல ஆடைகள்தாம்’ முதலாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்தும் பிற்போக்கு ஆடைகள்.
அம்மணமாக ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.”
-ஸுப்ஹானல்லாஹ்.... سبحان الله
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

ஒட்டமன் ஆட்சி வீழ்ந்து இன்றோடு 94 வருடங்கள்



ஒட்டமன் ஆட்சி வீழ்ந்து இன்றோடு 94 வருடங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றோடு இஸ்லாத்தின் வீரம் மிக்க ஒட்டமன் சக்ராதிய இராஜ்ஜியம் வீழ்ந்து 94 வருடங்கள் ஆகின்றன. காட்டிக்கொடுப்புகளாலும் துரோகங்களாலும் மேற்கத்திய நாடுகளின் வஞ்சனைகளாலும் எமது ஆட்சி கைமாறி யஹூதி கைகூலிகளுக்கு ஆகியது. 

ஒட்டமன் கடைசி கலீபா- இஸ்லாத்தின் 101வது கலீபா இரண்டாம் அப்துல் மஸீத் அவர்கள், தன் மாளிகையில் புனித திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டார்கள். துருக்கியலிருந்து 1924 மார்ச் 3ந்திகதி பிரான்ஸ் நாட்டுக்கு மனைவி மக்களோடு நாடு கடத்தப்பட்டார்கள். அவர்கள் மாளிகையின் திறைச்சேரி, மக்களின் சேவைக்காக முத்து, மாணிக்க, மரகதம், தங்கத்தால் நிரம்பி இருந்தது. அத்தனையும் அபகரிக்கப்பட்டு வெறும் 2000 பவுண்கள் மாத்திரம் இவர்களின் வழி செலவுக்கு கொடுக்கப்பட்டது.

மறுநாள் பத்திரிகைகள் ஒட்டமன் இராச்சியம் - உஸ்மானிய பேரரசு அழித்தொழிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டன. ஆங்காங்கே சில குழப்பங்கள் ஏற்பட்டு அடக்கப்பட்டன. ஒட்டமன் ஆட்சி வீழ்ந்தது.

இரண்டாம் அப்துல் மஸீத் மேற்குலக நாடுகளில் அமைதியாக வாழ்ந்து 1944ம் ஆண்டு பிராஸில் மரணித்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். ஒரு கலீபாவின் உடல் ஒரு கிறிஸ்தவ நாட்டில் அடக்கப்படக் கூடாது என்பதற்காக, மதீனா ஜென்னத்துல் பக்கிக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் கடைசி ஜும்ஆ தினத்தின்போது எடுத்த படத்தையே கீழே காண்கிறீர்கள்.



Sunday, 8 April 2018

நானும் உங்களை நினைவு கூறுவேன்

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;  நானும் உங்களை நினைவு கூறுவேன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"
ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”
“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….
“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.
அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.
“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.
அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.
இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.
இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,
இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,
இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்;
நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
குர்ஆன் வசனம் : அல் பகரா - 152

Saturday, 3 March 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்

ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.
சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்

see more