என்று இந்துக்களாலும் அழைக்கப்படும் அஷ்ஷெய்யிதுஷ் ஷெய்க் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்) அவர்களின் வரலாரறு
மட்டகளப்பு மாநகரில் கோட்டமுனை ஆண்டாண்டு காலமாக முஸ்லீம்களும் மற்றும் இந்துக்களும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் பகுதியாகும். இப் பகுதியில் மூர்சாப் பிட்டி என்று தற்போது வழங்கி வரும் “பீர்சாஹிப் பிட்டியில்” மட்டகளப்பு வாவியோரமாக கல்லடிப் பாலத்திலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கிச் செல்லும் வீதியில் (தற்பொழுது புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது)
இவர்களின் தர்ஹாவிலிருந்து பார்த்தால் மட்டக்களப்பு கோட்டை (தற்போது மட்டக்களப்பு கச்சேரி அமைந்துள்ள கோட்டை) நேர் எதிரே வாவிக்கு அந்தப்பக்கம் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
இக் கோட்டையானது 1505 ம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்தபோது கட்டப்பட்டதாகும். அவர்கள் இலங்கையின் கரையோரங்களை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 1638 ல் இலங்கையின் கரையோரப் பகுதிகளை டச்சுக் காரர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து 1638 ல் இலங்கையின் கரையோரப் பகுதிகளை டச்சுக் காரர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
இவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கைக்கு வந்த ஆங்கிலேயர்கள் 1802 ஆண்டு கரையோரங்களிலிருந்த டச்சுக் காரர்களின் கோட்டைகளைப் பிடிப்பதற்காக இலங்கையின் கரையோரங்களிலில் தங்களின் சைனியத்துடன் (இராணுவம்) முகாமிட்டனர்.
அப்பாவின் தர்ஹா எதிரே அமைந்துள்ள டச்சுக் கோட்டை
இவ்வாறு மட்டக்களப்பு கோட்டையைப் பிடிபதற்காக ஆங்கிலேயே சைனியம் வாவியோரத்தில் தற்போது மகான் கோட்டமுனை அப்பா அவர்களின் தர்ஹாவுக்கு பக்கத்தில் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் முகாமிட்டனர். இவ்வாறு முகாமிட்டிருந்த சைனியத்தில் அதிகமாக ஜாவா இனத்தைச் சேர்ந்த முஸ்லீம் வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவ்வாறு மட்டக்களப்பு கோட்டையைப் பிடிபதற்காக ஆங்கிலேயே சைனியம் வாவியோரத்தில் தற்போது மகான் கோட்டமுனை அப்பா அவர்களின் தர்ஹாவுக்கு பக்கத்தில் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் முகாமிட்டனர். இவ்வாறு முகாமிட்டிருந்த சைனியத்தில் அதிகமாக ஜாவா இனத்தைச் சேர்ந்த முஸ்லீம் வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் இவ்வாறு முகாமிட்டிருக்கும் வேலையில் மட்டக்களப்பு வாவியில் ஒரு வெள்ளை பிடவையினால் கபன் செய்யப்பட்ட ஒரு மையித் ஒரு பேளையில் வைக்கப்பட்டவாறு ஆற்றில் மிதப்பதைக் கண்ட அப்பகுதி வாழ் இந்து மீனவர்கள் அதனை எடுப்பதற்காக தோனியில் ஆற்றுக்குள் சென்றனர் ஆனால் அவர்கள் அவ்விடத்துக்கு சென்றடைந்தபோது அது மறைந்து விட்டது. இவ்வாறு பல முறை நடந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதியல் முகாமிட்டிருந்த சைனியத்தில் (இராணுவத்தில்) இருந்த சில முஸ்லீம் வீரர்கள் அதனைக் கண்டு எடுப்பதற்காக ஆற்றுக்குள் சென்று அதனை எடுத்தபோது அது ஒர் முஸ்லீமின் மையித் எனக் கண்டு கொண்ட அவர்கள் அதனை கரைக்கு எடுத்து வந்து அதனை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்துவிட்டு மீசான்களுக்காக இரண்டு கம்புகளைக் நாட்டி வைத்தனர்.
சில நாட்களின் பின் அப்போது அவ்விடத்தில் சைனியத்தில் (இராணுவத்தில்) கடமை புரிந்த ஒருவர் ஓர் கனவு கண்டார் கனவில் தோன்றிய பெரியார் தான் மக்காவில் மரணமடைந்து அல்லாஹ்வின் ஆணைப்படி இவ்விடத்துக்கு வந்துள்ளதாகவும், ஆற்று ஓரத்தில் இரண்டு கட்டைகள் உள்ளதாகவும் அதனை எடுத்து தனது தலை மற்றும் கால் மாட்டில் நட்டுவிடுமாறும் கூறி மறைந்தார்.
காலையில் கண்விழித்துப் பார்த்த அந்த வீரர் ஆற்று ஓரத்துக்குச் சென்று பார்த்தார் அங்கு இரண்டு கற்கள் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்ட்ட நிலையில் பச்சை வர்ணம் பூசப்பட்டதாகக் காணப்பட்டது.
இதனை ஆச்சரியத்துடன் எடுத்த வீரரும் அவரின் சக தோழர்களும் கனவில் சொல்லப் பட்டவாறே செய்தனர். சில நாட்கள் கழிந்தன. அவ்வழியினால் வந்த ஆங்கில இராணுவத் தளபதி இவ்விடத்தில் ஒரு மையித் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கோபமுற்றார். உடனே அந்தக் கட்டைகளை முதலில் பிடுங்குமாறு ஆணையிட்டார்.
கட்டளைக்கு அடி பணிந்த வீரர்கள் கற்களை வெளியே எடுக்க அசைத்துப் பார்த்தனர். அது அசையவே இல்லை உடனே மண் வெட்டியால் ஓரத்தில் தோண்டலாகினர் எவ்வளவு தோண்டினாலும் கட்டை அதனை விட ஆழமாகப் பதித்திருந்தது அசைக்க முடியவில்லை.
உடனே தளபதிக்கு விடயத்தை சொன்னார்கள். உடனே தளபதி போருக்காகப் பயன்படுத்தும் யானையினை எடுத்து வந்து அதன் சங்கிலியால் அந்த கட்டைகளில் மகானின் கால் பக்கமுள்ள கட்டையை சங்கிலியால் பிணைத்து இழுத்து பிடுங்குமாறு கட்டளையிட்டார். கட்டளைப்படி கால் மாட்டில் உள்ள மீசான் கட்டையில் சங்கிலி கட்டப்பட்டு யானை அதனை இழுத்துப் பிடுங்க முயற்சித்தது.
மகானின் கால் மாட்டில் இருந்த கல் சற்றே சாய்ந்து செல்ல இழுத்த யானை அவ்விடத்திலேயே படுத்துவிட்டது. யானைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டு யானை அடுத்த நாள் இறந்து போனது. (இந்தக் மீசான் கட்டை இப்போதும் சாய்ந்த நிலையில் சங்கிலியால் கட்டப்பட்ட தடத்துடன் உள்ளது.)
சாய்ந்த நிலையில் சங்கிலி கட்டிய தடத்துடன் காணப்படும் கல்
இதனை கண்டு ஆத்திரமடைந்த தளபதி ஆங்கிலத்தில் தூற்றியவராக வந்து தனது சப்பாத்துக் காலினால் கட்டையினை உதைத்தார். உடனே அவரின் கால் செயல் இழந்து விட்டது. அப்போது உண்மையின் புரிந்துகொண்ட தளபதி அந்த இடத்தை அப்படியே விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த தளபதி ஆங்கிலத்தில் தூற்றியவராக வந்து தனது சப்பாத்துக் காலினால் கட்டையினை உதைத்தார். உடனே அவரின் கால் செயல் இழந்து விட்டது. அப்போது உண்மையின் புரிந்துகொண்ட தளபதி அந்த இடத்தை அப்படியே விட்டுவிடுமாறு கட்டளையிட்டார்.
அதன் பின்னர் அது முஸ்லீம்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. அன்றிலிருந்து அவ்விடத்துக்கு வரும் எல்லோருக்கும் அவர்களின் குறைகள் நீங்கின. கேட்பதையெல்லாம் கொடுத்து அருள் சொறிந்தார்கள் அப்பா அவர்கள்.
இந்த வரலாற்றுக்குப் பின்னனியில்தான் கோட்டமுனையில் முஸ்லீம்கள் வசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். இவர்கள் அன்று சைனியத்தில் கடமைபுரிந்த வீரர்களின் குடும்பங்களாகவே இருக்கின்றனர். அவர்களின் அதிகமானவர்கள் ஜாவா இனத்தை சேர்ந்த முஸ்லீம்களாக காணப்படுவது அதற்கு அத்தாட்ச்சியாக உள்ளது. இதனை தற்போதுள்ள அவர்களின் பிச்சலங்களின் பெயர்களைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு பல வருடங்கள் கழிந்த நிலையில் கோட்டமுனைக்கு பள்ளி வாயலுக்கு வருகை தந்த பெரியார் ஒருவர் “இங்கே ஒரு வலீயுல்லாஹ் அடங்கப் பெற்றிருக்கிறார்கள் அவர்களின் அடகஸ்தளம் எங்குள்ளது?” என்று அங்கிருந்தவர்களிடம் கேட்க அவர்கள் அப்பாவின் அடகஸ்தளத்தைக் காட்டினார்கள்.
அவர்களை தரிசித்த பெரியார் இவர்களின் பெயர் அஸ்ஸெய்யிது ஷிஹாபுத்தீன் என்றும் இவர்கள் “அந்தருஸ்” என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு முஹர்ரம் மாதம் மௌலீத் ஓதி அன்னதானம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக மகானின் திருத்தளம் விழாக்கோலம் பூண்டு வருகின்றது. மாகான் அவர்கள் அங்கிருந்து கொண்டு பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.
மகானின் அற்புதங்கள்
மகான் தற்போது அடங்கப் பெற்றிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் பொது சுவருடன் பரிஸ்டர் என்று அழைக்கப்படும் ஒருவரின் வீடு உள்ளது. இவர் மகானைப் பற்றி எதுவும் அறியாதவராகவும் அவ்விடத்தில் முஸ்லீம்களின் தர்ஹா இருப்பதையும் எதிர்த்து வந்தார் . (தற்போது அமரராகிவிட்டார்)
மகான் தற்போது அடங்கப் பெற்றிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் பொது சுவருடன் பரிஸ்டர் என்று அழைக்கப்படும் ஒருவரின் வீடு உள்ளது. இவர் மகானைப் பற்றி எதுவும் அறியாதவராகவும் அவ்விடத்தில் முஸ்லீம்களின் தர்ஹா இருப்பதையும் எதிர்த்து வந்தார் . (தற்போது அமரராகிவிட்டார்)
அதே வீதியில் மந்திரங்கள் செய்கின்ற வைத்தியர் இருந்தார். அவருக்கு பரிஸ்டர்மேல் கடும் கோபம். இலங்கையில் வடகிழக்கில் யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் பரிஸ்டரை பழிவாங்க நினைத்தார் வைத்தியர்.
ஒரு நாள் பரிஸ்டர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் அதில் தோன்றிய பச்சை நிற உடையணிந்த ஒரு மகான் “தானே உங்களின் அருகிலிருக்கும் ஷிஹாப்புத்தீன்” என்று தனை அடையாளப் படுத்திக் கொண்டு “நாளை மாலை ஒருவர் உமக்கு தீங்கு செய்ய உள்ளார். அவரை நான் கவனித்துக் கொள்கின்றேன்” என்று கூறி மறைந்தார்.
ஒன்றும் புரியாத பரிஸ்டர் அடுத்தநாள் மாலை தனது வீட்டு முற்றத்தில் மகானின் தர்ஹாவுக்கு எதிர்பக்கமாக வாவியைப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டு மகானின் தர்ஹாவை அவதானித்தவராக கதிரையில் அமர்ந்திருந்தார்.
தர்ஹாவுடன் சேர்ந்து காணப்படுவது பரிஸ்டர் வாழ்ந்த வீடு
அன்று மாலையானதும் பரிஸ்டரைக் கொள்வதற்காக வைத்தியர் ஒரு கைகுண்டை எடுத்துக் கொண்டு மகானின் தர்ஹாவுடைய வாசலில் நின்று பரிஸ்டரை நோக்கி வீச எத்தனித்தார் என்ன அதிசயம் கைக்குண்டு வைத்தியரின் கையிலேயே வெடித்தது. வைத்தியர் ஒரு கையை இழந்தார். அன்றிலிருந்து அந்த வைத்தியர் சொத்திக்கை வைத்தியர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார் அவர் இறந்தது ஒரு 10 ஆண்டுகள்தான் இருக்கும்.
அன்று மாலையானதும் பரிஸ்டரைக் கொள்வதற்காக வைத்தியர் ஒரு கைகுண்டை எடுத்துக் கொண்டு மகானின் தர்ஹாவுடைய வாசலில் நின்று பரிஸ்டரை நோக்கி வீச எத்தனித்தார் என்ன அதிசயம் கைக்குண்டு வைத்தியரின் கையிலேயே வெடித்தது. வைத்தியர் ஒரு கையை இழந்தார். அன்றிலிருந்து அந்த வைத்தியர் சொத்திக்கை வைத்தியர் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார் அவர் இறந்தது ஒரு 10 ஆண்டுகள்தான் இருக்கும்.
இதனை தொடர்ந்து மகான் மீது பாசங்கொண்ட பரிஸ்டர் தான் உயிருடன் உள்ளவரை மகானின் கந்தூரிக்கு போர்வை போர்த்துவது மற்றும் கந்தூரி செலவுகளுக்கு பெரும் அளவு பணம் வழங்குவதுமாக மகானிடம் அன்பு காட்டி வாழ்ந்து வந்தார் இன்றும் மகானின் தர்ஹாவுக்கான மின்சாரக் கட்டணத்தை அவரின் குடும்பத்தினர்தான் செலுத்தி வருகின்றார்கள்.
அதேபோல் யுத்த காலப்பகுதியில் மட்டக்களப்பு கோட்டையில் இராணுவ முகாமும் மாகானின் தர்ஹா அமைந்துள்ள வாவியோர வீதியில் பல இராணுவ தலைமை அதிகாரிகளின் முகாம்களும் அமைந்திருந்தன தற்போதும் உள்ளன.
இதிலிருந்து இராணுவத்தினர் மோதல்கள் இடம்பெறும் போது கோட்டையிலிருந்தும் வாவியோர வீதியிலிருந்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புலிகள் ஊடுவுவார்கள் என்று தாக்குதல் நடத்துவது வழக்கம் அவ்வாறு தாக்குதல் நடத்தும் போதெல்லாம் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்களை பாதுகாக்குமாறி கூறி “அவ்லிய்யா அப்பா” என்றே அழுவார்களாம்.
அவர்கள் எவ்வளவு தாக்குதல் எங்கள் வீடுகள் அமைந்துள்ள பக்கத்துக்கு நடத்தினாலும் எதுவும் அவ்லிய்யஹ் அப்பா அவர்களின் தர்ஹாவை தாண்டி வருவதில்லை என்று கூறி அங்கலாக்கின்றார் சில இந்துப் பெண்மணிகள்.
பாரிய செல் தாக்குதல்கள் மற்றும் கைகுண்டுகள் இப்பகுதியை நோக்கி வீசப் பட்டால் அவை அப்படியே வெடிக்காமல் அப்பாவின் தர்ஹாகுள்ளோ அல்லது ஓரத்திலோ கிடக்கும் அதனை மறுநாள் இராணுவத்தினர் வந்து எடுத்துச் செல்வார்களாம். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடந்துள்ளதாம் என்று அப்பாவைப் அதிசயங்கள் கூறிய அவர்கள் நீங்கள் வந்து கந்தூரி நடாத்தாவிட்டால் நாங்கள் எல்லோரும் பணம் போட்டு கந்தூரி நடத்துவோம் காரணம் இவர்கள்தான் எங்களை பாதுகாத்தார்கள் இப்போதும் பாதுகாக்கிறார்கள். என்கிறார்கள் அவர்கள்.
கந்தூரி நிகழ்வுக்காக வருகை தந்தவர்களில் சிலர்
2004ம் ஆண்டு சுனாமி வந்தபோது கூட வாவியில் ஊரை அடித்துச் செல்ல உட்புகுந்த நீர் அப்பாவின் தர்ஹாவை தாண்டி செல்ல உத்தரவின்றி அவ்விடத்திலேயே நின்றுவிட்டதாம் என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள் அவர்கள்.
2004ம் ஆண்டு சுனாமி வந்தபோது கூட வாவியில் ஊரை அடித்துச் செல்ல உட்புகுந்த நீர் அப்பாவின் தர்ஹாவை தாண்டி செல்ல உத்தரவின்றி அவ்விடத்திலேயே நின்றுவிட்டதாம் என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள் அவர்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் பாரிய வெள்ளம் கிழக்கு மாகாணத்தை புகுந்து அழித்தபோதுகூட அந்த வெள்ளம் அப்பாவின் தர்ஹாவில் அப்பாவின் அடகஸ்தளம் அமைந்துள்ள சுமார் அரை அடி உயரத்துக்குச் செல்லாமல் அதன் கீழ் நின்றதாம். ஆனால் அதே வீதியில் ஏனைய பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர்.
அதே காலத்தில் அப்பாவின் தர்ஹாவுக்கு யாரும் மின்விளக்கை போட வாராதபோது ஒரு சிரிய மண் குப்பியில் திரிவைத்து எரிக்கப்படும் சிறிய குப்பி விளக்கு ஒன்று தொடர்ந்து பல நாட்கள் தானாக தோன்றி எறிந்த்தாகவும் அதை அப்பகுதியில் வா ழும் பலரும் வந்து பார்வையிட்டதாகவும் கூறுகின்றனர் பலர்.
இப்பகுதியில் வாழும் இந்துக்களுக்கு குழந்தை பிறந்தால் முதலில் அதனை அப்பாவின் தலை, கால் மாட்டில் வளர்த்தாமல் தாங்கள் கோவிலுக்குக் கூட எடுத்துச் செல்ல மாட்டார்களாம், தங்களின் வீட்டில் ஏதும் விசேடம் என்றால் முதல் காணிக்கை அப்பாவுக்குத்தான் என்கிறார்கள் அவர்கள்.
அப்பாவின் தர்ஹா அமைந்துள்ள ஒழுங்கைப் பக்கம்
அத்துடன் வஹ்ஹாபிய முகவர்கள் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் பல இறைநேசர்களின் தர்ஹாகளை உடைக்க வேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முதல் கடும் பிரத்தனம் எடுத்தனர் அந்தக் காலப்பகுதியில் பல ஷியாரங்களை உடைப்பதாகக் கூறி அவைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தினர். அதில் ஈடுபட்டவர்களில் சிலர் பாரிய நோய்களுக்கு உள்ளாகி மருத்துவம் பலனின்றி இறந்து விட்டனர். சிலர் எங்கு போனார்கள் என்று தெரியாமல் போய்விட்டனர் இன்னும் சிலர் நோயாளிகளாக அத்தாட்சிக்கு படுக்கையில் உள்ளனர்.
அத்துடன் வஹ்ஹாபிய முகவர்கள் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் பல இறைநேசர்களின் தர்ஹாகளை உடைக்க வேண்டும் என்று சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முதல் கடும் பிரத்தனம் எடுத்தனர் அந்தக் காலப்பகுதியில் பல ஷியாரங்களை உடைப்பதாகக் கூறி அவைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தினர். அதில் ஈடுபட்டவர்களில் சிலர் பாரிய நோய்களுக்கு உள்ளாகி மருத்துவம் பலனின்றி இறந்து விட்டனர். சிலர் எங்கு போனார்கள் என்று தெரியாமல் போய்விட்டனர் இன்னும் சிலர் நோயாளிகளாக அத்தாட்சிக்கு படுக்கையில் உள்ளனர்.
இந்த ஷைத்தானின் வாரிசுகள் கோட்டமுனை அப்பா அவர்களின் தர்ஹாவையும் தாங்கள் உடைக்கப் போவதாக வாய் சவால் விட்டனர். உடனே அப்பகுதியில் வசிக்கும் தமிழ் இளைஞர்களும் மக்களும் “அப்பாவின் தர்ஹாவில் கைவைக்க யார் வந்தாலும் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” என்று செய்தி அனுப்பினார்கள்.
இதனைக் கேட்ட ஈமானிய உள்ளங்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஷைத்தானின் பிச்சலங்கள் அப்பக்கம் தலைவைத்துப் படுக்கவும் இல்லை.
இவ்வாறு கோட்டமுனை அப்பாவின் பெருமை சொல்ல எழுத நாள் ஒன்று போதாது. அப்பகுதியில் தற்போது வாழும் தமிழர்கள் (இந்துக்கள்) அதற்கு சாட்சியாக உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த பல அதிசயங்களை வரிசையாகச் சொல்கின்றனர். எல்லாவற்றையும் எழுத முடியவில்லை அப்படி எழுதுவதாயின் அது ஒரு தொடர் கட்டுரையாகவே எழுத வேண்டும். ஆகவே விரிவை அஞ்சி தவிர்க்கினறேன்.
பரகத்திற்காக அப்பாவின் அதிசங்களில் சிலவற்றை இங்கு எழுதினேன். மட்டக்களப்புக்கு நீங்கள் வந்தால் நிச்சயம் மட்டக்களப்பு வாவியொர அவன்யூவில் கம்பீரமாக்க் காட்சிதரும் கோட்டமுனை அப்பாவை தரிசிக்க மறக்க வேண்டாம்.
கேட்போர்கெல்லாம் பாகுபாடின்றி அள்ளிக் கொடுக்கம் வள்ளல் அவர்கள்.
“எவர் எனக்குரித்தான இறைநேசர்களுடன் போர் தொடுக்கின்றார்களோ! அவர்களுடன் நான் (அல்லாஹ்) போர் தொடுப்பேன்” – ஹதீத் புஹாரீ -