السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 1 September 2015

யார் பயங்கரவாதி? முஸ்லிமா வஹாபியா? Must Read

Image result for Fatwa Against Terrorism and Suicide Bombing
இஸ்லாம் பயங்கரவாத மார்க்கமா?
இஸ்லாத்தில் தற்கொலைத் தாக்குதல் உண்டா?
இஸ்லாம் அப்பாவி மக்களைக் கொலை செய்யக் கூறுகிறதா?
“இல்லை”, என்றால் வஹாபிகளிடத்தில் இஸ்லாம் இருக்கின்றதா?

வஹாபிகளுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வளவு தூரம் என்பதை அறியுங்கள்.
அறிஞர் கலாநிதி தாஹிர் காதிரி அவர்கள் இங்கிலாந்தில் வெளியிட்ட பத்வா மார்க்கத் தீர்ப்பைக் கேளுங்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் எத்திவைத்து, இஸ்லாம் சாந்தி சமாதான மார்க்கம் என்ற பெயரைக் காப்பாற்றுங்கள்.
உலகம் எல்லாம் இஸ்லாம் பரவியது வஹாபியத்து வருவதற்கு முன்னரே என்பது எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலும்கூட இஸ்லாம் பரவியது மத்ஹபு, தரீக்காவைப் பின்பற்றும் முஸ்லிம்களால் தான் என்பதும் உலகறிந்த விடயம்.
காபிர்களை இஸ்லாத்துக்கு அழைப்பது எவ்வாறு என்பதை அல்லாஹு தஆலாவும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் திருக்குர்னிலும் ஹதீஸிலும் மிகத் தெளிவாகக் காட்டித் தந்திருக்கிறார்கள். இஸ்லாத்தை எதிர்க்காத அப்பாவிகளைக் கொலை செய்யக் கூடாது, முதியவர்களையும் பெண்களையும் சிறு பிள்ளைகளையும் கொலை செய்யக் கூடாது, விவசாயங்களையும் மரங்களையும் அழிக்கக் கூடாது. அபயம் தேடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இப்படியெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை உலமாக்கள் மட்டுமல்ல, உலகக் கல்வி படித்த அறிஞர்கள் மட்டுமல்ல, பாடசாலை மாணவர்களும், ஏன் குத்பாக்களின் மூலம் பொதுமக்களும்கூட அடிக்கடி கேட்டு அறிந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், ஏன் நாம் வானொலி, டீவி, பத்திரிகைகளில் தினமும் கேள்விப்படுகிறோம், பாக்கிஸ்தானில் வைத்தியசாலையில் தற்கொலைக் குண்டு தாக்குதலாம். முப்பது நாற்பது அப்பாவி நோயாளிகள் மரணமாம். ஆப்கானிஸ்தானில் மார்க்கட்டில் தற்கொலைக் குண்டு தாக்குதலாம். பெருந்தொகை அப்பாவி பெண்களும் குழந்தைகளும் பொது மக்களும் மரணமாம். இராக்கில் அல்லாஹ்வின் மஸ்ஜிதில் தற்கொலைக் குண்டு வெடிப்பாம். அல்லாஹ்வைத் தொழுதுகொண்டிருந்த ஐம்பது அறுபது வணக்கவாளிகள் மரணமாம். யெமனில் தற்கொலைத் தாக்குதலாம். இருபது முப்பது பொதுமக்கள் மரணமாம். ஏன் இந்த அநியாயமான படுகொலைகள்?
ஆயிரம் வருடங்களாக ஸுன்னத்து வல்ஜமாஅத்து இமாம்களும் அவ்லியாக்களும் இப்படி அப்பாவி பொது மக்களைக் கொலை செய்தார்களா? கொலை செய்யும்டி பத்வாக் கொடுத்தார்களா? இல்லையே? அப்படியென்றால் வஹாபி மார்க்கம் என்பது உலக முடிவின் அடையாளமாக வந்த கடைசிகால வழிகெட்ட பித்அத்து மார்க்கம் என்பதை நீங்கள் எவரும் மிக எளிதில் புரிந்து கொள்ளலாம் அல்லவா?
முஸ்லிம் பொது மக்களையும், அப்பாவிப் பெண்கள், குழந்தைகளையும், நோயாளிகளையும் இவ்வாறு தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்ய குர்ஆனிலோ ஹதீஸிலோ கடகளவு கூட இடமில்லை. எனவே கவாரிஜ்கள் “மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவாரக்ள்” என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏராளமான ஹதீஸ்களில் கூறியது போன்று இன்றைய கவாரிஜ்களான வஹாபிகள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள் என்பதையே அவர்களின் இந்தப் பயங்கரவாதம் எடுத்துக்காட்டுகிறது.
இப்போது அடிக்கடி கேள்விப்படும் இன்னொரு புதிய கடைசிகால பித்அத்தான தாக்குதல் தான், அவ்லியாக்களின் ஸியாரங்களை தகர்ப்பது. ஆபிரிக்காவில், யெமனில், எகிப்தில், லிபியாவில், இன்னும் பல இடங்களில் என்று இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஸஹாபாக்களின் ஸியாரங்கள், இமாம்களின் ஸியாரங்கள், அவ்லியாக்களின் ஸியாரங்கள் என்று சகலதையும் இடித்தும் குண்டு வைத்தும் தகர்க்கிறார்கள் கவாரிஜ் வஹாபிகள்.
வஹாபிகள் செய்யும் சகல பித்அத்துகளுக்கும் அநியாயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸில் இருந்து தான் ஆதாரம் காட்டுகிறார்கள். அப்படியென்றால் 1400 வருடங்களாக இருந்த ஆயிரக் கணக்கான இமாம்களுக்கும், இலட்சக் கணக்கான பெரும் உலமாக்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் தெரியாதா? புகாரி இமாமின் கப்ரு, குத்பு நாயகத்தின் கப்ரு, நான்கு இமாம்களின் கப்ருகள், இன்னும் ஏராளமான ஸஹாபாக்கள், தாபிஊன்கள், இமாம்களின் கப்ருகள் அவர்களுக்கு தென்பட வில்லையா? ஏன் அவர்கள் உலகம் பூராக உள்ள ஸஹாபாக்களினதும், இமாம்களினதும் அந்தக் கப்ருகளை உடைக்க வில்லை? கப்ருகள் சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்களை ஸஹாபாக்களும் இமாம்களும் விளங்கியது ஒரு விதம். கடைசிகால மடயர்களான வஹாபிகள் விளங்கியது வேறு விதம்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கப்ரு ஷரீபு ஹிஜ்ரி 80 இல் மஸ்ஜிதுந் நபவியுடன் இணைக்கப்பட்டு மஸ்ஜிது விசாலமாக்கப்பட்டது. அப்போது அதை தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களான இமாம்கள் எதிர்க்காமல் அங்கீகரித்தார்கள். மூன்று நூற்றாண்டுகள் கைரான (நேர்வழி பெற்ற நல்ல) காலங்கள் என்று ரஸூலுல்லாஹ் சொன்னதை நாம் ஏற்பதாயின் முதலாம் நூற்றாண்டில் நடந்த இந்த வேலையை நேர்வழி என்று நாம் ஏற்க வேண்டும்.
பள்ளியினுள் கப்ருகள் இருப்பது சிர்க்கு என்று வஹாபி சொல்வதை யாராவது ஏற்பதாயின் அவர்கள் ரஸூலுல்லாஹ்வின் கைரான மூன்று நூற்றாண்டுகள் பற்றிய அந்த ஹதீஸையும் , சகல தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் செயலையும் நிராகரிக்க வேண்டும். முஸ்லிம்களே, ரஸூலுல்லாஹ்வும், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், 1400 வருடமாக இருக்கின்ற இமாம்கள் நேர்வழியா, அல்லது முஸ்லிம் உலகை யஹூதிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்த , உலக முடிவு நெருங்கியுள்ள கடைசி காலத்தில் வந்துள்ள வஹாபிகள் நேர்வழியா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
ஆம், குர்ஆனும் ஹதீஸும் ஸஹாபாக்களுக்கும் இமாம்களுக்கும் விளங்குவது ஒரு விதம். கடைசி காலத்தில் தோன்றும் வஹாபி பித்அத்திகளுக்கு விளங்குவது வேறு விதம். இமாம்களையும் அவ்லியாக்களையும் விட்டு விட்டு, தற்கால மடயர்களான சுயநலவாதிகளான வஹாபித் தலைவர்களிடம் பொது மக்கள் குர்ஆன் ஹதீஸை எடுத்தால் தலைகீழாகத் தானே புரியும் !
“என்னுடைய உம்மத்து வழிகேட்டின் பேரில் ஒன்று சேர மாட்டார்கள்” என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளார்களே ! (அபூ தாவுத், இப்னு மாஜா). இந்தக் கப்ருகளும், அவற்றை முஸ்லிம்கள் தரிசிக்கச் செல்வதும் இஸ்லாத்தில் உள்ளது தான் என்பதால் தானே இமாம்களும் முழு முஸ்லிம் உம்மத்தும் அதைச் செய்வதில் ஒன்றுபட்டிருந்தார்கள். முஸ்லிம் உம்மத்து ஒன்று பட் விடயம் நேர்வழி தான் என்று ரஸூலுல்லாஹ் அவர்களே கூறிய பின், “அப்படியல்ல இஸ்லாம் இப்படித்தான்” என்று புதிய விளக்கம் கொடுப்பதற்கு வஹாபிக்கு என்ன உரிமை இருக்கின்றது ?
“அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், மனிதர்களையோ பொருட்களையோ அதிகம் கௌரவிப்பது சிர்க்கு. அது அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு மாற்றமானது” என்பது தான் வஹாபி மார்க்கம் என்பது உங்கள் அனைவருக்கம் தெரியும். ஒரு கேள்வி : இன்றைய வஹாபிகள் ரஸூலுல்லாஹ்வின் காலத்தில் இருந்திருந்தால், கல்லால் ஆன கஃபதுல்லாஹ்வை தவாபு செய்வது, ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது, ரஸூலுல்லாஹ்வின் உமிழ் நீரை ஸஹாபாக்கள் மேனியில் பூசிக் கொள்வது போன்ற செயல்களால் தவ்ஹீதுக்கு பாதிப்பு என்று ரஸூலுல்லாஹ்வுக்கே ஆலோசனை கூறியிருப்பார்கள் அல்லவா?
முஸ்லிம்களின் ஏகோபித்த செயலுக்கு மாற்றமாக யாராவது புதிய ஒரு கொள்கையைக் கொண்டுவந்தால் அவன் முஸ்லிம் உம்மத்தை விட்டும் வெளியேறி விட்டான். நரகிலும் அவன் தனியாகப் போடப்படுவான் (திர்மிதி) என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததற் கிணங்க, வஹாபிகளே பித்அத்து வாதிகள் என்பதும், கப்ருகளை இடிக்கும் வஹாபிகள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்பதும் உறுதியாகின்றன.
குர்ஆன் ஹதீஸ் என்று வஹாபி கூறியவுடன், பாமர மக்கள் கலங்குகிறார்கள். ஏன் கலங்க வேண்டும் ? எமது பெரும் தலைவர், எமக்கு கடைசி காலத்திலும் நேர்வழி காட்ட வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஏராளமான ஹதீஸ்கள் மூலம் வஹாபிகளை இனம் காட்டித் தந்திருக்கிறார்கள். அவற்றுள் மிகவும் உறுதியான ஹதீஸ்களில் நின்றும் உள்ளவை தான், கடைசி காலத்தில் தோன்றும் ஒரு வழிகெட்ட கூட்டம் குர்ஆன் ஹதீஸ் பேசி மக்களை வழிகெடுப்பதாக கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள்.
“கடைசி காலத்தில் ஒரு கூட்டத்தினர் வரவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள், நபியின் சொல்லை சொல்லிக் காட்டுவார்கள். ஆனால் அவர்களின் தொண்டைக்கு கீழ் அவை (குர்ஆனும் ஹதீஸும்) இறங்கமாட்டாது. (அதாவது, குர்ஆனும் ஹதீஸும் என்ன கூறுகின்றன என்பதை அவர்கள் விளங்க மாட்டார்கள் ). வேட்டை மிருகத்தை விட்டும் அம்பு எவ்வாறு வேறு திசையில் வேகமாகச் செல்கின்றதோ அதே விதம் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் எல்லாம் (மனிதர்கள், மிருகங்களை விடவும்) மிகவும் கெட்டவர்கள். என்ற கருத்தில் ஏராளமான நபிமொழிகள் (புகாரி, முஸ்லிம், நஸாஈ, அபூ தாவுத், முவத்தா) மூலம் வஹாபிய பித்அத்தை விட்டும் உண்மை முஸ்லிம்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள்.
சாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடாத்தினார்களா? ஹனபி, ஹன்பலி, மாலிக்கி மத்ஹபுகளைச் சேர்தவர்கள் தற்கொலை குண்டை வெடிக்க வைத்தார்களா? காதிரியா, சாதுலியா, ரிபாஇய்யா போன்ற தரீக்காக்களைச் சேர்ந்தவர்கள் தற்கொலை தாக்குதல் நடாத்தினார்களா? இல்லவே யில்லை. தவ்ஹீதை பரப்புகிறோம் என்று வந்த வஹாபி இயக்கங்களே இந்த தற்கொலைத் தாக்குதல்களை யெல்லாம் நடாத்தி மனித இனத்தை அநியாயமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்ல. முழு உலக மக்களும் அறிவார்கள்.
வெளியில் இருந்து இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை ஆயிரம் வருட அனுபவத்தில் கண்டறிந்த யூதர்கள், இஸ்லாத்தை அழிக்க இஸ்லாத்துக்குள்ளேயே ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பல நூறு வரடங்களாக திட்டமிட்டு அமைத்த அமைப்பு தான் வஹாபி இயக்கம். முஸ்லிம்களை இஸ்லாத்தின் பெயரால் அழைத்தால் தான் புதிய இயக்கத்தில் சேருவார்கள் என்பதால், “தவ்ஹீது” என்ற பெயிரில், (அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லாத) புதிய ஒரு தவ்ஹீதை அறிமுகம் செய்தார்கள்.
இந்தப் புதிய “தவ்ஹீதின்படி” இது வரை உலகில் இருந்த, தற்போதிருக்கும் சகல முஸ்லிம்களும் காபிர்கள், முஷ்ரிக்குகள் ஆவர். எனவே அவர்களைக் கொலை செய்வது ஜிஹாத் ஆகும். அந்த முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிப்பதும், இஸ்லாத்தைப் பாதுகாத்த தலைவர்களின் கப்ருகளை இடித்து, அவ்லியாக்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்வதும் ஜிஹாத் ஆகும் என்ற விசக் கருத்தை யஹூதிகள் வஹாபி தலைவர்களிடம் விதைத்தார்கள். இஸ்லாத்தை தழுவுவதாக நடித்து அரபு நாட்டு கல்வி, தஃவா, பண விநியோக துறைகளில் ஊடுருவி, உலக முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், இஸ்லாத்தை எமக்கு பாதுகாத்து தந்த இமாம்கள், அவ்லியாக்களின் நினைவுச் சின்னங்களான கப்ருகளையும் உலகில் இருந்தே அழித் தொழிக்கும் தமது நீண்ட கால திட்டத்தை வஹாபிகள் மூலம் யஹூதிகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இஸ்லாம் சிறு தொகையினரைக் கொண்டே ஆரம்பமானது. அதே போன்று (கடைசி காலத்தில், அதிகம் பேர் வழிகெட்டு) சிறு தொகையினரே உண்மை முஸ்லிம்களாக இருப்பார்கள், ( முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, தாரிமி ) என்றும்,
காலையில் முஸ்லிமாக இருந்தவர் மாலையில் காபிராவாரர், மாலையில் முஸ்லிமாக இருந்தவர் அடுத்தநான் காலையில் காபிர் ஆவார் என்ற கருத்தில் ( முஸ்லிம், திர்மிதி, அபு தாவுத், இப்னு மாஜா, அஹ்மத், தாரிமி ) கூறப்பட்டுள்ள ஹதீஸுகளின்படி இப்போது, ஸுன்னத்து வல்ஜமாஅத்திலிருந்து வேகமாக முஸ்லிம்கள் மாறி, வஹாபிகளின் தொகையே நாளுக்கு நாள் கூடுகிறது. காலையில் ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிமாக இருந்த ஒருவன், பகலில் மற்ற முஸ்லிமைக் காபிர், முஷ்ரிக்கு என்று சொல்வதன் மூலமோ, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று சொல்வதன் மூலமோ , ஹதீஸில் கூறப்பட்ட விதம் மாலையில் காபிராகி விடுகின்றான்.
புனித மதீனா சரீபில் யார் பித்அத்தான காரியத்தைச் செய்கிறாரோ, அல்லது பித்அத்துக் காரனுக்கு உதவுகின்றாரோ அவருடைய பர்ழான ஸுன்னத்தான எந்த அமலையும் கியாமத்து நாளில் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்ற கருத்தை ஏராளமான நபிமொழிகள் கூறிக் கொண்டிருக்கின்றன. (புகாரி, முஸ்லிம், திர்மிதி).
ஒன்றல்ல இரண்டல்ல, ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு மாற்றமான ஏராளம் பித்அத்துகளைச் செய்து கொண்டிருக்கின்ற வஹாபிகள் தொழுகிறார்கள், நோன்பு பிடிக்கிறார்கள், ஹஜ்ஜு செய்கிறார்கள், தான தர்மங்கள் செய்கிறார்கள். மதீனாவுக்குப் போனால் விசேசமாக தனது புதிய பித்அத்துக் கொள்கையை வெளியாக்குகின்றார்கள். ஆனால் அவர்களை யறியாமலேயே அவர்களை விட்டும் ஈமான் போய் விடுகின்றது. மறுமையில் எந்த அமலையும் அல்லாஹ் ஏற்பதில்லை என்று இந்த ஹதீஸுகள் எச்சரிக்கின்றன.
உண்மை முஸ்லிம்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். எனவே கடைசி காலத்தில் குறைந்துகொண்டே வரும் முஸ்லிம்களுக்கே சுவர்க்கம் கிடைக்கும் என்று நபியவர்கள் கூறியிருப்பதால் , தரீக்கா, மத்ஹபைப் பின்பற்றி ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் உள்ள முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கிருபையால் திருப்தியோடு வாழலாம்.
வஹாபிகளின் தற்கொலைத் தாக்குதல், சொத்துக்களை அழித்தல், கொடூரமான முறையில் கொலை செய்தல் போன்ற பயங்கரச் செயல்களால், இஸ்லாம் பயங்கர வாதத்தை ஏவும் மார்க்கம், மனித உயிர்களை அநியாயமாக குடிக்கும் மார்க்கம், சொத்துக்களை அநியாயமாக அழிக்கும் மார்க்கம் என்ற மோசமான கருத்துக்கள் இப்போது அந்நிய மதத்தவர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகின்றன.
இதனால் தான் ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி இஸ்லாத்துக்கு எதிரான மோசமான சதிநாச வேலைகள் முன்னெடுக்கப் படுகின்றன. இஸ்லாமிய வேடம் தரித்து தினமும் உலகில் பல நாடுகளிலும் தற்கொலைத் தாக்குதல் நடாத்தி ஏராளம் அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப் படுவது போன்று உலகில் வேறு எந்த நாட்டிலாவது, எந்த மதத்தினராவது, எந்த இனத்தவராவது தனது இனத்தையே அழிக்கும் வேலை நடைபெறுகிறதா? இல்லை அல்லவா?
இந்தக் கொடூரக் காட்சிகளைத் தினமும் டீவி யிலும், பத்திரிகைகளிலும் காணும் அந்நிய மதத்தினர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இஸ்லாத்தைப் போதித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தப்பாக எடை போடுகிறார்கள். இதனால் தான் அண்மைக் காலங்களில் “இஸ்லாம் பயங்கரவாத மதம்” என்று இஸ்லாத்துக்கு எதிராக உலகின் பல நாடுகளிலும், ஏன் இலங்கையிலும் கூட அந்நியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். நபிகள் நாயகத்தைத் தூற்றிப் பேசினார்கள். எனவே இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தின் சாந்தி சமாதான கொள்கைகளையும் நாம் உலக மக்கள் (குறிப்பாக பிற மதத்தவர்கள்) அறியச் செய்ய வேண்டுமென்றால், வஹாபிகளின் இஸ்லாமிய விரோத பயங்கரவாதக் கொள்கையை அவர்களுக்கு எடுத்து விளக்குவது முஸ்லிம்களின் கடமையாகிறது.
தவறினால், வஹாபிகளின் பயங்கரவாத செயல்களை வைத்து முஸ்லிம்களுக்கு எடிதிரான தாக்குதல்களை பிற மதத்தவர்கள் எதிர்காலத்தில் பல நாடுகளிலும் தீவிரப்படுத்தலாம். சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இஸ்லாமிய விரோத நடவடிக்கைகள் முடுக்கி விடப்படலாம். இதனால் இஸ்லாத்துக்கும் கெட்ட பெயர், பிறர் இஸ்லாத்தை தழுவ விரும் மாட்டார்கள். எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் அவர்களையும் அல்லாஹு தஆலாவையும் பிற மதத்தவர்கள் தூற்றவும் காரணமாக அமையும். எனவே வஹாபியின் பயங்கரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்பதையும், இஸ்லாத்தை அழிக்க யூதர்களால் வடிவமைக்கப்பட்ட இயக்கமே வஹாபியத்து என்பதையும் உலகறியச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும்.
எனவே எமது இணையத்தளத்தில் (  ( வஹாபிப் பயங்கரவாதம் )) என்ற தலைப்பில் உள்ள கலாநிதி தாஹிர் காதிரி அவர்கள் இங்கிலாந்தில் 2010 இல் அறிஞர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் தெளிவு படுத்திய இஸ்லாத்தின் சாத்வீகக் கொள்கையை பிற மதத்தவர்கள் மத்தியில் பரப்புவது எமது கடமையாகும். வஹாபிகள் இன்று பல நாடுகளிலும் மேற்கொள்ளும் தற்கொலைத் தாக்குதல்களை குர்ஆனும் ஹதீஸும் எவ்வாறு வன்மையாகக் கண்டிக்கின்றன என்பதை கலாநிதி தாஹிர் காதிரி அவர்கள் மிக உறுதியான ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்கிறார்கள்.
பல துறைகளிலும் படிக்கும் மாணவர்களும் இதனைக் கேட்பதன் மூலம், இஸ்லாத்தின் சாந்தி சமாதான தன்மையை அறிய முடிவதுடன், வஹாபி பித்அத்தில் விழாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடிவதுடன், ஆங்கில மொழியறிவுக்கும் உதவியாக இருக்கலாம் அல்லவா?
உங்களுடன் தொடர்புடையவர்கள், உங்களுக்கு தெரிந்த முகவரிகள், உலகளாவிய இணையத் தளங்களுக்கும் இதை அனுப்பி இஸ்லாம் என்பது பயங்கரவாத மார்க்கம் அல்ல, இஸ்லாம் என்பது சாந்தி சமாதான மார்க்கம் என்பதையும், இஸ்லாத்தை அழிக்க கடைசி காலத்தில் தோன்றி, இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதாக நபிகள் நயாகம் அவர்கள் கூறிய, வழிகெட்ட ஒரு கூட்டத்தினரே இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதையும், முஸ்லிம்களில் தெரியாதவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கம் எத்தி வைப்பது கடமையாகும். வஹாபியத்தின் பயங்கரவாத கொள்கையையும், அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் பிற மதத்தவர்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், அவர்கள் இஸ்லாத்தை தவறாக எடை போட்டு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாக்குவதைம் இன்ஷா அல்லாஹ் ஓரளவு குறைக்கலாம் அல்லவா?