السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 17 September 2015

நாம் வாழும் பயங்கர காலம்! முஸ்லிம்களே விழிப்பாக இருங்கள்!


நாம் வாழும் பயங்கர காலம்!  முஸ்லிம்களே விழிப்பாக இருங்கள்!

ஒரு காலம் இருந்தது இஸ்லாத்திற்கு வெளியே இஸ்லாத்திற்கு எதிரான யஹூதி, நஸாராக்கள் கூட்டம்.
.
அதற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்தின் பெயரில் முனாபிக்கீன்கள் (வஹாபிகள்) கூட்டம்.
.
இப்போது அதற்கும் ஒரு படி மேலே சென்று அந்த இரண்டு கூட்டங்களுடன் சேர்ந்து மூன்றாவதாக இஸ்லாத்திற்குள்ளே (அதாவது அஹ்லுஸ் ஸுன்னாஹ்வுக்குள்) ஒரு கூட்டம் தலையெடுத்துள்ளது. அவர்கள்தான் போலி தரீக்காவாதிகள்.
.
இஹ்ஸான் என்ற உள்ளத்தை தூய்மைப்படுத்தும் முறையை கையாளாமல் வெறும் முக்கா வஹாபிகளை போல் மூச்சுக்கு முன்னூறு தடவை ஷரீஅத், ஷரீஅத் என்று பேசி உள்ளத்தை தூய்மைப்படுத்தாமல், இவர்களின் உள்ளங்கள் வஹாபிகளை போல் பொறாமை, பெருமை, கர்வம், ஆணவம், அறியாமை போன்ற கெட்ட குணங்களால் இருளடைந்துள்ளது.
.
இப்போது இலங்கையில் தரீக்கா என்ற பெயரில் லெபனானை சேர்ந்த ஹராரீ தரீக்கா என்ற பெயரில் இப்னு தைமியாவை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இலங்கைக்குள் ஒரு கூட்டம் நுழைந்துள்ளதாம்.
.
இவர்களின் கொள்கைகள்:
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் நூர் முதலில் படைக்கப்படவில்லை”
“நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நூர் அல்ல”
.
மேலும் அவர்களின் “கைப தகூனு அலா ஸவாப்” என்ற அவர்களின் நூலில் ரஸுலுல்லாஹ்வின் உடலை நூர் என்று சொல்பவன் காபிர் என்று எழுதப்பட்டுள்ளதாம்! நவூதுபில்லாஹ்!
.
யா நபி பைத் இல் வரும் அந்த கப்பாருள் கதாயா என்ற வரியை கடுமையாக எதிர்கிரார்கலாம்
.
இதுபோன்ற வஹாபிய குப்பார்களின் கொள்கைகளை ஊர் ஊராக பிரச்சாரம் செய்து திரிகிறார்களாம்.
.
அது மட்டுமல்ல இவ்வையகத்தில் நபிமார்கள் முதல் வலிமார்கள் வரை போதித்து சென்ற இஸ்லாத்தின் தௌஹீதான வஹ்ததுல் வுஜூதை இலங்கை முஸ்லிம்களிடம் இருந்து ஒழிப்பது இவர்களின் நோக்கம்.
.
அதற்காக பணத்தை கொடுத்து மௌலவிமார்களை உருவாக்குகிறார்கலாம். தரீக்காவை சேர்ந்தவர்கள் வஹ்ததுல் வுஜூதை எதிர்ப்பதற்கு இவர்களும் முக்கிய காரணமாம்.
.
இவர்களின் கருத்தரங்குகள் இலங்கையில் கண்டி, கஹடோவிட, காலி போன்ற இடங்களில் உள்ள மதரசாக்களில் நடைபெற்றுள்ளதாம். மதரசாக்களை ஆக்கிரமிப்பு செய்வதுதான் இவர்களின் திட்டமாம்.
.
இந்த விடயங்களை ஈமானிய உணர்வுள்ள இலங்கை சகோதரர்கள் எமக்கு அறிய தந்தார்கள்.
.
இவர்கள் இலங்கையில் ஏராளமான பணங்களை வாரி வழங்கி இவர்களின் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக சில குருட்டு மௌலவிமார்களையும், பணத்திற்கு வாலாட்டும் குருட்டு தரீக்காவாதிகளையும் பிடித்துள்ளார்கலாம். இன்னும் உருப்படி இல்லாத ஷெய்க்குமார்களை பின்பற்றும் அப்பாவி இளைஞர்களும் இவர்களுக்கு பின்னால் போய் கொண்டிருக்கிறார்களாம்.
.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒவ்வொரு மௌலவிமார்களுக்கு லஞ்சமாக ஒவ்வொரு (Mobile Phone) தொலைபேசி வழங்கியுள்ளார்கலாம்.
.
உண்மையான ஈமான் உள்ள, உள்ளத்தில் நூர் உள்ள எந்த ஒரு முஃமினும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் நூர் அல்ல என்று சொல்ல மாட்டான்.
.
'கத்ஜாஹகும் மினல்லாஹி நூருன் வ கிதாபுன் முபீன்' அல்லாஹ்விடமிருந்து ஒளியும், தெளிவான வேதமும் உங்களுக்கு வந்துள்ளன. (அல் குர்ஆன் 5 : 15)
**************************************************************************
'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தான்‘ என்று
.
(தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் காஜின், தப்ஸீர் ஸாவி, தப்ஸீர் மஆலிமுத் தன்ஸீல், தப்ஸீர் ரூஹூல் பயான் ) அனைத்து தப்ஸீர்களிலும் சொல்லப்பட்டுள்ளது. *****************************************************************************
வளரும் உங்கள் குழந்தைகளின் ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள். உங்கள் ஊர் மத்ரசாவை பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
இந்த விஷயங்களை உங்கள் ஊருக்கு எடுத்து சென்று சூரத்தை மட்டும் அலங்கரித்தால் போதும் என்று நடமாடும் போலி வேஷதாரிகளிடம் இருந்து உங்கள் ஈமானையும் உங்கள் குடும்பத்தார்களின் ஈமானையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
யா அல்லாஹ்! இந்த போலி தரீக்காவாதிகளின் தீங்கில் இருந்தும், குருட்டு ஷரீஅத்வாதிகளின் தீங்கில் இருந்து முஃமின்களை பாதுகாப்பாயாக!


  1. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  2. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  3. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  4. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  5. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
  6. 'நூர் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்