15 வருடம் தவறாக குர்ஆனை வாசி்த்த பீஜே, தவறால் தடம் புரண்ட குர்ஆன் வசனம். ததஜ சகோதரர்கள் பீஜே விடம் கேட்பீர்களா?
1994 ம் ஆண்டு காதியானிகளுடன் நடந்த விவாதத்திலும் மற்றும் 29/3/2009 அன்று தொண்டியில் முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் நடந்த விவாதத்திலும் குர்ஆன் வார்த்தையையே மாற்றி சொல்கிறார், பீஜே.
குர்ஆனில் சூரத்துல் “தாஹா” என்ற 20ம் அத்தியாத்தின் 63ம் வசனத்தின் ஆரம்பத்தில் “إن”(இன்) என்ற வார்த்தை வருகிறது. ஆனால் பீஜே, அதை "إنّ"(இன்ன) என்று வாசிக்கிறார்.
இது ஒரு முறை என்றால் சரி பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் 1994 ம் ஆண்டு முதல் 2009 வரை இருந்துள்ளது. இப்போதும் இருக்க வாய்ப்புள்ளது.
என்றாலும் அந்த காலகட்டத்தை மட்டும் பார்த்தால் கிட்டத்தட்ட 15 வருடங்கள் தவறாகவே சொல்லிவந்துள்ளார்.
இப்போது நாம் பார்த்து இதை அவருக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
இப்படி தவறு செய்யக்கூடிய மனிதர் குர்ஆனை மொழிபெயர்க்க தகுதியுடையவரா?
அப்படியே இதுவும் ஒருமுறையில் வாசிக்கலாம் என்று சொன்னாலும் கூட பீஜே வின் வாதப்படி அது குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்றாகிவிடும்.
எனவே தன் தவறை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக தெரியப்படுத்துவாரா? நோட்டீஸ் மூலம் மக்களிடம் சொல்வாரா? பொது மேடைகளில் தவறை ஒத்துக்கொள்வாரா? ஜும்ஆக்களில் தவறை திருத்திக்கொண்டோம் என்று கூறுவாரா? இத்தனையும் நாங்கள் செய்வோம். வெட்கப்பட மாட்டோம் என்றும் கூறியுள்ளார் பீஜே.
ததஜ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். பீஜே அல்லாமல் வேறொரு நபர் இது போன்று கூறினால் அவர்களை என்ன சொல்வீர்கள்? அதை பீஜேயிடம் கேட்ட முடியுமா?