வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும்
கீற்று வெளியீட்டகத்தின் வெளியீட்டில் இன்ஷா அல்லாஹ் அக்டோபரில் 2016 வெளிவரும் பேராசிரியர் கலாநிதி எச்.முஜீப் ரஹ்மான் Phd. அவர்கள் எழுதிய நான் ஏன் வகாபி அல்ல? நூலின் முன் வெளியீட்டுத் திட்டம்.
.
1500 ஆண்டுகால தொன்மையினைக் கொண்ட தன் வரலாற்றில் இஸ்லாம் மார்க்கம் சந்தித்தப் பெருந்துயரம் வஹாபிஸம்.
.
ஐரோப்பியக் காலனியம் கீழை நாடுகளின் நிலங்களை அபகரிக்கவும், வளங்களைச் சுரண்டவும் சதிவலைகளை விரித்துப் போட்டது, எண்ணெய் வளமிக்க அரபுலகை அபகரிக்க விரிக்கப்பட்ட காலனியச் சதிவலையின் பாதுகாப்பு அரணாக இருந்திட இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது வகாபியம்.
.
முன்னூறுக்கும் மேற்பட்ட சமூகக் குழுக்களின் மத்தியில் அறிமுகமான இஸ்லாம், அக்குழுக்களின் நம்பிக்கைகளை, கதையாடல்களை ,சடங்குகளை , புனிதங்களை , விழுமியங்களை அரவணைத்தும் , உள்ளிழுத்தும், தன்வயப்படுத்தியும் அக்குழுக்களை வெற்றிகண்டது.
.
ஆனால் வகாபியம், இஸ்லாம் முன் வைக்கும் இந்த முறையியலை மறுதலிக்கிறது. நிராகரித்தல், விலக்கிவைத்தல், அழித்தொழித்தல் என்னும் நடவடிக்கைகளின் வழியாக எதிர் இஸ்லாம் ஒன்றைக் கட்டமைக்கிறது.
.
எண்பதுகளுக்குப் பிறகான முஸ்லிம்களின் நாடுகள், முஸ்லிம்கள் இவர்களின் நெருக்கடிகளின் பின்னால் வகாபியம் சார் கருத்தியலே இருக்கிறது. பன்மைச் சமூக அமைப்பில் பொது நீரோட்டாத்தில் இருந்து முஸ்லிம்களை விலகிச் செல்ல வைத்ததிலும் இஸ்லாமிய சமயப் பரப்பிற்குள் தன் அல்லாத மற்றவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி தூரத்தில் நிறுத்தியதிலும் வகாபியம் காத்திரமான வகிபாகம் எடுத்திருக்கிறது.
.
தன் சொந்தச் சகோதரரின் மாமிசத்தைப் புசித்து துருக்கியில், யேமனில், லிபியாவில், எகிப்தில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், சிரியாவில், ஈராக்கில் தன் சொந்தச் சகோதர்களின் மாமிசம் புசித்து தன் கொடும்பசி ஆற்றிக்கொள்கிறது வகாபிசம்
.
இஸ்லாத்தின் உள்ளிருந்து கொண்டே சன்னம் சன்னமாக இஸ்லாம் முன்மொழிந்த மானுட மதிப்பீடுகளை கொன்று குவிக்கிறது. அழிவின் விளிம்பில் இருந்து முஸ்லிம் நாடுகளும், துயரத்தின் பதுங்கு குழிகளிலிருந்து முஸ்லிம்களும் மீண்டு வரவேண்டுமென்றால் வகாபிய கருத்தியலுடன் தீவிர எதிர் உரையாடல் ஒன்றை அனைத்து நிலைகளிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
.
அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான் அவர்கள் எழுதி கீற்று வெளியீட்டில் வெளிவர இருக்கும் “ நான் ஏன் வகாபி அல்ல? “ என்னும் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாமிய சமய, சடங்கியல், பண்பாட்டுத் தளத்தில் நின்றுக்கொண்டு வகாபியத்துடன் சமரசமற்ற உரையாடலை இந்நூல் நிகழ்த்துகின்றது.
.
இந்நூலின் முன் வெளியீட்டுத் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள். இஸ்லாம் என்பது வெறுப்பில் இருந்தல்ல அன்பில் இருந்து உருவானது என்பதை மறுபடியும் உறுதிப்படுத்துங்கள்.
.
தொடர்புக்கு: பேராசிரியர் எச்.ஹாமீம் முஸ்தபா, கீற்று வெளியீட்டகம்.
.
1500 ஆண்டுகால தொன்மையினைக் கொண்ட தன் வரலாற்றில் இஸ்லாம் மார்க்கம் சந்தித்தப் பெருந்துயரம் வஹாபிஸம்.
.
ஐரோப்பியக் காலனியம் கீழை நாடுகளின் நிலங்களை அபகரிக்கவும், வளங்களைச் சுரண்டவும் சதிவலைகளை விரித்துப் போட்டது, எண்ணெய் வளமிக்க அரபுலகை அபகரிக்க விரிக்கப்பட்ட காலனியச் சதிவலையின் பாதுகாப்பு அரணாக இருந்திட இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது வகாபியம்.
.
முன்னூறுக்கும் மேற்பட்ட சமூகக் குழுக்களின் மத்தியில் அறிமுகமான இஸ்லாம், அக்குழுக்களின் நம்பிக்கைகளை, கதையாடல்களை ,சடங்குகளை , புனிதங்களை , விழுமியங்களை அரவணைத்தும் , உள்ளிழுத்தும், தன்வயப்படுத்தியும் அக்குழுக்களை வெற்றிகண்டது.
.
ஆனால் வகாபியம், இஸ்லாம் முன் வைக்கும் இந்த முறையியலை மறுதலிக்கிறது. நிராகரித்தல், விலக்கிவைத்தல், அழித்தொழித்தல் என்னும் நடவடிக்கைகளின் வழியாக எதிர் இஸ்லாம் ஒன்றைக் கட்டமைக்கிறது.
.
எண்பதுகளுக்குப் பிறகான முஸ்லிம்களின் நாடுகள், முஸ்லிம்கள் இவர்களின் நெருக்கடிகளின் பின்னால் வகாபியம் சார் கருத்தியலே இருக்கிறது. பன்மைச் சமூக அமைப்பில் பொது நீரோட்டாத்தில் இருந்து முஸ்லிம்களை விலகிச் செல்ல வைத்ததிலும் இஸ்லாமிய சமயப் பரப்பிற்குள் தன் அல்லாத மற்றவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி தூரத்தில் நிறுத்தியதிலும் வகாபியம் காத்திரமான வகிபாகம் எடுத்திருக்கிறது.
.
தன் சொந்தச் சகோதரரின் மாமிசத்தைப் புசித்து துருக்கியில், யேமனில், லிபியாவில், எகிப்தில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், சிரியாவில், ஈராக்கில் தன் சொந்தச் சகோதர்களின் மாமிசம் புசித்து தன் கொடும்பசி ஆற்றிக்கொள்கிறது வகாபிசம்
.
இஸ்லாத்தின் உள்ளிருந்து கொண்டே சன்னம் சன்னமாக இஸ்லாம் முன்மொழிந்த மானுட மதிப்பீடுகளை கொன்று குவிக்கிறது. அழிவின் விளிம்பில் இருந்து முஸ்லிம் நாடுகளும், துயரத்தின் பதுங்கு குழிகளிலிருந்து முஸ்லிம்களும் மீண்டு வரவேண்டுமென்றால் வகாபிய கருத்தியலுடன் தீவிர எதிர் உரையாடல் ஒன்றை அனைத்து நிலைகளிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
.
அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான் அவர்கள் எழுதி கீற்று வெளியீட்டில் வெளிவர இருக்கும் “ நான் ஏன் வகாபி அல்ல? “ என்னும் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாமிய சமய, சடங்கியல், பண்பாட்டுத் தளத்தில் நின்றுக்கொண்டு வகாபியத்துடன் சமரசமற்ற உரையாடலை இந்நூல் நிகழ்த்துகின்றது.
.
இந்நூலின் முன் வெளியீட்டுத் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள். இஸ்லாம் என்பது வெறுப்பில் இருந்தல்ல அன்பில் இருந்து உருவானது என்பதை மறுபடியும் உறுதிப்படுத்துங்கள்.
.
தொடர்புக்கு: பேராசிரியர் எச்.ஹாமீம் முஸ்தபா, கீற்று வெளியீட்டகம்.
பேச :9791954174
மின்னஞ்சல்: thuckalayhameem@gmail.com
முன்பதிவுக்கட்டணம் செலுத்த: H.Hameem musthafa, IOB, Azakiyamandapam branch account number :27231000000427 , IFSC Code : IOBA 0002723
.
நன்றி: முஜீப் ரஹ்மான்
.
நன்றி: முஜீப் ரஹ்மான்