السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 October 2018

ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி

ladies arabic college eravur
ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர்கள்  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்....

ஆனால், அவர்களது வீட்டிலோ வறுமை.

ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.
இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,

 ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 2567)

கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.
(ஆதாரம் புஹாரி 5413)

வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.

பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.

(ஆதாரம் முஸ்லிம் 3799)

உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.
உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்.. (ஆதாரம் புஹாரி 3108)

ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.

போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.
(ஆதாரம் புஹாரி 1277)


அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.
(ஆதாரம் புஹாரி 5386)

இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய் பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.
(ஆதாரம் புஹாரி 730)

தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.
(ஆதாரம் புஹாரி 6456)

ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)

மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)


நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?

இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?

இத்தனைக்கும் அப்போது அவர்கள் மன்னர்.
நாட்டுக்கே ஜனாதிபதி.
போர்ப்படை தளபதி..
மார்க்க அறிஞர்.
இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,
சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,

என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர்கள்  திகழ்ந்தார்.

ஆக‌,
வறுமையிலும் நேர்மை.
வறுமையிலும் ஒழுக்கம்.
வறுமையிலும் வீரம்
வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி
வறுமையிலும் சுய மரியாதை
வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!

நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??

எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..

மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.
அதில் முதல் இடத்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கே வழங்கினார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்...!

அல் பத்ர் வாட்ஸ்அப் குழுமத்தில் இருந்து.......


 ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி

Wednesday, 24 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 202

Moulavi Sajith Musthafi Eravur
கலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார். 

நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?” எனக் கேட்டார்கள். 

அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.
உடனே, உமர் {ரலி} அவர்கள் சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி} அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள். 

அச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி} அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்கள் தான்.
பின் நாளில் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு போராடிட, உமர் {ரலி} அவர்களின் பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின் எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்” தொடர்ந்து போராடினார்கள்.
வரலாற்றில் அடக்கு முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே இருக்கிறது. அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.
ஹஜ்ஜாஜ் ஹரம் ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.
எப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி}, நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி} அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.
தாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய்! நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய்! ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்!
எனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை நிலைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே! பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள் முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே!
ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் – க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக் கெட்டவன்.
உன்னையும் அழித்து, உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய் நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்!” என்று கூறினார்கள்.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “ எனதருமைத் தாயே! நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.
மாறாக, ”ஒரு வேளை இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின் நிலை என்னவாகுமோ? நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாயே! இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம் எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே பற்றிருந்ததில்லை.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ மாட்டேன்! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே!” என்றார்.
தம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை உணர்ந்த அஸ்மா {ரலி} அவர்கள் “ மகனே! சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே ஏற்றிருக்கின்றேன்.
ஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ இறந்து போவாய்! பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா! என் மகனுக்கு அருள் செய்வாயாக! அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக!”
”அவர் என்னிடமும் என் கணவரிடமும் எப்படி கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக!”
”யாஅல்லாஹ்! உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன்! அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக!”
என் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக!” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.
தன் மகனை அருகே அழைத்த அஸ்மா {ரலி} அவர்கள் உச்சி முகர்ந்து வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.
உடனே அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே! உன் பாரம்பரியம் என்ன? உன் தந்தை சுபைர் {ரலி} அவர்களின் வீரம் என்ன? உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன? ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ? கழற்றி தூர எறி! என்றார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை தாயே! நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக ஆக்கி விடுவார்கள்.
அதை ஏற்றுக் கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த விரும்பவில்லை
இதோ! உங்களின் விருப்பப்படியே கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே! உங்களது கையால் நீங்களே தூக்கி எறிந்து விடுங்கள்.” என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.

Moulavi Sajith Musthafi Eravur

Tuesday, 23 October 2018

மாணவிகளுக்கான ஷரீஆ கற்கை நெறி




ஏறாவூர் மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரியில்  O/L, A/L படித்த மாணவிகளுக்கு மாத்திரம் 3 மாதம் ஷரீஆ கற்கை நெறியினை அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00  மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.




ehs;
ghlk;
jpq;fs;
mfPjh
nrt;tha;
gpf;`;
Gjd;
Fu;Md;
tpahod;
jPdpa;ahj;
rdp
gpf;`;
QhapW
Fu;Md;













இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.

குறிப்பு :       இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு                          இறுதியில்   அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க  
                                              சான்றிதல் வழங்கப்படும்.




               கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி 
                     யு.எல்  நவாஸ் உஸ்மானி  : 778492721
           கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி 
                     எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்


https://drive.google.com/file/d/1ILWBLa7y5SZOwC_aEWCKZH4kDjI3Remp/view?usp=sharing


Wednesday, 17 October 2018

மீலாத் விழாவுக்கான கேள்வி பதில்

Eravur Yoosuf Moulavi


2018 ரபிஉல் அவ்வல் மாதத்தில் ஏறாவூரில் நடை பெறும் மாபெறும் மீலாத் விழாவுக்காக அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்சி மிகச் சிறப்பாக நடைபெறும் .
தேவையானவர்கள்  PDF இங்கே பெற்றுக் கொள்ளலாம்.



Image result for கேள்வி பதில்

Saturday, 13 October 2018

புனித ரபீவுல் அவ்வல் புகழ்ப்பா

Eravuryoosuf


தாஹா ரஸூலே
திங்கள் ஹபீபே
மதீனத்து மன்னரே
மஹ்மூது மா நபியே
விண் போற்றும் விந்தையரே
மண் தேடும் மதி ஒளியே
ஏழை ஏங்கி அழைத்திடும்
எழில் ஓங்கும் ஏந்தலரே!

1) ஆமினாவின் அருள் மகவே
தாங்கள் மலர்ந்த திரு நாளில்
தரிசனம் யாசிக்கும்
தங்களின் அடிமையின்
பாவப் பிழை பொறுத்து
ஏற்றிடுவீர் யாநபியே
வாடி நிற்கும் பாவியை
பாருமிந்த வேளையிலே

2) முத்து முஹம்மதரே!
முழு மதி தாங்களே!
அகிலத்தில் உதித்தீரே!
அழியாத ஒளி விளக்காய்!
ரஹ்மானின் புண்ணிய
நேசராய் வந்துதித்தீர்
ரஹ்மதுல்லில் ஆலமீனாய்
ஆலத்தில் அவதரித்தீர்

3) மாந்தர் குலத்தை வையகத்தில்
வாழச் செய்த மஹ்மூதே
விண் மீனும் கண் சிமிட்ட
புவி மீதில் ஜனித்தீரே
விண்ணவரும் மண்ணவரும்
வியந்து போற்றும் பேரழகே
காண ஏங்கும் உள்ளங்களில்
வீற்றிருக்கும் பேரரசே

4) கண்மணி நாயகமே
கல்பின் கறை நீங்கவே
காட்சி தருவீர் அஹ்மதரே
புண்ணிய மாதமிதில்
வான் மதியும் நாணி நிற்கும்
வையகத்தின் பேரொளியே
வருக வருக வருகவே
வசந்தத்தின் திரு நாளில்

*கவி:* நிப்லா இம்தியாஸ், முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, கஹடோவிட்ட, இலங்கை

Wednesday, 10 October 2018

நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது



Eravur Yoosuf
 *நபி ﷺ அவர்களுக்கு நிழல் கிடையாது*

*ظل ظل ظلت ظل الظل لا ظل له*
*ظلا ظليلا ظلل الغمام بالمظال ظال*

         (நாயகமே ஒளிமயமான தங்களுடைய) எதார்த்தத்தின் (அஸலின்) நிழலாக (பிரதியாக) ஆகிவிட்டீர்கள். (அந்த) எதார்த்தத்தின் நிழலாகிறது அதற்கு அறவே (சூரிய ஒளியில்) நிழலில்லை. (தாங்களுக்கு) மேகம் குடைப்பிடித்து நேர்த்தியான நிழலைத் தந்தது. (தாங்களோ எங்களுக்கு நாளை மறுமையில் *லிவாஉல் ஹம்து புகழ் கொடி* என்ற) கண்ணியம் மிகு குடையால் நிழல் தரக்கூடியவர்களாகும்.

           - *உமர் வலிய்யுல் காஹிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்*

      *والذي بعثني بالحق بشيرا لم يعلم حقيقتي غير ربي*

          *உண்மையாகவே என்னை நன்மாராயம் சொல்வோனாக அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். என் எதார்த்தத்தை என் ரப்பைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.*

(குர்ரத்துல் அலிப் 24)

            என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். ஆகவே தாங்கள் எங்களுக்கு தாங்களுடைய யதார்த்தத்தின் பிரதியைத்தான் காட்டியிருக்கிறீர்கள். மேலும் தாங்கள் இறைவனின் பிரதிபிம்பமானதால்தான் சூரிய ஒளியில் கூட தாங்களுக்கு நிழல் இல்லாமல் ஆகிவிட்டது. தாங்களுடைய நிழல் இம்மண்ணில்பட்டு அதை மற்றவர் மிதிப்பது தாங்களின் கண்ணியத்திற்கு உகந்ததல்ல என்பதால் தான் வல்ல ரஹ்மான் தாங்களுக்கு நிழலையே இல்லாமலாக்கி விட்டான். சூரிய வெப்பம் தாங்கள் மேல் படாமலிருக்க மேகமே தாங்களுக்கு குடைப் பிடித்திருக்கிறது. ஆனால் தாங்களோ எங்களுக்காக மறுமையில் *لواء الحمد புகழ் கொடி* என்ற குடையால் நிழல் தருவீர்கள்.

குறிப்பு : *ظل الظل என்பதற்கு அகிலத்தையே அரவணைத்துக் காக்கும் அருளாளர்* என்றும் பிரிதொரு பொருள் உண்டு.

         *عن ذكوان رضي الله عنه أن رسول الله صلى الله عليه و سلم لم يكن يري له ظل في شمس و لاقمر*
الخصائص ج ۱ ص ٦٨)

         நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு சூரிய ஒளியிலும் சந்திர ஒளியிலும் நிழலில்லை என்பதாக *தக்வான் (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள் அறிவிக்கிறார்கள்.

        *قال ابن سبع من خصائصه أن ظله كان لا يقع على الأرض و أنه كان نورا فكان إذا مشي في الشمس أو القمر لا ينظر له ظل*
 (الخصائص ص 68)

              மேலும் நிச்சயமாக நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நிழல் நிலத்தில் விழுவதில்லை. ஏனெனில், அவர்கள் ஒளியாக இருந்தார்கள். எனவே அவர்கள் சூரிய ஒளியில் நடந்தாலும் அல்லது சந்திர ஒளியில் நடந்தாலும் அவர்களின் நிழலைக் காணமுடியாது. இது அவர்களின் விசேட தன்மைகளில் ஒன்றாகும் என *இப்னு ஸபஃ (ரலியல்லாஹு அன்ஹு)* அவர்கள்
அறிவிக்கிறார்கள்

 (கஸாஇஸுல் குப்ரா பாகம் 01 பக்கம் 68)

🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹

பகிர்வு : *யாஸீனிய் மௌலவிகள் பேரவை.*

🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻