தாஹா ரஸூலே
திங்கள் ஹபீபே
மதீனத்து மன்னரே
மஹ்மூது மா நபியே
விண் போற்றும் விந்தையரே
மண் தேடும் மதி ஒளியே
ஏழை ஏங்கி அழைத்திடும்
எழில் ஓங்கும் ஏந்தலரே!
1) ஆமினாவின் அருள் மகவே
தாங்கள் மலர்ந்த திரு நாளில்
தரிசனம் யாசிக்கும்
தங்களின் அடிமையின்
பாவப் பிழை பொறுத்து
ஏற்றிடுவீர் யாநபியே
வாடி நிற்கும் பாவியை
பாருமிந்த வேளையிலே
2) முத்து முஹம்மதரே!
முழு மதி தாங்களே!
அகிலத்தில் உதித்தீரே!
அழியாத ஒளி விளக்காய்!
ரஹ்மானின் புண்ணிய
நேசராய் வந்துதித்தீர்
ரஹ்மதுல்லில் ஆலமீனாய்
ஆலத்தில் அவதரித்தீர்
3) மாந்தர் குலத்தை வையகத்தில்
வாழச் செய்த மஹ்மூதே
விண் மீனும் கண் சிமிட்ட
புவி மீதில் ஜனித்தீரே
விண்ணவரும் மண்ணவரும்
வியந்து போற்றும் பேரழகே
காண ஏங்கும் உள்ளங்களில்
வீற்றிருக்கும் பேரரசே
4) கண்மணி நாயகமே
கல்பின் கறை நீங்கவே
காட்சி தருவீர் அஹ்மதரே
புண்ணிய மாதமிதில்
வான் மதியும் நாணி நிற்கும்
வையகத்தின் பேரொளியே
வருக வருக வருகவே
வசந்தத்தின் திரு நாளில்
*கவி:* நிப்லா இம்தியாஸ், முஅஸ்கருர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, கஹடோவிட்ட, இலங்கை