السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 7 July 2024

அயல் வீட்டுக்காரன்

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரனும் வசித்து வந்தான்.


வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. 


வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று அந்த விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன.


இதனால் வருத்தமுற்ற விவசாயி, தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக் காரனிடம், "உன் நாய்களை கொஞ்சம் கட்டிப்போட்டு வைத்துக்கொள்; அவை அடிக்கடி வந்து என் ஆடுகளை தாக்கி காயப்படுத்துகின்றன" என்றான். 


வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவே இல்லை. "செவிடன் காதில் ஊதிய சங்கு போல" அவை எந்த பயனும் தரவில்லை!


இந்நிலையில் மீண்டும் ஒரு முறை இதே போல நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின.


இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று சற்று கோபத்தில் சென்று வேட்டைக்காரனிடம் புகார் செய்தான் விவசாயி.


வேட்டைக்காரனும் சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம்; அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது; உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.


இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.


முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.


விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், 

“என்னால் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து, அபராதம் விதித்து அவனது நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். 

ஆனால்

நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

என்று கேட்டார்.


பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, "அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம்" என்றான்.


“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கவும் வேட்டைக்காரனும் நண்பனாக இருக்கவும் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேட்பாயா?” என்று கேட்டார்.


“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் விவசாயி.


இதையடுத்து, பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.


வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்னவற்றை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.


தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளில் மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒன்றை விளையாட பரிசளித்தான். 


குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.


தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், அந்த நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் அந்த நாய்களை சங்கிலியால் கட்டிப்போட்டான்.


தனது மகன்களுக்கு ஆட்டுக்குட்டிகளை பரிசளித்ததால், பதிலுக்கு தானும் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, காட்டிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சில அரிய பொருட்களை விவசாயிக்கு பரிசளித்தான் வேட்டைக்காரன். 


ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.


நம்மிடம் நியாயம் இருக்கிறது என்றோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்றோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளவே கூடாது!


படித்ததில் பிடித்தது!

 

Thursday, 20 June 2024

கஸ்தூரி வாடை

 

இமாம் நபீய் இப்னு அபூ நுஅய்ம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மதீனாவில் 70 வருடங்கள் இமாமாக இருந்தார்கள். மதீனாவின் பிரபல காரியாக இருந்த இவர்கள் மாலிக்கி மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் மாலிக் இப்னு அனஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆசிரியர் ஆவார். இமாம் நபீய் அவர்கள் புனித அல்- குர்ஆனை ஓதும் போதும், பேசும் போதும் அவர்களின் வாயில் இருந்து கஸ்தூரி வாடை வீசிக்கொண்டிருந்தது. நீங்கள் ஓதும் போதும், பேசும் போதும் ஏன் உங்கள் வாயிலிருந்து கஸ்தூரி வாடை வீசுகின்றது. நீங்கள் மக்கள் மத்தியில் ஓதும்போது ஏதாவது நறுமண பூச்சுகளை பாவிக்கின்றீர்களா என இமாம் நபீய் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாம் நபீய் அவர்கள், " நான் நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஒருமுறை கனவில் கண்டேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் என் வாயின் மீது ஓதினார்கள். அந்த நொடி முதல் எனது வாயில் இருந்து கஸ்தூரி வாடை வீசுகின்றது" என இமாம் நபீய் அவர்கள் கூறினார்கள். 


அல்லாஹ் ஸுப்ஹானவத்தஆலா எமக்கும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கனவில் பார்க்கும் பாக்கியத்தை வழங்குவானாக, ஆமீன்..!

Wednesday, 19 June 2024

டந்தே ஹஜ் செய்த மூதாட்டி



 நடந்தே வந்த இந்த அம்மையார்...!

******************************************


🕋 பிரமிட் நாடான எகிப்தில் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.


கையில் ஒரு பை..!


அவ்வளவு தான் லக்கேஜ்..!


2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார்.


நடந்தே ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற லட்சியம் பல ஆண்டுகளாக இருந்தது.


இந்த வருடம் தனது லட்சியம் நிறைவேறி விட்டதாக கூறும் இந்த அம்மையாருக்கு 63 வயது.


இந்த வயதில் கால் வலி. நரம்பு மண்டல பிரச்சனை என்று பல உபாதைகள் இருந்தது.


 நடந்தே ஹஜ் செய்ய வேண்டும். என்ற நிய்யத் துடன் நடக்க ஆரம்பித்த பிறகு அத்தனை உபாதைகளும் காணாமல் போய் விட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.


இந்த வாரத்தில் எகிப்து திரும்பி விடுவதாக இருக்கிறார்.


இவரின் ஹஜ்ஜை அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.



Saturday, 15 June 2024

இஹ்ஸான் சிறு விளக்கம்.


கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,     

 மௌலவி பாஸில் ஷெய்கு   

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

இஹ்ஸான் என்பதும், இக்லாஸ் என்பதும் ஒத்தகருத்துள்ள சொல்! மனதில் அல்லாஹ் அல்லாதவற்றிற்கு இடம் கொடுக்காமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடிச் செய்யும் செயலை இக்லாஸ் எனப்படும்; 


மக்களின் பாராட்டால் மனம் உவகையடையாமல் தூற்றலால் சோர்வடையாமல் இரண்டையும் சமனாகக் கருதும் போது இஹ்ஸான் வரும்;


 இஹ்ஸானைக் கெடுப்பது முகஸ்த்துதி! இது 

மக்களின் கண்ணியத்தாலும், பாராட்டாலும்தான் வருகிறது.


 ஆகவே, இதை இல்லாதொழிக்க அனைத்தும் அல்லாஹ்வின் செயல் என்று கருதி அதை நமது மனதிலிருந்து வேரோடு பிடுங்கி வீசி விடவேண்டும்.


படைப்புக்கு சக்தி உண்டு என்று நம்பும் வரை மனதில் முகஸ்துதி வருவதைத் தடுக்க முடியாது!


 ஆகவே,  


நமது செயலை அல்லாஹுத்த ஆலா பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை ஆழமாக மனதில் பதித்து அதை சதா நினைவில் பதிக்க வேண்டும். 


நமது மனம் அல்லாஹ்வின் அருள் இறங்கும் இடம்; அவன் காட்சி வெளியாகும் இடம்; ஆகவே அல்லாஹ் அல்லாத வேற்று எண்ணம் என்ற நஜீஸை விட்டும் மனம் பரிசுத்தமாகும் போது இஹ்ஸான் தானே மலரும்.


ஷரீஅத்தின் சட்டங்களைப் பின்பற்றுவதில் இஸ்திகாமத் இருக்க வேண்டும், இஸ்திகாமத் என்பது அல்லாஹ்வுக்காக மன உறுதியோடு செய்வதையும் தனது சந்தோஷங்களையும், விருப்பங்களையும் அல்லாஹ்வுக்காக அற்பணிப்பதையும் குறிக்கும்; 


ஆக, முதலில் இஸ்திகாமத் இருக்கவேண்டும், இதிலிருந்துதான் இஹ்ஸான் வளர்கிறது.

Thursday, 13 June 2024

பெருமானாரின் பாட்டனாரின் கப்ர்

 

இது காஸாவில் அடக்கங்கப்பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முப்-பாட்டனார் ஹாஷிம் இப்னு அப்துல் மனாஃப் அவர்களின் ஸியாரத்தின் பழைய புகைப்படம் இது. 


வியாபார நிமித்தமாக ஷாம் நகருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் காலமானார். தன்னோடிருக்கும் யாரையும் பட்டினியில் தூங்க விடாமாட்டார்கள், தேவைப்படுபவர்களின் கடனை தேடிச் சென்று அடைத்து விடுவார்கள். அல் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளபடி - குளிர்காலம் மற்றும் கோடை காலத்தில் யமன் மற்றும் ஷாம் ஆகிய நாடுகளுக்கு வணிகம் செய்ய சென்ற முதல் குறைஷியும் இவர்களே ஆவார்கள். 


பெருமானார் ﷺ அவர்கள் தனது ஆண் குழந்தைகளை இழந்தபோது, ​​மக்காவின் காஃபிர்கள் சிரித்துக்கொண்டே அவர்களை கேலி செய்ய முயன்றனர். தனது பெயரைக் கட்டிக்காக்க இந்த நபிக்கு ஆண் குழந்தைகள் இல்லையே என்று அவர்கள் சொன்னார்கள். இன்று, பெருமானார் ﷺ அவர்களின் குடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் ஹிஜாஸில் தனியாக மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தபோது, ​​மக்கள் யாரும் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்று சிரித்தார்கள். இன்று அவருக்கு உலகம் முழுவதும் 1.7 பில்லியன் மக்கள் அவர்களைப் பின் தொடர்பவர்களாக உள்ளனர். 

அன்றைய மக்கத்து மக்கள் அவர்களை முஹம்மது (ﷺ) என்று அழைக்க மறுத்து அவருடைய அந்தஸ்தை ஏற்க விரும்பாமல் அவர்களை இழிவுபடுத்த முயன்றனர். இன்று, அவர்களை தெரியாது யாரும் இல்லை, அவர்களுடைய அருள் நிறைந்த முஹம்மது எனும் திரு நாமம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பெயராக அல்லாஹ் சிறப்பாக்கி வைதாதுள்ளான்.


பெருமானார் ﷺ அவர்களுக்கு எதிராக மக்கள் போர் தொடுத்து இஸ்லாத்தை அழிக்க முற்பட்ட போது அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை அளித்து உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக அவர்களது தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை ஆக்கினான். 


வெறுப்பவர்கள், நயவஞ்சகர்கள், சந்தேகம் கொள்பவர்கள் மற்றும் நோயுற்ற இதயங்களைக் கொண்ட மக்கள் வாழ்வார்கள், இறப்பார்கள், மறக்கப்படுவார்கள், ஆனால் நமது தலைவர் அகிலத்தின் முதல் ஒளி, மறுவிலாதெழுந்த முழுமதி நபிகள் கோமான் முஹம்மது ﷺ அவர்களின் பெயர், அவர்களது நினைவு, அவர்களது அன்பர்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள், அவர்களது மார்க்கம், அவர்களுடைய போதனைகள் மற்றும் அவர்களது பதவி உலக முடிவு நாள் வரை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.  


'பெருமானார் ﷺ அவர்களை எதிர்ப்பவர்களுக்கு, பரிகாசம் செய்பவர்களுக்கு அவமானம் விதியாக்கப்பட்டுள்ளது.'

Tuesday, 4 June 2024

காஸா மக்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக

பலஸ்தீன்

 காஸாவின் வைத்தியசாலையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி டொக்டர் அபூ நஜீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். காஸாவைச் சேர்ந்த முஹம்மத் பவ்தா என்ற மனிதர் தான் வாழ்ந்த பகுதியில் குண்டு வீச்சின் காரணமாக தனது வலது கையையும், காலையும் இழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் . முஹம்மத் பவ்தாவை நோக்கும் போது, அவர் தான் எதிர்கொண்டிருந்த பயங்கரமான நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளையை பொருந்திக் கொண்டவர்களாக மிகப் பொறுமையுடன், அல்லாஹ்வுக்கு முழுமையாக நன்றி செலுத்திய நிலையில் இருந்ததாக டொக்டர் அபூ நஜீ அவர்கள் கூறினார். 


சில நேரங்களில் பின்னர் காஸாவைச் சேர்ந்த ஒரு மனிதர் வைத்தியசாலைக்கு வந்து, இங்கு முஹம்மத் பவ்தா என்று ஒருவர் இருக்கிறாரா ? நீங்கள் முஹம்மத் பவ்தாவா ? உங்களுக்கு முஹம்மத் பவ்தாவை தெரியுமா? என்று விசாரித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தார். இறுதியாக அவர் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு வந்து அங்கு டொக்டரிடம் இங்கு முஹம்மத் பவ்தா என்று ஒருவர் இருக்கிறாரா ? என்று கேட்டார். அதற்கு டொக்டர் ஆம் என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர் நான் அவருடன் பேசவேண்டும் என்று கூறினார். பின்னர், அந்த மனிதர் முஹம்மத் பவ்தா இருந்த இடத்தை அடைந்ததும், அவரிடம் "நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. உங்களை நான் இதற்கு முன்னர் கண்டதோ, சந்தித்ததோ இல்லை. ஆனால், நேற்று இரவு நான் கனவில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்டேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள், இந்த வைத்தியசாலைக்கு சென்று, உங்களை தேடி, உங்களிடம்

 " அல்லாஹ்வும், அவனது தூதரும் ﷺ நீங்கள் பொறுமையுடன் அல்லாஹ்வின் கட்டளையை பொருந்திக் கொண்டதன் காரணமாக, உங்களை பற்றி சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைவதாக கூறும்படி எனக்கு ஏவினார்கள் " என்று கூறினார். காஸாவின் மக்களே உண்மையான கெளரவமான மக்கள் ஆவர்.


யா ரஸூலுல்லாஹ், நீங்கள் எமது உயிரை விடவும் எமக்கு நெருக்கமாக இருக்கின்றீர்கள். நீங்கள் எங்களுக்காக உங்கள் நாயனிடம் பரிந்துரை செய்யும்படி உங்களிடம் கேட்கின்றோம்🤲...


செய்க் முஹம்மத் அஸ்லம் Shaykh Mohammed Aslam அவர்களின் முகப்புத்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆக்கத்தின் தமிழாக்கம்


இர்பான் fb