Friday, 22 November 2024
இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்
Tuesday, 12 November 2024
அரபுத் தமிழ் பற்றி ஒரு ஆய்வு
அரபுத் தமிழ்
தமிழக முஸ்லிம் மக்களாலும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களாலும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே ' அரபுத் தமிழ்' என்பதாகும். அரபி மொழி எழுத்துருவில் (LH) தமிழை எழுதுவதே 'அரபுத்தமிழ்' ஆகும்.
உலக மொழிகளிலேயே மிக நீண்ட காலப் பழமை யுடைய மொழிகளாகத் தமிழும் அரபி மொழியும் வழங்கி வருகின்றன. இம்மொழிகளைப் போன்றே இரண்டு மொழிகளைப் பேசும் மக்கட் பகுதியினரும் நீண்ட காலத தொடர்புடையவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே தமிழகமும் அரபகமும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. சீனம் கிரேக்கம், ரோம போன்ற பகுதிகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது போன்றே அரபு மொழி பேசும் பகுதியான 'மிஸ்ரு' என அழைக்கப்பட்ட எகிப் தியப் பகுதியோடும் தமிழ் மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இதனை பாரதியார்
"சீனம் மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம்பலவும் புகழ்வீசக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் நன்று வளர்த்த தமிழ்நாடு"
எனப் பாடி மகிழ்கிறார். 'மிஸ்ரு' என்பது தமிழில் 'மிசிரம்' என மறுவி வந்துள்ளது.
அதே போன்று அரபு நாட்டு வணிகர்களும் மேலைக் சுடல் வழியாகவும் கீழைக் கடல்வழியாகவும் தமிழகப்பகுதி
களில் தங்கி வணிகம் செய்ததோடு, இங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் நிலையை அடைந்தவர் என் பது வரலாறு.
தமிழ் மக்களுடன் உதிரக் கலப்புடன் ஒன்றுபட்டு விட்ட அராபியர்கள் தமிழர்களை ஏற்றதுபோல் தமிழ் மொழியையும் ஏற்றார்கள். தமிழைக் கற்று அதனை அரபி வரிவடிவில் (லிபி எழுதவும் செய்தனர். செம்மை யிலா நிலையில் அரபிகள் பேசிவந்த தமிழை வரிவடிவில் எழுத நேர்ந்த போதெல்லாம் தாங்கள் "நன்கறிந்திருந்த தங்கள் தாய் மொழியாகிய அரபி மொழி வரிவடிவிலேயே தமிழை எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டனர்.
அண்ணல் நபிகள் நாயகம் காலத்துக்கும் பின்னர் தமிழகம் வந்த அராபியர்கள் இஸ்லாமியக் கருத்து களை தமிழ் மக்களிடைய்ே எடுத்துச் சொல்லும் கடப்பாடு டையவர்களானார்கள். அப்போது இஸ்லாமிய சிந்தனை களை இங்குள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அரபி மொழி வரிவடிவிலமைந்த தமிழே அவர்கட்கும் பெருத்துணையாயமைந்தது
அரபுத் தமிழின் விரைவான வளர்ச்சிக்கு வேறுசில காரணங்களும் உண்டு. அரபி மொழியில் இருந்த இஸ்லா மியத் திருமறையான திருக்குர் ஆனை - திருமறை விளக்கங் களை வேற்று மொழியில் பெயர்க்கும்போது கருத்துப் பிழையோ, பொருட்பிழையோ ஏறபட்டுவிடும் என்ற அச்சம் ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்தது. தமிழ் எழுத்துக்களின் மூலம் திருமறை விளக்கஙகளைத் தரும் போது மாறுபாடாகக் கருத்து விளக்கம் ஒலிக் குறை பாட்டினால் அமைந்து விடலாம் என்ற உணர்வின் அடிப் படையிலேயே, திருக்குர் ஆனை, அதன் விளக்கங்களை நேரடியாகத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தமிழில் தருவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத் தப்பட்டு வந்தது
ஏனெனில், அரபு மொழிச் சொற்களின் உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுத இயலவில்லை. அதோடு இஸ் லாமிய அடிப்படைக் கருததுக்களை உணர்த்தவல்ல அரபு கலைச் சொற்களை, பொருள் நுட்பம் சிறிதும் சிதையா வணணம் தமிழில் மொழியாக்கம் செய்யவும் இயலவில்லை எனவே, திருமறை தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்க்கு மாறு மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தினார்கள்.
தொடக்க காலத்தில் அரபுத் தமிழ் செம்மையானதாக அமைந்திருக்கவில்லை. பேச்சுத் தமிழையே அரபி வரி வடி வில் எழுதி வாசித்துவந்ததால் குறைகள் ஏதும்பெரிதாகத் தெரியவில்லை நாளடைவில் சற்று இலக்கியத் தரமான சொற்றொடர்களை அரபி வரிவடிவில் எழுதிப் படிக்கத் தொடங்கியபோதுதான் தமிழ்மொழியிலே உள்ள ங,ச.ஞ ட,ப,ள,ழ.ண ஆகிய 8 தமிழ் எழுத்துக்களுக்கேற்ற அரபி எழுத்துக்கள் அரபி மொழியில் இல்லாதது பெருங்குறை யாகப்பட்டது. மேலும் எ, ஏ, ஒ, ஓ போன்ற ஒலிக் குறியீடு கள் அரபியில் இல்லாததும் குறையாகக் கருதப்பட்டது. எனவே, இந்த எழுத்துக் குறைகளை நீக்க, சரியான உச் சரிப்பைத் தரவல்ல அரபு எழுத்துக்களை உருவாக்கவேண் டிய கட்டாயச் சூழல் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே ஆர்வம் கொண்டோர்க்கு ஏற்பட்டது.
ஒரு கால கட்டத்தில் சமஸ்கிருத மொழி எழுத்துக்களின் உச்சரிப்பைத் துல்லியமாகத் தமிழில் சொல்ல தமிழில் எழுத்துக்கள் இல்லை என்ற குறையைப் போக்க ஷ ஜ,ஸ. ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் புதிதாக உருவாக்கப் பட்டது போன்று தமிழில் உள்ள மேற்கூறிய ங, ச, ஞ .ட ப, ள ழ, ண ஆகிய எட்டுத் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப் புக்கேற்ற புதிய வரி வடிவங்கள் அரபுமொழியில் உருவாக் கப்பட்டன. எ,ஏ,ஒ,ஓ எழுத்துக்களுக்கான ஒலிகளைப் பெற அரபி எழுத்துக்களில் மேலும் கீழும் கொம்புக் குறி களைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்டது இவ்வாறு
அரபி மொழி புதிய எழுத்தொலிகளைப் பெற்று வள மடையத் தமிழ் காரணமாயமைந்தது.
அதே போன்று தமிழ் மொழியில் உள்ள க, ச,ட,த. ப, ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களுக்கு மற்ற மொழி களில் இருப்பது போன்று மூன்று அல்லது நான்கு வகை யான ஒலி வேறுபாடுகளைக் குறிக்கத் தனித்தனி எழுத் துக்கள் தமிழில் இல்லை. பேச்சு வழககிலும எழுத்து வழக்கிலும் ஒலி வேறுபாடின்றி ஒரே வித ஒலியைக் குறிக் கும் வகையில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களையும் கையாள வேண்டியுள்ளது இதனால்,சமயங்களில் கருத்து மாறுபாடு ஏற்பட வாய்ப்பேற்பட்டு விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அரபி மொழியில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களுக்கும் ஒலி வேறுபாடுள்ள தனித்தனி ஒலி வடிவ எழுத்துக்களை அரபி எழுத்துக்களின் மேல் சில குறியீடுகளாக இடுவதன் மூலம் பெறும் வகையில் உரு வாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் இல்லாத ஒலிக் குறைவை நிறைவு செய்யும் வகையில் அரபுத் தமிழ் அமைந்துள்ளது என்பது இங்கு எண்ணத்தக்கதாகும்.
அரபுத் தமிழின் துரித வளர்ச்சிக்கு இஸ்லாமியத் தமிழ்ப் பெண்களும் முக்கியக் காரணமாவார்கள். தமிழ் எழுத்தறிவு அதிகம் பெறாது, மறை மொழி என்ற வகை யில் அரபி மொழி மட்டும் அறிந்திருந்த இஸ்லாமிய பெண்களும் தமிழ் மொழி எழுத்தறிவில்லா இஸ்லாமிய பாமரர்களும் தாங்கள் அறிந்திருந்த அரபி வரிவடிவம் வாயிலாகவே தமிழ் மொழியைக் கையாண்டு வநதனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அரபுத் தமிழ் முனைப்பாக வளரத் தொடங்கியது சுமார் 350 ஆட்டுகட்கு முன்னர்தான் எனப் பலராலும் குறிக்கப்படுகிறது. ஆனால், இக்கூற்று முழுமையாக ஏற்கக் கூடியதாக இல்லை அதற்கும் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அரபுத் தமிழானது, தமிழ் முஸ்லிம்களிடையேயும் அரபகத்திலிருந்து தமிழகம் வந்து நிலை கொண்டு விட்ட அரபுகளிடையேயும் வெகுவாக பழக்கத்திலிருந்த தற்கான சான்றுகள் பரவலாகக் கிடைக்கவே செய்கிறது.
சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஹாபிழ் அமீர் அலி வலி என்பவர் முனைப்புடன் அரபுத் தமிழ் வளர்ச்சியில் கருத்தூன்றி அதன் வளர்ச்சிக்கு உழைத்து வந்தார் என்பதை புகழ்பெற்ற இஸ்லாமிய இலக்கியப் பதிப்பாசிரியரான கண்ணகுமது மகுதூம் முகம்மது புலவர் அவர்கள் 'தீன் நெறி விளக்கம்' என்ற நூலிலுள்ள ஒரு பாடலில்.
"வெல்லிய அரபுத் தமிழ் உண்டாக்கிய மேன்மை ஹாபித் அமீர்வலி"
எனக் கூறுகிறார் ஹாபிழ் அமீர் வலி அரபுத் தமிழை உண்டாக்கினார் என்பதைவிட காலத்தின் இன்றியமை யாத் தேவையாக அரபக- தமிழக முஸ்லிம்களால் உரு வாக்கப்பட்ட அரபுத் தமிழை முனைப்புடன் கட்டுக்கோப் பாக திருத்தமுடன் வளர்த்து வளமடையச் செய்த பெருமைக்குரியவர் என்று பாராட்டுவதே சரியாக இருக் கும்
சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னரே அரபுத் தமி ழில் இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த போதிலும் பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவரான காயல் பட்டணம் ஷாம் ஷிகாபுத்தீன் வலி எனும் இறைநேசச் செல்வர் எழுதிய நூற்றுக்கணக் கான அரபுத் தமிழ் பாடங்களே இன்று நாம் அறியக் கிடைக்கின்றன.
இஸ்லாமிய ஞானம் நிரம்பப் பெற்ற ஷாமு ஷிஹாபுத் தீன் வலி அவர்கள் தொழுகைக்கான வழிமுறைகள் இஸ் லாமிய நெறி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், தீன்நெறி உணர்த்தும் ஒழுக்கக் கோட்பாடுகள் பெருமானாரின் பெரு வாழ்வைச் சுட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பெருமளவில்
அரபுத் தமிழில் பாடியிருப்பதோடு இஸ்லாமிய மக்களிடை யே காணும் வரதட்சணைக் கொடுமை. கந்தூரியின் பெய ரால் நடக்கும் பித்தலாட்டக் குறைகளைச் சுட்டிக்காட்டும் சீர்திருத்தப் போக்கிலான பாடல்களையும் பெருமளவில் அரபுத் தமிழில் எழுதிக் குவித்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய நெறியுணர்த்தும் இலக்கியப் படைப்பு கள் முதல் சிறுவருக்கான சின்னஞ்சிறு உரைநடை நூல் கள்வரை அரபுத் தமிழில் ஆக்கப்பட்டுள்ளன. சமயம், வர லாறு, தத்துவம், மருத் துவம், கதை என தமிழிலும் அரபி யிலும் எத்தனை வகையான துறைகள் உண்டோ அத் தனையிலும் அரபுத் தமிழ்ப் படைப்புகளைச் செய்யுள் உரு விலும் உரைநடையிலும் எழுதியுள்ளார்கள் தமிழ் முஸ் லிம்கள். இன்னும் சொல்லப் போனால் 'இல்முந்நிசா' எனும் காமச்சுவை நனி சொட்டக் சொட்டக் கூறும் காமக்கலை நூலும் அரபுத் தமிழிலெ வடித்துத் தரப் பட்டுள்ளது.
அரபுத் தமிழ் படைப்புகள் அனைத்துமே இஸ்லாமிய
நெறி தொடர்புடையனவாக இருந்ததால் அவற்றில்
அரபி, பெர்சியச் சொற்கள் மிகுதியும் இடம் பெற்றுள்
ளன. இச்சொற்களை ஒலிச் சிதைவு இல்லாதபடி படிப்
பதற்கு அரபித் தமிழே வாய்ப்பாக அமைந்தது.
ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட திருமறை விரிவுரை கள் அனைத்தும் அரபுத் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டதிட்டங்களும் அரபுத் தமிழிலேயே உரு வாக்கப்பட்டன.
அரபுத் தமிழில பாடல்களை எழுதிக் குவித்தவர்களில் முதலிட ம்பெறுபவர் தமிழிலும் அரபியிலும்பெரும்புலமை பெற்ற காயல்பட்டிணம் ஷாமு ஷிகாபுத்தீன் வலியுல்லா அவர்களே ஆவார். நூற்றுக்கணக்கான அரபுத் தமிழ் பாமாலைகளை இயற்றிருந்த போதிலும் அவற்றில் சுமார் இருபத்தைந்து அரபுத் தமிழ் நூல்கள் மட்டுமே அச்சு வாகனமேறியுள்ளன. அவற்றுள் ரசூல் மாலை, அதபு மாலை, பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை என்பன குறிப்பிடத்தக்க அரபுத் தமிழ் படைப்புகளாகும்.
அவரைத் தொடர்ந்து காயல்பட்டிணம் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் 'ஆனந்தக்களிப்பு' எனும் நூலை அரபுத் தமிழில் யாத்துள்ளார்கள். அதே போன்று சின்ன உவைஸீனா ஆலிம் அவர்கள் 'ஹக்கீகத் மாலை எனும் அரபுத் தமிழ் நூலை எழுதியுள்ளார்கள் கீழக்கரை செய்யது முஹமமது ஆலிம் அவர்களும் தைக்கா சாகிபு அவர்களும் இஸ்லாமியச் சட்டங்களை விரித்துரைக்கும் நூல்களை அரபுத் தமிழில் எழுதியளித்துள்ளார்கள். பெண்பாற் சூஃபிக் கவிஞர்களுள் ஒருவராகக் கூறப்படும் கீழ்க்கரை அல் ஆரிபு செய்யிது ஆசியா உம்மா அவர்கள் எழுதிய 'மெய்ஞ்ஞானத தீப இரத்தினம்" எனும் அரபுத் தமிழ் நூல் மெய்ஞ்ஞானச் சிந்தனை க் களஞ்சிய ம-கும். இறைவன், நபிகள் நாயகம், அபூபக்கர் (ரலி) கல்வதது நாயகம் (வலி) அஜ்மீர் முயினுத்தீன் ஆண்டகை, ஹஸன், ஹுசைன், பலலாஹ். முகையித்தீன் ஆண்டகை, சாகுல் ஹமீது ஆண்டகை, ஆரிபு நாயகம் மற்றும் மழை தாலாட்டு, அடைக்கலம். பிரார்த்தனை முதலாக எண் பத்தைந்து தலைப்புகளில் கண்ணி, விருத்தம், ஆனந்தக் களிப்பு, குமமி, வெண்பா,பதிகம், மாலை ஆகிய பல வகைகளில் அரபுத் தமிழில் பாடியளித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றையுடைய அரபுத்தமிழ் இலக்கியங்களில் பல இன்று உலகின் பல பகுதிகளிலுள்ள நூலகங்களிலும் நூல் காப்பகங்களிலும் தொல் பொரு ளாய்வகங்களிலும் இருந்து வருவதாகக் கூறப்படுகின் றது. லண்டனிலுள்ள இந்திய அலுவலக நூலகத்தில் 1878-ல் எழுதப்பட்ட "சீறா நாடகம்" என்ற அரபுத் தமிழ் நூல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அரபுத் தமிழில் நூல்கள் மட்டுமல்லாது பத்திரிகை களும் கூட வெளியிடப்பட்டுள்ளன தமிழகத்தைவிட அரபுத் தமிழ் செல்வாக்கு இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம் பெருமக்களிடையே மிகுதியாக இருந்துள்ளது. தமிழகம் போன்றே இலங்கையிலும் அரபுத் தமிழிலே வார, மாத ஏடுகள் நீண்டகாலம் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற றாண்டு வரை செழுமையாக வளர்ந்துவந்த அரபுத் தமிழ் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குப் பின்னால் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலையை எய்தியது இதற் குப் பல காரணங்கள் உண்டு.
அரபுத் தமிழ் நூல்கள் கையினால் மட்டுமே எழுதப் படக் கூடியவையாக இருந்து வந்தன. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட அச்சு வாகனப் பெருக்கத்தின் காரணமாக அரபுத் தமிழில் எழுதுவது வெகுவாகக் குறைந்து விட்டது.
மேலும், அரபுத் தமிழ்நடை ஓரளவு பேச்சு வழக்குத் தமிழை அடியொற்றி எழுந்து வளர்ந்ததால் 'கொச்சைத் தமிழ் தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் விரைந்து எழுந்த தமிழ் உணர்வும் மொழித்திறமும் மற்ற. வர்களைப் போன்றே இஸ்லாமியர்களையும் ஆட்கொண் டது. ஆகவே, கொச்சைத் தமிழ் கலந்த அரபுத் தமிழ் அறவே புறக்கணிக்கப்பட்டது.
ஆனால் இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் செல்வாக்குக் கணிசமாக குறைந்துள்ள
போதிலும் அவர்கள் இன்னும் அரபுத் தமிழ் வடிவத்தை விரும்பவே செய்கிறார்கள். 'அரபுத் தமிழ் அழகுத் தமிழ்' எனக் கூறி அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க விரும்பு கிறார்கள்.
அரபுத் தமிழில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளில் ஒரு சில நூறு இலக்கியங்கள் கூட தமிழ் எழுத்தில் எழுத்து மாற்றம் செய்யப்படவில்லை எனவே, அரபுத் தமிழ் பழக்கம் அறவே மறைவதற்கு முன் அரபுத் தமிழிலுள்ள படைப்புகள் அனைத்தையும் எழுத்து மாற்றம் செய்வது அவசிய, அவசரத் தேலையாகும். தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் இணையற்ற பாலமாகத திகழ்ந்த அரபுத் தமிழ் காலப் போக்கில் தமிழ் வளர்ச்சிக் குக் கிடைத்த மற்றுமொரு உந்து சக்தி என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது
அரபுத் தமிழில் மிக அதிகமான அளவில் பயன்படுத் தப்பட்டு வந்த அசல, அமுல், நகல், தகராறு, கைத கஜானா, ஆபத்து, வக்கீல், இனாம், வக்காலத்து, வசூல் பாக்கு, தபசில், பசலி, மகசூல், வாரிசு, காலி, நபர் மாமூல் முன்சீப், தாலுகா, ஜில்லா, ஹத்து, கிஸ்தி, கடு தாசி போன்ற அரபு, பெர்சியச் சொற்கள் தமிழ்ச் சொற் கள் போலவே அன்றாட வாழ்வில் பயன்பட்டுவருகின்றன
இவ்வாறு ஒலிக்குறைபாடின்றி தமிழைப் பயன்படுத்து வதற்கும் தமிழ் மொழி வளர்ச்சியோடு சொற்பெருக்கத் துக்குக் காரணமாக இருந்த அரபுத தமிழ் வடிவம் மற்ற இஸ்லாமிய வடிவங்கள் போன்றே தமிழ் மொழி இலக் கிய வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் பெருந்துணையாக இருந்து வந்துள்ளது என்பது இலக்கிய வரலாறு தரும் அழுத்தமான உண்மையாகும்.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமிய சமய அடிப் படையில் அரபி, பெர்சிய மொழித் தொடர்பு காரணமாக அவ்வம்மொழிகளில் காணப்பட்ட மசலா கிஸ்ஸா, நாமா,
முனாஜாத்து ஆகிய நான்கு இலக்கிய வகைகளை புது வகைத் தமிழ் இலக்கிய வடிவங்களாகத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தாலும் அவற்றின் செய்யுள் வடிவம் இயன்ற வரை தமிழ்இலக்கண அமைப்பை அடியொ ற்றியே அமைக் கப்பட்டன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
படைப்போர். நொண்டி நாடகம். திருமண வாழ்த்து அரபுத் தமிழ் ஆகிய நான்கு புதுவகை இலக்கிய வடிவங் களை தமிழுக்கென்றே தமிழ்ப் பெயர்களோடு தோற்று வித்து தமிழ் இலக்கியப் பயிரைச் செழிக்கச் செய்துள்ள னர் இஸ்லாமியத் தமிழ்ப் புவவர்கள் என்பது தமிழ் இலக்கிய வரலாற்று உணமையாகும்.
தமிழகத்தில் எழுந்த சமயங்களைச் சார்ந்தவர்களும் தமிழகத்துக்கு அப்பாலிருந்து வந்த சமயங்களைச் சேர்ந்த வர்களும் தமிழில் காலங்காலமாகவே இருந்து வரும் பழைய இலக்கிய அமைப்பு முறைகளை அப்படியே அடி யொற்றி இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றினார்கள். ஆனால் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த தமிழ் முஸ்லிம்கள் மட்டுமே பழைய இலக்கியப் அமைப்பு முறைகள் அனைத்தையும் கையாண்டு தமிழ் இலக்கிய படைப்புகளை நூற்றுக கணக்கில் எழுதிக் குவித்ததோடு அமையாது முனைந்து எட்டு புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்து, தமிழ் இலக்கண முறைகள் வழுவாது, இலக்கியப் படைப்புகளை பெருமள வில் உருவாக்கியதன் மூலம காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் பணியை ஆற்றிய பெருமையை வரலாற்று பூர்வ மாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.
"இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்று முழங்கும் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் வளர்ச்சியை தங்கள் வளர்ச்சியாக எண்ணி உழைப்பதைப் பெருமை யாகக் கருதி தமிழ்ப்பணியை தளராது தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மாபிள்ளை லெப்பை ஆலிம்
அல்ஆமாஃ மாபிள்ளை லெப்பை ஆலிம்
தொடர் : 03
இலங்கையில் தொண்டு
****************************
அக்காலத்தில் இலங்கையில் இஸ்லாமிய வழிபாடுகள் சீர்குலைந்து இருப்பதைக் கண்ட மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் மார்க்க விழிப்புணர்ச்சிக் காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.
அக்காலத் தென் இலங்கையின் அரசாங்க அதிபராக இருந்த “லமசூரி" என்றஆங்கிலேயர், அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் நல்லுபதேசத்தால் இஸ்லாத்தை தழுவிய நிகழ்ச்சி அவர்களின் சிறப்பைப் பிரதிபலிக்கின்றது. சன்மார்க்கப் பணியின்
தென் இந்தியா முஸ்லிம்கள் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் மிக இருள் சூழ்ந்த ஒரு கால கட்டத்தில் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பணி தொடங்கியது.
C கி. பி. 1835 ஆம் ஆண்டு வியாபார நிமித்தம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள். இலங்கைக்கு முதன் முதல் அவர்கள் விஜயம் செய்தபோது சுமார் 18 வயதினராயிருந்தார்கள். வணிகத் தொடர்பாக இலங்கைக்கு வந்த போதிலும், தீனுல் இஸ்லாத்தின் பற்றுக் குறைந்து இருப்பதைக் கண்டு, கலங்கி தாம் வந்த நோக்கமான வியாபாரத்தை மறந்து தீன் சேவை செய்வதிலேயே முனைந்துவிட்டார்கள். இலங்கையின் அப்போதைய முஸ்லிம் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மார்க்க மேதை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் வணிகத் தொடர்பாக மாத்திரமன்றி இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை நன்கு போதிப்பதற்காகவும் தென் இந்தியாவிலிருந்து அடிக்கடி வந்து போகலானார்கள். மகான் அவர்களது ஆழிய அன்புக்குப் பாத்திரமான இலங்கை வாசியான கொழும்பு ஆலிம் சாகிப் என்று பெயர் பெற்ற அஷ்ஷா இர் அஷ் ஷெய்கு அப்துர் ரஹ்மான் இப்னு மீரான் லெப்பை மரிக்கார் அவர்கள், ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்மீது "மனாகிபுன் னுபூஸ்-பீ- மனாகிபில் ஆலிமுல் அரூஸ்” என்ற மவுலூது பாமாலை பாடி வரவேற்றார்கள்.
இலங்கைத் தீவின் பல பகுதிகளிலும் உள்ள நகரங் களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று மதபோதனை செய் வதிலும் மதரஸாக்கள், தைக்காக்கள் நிறுவுவதிலும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் முழு மூச்சுடன் தொண்டாற்றியுள்ளார்கள்.
இலங்கையில் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தலைமைப் பீடமாக இன்று கருதப்படுவது, அவர்களின் மவ்லூத், ராத்தீப், ஸில்ஸிலா ஆகியவை பெரும்பான்மை முரீதீன்களால் ஓதப்பட்டுவரும் ஸ்தாபனமான கொழும்பு பழைய சோனகத் தெருவிலுள்ள மஃனமுஸ்ஸு அதா. கி.பி. 1881-ஆம் ஆண்டில், அல்லாமா ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களது முழு முயற்சியினால், இது நிறுவப்பட்டதாகும்.
அவர்களால் நிறுவப்பட்ட மற்ற நிறுவனங்கள் வருமாறு: கி. பி. 1883 ஆம் ஆண்டில் மருதானையிலுள்ள புகாரி தைக்கா.
கி. பி. 1884 ஆம் ஆண்டில் வெலிகாமத்திலுள்ள புகாரி மஸ்ஜித்
கி. பி. 1885 ஆம் ஆண்டில் வெலிகாமம் வெலிப் பிட்டியிலுள்ள அரூஸியா தைக்கா.
கி. பி. 1886 ஆம் ஆண்டில் மாத்தரை கொட்டுவ கொட ம ஆலுல் கைராத் அரூஸியா தைக்கா.
கி. பி. 1887 ஆம் ஆண்டில் காலி மிலுதுவையிலுள்ள மஸ்ஜித் முஹ்யித்தீன்.
கி. பி. 1888 ஆம் ஆண்டில் மாத்தரை கடை வீதியி லுள்ள மல்ஹரூஸ் ஸலாஹ் அரூஸியா தைக்கா,
கி. பி. 1889 ஆம் ஆண்டில் காலி காட்டு கொடை மஃனமு அப்கல் ஹம்து அரூஸியா தைக்கா.
கி. பி. 1894 ஆம் ஆண்டில் கிந்தரை ஹுசைன் தைக்கா
மேலும் கொழும்பு மருதானை பள்ளிவாசல், பம்பள பிட்டிய ஜும்மாப் பள்ளிவாசல், மாளிகாவத்தை லெயாட்ஸ் பிராட்வே, பலாமரச் சந்தி பள்ளிவாசல்கள் ஸ்தாபிக்கப் படுவதற்கும் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களே காரணமாக அமைந்தார்கள்.
அரூஸியத்துல் காதிரிய்யா
ஹிஜ்ரி 1265-ஆம் ஆண்டு (கி. பி. 1848) அரூஸியத்
துல் காதிரிய்யாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
அவர்கள் ஆரம்பித்து வைத்து ஆசீர்வதித்து அருளினார்கள் •
அவர்களின் “துஆ” பரக்கத்தின் காரணமாக ஒன்றேகால்
நூற்றாண்டுகளுக்குமேலாக இந்த அமைப்பு இலங்கையிலும்
மற்ற நாடுகளிலும் சன்மாக்கப் பணியாற்றி வருகிறது.
இதற்கு முன் கீழக்கரை தைக்கா சாகிபு வலியுல்லா அவர்களிடத்தில் அரபு மொழிப் பயிற்சியும் ஆத்மீக ஞானப் பயிற்சியும் தொடர்பும் பெற்றவர்களாகவே இலங்கையில் வாழ்ந்து வந்த நாதாக்கள் பலர் விளங்கினர். எனினும் இந்தப் புனிதத்தொடர்பு பலன் தரும் விருட்சமாக நிலைபெற ஆரம்பித்தது மாப்பிள்னை லெப்பை ஆலிம் அவர்கள் காலத்தில் என்றே சொல்ல வேண்டும்.
அக்கால முதல் அருஸியத்துல் காதிரியா ஸ்தாபனத்தின் முயற்சியால் இலங்கை மக்களுக்கு அக்கீதா, பிக்ஹு, ஷரிஅத், தரீகத் ஆகியவற்றைப் போதிக்க இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலும், மூலை முடுக்குகளிலும் கிளைகள் அமைக்கப் பட்டன.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் காலத்திலேயே இலங்கை முழுவதிலும் முந்நூறுக்கும் அதிகமான பள்ளி வாசல்கள், தைக்காக்கள், பள்ளிக்கூடங்கள், மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஏற்கெனவே உள்ள பள்ளிகள், அறச்சாலைகள் ஆகிய வற்றை அபிவிருத்தி செய்வதும் இந்த ஸ்தாபனத்தின் பணி களில் அடங்கும். கண்கண்ட பலனுள்ளதாகிய ராத்திபதுல் ஜலாலிய்யாவும், ஏனைய விர்து, திக்ரு, மவுலூது, கஸீதாக் களும் இலங்கை தீவு முழுவதிலும் நியமமாக சிறப்புற நடை பெற்று வருவதற்கு முயற்சி எடுத்தல், அரபிக்கல்விக்கு புத்துயிர் அளித்தல், ஷரீஅத்தின் அடிப்படையில் இயங்கும் பள்ளிக்கூடங்கள், தைக்காக்கள், மதரஸாக்கள் ஆகிய வற்றைப் பெரும் எண்ணிக்கையில் அமைத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.
மக்னமுஸ்ஸு அதா
குதுபுகள் மதித்த குத்புஸ்ஸமான் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் அவர்கள். மனமுருகப் பாடிப் பனுவல் செய்த பள்ளி என்ற பெருமை இலங்கையில் உள்ள கொழும்பு மக்னமுஸ் ஸுஅதாவுக்கு உண்டு. கொழும்பு நகரத்தின் பழைய பள்ளிகளில் ஒன்று என்ற பெருமையும் மக்னமுஸ் ஸுஅதாவுக்கு உண்டு.
ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அமைத்துள்ள ஸ்தாபனங்கள் அனைத்துமே ஆத்மார்த்தீக தவக் கூடங்களாகவும், ஆண்டவனைத் தொழுகின்ற பள்ளிகளாகவும், அதே சமயத்தில் ஆண்டவனின் புகழ் இசைக்கும் ராத்திபு கானாக்களாகவும் செயல்படக் கூடிய
*இரு திட்டங்களின் ஒருமைப்பாட்டு அமைப்பாகவே விளங்கு கின்றன. அவ்விடங்களில் ஆலிமுல் அரூஸ் அவர்கள் இந்த ஸ்தாபனங்களில் ராத்திபு நேரங்களை, தொழுகை வக்துக்களை யொட்டி அமைத்திருப்பது, ராத்திபுக்கு வருபவர்களை தொழுகையைத் தவற விடாதிருக்கும்படி நிர்ப்பந்திப்ப தற்காகவே யாகும்.
ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை வெப்பை ஆலிம் நிறுவிய பள்ளிகள், தைக்காக்களுக்கு. நிர்வாகச் செலவுக்கான வருமானங்களுக்கு அவர்களே வழிவகைகளைச் செய்திருந்தார் கள்.
மலேசியாவில் அரூஸியத்துல் காதிரியா
காதிரியா தரீக்காவின் சற்குருவாக இருந்த காயல் பட்டினம் உமர் ஒலியுல்லாஹ் அவர்களுக்கு, மலாயா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள வனாந்திரங்களில் கடும் தவம் ஆற்றி, ஆண்டவனின் அருள் பெற்று, ஆத்மீகச் சுடர் வீசிய ஞான சீலர்களான உத்தமர்களைக் கண்ணால் கண்டு அவர்களுடன் உறவாடி உளம் கலந்து ஒளிபெற வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. தங்கள் ஆத்மீக குருவாகிய ஷெய்குல் காமில் செய்யிது முகம்மது புகாரி தங்கள் (கண்ணணூர்) அவர்களிடம் இந்த ஆவலைக்கூறி அங்கு போக அனுமதி பெற்றார்கள்.
மலாய் தீபகற்பத்தை ஒட்டியுள்ள அச்சக்கரை தீவிற்கு முதன்முதலாக உமர்ஒலியுல்லாஹ் சென்றார்கள். அத்தீவிலே அருந்தவம் ஆற்றிவரும் தக்வாவுள்ள நாதாக்கள் பலரையும் அவர்கள் சந்தித்தார்கள். அச்சக்கரையிலும், மலாயாவிலும் உமர் ஒலியுல்லாஹ் அவர்கள் பதினான்கு ஆண்டுகள் தங்கி, தமது அருள் ஞான போதனைகளையும் - தவபல சாதனை களையும் புரிந்துள்ளார்கள். அதன் பலனாக அப்பகுதியில் இவர்களின் ஆத்மீக அருள் வழியாகிய காதிரியா தரீக்காவில் அப்பொழுதே ஆயிரமாயிரம் சீடர்கள் ஏற்பட்டுவிட்டார்கள்.
உமர் ஒலியுல்லாஹ் அவர்கள் காலமான பின்பு, மலாய் நாட்டு பக்த கோடிகள் தங்களின் காதிரியா தரீக்காவின் வளர்ச்சிக்கும், தங்களது ஆத்மீக ஞான தாகத்திற்கும் உமரி ஒளியுல்லாஹ் அவர்களின் பின் தோன்றல்களை இந்தியாவிலிருந்து எதிர்பார்த்து வந்தனர்.
"சுவர்க்கத்துப் பெண் என்னும் ஆயிஷா உம்மா அவர்களின் மகனாரும், மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தாயைப் பெற்ற பாட்டனாருமாகிய ஆரிபுபில்லா ஷேக் அப்துல்காதிர் லெப்பை ஆலிம் ஹாஜி அவர்கள் மலாயா வாழ் காதிரியா தரீக்கா முரீதீன்களின் நீங்காத ஆசையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அங்கு சென்று காதிரிய்யா தரீக்காவின் ஞான போதனைகளை நடத்தி வந்தார்கள்.
இந்தோனேசியாவிலும், மலாயாவிலும் மார்க்கப் பிரச் சாரம் செய்து அவர்கள் ஆற்றிய ஆத்மீகப்பணி பெரும் சிறப்புக்குரியது.
அவர்கள் சுமார் இருநூறு மலாக்காவில் காலமாகி அடங்கி நாட்டை சேர்ந்த வலியுல்லாவான வருடங்களுக்கு முன்பு இருக்கிறார்கள். தமிழ் அவர்களுக்கு மலாக்கா சாகிப் என்று பெயர் வழங்கியது. மலாக்கா நகரில் இந்திய முஸ்லிம்கள் வசிக்கும் "கம்பங்கூலிங்” என்ற இடத்தில் அவர் கள் தர்கா இருக்கிறது.
மகான் ஷேக் அப்துல் காதிர் ஆலிம் என்ற இந்த நாதாவைப் பெற்று எடுத்த தாயார் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லாஹ் அவர்களின் மாமி மகளாவார். இவரைச் சுவர்க்கத்துப் பெண், என்றே ஞானாபிமானிகள் அறிவார்கள்.
ஷேக் அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் தவப் புதல்வர் மூஸா லெப்பை ஆலிம் அவர்கள். (இவர்கள் கீழக்கரை கிழக்குத் தெரு அப்பா பள்ளியில் அடங்கியுள்ளார்கள்.)
ஷேக் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் ஆயிஷா உம்மா. யப்பா என்ற தொண்டி அபூபக்கர் களின் திருப் புதல்வர் லெப்பைக்கனி முடித்தார்கள்.) (இவர்களை தொண்டி ஒலியுல்லாஹ் அவர் ஆலிம் அவர்கள் மணமுடித்தார்கள்.
மற்றொரு மகளாகிய ஆமினா உம்மா அவர்களை வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள் மணமுடித் தார்கள். இவர்களின் தவப் புதல்வரே மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்.
காதிரியா தரீக்காவின் கலீபாவாக, மலாய் நாட்டில் 'மாண்புறத் திகழ்ந்து, மலாக்கா நகரிலே, ஷேக் அப்துல் காதிர் நாயகம் அவர்கள் காலமான பிறகு கீழக்கரை தைக்கா சாகிப் (வலி) அவர்களின் சீடர்கள் பலர் அந்த நாட்டிற்குச் சென்று ஆத்ம ஞானத் தொடரை காத்து வந்தனர்.
மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் வாழும் காலத்திலும் மலாய் நாட்டிலிருந்த காதிரிய்யாத் தரீக்கா வின் சிஷ்யகோடிகளாகிய முரீதீன்களின் பிரதிநிதிகள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களை நேரில் சந்தித்து "பை அத்" என்னும் விசுவாசப் பிரமாணம் எடுத்துச் சென்றுள்ளனர். அதுமுதல் மலாயா நாட்டில் அரூஸியத்துல் காதிரியா தரீக்கா வேரூன்றி விழுது பல விட்டுள்ள பெரு விருட்சமாகத் திகழ்ந்து வருகிறது.
மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அரூசியத்துல் காதிரிய்யா முரீதீன்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தென் இந்திய முஸ்லிம்களாகிய வர்த்தகர்களும், வர்த்தகத் தொழிலாளர்களுமாவார்கள். அவர்கள் இன்னும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் கலீபாக்களிடம் நீங்காத தொடர்புகொண்டு வருகின்றனர். அவர்கள் மார்க்க, ஆத்மீக சம்பந்தமாகதங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அவ்வப்போது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர் களின் வழித்தோன்றல்களில் உதித்த நேரடி கலீபாக்களிடம் தொடர்பு கொண்டும் வருகின்றனர்.
தங்களுக்கு ஏற்படும் லௌகீக, பொருளாதாரச் சிக்கல் களிலும் இன்னல்களிலுமிருந்து தெளிவும் மீட்சியும் பெற மப்ரபிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் நேரடித் தோன்றலில்
உதித்த கலீபாமார்களின் நல்லாசி எனும் “து ஆ” பரக்கத்தை வேண்டி மலாய் நாட்டு முரீதீன்கள் தொடர்பும் கொண்டு வருகின்றனர்.
செய்யிது முகம்மது மௌலவி புகாரித் தங்களின் அனுமதியோடு சென்று கடாரம் என்ற மலாய் நாட்டில் காயல்பட்டினம் உமர் (ஒலி) அவர்கள் ஊன்றி வந்த ஞான ' வித்து அரூஸியத்துல் காதிரியா எனும் ஆல விருட்சமாகத் தழைத்து ஆத்மா ஞானத் தெளிவு என்னும் நிழலை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
தொடரும்.
அடுத்து அவர்களின்
ஞான மகத்துவம்
Monday, 11 November 2024
மாபிள்ளை லெப்பை ஆலிம்
இமாம் மாபிள்ளை லெப்பை ஆலிம்
தொடர் 01
நூன்முகம்
இஸ்லாம் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலேயே தமிழகத் திற்கு அறிமுகமாகி இருந்தது; ஆங்காங்கே அரபிய முஸ்லிம் களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன: மஸ்ஜிதுகளும் கட்டப்பட்டிருந்தன என்ற உண்மைகளெல்லாம் வரலாற்று வல்லுநர்களால் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்கள் தமிழகத்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங் களின் மூலம் வளப்படுத்தினரே யன்றி சுரண்ட வில்லை; இங்கேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் வர்த்தகர்களாக வந்த ஐரோப்பியர்கள் பேராசை கொண்டு, நம்நாட்டின் செல்வத்தைக் தத்தம் தேயங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாமலிருக்கவும், அந்த நாடுகளுக்கு இடையிலேயே தோன்றிய கடுமையான பூசல், போட்டிகளின் விளைவாகவும், அவர்கள் அரசியல் ஆதிக்கம் பெறவும், நாடுபிடிக்கவும் முற்பட்டனர். அந்த ஐரோப்பியர் போலன்றி அரபிய வியாபாரத்திலேயே கருத்தூன்றியிருந்த்தோடு கமதியான பிரசாரத்திலும் வர்த்தகர்கள், அரபிய முஸ்லிம்களின் தூய வாழ்க்கை முறையினால் ஈர்க்கப் பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் கூடிவந்தது. அவர் களிடையே மார்க்க போதனை புரிவதற்கு உறுதுணையாக அறபுத் தமிழ் எழுத்து முறையை அரபிய முஸ்லிம்கள் உருவாக்கினர்.
அதற்கு முன்பாக பாரசீக மொழிக்கு
முஸ்லிம்கள் அரபி லிபியைப் பயன் படுத்தி வெற்றி கண்டிருந்தது அவர்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக அமைந்தது.
தமிழகத்தில் முஸ்லிம்கள் அரசியல் ஆதிக்கம் பெற முயலவில்லை என்றால், ஹலரத் ஸையிது இப்ராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் பாண்டிய மன்னரோடு போரிட்டு வென்று ஆட்சி நடத்தியது எதனைக் குறிப்பிடுகின்றது என்ற கேள்வி எழலாம். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நுணுகி ஆராய்வோருக்கு, அது மார்க்கப் பிரச்சாரத்திற்காக வந்த துறவு மனப்பான்மை கொண்ட தூயவர்களின் கூட்டம் ஒன்று, தனது தற்காப்பிற்காகச் சந்திக்க நேரிட்ட சண்டைகளின் விளைவே என்பது தெளிவாகும்.
அதனை அடுத்து முஸ்லிம்களுக்கு அரசியல் ஆதிக்கம் கிட்டியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தானே வலுவில் வந்து சேர்ந்ததாகும். அப்போது பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மாறவர்மன் குலசேகரன், தமிழகத் தோடு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடத்தி வந்த கைஸ் தீவின் அரசரான மலிக்குல் இஸ்லாம் ஜமாலுத்தீன் அவர்களின் இளவல் மலிக்குல் அஃலம் தகியுத்தீனின், மதியூகம்,வீரம், அறிவாற்றல் ஆகியவைகளினால் கவரப் பட்டு, அவரைத் தன் அமைச்சராகவும், கடற்படைத் தலைவராகவும், எல்லைக் காவலராகவும் அமர்த்திக் கொண்டார். அதோடு மட்டுமன்றி அவர் தமது அரச குமாரிகளில் ஒருத்தியை அவருக்கு மணமுடித்து வைத்து அவரைத் தன் மருமகனாக ஆக்கிக்கொண்டதோடு, பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளை அவருக்குப் பிரித்துக் கொடுத்து அதற்கு வருதை மண்டலம் எனப் பெயரிட்டு, தகீயுத்தீனை அதற்கு அரசராக்கினார்.
பாண்டிய மன்னர்களின் வரலாற்றில், மதுரைப்பாண்டிய மன்னனின் தலைமையில் மற்றும் நான்கு பாண்டியர்கள், துணையரசர்களாக ஆங்காங்கே ஆட்சி பீடத்தில் அமர்ந்து
அரசோச்சுவது வழக்கமாக இருந்தது. தகியுத்தீன் மற்றொரு அரசரானபோது ஐந்து பாண்டியர்களுடன் சேர்ந்து "ஆறாம் பாண்டியன்" என்ற சிறப்புப் பெயராலும் அறியப் பட்டு வந்தார். பாரசீக மொழியில் மர்ஜபானே ஹிந்த் (Margrave of Hind) என்றும் தமிழில் "கறுப்பாறு காவலர்" என்றும் கூட தகியுத்தீன் அழைக்கப்பெற்றார். இந்த "கறுப்பாறு காவலர்" என்ற பட்டம் அவருடைய சந்ததியினரால் தொடர்ந்து வகிக்கப்பட்டு வந்தது. அந்த வம்சாவளியில் வந்த சீதக்காதிக்கும்கூட அப்பட்டம் வழங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் "வருதை மன்னர்" களின் பட்டம், பதவிகளையும் பாதித்தன. இந்த வரலாறுக ளெல்லாம் மறைக்கப் பட்டதும் மறுக்கப் பட்டதும் தமிழக வரலாற்றிற்கு ஏற்பட்ட "விபத்துகள்" என்றால் அது மிகை
யாகாது.
அப்படிப்பட்ட "அரசாட்சி"களோடு, "அருளாட்சி” யும் ஹிஜ்ரி ஆரம்ப நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தமிழகத்திற்கு புதிய கடவுட் தத்துவக் கருத்துக்களை வழங்கியது முஸ்லிம் ஞானியரின் தொடர்பினால் தான் என்பது அவர்களுடைய வரலாற்றினை நுணுகி ஆராய்வோருக்குத் தெளிவாகும்.
அடுத்து, பதினோராம் நூற்றாண்டில் திருச்சியில் வாழ்ந்த தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் (வலீ) அவர்களின் இனிய போதனைகளினால் கவரப் பட்டு ஆயிரக் கணக்கானோர் இஸ்லாத்தை ஏற்று வந்ததைக் கண்ட பிறகே கவலை கொண்டு, அருகில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த இராமானுஜர் மத சீர்த்திருத்தம் செய்து, சமத்துவத்தை போதிக்கத் தொடங்கினார். தீண்டப் படாதோருக்கும் பூணூல் அணிவித்து அவர்களை பிராமணர்களாக்கினார். அதன் விளைவாக அவர் வைதிகர்களின் கொடிய சீற்றத்துக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி, நாடு துறந்து மைசூருக்கு ஓடி உயிர் தப்பினார்.
தொடரும்
கீழக்கரை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வரலாறு
தொடர் 02
*************
சிறந்த இறைநேசச் செல்வரான மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் என்னும் ஊரில் ஹிஜ்ரி 1232 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 16 செவ்வாய்க்கிழமை பிறந்தார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தந்தை வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம், தாயார் ஆமினா உம்மா. இவர்கள் இருவரும் இறை பக்திக்கும், கல்விக்கும். ஆன்மீக சாதனைகளுக்கும் அரிய உதாரணமாகத் திகழ்ந்தார்கள். இருவரும் ஹஜ்ரத் செய்யிதினா அபூபக்கர் சித்தீக் (ரலி ) அவர்களின் பரம்பரையில் தோன்றிய மாதிஹுர் ரசூல் செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர் களின் தலைமுறையில் தோன்றியவர்கள்.
கீழக்கரைக்கு சென்றடைவதற்கு முன் மகான் சதக்கத் துல்லாஹ் அப்பா அவர்கள் காயல்பட்டினத்தில் எந்த வீட்டில் குடியிருந்தார்களோ, அந்த வீட்டிலேயே மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களும் பிறந்தார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும்பொழுதே அவர்களின் தந்தை வெள்ளை அஹ்மது ஆலிம் அவர்கள் ராமனாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரையில் குடியேறிவிட்டார் கள். எனவே இவர்களின் இளமைப் பிராயம் கீழக்கரையிலே துவங்கியது.
கல்வி - இளமைப் பருவம்
இளமையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்குத் திக்குவாயாக இருந்தபொழுது, இவர்களின் தந்தை இவர் களை செய்கு முகம்மது அல் நுஸ்கி என்ற பெரியாரிடம் அழைத்துச் செல்ல, அவர்கள் ஆண்டவனிடம் “துஆ” (பிரார்த்தனை) இறைஞ்சி இவர்கள் வாயில் ஓதி ஊதியதுடன் தேனை நக்கி தண்ணீரை அருந்துமாறு செய்ய, இவர்களுக்குப் பேச்சு தடுமாற்றம் நீங்கி பூரண நலம் ஏற்பட்டது.
இவர்கள் ஏழு வயதிலிருந்தே திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி ஒன்பது வயதிற்குள், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்து ஹாபீஸ் ஆக விளங்கினார்கள். தகப்பனாரின் சிறந்த கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள், திருக் குர்ஆன் விரிவுரைகள், ஹதீஸ், தஸவ்வுப் எனும் மெய்ஞ் ஞானக் கலை, தத்துவம், இஸ்லாமிய வரலாறு ஆகிய கலைகளை, தங்கள் தந்தை வெள்ளை அஹ்மது ஆலிம் அவர் களிடம் சில காலம் கற்றுப் புலமை பெற்றார்கள். நல்லொழுக் கமும் நற்செயலும் கொண்டஇவர்கள் அறிவைப் பெருக்கும் ஆக்கப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்தினார்கள்.
பின்னர், அக்காலத்தில் மக்களால் மிக மேன்மையாகப் போற்றப் பெற்றவரும், குணங்குடி மஸ்தான் சாகிப் (வலி) முதலான பெரியார்களின் குருநாதரும், பெரும் ஞான தேசிகருமான கீழக்கரை தைக்கா சாகிப் என்னும் ஷேக் அப்துல் காதிர் (வலி) அவர்களின் மாணவராக இருந்து மார்க்கக் கல்விகற்றார். இதன் பயனாக அவர்கள் அரபு, உர்து, பார்சி, தமிழ்ஆகிய மொழிகளிலும் நல்ல புலமை பெற்றார் கள்.
இளம் வயதிலேயே அரபியிலும், தமிழிலும் பாடல் களைப் புனையும் திறன் அவரிடம் மிளிர்ந்தது.
இவர்களின் பெற்றோர் தன் மகன் மாமேதையாகவும், பரிபூரணமான ஆலிமாகவும் விளங்க வேண்டும் என்ற
எண்ணத்துடன் நாற்பது புதன்கிழமை இவர்களின் முடியை இறக்கி வந்தனர்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் சிறு வயது முதல் நுண்ணறிவும் விவேகமும் உடையவர்களாகவே விளங்கினார் கள். தமது அறிவுச் சுடராலும், ஆராய்ச்சித் திறனாலும் மார்க்க ஞானங்களை நன்கு தெரிந்து நல்லொழுக்கங்களில் ஈடுபட்டுவரலானார்கள். இறை வணக்கத்தில் பூரணமாகத் தம்மை ஆழ்த்திக்கொண்ட அவர்கள் இஸ்லாமிய கோட்பாடு களின் சகல அம்சங்களும் நிரம்பப் பெற்ற முழுமையான முஃமினாவாகவும் தங்கள் வாழ்விலேயே சில கஷ்புல் கராமாத்துகளையும் உடையவர்களாகவும் விளங்கினார்கள்.
இவர்களின் நல்லொழுக்கங்களையும், புத்திக் கூர்மையை யும் கண்டு கீழக்கரை தைக்கா சாகிப் அவர்கள், இவர்களுக்கு மேலான அரபிக் கல்விகளையும் கற்றுக்கொடுத்து, காதிரியா தரீக்கில் முரீது என்னும் ஞான உபதேசமும் கிலாபத்தும் கொடுத்து அருளினார்கள். தைக்கா சாகிப் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்கு ஆண் சந்ததி இல்லாது இருந்ததனால், காதிரியா தரீக்காவையும் அதன் தலைமை ஸ்தாபனமாக விளங்கிய-கீழக்கரை தைக்கா மதரசாவையும் நிர்வாகித்துப் பரிபாலிக்கும் பொறுப்பையும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் ஏற்றார்கள். இவர்கள் அக் காலத்தில் காதிரியா தரீக்காவின் மாண்புமிகு சற்குருவாக வும் இருந்து வந்தர்கள்.
தங்கள் தைக்காவில் தாலியுல் உலூம்களுக்கு (மார்க்க
விற்பன்னர்களுக்கு) மார்க்கக் கல்வியை கற்பித்துக்
கொண்டும் அதேசமயத்தில் பிறமொழியிலுள்ள மார்க்க
நூல்களை தமிழுரை செய்து அச்சிட்டு வெளியிட்டும்,
மக்களுக்கு நேர்முகமாக நல்லுபதேசங்களைச் செய்து
கொண்டும், தங்கள் வாழ்நாட்களைக் கழித்து வந்தார்கள்.
இவர்களுக்குப் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான
முரீதுகள் ஏற்பட்டனர்.
திருமணம், மக்கள்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் இறைபக்தியும், நுண்ணறிவும், இவரின் ஆசிரியரான தைக்காசாகிப் அவர் களை மிகவும் கவர்ந்தது. அவர் தமது நான்காவது மகள் சாரா உம்மாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு மணமுடித்து வைக்க விரும்பினார்கள். அவர்களின் மனைவி அதற்கு இணங்காதபொழுது, “வருங்காலத்தில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் தம் மாமேதைத்தன்மையினால் சுல்தானின் அரியாசனத்தில் அமரும் பேறு பெறுவார். அவர் கல்விச் செல்வமும், அறிவுச் செல்வமும் படைத்தவர். அவர் நூல்கள் எழுதத் தொடங்குவாராயின் அதிலிருந்து பெரும் பணம் சம் பாதிப்பார். உபந்நியாசமும், உபதேசமும் புரியத் தொடங்கு வாராயின், உலகச்செல்வங்கள் அவரது காலடியில் வந்து குவியும்” என்று புகழ்ந்து பேசி தமது மனைவியைச் சம்மதிக்க செய்து தமது மகள் சாரா உம்மாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு ஹிஜ்ரி 1253 ஆம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் 27 ஆம் நாள் மணமுடித்து வைத்தார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாமனார் தைக்கா சாகிப் வலியுல்லாஹ் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி இவர்கள் பிற்காலத்தில் புலவர்கள் பேரவையில் திப்பு சுல்தான் அமர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்ததோடும் மலிக்குஷ்ஷுஅரா (புலவர்களின் மன்னன்) என்ற பட்டமும் நல்கி கௌரவிக்கப் பட்டனர். ஆலிம் அவர்களுக்கு ஐந்து குழந்தைச் செல்வங்கள் பிறந்தன. செய்யிது பாத்திமா, செய்யிது அப்துல் காதிர் ஆலிம், (கல்வத்து நாயகம்) பாலாமினா உம்மா, உம்முசல்மா, ஷாகுல் ஹமீது ஆலிம் (ஜல்வத்து நாயகம்) ஆகியோரே அவர்கள்.
இவ் ஐவரின் தாயாரான சாரா உம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் சகோதரியாகிய உம்முஹானி உம்மா அவர்களை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மணந்து கொண்டார்கள்.
குண நலன்
நடை முறை வாழ்க்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் நபிகள் நாயகத்தின் சுன்னத்தைக் கடைபிடித்து ஒழுகிவந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித் தோன்றல் களுக்குப் பெரிதும் மரியாதை செய்ததுடன் அவர்களின் கோத்திரத்தை சேர்ந்த சிறுவர்கள் வந்த போதிலும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் எழுந்து நின்று
அவர்களை வரவேற்பார்கள்.
தைக்காவில் தங்கள் மாணவர்களுக்கு இஸ்லாமிய அறிவைப் புகட்டியும், தேடி வந்தோருக்கு சலிப்பின்றி ஆலோசனை நல்கியும் உதவிபுரிந்து வந்தார்கள். இன்னல் இழைத்தோருக்கும் இனிய உதவிகளைச் செய்து வந்தார்கள்.
வெளியூர்ப் பயணம்
திருமணத்திற்குப் பின்பு, மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் கண்ணனூர், தலைச்சேரி, பொன்னானி முதலான நகரங்களுக்குச் சென்று அவ்விடத்திலேயுள்ள மகான்களைத் தரிசித்து நல்லாசி பெற்றார்கள். பின்னர் காயல் பட்டினம் வந்தார்கள். இங்கு மாதவமிக்க ஞானி செய்யிது முகம்மது புகாரித் தங்கள் அவர்களது சீடரும், கலீபாவுமாகிய. உமர் வலியுல்லாஹ் அவர்களின் புதல்வரும், ஞான சிகாமணியு மான, செய்கு அப்துல் காதிர் என்ற காயல்பட்டினம் தைக்கா சாகிப் வலி அவர்களின் சமூகத்துக்குபோய் அங்கு சிலநாள் தங்கி அவர்களுடன் பழகி, அவர்களின் நல்லாசி பெற்று கீழக்கரை திரும்பினார்கள்.
தொழில்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், 1835 ஆம் ஆண்டு தென் இந்தியாவில், மதுரை மாநகரில் “தைக்கா
ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புகொள்ள செல்லும் இடங்களில் வேண்டி இருந்தது. எல்லாம் வர்த்தகத்தை மட்டு மல்லாது, மார்க்க வழிபாடுகளையும்' கண்காணித்து ஆலோசனை கூறிவந்தார்கள்.
ஹஜ் யாத்திரையும்—அரபுநாட்டு விஜயமும்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்கள் ஐம்பத்து ஐந்தாவது வயதில் ஹிஜ்ரி 1287 ஆம் ஆண்டு மருமகன் பல்லாக்குத் தம்பி (வலி) அவர்களுடன் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா, மதீனா சென்றார்கள். அத்துடன் அவர்கள் சிரியா, ஈராக், ஏமன் போன்ற அரேபிய நாடுகளுக்கும் பார சீகத்துக்கும் விஜயம் செய்தார்கள். அந்த நாடுகளிலுள்ள அறிஞர்களைக் கண்டு அளவளாவினார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் ஆழ்ந்த புலமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியப்புற்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் சுல்தான், காஸி, நவாபு, உலமாக்கள், மற்றும் பிரபுக்கள் ஆகியவர்களால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பலர் அவர்களின் சீடர்களானார் கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சிறந்த அரபு இலக்கியப் புலமையைப் பாராட்டி வியந்த மக்கள் பரிசுகளை யும் பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்காங்கு மக்களுக்கு உபதேசம் புரிவதிலும், முரீது பைஅத்து கொடுத்து நேர்வழி காட்டுவதிலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளி களை அல்லாஹ்வின் திருநாமம், மற்றும் உச்சாடனங்களால் குணப்படுத்தினார்கள்.
தொடரும்
ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புகொள்ள செல்லும் இடங்களில் வேண்டி இருந்தது. எல்லாம் வர்த்தகத்தை மட்டு மல்லாது, மார்க்க வழிபாடுகளையும்' கண்காணித்து ஆலோசனை கூறிவந்தார்கள்.
ஹஜ் யாத்திரையும்—அரபுநாட்டு விஜயமும்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்கள் ஐம்பத்து ஐந்தாவது வயதில் ஹிஜ்ரி 1287 ஆம் ஆண்டு மருமகன் பல்லாக்குத் தம்பி (வலி) அவர்களுடன் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா, மதீனா சென்றார்கள். அத்துடன் அவர்கள் சிரியா, ஈராக், ஏமன் போன்ற அரேபிய நாடுகளுக்கும் பார சீகத்துக்கும் விஜயம் செய்தார்கள். அந்த நாடுகளிலுள்ள அறிஞர்களைக் கண்டு அளவளாவினார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் ஆழ்ந்த புலமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியப்புற்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் சுல்தான், காஸி, நவாபு, உலமாக்கள், மற்றும் பிரபுக்கள் ஆகியவர்களால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பலர் அவர்களின் சீடர்களானார் கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சிறந்த அரபு இலக்கியப் புலமையைப் பாராட்டி வியந்த மக்கள் பரிசுகளை யும் பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்காங்கு மக்களுக்கு உபதேசம் புரிவதிலும், முரீது பைஅத்து கொடுத்து நேர்வழி காட்டுவதிலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளி களை அல்லாஹ்வின் திருநாமம், மற்றும் உச்சாடனங்களால் குணப்படுத்தினார்கள்.
Saturday, 9 November 2024
இலங்கையில் தரீக்காக்களின் வளர்ச்சி
#இலங்கையில் #தரீக்காக்கள் ஆற்றிய பணிகள் மௌலவி MTM. அரீழ் (பாரி) - வெலிகாமம்
இலங்கைத் திருநாட்டிற்கு தரீக்காக்களின் செய்குமார்கள் வருகைதர முன்னரே இங்குள்ள முஸ்லிம்கள் தரீக்காக்கள் மீது பற்றும் செய்குமார்கள் மீது மதிப்பும், மரியாதையும் உடையோராகவும் விசேடமாக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் அல்ஜீலானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மீது பேரன்பும் பெரு மதிப்பும் வைத்தோராகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்க்கு இந் நாட்டின் நலா புறங்களிலும் காணப்படும் மஸ்ஜித்கள் சான்றுகளாய் விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.
அழியாத நாமம்
சன்மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்ற அர்த்தத்தைப் பொதிந்த முஹ்யித்தீன் என்ற திருப் பெயரால் அழைக்கப்படும் பள்ளிவாசல்கள் இம்மண்ணிலே நிலைத்திருக்கும் காலம் முழுவதும் அப்பெயருக்குச் சொந்தக்காரரான அஷ்ஷெயகு அப்துல் காதிர் அல்ஜீலானீ (கத்தஸல்லாஹி ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களையும் அவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரீக்காவையும் மக்களின் உள்ளங்களிலிருந்து அகற்றுவது சாத்தியமற்றது எனக் கூறும் அளவுக்கு முஹ்யித்தீன் மஸ்ஜித்கள் நிறைந்து காணப்படுகின்றன.
உதாரணத்திற்கு மூன்று மாவட்டங்களை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.
புத்தளம் மாவட்டத்திலுள்ள த்திலுள்ள மஸ்ஜித்களில் 32 மஸ்ஜித்கள் முஹ்யித்தீன் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அங்குள்ள புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு, திகழி, கொத்தாந்தீவு, முதலைப்பாளி, நல்லான் தழலை, ஆலங்குடா. கரம்பை, பெருக்கு வட்டான் என எல்லா ஊர்களிலுமுள்ள பள்ளிவாசல்களை முஹ்யித்தீன் மஸ்ஜித் என்றே அழைக்கிறார்கள். மேலும் கி.பி. 1434ல் புத்தளத்தில் முஹ்யித்தீன் ஆண்டகை தர்கா நிர்மாணிக்கப்பட்டது.
(நூல் :- புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு)
மேற்படி தகவல் மூலம் இன்றைக்குச் சுமார் 575 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் குத்பு நாயகத்தின் அபிமானிகளாக இருந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம்.
இவ்வாறே மாத்தறை மாவட்டத்தில் மாத்தரை டவுண், வலஸ்முள்ள, யகஸ் முள்ள, மீயல்ல, திக்வெல்ல, வெலிகம, வெலிப்பிட்டி, பாலத்தடி, கப்புவத்தை, தங்கல்ல, போர்வை ஜும்ஆ மஸ்ஜித்கள் அனைத்துமே முஹ்யித்தின் மஸ்ஜித்என்றே அழைக்கப்படுகின்றன. (நூல்:- அஸ்ஸிராஜ் இதழ்-14)
இம்மாவட்டத்தில் மிகப்பழமை வாய்ந்த பள்ளிவாசலெனக் கருதப்படும் பாலத்தடி ஜும்ஆ மஸ்ஜித் சுமார் 700வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகக் நம்பப்படுகிறது. இதிலிருந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் இப்பகுதிகளில் வாழ்ந்தோர். முஹ்யத்தின் ஆண்டகை அவர்களின் முஹிப்பீன்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது. இதுபொல் யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி, கிளிநொச்சி, மானிப்பாய், கொடிகாமம், நாச்சிக குடா, நெய்னா தீவு, வட்டக்கச்சி மஸ்ஜித்களும் சிவலை என்ற இடத்திலுள்ள தைக்காவும் முஹ்யித்தின் என்ற நாமத்தாலேயே அழைக்கப்படுகிறமை எமது தாகும்
கவனத்திகுரியதாகும். (நூல் :- யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை)
இவ்வாறு இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் குத்புகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகையை நினைவு படுத்தும் இறையில்லங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை அந்த நாதாக்கள் மீது மக்கள் வைத்த அன்பின் அடையாளச் சின்னங்கள் என வர்ணிப்பதில் தவறில்லை.
காரணிகள்
காதிரிய்யா தரீக்காவும் அதன் ஆத்ம ஞானிகளும் இங்கு வருகை தர முன்னர் குத்பு நாயகத்தின் பெயர் நாமம் இந்நாட்டின் எல்லாப்பாகங்களிலும் எப்படி இடம் பிடித்தது என்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் காணப்படாத அக்காலத்தில் இது எவ்வாறு சாத்தியமானது என்றும் நாம் சிந்திக்கலாம்.
பின்வரும் நிகழ்வுகளை இதற்கான காரணிகளாக நாம் இனங்காணலாம்.
*ஆதம் மலையை தரிசிப்பதற்காகப் பல ஸுபிய்யாக்களும் இறை நேசர்களும் இங்கு வந்து சென்றமை.
*அராபியருடனான வர்த்தக தொடர்புகள் காணப்பட்டமை
*வர்த்தகம் நிமித்தம் இங்குவந்த அரபிகள் துறை முக நகரங்களை அண்டி குடியேற்றங்களை அமைத்துக் கொண்டமை.
*இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்கான கல்விப் பயணங்கள் மேற்கொண்டமை.
*ஹஜ்ஜுக்கான ஒன்றுகூடல் மூலம் அரபுலக தொடர்புகள் அதிகரித்தமை
*முஹ்யித்தின் ஆண்டகையின் பாசறையில் கல்வி பெறுவதற்காக பக்தாதை நோக்கி அரபு நாடுகள் பலவற்றிலிருந்தும் மாணவர்கள் சென்றதோடு, தத்தமது நாடுகளுக்கு திரும்பி வந்ததும் அவர்களின் தரீக்காபைத் துயர்ந்து போதனையில் ஈடுபட ஆரம்பித்தமை.
*அஹ்லுபைத்தைச் சேர்ந்த பலர் இங்கு வந்து குடியேரியமை.
செய்குமார்கள் வருகை
இவ்வாறு தரீக்காக்கள்- அதன் தலைவர்கள் பற்றிய அறிமுகமும் நல்லெண்ணமும் நிலவிய சூழலில் தான் செய்குமார்கள் என அழைக்கப்பட்ட ஆத்ம ஞானிகளின் வருகை இங்கு நிகழ்ந்தது. இவர்களின் விஜயம் சுதேச முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், ஆன்மீகம், வணக்கம் என எல்லாத் துறைகளிலும் எழுச்சியும் ஏற்றமும் ஏற்பட அடித்தளமிட்டது என்பதை வரலாற்று ஏடுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வகையில் இலங்கைக்கு வந்த முக்கிய ஞானவான்களையும், அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக நோக்குவோம்.
தொடரும்...
Sunday, 3 November 2024
வாராந்த மஜ்லிஸ்
#ஏறாவூரில் இன்று 03/11/2024 #மெளலானா உம்மா #தர்ஹாவில் வாரந்த புனித #பத்ர் மெளலீத் மஜ்லிஸ் சங்கைக்குரிய குருநாதர் அஹ்லுபைத் செய்யிதுஸ் சாதாத் அஸ்ஸெய்யித் அன்வர் மெளலானா அல் ஹஸனி வல் ஹுஸைனி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.















































