Friday, 27 December 2024
புகாரி இமாம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள
ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்
வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்
பீ. எம். முக்தார் 201
![]() படம்: பேருவளை விசேட நிருபர் |
வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் நடைபெறும் புனித ஷஹீஹுல் புகாரி முஸ்லிம் தமாம் மஜ்லிஸ் நிபுணர் 2013-4-21 ஞாயிற்றுக்கிழமை காலை சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இலங்கையில் வியாபார தொடர்பு கொண்டிருந்த அறாபிய நாட்டு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றம் சரித்திர பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை கடற்கரை பகுதியில் தான் இடம்பெற்றது என்பது பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்தாகும்.
கி. பி. 11ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தார்கள். இன்றும் பேருவளை கடற்பாங்காகவுள்ள "கெச்சிமலை பள்ளிவாசல்" இலங்கையில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாகவுள்ளது என்றும், பட்டுப்பாதையூடாகப் பிரயாணம் செய்த 'அம்கோவேல்ட்' நிறுவனத்தின் பிரபல பத்திரிகை நிருபர்களான டேவிட், ஆம்டிட் குழுவினரின் ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது.
சூபியாக்கள் பலரும் இலங்கை வருகை தந்து பாவா ஆதம் மலை என அழைக்கப்படும் (தினீaசீ's ஜிலீak) புனிதத்தல தரிசித்துச் சென்ற வரலாறு உள்ளது. இப்னு பதூதா போன்ற வரலாற்று வல்லுனர்கள் சிலர் கவழி வந்து தரிசித்து தங்களது வரலாற்று நூலில் குறித்துள்ளது வியக்கத்தக்கது. கெச்சிமலையில் வாழும் ஷெய்கு அஷ்ரப் வலியுல்லாஹ் அவர்கள் இதே நோக்கத்தோடு தான் கப்பல் மூலமாக இலங்கை வந்தார்கள். கடலின் ஆகோரமும் காற்றின் வேகமும் கப்பலை திசை திருப்பு மெச்சு புகழ் கெச்சிமலை அணித்தே பேருவளையில் இறங்கச் செய்தது. அல்லாஹ்வின் நாட்டம் இதுவாக இருக்கலாம் என உணர்ந்த அல்லாஹ்வின் அன்பர் அஷ்ரப் வலியுல்லாஹ் கெச்சிமலையில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். அங்கிருந்து இறை பணியைத் தொடர்ந்தார்கள். ஆத்மீக மலர்ச்சி கண்டார்கள்.
1882 ஜோர் அரசரின் கவர்னராக இலங்கையில் கடமையாற்றிய சேர் ஆர்தர் ஹென்றி கோர்டன் அவர்கள் காலி செல்வதற்காக, தன்னுடைய உத்தியோக பூர்வ கடமைக்காக செல்லும் வழியில் அவர் பிரயாணம் செய்த குதிரை வழி மாறி பேருவளை கஷ்டம்ஸ் பாதை வழியில் சென்று ஓர் இடத்தில் தரிவிர்த்து நின்றுவிட்டது. அங்கு இருந்து ஒரு பழைய புதை குழியின் அருகில் நின்று பணிந்து வணங்கியது. இந்த ஆச்சரியமான சம்பவம் கவர்ணரை சிந்திக்கச் செய்தது. குதிரை, அந்த இடத்தை விட்டும் அகல மறுத்தது. அங்குள்ள மக்களிடம் அவர் விசாரித்ததில் இந்த இடம் கெச்சிமலை என்றும், அடங்கப்பட்டிருக்கும் அற்புதமான வழியுல்லா பற்றியும் கூறப்பட்டது. உடனே கவர்னர் அவர்கள் தன்னுடைய காரியதரிசியிடம் ஜோர்ஜ் மன்னர் சார்பில் இந்த இடத்தை அன்பளிப்பாக அளிக்கும் படியும் உத்தரவிட்டார்கள். பின்னர் மக்கள் ஒன்று சேர்ந்து கெச்சிமலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இதை உருவாக்கினார்கள். காலஞ்சென்ற சேகு நாயகம் அல்ஹாஜ் முஹம்மத் ஹம்சா ஆலிம் பின் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் வசம் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பத்திரம் இருந்தது.
15ம் நூற்றாண்டில் கி. பி. 1474 அலெக்சாண்டிரியாவில் அமைக்கப்பட்ட சுல்தானுல் அஷரப் அல் கீதாயின் பள்ளிவாசலை கெச்சிமலை தர்காவின் கலை அமைப்பு பெரிதும் ஒத்தியிருக்கின்றது. எனினும், அதன் உருவ அலங்காரங்களும், அழகிய மாடங்களும், கோபுரங்களும் இங்கு இல்லை. மூன்று திசைகளினாலும் கடலினால் சூழப்பட்ட இயற்கைக் காட்சிகள் இதன் சிறப்பம்சமாகும். இதன் தலைவாயில், பக்கவாயில் கதவுகள் பெரிதும் தென்னிந்திய முறையில் அமைந்துள்ளன. இக் கட்டிடம் ஹிஜ்ரி 1327ம்ஆண்டு நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
புஹாரி - முஸ்லிம் மஜ்லிஸ்
அல் ஆலிம் அஷ்ஷெய்ஹு இஸ்மாயில் (றஹ்) ஹிஜ்ரி 1315ல் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது புதல்வர் அஷ்ஷெய்ஹு முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் மூலம் (1878- 1952) புனித புஹாரி முஸ்லிம் பராயன மஜ்லிஸ் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஹைதராபாத் நிஸாம் மன்னரின் அவையில் ஷெய்ஹாஹ் இருந்தவரே அஷ்ஷெய்யிது அஹம்மட் இப்னு அப்துல்லாஹ் பாபஹ்ஹி மெளலானா புஹாரி கரிந்தத்தை ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு இதனை ஓத உத்தரவளித்தார்கள். இதனுடன் முஸ்லிம், மஷ்ரவூர்ரவி ஹதீஸ் கிரந்தமும் ஓதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தவிர இந்தப் புனித மஜ்லிஸ் தினமும் அதிகாலை தஹஜ்ஜத் தொழுகையுடன் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த பல தசாப்தங்களாக இந்த மஜ்லிஸை அலவியா தரீக்காவின் ஆன்மீக தலைவர் மர்ஹும் சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் ஹம்சா ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வந்தார்கள். அதன் பின்னர் இன்று அவரது சகோதரர்கள் பக்கபலமாக நின்று இம் மஜ்லிசை சிறப்பாக முன்னெடுத்து சென்றுவருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் இம் மஜ்லிஸ் வருடம் தோறும் மிகச் சிறப்பாகவே நடைபெறுகிறது. பல்லாண்டு காலமாக நடைபெற்று வரும் இம் மஜ்லிஸ் சம்பிரதாய வழக்கு முறையின்றி சமூக விழிப்புணர்வையும் தூண்டுகிறது. மேலும் சமுதாய மறுமலர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த தர்காவின் சுற்று வட்டாரம் தற்போது மிக அழகான முறையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
சுனாமி கற்கோள் அனர்த்தம் பேரு வளை கடற்கரைப் பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய போதும் கூட மூன்று பக்கங்களாலும் கடலினால் சூழப்பட்டுள்ள இந்த தர்காவுக்கு எந்த வித சேதமும், பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க தாகும். அல்லாஹ்வின் மகத்துவம் இறங்கும் இந்த புனித தர்காவில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளமை மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மையாகும். இந்த தர்காவை தர்சிப்பதற்காக தினமும் பெரும் எண்ணிக்கையான உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
1951ம் ஆண்டு முதல் இன்று வரை தமாம் மஜ்லிஸ் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நேரடியாக அஞ்சல் செய்து வருகின்றது. 1951ம் ஆண்டு தற்போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகப் பணி புரியும் தர்காநகர் இஷாஅதுல் இஸ்லாம் அனாதை இல்ல தலைவர், சிa லங்கா சிஹாமணி எம். இசட் எம். பதியுத்தீன் ஜே. பி. வானொலியில் நேரடி அஞ்சலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் காட்டிய ஆர்வத்தை இங்கு நன்றி உணர்வோடு நினைவு கூற வேண்டும்.
ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களது ஒரு நாள் உபதேசம் தலைசிறந்த அரபிக் கல்லூரி ஒன்றை இந்நாட்டில் உருவாக்கியது. கொடை வள்ளலான என். டீ. எச். அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள் இம் மஜ்லிசில் கேட்ட உபதேசத்தால் மஹரகமையில் கபூரியா அரபுக் கல்லூரியை நிர்மாணித்தார்கள்.
கச்சிமலை புஹாரி மஜ்லிஸின் விளைவால் பிற்காலத்தில் இரண்டு புஹாரி மஜ்லிஸ்கள் தோற்றம் பெற்றன. மூதூர், கிண்ணியா, புஹாரி மஜ்லிஸ் மற்றது தென்னிந்தியா காயல் பட்டணம் புஹாரி மஜ்லிஸ் ஆகியனவே அவையாகும்.
இஷாஅதுல் இஸ்லாம்
அநாதை இல்லம்
1974ஆம் ஆண்டு ஷெய்ஹுநாயகம் மர்ஹ¥ம் ஹம்ஸா ஆலிம் அவர்கள் களுத்துறை மாவட்ட கல்விமான்கள், கொடை வள்ளல்கள், அறிஞர்கள், உலமாக்கள் சிந்தனையாளர்கள் அனு சரணையுடன் தர்காவில் இஷாஅதுல் இஸ்லாம் என்ற பெயரில் ஓர் அநாதை இல்லத்தை உருவாக்கினார். இன்று இந்த நிலையம் மிக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கைத்தொழில், தொழில்நுட்ப, ஆன்மீக, உலக கல்வியும் அனாதைச் சிறார்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் 1989ம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அல் குல்லியதுல் அஷ்ர பிய்யா அரபிக் கலாபீடம் ஆரம்பிக் கப்பட்டதுடன் களுத்துறை மினஹதுல் ஹசனியா அரபிக் கல்லூரியும் ஆரம் பிக்கப்பட்டது. இந்தஇரு கல்லூரியி லிருந்தும் பல உலமாக்கள் உருவாகி வெளியாகியுள்ளனர். பலர் வெளி நாடுகளில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் பெற்று சென்றுள்ளனர். அஷ்ரபியா அரபிக் கல்லூரி, கெச்சிமலை தர்கா வளவில் இஸ்லாமிய கலை வனப்புடன் கம்பீரமாக காட்சியளிக் கிறது. கெச்சிமலை புஹாரி முஸ்லிம் மஜ்லிஸின் விளைவாக வியாபித்த சேவைகள் அனந்தம், கடந்த மார்ச் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மஜ்லிஸ் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் தமாம் செய்யப்படுகிறது. 20ம் திகதி இரவு ராத்தீப், தர்காவில் அடங்கப்பட்டுள்ள சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹு அஷ்ரப் வலியுல்லாஹ்வின் ஸியாரத் நிகழ்ச்சியும், அதிகாலை அல்குர்ஆன் தமாம் நிகழ்சியும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும்.
தமாம் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வழமைபோல் நேரடியாக அஞ்சல் செய்யவுள்ளது.
Thursday, 26 December 2024
உமரை மனக்க மாட்டேன்
<><><><><><><><><><><><><><><><><>
அபூபக்ர் சித்தீக்(ரழி) அவர்களின் மகள் உம்மு குல்சூம்(ரழி)வை திருமணம் செய்திட விரும்பினார்கள் உமர்(ரழி) அவர்கள். அது உமர்(ரழி)யவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரம்.
உம்மு குல்சூம்(ரழி)வின் சகோதரியான அன்னை ஆயிஷா(ரழி)விடம் செய்தி அனுப்பினார்கள் உமர்(ரழி). அச்செய்தியை அகமகிழ்ந்து வரவேற்றார் அன்னை ஆயிஷா(ரழி).
இந்த அருள் மணக்கும் தகவலோடு தன் சகோதரிக்கு வாழ்த்துக்கூறிட அன்னை ஆயிஷா(ரழி) விரைந்தார்கள்.
தகவலைக் கேட்ட உம்மு குல்சூம்(ரழி) சொன்ன பதிலைக் கேட்டு ஆயிஷா(ரழி) அதிர்ந்தார்கள்.
“உமர்(ரழி)வைக் கணவராகப் பெற்று நான் என்ன செய்வது?! அவர் கடின வாழ்க்கை வாழ்பவர், கடும் ரோஷக்காரர். குடிமக்களின் நலன் குறித்த சிந்தனையே அவர் தலை முழுக்க நிறைந்திருக்கும். நானோ ஓர் இளம்பெண். இறைவனை வழிபட்டுக் கொண்டே.. என்மீது அன்பைப் பொழியும் ஒருவரே எனக்கு வேண்டும்.” என்றார் உம்மு குல்சூம்(ரழி).
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் தன் சகோதரியின் கருத்தை ஏற்க இயலவில்லை. சொன்னார்கள்: “என்னரும் தங்கையே… என்ன சொல்கிறாய்! கலீஃபா உமர்(ரழி)யல்லவா உன்னை திருமணம் செய்திட விரும்புகிறார்!?” என்று.
இதைக்கேட்டு சினத்தோடு சொன்னார் உம்மு குல்சூம்(ரழி): “இத்தோடு நீங்கள் என்னை விடவிடுங்கள். இல்லையானால் (திரும்பத் திரும்ப வலியுறுத்தினால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தின் முன்னே சென்று நின்று ‘உமர்(ரழி)வைத் திருமணம் செய்திட நான் விரும்பவில்லை’ என்று ஓங்கிச் சொல்வேன்”என்று.
தன் தங்கையின் மன உறுதி கண்டு அன்னை ஆயிஷா(ரழி) குழப்பமடைந்தார்.
அம்ரு பின் ஆஸ்(ரழி)விடம் சென்று விஷயத்தை எடுத்துரைத்து, தனது குழப்பத்தைக் கூறி, முடிவெடுக்க உதவும் படி கேட்டுக்கொண்டார்.
சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அம்ரு பின் ஆஸ்(ரழி) அவர்கள் உமர்(ரழி)விடம் சென்று “நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
மனமகிழ்வோடு “ஆம்” என்றார்கள் உமர்(ரழி). “யார் மணப்பெண்?” என்று அம்ரு பின் ஆஸ்(ரழி) கேட்க, “அபூபக்ர்(ரழி)வின் மகள் உம்மு குல்சூம் தான்” என்று உமர்(ரழி) பதிலளித்தார்கள்.
அதற்கு, “சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சின்னப்பெண்ணின் தந்தை அபூபக்ர்(ரழி) மரணமடைந்தார்கள். தன் தந்தையின் இழப்பை எண்ணி இரவு பகலாக அழுது கொண்டிருக்கும் அப்பெண்ணை திருமணம் செய்வதால் உங்களுக்கென்ன பலன்!?” என்று கேட்டார்கள் அம்ரு பின் ஆஸ்(ரழி).
இதைக்கேட்ட உமர்(ரழி) பொருள் பொதிந்த பார்வை ஒன்றை அம்ரு பின் ஆஸ்(ரழி) மீது பதித்த படியே கேட்டார்கள்: “ஆயிஷா(ரழி) உன்னிடம் சொன்னார்களா?” என்று. “ஆம்” என்றார்கள் அம்ரு பின் ஆஸ்(ரழி).
உமர்(ரழி)யவர்கள் ‘என்ன நடந்திருக்கும்’ என்று புரிந்து கொண்டார்கள். பிறகு “அப்படியானால் வேண்டாம்” என்று தலையசைத்து காட்டினார்கள்.
நூல்:- இமாம் இப்னு கதீர் எழுதிய “அல்பிதாயா வன்நிஹாயா” #உமர் #திருமணம் #நபியின்_அடக்கத்தலம்
தமிழில்: இல்யாஸ் ரியாஜி.
لما اراد امير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه الزواج من أم كلثوم بنت أبي بكر الصديق رضي الله عنها وكان حينئذ أمير المؤمنين
... فبعث إلى أختها أم المؤمنين
عائشة رضي الله عنها ... فرحبت بذلك السيدة عائشة رضي الله عنها وسعدت بهذا الخبر
... فأسرعت إلى أختها تبشرها بالنبأ السعيد
ففوجئت بأم كلثوم رضي الله عنها تقول لها : وما أفعل بعمر بن الخطاب رضي الله عنه ؟!!! ذلك رجل خشن العيش شديد الغيرة لا يملأ رأسه إلا الرعية ... وأنا شابة أريد من يصب علي الحب صباً ويكون عابداً الله فاستنكرت عليها ذلك السيدة عائشة رضي الله عنها ...... قائلة : يا أختاه إنه عمر بن الخطاب رضي الله عنه أمير المؤمنين
فغضبت أم كلثوم وقالت
: والله إن لم تتركيني لأصرخن أمام قبر رسول
الله أني لا أريد عمر بن الخطاب . فحارت السيدة عائشة رضي الله عنها في أمرها .. فذهبت تستنجد بعمرو بن العاص رضي الله عنه تخبره
أنها حائرة في أمرها ... فذهب عمرو بن العاص إلى عمر بن الخطاب رضي الله عنه وقال له : ألا تتزوج ؟
فقال عمر بسعادة : بلى فسأله عمرو بن العاص
رضي الله عنه : ممن ؟
فرد عليه : أم كلثوم بنت أبي بكر الصديق
رضي الله عنهما ... !!
فرد عليه عمرو بن العاص : ومالك وتلك الجارية مات أبوها منذ شهور. فتبكي لك بالليل والنهار تنعي أباها
فنظر إليه عمر بن الخطاب رضي الله عنه نظرة ذات مغزى سائلاً إياه : أو حدثتك عائشة رضي الله عنها ؟
فرد عمرو بن العاص رضي الله عنه : نعم ففهم عمر بن الخطاب رضي الله عنه ثم أوماً برأسه : إذن لا داعي لها.
📕: البداية والنهاية لإبن كثير
Tuesday, 24 December 2024
தைக்காக்கள் அல்லது தக்கியாக்கள்
(தைக்காக்கள்/தக்கியாக்களின் வரலாறு)
History of Thaikka or Thekkiyas
இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் தக்கியாக்கள் அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். பள்ளிவாசல்களைப் போன்று சிறு அளவில் இவை அமைக்கப்பட்டிருக்கும்.
புகாரித் தக்கியா, முஹியத்தீன் தக்கியா, சின்னத் தக்கிய்யா போன்ற பெயர்களில் எமது ஊர்களில் இவை காணப்படுகின்றன.
இவ்வாறான நிலையங்கள் அல்லது ஆன்மீகத்தளங்கள் துருக்கி மற்றும் பால்கன் நாடுகளில் "தெக்கே" tekke என்று அழைக்கப்பட்டன. தெக்ககே நிறுவனங்கள் ஆன்மீக, கலாசார, போராட்ட பயிற்றுவிப்பு நிலையங்களாகக் காணப்பட்டதாக ஹாவட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன்மேரி சீமெல் தனது Mystical dimensions of Islam என்ற புத்தகத்தில் கூறுகிறார்கள்.
தெக்ககே" tekkeஎன்ற சொல்லுக்கு ஒன்றுகூடும் இடம் இடம் அல்லது ஆன்மீக மாணவர்கள் தங்குமிடம் என்பது அர்த்தமாகும்.
காலப்போக்கில் இவற்றை நிறுவனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அவை ஒரு செய்ஹ் அல்லது தனிபர்களின் சொந்த இடமாக அல்லது வீடாக இன்றி அனைவரும் பயன்படுத்தக்கூடிய மத்திய நிலையங்களாக மாறியிருந்தன.
இவ்வாறான நிலையங்கள் கிழக்கில் "கான்காஹ்" என்று அழைக்கப்பட்டன. மத்திய கால எகிப்திலும் கான்காஹ் நிலையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.
தெக்ககே" tekke என்ற சொல்லின் பரிணாமமே "தைக்காக்கள்" அல்லது "தக்கியாக்கள்" என்பதாகும். தமிழ் நாட்டில் "தைக்காக்கள்" என்றும் இலங்கையில் "தக்கியாக்கள்" என்றும் இது அழைக்கப்டுகின்றது.
" தெக்ககே" / "tekke" அல்லது தைக்காக்களில் திக்ர் நிகழ்ச்சிகள் நாளாந்தம் இடம்பெற்றன. காலானித்துவாதிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு போராடங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றிய திட்டங்கள் இங்கு வரையப்பட்டன.
பிரதன பள்ளிவாசல்களுக்கு அருகில் தெக்ககே" tekke அல்லது தக்கியாக்கள் நிறுவப்பட்டன. அங்கு பயிற்றப்பட்ட மாணவர்கள் அல்லது முரீத்தகள் சகல துறைகளிலும் திறமையுடையவர்களாக இருந்தார்கள். இதனால் தான் துருக்கி பால்கன் உட்பட ஐரோப்பிவிலும் இலங்கை தமிழ்நாடு போன்ற இடங்களில் உள்ள
"தெக்ககே" tekke அல்லது "தைக்கா" அல்லது "தக்கியாக்களில்" சிறந்த கட்டநிர்மாணக்கலையின் சிறப்பியல்புகளை அவதானிக்க முடியும். தைக்காக்களில் பயிற்றப்பட்டோரிடம் கூடுதல் கலை இயல்புகள் காணப்பட்டன.
அடிக்கடி அல்குர்ஆனை ஒதுதல், கஸீதாக்களைப் பாடுதல், ஹழராக்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளினால் அழகிய குரல் வளமும், தனித்துவ மொழிநடையும், கவித்துவமும் அவர்களுக்கு மத்தியில் சாதாரணமாகக் காணப்பட்டன.
தெக்கே" tekke அல்லது தைக்காக்களில் சமயலறைகள் (kitchens) காணப்படுகின்றன. இவை "குசினி" என்று அழைக்கப்படுவது வழமை. தெக்கேக்களில் ஆன்மீக மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்குப் பின் அதில் பங்கறே்றவர்களுக்கு உணவு வழங்கவும், அங்கு தங்கியிருப்பவர்களுக்கும், தெக்கேக்களுக்கு வரும் அதிதிகளுக்கு உணவு சமைப்பதற்காகவும் தைக்காக்களில் சமலறைகள் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறான தெக்கே அல்லது தைக்காக்கள் எகிப்தில் "கான்காஹ்" என்று அழைக்கப்பட்டன.
சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி (றஹ்) அவர்கள் "கான்காஹ் ஸஈத் அஷ் ஷுஹதா" என்ற கான்காஹ்வை (தைக்காவை) கி.பி 1173ல் நிறுவினார்.
சுல்தான் சலாஹுத்தீன் (றஹ்) அங்கிருந்தவர்களுக்கு மானிய அடிப்படையில் ரொட்டி, இறைச்சி என்பனவற்றை வழங்கி வந்தார். ஈதுல் பித்ர் ஈதுல் அழ்ஹா போன்ற பெருநாட்களில் அங்கிருந்த 300 பேருக்கு புத்தாடைகளை வழங்கிவந்தார். தேவையான போது நிதி ரீதியான உதவிகளையும் வழங்கினார்.
சுல்தான் சலாஹுத்தீன் ஐயூபி (றஹ்) அவர்கள் "கான்காஹ் ஸஈத் அஷ் ஷுஹதாவுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
தெக்கே" tekke அல்லது தைக்காக்கள் கூடுதலாக காதிரிய்யா ஆன்மீக உள்ளீர்க்கப்பட்டுள்ளது. ஸாவியாக்கள் மற்றும ரிபாத்கள் ஷாதுலிய்யா அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட மத்திய நிலையங்களாகும்.
படம் : துருக்கியில் பொஸ்னியா ஆகியே இடங்களில் உள்ள தெக்கேக்கள்; திக்ர் மஜ்லிசும், கொழும்பு புகாரித் தைக்காவும்.
தொகுப்பு
பஸ்ஹான் நவாஸ் Fazhan Nawas
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
Monday, 23 December 2024
முஹியித்தீன் பள்ளிவாசல்கள்...!!!*
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன.
குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை.
(இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்)
சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹ்) அவர்கள் மகத்தான சேவைகளை நிறைவேற்றினார்கள். அவர்கள் இலங்கையில் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள் அடங்கலாக 350 சமய நிறுவனங்களை நிறுவினார்கள்.
முஹியித்தீன் பள்ளிவாசல் என்ற Concept ஐ உருவாக்கியவர் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள். இலங்கையில் மிக உயரமான இடத்திலும், இலங்கயில் மிகவும் தாழ்வான பகுதியிலும் உள்ள முஹியத்தின் பள்ளிவால்களையும் அவர்களே நிர்மாணித்தார்கள்.
முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூ அவர்களின் பணிகளை நினைவுகூறும் வகையிலயே "முஹியித்தின்" பள்ளிவால்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை " முஹியத்தீன்" பள்ளிவாசல்களே ஒரு ஊரின்
"தாய் பள்ளியாக" அல்லது " பெரிய பள்ளியாக" கருதப்பட்டன. பல ஊர்களின் முஹியத்தின் பள்ளியிலேயே வெள்ளிக்கிழமை ஜூம்ஆவும் நடத்தப்பட்டது. ஊருடன் தொடர்புபட்ட பிரதான தீர்மானங்களை எடுக்கும் தளமாகவும், வருடாந்த கந்தூரிகள் போன்ற, ஒன்று கூடும் தீர்மானம் மிக்க இடமாகவும் முஹியித்தின் பள்ளிவால்கள் அதன் பணியை நிறைவேற்றி வந்துள்ளது.
பொதுவாக இலங்கையில் உள்ள பெரும்பாலான பெரிய பள்ளிவாசல்கள் Grand Mosques முஹியித்தீன் பள்ளிவாசல்களாகும். சில இடங்களில் சில வெறியர்கள் முஹியத்தீன் என்ற பெயர் சிர்க என்று கூறி அதனை சில முதலாளிகளின் குடும்பத்தவர்களின் பெயர்களால் பிரதியீடு செய்திருக்கிறார்கள். (ஊரான் கோழிய அறுத்து வாப்பாட பெயர்ல கத்தம் ஒதியதைப் போல) முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைமுறை வரலாற்றுக்கான சான்றுகளாகும். அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்போம்.
படத்தில் கடைசியாக உள்ள காலி தலாப்பிட்டிய முஹியத்தீன் பள்ளிவாசல் ஆயிரம் வருடங்களை தாண்டியதாகும். இது உமையாக்களிடமிருந்து அப்பாஸியர்களுக்கு ஆட்சிமாறும் Transitional period பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
ஆயிரம் வருடங்கள் தாண்டிய பெரும்பாலான பள்ளிவாசல்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இவ்வாறான பள்ளிவாசல்களுக்குப் பதிலாக களினி கங்கை, அத்தனகல்ல ஒய என்பவற்றக்கு அருகில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டு அவ்வாறான இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெற்றன. கொழும்பு, கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் இதற்கான தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன.
இமாமுல் அக்பர் குத்புல் அக்தாப் செய்யிதினா முஹியத்தீன் அப்துல் காதிருல் ஜீலானி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களில் காதிரியா ஆன்மீக வழியமைப்பும் இமாம் ஷாபிஈ றஹிமஹூல்லாஹ் அவர்களின் மத்ஹபும் எமது இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வழிகளாக இருந்தன என்பதறாகு இந்தப் பள்ளிவாசல்களே மிகச் சிறந்த சான்றுகளாகும்
மத்ஹபுகள் தரீக்காக்கள் மிம்பர்கள், மினாராக்கள், ஹவ்ழ்கள், கப்றுஸ்தானங்கள், அஸா என்பனவும் எமது அடையாளங்களே
படத்தில் உள்ள பள்ளிவாசல்கள் ஆயிரம் ஆண்டுகள் முதல் 200 வருடங்கள் பழமையான இலங்கையின் முஹியத்தீன் பள்ளிவாசல்களாகும்
பஸ்ஹான் நவாஸ்
Fazhan Nawas
அலி அஹ்மது ரஷாதிக்கு புத்தி இல்லை














