السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 26 December 2024

உமரை மனக்க மாட்டேன்

 



 
“உமர்(ரழி) எனக்கு கணவரா? வேண்டாம்!”

<><><><><><><><><><><><><><><><><>


அபூபக்ர் சித்தீக்(ரழி) அவர்களின் மகள் உம்மு குல்சூம்(ரழி)வை திருமணம் செய்திட விரும்பினார்கள் உமர்(ரழி) அவர்கள். அது உமர்(ரழி)யவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரம்.


உம்மு குல்சூம்(ரழி)வின் சகோதரியான அன்னை ஆயிஷா(ரழி)விடம் செய்தி அனுப்பினார்கள் உமர்(ரழி). அச்செய்தியை அகமகிழ்ந்து வரவேற்றார் அன்னை ஆயிஷா(ரழி).


இந்த அருள் மணக்கும் தகவலோடு தன் சகோதரிக்கு வாழ்த்துக்கூறிட அன்னை ஆயிஷா(ரழி) விரைந்தார்கள்.


தகவலைக் கேட்ட உம்மு குல்சூம்(ரழி) சொன்ன பதிலைக் கேட்டு ஆயிஷா(ரழி) அதிர்ந்தார்கள்.


“உமர்(ரழி)வைக் கணவராகப் பெற்று நான் என்ன செய்வது?! அவர் கடின வாழ்க்கை வாழ்பவர், கடும் ரோஷக்காரர். குடிமக்களின் நலன் குறித்த சிந்தனையே அவர் தலை முழுக்க நிறைந்திருக்கும். நானோ ஓர் இளம்பெண். இறைவனை வழிபட்டுக் கொண்டே.. என்மீது அன்பைப் பொழியும் ஒருவரே எனக்கு வேண்டும்.” என்றார் உம்மு குல்சூம்(ரழி). 


அன்னை ஆயிஷா(ரழி) அவர்களால் தன் சகோதரியின் கருத்தை ஏற்க இயலவில்லை. சொன்னார்கள்: “என்னரும் தங்கையே… என்ன சொல்கிறாய்! கலீஃபா உமர்(ரழி)யல்லவா உன்னை திருமணம் செய்திட விரும்புகிறார்!?” என்று.


இதைக்கேட்டு சினத்தோடு சொன்னார் உம்மு குல்சூம்(ரழி): “இத்தோடு நீங்கள் என்னை விடவிடுங்கள். இல்லையானால் (திரும்பத் திரும்ப வலியுறுத்தினால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தின் முன்னே சென்று நின்று ‘உமர்(ரழி)வைத் திருமணம் செய்திட நான் விரும்பவில்லை’ என்று ஓங்கிச் சொல்வேன்”என்று.


தன் தங்கையின் மன உறுதி கண்டு அன்னை ஆயிஷா(ரழி) குழப்பமடைந்தார். 


அம்ரு பின் ஆஸ்(ரழி)விடம் சென்று விஷயத்தை எடுத்துரைத்து, தனது குழப்பத்தைக் கூறி, முடிவெடுக்க உதவும் படி கேட்டுக்கொண்டார்.


சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அம்ரு பின் ஆஸ்(ரழி) அவர்கள் உமர்(ரழி)விடம் சென்று “நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.


மனமகிழ்வோடு “ஆம்” என்றார்கள் உமர்(ரழி). “யார் மணப்பெண்?” என்று அம்ரு பின் ஆஸ்(ரழி) கேட்க, “அபூபக்ர்(ரழி)வின் மகள் உம்மு குல்சூம் தான்” என்று உமர்(ரழி) பதிலளித்தார்கள்.


அதற்கு, “சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சின்னப்பெண்ணின் தந்தை அபூபக்ர்(ரழி) மரணமடைந்தார்கள். தன் தந்தையின் இழப்பை எண்ணி இரவு பகலாக அழுது கொண்டிருக்கும் அப்பெண்ணை திருமணம் செய்வதால் உங்களுக்கென்ன பலன்!?” என்று கேட்டார்கள் அம்ரு பின் ஆஸ்(ரழி).


இதைக்கேட்ட உமர்(ரழி) பொருள் பொதிந்த பார்வை ஒன்றை அம்ரு பின் ஆஸ்(ரழி) மீது பதித்த படியே கேட்டார்கள்: “ஆயிஷா(ரழி) உன்னிடம் சொன்னார்களா?” என்று. “ஆம்” என்றார்கள் அம்ரு பின் ஆஸ்(ரழி).


உமர்(ரழி)யவர்கள் ‘என்ன நடந்திருக்கும்’ என்று புரிந்து கொண்டார்கள். பிறகு “அப்படியானால் வேண்டாம்” என்று தலையசைத்து காட்டினார்கள்.


நூல்:- இமாம் இப்னு கதீர் எழுதிய “அல்பிதாயா வன்நிஹாயா” #உமர் #திருமணம் #நபியின்_அடக்கத்தலம் 


தமிழில்: இல்யாஸ் ரியாஜி.


لما اراد امير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه الزواج من أم كلثوم بنت أبي بكر الصديق رضي الله عنها وكان حينئذ أمير المؤمنين 


... فبعث إلى أختها أم المؤمنين  

عائشة رضي الله عنها ... فرحبت بذلك السيدة عائشة رضي الله عنها وسعدت بهذا الخبر


... فأسرعت إلى أختها تبشرها بالنبأ السعيد


ففوجئت بأم كلثوم رضي الله عنها تقول لها : وما أفعل بعمر بن الخطاب رضي الله عنه ؟!!! ذلك رجل خشن العيش شديد الغيرة لا يملأ رأسه إلا الرعية ... وأنا شابة أريد من يصب علي الحب صباً ويكون عابداً الله فاستنكرت عليها ذلك السيدة عائشة رضي الله عنها ...... قائلة : يا أختاه إنه عمر بن الخطاب رضي الله عنه أمير المؤمنين


فغضبت أم كلثوم وقالت 

: والله إن لم تتركيني لأصرخن أمام قبر رسول

الله أني لا أريد عمر بن الخطاب . فحارت السيدة عائشة رضي الله عنها في أمرها .. فذهبت تستنجد بعمرو بن العاص رضي الله عنه تخبره

أنها حائرة في أمرها ... فذهب عمرو بن العاص إلى عمر بن الخطاب رضي الله عنه وقال له : ألا تتزوج ؟


فقال عمر بسعادة : بلى فسأله عمرو بن العاص 

رضي الله عنه : ممن ؟


فرد عليه : أم كلثوم بنت أبي بكر الصديق 

رضي الله عنهما ... !!


فرد عليه عمرو بن العاص : ومالك وتلك الجارية مات أبوها منذ شهور. فتبكي لك بالليل والنهار تنعي أباها


فنظر إليه عمر بن الخطاب رضي الله عنه نظرة ذات مغزى سائلاً إياه : أو حدثتك عائشة رضي الله عنها ؟


فرد عمرو بن العاص رضي الله عنه : نعم ففهم عمر بن الخطاب رضي الله عنه ثم أوماً برأسه : إذن لا داعي لها.


📕: البداية والنهاية لإبن كثير