வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் வருடாந்த புனித ஸஹீஹ{ல் புஹாரி தமாம் மஜ் லிஸ்
![]() படம்: பேருவளை விசேட நிருபர் |
வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை கெச்சிமலை தர்காவில் நடைபெறும் புனித ஷஹீஹுல் புகாரி முஸ்லிம் தமாம் மஜ்லிஸ் நிபுணர் 2013-4-21 ஞாயிற்றுக்கிழமை காலை சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் காலிப் அலவி ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
இலங்கையில் வியாபார தொடர்பு கொண்டிருந்த அறாபிய நாட்டு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றம் சரித்திர பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை கடற்கரை பகுதியில் தான் இடம்பெற்றது என்பது பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்தாகும்.
கி. பி. 11ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தார்கள். இன்றும் பேருவளை கடற்பாங்காகவுள்ள "கெச்சிமலை பள்ளிவாசல்" இலங்கையில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாகவுள்ளது என்றும், பட்டுப்பாதையூடாகப் பிரயாணம் செய்த 'அம்கோவேல்ட்' நிறுவனத்தின் பிரபல பத்திரிகை நிருபர்களான டேவிட், ஆம்டிட் குழுவினரின் ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது.
சூபியாக்கள் பலரும் இலங்கை வருகை தந்து பாவா ஆதம் மலை என அழைக்கப்படும் (தினீaசீ's ஜிலீak) புனிதத்தல தரிசித்துச் சென்ற வரலாறு உள்ளது. இப்னு பதூதா போன்ற வரலாற்று வல்லுனர்கள் சிலர் கவழி வந்து தரிசித்து தங்களது வரலாற்று நூலில் குறித்துள்ளது வியக்கத்தக்கது. கெச்சிமலையில் வாழும் ஷெய்கு அஷ்ரப் வலியுல்லாஹ் அவர்கள் இதே நோக்கத்தோடு தான் கப்பல் மூலமாக இலங்கை வந்தார்கள். கடலின் ஆகோரமும் காற்றின் வேகமும் கப்பலை திசை திருப்பு மெச்சு புகழ் கெச்சிமலை அணித்தே பேருவளையில் இறங்கச் செய்தது. அல்லாஹ்வின் நாட்டம் இதுவாக இருக்கலாம் என உணர்ந்த அல்லாஹ்வின் அன்பர் அஷ்ரப் வலியுல்லாஹ் கெச்சிமலையில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். அங்கிருந்து இறை பணியைத் தொடர்ந்தார்கள். ஆத்மீக மலர்ச்சி கண்டார்கள்.
1882 ஜோர் அரசரின் கவர்னராக இலங்கையில் கடமையாற்றிய சேர் ஆர்தர் ஹென்றி கோர்டன் அவர்கள் காலி செல்வதற்காக, தன்னுடைய உத்தியோக பூர்வ கடமைக்காக செல்லும் வழியில் அவர் பிரயாணம் செய்த குதிரை வழி மாறி பேருவளை கஷ்டம்ஸ் பாதை வழியில் சென்று ஓர் இடத்தில் தரிவிர்த்து நின்றுவிட்டது. அங்கு இருந்து ஒரு பழைய புதை குழியின் அருகில் நின்று பணிந்து வணங்கியது. இந்த ஆச்சரியமான சம்பவம் கவர்ணரை சிந்திக்கச் செய்தது. குதிரை, அந்த இடத்தை விட்டும் அகல மறுத்தது. அங்குள்ள மக்களிடம் அவர் விசாரித்ததில் இந்த இடம் கெச்சிமலை என்றும், அடங்கப்பட்டிருக்கும் அற்புதமான வழியுல்லா பற்றியும் கூறப்பட்டது. உடனே கவர்னர் அவர்கள் தன்னுடைய காரியதரிசியிடம் ஜோர்ஜ் மன்னர் சார்பில் இந்த இடத்தை அன்பளிப்பாக அளிக்கும் படியும் உத்தரவிட்டார்கள். பின்னர் மக்கள் ஒன்று சேர்ந்து கெச்சிமலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இதை உருவாக்கினார்கள். காலஞ்சென்ற சேகு நாயகம் அல்ஹாஜ் முஹம்மத் ஹம்சா ஆலிம் பின் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் வசம் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பத்திரம் இருந்தது.
15ம் நூற்றாண்டில் கி. பி. 1474 அலெக்சாண்டிரியாவில் அமைக்கப்பட்ட சுல்தானுல் அஷரப் அல் கீதாயின் பள்ளிவாசலை கெச்சிமலை தர்காவின் கலை அமைப்பு பெரிதும் ஒத்தியிருக்கின்றது. எனினும், அதன் உருவ அலங்காரங்களும், அழகிய மாடங்களும், கோபுரங்களும் இங்கு இல்லை. மூன்று திசைகளினாலும் கடலினால் சூழப்பட்ட இயற்கைக் காட்சிகள் இதன் சிறப்பம்சமாகும். இதன் தலைவாயில், பக்கவாயில் கதவுகள் பெரிதும் தென்னிந்திய முறையில் அமைந்துள்ளன. இக் கட்டிடம் ஹிஜ்ரி 1327ம்ஆண்டு நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
புஹாரி - முஸ்லிம் மஜ்லிஸ்
அல் ஆலிம் அஷ்ஷெய்ஹு இஸ்மாயில் (றஹ்) ஹிஜ்ரி 1315ல் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது புதல்வர் அஷ்ஷெய்ஹு முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் மூலம் (1878- 1952) புனித புஹாரி முஸ்லிம் பராயன மஜ்லிஸ் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஹைதராபாத் நிஸாம் மன்னரின் அவையில் ஷெய்ஹாஹ் இருந்தவரே அஷ்ஷெய்யிது அஹம்மட் இப்னு அப்துல்லாஹ் பாபஹ்ஹி மெளலானா புஹாரி கரிந்தத்தை ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு இதனை ஓத உத்தரவளித்தார்கள். இதனுடன் முஸ்லிம், மஷ்ரவூர்ரவி ஹதீஸ் கிரந்தமும் ஓதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தவிர இந்தப் புனித மஜ்லிஸ் தினமும் அதிகாலை தஹஜ்ஜத் தொழுகையுடன் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த பல தசாப்தங்களாக இந்த மஜ்லிஸை அலவியா தரீக்காவின் ஆன்மீக தலைவர் மர்ஹும் சங்கைக்குரிய அஷ்ஷேஹ் முஹம்மத் ஹம்சா ஆலிம் பின் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வந்தார்கள். அதன் பின்னர் இன்று அவரது சகோதரர்கள் பக்கபலமாக நின்று இம் மஜ்லிசை சிறப்பாக முன்னெடுத்து சென்றுவருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் இம் மஜ்லிஸ் வருடம் தோறும் மிகச் சிறப்பாகவே நடைபெறுகிறது. பல்லாண்டு காலமாக நடைபெற்று வரும் இம் மஜ்லிஸ் சம்பிரதாய வழக்கு முறையின்றி சமூக விழிப்புணர்வையும் தூண்டுகிறது. மேலும் சமுதாய மறுமலர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த தர்காவின் சுற்று வட்டாரம் தற்போது மிக அழகான முறையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
சுனாமி கற்கோள் அனர்த்தம் பேரு வளை கடற்கரைப் பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய போதும் கூட மூன்று பக்கங்களாலும் கடலினால் சூழப்பட்டுள்ள இந்த தர்காவுக்கு எந்த வித சேதமும், பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க தாகும். அல்லாஹ்வின் மகத்துவம் இறங்கும் இந்த புனித தர்காவில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளமை மறைக்க முடியாத மறுக்க முடியாத உண்மையாகும். இந்த தர்காவை தர்சிப்பதற்காக தினமும் பெரும் எண்ணிக்கையான உள்நாட்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
1951ம் ஆண்டு முதல் இன்று வரை தமாம் மஜ்லிஸ் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நேரடியாக அஞ்சல் செய்து வருகின்றது. 1951ம் ஆண்டு தற்போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகப் பணி புரியும் தர்காநகர் இஷாஅதுல் இஸ்லாம் அனாதை இல்ல தலைவர், சிa லங்கா சிஹாமணி எம். இசட் எம். பதியுத்தீன் ஜே. பி. வானொலியில் நேரடி அஞ்சலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் காட்டிய ஆர்வத்தை இங்கு நன்றி உணர்வோடு நினைவு கூற வேண்டும்.
ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களது ஒரு நாள் உபதேசம் தலைசிறந்த அரபிக் கல்லூரி ஒன்றை இந்நாட்டில் உருவாக்கியது. கொடை வள்ளலான என். டீ. எச். அப்துல் கபூர் ஹாஜியார் அவர்கள் இம் மஜ்லிசில் கேட்ட உபதேசத்தால் மஹரகமையில் கபூரியா அரபுக் கல்லூரியை நிர்மாணித்தார்கள்.
கச்சிமலை புஹாரி மஜ்லிஸின் விளைவால் பிற்காலத்தில் இரண்டு புஹாரி மஜ்லிஸ்கள் தோற்றம் பெற்றன. மூதூர், கிண்ணியா, புஹாரி மஜ்லிஸ் மற்றது தென்னிந்தியா காயல் பட்டணம் புஹாரி மஜ்லிஸ் ஆகியனவே அவையாகும்.
இஷாஅதுல் இஸ்லாம்
அநாதை இல்லம்
1974ஆம் ஆண்டு ஷெய்ஹுநாயகம் மர்ஹ¥ம் ஹம்ஸா ஆலிம் அவர்கள் களுத்துறை மாவட்ட கல்விமான்கள், கொடை வள்ளல்கள், அறிஞர்கள், உலமாக்கள் சிந்தனையாளர்கள் அனு சரணையுடன் தர்காவில் இஷாஅதுல் இஸ்லாம் என்ற பெயரில் ஓர் அநாதை இல்லத்தை உருவாக்கினார். இன்று இந்த நிலையம் மிக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கைத்தொழில், தொழில்நுட்ப, ஆன்மீக, உலக கல்வியும் அனாதைச் சிறார்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் 1989ம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அல் குல்லியதுல் அஷ்ர பிய்யா அரபிக் கலாபீடம் ஆரம்பிக் கப்பட்டதுடன் களுத்துறை மினஹதுல் ஹசனியா அரபிக் கல்லூரியும் ஆரம் பிக்கப்பட்டது. இந்தஇரு கல்லூரியி லிருந்தும் பல உலமாக்கள் உருவாகி வெளியாகியுள்ளனர். பலர் வெளி நாடுகளில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் பெற்று சென்றுள்ளனர். அஷ்ரபியா அரபிக் கல்லூரி, கெச்சிமலை தர்கா வளவில் இஸ்லாமிய கலை வனப்புடன் கம்பீரமாக காட்சியளிக் கிறது. கெச்சிமலை புஹாரி முஸ்லிம் மஜ்லிஸின் விளைவாக வியாபித்த சேவைகள் அனந்தம், கடந்த மார்ச் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மஜ்லிஸ் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் தமாம் செய்யப்படுகிறது. 20ம் திகதி இரவு ராத்தீப், தர்காவில் அடங்கப்பட்டுள்ள சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹு அஷ்ரப் வலியுல்லாஹ்வின் ஸியாரத் நிகழ்ச்சியும், அதிகாலை அல்குர்ஆன் தமாம் நிகழ்சியும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும்.
தமாம் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வழமைபோல் நேரடியாக அஞ்சல் செய்யவுள்ளது.