السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 26 August 2015

வஹாபிகள் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

வஹாபிகள் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.
.
நபிகள் நாயகத்தின் குடும்பத்திற்கும் அன்னவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்திற்கும் முற்றிலும் எதிரானவர்கள் இந்த வஹாபிகள்.
ரத்தின சுருக்கமாக சொல்கிறேன்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வபாத்திற்கு பின் கலீபாக்கள் ஆட்சியின் போது அடுத்த கலீபா யார்? என்ற தேர்வில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் குடும்பத்தில் மட்டும்தான் கலீபா தேர்வு செய்யனுமா என்று ஒரு சிலர் பிளவு பட்டனர். இதுதான் இஸ்லாத்தின் முதல் பிளவு.
.
காலத்தால் இவர்களே ஆட்சிக்கு வந்து இவர்களுடைய கொள்கைக்கு மாற்றமான பெரிய மஹான்களை, ஸுபியாக்களை ஷெய்குமார்களை எல்லாம் கொன்று குவித்தார்கள்.
.
இந்த வஹாபிகளின் கொள்கை என்ன?
.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாம் என்ற நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. ஒன்று (நுபுவத்) நபித்துவம் மற்றது (விலாயத்) வலித்துவம்.
.
நுபுவத் – சன்மார்க்கம், விலாயத் – ஞான மார்க்கம் இந்த இரண்டு பக்கங்களும் சரியா இருந்தால் தான் இஸ்லாம் என்ற நாணயம் செல்லுபடியாகும். இந்த இரண்டையும் ஏற்று ஈமான் கொண்டவர்களே முழுமையான முஸ்லிம்கள்.
.
இந்த வஹாபிகளோ நுபுவத்தை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள் விலாயத்தை மறுத்து விடுவார்கள். நுபுவத் உடல் என்றால் விலாயத் உயிர் ஆகும்.
.
இந்த கொள்கை உலகில் சவூதிஅரபியாவில் மட்டுமே உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இந்த வஹாபிக் கொள்கையை மற்ற முஸ்லிம் நாடுகளில் பரப்ப முயற்சித்தும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
.
அன்மையில் இந்த வஹாபி குழந்தையை பிழைப்பு நடத்த தமிழகத்திற்கு தத்தெடுத்து வந்து வளர்த்து வருகிறார்கள். அதுவும் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில்.
.
அன்றும் இஸ்லாத்தை பிளவுப்படுத்தினார்கள். இன்றும் அதே வேளையைத் தான் செய்கிறார்கள். இந்த வஹாபிகளின் வரலாற்றை முழுதும் தெரிந்தால் ஒரு முஸ்லீமும் இவர்கள் பின் செல்லமாட்டார்கள்.
.
முகநூல் நன்பர்களே இஸ்லாத்தை யாரும் வளர்கவேண்டிய அவசியம் இல்லை, நாம் முஸ்லீமாக வாழ்ந்தாலே போதும் இஸ்லாம் தன்னாலெயே வளரும்.
.
ஆனால் இந்த வஹாபிகளிடமிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நாம் அனைவரும்
தள்ளப்பட்டுள்ளோம் .
.
எனவே முடிந்த வரை இந்த தொகுப்பை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். இந்த வஹாபிகள் மார்க்கத்தில் குருடர்கள் இவர்கள் மற்றவர்களுக்கு எப்படி வழி காட்ட முடியும்?
.
இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக ஏற்று ஈமான் கொண்டவர்களே முஸ்லீம் என்பதற்கு அருகதை உடையவர்கள்.
அகநூலை முழுதும் திறக்க முகநூல் போதாது மடிக்கிறேன்.
.
ஆக்கம்: Azizmaraika Maraika