விவாகரத்து வழக்கு மனைவி மட்டும் தான் கணவனுக்கு எதிராக தாக்கல் செய்ய முடியும்...?
இந்த கேள்வி இலங்கையில் மிகவும் பொதுவாக மக்கள் மத்தியில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஒரு விஷயம். உண்மையான சட்ட நிலைமை என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்...!
சட்டத்தில் என்ன சொல்கிறது?
இலங்கையில் விவாகரத்தானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணச் சட்டங்கள் மற்றும் அதன் பிந்தைய திருத்தங்களின் கீழ் செயல்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ், விவாகரத்து மனுவை தாக்கல் செய்யும் உரிமை (கணவன் மற்றும் மனைவி) BOTH HUSBAND AND WIFE — இருவருக்கும் சமமாக உள்ளது.
அதாவது மனைவி, கணவன் இருவரில் எவரும் ஒருவருக்கெதிராக ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
இது மிகவும் தெளிவாகச் சொல்கிறது – திருமணத்தில் இருக்கும் எந்தக் காவுக்கும் (கணவன் அல்லது மனைவி) விவாகரத்து மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது.
விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யக்கூடிய சட்ட காரணங்கள்
இலங்கை சட்டத்தின்படி முக்கிய காரணங்கள்:
1. Adultery – சோரம்போதல்
2. Malicious Desertion – விட்டு விலகிப் பிரிந்து செல்லல்
3. Incurable Impotency at the time of marriage – திருமணத்தின் போது இருந்த சிகிச்சையளிக்க இயலாத பாலியல் தொடர்பான குறைபாடு.
4. Constructive Malicious Desertion – மனரீதியாக கைவிடுதல் / குடும்ப பொறுப்பை நிராகரித்தல்
"மனைவி மட்டும் தான் விவாகரத்து கேட்க முடியும்" என்பது ஏன் தவறான நம்பிக்கை?
இது சமூகத்தில் பரவியுள்ள தவறான தகவல் மட்டுமே. சட்ட ரீதியில் பார்த்தால்: 1. கணவன் கூட விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய முடியும்
2. இருவரும் நீதிமன்றத்தில் சம உரிமை பெற்றவர்கள்
வழக்கு உதாரணம் (Case Law)
K. v. K (Sri Lanka Law Reports) — இந்த வழக்கில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய உரிமை இருவருக்கும் சமமாக உள்ளது என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
விவாகரத்து என்பது ஒருவரின் உரிமை – பாலினம் பார்க்காது சட்டம் நடக்கும்.
"விவாகரத்து வழக்கு மனைவிக்கு மட்டுமே உரிமை" என்பது சட்டத்திற்கு எதிரான தவறான நம்பிக்கை!
இந்த பதிவை நீதியைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்று நினைத்தால்
👉 Share செய்யுங்கள்
👉 Comment செய்யுங்கள்
👉 சட்ட அறிவை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்குங்கள்
இதே மாதிரி மற்ற சட்ட விளக்கங்களும் வேண்டும் என்றால் கீழே "LAW" என்று Comment செய்யுங்கள்.
நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்
(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல)