السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 22 November 2024

கண்ணியம், கௌரவம் வழங்குவதில் சஹாபாக்களின் நடைமுறை

 

கண்ணியம், கௌரவம் வழங்குவதில் சஹாபாக்களின் நடைமுறை

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி

     தமிழில் : தொடர் : [6]

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு   

  ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 

==================

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு கண்ணியம், கௌரவம்; மகத்துவம் வழங்குவதில் ஸஹாபாக்களின் வழக்கத்தை விளக்கும் ஹதீஸ்கள் அடியில் வருகின்றன,


ஹளறத் அம்றுப்னு ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை மிகைத்த ஒரு நேசர் எனக்கு எவருமே இல்லை, அன்னாரை விட மகத்தான ஒருவர் என் கண்ணில் படவுமில்லை; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மாட்சிமையின் காரணத்தால், நிறைந்த கண்ணால் அன்னாரை என்னால் பார்க்க முடியவில்லை; அன்னாரை வர்ணித்துக் கூறுமாறு எவராவது என்னிடத்தில் வேண்டிக் கொண்டால், அது என்னால் முடியாது! ஏனெனில், அன்னாரை நான் கண்ணிறையப் பார்க்கவில்லை என்று கூறினார்கள்.


ஸஹி முஸ்லிம் கிதாபுல் ஈமான் பாகம் 1 பக் 112


ஹளறத் அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்,


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (வீட்டிலிருந்து) ஸஹாபாக்களில் முஹாஜிர்கள், அன்சாரிகள் இருக்கும் சபைக்குள் வந்தார்கள்; அச்சபையில் ஹளரத் அபூபக்கர், ஹளறத் உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களும் கூடவே இருந்தார்கள்; இவ்விருவரையும் தவிர்த்து வேறு எவரும் கண்ணியத்தின் காரணமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்விருவரையும் பார்த்தார்கள்; இருவரும் பரஸ்பரம் முறுவலித்துக் கொண்டார்கள்.


சுனன் திர்மிதி கிதாபுல் மனாகிப் பாகம் 5 பக்கம் 273


ஹளறத் உஸாமா பின் ஷரீக் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,


நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் வந்தேன், அன்னாரைச் சூழ ஸஹாபாக்கள் இருந்தார்கள்; அவர்கள் தலைக்கு மேல் பறவைகள் இருப்பது போன்று இருந்தது,.


சுனன் அபூதாவூத் கிதாபுத் திப்பு பாகம் -4 பக்கம் -192 ,193.


இன்னும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பண்பின் விடயத்தில் பின்வரும் ஹதீதும் இடம் பெறுகின்றது, 


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால், ஸஹாபாக்கள் தங்களின் தலையை கவிழ்த்திருப்பார்கள்; அவர்களின் தலைக்கு மேல் பறவைகள் இருப்பது போன்றிருக்கும்.


ஹளறத் உர்வத் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,


நான் (ஹுதைபியா உடன்படிக்கையின் போது) குறைஷிகளின் தலைப்பிலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது, ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அதி உச்ச மரியாதை செய்வதை ப்பார்த்தேன், அன்னார் வுழுச் செய்தால், எஞ்சிய நீரைப் பெற்றுக் கொள்வதற்காக விரைகின்றார்கள்; வுழுச் செய்து எஞ்சிய நீரை அல்லது உறுப்புக்களிலிருந்து கொட்டுகின்ற சொட்டு நீரைப் பெற்றுக் கொள்வதற்கு சண்டை போடக்கூடிய அளவு நெருக்கமாகின்றனர்; அன்னார் உமிழ்ந்தால், அல்லது, மூக்குச்சீறினால், விரைவாக அதை கையில் தாங்கி தங்களின் முகத்திலும், உடலிலும் தேய்த்துக் கொள்கிறார்கள்; அன்னாரின் திருமேனியிலிருந்து ஏதும் ஒரு முடி உதிர்ந்தால், விரைந்து சென்று அதை பெற்றுக் கொள்கின்றார்கள்; ஏதும் ஒரு கட்டளையிட்டால், விரைந்து அதை செயல்படுத்துகின்றார்கள்; பேசும்போது அன்னார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் தங்களின் சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றார்கள்; மரியாதையின் நிமித்தம் அன்னாரின் திருமுகத்தை உற்று நோக்காதிருக்கின்றனர்; 


குறைஷிகள் பக்கம் இவர் திரும்பிச் சென்ற போது குறைஷிகளே! நான் பாரசீக மன்னன் கிஸ்ராவிடம் சென்று இருக்கிறேன், இன்னும், நான் ரோம் நாட்டு அரசர் கைசரிடமும் சென்றிருக்கிறேன்; இன்னும், அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷியிடமும் சென்றிருக்கின்றேன்; இறைவன் மீது ஆணையாக! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அவருக்குச் செய்யும் கண்ணியத்தை ஒத்த கண்ணியத்தை எந்த ஒரு அரசவையிலும் நான் கண்டதில்லை; அவரை ஒருபோதும் கைவிடாத; துரோகமிளைக்காத சமுகத்தையே திட்டமாக நான் கண்டேன் என்று கூறினார்.


ஸஹீஹுல் புகாரி : கிதாபுஸ்ஸுறூத் பாகம் 3 பக்கம் 171 


ஹளறத் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,


(ஹஜ்காலத்தில் மினாவில்) ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முடி மழிக்கப்படும் போது ஸஹாபாக்கள் அங்குமிங்கும் வட்டமிட்டு கொண்டிருப்பதை கண்டேன், ஒவ்வொருவரும் நபிகளாரின் திருமுடி பூமியில் விழாது எவராவது ஒருவரின் கரத்தில் விழவேண்டும் என்று நாடினார்கள்;  


ஸஹி முஸ்லிம்: கிதாபுல்

 பழாயில் பாகம் 3 பக்கம் 1812 


இத்தொடரில் இப்படியும் ஒரு நிகழ்வு இருக்கிறது,


ஹளறத் உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவை ஹுதைபியாக் காலத்தில் மக்காவுக்கு அனுப்பிய போது, ஹளறத் உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவை தவாபு செய்வதற்கு குறைஷிகள் அனுமதித்தார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவாபு செய்யும் வரை நான் ஒருபோதும் தவாஃப் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள்.


தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 4 பக்கம் 135 


ஹளறத் தல்ஹா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது,


   ஸஹாபாக்களில் அறிவு குறைந்த ஓர் அஃராபியிடம் இந்த ஆண்களில் தங்களுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டவர்கள் யார்? என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்குமாறு கூறினார்கள், ஏனெனில், ஸஹாபாக்கள் உச்ச மரியாதையின் காரணமாக அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேள்வி கேட்க அஞ்சிக் கொண்டிருந்தார்கள்; அந்த அஃராபி அதனை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதற்கு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறாமல் அதை புறக்கணித்து விட்டார்கள்; இதற்குள் ஹளரத் அபூ தல்ஹா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அங்கே வந்தார்கள்; அந்த நேரத்தில் இதோ இவரும் நேர்சையை நிறைவேற்றியவர்களுள் ஒருவர் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


சுனன் திர்மிதி : கிதாபுல் மனாகிப் பாகம் 5 பக்கம் 308,309 


ஹளறத் கைலா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது,


இரு தொடைகளையும் வயிற்றில் சேர்த்து இரு கையாலும் இரு கால்களையும் பின்னிக்கொண்டு இருந்த நிலையில் நான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தேன், அன்னாரின் மகத்துவத்தின் காரணமாக எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.


ஹளறத் முஙீறா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு வருகின்றது,


ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அண்ணார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசல் கதவை நகத்தால் தட்டுவார்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதையாவது கேட்கலாம் என்று இருந்தாலும் அச்சத்தின் காரணமாக பல வருடங்கள் அதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று ஹளறத் பர்ராஉ இப்னு ஆஸிப் றழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.


உலூமுல் ஹதீது : பக்கம் 198

மஹப்பத்தின் பொருளும், அதன் எதார்த்தமும் (8)

 

மஹப்பத்தின் பொருளும், அதன் எதார்த்தமும்

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி

     தமிழில் : தொடர் : [8]

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு   

  ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 

==================

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை நேசிப்பதன் பொருள், அதன் எதார்த்தம் பற்றிய விளக்கத்திலும்; அல்லாஹுத்த ஆலாவை மஹப்பத் வைப்பது இன்னும், அவனுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மஹப்பத் வைப்பதற்கான விளக்கம் (தப்ஸீர்) என்ன? என்பதிலும் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன;


இதுதொடர்பான அவர்களின் சொற்றொடர்கள் அதிகம் இருக்கின்றன, ஆயினும், எதார்த்தமான கூற்றுக்களில் கருத்து வேறுபாடு இல்லை, நிலைகளிலும், விதங்களிலும் நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன;


"மஹபத்" என்பது, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதற்குரிய பெயர் என்று ஹளறத் சுப்யானுத்தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், இவர்களின் இக் கூற்று அல்லாஹுத்தஆலாவின் பின்வரும் கூற்றைத் தழுவியது போன்றுள்ளது.


قل ان كنتم تحبون الله فا تبعوني يحببكم الله  


நேசரே கூறுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னை பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான். 3-31 


நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதன் பொருள், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை புரிவதை கடமையாக்கி கொள்வதாகும், இன்னும், சுன்னத்திற்கு எதிரானவர்களை அழிப்பது, சுன்னத்தைப் பின்பற்றுவது, சுன்னத்திற்கு எதிரானதை அஞ்சுவது என்று சில அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


நேசரைப் பற்றி எப்போதும் நினைவு கூறிக் கொண்டே இருப்பதற்குரிய பெயர் தான் "முஹப்பத்" என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர், நேசரின் மீது உயிரை அர்ப்பணம் செய்வது தான் "மஹபத்" என்றும், நேசரிடம் வைத்துக் கொள்ளும் காதலுக்கான பெயர் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.


 மற்றும் சிலர் மஹபத் என்பது மனதால் ரப்பின் நோக்கத்திற்கு நேர்பாடான செயலைச் செய்வது; அதாவது, அவன் விரும்புவதை விரும்புவது, அவன் வெறுப்பதை வெறுப்பது என்கின்றனர், நேசரின் விருப்பத்திற்கு நேர்பாடானதின் பக்கமாக மனம் சாய்வதற்குரிய பெயர் என்று வேறு சிலர் கூறுகின்றனர்;


மேற்கூறப்பட்ட அதிகமான சொற்றொடர்கள் மஹப்பத்தின் பலனைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றதேயன்றி, அதன் எதார்த்தத்தின் பக்கமாக சுட்டிக் காட்டவில்லை.


மஹப்பத்தின் எதார்த்தம் ஒரு மனிதனின் இயல்புக்கு நேர்ப்பாடானதில் அவரின் மனம் ஈர்க்கப்படுவதைக் குறிக்கும், அவரின் பக்கம் மனம் ஈர்க்கப்படுவதை அடைந்து கொள்வதன் மூலம் இன்பம் கிடைக்கும், அழகிய வண்ணமான கோலங்களை பார்ப்பதைப் போன்று, இனிய இராகங்களைக் கேட்பது போன்று, சுவையான ஊண், குடிப்புகளைச் சுவைப்பது போன்று ஒவ்வொரு ஆரோக்கியமான சுபாவமும் அதற்கு நேர்பாடானதில் ஈர்க்கப்படுகின்றது.


அல்லது, புத்தியின் அகப்புலன்களால் மனதிலுள்ள அதியுயர் கருத்துக்களை கிரகிப்பதன் மூலம் அந்த ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கின்றது. உலமாக்கள், ஸாலிஹீன்கள், ஆரிபீன்கள் உள்ளிட்டவர்களை நேசிப்பதில் கிடைக்கும் இன்பத்தைப்போல், இவர்களின் வாழ்க்கை புனிதமானது, சிறப்பானது என்பது பிரசித்தி பெற்றது, இவர்களின் செயல்கள் விரும்பத்தக்கது,


 ஏனெனில், இந்த விடயத்தில் பூரணமான மனிதனின் சுபாவம் இந்த கருமங்களின் பக்கமே சாய்ந்திருக்கின்றது, எதுவரையெனில், ஒரு கூட்டத்தின் மீதுள்ள நேசத்தின் காரணமாக மற்றும் ஒரு கூட்டத்தின் துவேஷம், பிரிவினை வந்து சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, இன்னும், ஒரு கூட்டத்தைப் பாதுகாப்பதன் மூலம் அடுத்தவர்களின் உரிமைகளை எல்லை தாண்டுவதுமுண்டு; அதாவது, அவரின் நேசத்தினால் நாடு துறப்பு, மானபங்கம் ஏற்படுவது, உயிரிழப்பு சேதம் ஏற்படுவது உள்ளிட்டுவை நடப்பதுமுண்டு.


அல்லது, அவரின் நேசம் அவரின் (மன இச்சையைச் சாய்ந்து) அவரின் சுயநலத்திற்காகவே இருக்கும், அதாவது, அவரின் உபகாரம் உதவிகள் உள்ளிட்டவை காரணமாக அவரின் சுபாவம் அவருக்கு நேர்பட்டதாக ஆகிவிடும், ஏனெனில், மனித சுபாவங்கள் தனக்கு உபகாரம் செய்தவருக்கு நேர்பட்டதாகவும், அவரை நேசிக்கக் கூடியதாகுமே படைக்கப்பட்டுள்ளது.


இந்த எதார்த்தத்தை நீ புரிந்து கொண்டிராயின், இந்த அழகிய கோலங்கள், கருத்தியல் பூரணங்கள், கடமைப்பட்ட உபகாரங்கள் உள்ளிட்ட நேசத்திற்கான காரணங்களின் கண்ணோட்டத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விடயத்தில் கூர்ந்து சிந்தனை செய்து பாருங்கள்!


 ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கருத்தியல் ரீதியான இம்முன்று காரணங்களிலும் நேசம் வைப்பதற்குரிய தகுதியின் மொத்த சேகரமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கசடறத் தெரிந்து கொள்வீர்கள்!


 அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பூரணம், நற்குணங்கள், அகவியல் சிறப்புக்கள் பற்றி முதல் பாகத்தில் மேலதிகமான எந்த விளக்கத்திற்கும் தேவையில்லாத விதத்தில் மிகத் தெளிவாக விளக்கம் கூறியுள்ளோம்.  


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களுடைய உம்மத்தின் மீது சொரிந்த உபகாரங்கள், அருள்பாலிப்புக்கள் உள்ளிட்டவை முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, அல்லாஹ் தன்னுடைய அழகிய பண்புகளிருந்து இரக்கத்தையும், கருணையையும் அன்னாருக்கு வழங்கி, அதன் மூலம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மத்தின் மீது இரக்கமாயிருந்ததும், அவர்களுக்கு அருள் பாலித்ததும், அவற்றின் மூலமாக எவ்வாறு அவர்களின் நல்வழிப்படுத்தினார்கள்; எவ்வாறு அவர்கள் மீது பரிவு காட்டினார்கள்; அவர்களின் காரணமாக அவர்களை நரகத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதெல்லாம் முன்னர் கூறப்பட்டுள்ளன.


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களோடு இரக்கமாகவும் (ற ஊபாகவும்) கருணையாகும் (றஹீமாகவும்) இருப்பதோடு அகிலங்களுக்கு அருள் பாலிப்பவராகவும் (றஹ்மதுன் லில் ஆலமீனாகவும்) இருக்கின்றார்கள், அன்னார் நற்செய்தி கூறுபவர்(பஷீர்)ஆகவும்; அச்சமூட்டி எச்சரிப்பவர் (நதீர்) ஆகவும், அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனின் பக்கமாக அழைப்பவராகவும் இருக்கின்றார்கள், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத் 

தஆலாவின் திருவசனங்களை ஓதி காண்பித்தார்கள், அவர்களை பரிசுத்தப்படுத்தினார்கள், இன்னும், அவர்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்; அல்லாஹ்வின் திரு சன்னிதானத்தின் பக்கம் சேர்த்து வைக்கும் நேரிய வழியில் (ஸிராத்துல் முஸ்தகீமில்) வழி காட்டினார்கள்; இன்னும், இதுவல்லாத்தையும் புரிந்தார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.


 ‌எனவே, முஸ்லிம்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபகாரத்தை மிகைத்த சிறப்பும், கண்ணியமான உபகாரத்தையும் விட வேறு உபகாரம் வேறு என்னதான் இருக்கிறது? பிரயோஜனம் என்ற ரீதியில் அனைத்து முஸ்லிம்களிலும் பரவலாக அதிகம் காணப்படும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபகாரத்தை மிகைத்த ஒன்று வேறு என்ன இருக்கின்றது?


 ஏனெனில், அவர்கள்தான் அவர்களின் நல்வழிக்கான வழியாக விளங்கினார்கள், அறியாமை என்ற வழிகேட்டிலிருந்து அவர்களை அவர்கள்தான் வெளியேற்றினார்கள், அண்ணலார் தான் இருலோகத்தின் கண்ணியமான வெற்றியின் பக்கமாக அழைப்பவர்களாக இருந்தார்கள்; தங்களுடைய றப்பின் நெருக்கத்திற்கு இடை துணையாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள், இன்னும், அவர்கள் தரப்பிலிருந்து றப்பிடம் பேசுகின்றவர்களாகவும் உள்ளார்கள், அன்னார் தான் அவர்களுக்கான சாட்சியாகும், அவர்களின் நிரந்தரமான நிலைப்பாட்டிற்கும், முடிவில்லாத அருட்பாக்கியத்திற்கும் காரணமானவர்கள்.


ஸஹீஹான ஹதீதுகளில் நாம் ஏற்கனவே கூறியது போன்று ஷரியத்தின் அடிப்படையில் எதார்த்தமாக நேசம் வைப்பதற்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் தகுதி மிக்கவர்கள் என்பது இப்போது உங்களுக்கு திட்டவட்டமாக தெரிய வந்திருக்கும், நாம் இப்போது கூறியது போன்று வழக்கம், இயல்பு என்று அடிப்படையில் கூட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தான் நேசம் வைப்பதற்கு தகுதியானவர்கள் என்பதும் புரிந்து இருக்கும்; ஏனெனில், அன்னாரின் உபகாரங்கள் பொதுமையானதாகும்; இவ்வுலகில் ஒரு விடுத்தம் அல்லது இருவிடுத்தம் உபகாரம் செய்த மனிதனை சொற்பமான காலத்தில் துன்பம் விளைவிக்கும் அழிவிலிருந்தும், குறைந்த வேளையில் தடைபடும் நஷ்டத்திலிருந்தும் பாதுகாப்பவராக இருந்தால், அவரை மனிதன் இயல்பாகவே நேசிக்கின்றார்; இதற்கு முற்றிலும் மாற்றமாக ஒருபோதும் முற்றுபெறாத அருட்பாக்கியங்களை அள்ளிச்செரிப்பவர், ஒருபோதும் அழிந்து போகாத நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்பவர்தான் நேசம் வைப்பதற்கு மிக்க தகுதியானவர்ளாகும்.


நல்ல பண்புகளைக் கொண்டுள்ள அரசரை, அல்லது நன்நடத்தையில் பிரபலமான அதிகாரியை; அல்லது தூரத்திலிருக்கும் அறிவிலும், நற்குணத்திலும் பெயர் பெற்ற காழியை இயல்பாகவே மனிதன் நேசிக்கிறான்; அப்படியாயின், இந்த நற்குணங்கள் யாவும் சாயுச்சிய நிலையில் கொலு வீற்றிருக்கும் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அதிகமதிகம் நேசம் வைப்பதற்கு தகுதி மிக்கவர்களாகும்; சுபாவம் அவர்களில் தான் ஈர்க்கப்படுகிறது, 


எந்த ஒரு நபரும் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சடுதியாகக் கண்டால், திடுக்கிடுவார், அண்ணாரை நன்கு அறிந்து பழகியவர் பார்த்தாராயின், அண்ணாரை நேசிப்பார் என்று அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள்; அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக சில ஸஹாபாக்கள் பார்வையை அன்னாரின் பக்கமாக திருப்புவதில்லை என்பதை ஏற்கனவே நாம் கூறியுள்ளோம்.

பிறப்பில் குறையுள்ளவனே அஹ்லுல் பைத்தில் குறை காண்பான்

 

பிறப்பில் குறையுள்ளவனே அஹ்லுல் பைத்தில் குறை காண்பான்

➖➖➖➖➖➖➖➖➖➖

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,    

 மௌலவி பாஸில் ஷெய்கு       

  *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

    பரேலவி, ஸூபி, காதிரி..

➖➖➖➖➖➖➖➖

"உங்கள் மத்தியில் இரு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அதனைக் கடைப்பிடித்து நடந்தால் ஒருகாலும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்குர்ஆன், அடுத்தது எனது குடும்பம்" என்று நபிகள் நாதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜில் உரைத்தார்கள்.


நூல் : முஸ்லிம்


ஆதாரபூர்வமான இந்த ஹதீதை வஹாபிகள் ஏற்பதில்லை. இதன்படி நடப்பதில்லை. மாறாக அஹ்லுல் பைத்களின் மேல் சேற்றை அள்ளி வீசுவதில் அதிக பிரியம் கொண்டு அலைகின்றனர்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித குடும்பத்தை பாவமான காரியங்களிலிருந்து பாதுகாப்பதாக திருமறையில் அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான்.


மறுமையில் முதன் முதலில் கௌதர் தடாகத்தில் என்னைச் சந்திப்பவர்கள் எனது குடும்பத்தினர்களும், எனது உம்மத்தில் என்னை நேசித்தவர்களுமாகும்.


ஆதாரம் : தைலமி


அலியே! முதன் முதலில் சுவர்க்கம் புகுவோர் நால்வர்களாகும். 

1. நான் (நபிகள் நாதர்) 


2. நீர் (அலி அவர்கள்) 


3. ஹஸன் 


4. ஹுஸைன் அடுத்து நமது சந்ததியினர்


ஆதாரம் : இப்னு அஸாகிர், தப்றானி கபீர்


எனது குடும்பத்திலிருந்து எவரும் நரகம் செல்லக் கூடாது என்று அல்லாஹ்விடத்தில் கேட்டேன். அதனை அல்லாஹ் ஏற்று எனக்கு வழங்கியுள்ளான்..


ஆதாரம் : கன்ஸுல் உம்மால் - ஹதீது எண் - 34149


பாத்திமா தனது அபத்தைப் பாதுகாத்தார்கள். அதனால் அல்லாஹுத்தஆலா அவர்களது சந்ததிகளை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துள்ளான்.

 

ஆதாரம் : பஸ்ஸார், அபூயஃலா, தப்றானி, ஹாகீம்


இவ்வாறு கணக்கற்ற நபி மொழிகள் உள்ளன.

 அல்குர்ஆனையும் ஹதீதையும் பின்பற்றுவதாக கூறும் இவர்கள், குர்ஆனிலும், ஹதீதிலும் புகழ்ந்துரைக்கப்பட்ட அஹ்லுல் பைத்துக்களின் மேல் ஆத்திரம் கொண்டலைவது ஏன்? 


எவர் எனது குடும்பம், அன்ஸாரிகள், அறபிகள் ஆகியோர்களின் கௌரவத்தை மதித்து நடக்கவில்லையோ அவர் மூன்று குறைபாட்டில் ஏதாவது ஒன்றில் உள்ளவராக இருப்பார்.


1. முனாபிக்  

2. விபச்சாரத்தில் பிறந்தவன் 

3. அவனது தாய் சுத்தமில்லாத மாதவிடாய்க் காலத்தில் அவனைக் கருவுற்றிருப்பாள்.


ஆதாரம் : பைஹகி, ஷுஃபுல் ஈமான், 

பிர்தௌஸ் மௌதூரில் கிதாப் ஹதீ்ஸ் எண் - 5955 பாகம் - 03, பக்கம் - 626


அறுவர் மீது நான் சபித்துள்ளேன். இன்னும் அல்லாஹ்வும் சபித்துள்ளான். ஒவ்வொரு நபிமார்களினதும் துஆவும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும்.


1. அல்லாஹ்வின் வேதத்தில் (இடைசெருகல் செய்து) கூட்டுபவன்


2. அல்லாஹ்வின் விதியை (களாகத்ரை) பொய்யாக்குபவன்


3. தனது அக்கிரமத்தினால் அல்லாஹ் கேவலமாக்கியதை கண்ணியப்படுத்துபவன், அல்லாஹ் கண்ணியமாக்கியதை கேவலமாக்குபவன்.


4. அல்லாஹ் ஹறாமாக்கியதை ஹலாலாக்கியவன்


5. எனது குடும்பத்திற்கு தொல்லை கொடுத்து மரியாதையீனப்படுத்தியவன்.


6. எனது சுன்னத்தை (கேவலமாகக் கருதி) விட்டு விட்டவன்.

 

ஆதாரம் : திர்மிதி ஹதீஸ் எண் - 2161


எவராவது ஒருவர் தனது ஆயுளிலும், அல்லாஹ் தனக்கு வழங்கிய நிஃமத்திலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், எனது குடும்பத்தினருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளா விட்டால், அவர் ஆயுளில் பறக்கத்தும் இருக்காது. மறுமையில் கறுத்த முகத்துடன் என்னிடம் வருவார்.


ஆதாரம் : அபூநுஅய்ம் கன்ஸுல் உம்மால் ஹதீஸ் எண் - 34171


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித குடும்பத்துடன் மரியாதையாக நடக்காதவனின் பிறப்பில் குறைபாடு உண்டு என்றும், அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று கறுத்த முகத்துடன் மறுமையில் நபியவர்கள் முன் நிறுத்தப்படுவான் என்றும் ஹதீதில் வந்துள்ளதை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! 


அஹ்லுல் பைத்துக்களில் குறைகண்டு சொல்லொனாத் துயரைக் கொடுத்த கவாரிஜிகளின் வழியில் வஹாபிகளும் நடைபயில்வதை நன்கு அறியலாம். 


நபி வழியில் நடப்பதாகக் கூறும் வஹாபிகள் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தின் மீதும் புழுதி வாரி இறைப்பது ஏன். இதுதான் நபி வழியா? சிந்தித்துப் பாருங்கள்! 


உயிரை விடவும் மேலாக நபியவர்களை மதிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது. 


எவருக்கு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேரில் நேசம் இல்லையோ அவருக்கு ஈமான் கிடையாது என்று திருநபியவர்கள் கூறியுள்ளார்கள்.


ஆனால் குர்ஆனையும் ஹதீதையும் பி்ன்பற்றுவதாக வாய் கிழியக் கூறும் வஹாபிகள் நபிகளாரைப் புகழ்ந்து கவி பாடுவதை, உரையாற்றுவதை ஷிர்க் என்று கூறி தடை செய்கின்றனர். 


நபிமார்களும் இறைநேசச் செல்வர்களான வலிமார்களும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியார்கள் மனிதனில் முழுமை பெற்றவர்கள். அல்லாஹ்வை நெருங்கும் ஒருவர் நற்பண்புகள் நிறைவாகப் பெற்றவராக இருப்பார். அதனால் இவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களாகவும் இருப்பார். இதனால்தான்


"எல்லாம் நானே என்று என்னளவில் தஞ்சம் கொண்ட நல்லடியார் வழியைப் பின்பற்றுங்கள் என்றும்,

 "உண்மையாளர்களுடன் உறவாய் இருங்கள். வெற்றி பெறுவீர்கள்" என்றும், அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.


ஒரு புகழ் என்பது நற்பண்பின் வெளிப்பாடு, நற்பண்புள்ளவர் புகழுக்குரியவராகின்றார். எனின், நற்குணத்தின் தாயகமான நபிகள் நாயகத்தை புகழ்ந்துரைப்பதை ஒரு முஃமின் வெறுப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!


இஸ்லாம், உலகில் வலிமார்கள், அஹ்லுல் பைத்துக்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியது என்பது எவரும் மறுக்காத பேருண்மையாகும். இஸ்லாத்தை தங்களுக்குக் காட்டித்தந்த இந்த நல்லடியார்கள் மீது நன்றிக் கடனுடன் அவர்களைப் புகழ்ந்து, அவர்கள் பெயரால் நன்மை நாடி அன்னதானம் வழங்குகின்ற நற்செயலை வஹாபிகள் வெறுப்பதின் இரகசியம்தான் என்ன? என்பதை நாம் நன்கு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


வரலாற்றை சற்று பி்ன்நோக்கிப் பாருங்கள். ஸஹாபாக்கள் காலத்திலும், தாபியீன்கள் காலத்திலும் தோன்றிய வழிகேடர்களான கவாரிஜிகளும் முஃதஸிலாக்களும் தவிர வேறு எவராவது நபிகள் நாதரின் புனித குடும்பத்தினரையும், இமாம்களையும் இம்சித்து இழிந்துரைத்த வரலாற்றை நாம் கண்டிருக்கின்றோமா?


வஹாபிகள் வழி தவறியவர்கள் என்பதற்கும் அவர்கள் அல்லாஹ்வி்ன் சாபத்தைப் பெற்ற முனாபிக்குகள் என்பதற்கும் இஸ்லாத்தின் வளர்ச்சியை சகிக்க முடியாத சியோனிஷ வாதிகளின் அடிவருடிகள் என்பதற்கும் மேற்கண்ட விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.

இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்

 

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பேரால் இட்டுக்கட்டப்படும் அபாண்டங்கள்.


கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பேரால் இட்டுக்கட்டப்படும் அபாண்டங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,    
  மௌலவி பாஸில் ஷெய்கு   
   ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
 பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
➖➖➖➖➖➖➖➖
 கௌதுலுல் அஃழம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களுடைய பெயரால் சில முட்டாள்கள் பல கறாமத்துகளை அவிழ்த்து விட்டுள்ளனர், இவற்றை காலாகாலம் மக்களுடைய பேச்சில் எவ்வித பகுப்பாய்வுமில்லாமல் பேசப்பட்டும் பரப்பப்படும் வருகிறது 

குத்துபுல் அக்தாத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் சையதுனா இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அர்வாஹுகள் இருந்த கூடையிலிருந்து ஒரு றூஹை பிடுங்கி எடுத்தார்கள் என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

இந்த சம்பவம் அறிவில்லாத சில ஆலிம்களாலும் அவர்களை நம்பி பின்பற்றுகின்ற பலராலும் காலாகாலம் பேசப்பட்டு வருகின்றது, இதற்கு எவ்வித ஆதாரத்தையும் தக்க நூல்களிலிருந்து இவ்வாறு கூறுவோர் இதுவரை முன்வைத்ததில்லை. 

இந்த சம்பவம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எவ்வகையிலும் ஒவ்வாத முட்டாள்தனமான கூற்று என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத்தின் ஹிஜ்ரி 14-ம் நூற்றாண்டின் முஜத்தித் என்றும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம் என்றும் போற்றப்படுகின்ற அஃலா ஹஜரத் இமாம் அஹ்மது றிழா கான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் மேற்படி சம்பவம் பற்றி ஒருவர் கேள்வி கேட்டதற்கு பின்வருமாறு பதில் கூறியுள்ளார்கள். 

ڑنجبیل ارواح چین لینا خرافات مخترعہ جہال سے ہے سیدنا عزرائیل علیہ الصلوۃ السلام رسول ملائکہ سے ہے اور رسل ملائکہ اولیا بشر سے بالاجماع افضل تو مسلمانوں کو ایسے اباطیل واہیہ سے احتراز لازم واللہ الہادی الی سبیل الرشاد 
فتاوی رضوی
 418-419- 28

றூஹுகளின் கூடையிலிருந்து றூஹுகளை பிடுங்கி எடுப்பது மூடநம்பிக்கைகளை இட்டுக் கட்டும் மூடர்களின் வேலையாகும், 

மேலும் மலக்குகளிலுள்ள தூதர்கள் மனிதர்களிலுள்ள வலிமார்களை விட இஜ்மாஃவின்படி சிறப்பானவர்கள், எனவே,

இப்படியான கவைக்குதவாத வீணான கதைகளிலிருந்து முஸ்லிம்கள் தவிர்ந்திருப்பது அவசியமாகும்.

அல்லாஹ் நேரிய வழியில் வழிகாட்டுகின்றான்.

ஆதாரம்: பதாவா றிஸ்வியா
பாகம்:28, பக்கம் 418-19 

 உண்மை இவ்வாறு தெளிவாக இருக்க எவ்வித ஆதாரமும் இல்லாமல் அடிப்படையான விளக்கமுமில்லாமல் கதைகளை கட்டுவதும், அதை நம்பி மற்றவர்களை குறை கூறுவதும், அவர்களுக்கு வழி கேட்டு பட்டம் சூட்டுவதும் கண்டிக்கத்தக்கது.

மார்க்கத்தில் கருத்து வேறுபாடுள்ள கிளைச்சட்டங்களிலும், வரலாற்று நிகழ்வுகளிலும் ஒருபோதும் வழிகேடு வருவதில்லை. 

அகீதாவில் திட்டவட்டமான விடயங்களில் மாறுபாடுபடும் பொழுது தான் வழிகேடு வரும் வழிகேடு எது என்பதனை மார்க்க அறிவில்லாதவர்கள் தீர்மானிக்கின்ற ஒரு விடயம் அல்ல!

 கற்றறிந்த பெரும் மேதைகள் கூட இது விடயத்தில் தனது இயலாமையை விளங்கி ஒதுங்கி இருப்பதைத்தான் வரலாற்றில் பார்க்கிறோம். 

ஆனால் இப்பொழுது மார்க்கத்தில் அனுபவமோ அறிவோ இல்லாத சில மூட கூட்டங்கள் மார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர், இவ்வாறு மார்க்கத்தை மூடர்கள் கையிலெடுப்பது இறுதி நாளின் அடையாளம் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்,

 ஆகவே, இவ்வாறான வீண் விளையாட்டில் இறங்கி மார்க்கத்தை பொழுது போக்காக்கி அறிவில்லாமல் வழிகேட்டு முத்திரை குத்தி தன்னை வழிகேட்டிலாக்கிக் கொள்ளாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.


Tuesday, 12 November 2024

அரபுத் தமிழ் பற்றி ஒரு ஆய்வு

 


அரபுத் தமிழ்


தமிழக முஸ்லிம் மக்களாலும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களாலும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே ' அரபுத் தமிழ்' என்பதாகும். அரபி மொழி எழுத்துருவில் (LH) தமிழை எழுதுவதே 'அரபுத்தமிழ்' ஆகும்.


உலக மொழிகளிலேயே மிக நீண்ட காலப் பழமை யுடைய மொழிகளாகத் தமிழும் அரபி மொழியும் வழங்கி வருகின்றன. இம்மொழிகளைப் போன்றே இரண்டு மொழிகளைப் பேசும் மக்கட் பகுதியினரும் நீண்ட காலத தொடர்புடையவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.


இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே தமிழகமும் அரபகமும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. சீனம் கிரேக்கம், ரோம போன்ற பகுதிகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது போன்றே அரபு மொழி பேசும் பகுதியான 'மிஸ்ரு' என அழைக்கப்பட்ட எகிப் தியப் பகுதியோடும் தமிழ் மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இதனை பாரதியார்


"சீனம் மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம்பலவும் புகழ்வீசக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் நன்று வளர்த்த தமிழ்நாடு"


எனப் பாடி மகிழ்கிறார். 'மிஸ்ரு' என்பது தமிழில் 'மிசிரம்' என மறுவி வந்துள்ளது.


அதே போன்று அரபு நாட்டு வணிகர்களும் மேலைக் சுடல் வழியாகவும் கீழைக் கடல்வழியாகவும் தமிழகப்பகுதி

களில் தங்கி வணிகம் செய்ததோடு, இங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் நிலையை அடைந்தவர் என் பது வரலாறு.


தமிழ் மக்களுடன் உதிரக் கலப்புடன் ஒன்றுபட்டு விட்ட அராபியர்கள் தமிழர்களை ஏற்றதுபோல் தமிழ் மொழியையும் ஏற்றார்கள். தமிழைக் கற்று அதனை அரபி வரிவடிவில் (லிபி எழுதவும் செய்தனர். செம்மை யிலா நிலையில் அரபிகள் பேசிவந்த தமிழை வரிவடிவில் எழுத நேர்ந்த போதெல்லாம் தாங்கள் "நன்கறிந்திருந்த தங்கள் தாய் மொழியாகிய அரபி மொழி வரிவடிவிலேயே தமிழை எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டனர்.



அண்ணல் நபிகள் நாயகம் காலத்துக்கும் பின்னர் தமிழகம் வந்த அராபியர்கள் இஸ்லாமியக் கருத்து களை தமிழ் மக்களிடைய்ே எடுத்துச் சொல்லும் கடப்பாடு டையவர்களானார்கள். அப்போது இஸ்லாமிய சிந்தனை களை இங்குள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அரபி மொழி வரிவடிவிலமைந்த தமிழே அவர்கட்கும் பெருத்துணையாயமைந்தது


அரபுத் தமிழின் விரைவான வளர்ச்சிக்கு வேறுசில காரணங்களும் உண்டு. அரபி மொழியில் இருந்த இஸ்லா மியத் திருமறையான திருக்குர் ஆனை - திருமறை விளக்கங் களை வேற்று மொழியில் பெயர்க்கும்போது கருத்துப் பிழையோ, பொருட்பிழையோ ஏறபட்டுவிடும் என்ற அச்சம் ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்தது. தமிழ் எழுத்துக்களின் மூலம் திருமறை விளக்கஙகளைத் தரும் போது மாறுபாடாகக் கருத்து விளக்கம் ஒலிக் குறை பாட்டினால் அமைந்து விடலாம் என்ற உணர்வின் அடிப் படையிலேயே, திருக்குர் ஆனை, அதன் விளக்கங்களை நேரடியாகத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தமிழில் தருவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத் தப்பட்டு வந்தது

ஏனெனில், அரபு மொழிச் சொற்களின் உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுத இயலவில்லை. அதோடு இஸ் லாமிய அடிப்படைக் கருததுக்களை உணர்த்தவல்ல அரபு கலைச் சொற்களை, பொருள் நுட்பம் சிறிதும் சிதையா வணணம் தமிழில் மொழியாக்கம் செய்யவும் இயலவில்லை எனவே, திருமறை தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்க்கு மாறு மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தினார்கள்.


தொடக்க காலத்தில் அரபுத் தமிழ் செம்மையானதாக அமைந்திருக்கவில்லை. பேச்சுத் தமிழையே அரபி வரி வடி வில் எழுதி வாசித்துவந்ததால் குறைகள் ஏதும்பெரிதாகத் தெரியவில்லை நாளடைவில் சற்று இலக்கியத் தரமான சொற்றொடர்களை அரபி வரிவடிவில் எழுதிப் படிக்கத் தொடங்கியபோதுதான் தமிழ்மொழியிலே உள்ள ங,ச.ஞ ட,ப,ள,ழ.ண ஆகிய 8 தமிழ் எழுத்துக்களுக்கேற்ற அரபி எழுத்துக்கள் அரபி மொழியில் இல்லாதது பெருங்குறை யாகப்பட்டது. மேலும் எ, ஏ, ஒ, ஓ போன்ற ஒலிக் குறியீடு கள் அரபியில் இல்லாததும் குறையாகக் கருதப்பட்டது. எனவே, இந்த எழுத்துக் குறைகளை நீக்க, சரியான உச் சரிப்பைத் தரவல்ல அரபு எழுத்துக்களை உருவாக்கவேண் டிய கட்டாயச் சூழல் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே ஆர்வம் கொண்டோர்க்கு ஏற்பட்டது.


ஒரு கால கட்டத்தில் சமஸ்கிருத மொழி எழுத்துக்களின் உச்சரிப்பைத் துல்லியமாகத் தமிழில் சொல்ல தமிழில் எழுத்துக்கள் இல்லை என்ற குறையைப் போக்க ஷ ஜ,ஸ. ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் புதிதாக உருவாக்கப் பட்டது போன்று தமிழில் உள்ள மேற்கூறிய ங, ச, ஞ .ட ப, ள ழ, ண ஆகிய எட்டுத் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப் புக்கேற்ற புதிய வரி வடிவங்கள் அரபுமொழியில் உருவாக் கப்பட்டன. எ,ஏ,ஒ,ஓ எழுத்துக்களுக்கான ஒலிகளைப் பெற அரபி எழுத்துக்களில் மேலும் கீழும் கொம்புக் குறி களைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்டது இவ்வாறு

அரபி மொழி புதிய எழுத்தொலிகளைப் பெற்று வள மடையத் தமிழ் காரணமாயமைந்தது.


அதே போன்று தமிழ் மொழியில் உள்ள க, ச,ட,த. ப, ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களுக்கு மற்ற மொழி களில் இருப்பது போன்று மூன்று அல்லது நான்கு வகை யான ஒலி வேறுபாடுகளைக் குறிக்கத் தனித்தனி எழுத் துக்கள் தமிழில் இல்லை. பேச்சு வழககிலும எழுத்து வழக்கிலும் ஒலி வேறுபாடின்றி ஒரே வித ஒலியைக் குறிக் கும் வகையில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களையும் கையாள வேண்டியுள்ளது இதனால்,சமயங்களில் கருத்து மாறுபாடு ஏற்பட வாய்ப்பேற்பட்டு விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அரபி மொழியில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களுக்கும் ஒலி வேறுபாடுள்ள தனித்தனி ஒலி வடிவ எழுத்துக்களை அரபி எழுத்துக்களின் மேல் சில குறியீடுகளாக இடுவதன் மூலம் பெறும் வகையில் உரு வாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் இல்லாத ஒலிக் குறைவை நிறைவு செய்யும் வகையில் அரபுத் தமிழ் அமைந்துள்ளது என்பது இங்கு எண்ணத்தக்கதாகும்.


அரபுத் தமிழின் துரித வளர்ச்சிக்கு இஸ்லாமியத் தமிழ்ப் பெண்களும் முக்கியக் காரணமாவார்கள். தமிழ் எழுத்தறிவு அதிகம் பெறாது, மறை மொழி என்ற வகை யில் அரபி மொழி மட்டும் அறிந்திருந்த இஸ்லாமிய பெண்களும் தமிழ் மொழி எழுத்தறிவில்லா இஸ்லாமிய பாமரர்களும் தாங்கள் அறிந்திருந்த அரபி வரிவடிவம் வாயிலாகவே தமிழ் மொழியைக் கையாண்டு வநதனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


அரபுத் தமிழ் முனைப்பாக வளரத் தொடங்கியது சுமார் 350 ஆட்டுகட்கு முன்னர்தான் எனப் பலராலும் குறிக்கப்படுகிறது. ஆனால், இக்கூற்று முழுமையாக ஏற்கக் கூடியதாக இல்லை அதற்கும் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அரபுத் தமிழானது, தமிழ் முஸ்லிம்களிடையேயும் அரபகத்திலிருந்து தமிழகம் வந்து நிலை கொண்டு விட்ட அரபுகளிடையேயும் வெகுவாக பழக்கத்திலிருந்த தற்கான சான்றுகள் பரவலாகக் கிடைக்கவே செய்கிறது.


சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஹாபிழ் அமீர் அலி வலி என்பவர் முனைப்புடன் அரபுத் தமிழ் வளர்ச்சியில் கருத்தூன்றி அதன் வளர்ச்சிக்கு உழைத்து வந்தார் என்பதை புகழ்பெற்ற இஸ்லாமிய இலக்கியப் பதிப்பாசிரியரான கண்ணகுமது மகுதூம் முகம்மது புலவர் அவர்கள் 'தீன் நெறி விளக்கம்' என்ற நூலிலுள்ள ஒரு பாடலில்.


"வெல்லிய அரபுத் தமிழ் உண்டாக்கிய மேன்மை ஹாபித் அமீர்வலி"


எனக் கூறுகிறார் ஹாபிழ் அமீர் வலி அரபுத் தமிழை உண்டாக்கினார் என்பதைவிட காலத்தின் இன்றியமை யாத் தேவையாக அரபக- தமிழக முஸ்லிம்களால் உரு வாக்கப்பட்ட அரபுத் தமிழை முனைப்புடன் கட்டுக்கோப் பாக திருத்தமுடன் வளர்த்து வளமடையச் செய்த பெருமைக்குரியவர் என்று பாராட்டுவதே சரியாக இருக் கும்


சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னரே அரபுத் தமி ழில் இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த போதிலும் பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவரான காயல் பட்டணம் ஷாம் ஷிகாபுத்தீன் வலி எனும் இறைநேசச் செல்வர் எழுதிய நூற்றுக்கணக் கான அரபுத் தமிழ் பாடங்களே இன்று நாம் அறியக் கிடைக்கின்றன.


இஸ்லாமிய ஞானம் நிரம்பப் பெற்ற ஷாமு ஷிஹாபுத் தீன் வலி அவர்கள் தொழுகைக்கான வழிமுறைகள் இஸ் லாமிய நெறி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், தீன்நெறி உணர்த்தும் ஒழுக்கக் கோட்பாடுகள் பெருமானாரின் பெரு வாழ்வைச் சுட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பெருமளவில்

அரபுத் தமிழில் பாடியிருப்பதோடு இஸ்லாமிய மக்களிடை யே காணும் வரதட்சணைக் கொடுமை. கந்தூரியின் பெய ரால் நடக்கும் பித்தலாட்டக் குறைகளைச் சுட்டிக்காட்டும் சீர்திருத்தப் போக்கிலான பாடல்களையும் பெருமளவில் அரபுத் தமிழில் எழுதிக் குவித்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.


தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள்.


இஸ்லாமிய நெறியுணர்த்தும் இலக்கியப் படைப்பு கள் முதல் சிறுவருக்கான சின்னஞ்சிறு உரைநடை நூல் கள்வரை அரபுத் தமிழில் ஆக்கப்பட்டுள்ளன. சமயம், வர லாறு, தத்துவம், மருத் துவம், கதை என தமிழிலும் அரபி யிலும் எத்தனை வகையான துறைகள் உண்டோ அத் தனையிலும் அரபுத் தமிழ்ப் படைப்புகளைச் செய்யுள் உரு விலும் உரைநடையிலும் எழுதியுள்ளார்கள் தமிழ் முஸ் லிம்கள். இன்னும் சொல்லப் போனால் 'இல்முந்நிசா' எனும் காமச்சுவை நனி சொட்டக் சொட்டக் கூறும் காமக்கலை நூலும் அரபுத் தமிழிலெ வடித்துத் தரப் பட்டுள்ளது.


அரபுத் தமிழ் படைப்புகள் அனைத்துமே இஸ்லாமிய


நெறி தொடர்புடையனவாக இருந்ததால் அவற்றில்


அரபி, பெர்சியச் சொற்கள் மிகுதியும் இடம் பெற்றுள்


ளன. இச்சொற்களை ஒலிச் சிதைவு இல்லாதபடி படிப்


பதற்கு அரபித் தமிழே வாய்ப்பாக அமைந்தது.


ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட திருமறை விரிவுரை கள் அனைத்தும் அரபுத் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டதிட்டங்களும் அரபுத் தமிழிலேயே உரு வாக்கப்பட்டன.

அரபுத் தமிழில பாடல்களை எழுதிக் குவித்தவர்களில் முதலிட ம்பெறுபவர் தமிழிலும் அரபியிலும்பெரும்புலமை பெற்ற காயல்பட்டிணம் ஷாமு ஷிகாபுத்தீன் வலியுல்லா அவர்களே ஆவார். நூற்றுக்கணக்கான அரபுத் தமிழ் பாமாலைகளை இயற்றிருந்த போதிலும் அவற்றில் சுமார் இருபத்தைந்து அரபுத் தமிழ் நூல்கள் மட்டுமே அச்சு வாகனமேறியுள்ளன. அவற்றுள் ரசூல் மாலை, அதபு மாலை, பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை என்பன குறிப்பிடத்தக்க அரபுத் தமிழ் படைப்புகளாகும்.


அவரைத் தொடர்ந்து காயல்பட்டிணம் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் 'ஆனந்தக்களிப்பு' எனும் நூலை அரபுத் தமிழில் யாத்துள்ளார்கள். அதே போன்று சின்ன உவைஸீனா ஆலிம் அவர்கள் 'ஹக்கீகத் மாலை எனும் அரபுத் தமிழ் நூலை எழுதியுள்ளார்கள் கீழக்கரை செய்யது முஹமமது ஆலிம் அவர்களும் தைக்கா சாகிபு அவர்களும் இஸ்லாமியச் சட்டங்களை விரித்துரைக்கும் நூல்களை அரபுத் தமிழில் எழுதியளித்துள்ளார்கள். பெண்பாற் சூஃபிக் கவிஞர்களுள் ஒருவராகக் கூறப்படும் கீழ்க்கரை அல் ஆரிபு செய்யிது ஆசியா உம்மா அவர்கள் எழுதிய 'மெய்ஞ்ஞானத தீப இரத்தினம்" எனும் அரபுத் தமிழ் நூல் மெய்ஞ்ஞானச் சிந்தனை க் களஞ்சிய ம-கும். இறைவன், நபிகள் நாயகம், அபூபக்கர் (ரலி) கல்வதது நாயகம் (வலி) அஜ்மீர் முயினுத்தீன் ஆண்டகை, ஹஸன், ஹுசைன், பலலாஹ். முகையித்தீன் ஆண்டகை, சாகுல் ஹமீது ஆண்டகை, ஆரிபு நாயகம் மற்றும் மழை தாலாட்டு, அடைக்கலம். பிரார்த்தனை முதலாக எண் பத்தைந்து தலைப்புகளில் கண்ணி, விருத்தம், ஆனந்தக் களிப்பு, குமமி, வெண்பா,பதிகம், மாலை ஆகிய பல வகைகளில் அரபுத் தமிழில் பாடியளித்துள்ளார்.


ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றையுடைய அரபுத்தமிழ் இலக்கியங்களில் பல இன்று உலகின் பல பகுதிகளிலுள்ள நூலகங்களிலும் நூல் காப்பகங்களிலும் தொல் பொரு ளாய்வகங்களிலும் இருந்து வருவதாகக் கூறப்படுகின் றது. லண்டனிலுள்ள இந்திய அலுவலக நூலகத்தில் 1878-ல் எழுதப்பட்ட "சீறா நாடகம்" என்ற அரபுத் தமிழ் நூல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.


அரபுத் தமிழில் நூல்கள் மட்டுமல்லாது பத்திரிகை களும் கூட வெளியிடப்பட்டுள்ளன தமிழகத்தைவிட அரபுத் தமிழ் செல்வாக்கு இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம் பெருமக்களிடையே மிகுதியாக இருந்துள்ளது. தமிழகம் போன்றே இலங்கையிலும் அரபுத் தமிழிலே வார, மாத ஏடுகள் நீண்டகாலம் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.


எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற றாண்டு வரை செழுமையாக வளர்ந்துவந்த அரபுத் தமிழ் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குப் பின்னால் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலையை எய்தியது இதற் குப் பல காரணங்கள் உண்டு.


அரபுத் தமிழ் நூல்கள் கையினால் மட்டுமே எழுதப் படக் கூடியவையாக இருந்து வந்தன. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட அச்சு வாகனப் பெருக்கத்தின் காரணமாக அரபுத் தமிழில் எழுதுவது வெகுவாகக் குறைந்து விட்டது.


மேலும், அரபுத் தமிழ்நடை ஓரளவு பேச்சு வழக்குத் தமிழை அடியொற்றி எழுந்து வளர்ந்ததால் 'கொச்சைத் தமிழ் தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் விரைந்து எழுந்த தமிழ் உணர்வும் மொழித்திறமும் மற்ற. வர்களைப் போன்றே இஸ்லாமியர்களையும் ஆட்கொண் டது. ஆகவே, கொச்சைத் தமிழ் கலந்த அரபுத் தமிழ் அறவே புறக்கணிக்கப்பட்டது.


ஆனால் இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் செல்வாக்குக் கணிசமாக குறைந்துள்ள

போதிலும் அவர்கள் இன்னும் அரபுத் தமிழ் வடிவத்தை விரும்பவே செய்கிறார்கள். 'அரபுத் தமிழ் அழகுத் தமிழ்' எனக் கூறி அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க விரும்பு கிறார்கள்.


அரபுத் தமிழில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளில் ஒரு சில நூறு இலக்கியங்கள் கூட தமிழ் எழுத்தில் எழுத்து மாற்றம் செய்யப்படவில்லை எனவே, அரபுத் தமிழ் பழக்கம் அறவே மறைவதற்கு முன் அரபுத் தமிழிலுள்ள படைப்புகள் அனைத்தையும் எழுத்து மாற்றம் செய்வது அவசிய, அவசரத் தேலையாகும். தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் இணையற்ற பாலமாகத திகழ்ந்த அரபுத் தமிழ் காலப் போக்கில் தமிழ் வளர்ச்சிக் குக் கிடைத்த மற்றுமொரு உந்து சக்தி என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது


அரபுத் தமிழில் மிக அதிகமான அளவில் பயன்படுத் தப்பட்டு வந்த அசல, அமுல், நகல், தகராறு, கைத கஜானா, ஆபத்து, வக்கீல், இனாம், வக்காலத்து, வசூல் பாக்கு, தபசில், பசலி, மகசூல், வாரிசு, காலி, நபர் மாமூல் முன்சீப், தாலுகா, ஜில்லா, ஹத்து, கிஸ்தி, கடு தாசி போன்ற அரபு, பெர்சியச் சொற்கள் தமிழ்ச் சொற் கள் போலவே அன்றாட வாழ்வில் பயன்பட்டுவருகின்றன


இவ்வாறு ஒலிக்குறைபாடின்றி தமிழைப் பயன்படுத்து வதற்கும் தமிழ் மொழி வளர்ச்சியோடு சொற்பெருக்கத் துக்குக் காரணமாக இருந்த அரபுத தமிழ் வடிவம் மற்ற இஸ்லாமிய வடிவங்கள் போன்றே தமிழ் மொழி இலக் கிய வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் பெருந்துணையாக இருந்து வந்துள்ளது என்பது இலக்கிய வரலாறு தரும் அழுத்தமான உண்மையாகும்.


முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமிய சமய அடிப் படையில் அரபி, பெர்சிய மொழித் தொடர்பு காரணமாக அவ்வம்மொழிகளில் காணப்பட்ட மசலா கிஸ்ஸா, நாமா,

முனாஜாத்து ஆகிய நான்கு இலக்கிய வகைகளை புது வகைத் தமிழ் இலக்கிய வடிவங்களாகத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தாலும் அவற்றின் செய்யுள் வடிவம் இயன்ற வரை தமிழ்இலக்கண அமைப்பை அடியொ ற்றியே அமைக் கப்பட்டன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.


படைப்போர். நொண்டி நாடகம். திருமண வாழ்த்து அரபுத் தமிழ் ஆகிய நான்கு புதுவகை இலக்கிய வடிவங் களை தமிழுக்கென்றே தமிழ்ப் பெயர்களோடு தோற்று வித்து தமிழ் இலக்கியப் பயிரைச் செழிக்கச் செய்துள்ள னர் இஸ்லாமியத் தமிழ்ப் புவவர்கள் என்பது தமிழ் இலக்கிய வரலாற்று உணமையாகும்.


தமிழகத்தில் எழுந்த சமயங்களைச் சார்ந்தவர்களும் தமிழகத்துக்கு அப்பாலிருந்து வந்த சமயங்களைச் சேர்ந்த வர்களும் தமிழில் காலங்காலமாகவே இருந்து வரும் பழைய இலக்கிய அமைப்பு முறைகளை அப்படியே அடி யொற்றி இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றினார்கள். ஆனால் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த தமிழ் முஸ்லிம்கள் மட்டுமே பழைய இலக்கியப் அமைப்பு முறைகள் அனைத்தையும் கையாண்டு தமிழ் இலக்கிய படைப்புகளை நூற்றுக கணக்கில் எழுதிக் குவித்ததோடு அமையாது முனைந்து எட்டு புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்து, தமிழ் இலக்கண முறைகள் வழுவாது, இலக்கியப் படைப்புகளை பெருமள வில் உருவாக்கியதன் மூலம காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் பணியை ஆற்றிய பெருமையை வரலாற்று பூர்வ மாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.


"இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்று முழங்கும் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் வளர்ச்சியை தங்கள் வளர்ச்சியாக எண்ணி உழைப்பதைப் பெருமை யாகக் கருதி தமிழ்ப்பணியை தளராது தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.



மாபிள்ளை லெப்பை ஆலிம்

 

அல்ஆமாஃ மாபிள்ளை லெப்பை ஆலிம் 

தொடர் : 03 


இலங்கையில் தொண்டு

****************************


அக்காலத்தில் இலங்கையில் இஸ்லாமிய வழிபாடுகள் சீர்குலைந்து இருப்பதைக் கண்ட மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் மார்க்க விழிப்புணர்ச்சிக் காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.


அக்காலத் தென் இலங்கையின் அரசாங்க அதிபராக இருந்த “லமசூரி" என்றஆங்கிலேயர், அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் நல்லுபதேசத்தால் இஸ்லாத்தை தழுவிய நிகழ்ச்சி அவர்களின் சிறப்பைப் பிரதிபலிக்கின்றது. சன்மார்க்கப் பணியின்


தென் இந்தியா முஸ்லிம்கள் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் மிக இருள் சூழ்ந்த ஒரு கால கட்டத்தில் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பணி தொடங்கியது.


C கி. பி. 1835 ஆம் ஆண்டு வியாபார நிமித்தம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள். இலங்கைக்கு முதன் முதல் அவர்கள் விஜயம் செய்தபோது சுமார் 18 வயதினராயிருந்தார்கள். வணிகத் தொடர்பாக இலங்கைக்கு வந்த போதிலும், தீனுல் இஸ்லாத்தின் பற்றுக் குறைந்து இருப்பதைக் கண்டு, கலங்கி தாம் வந்த நோக்கமான வியாபாரத்தை மறந்து தீன் சேவை செய்வதிலேயே முனைந்துவிட்டார்கள். இலங்கையின் அப்போதைய முஸ்லிம் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மார்க்க மேதை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் வணிகத் தொடர்பாக மாத்திரமன்றி இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை நன்கு போதிப்பதற்காகவும் தென் இந்தியாவிலிருந்து அடிக்கடி வந்து போகலானார்கள். மகான் அவர்களது ஆழிய அன்புக்குப் பாத்திரமான இலங்கை வாசியான கொழும்பு ஆலிம் சாகிப் என்று பெயர் பெற்ற அஷ்ஷா இர் அஷ் ஷெய்கு அப்துர் ரஹ்மான் இப்னு மீரான் லெப்பை மரிக்கார் அவர்கள், ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்மீது "மனாகிபுன் னுபூஸ்-பீ- மனாகிபில் ஆலிமுல் அரூஸ்” என்ற மவுலூது பாமாலை பாடி வரவேற்றார்கள்.


இலங்கைத் தீவின் பல பகுதிகளிலும் உள்ள நகரங் களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று மதபோதனை செய் வதிலும் மதரஸாக்கள், தைக்காக்கள் நிறுவுவதிலும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் முழு மூச்சுடன் தொண்டாற்றியுள்ளார்கள்.


இலங்கையில் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தலைமைப் பீடமாக இன்று கருதப்படுவது, அவர்களின் மவ்லூத், ராத்தீப், ஸில்ஸிலா ஆகியவை பெரும்பான்மை முரீதீன்களால் ஓதப்பட்டுவரும் ஸ்தாபனமான கொழும்பு பழைய சோனகத் தெருவிலுள்ள மஃனமுஸ்ஸு அதா. கி.பி. 1881-ஆம் ஆண்டில், அல்லாமா ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களது முழு முயற்சியினால், இது நிறுவப்பட்டதாகும்.


அவர்களால் நிறுவப்பட்ட மற்ற நிறுவனங்கள் வருமாறு: கி. பி. 1883 ஆம் ஆண்டில் மருதானையிலுள்ள புகாரி தைக்கா.


கி. பி. 1884 ஆம் ஆண்டில் வெலிகாமத்திலுள்ள புகாரி மஸ்ஜித்


கி. பி. 1885 ஆம் ஆண்டில் வெலிகாமம் வெலிப் பிட்டியிலுள்ள அரூஸியா தைக்கா.


கி. பி. 1886 ஆம் ஆண்டில் மாத்தரை கொட்டுவ கொட ம ஆலுல் கைராத் அரூஸியா தைக்கா.


கி. பி. 1887 ஆம் ஆண்டில் காலி மிலுதுவையிலுள்ள மஸ்ஜித் முஹ்யித்தீன்.


கி. பி. 1888 ஆம் ஆண்டில் மாத்தரை கடை வீதியி லுள்ள மல்ஹரூஸ் ஸலாஹ் அரூஸியா தைக்கா,


கி. பி. 1889 ஆம் ஆண்டில் காலி காட்டு கொடை மஃனமு அப்கல் ஹம்து அரூஸியா தைக்கா.


கி. பி. 1894 ஆம் ஆண்டில் கிந்தரை ஹுசைன் தைக்கா


மேலும் கொழும்பு மருதானை பள்ளிவாசல், பம்பள பிட்டிய ஜும்மாப் பள்ளிவாசல், மாளிகாவத்தை லெயாட்ஸ் பிராட்வே, பலாமரச் சந்தி பள்ளிவாசல்கள் ஸ்தாபிக்கப் படுவதற்கும் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களே காரணமாக அமைந்தார்கள்.


அரூஸியத்துல் காதிரிய்யா


ஹிஜ்ரி 1265-ஆம் ஆண்டு (கி. பி. 1848) அரூஸியத்


துல் காதிரிய்யாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


அவர்கள் ஆரம்பித்து வைத்து ஆசீர்வதித்து அருளினார்கள் •


அவர்களின் “துஆ” பரக்கத்தின் காரணமாக ஒன்றேகால்


நூற்றாண்டுகளுக்குமேலாக இந்த அமைப்பு இலங்கையிலும்


மற்ற நாடுகளிலும் சன்மாக்கப் பணியாற்றி வருகிறது.


இதற்கு முன் கீழக்கரை தைக்கா சாகிபு வலியுல்லா அவர்களிடத்தில் அரபு மொழிப் பயிற்சியும் ஆத்மீக ஞானப் பயிற்சியும் தொடர்பும் பெற்றவர்களாகவே இலங்கையில் வாழ்ந்து வந்த நாதாக்கள் பலர் விளங்கினர். எனினும் இந்தப் புனிதத்தொடர்பு பலன் தரும் விருட்சமாக நிலைபெற ஆரம்பித்தது மாப்பிள்னை லெப்பை ஆலிம் அவர்கள் காலத்தில் என்றே சொல்ல வேண்டும்.


அக்கால முதல் அருஸியத்துல் காதிரியா ஸ்தாபனத்தின் முயற்சியால் இலங்கை மக்களுக்கு அக்கீதா, பிக்ஹு, ஷரிஅத், தரீகத் ஆகியவற்றைப் போதிக்க இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலும், மூலை முடுக்குகளிலும் கிளைகள் அமைக்கப் பட்டன.


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் காலத்திலேயே இலங்கை முழுவதிலும் முந்நூறுக்கும் அதிகமான பள்ளி வாசல்கள், தைக்காக்கள், பள்ளிக்கூடங்கள், மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.


ஏற்கெனவே உள்ள பள்ளிகள், அறச்சாலைகள் ஆகிய வற்றை அபிவிருத்தி செய்வதும் இந்த ஸ்தாபனத்தின் பணி களில் அடங்கும். கண்கண்ட பலனுள்ளதாகிய ராத்திபதுல் ஜலாலிய்யாவும், ஏனைய விர்து, திக்ரு, மவுலூது, கஸீதாக் களும் இலங்கை தீவு முழுவதிலும் நியமமாக சிறப்புற நடை பெற்று வருவதற்கு முயற்சி எடுத்தல், அரபிக்கல்விக்கு புத்துயிர் அளித்தல், ஷரீஅத்தின் அடிப்படையில் இயங்கும் பள்ளிக்கூடங்கள், தைக்காக்கள், மதரஸாக்கள் ஆகிய வற்றைப் பெரும் எண்ணிக்கையில் அமைத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.


மக்னமுஸ்ஸு அதா


குதுபுகள் மதித்த குத்புஸ்ஸமான் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் அவர்கள். மனமுருகப் பாடிப் பனுவல் செய்த பள்ளி என்ற பெருமை இலங்கையில் உள்ள கொழும்பு மக்னமுஸ் ஸுஅதாவுக்கு உண்டு. கொழும்பு நகரத்தின் பழைய பள்ளிகளில் ஒன்று என்ற பெருமையும் மக்னமுஸ் ஸுஅதாவுக்கு உண்டு.


ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அமைத்துள்ள ஸ்தாபனங்கள் அனைத்துமே ஆத்மார்த்தீக தவக் கூடங்களாகவும், ஆண்டவனைத் தொழுகின்ற பள்ளிகளாகவும், அதே சமயத்தில் ஆண்டவனின் புகழ் இசைக்கும் ராத்திபு கானாக்களாகவும் செயல்படக் கூடிய


*இரு திட்டங்களின் ஒருமைப்பாட்டு அமைப்பாகவே விளங்கு கின்றன. அவ்விடங்களில் ஆலிமுல் அரூஸ் அவர்கள் இந்த ஸ்தாபனங்களில் ராத்திபு நேரங்களை, தொழுகை வக்துக்களை யொட்டி அமைத்திருப்பது, ராத்திபுக்கு வருபவர்களை தொழுகையைத் தவற விடாதிருக்கும்படி நிர்ப்பந்திப்ப தற்காகவே யாகும்.


ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை வெப்பை ஆலிம் நிறுவிய பள்ளிகள், தைக்காக்களுக்கு. நிர்வாகச் செலவுக்கான வருமானங்களுக்கு அவர்களே வழிவகைகளைச் செய்திருந்தார் கள்.


மலேசியாவில் அரூஸியத்துல் காதிரியா


காதிரியா தரீக்காவின் சற்குருவாக இருந்த காயல் பட்டினம் உமர் ஒலியுல்லாஹ் அவர்களுக்கு, மலாயா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள வனாந்திரங்களில் கடும் தவம் ஆற்றி, ஆண்டவனின் அருள் பெற்று, ஆத்மீகச் சுடர் வீசிய ஞான சீலர்களான உத்தமர்களைக் கண்ணால் கண்டு அவர்களுடன் உறவாடி உளம் கலந்து ஒளிபெற வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. தங்கள் ஆத்மீக குருவாகிய ஷெய்குல் காமில் செய்யிது முகம்மது புகாரி தங்கள் (கண்ணணூர்) அவர்களிடம் இந்த ஆவலைக்கூறி அங்கு போக அனுமதி பெற்றார்கள்.


மலாய் தீபகற்பத்தை ஒட்டியுள்ள அச்சக்கரை தீவிற்கு முதன்முதலாக உமர்ஒலியுல்லாஹ் சென்றார்கள். அத்தீவிலே அருந்தவம் ஆற்றிவரும் தக்வாவுள்ள நாதாக்கள் பலரையும் அவர்கள் சந்தித்தார்கள். அச்சக்கரையிலும், மலாயாவிலும் உமர் ஒலியுல்லாஹ் அவர்கள் பதினான்கு ஆண்டுகள் தங்கி, தமது அருள் ஞான போதனைகளையும் - தவபல சாதனை களையும் புரிந்துள்ளார்கள். அதன் பலனாக அப்பகுதியில் இவர்களின் ஆத்மீக அருள் வழியாகிய காதிரியா தரீக்காவில் அப்பொழுதே ஆயிரமாயிரம் சீடர்கள் ஏற்பட்டுவிட்டார்கள்.


உமர் ஒலியுல்லாஹ் அவர்கள் காலமான பின்பு, மலாய் நாட்டு பக்த கோடிகள் தங்களின் காதிரியா தரீக்காவின் வளர்ச்சிக்கும், தங்களது ஆத்மீக ஞான தாகத்திற்கும் உமரி ஒளியுல்லாஹ் அவர்களின் பின் தோன்றல்களை இந்தியாவிலிருந்து எதிர்பார்த்து வந்தனர்.


"சுவர்க்கத்துப் பெண் என்னும் ஆயிஷா உம்மா அவர்களின் மகனாரும், மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தாயைப் பெற்ற பாட்டனாருமாகிய ஆரிபுபில்லா ஷேக் அப்துல்காதிர் லெப்பை ஆலிம் ஹாஜி அவர்கள் மலாயா வாழ் காதிரியா தரீக்கா முரீதீன்களின் நீங்காத ஆசையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அங்கு சென்று காதிரிய்யா தரீக்காவின் ஞான போதனைகளை நடத்தி வந்தார்கள்.


இந்தோனேசியாவிலும், மலாயாவிலும் மார்க்கப் பிரச் சாரம் செய்து அவர்கள் ஆற்றிய ஆத்மீகப்பணி பெரும் சிறப்புக்குரியது.


அவர்கள் சுமார் இருநூறு மலாக்காவில் காலமாகி அடங்கி நாட்டை சேர்ந்த வலியுல்லாவான வருடங்களுக்கு முன்பு இருக்கிறார்கள். தமிழ் அவர்களுக்கு மலாக்கா சாகிப் என்று பெயர் வழங்கியது. மலாக்கா நகரில் இந்திய முஸ்லிம்கள் வசிக்கும் "கம்பங்கூலிங்” என்ற இடத்தில் அவர் கள் தர்கா இருக்கிறது.


மகான் ஷேக் அப்துல் காதிர் ஆலிம் என்ற இந்த நாதாவைப் பெற்று எடுத்த தாயார் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லாஹ் அவர்களின் மாமி மகளாவார். இவரைச் சுவர்க்கத்துப் பெண், என்றே ஞானாபிமானிகள் அறிவார்கள்.


ஷேக் அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் தவப் புதல்வர் மூஸா லெப்பை ஆலிம் அவர்கள். (இவர்கள் கீழக்கரை கிழக்குத் தெரு அப்பா பள்ளியில் அடங்கியுள்ளார்கள்.)


ஷேக் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் ஆயிஷா உம்மா. யப்பா என்ற தொண்டி அபூபக்கர் களின் திருப் புதல்வர் லெப்பைக்கனி முடித்தார்கள்.) (இவர்களை தொண்டி ஒலியுல்லாஹ் அவர் ஆலிம் அவர்கள் மணமுடித்தார்கள்.


மற்றொரு மகளாகிய ஆமினா உம்மா அவர்களை வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள் மணமுடித் தார்கள். இவர்களின் தவப் புதல்வரே மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்.


காதிரியா தரீக்காவின் கலீபாவாக, மலாய் நாட்டில் 'மாண்புறத் திகழ்ந்து, மலாக்கா நகரிலே, ஷேக் அப்துல் காதிர் நாயகம் அவர்கள் காலமான பிறகு கீழக்கரை தைக்கா சாகிப் (வலி) அவர்களின் சீடர்கள் பலர் அந்த நாட்டிற்குச் சென்று ஆத்ம ஞானத் தொடரை காத்து வந்தனர்.


மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் வாழும் காலத்திலும் மலாய் நாட்டிலிருந்த காதிரிய்யாத் தரீக்கா வின் சிஷ்யகோடிகளாகிய முரீதீன்களின் பிரதிநிதிகள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களை நேரில் சந்தித்து "பை அத்" என்னும் விசுவாசப் பிரமாணம் எடுத்துச் சென்றுள்ளனர். அதுமுதல் மலாயா நாட்டில் அரூஸியத்துல் காதிரியா தரீக்கா வேரூன்றி விழுது பல விட்டுள்ள பெரு விருட்சமாகத் திகழ்ந்து வருகிறது.


மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அரூசியத்துல் காதிரிய்யா முரீதீன்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தென் இந்திய முஸ்லிம்களாகிய வர்த்தகர்களும், வர்த்தகத் தொழிலாளர்களுமாவார்கள். அவர்கள் இன்னும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் கலீபாக்களிடம் நீங்காத தொடர்புகொண்டு வருகின்றனர். அவர்கள் மார்க்க, ஆத்மீக சம்பந்தமாகதங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அவ்வப்போது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர் களின் வழித்தோன்றல்களில் உதித்த நேரடி கலீபாக்களிடம் தொடர்பு கொண்டும் வருகின்றனர்.


தங்களுக்கு ஏற்படும் லௌகீக, பொருளாதாரச் சிக்கல் களிலும் இன்னல்களிலுமிருந்து தெளிவும் மீட்சியும் பெற மப்ரபிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் நேரடித் தோன்றலில்


உதித்த கலீபாமார்களின் நல்லாசி எனும் “து ஆ” பரக்கத்தை வேண்டி மலாய் நாட்டு முரீதீன்கள் தொடர்பும் கொண்டு வருகின்றனர்.


செய்யிது முகம்மது மௌலவி புகாரித் தங்களின் அனுமதியோடு சென்று கடாரம் என்ற மலாய் நாட்டில் காயல்பட்டினம் உமர் (ஒலி) அவர்கள் ஊன்றி வந்த ஞான ' வித்து அரூஸியத்துல் காதிரியா எனும் ஆல விருட்சமாகத் தழைத்து ஆத்மா ஞானத் தெளிவு என்னும் நிழலை வழங்கிக் கொண்டே இருக்கிறது.


தொடரும். 

அடுத்து அவர்களின் 

ஞான மகத்துவம்

Monday, 11 November 2024

மாபிள்ளை லெப்பை ஆலிம்

 

மாபிள்ளை லெப்பை ஆலிம்

இமாம் மாபிள்ளை லெப்பை ஆலிம் 

தொடர் 01

நூன்முகம்


இஸ்லாம் ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டிலேயே தமிழகத் திற்கு அறிமுகமாகி இருந்தது; ஆங்காங்கே அரபிய முஸ்லிம் களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன: மஸ்ஜிதுகளும் கட்டப்பட்டிருந்தன என்ற உண்மைகளெல்லாம் வரலாற்று வல்லுநர்களால் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.


அவர்கள் தமிழகத்தை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகங் களின் மூலம் வளப்படுத்தினரே யன்றி சுரண்ட வில்லை; இங்கேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் வர்த்தகர்களாக வந்த ஐரோப்பியர்கள் பேராசை கொண்டு, நம்நாட்டின் செல்வத்தைக் தத்தம் தேயங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாமலிருக்கவும், அந்த நாடுகளுக்கு இடையிலேயே தோன்றிய கடுமையான பூசல், போட்டிகளின் விளைவாகவும், அவர்கள் அரசியல் ஆதிக்கம் பெறவும், நாடுபிடிக்கவும் முற்பட்டனர். அந்த ஐரோப்பியர் போலன்றி அரபிய வியாபாரத்திலேயே கருத்தூன்றியிருந்த்தோடு கமதியான பிரசாரத்திலும் வர்த்தகர்கள், அரபிய முஸ்லிம்களின் தூய வாழ்க்கை முறையினால் ஈர்க்கப் பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் கூடிவந்தது. அவர் களிடையே மார்க்க போதனை புரிவதற்கு உறுதுணையாக அறபுத் தமிழ் எழுத்து முறையை அரபிய முஸ்லிம்கள் உருவாக்கினர்.


அதற்கு முன்பாக பாரசீக மொழிக்கு 

முஸ்லிம்கள் அரபி லிபியைப் பயன் படுத்தி வெற்றி கண்டிருந்தது அவர்களுக்கு ஒரு நல்ல முன் மாதிரியாக அமைந்தது.


தமிழகத்தில் முஸ்லிம்கள் அரசியல் ஆதிக்கம் பெற முயலவில்லை என்றால், ஹலரத் ஸையிது இப்ராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்கள் பாண்டிய மன்னரோடு போரிட்டு வென்று ஆட்சி நடத்தியது எதனைக் குறிப்பிடுகின்றது என்ற கேள்வி எழலாம். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நுணுகி ஆராய்வோருக்கு, அது மார்க்கப் பிரச்சாரத்திற்காக வந்த துறவு மனப்பான்மை கொண்ட தூயவர்களின் கூட்டம் ஒன்று, தனது தற்காப்பிற்காகச் சந்திக்க நேரிட்ட சண்டைகளின் விளைவே என்பது தெளிவாகும்.


அதனை அடுத்து முஸ்லிம்களுக்கு அரசியல் ஆதிக்கம் கிட்டியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தானே வலுவில் வந்து சேர்ந்ததாகும். அப்போது பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மாறவர்மன் குலசேகரன், தமிழகத் தோடு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடத்தி வந்த கைஸ் தீவின் அரசரான மலிக்குல் இஸ்லாம் ஜமாலுத்தீன் அவர்களின் இளவல் மலிக்குல் அஃலம் தகியுத்தீனின், மதியூகம்,வீரம், அறிவாற்றல் ஆகியவைகளினால் கவரப் பட்டு, அவரைத் தன் அமைச்சராகவும், கடற்படைத் தலைவராகவும், எல்லைக் காவலராகவும் அமர்த்திக் கொண்டார். அதோடு மட்டுமன்றி அவர் தமது அரச குமாரிகளில் ஒருத்தியை அவருக்கு மணமுடித்து வைத்து அவரைத் தன் மருமகனாக ஆக்கிக்கொண்டதோடு, பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளை அவருக்குப் பிரித்துக் கொடுத்து அதற்கு வருதை மண்டலம் எனப் பெயரிட்டு, தகீயுத்தீனை அதற்கு அரசராக்கினார்.


பாண்டிய மன்னர்களின் வரலாற்றில், மதுரைப்பாண்டிய மன்னனின் தலைமையில் மற்றும் நான்கு பாண்டியர்கள், துணையரசர்களாக ஆங்காங்கே ஆட்சி பீடத்தில் அமர்ந்து

அரசோச்சுவது வழக்கமாக இருந்தது. தகியுத்தீன் மற்றொரு அரசரானபோது ஐந்து பாண்டியர்களுடன் சேர்ந்து "ஆறாம் பாண்டியன்" என்ற சிறப்புப் பெயராலும் அறியப் பட்டு வந்தார். பாரசீக மொழியில் மர்ஜபானே ஹிந்த் (Margrave of Hind) என்றும் தமிழில் "கறுப்பாறு காவலர்" என்றும் கூட தகியுத்தீன் அழைக்கப்பெற்றார். இந்த "கறுப்பாறு காவலர்" என்ற பட்டம் அவருடைய சந்ததியினரால் தொடர்ந்து வகிக்கப்பட்டு வந்தது. அந்த வம்சாவளியில் வந்த சீதக்காதிக்கும்கூட அப்பட்டம் வழங்கியது. அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் "வருதை மன்னர்" களின் பட்டம், பதவிகளையும் பாதித்தன. இந்த வரலாறுக ளெல்லாம் மறைக்கப் பட்டதும் மறுக்கப் பட்டதும் தமிழக வரலாற்றிற்கு ஏற்பட்ட "விபத்துகள்" என்றால் அது மிகை


யாகாது.


அப்படிப்பட்ட "அரசாட்சி"களோடு, "அருளாட்சி” யும் ஹிஜ்ரி ஆரம்ப நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தமிழகத்திற்கு புதிய கடவுட் தத்துவக் கருத்துக்களை வழங்கியது முஸ்லிம் ஞானியரின் தொடர்பினால் தான் என்பது அவர்களுடைய வரலாற்றினை நுணுகி ஆராய்வோருக்குத் தெளிவாகும்.


அடுத்து, பதினோராம் நூற்றாண்டில் திருச்சியில் வாழ்ந்த தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் (வலீ) அவர்களின் இனிய போதனைகளினால் கவரப் பட்டு ஆயிரக் கணக்கானோர் இஸ்லாத்தை ஏற்று வந்ததைக் கண்ட பிறகே கவலை கொண்டு, அருகில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த இராமானுஜர் மத சீர்த்திருத்தம் செய்து, சமத்துவத்தை போதிக்கத் தொடங்கினார். தீண்டப் படாதோருக்கும் பூணூல் அணிவித்து அவர்களை பிராமணர்களாக்கினார். அதன் விளைவாக அவர் வைதிகர்களின் கொடிய சீற்றத்துக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி, நாடு துறந்து மைசூருக்கு ஓடி உயிர் தப்பினார்.


தொடரும்

கீழக்கரை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வரலாறு 


தொடர் 02

*************


சிறந்த இறைநேசச் செல்வரான மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காயல்பட்டினம் என்னும் ஊரில் ஹிஜ்ரி 1232 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 16 செவ்வாய்க்கிழமை பிறந்தார்கள்.


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தந்தை வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம், தாயார் ஆமினா உம்மா. இவர்கள் இருவரும் இறை பக்திக்கும், கல்விக்கும். ஆன்மீக சாதனைகளுக்கும் அரிய உதாரணமாகத் திகழ்ந்தார்கள். இருவரும் ஹஜ்ரத் செய்யிதினா அபூபக்கர் சித்தீக் (ரலி ) அவர்களின் பரம்பரையில் தோன்றிய மாதிஹுர் ரசூல் செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர் களின் தலைமுறையில் தோன்றியவர்கள்.


கீழக்கரைக்கு சென்றடைவதற்கு முன் மகான் சதக்கத் துல்லாஹ் அப்பா அவர்கள் காயல்பட்டினத்தில் எந்த வீட்டில் குடியிருந்தார்களோ, அந்த வீட்டிலேயே மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களும் பிறந்தார்கள்.


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும்பொழுதே அவர்களின் தந்தை வெள்ளை அஹ்மது ஆலிம் அவர்கள் ராமனாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரையில் குடியேறிவிட்டார் கள். எனவே இவர்களின் இளமைப் பிராயம் கீழக்கரையிலே துவங்கியது.


கல்வி - இளமைப் பருவம்


இளமையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்குத் திக்குவாயாக இருந்தபொழுது, இவர்களின் தந்தை இவர் களை செய்கு முகம்மது அல் நுஸ்கி என்ற பெரியாரிடம் அழைத்துச் செல்ல, அவர்கள் ஆண்டவனிடம் “துஆ” (பிரார்த்தனை) இறைஞ்சி இவர்கள் வாயில் ஓதி ஊதியதுடன் தேனை நக்கி தண்ணீரை அருந்துமாறு செய்ய, இவர்களுக்குப் பேச்சு தடுமாற்றம் நீங்கி பூரண நலம் ஏற்பட்டது.


இவர்கள் ஏழு வயதிலிருந்தே திருக்குர்ஆனை மனனம் செய்யத் துவங்கி ஒன்பது வயதிற்குள், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்து ஹாபீஸ் ஆக விளங்கினார்கள். தகப்பனாரின் சிறந்த கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள், திருக் குர்ஆன் விரிவுரைகள், ஹதீஸ், தஸவ்வுப் எனும் மெய்ஞ் ஞானக் கலை, தத்துவம், இஸ்லாமிய வரலாறு ஆகிய கலைகளை, தங்கள் தந்தை வெள்ளை அஹ்மது ஆலிம் அவர் களிடம் சில காலம் கற்றுப் புலமை பெற்றார்கள். நல்லொழுக் கமும் நற்செயலும் கொண்டஇவர்கள் அறிவைப் பெருக்கும் ஆக்கப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்தினார்கள்.


பின்னர், அக்காலத்தில் மக்களால் மிக மேன்மையாகப் போற்றப் பெற்றவரும், குணங்குடி மஸ்தான் சாகிப் (வலி) முதலான பெரியார்களின் குருநாதரும், பெரும் ஞான தேசிகருமான கீழக்கரை தைக்கா சாகிப் என்னும் ஷேக் அப்துல் காதிர் (வலி) அவர்களின் மாணவராக இருந்து மார்க்கக் கல்விகற்றார். இதன் பயனாக அவர்கள் அரபு, உர்து, பார்சி, தமிழ்ஆகிய மொழிகளிலும் நல்ல புலமை பெற்றார் கள்.


இளம் வயதிலேயே அரபியிலும், தமிழிலும் பாடல் களைப் புனையும் திறன் அவரிடம் மிளிர்ந்தது.


இவர்களின் பெற்றோர் தன் மகன் மாமேதையாகவும், பரிபூரணமான ஆலிமாகவும் விளங்க வேண்டும் என்ற 

எண்ணத்துடன் நாற்பது புதன்கிழமை இவர்களின் முடியை இறக்கி வந்தனர்.


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் சிறு வயது முதல் நுண்ணறிவும் விவேகமும் உடையவர்களாகவே விளங்கினார் கள். தமது அறிவுச் சுடராலும், ஆராய்ச்சித் திறனாலும் மார்க்க ஞானங்களை நன்கு தெரிந்து நல்லொழுக்கங்களில் ஈடுபட்டுவரலானார்கள். இறை வணக்கத்தில் பூரணமாகத் தம்மை ஆழ்த்திக்கொண்ட அவர்கள் இஸ்லாமிய கோட்பாடு களின் சகல அம்சங்களும் நிரம்பப் பெற்ற முழுமையான முஃமினாவாகவும் தங்கள் வாழ்விலேயே சில கஷ்புல் கராமாத்துகளையும் உடையவர்களாகவும் விளங்கினார்கள்.


இவர்களின் நல்லொழுக்கங்களையும், புத்திக் கூர்மையை யும் கண்டு கீழக்கரை தைக்கா சாகிப் அவர்கள், இவர்களுக்கு மேலான அரபிக் கல்விகளையும் கற்றுக்கொடுத்து, காதிரியா தரீக்கில் முரீது என்னும் ஞான உபதேசமும் கிலாபத்தும் கொடுத்து அருளினார்கள். தைக்கா சாகிப் அவர்களின் மறைவுக்குப் பின் அவர்களுக்கு ஆண் சந்ததி இல்லாது இருந்ததனால், காதிரியா தரீக்காவையும் அதன் தலைமை ஸ்தாபனமாக விளங்கிய-கீழக்கரை தைக்கா மதரசாவையும் நிர்வாகித்துப் பரிபாலிக்கும் பொறுப்பையும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் ஏற்றார்கள். இவர்கள் அக் காலத்தில் காதிரியா தரீக்காவின் மாண்புமிகு சற்குருவாக வும் இருந்து வந்தர்கள்.


தங்கள் தைக்காவில் தாலியுல் உலூம்களுக்கு (மார்க்க


விற்பன்னர்களுக்கு) மார்க்கக் கல்வியை கற்பித்துக்


கொண்டும் அதேசமயத்தில் பிறமொழியிலுள்ள மார்க்க


நூல்களை தமிழுரை செய்து அச்சிட்டு வெளியிட்டும்,


மக்களுக்கு நேர்முகமாக நல்லுபதேசங்களைச் செய்து


கொண்டும், தங்கள் வாழ்நாட்களைக் கழித்து வந்தார்கள்.


இவர்களுக்குப் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான


முரீதுகள் ஏற்பட்டனர்.


திருமணம், மக்கள்


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் இறைபக்தியும், நுண்ணறிவும், இவரின் ஆசிரியரான தைக்காசாகிப் அவர் களை மிகவும் கவர்ந்தது. அவர் தமது நான்காவது மகள் சாரா உம்மாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு மணமுடித்து வைக்க விரும்பினார்கள். அவர்களின் மனைவி அதற்கு இணங்காதபொழுது, “வருங்காலத்தில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் தம் மாமேதைத்தன்மையினால் சுல்தானின் அரியாசனத்தில் அமரும் பேறு பெறுவார். அவர் கல்விச் செல்வமும், அறிவுச் செல்வமும் படைத்தவர். அவர் நூல்கள் எழுதத் தொடங்குவாராயின் அதிலிருந்து பெரும் பணம் சம் பாதிப்பார். உபந்நியாசமும், உபதேசமும் புரியத் தொடங்கு வாராயின், உலகச்செல்வங்கள் அவரது காலடியில் வந்து குவியும்” என்று புகழ்ந்து பேசி தமது மனைவியைச் சம்மதிக்க செய்து தமது மகள் சாரா உம்மாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு ஹிஜ்ரி 1253 ஆம் ஆண்டு ரபீவுல் ஆகிர் மாதம் 27 ஆம் நாள் மணமுடித்து வைத்தார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாமனார் தைக்கா சாகிப் வலியுல்லாஹ் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி இவர்கள் பிற்காலத்தில் புலவர்கள் பேரவையில் திப்பு சுல்தான் அமர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்ததோடும் மலிக்குஷ்ஷுஅரா (புலவர்களின் மன்னன்) என்ற பட்டமும் நல்கி கௌரவிக்கப் பட்டனர். ஆலிம் அவர்களுக்கு ஐந்து குழந்தைச் செல்வங்கள் பிறந்தன. செய்யிது பாத்திமா, செய்யிது அப்துல் காதிர் ஆலிம், (கல்வத்து நாயகம்) பாலாமினா உம்மா, உம்முசல்மா, ஷாகுல் ஹமீது ஆலிம் (ஜல்வத்து நாயகம்) ஆகியோரே அவர்கள்.


இவ் ஐவரின் தாயாரான சாரா உம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் சகோதரியாகிய உம்முஹானி உம்மா அவர்களை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மணந்து கொண்டார்கள்.


குண நலன்


நடை முறை வாழ்க்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் நபிகள் நாயகத்தின் சுன்னத்தைக் கடைபிடித்து ஒழுகிவந்தார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித் தோன்றல் களுக்குப் பெரிதும் மரியாதை செய்ததுடன் அவர்களின் கோத்திரத்தை சேர்ந்த சிறுவர்கள் வந்த போதிலும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் எழுந்து நின்று


அவர்களை வரவேற்பார்கள்.


தைக்காவில் தங்கள் மாணவர்களுக்கு இஸ்லாமிய அறிவைப் புகட்டியும், தேடி வந்தோருக்கு சலிப்பின்றி ஆலோசனை நல்கியும் உதவிபுரிந்து வந்தார்கள். இன்னல் இழைத்தோருக்கும் இனிய உதவிகளைச் செய்து வந்தார்கள்.


வெளியூர்ப் பயணம்


திருமணத்திற்குப் பின்பு, மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் கண்ணனூர், தலைச்சேரி, பொன்னானி முதலான நகரங்களுக்குச் சென்று அவ்விடத்திலேயுள்ள மகான்களைத் தரிசித்து நல்லாசி பெற்றார்கள். பின்னர் காயல் பட்டினம் வந்தார்கள். இங்கு மாதவமிக்க ஞானி செய்யிது முகம்மது புகாரித் தங்கள் அவர்களது சீடரும், கலீபாவுமாகிய. உமர் வலியுல்லாஹ் அவர்களின் புதல்வரும், ஞான சிகாமணியு மான, செய்கு அப்துல் காதிர் என்ற காயல்பட்டினம் தைக்கா சாகிப் வலி அவர்களின் சமூகத்துக்குபோய் அங்கு சிலநாள் தங்கி அவர்களுடன் பழகி, அவர்களின் நல்லாசி பெற்று கீழக்கரை திரும்பினார்கள்.


தொழில்


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், 1835 ஆம் ஆண்டு தென் இந்தியாவில், மதுரை மாநகரில் “தைக்கா


ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புகொள்ள செல்லும் இடங்களில் வேண்டி இருந்தது. எல்லாம் வர்த்தகத்தை மட்டு மல்லாது, மார்க்க வழிபாடுகளையும்' கண்காணித்து ஆலோசனை கூறிவந்தார்கள்.


ஹஜ் யாத்திரையும்—அரபுநாட்டு விஜயமும்


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்கள் ஐம்பத்து ஐந்தாவது வயதில் ஹிஜ்ரி 1287 ஆம் ஆண்டு மருமகன் பல்லாக்குத் தம்பி (வலி) அவர்களுடன் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா, மதீனா சென்றார்கள். அத்துடன் அவர்கள் சிரியா, ஈராக், ஏமன் போன்ற அரேபிய நாடுகளுக்கும் பார சீகத்துக்கும் விஜயம் செய்தார்கள். அந்த நாடுகளிலுள்ள அறிஞர்களைக் கண்டு அளவளாவினார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் ஆழ்ந்த புலமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியப்புற்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் சுல்தான், காஸி, நவாபு, உலமாக்கள், மற்றும் பிரபுக்கள் ஆகியவர்களால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பலர் அவர்களின் சீடர்களானார் கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சிறந்த அரபு இலக்கியப் புலமையைப் பாராட்டி வியந்த மக்கள் பரிசுகளை யும் பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்காங்கு மக்களுக்கு உபதேசம் புரிவதிலும், முரீது பைஅத்து கொடுத்து நேர்வழி காட்டுவதிலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளி களை அல்லாஹ்வின் திருநாமம், மற்றும் உச்சாடனங்களால் குணப்படுத்தினார்கள்.


தொடரும்


ஹார்டுவேர் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தங்களுடைய வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புகொள்ள செல்லும் இடங்களில் வேண்டி இருந்தது. எல்லாம் வர்த்தகத்தை மட்டு மல்லாது, மார்க்க வழிபாடுகளையும்' கண்காணித்து ஆலோசனை கூறிவந்தார்கள்.


ஹஜ் யாத்திரையும்—அரபுநாட்டு விஜயமும்


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள், தங்கள் ஐம்பத்து ஐந்தாவது வயதில் ஹிஜ்ரி 1287 ஆம் ஆண்டு மருமகன் பல்லாக்குத் தம்பி (வலி) அவர்களுடன் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா, மதீனா சென்றார்கள். அத்துடன் அவர்கள் சிரியா, ஈராக், ஏமன் போன்ற அரேபிய நாடுகளுக்கும் பார சீகத்துக்கும் விஜயம் செய்தார்கள். அந்த நாடுகளிலுள்ள அறிஞர்களைக் கண்டு அளவளாவினார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் ஆழ்ந்த புலமையைக் கண்டு அவர்கள் பெரிதும் வியப்புற்றனர். சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் சுல்தான், காஸி, நவாபு, உலமாக்கள், மற்றும் பிரபுக்கள் ஆகியவர்களால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். பலர் அவர்களின் சீடர்களானார் கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் சிறந்த அரபு இலக்கியப் புலமையைப் பாராட்டி வியந்த மக்கள் பரிசுகளை யும் பட்டங்களையும் வழங்கினார்கள். ஆங்காங்கு மக்களுக்கு உபதேசம் புரிவதிலும், முரீது பைஅத்து கொடுத்து நேர்வழி காட்டுவதிலும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளி களை அல்லாஹ்வின் திருநாமம், மற்றும் உச்சாடனங்களால் குணப்படுத்தினார்கள்.

Saturday, 9 November 2024

இலங்கையில் தரீக்காக்களின் வளர்ச்சி

 



#இலங்கையில் #தரீக்காக்கள் ஆற்றிய பணிகள் மௌலவி MTM. அரீழ் (பாரி) - வெலிகாமம்


இலங்கைத் திருநாட்டிற்கு தரீக்காக்களின் செய்குமார்கள் வருகைதர முன்னரே இங்குள்ள முஸ்லிம்கள் தரீக்காக்கள் மீது பற்றும் செய்குமார்கள் மீது மதிப்பும், மரியாதையும் உடையோராகவும் விசேடமாக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் அல்ஜீலானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மீது பேரன்பும் பெரு மதிப்பும் வைத்தோராகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்க்கு இந் நாட்டின் நலா புறங்களிலும் காணப்படும் மஸ்ஜித்கள் சான்றுகளாய் விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.


அழியாத நாமம்


சன்மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்ற அர்த்தத்தைப் பொதிந்த முஹ்யித்தீன் என்ற திருப் பெயரால் அழைக்கப்படும் பள்ளிவாசல்கள் இம்மண்ணிலே நிலைத்திருக்கும் காலம் முழுவதும் அப்பெயருக்குச் சொந்தக்காரரான அஷ்ஷெயகு அப்துல் காதிர் அல்ஜீலானீ (கத்தஸல்லாஹி ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களையும் அவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரீக்காவையும் மக்களின் உள்ளங்களிலிருந்து அகற்றுவது சாத்தியமற்றது எனக் கூறும் அளவுக்கு முஹ்யித்தீன் மஸ்ஜித்கள் நிறைந்து காணப்படுகின்றன.


உதாரணத்திற்கு மூன்று மாவட்டங்களை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.


புத்தளம் மாவட்டத்திலுள்ள த்திலுள்ள மஸ்ஜித்களில் 32 மஸ்ஜித்கள் முஹ்யித்தீன் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அங்குள்ள புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு, திகழி, கொத்தாந்தீவு, முதலைப்பாளி, நல்லான் தழலை, ஆலங்குடா. கரம்பை, பெருக்கு வட்டான் என எல்லா ஊர்களிலுமுள்ள பள்ளிவாசல்களை முஹ்யித்தீன் மஸ்ஜித் என்றே அழைக்கிறார்கள். மேலும் கி.பி. 1434ல் புத்தளத்தில் முஹ்யித்தீன் ஆண்டகை தர்கா நிர்மாணிக்கப்பட்டது.


(நூல் :- புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு)


மேற்படி தகவல் மூலம் இன்றைக்குச் சுமார் 575 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் குத்பு நாயகத்தின் அபிமானிகளாக இருந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம்.


இவ்வாறே மாத்தறை மாவட்டத்தில் மாத்தரை டவுண், வலஸ்முள்ள, யகஸ் முள்ள, மீயல்ல, திக்வெல்ல, வெலிகம, வெலிப்பிட்டி, பாலத்தடி, கப்புவத்தை, தங்கல்ல, போர்வை ஜும்ஆ மஸ்ஜித்கள் அனைத்துமே முஹ்யித்தின் மஸ்ஜித்என்றே அழைக்கப்படுகின்றன. (நூல்:- அஸ்ஸிராஜ் இதழ்-14)


இம்மாவட்டத்தில் மிகப்பழமை வாய்ந்த பள்ளிவாசலெனக் கருதப்படும் பாலத்தடி ஜும்ஆ மஸ்ஜித் சுமார் 700வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகக் நம்பப்படுகிறது. இதிலிருந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் இப்பகுதிகளில் வாழ்ந்தோர். முஹ்யத்தின் ஆண்டகை அவர்களின் முஹிப்பீன்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது. இதுபொல் யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி, கிளிநொச்சி, மானிப்பாய், கொடிகாமம், நாச்சிக குடா, நெய்னா தீவு, வட்டக்கச்சி மஸ்ஜித்களும் சிவலை என்ற இடத்திலுள்ள தைக்காவும் முஹ்யித்தின் என்ற நாமத்தாலேயே அழைக்கப்படுகிறமை எமது தாகும்


கவனத்திகுரியதாகும். (நூல் :- யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை)


இவ்வாறு இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் குத்புகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகையை நினைவு படுத்தும் இறையில்லங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை அந்த நாதாக்கள் மீது மக்கள் வைத்த அன்பின் அடையாளச் சின்னங்கள் என வர்ணிப்பதில் தவறில்லை.


காரணிகள்


காதிரிய்யா தரீக்காவும் அதன் ஆத்ம ஞானிகளும் இங்கு வருகை தர முன்னர் குத்பு நாயகத்தின் பெயர் நாமம் இந்நாட்டின் எல்லாப்பாகங்களிலும் எப்படி இடம் பிடித்தது என்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் காணப்படாத அக்காலத்தில் இது எவ்வாறு சாத்தியமானது என்றும் நாம் சிந்திக்கலாம்.


பின்வரும் நிகழ்வுகளை இதற்கான காரணிகளாக நாம் இனங்காணலாம்.


*ஆதம் மலையை தரிசிப்பதற்காகப் பல ஸுபிய்யாக்களும் இறை நேசர்களும் இங்கு வந்து சென்றமை.


*அராபியருடனான வர்த்தக தொடர்புகள் காணப்பட்டமை


*வர்த்தகம் நிமித்தம் இங்குவந்த அரபிகள் துறை முக நகரங்களை அண்டி குடியேற்றங்களை அமைத்துக் கொண்டமை.


*இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்கான கல்விப் பயணங்கள் மேற்கொண்டமை.


*ஹஜ்ஜுக்கான ஒன்றுகூடல் மூலம் அரபுலக தொடர்புகள் அதிகரித்தமை


*முஹ்யித்தின் ஆண்டகையின் பாசறையில் கல்வி பெறுவதற்காக பக்தாதை நோக்கி அரபு நாடுகள் பலவற்றிலிருந்தும் மாணவர்கள் சென்றதோடு, தத்தமது நாடுகளுக்கு திரும்பி வந்ததும் அவர்களின் தரீக்காபைத் துயர்ந்து போதனையில் ஈடுபட ஆரம்பித்தமை.


*அஹ்லுபைத்தைச் சேர்ந்த பலர் இங்கு வந்து குடியேரியமை.


செய்குமார்கள் வருகை


இவ்வாறு தரீக்காக்கள்- அதன் தலைவர்கள் பற்றிய அறிமுகமும் நல்லெண்ணமும் நிலவிய சூழலில் தான் செய்குமார்கள் என அழைக்கப்பட்ட ஆத்ம ஞானிகளின் வருகை இங்கு நிகழ்ந்தது. இவர்களின் விஜயம் சுதேச முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், ஆன்மீகம், வணக்கம் என எல்லாத் துறைகளிலும் எழுச்சியும் ஏற்றமும் ஏற்பட அடித்தளமிட்டது என்பதை வரலாற்று ஏடுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வகையில் இலங்கைக்கு வந்த முக்கிய ஞானவான்களையும், அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக நோக்குவோம்.


தொடரும்...

Sunday, 3 November 2024

வாராந்த மஜ்லிஸ்

 #ஏறாவூரில் இன்று 03/11/2024 #மெளலானா உம்மா #தர்ஹாவில் வாரந்த புனித #பத்ர் மெளலீத் மஜ்லிஸ் சங்கைக்குரிய குருநாதர் அஹ்லுபைத் செய்யிதுஸ் சாதாத் அஸ்ஸெய்யித் அன்வர் மெளலானா அல் ஹஸனி வல் ஹுஸைனி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.