السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 28 September 2025

யார் இந்த கூட்டம் ?

 


 பதில்:  

காதிரிய்யா தரீக்கா கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸில்ஸிலாவில் வருவது , ஜிஷ்தியா தரீக்கா ஙரீப் நவாஸ் காஜா முஈனுத்தீன் ஜிஸ்த்தி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் வழியில் வந்தது , இவ்வாறுதான் ஷாதுலிய்யா , நக்ஷபந்தியா உள்ளிட்ட தரீக்காக்களுமாகும்.


ஒவ்வொரு தரீக்காவுக்கும் தனித்தனியான பயிற்சி முறைகள் உள்ளன, அவற்றைத் தனியாகவே பின்பற்றவேண்டும்.


இரண்டு மத்.ஹபுகளை இணைத்து எவ்வாறு ஒரு மத்ஹபாக்கிப் பின்பற்ற முடியாதோ அவ்வாறுதான் இருதரீக்காக்களை இணைத்து ஒரு தரீக்காவாக்கமுடியாது.  


ஷைகுனா அஷ்ஷாஹ் ஸூபிஹளறத் நாயகமவர்களுக்கு காதிரிய்யா, றிபாஇய்யா, ஜிஷ்தியா நக்ஷபந்தியா உள்ளிட்ட நான்கு தரீக்கா க்களுக்கும் கிலாபத் , இஜாஸத் இருந்தும் காதிரிய்யா தரீக்கா வில் தான் பைஅத் கொடுப்பார்கள், 


பொதுவாக தரீக்காக்களின் போதனைகளின் நோக்கம் இரண்டுதான்.


1- அல்லாஹுத்த ஆலா வை நேசிப்பது.

2- மனோ இச்சைக்கு மாறு செய்வது 

இந்த இரண்டையும் அடையும் வழிகள் பல உள்ளன. அவற்றை அடையும் வழிகளில் வித்தியாசம் உண்டு.


ஏதாவது ஒரு வழியைத் தேர்வு செய்து அதை தொடர்ந்து செய்தால் நோக்கத்தை அடையலாம் .

காதிரிய்யா றிபாஇய்யா, காதிரிய்யா ஜிஸ்த்திய்யா

காதிரிய்யா நக்ஷபந்தியா என்றெல்லாம் பல தரீக்காக்கள் உள்ளன.

இதில் எந்த குறையும் கிடையாது ஆனால், 


தரீக்கா வின் நோக்கத்தை அறியாமல் இரண்டையும் கலந்து ஒன்றாக்கி புதிதாக ஒரு தரீக்கா வை உருவாக்குவது மோசடியாகும்.


Saturday, 27 September 2025

இரண்டு சஜ்தாக்களின் ரகசியம்

 

இரண்டு சஜ்தாக்களின் ரகசியம்
இரண்டு சஜ்தாக்களின் ரகசியம் – வாழ்க்கையும் மரணமும் நினைவூட்டும் சின்னம்


முஸ்லிம் தொழுகையின் அடிப்படைத் தூண்களில் ஒன்றான சஜ்தா (سجدة) என்பது, அடியாரின் ஆன்மீக உச்ச நிலையை வெளிப்படுத்தும் தருணமாகும்.


 அதில், நமது நெற்றி மண்ணைத் தொடுகிறது. ஆனால், ஒரே ஒரு சஜ்தா போதாமல், ஒவ்வொரு ரக்அதிலும் (ركعة) இரு சஜ்தாக்கள் வைக்கப்பட்டுள்ளன. 


ஏன் இரண்டும்? ஒரே ஒன்று போதாதா? என்ற கேள்வி, மனித மனதில் இயல்பாகவே எழும்.


இந்த கேள்வியை ஒருவர்க் கேட்டபோது, அமீருல்-முஃமினீன் அலீ இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அளித்த விளக்கம் மிக ஆழமான தத்துவ, ஆன்மிக சிந்தனையை வெளிப்படுத்துகிறது.


குர்ஆன் சான்று :


مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى


"அதிலிருந்தே (மண்ணிலிருந்தே) உங்களை உண்டாக்கினோம்; அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்துவிடுவோம்; மேலும் அதிலிருந்தே மீண்டும் ஒருமுறை உங்களை எழுப்புவோம்."

سورة طه: 55) 


முதல் சஜ்தா – பிறப்பு நினைவூட்டல்


ஒருவர் சஜ்தாவில் தாழ்ந்து நெற்றியைத் தரையில் வைக்கும் தருணத்தில், அவர் மனதில் இந்த செய்தி பதிகிறது:


"மண்ணிலிருந்தே நாம் உண்டாக்கப்பட்டோம்."

எனவே, மனிதன் எவ்வளவு உயர்ந்த அறிவும், செல்வமும், ஆற்றலும் பெற்றிருந்தாலும், அவன் ஆரம்பமும் மண்ணில்தான் என்பதை இந்தச் சஜ்தா நினைவூட்டுகிறது.


இரண்டாம் சஜ்தா – மரணம் நினைவூட்டல்


மீண்டும் சஜ்தா செய்யும்போது, அது ஒரு வலுவான உண்மையை நமக்கு அறிவுறுத்துகிறது:


"மண்ணுக்குள் நாம் திரும்புவோம்."

இதனால், மரணம் ஒரு அந்நிய அச்சமாக அல்லாமல், இயல்பான திரும்பிச்சேர்வாக புரியப்படுகிறது.


 மனிதன் எப்போதும் தன் இறுதியை மறந்துவிடாமல், வாழ்நாள் முழுவதும் தாழ்மையுடனும், பொறுப்புடனும் வாழ வழி வகுக்கிறது.


சஜ்தாவிலிருந்து எழுதல் – மறுமை நினைவூட்டல்


இரண்டு சஜ்தாக்கள் முடிந்து, மனிதன் மீண்டும் தன் தலையை உயர்த்துகிறான். அதுவே:


"மண்ணிலிருந்தே மீண்டும் உங்களை எழுப்புவோம்" என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியை நினைவூட்டுகிறது.

இது மறுமை நாள் (يوم القيامة) பற்றிய நம்பிக்கையை உயிர்த்தெழச் செய்கிறது.


ஆன்மிகச் செய்தி


ஒவ்வொரு ரக்அதிலும் இரு சஜ்தாக்கள் வைக்கப்பட்டிருப்பது, ஒரு உடல் அசைவு மட்டும் அல்ல; அது வாழ்க்கைச் சுழற்சியின் சின்னம்:


1. பிறப்பு – மண்ணிலிருந்து தோற்றம்


2. மரணம் – மண்ணுக்குள் மறைதல்


3. உயிர்ப்பு – மறுமை நாளில் மண்ணிலிருந்து எழுத்தல்


இதன் மூலம் முஸ்லிம், தன் ஒவ்வொரு தொழுகையிலும் வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தையும், மரணத்தின் நிச்சயத்தையும், மறுமையின் நம்பிக்கையையும் மீண்டும் மீண்டும் சிந்திக்கிறான்.


அதனால் தான், சஜ்தா என்பது ஒரு "இருமுறை வணக்கம்" அல்ல, அது மனித வாழ்க்கையின் ஆதாரம், முடிவு, மறுஉயிர்ப்பு ஆகிய மூன்றையும் கற்றுக்கொடுக்கும் ஆன்மிகப் பாடம்.


இப்படியாக, தொழுகையின் ஒவ்வொரு ரக்அதிலும் இரு சஜ்தாக்கள் வைக்கப்பட்டிருப்பது, நமது இருப்பின் துவக்கத்தையும், முடிவையும், மறுமையையும் நினைவூட்டும் சின்னம் என்பதை அமீருல்-முஃமினீன் அலீ இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு. அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


தொகுப்பு :- மௌலவீ Hmm. பஸ்மின் றப்பானீ.

28/09/2025

ஷெய்க் அலி அல்-தந்தாவி நீதிபதியாக

 

ஷெய்க் அலி அல்-தந்தாவி நீதிபதியாக

ஷெய்க் அலி அல்-தந்தாவி நீதிபதியாக – ஆராய்ச்சிமிகு கட்டுரை


முன்னுரை


ஷெய்க் அலி அல்-தந்தாவி (1909–1999) நவீன அரபு உலகின் புகழ்பெற்ற அறிஞர், சிந்தனையாளர், இலக்கியவாதி மற்றும் பத்திரிகையாளர் ஆவார். ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டமாக சிரியா நாட்டில் நீதிபதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நீதிமன்றத்தில் காட்டிய நேர்மை, இரக்கம், மனிதநேயம் ஆகியவை அவரை வரலாற்றில் தனித்துவப்படுத்தின.


---


நீதிபதியாக நியமனம்


அலி அல்-தந்தாவி 1940களில் சிரியாவில் நீதித்துறைக்கு நியமிக்கப்பட்டார். அவர் தமஸ்கஸ், ஹமா, ஹலப் போன்ற நகரங்களில் நீதிபதியாகச் செயல்பட்டார். அவருக்கு சட்டம் ஒரு கடினமான விதிமுறை மட்டும் அல்ல, மாறாக மனித வாழ்க்கையின் நியாயம் மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் கருவி என்று நம்பிக்கை இருந்தது.


---


அவரது தீர்ப்புகளில் மனிதநேயம்


அவர் தீர்ப்புகளில் பல சமயங்களில் சட்டத்தை மட்டும் அல்லாமல், இரக்கமும் சமூக நலனும் பிரதிபலித்தன.


ஒரு நிகழ்வு: ஒருமுறை ஒரு ஏழைத் தொழிலாளி திருட்டு குற்றச்சாட்டில் கொண்டு வரப்பட்டான். ஆதாரம் பலவீனமாக இருந்தாலும், அவன் பசியால் அப்படி செய்தது தெளிவாயிற்று. அப்போது தந்தாவி நீதிபதி, சட்டத்தின் அடிப்படையில் தண்டனையைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தும், அவர் குற்றவாளியை சிறை தண்டனையால் அல்லாமல், சமூக சேவையால் திருத்தும் வகையில் தண்டித்தார். இதனால் குற்றவாளி வாழ்க்கையைச் சீர்திருத்திக் கொண்டான்.


மற்றொரு சம்பவம்: விவாகரத்து தொடர்பான வழக்கில், கணவன் மனைவியை அநியாயமாக விட்டுச் செல்ல முயன்றான். தந்தாவி நீதிபதி இருவரையும் அழைத்து, குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி பேசினார். சட்டம் வழங்கிய உரிமையை மட்டும் பார்க்காமல், அவர் குடும்பத்தை காப்பாற்றுவதற்கான முயற்சியையும் செய்தார். இறுதியில் அந்த தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.


---


நீதியிலும் துணிச்சலிலும் புகழ்


அவர் அதிகாரம் வாய்ந்தவர்களின் அழுத்தத்தையும் பயப்படாமல், உண்மையை ஆதரித்து தீர்ப்பளித்தார்.


ஒரு அரசியல் வழக்கு: சிரியாவில் அரசாங்கம் எதிர்ப்பாளர்களை அநியாயமாக வழக்குப் போட்டபோது, தந்தாவி நீதிபதி வெளிப்படையாக உண்மையைச் சொன்னார். அதனால் அரசாங்கம் அவரை மாற்றியது. ஆனால் மக்கள் அவரை “நீதியின் குரல்” என்று அழைத்தனர்.


---


எழுத்திலும் நீதித்துறை அனுபவம்


அவரது நீதித்துறை அனுபவம், பின்னர் அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் உரைகளில் வெளிப்பட்டது. அவர் பலமுறை குறிப்பிட்டார்:


> "நீதிபதி ஒரு சட்ட இயந்திரம் அல்ல; அவர் மனிதர்களின் வாழ்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு பெற்றவர்."


இதனால், அவரது எழுத்துகள் சட்ட மாணவர்களுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும் வழிகாட்டியாகின.


முடிவு


ஷெய்க் அலி அல்-தந்தாவி ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இஸ்லாமிய சிந்தனையாளர் மட்டுமல்லாது, ஒரு நீதிமிகு, மனிதநேயம் நிறைந்த நீதிபதி என்றும் வரலாற்றில் நிலைத்தார். அவரது தீர்ப்புகள், நிகழ்வுகள், நீதியில் காட்டிய துணிச்சல் – இவை அனைத்தும் இன்றும் நீதித்துறை மற்றும் சமுதாயத்திற்குப் பாடமாக உள்ளன.🔹

Thursday, 25 September 2025

விஷமமான கிராமம் இது...! 🏚️🌋


விஷமமான கிராமம் இது...! 🏚️🌋


***************************************


மகீதா...!


கைபரில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்.


யூதர்கள் பெருமளவு வாழ்ந்து வந்த இந்த கிராமத்தில் ஜைனப் பின்த் ஹாரிஸ் என்ற யூதப் பெண் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் விருந்தளிப்பதாக அழைத்தாள்.


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்லத் திட்டமிட்டு இறைச்சியில் விஷம் கலந்து விடுகிறாள்.


விருந்துக்கு வந்த பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட விருந்துணவை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.


ஆனால் அல்லாஹ் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த விஷயத்தை காட்டிக் கொடுத்து விட்டான்.


சுதாரித்துக் கொண்ட ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவை சாப்பிடுவதை நிறுத்தி தனது தோழர்களுக்கும் அறிவித்து விடுகிறார்கள்.


அதற்குள்ளாக ஒரு கவளம் சாப்பிட்டு விட்ட ஹஜ்ரத் பிஷ்ரு இப்னு பராஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விஷ உணவை சாப்பிட்டு விட்டதால் அதன் காரணமாக இறந்து விடுகிறார்கள்.


விருந்தாளிகளாக அழைத்து அதில் விஷம் வைத்து கொலை செய்யும் கொடூர மனம் படைத்த அந்த யூதர்களின் கிராமம் இது தான்..!


இங்கு தான் மேற்காணும் மனிதத்தன்மையற்ற செயல் நடைபெற்றது.


#khaibar #makeeda #poisenfood






குத்பு நாயகம் என்றால் ......

 

இது குத்பு நாயகம் அவர்களுடைய மாதம். ஸுன்னத்து வல்ஜமாஅத்து மக்கள் அதிலும் குறிப்பாக காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களின் சிறப்புகளைப் பற்றி மனாகிபுகளில் வாசித்து, அன்னவர்களின் பெயரால் முஹ்யித்தீன் மௌலூத் ஓதி அவர்கள்மீது மஹப்பத்தை அதிகரித்துக்கொள்ளும் மாதம்.


‎‫قطب الاقطاب غوث الأعظم محيي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز رضي الله عنه‬

"குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் - ரழியல்லாஹு அன்ஹு"


இது எல்லா உலமாக்களும் குத்பு நாயகத்தைப் பற்றிய பயான்களில் அடிக்கடி உபயோகிக்கக் கூடிய ஒரு சொற்றொடர். சரி இதன் பொருள் என்ன என்று சிந்தித்தீர்களா?


புவியியல் பாடத்தில் நீள் கோடுகள் என்று இருக்கின்றன அல்லவா? அக்கோடுகள் எல்லாம் வட – தென் துருவங்களில் ஒரே இடத்தில் ஒன்று சேர்கின்றன. அப்படி ஒன்று சேரும் இடத்துக்கு வட துருவம், தென் துருவம் என்று பெயர். அரபியில் இது குத்பு ( ‫قطب‬ ) என்று சொல்லப்படும்.


அதே மாதிரி உலகில் உள்ள எல்லா அவ்லியாக்களும் ஒரு வலியுல்லாஹ்வின் ஆத்மீக ஆட்சியின் கீழ் ஒன்று சேர்வார்கள். அவர் அந்த எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பார். எனவே அவருக்கு ஆத்மீகப் பரிபாஷையில் “குத்பு" என்று பெயர்.


அவ்வாறு எல்லா அவ்லியாக்களுக்கும் தலைவராக இருப்பவருக்கு "குத்பு" என்றும், அந்த "குத்புமார்கள்" அனைவருக்கும் தலைவராக இருப்பவருக்கே "குத்புல் அக்தாப்" (‫قطب الاقطاب‬) என்றும் பெயர்.


"கௌதுல் அஃழம்" (‫غوث الأعظم‬) என்றால் பொருள் என்ன ?

"கௌது" (‫غوث‬) என்றால் "இரட்சிப்பவர்" என்பது பொருள். அதாவது : "பாதுகாப்பவர்" என்று தற்கால இலகு நடையில் கூறலாம். பிள்ளைகளைப் பெற்றோர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதில்லையா? மாணவர்களை ஆசிரியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து ஜனாதிபதி "பாதுகாக்கிறார்" என்றும், நோயாளிகளை நோயிலிருந்து வைத்தியர்கள் "பாதுகாக்கிறார்கள்" என்றும், கூறுவது எல்லோரும் அறிந்த மொழி வழக்கு அல்லவா?

நபிமார்களும் அவ்லியாக்களும் குப்ரு, சிர்க்கு, பாவங்களில் நின்றும் மனித இனத்தை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவதும் சர்வ சாதாரணமாக அனைவரும் அறிந்த விடயம்.


எனவே அவ்லியாக்களின் தலைவரான குத்பு நாயகம் அவர்களும் மனிதர்களை "பாதுகாக்கிறார்கள்" என்று கூறுவது மிகவும் தெளிவான மொழி நடை அல்லவா? இதனை அரபு மொழியில் ( ‫غوث‬ ) கௌது என்கிறோம். ஏற்கனவே கூறிய விதம் அவர்கள் எல்லா குத்புமார்களுக்கும் தலைவராக இருப்பதால் (‫غوث الأعظم‬) கௌதுல் அஃலம் என்று கூறுகிறோம். (‫الأعظم‬) அஃலம் என்றால், வலுப்பமான, மகத்துவமான, பெரிய, மேலான எனப் பொருள்படும். எனவே "பாதுகாப்பவர்களில் மிகவும் மேலானவர்கள்" என்பது இதன் பொருள். மொழி ரீதியாக சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல.


"முஹ்யித்தீன்" (‫محيي الدين‬) என்றால், அவர்கள் தீனுல் இஸ்லாத்தை ஹயாத்தாக்கியவர்கள் என்று பொருள். மார்க்கத்தை ஹயாத்தாக்கிய நான்கு கலீபாக்கள், ஹனபி, மாலிக்கி, ஷாபியி, ஹன்பலி, புகாரி, முஸ்லிம், அபூ தாவுத், மாதுரீதி, அஷ்அரி இன்னும் உள்ள ஏராளமான இமாம்களுக்கும் இச்சொல் பொருந்தும். எனினும், குத்பு நாயகம் அவர்களின் காலத்தில் ஆத்மீக துறையில் ஏராளமான தவறான கருத்துக்களும் வழிகேடுகளும் நிறைந்திருந்து, அவற்றை அவர்கள் நீக்கி, எல்லா அவ்லியாக்களின் ஆத்மீகப் பாதைகளையும் ஒன்றிணைத்ததால் அவர்களுக்கு "முஹ்யித்தீன்" என்ற பெயர் நிலைத்து நின்றது. அல்லாஹு தஆலா அக்கால ஸாலிஹீன்களின் மனதில் அந்த உணர்வைப் ஏற்படுத்தியதன் காரணமாக அவர்கள் குத்பு நாயகத்தை அவ்வாறு அழைக்கலானார்கள்.


அப்துல் காதிர் (‫عبد القادر‬) என்பது அவர்களின் இயற் பெயர். தத்துவம் (சக்தி) உள்ள அல்லாஹ்வின் அடியான் என்பது அதன் பொருள். இப்போதும் இப்பெயரைத் தாங்கிய ஏராளமான முஸ்லிம்கள் உலகில் இருக்கின்றார்கள்.


"ஜீலானி" (‫الجيلاني‬) என்பது, அவர்கள் பாரசீக நாட்டில் "ஜீலான்" என்ற ஊரில் பிறந்ததால் இவ்விதம் அழைக்கப்படுகிறார்கள்.


"கத்தஸல்லாஹு" (‫قدس الله‬) என்றால், அல்லாஹ் அவர்களை கௌரவிப்பானாக, தூய்மைப் படுத்துவானாக, பறக்கத்துச் செய்வானாக என்பது பொருள். ரஸூலுல்லாஹ் மீது ஸலவாத்து சொல்வது போன்று, ஸஹாபாக்கள் மீது " ரழியல்லாஹு அன்ஹு" அவரைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று கூறுவது போன்று, குத்பு நாயகம் அவர்களுக்கும் ஏனைய அவ்லியாக்களுக்கும் இவ்வாறு துஆக் கேட்பது ஆன்மீக வழக்கு. "ஸிர்ரஹு" (‫سره‬) என்றால் அவர்களின் ரகசியத்தை, யதார்த்தத்தை , அகமியத்தை என்பது பொருள். எனவே குத்பு நாயகம் அவர்களின் அகமியத்தை பறக்கத்தானதாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆக் கேட்பதே இது. " அல் அஸீஸ்" (‫العزيز‬) என்றால், வலுப்பமான, மகத்துவமான என்பது பொருள். ஆக, "அவர்களுடைய மகத்துவமான அகமியத்தை பறக்கத்தானதாக ஆக்குவாயாக" என்று அல்லாஹ்விடம் கேட்கும் துஆ தான் இது. இதில் விளங்காத புதிர் ஒன்றும் இல்லை.


"ரழியல்லாஹு அன்ஹு" (‫رضي الله عنه‬) என்றால் அவர்களைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது அர்த்தம். ஸஹாபாக்களுக்கும், தாபியீன்களுக்கும், தபவுத்தாபியீன்களுக்கும் பெரும் அவ்லியாக்களுக்கும் இவ்வாறு துஆ கேட்பது இஸ்லாமிய உலக வழக்கு. அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்று முஸ்லிம் உம்மத்து யாரைப் பற்றி நம்புகிறார்களோ அவர்களுக்கு இவ்வாறு துஆ கேட்பது முஸ்லிம்களின் வழக்கமாக இருந்தது.


எனவே நாமும் குத்பு நாயகம் அவர்களை இவ்வாறு புகழ்ந்து, அல்லாஹ்விடம் துஆக் கேட்டு, அதன் பறக்கத்தையும் அவர்களின் நேசத்தையும் பெற்றுக் கொள்வோமாக..!

ஆமீன்.!


Rcvd via whatsapp

Tuesday, 23 September 2025

இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2

 

இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2

இஸ்லாத்தில் பேய், பிசாசுகள் இருக்கின்றதா? தொடர்= 2

●•┄─━━━•▣▣•━━━─┄•●

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,

மௌலவி பாஸில் ஷெய்கு

*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

●•┄─━━━•▣▣•━━━─┄•●

மனிதனில் ஜின், ஷைத்தான் ஊடுருவும் வழிகள்

-----------------

ஜின், ஷைத்தான்கள் மனித உடலில் ஊடுருவி பல்வேறு தாக்கங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. மனிதனின் உடல், உள சமநிலைத் தன்மையை சீர்குலைத்து நோயாளியாகவும் பைத்தியக்காரணாகவும், மன நோயாளியாகவும் மாற்றிவிடும் ஆற்றல் இவர்களுக்குண்டு. இப்படி ஷைத்தானால், ஜின்களால் பீடிக்கப்பட்டவர்களை அனுபவரீதியாக காண்கின்றோம். இவர்களுக்கு சித்தமிருப்பதில்லை. சிலவேளைகளில் சுய நினைப்பும் இருப்பதில்லை. இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டால் தவிர, சுகம் கிடைப்பது அரிது. எனவே, ஜின், ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதனுள் ஊடுருவி மக்களுக்கு துன்பம் கொடுக்கும் துயரத்தை ஏற்படுத்தும் வழிகளை அறிந்திருத்தல் அவசியமாகும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஜின், ஷைத்தான் ஊடுருவும் வழிகளை தெளிவாக கூறியுள்ளார்கள். அவற்றிலிருந்து சிலவற்றை வாசகர்களாகிய உங்களுக்கு தருகின்றோம். அவை வருமாறு,


01. கெட்ட கனவு

கனவில் ஷைத்தான் ஊடுருவி கவலை, அச்சம், தொல்லை, மனக்குழப்பம் போன்றவைகளை ஏற்படுத்தும் இதனை பின்வரும் நபி மொழிகள் உறுதி செய்கின்றன.


கனவு மூன்று வகையில் அமையும். மகிழ்ச்சிகரமான அனைத்து கனவுகளும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவதாகும். அச்சம், கவலை போன்றவற்றை தோற்றுவிக்கும் அனைத்து கனவுகளும் ஷைத்தானின் தூண்டுதல்களாகும்.

அறிவிப்பவர் : அவ்ப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : இப்னு மாஜா — 340-1 3154-3155


நீங்கள் காணும் (சந்தோஷமான) கனவுகள் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வருவதாகும். அவ்வாறு நல்ல கனவுகள் கண்டால் அல்லாஹ்வைப் புகழுங்கள்! அக்கனவை அடுத்தவர்களுக்கும் அறிவியுங்கள். மாறாக கவலை தரும் கனவுகள் ஷைத்தான் தரப்பிலிருந்து வருவதாகும். அதன் தீங்குகள் வந்து சேராமல் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். மற்றவர்களுக்கு அதனை கூற வேண்டாம்.

புகாரி ஷரீப் : 369-12 ஹதீது எண்-6985


02. மரணவேளையில் வழிகெடுத்தல்

உயிர் பிரியும் வேளையில் ஷைத்தான் ஊடுருவி பல்வேறு தொல்லைகள் கொடுக்கும் மன ஒர்மையை குலைத்து ஈமானை இழக்க முயற்சிக்கும். அதனால், மரணவேளையில் ஷைத்தானின் தீங்கு அணுகாமல் கார்மானம் தேடுமாறு ரஸூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். நபியவர்கள் இவ்வாறு அதிகமாக கார்மானம் தேடி பின்வருமாறு துஆ கேட்டுள்ளார்கள்.


யாஅல்லாஹ் ஒவ்வொரு பொருட்களின் அடியிலிருந்து வரும் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இடிபாடுகள்! நீரில் மூழ்குதல்! எரியுண்டு போகுதல், மரண வேளைகளில் ஷைத்தான் மேலாதிக்கம் பெறுதல், இறைபாதையில் போரிட்டு பின்நோக்கிச் சொல்லும்போது மரணம் நிகழ்தல், விஷம் தீண்டி அதனால் மரணம் நிகழ்தல் போன்றவைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

நூல் : நஸஈ 318-2 மிஷ்காத், ஹதீது எண் - 2473


03. வாந்திபேதி பெருந்தீட்டுக்களை உண்டாக்குதல்

வாந்திபேதி, உங்களின் விரோதியான ஜின்களின் அம்பின் சொட்டுக்களாகும். அது உங்களுக்கு (முஃமின்களுக்கு) ஷஹாதத் ஆகும்.

அறிவிப்பவர் : அபூபக்கர் மூஸல்அஷ்ஆரி ரழியல்லாஹு அன்ஹு

நூல் : தப்றானி, பத்ஹுல் பாரி — 182-10


ஹம்னா பின்த ஜஹ்ஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கட்கு வழக்கத்தை விட அதிக நாட்கள் மாதாந்திர உதிரப்போக்கு எற்பட்டது. அதுபற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அது ஷைத்தானின் சதிவேலையில் ஒரு சதியாகும் என்று பதில் கூறினார்கள்.

அபூதாவூத் - 56-1 , ஹதீது எண் - 267

நஸஈ : 40-1,ஹதீது எண் - 110 இமாம்


04. மனிதனில் முழு ஆதிக்கம் செலுத்துதல்

அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மகன் அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, தனது தந்தையிடம் ஜின், ஷைத்தான் உடலில் புகுந்து ஆதிக்கம் செலுத்தும் திராணி பெற்றுள்ளான் என்பதை பலர் மறுக்கின்றார்கள். உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, இமாமவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள்.


மகனே! இவர்களின் வாதம் சுத்தப்பொய்! ஷைத்தான்தான் இவர்கள் நாவின் வழியாகப் பேசுகின்றான் என்பதுதான் உண்மை என்று இப்னுதைமிய்யா கூறுகின்றார்.

ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, பாகம் - 19, பக்கம் - 12


இப்னுதைமிய்யா மேலும் அதே நூல் பாகம் 24, பக்கம் 277ல் கூறுகின்றார்கள்.


வட்டி உண்பவர்கள் ஷைத்தான் பிடிப்பவன் போன்று மறுமையில் எழுப்பப்படுவான் குர்ஆன் 2:275 என்று அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான். இதனை அடிப்படையாக வைத்து ஜின், ஷைத்தான் மனிதனின் உடலில் ஊடுருவி முழு ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் பெற்றுள்ளான் என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்று இப்னு தைமிய்யா இயம்புகின்றார்.

ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, 12-19


நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் குருதி ஓடும் இடங்களிலெல்லாம் ஓடுகின்றான் என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

புகாரி ஷரீப் : 159-13

முஸ்லிம் : ஹதீது எண் - 1712


மனித உடலில் ஜின், ஷைத்தான் உட்புகுந்து குடிவாழும் என்று இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தனது மகாலத்து அஹ்லுஸ்ஸுன்னா என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதாக இப்னு தைமிய்யா தனது மஜ்முஉல் பதாவா பாகம் - 19, பக்கம் 12இல் குறிப்பிடுகிறார். மேலும் இப்னுதைமிய்யா கூறுகிறார்


ஜின், ஷைத்தான் உடலில் உட்புகுந்து உடலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் தொல்லைகள் கொடுப்பதும் ஷரீஅத் அனுமதித்த உண்மைகளாகும், ஷரீஅத்தில் பொய் புரட்டு செய்பவர்கள்தான் இந்த உண்மையை மறுப்பார்கள்.


சில அறிவிலிகளும், வழிகேடர்களுமே இதனை மறுக்கின்றனர். முஃதஸிலாக்களின் உட்பிரிவைச் சார்ந்த ஜுபாயி, அபூபக்கர் அல்றாஸி உள்ளிட்டோர் கடுமையாக சாடுகின்றனர்.

ஆதாரம் : மஜ்முஉல் பதாவா, பாகம் - 19, பக்கம் 12


இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி, மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறுகின்றார்கள்.


ஷைத்தான் அவனது நம்பிக்கையை மனிதனின் உள்ளத்தில் போடுகின்றான். அவன் அல்லாஹ்வை திக்று செய்தால் பின்வாங்குகின்றான். அல்லாஹ்வை மறந்தால் உள்ளத்தில் ஊடுருவி சலனங்களை தோற்றுவிக்கின்றான். இவ்வாறு ஸஹீஹான ஹதீதுகளில் வந்துள்ளது. இதனை அல்கன்னாஸ் (என்ற ஷைத்தான்) உள்ளத்தில் சலனங்களை (சந்தேகங்களை) ஏற்படுத்துகின்றான் என்ற திருமறை வசனம் உறுதி செய்கின்றது.


ஜின் மனித உடலில் உட்புகுந்து பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தும் என்பது சுன்னத்துல் வல் ஜமாஅத்தின் கோட்பாடாகும் என்று அல்லாமா இப்னு ஹஜர் மக்கி ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.

ஆதாரம் : பதாவா ஹதீதிய்யா, பக்கம் 62


05. தீப்பிடித்தல்

ஷைத்தான் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்தி எரிகாயங்களையும், எரித்தலையும் ஏற்படுத்துகின்றான் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.


நீங்கள் தூங்க ஆரம்பித்தால் விளக்கை அணைத்து விடுங்கள். காரணம், ஷைத்தான் எலியை அனுப்பி விளக்கை வீழ்த்துவான், அது பிற பொருளில் பட்டு தீப்பிடித்து அங்கிகளையும் தாவிப்பிடித்து கரித்துவிடும்.

ஆதாரம் : அபூதாவூத் - 983-3, ஹதீது எண் - (4369)


இதனால்தான் தீப்பிடித்து எரிவதைக் கண்டால் அதான் (பாங்கு) கூறுவது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. அதான் ஒலியை ஷைத்தான் கேட்டால் காற்றுப் பறக்க விரண்டோடுகின்றான் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.


06. சிறு குழந்தைகளுக்கு தொல்லைகள் கொடுத்தல்

எந்தக் குழந்தையையும் ஷைத்தான் தொடாமல் பிறப்பதில்லை. அதனால்தான் அது உரத்து அழுகின்றது தவிர, மரியம் அவர்கள் மகன் ஈஸா (அலைஹிவஸல்லம்)

ஆதாரம் : புகாரீ ஷரீப் 469-6 ஹதீது எண் 3431


பிறக்கின்ற எல்லாப் பிள்ளைகளின் விலாவிலும் ஷைத்தான் விரலால் குத்துகின்றான். அதன் வலியால்தான் பிள்ளைகள் அழுகின்றன. தவிர ஈஸா அலைஹிவஸல்லம் அவர்களையும் விரலால் குத்த எத்தனித்தான். ஒரு திரை விழுந்து தடுத்து விட்டது.

புகாரீ: ஹதீது எண் 2376-3286


07. உணவு, குடிப்பு, உறக்கம் போன்றவைகளில் உறவு கொள்ளல்

மனிதனின் உணவிலும், குடிப்பிலும், உறக்கத்திலும் ஜின், ஷைத்தான் பங்காளியாகின்றன. அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டித்தந்த ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமல் விட்டால் இந்த நிலை ஏற்படும். இன்னும் அல்லாஹ்வின் நினைவுமாறி மதிமயக்கத்தில் கிடக்கும் போதும் இது நடக்கும்.


ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள், நாங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அவையிலிருக்கும்போதும் சரி, அல்லது சாப்பிட அழைக்கப்படும் போதும் சரி அண்ணலார் உணவுத் தட்டில் கையை வைக்கமுன் நாங்கள் உண்ண ஆரம்பிக்க மாட்டோம். ஒரு தினம், ஒரு பெண் யாரோ ஒருவர் பின்னால் விரட்டி வருவது போன்று பெருமானாரின் அவைக்கு வந்து நேராக உணவுத் தட்டில் கைபோட்டாள். உடனே அவள் கையை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் ஒரு கிராமவாசி அவ்வாறே வந்தார். வந்ததும் உணவில் கையைப் போட்டார். அவர் கையையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் விளக்கம் கூறினார்கள்.


ஷைத்தான் இந்த உணவை ஹலாலாக ஆக்கிக்கொள்ள முனைந்தான். எதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதில் அவன் பங்கேற்கிறான்.


ஷைத்தான் இந்தப் பெண்னோடு வந்து இந்த உணவில் பங்கெடுக்க முனைந்தான். அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். பின், கிராமவாசி மூலம் முயன்றான். அப்போதும் அவன் கையைப் பிடித்துக் கொண்டேன். எவன் கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவன் (ஷைத்தானின்) கை அவள் கையுடன் என் கையில் சிக்கியிருக்கின்றது.

ஆதாரம் : முஸ்லிம் ஹதீது எண் 2017


ஒரு மனிதர் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கடைசி கவளத்தை உண்ண முன் பிஸ்மில்லாஹி அவ்வலுஹு வஆகிறுஹு என்று கூறினார். இதைக் கண்ணுற்ற காருண்ய நபியவர்கள் விளக்கம் கூறினார்கள். ஷைத்தான் உனது உணவில் பங்காளியாக இருந்தான். நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியதும் அதுவரை உன்னோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை வாந்தி எடுத்து விட்டான்.

நூல் : அபூதாவூத், இப்னு ஸனிய்யா — பக்கம் 218

அஹ்மத் முஸ்னத் : 336-4


ஒரு மனிதர் நின்றுகொண்டு நீர் அருந்துவதை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கண்டார்கள். உடன் வாந்தி எடுக்குமாறு அவரைப் பணித்தார்கள். அவர் காரணம் கேட்டார். ஒரு பூனை உன்னிடம் சேர்ந்து நீர் அருந்துவதை விரும்புவீரா? என்று அவரிடம் திருப்பிக் கேட்டார்கள். இல்லை என்றார், பூனையைவிட கெட்ட ஷைத்தான் உன்னிடம் சேர்ந்து உனது நீரைக் குடிக்கின்றான் என்று விளக்கம் கூறினார்கள் வேந்தர் நபியவர்கள்.

நூல் : அஹ்மத், முஸ்னத் 366-4, ஹாக்கீம் 108-109-4


மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் விளக்கை அணையுங்கள்! அதன்மீது அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரியுங்கள்! உங்கள் பாத்திரத்தையும் மூடி விடுங்கள்! அப்பொழுதும் அதன்மீது அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரியுங்கள். (மூடி இல்லாவிட்டால்) அதன் (பாத்திரத்தின்) மேல் குறுக்கே ஒரு குச்சியையாவது வையுங்கள்.

நூல் : புகாரி ஷரீப், 336-6


பாத்திரத்தை மூடி விடுங்கள். கஸ்தூரி குப்பியை மூடி வையுங்கள், கதவை மூடி விடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள், மூடிய போத்தலை ஷைத்தான் திறக்க மாட்டான். மூடிய பாத்திரத்தை அவனால் திறக்க முடியாது.

முஸ்லிம் : ஹதீது எண் 2012


இவ்வாறான பொன்மொழிகள் பலநூறு உண்டு. எடுத்துக்காட்டாக சிலதை முன்வைத்துள்ளேன். புரியும் திறனுள்ளவர்களுக்கு இவை போதும்! புத்திகெட்ட மாந்தர்களுக்கு எதுவும் புரியாது. ஜின் ஷைத்தானின் தீங்கிலிருந்து ஷரீஅத் கூறும் வழியில் பாதுகாப்பைப் பெற்று நிம்மதியாக வாழ அல்லாஹ் தௌபீக் செய்வானாக!