السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 11 November 2025

30 ஆண்டுகள் ஹராத்தில் கழித்தவர்,


30 ஆண்டுகள் ஹராத்தில் கழித்தவர், திருமணமும் குழந்தைகளும் வேண்டும் என ஏங்குகிறார். 

​வயதான ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். அவர் என்னுடன் பேசத் தொடங்கியபோது, கடந்த காலத்தில் அவர் செய்த செயல்களை நினைத்து மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் வெளிப்படுத்தினார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவர் அழுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை.

நான் அவரிடம் கேட்டேன்: "உங்களுக்கு வயது எவ்வளவு?"

அவர் சொன்னார்: "ஐம்பது ஆண்டுகள்."

நான் அவரிடம் கேட்டேன்: "ஏன் அழுகிறீர்கள்??"

அவர் சொன்னார்: "நான் என் கதையையும் நான் செய்ததையும் உங்களிடம் சொன்னால், நீங்கள் நம்ப மாட்டீர்கள்."

நான் அவரிடம் சொன்னேன்: "தயவுசெய்து சொல்லுங்கள். நான் நன்றாகக் கேட்பேன், நீங்களே என்னிடம் வந்திருப்பதால், நீங்கள் இன்ஷா அல்லாஹ் உண்மையுள்ளவராக இருப்பீர்கள்."

​அவர் சொன்னார்: "என் கதை நான் இளமையாக, வாலிபப் பருவத்தில் இருந்தபோது தொடங்கியது. அப்போது நான் ஒரு கெட்ட நட்பு வட்டத்தில் சிக்கினேன். தொழில்நுட்பமும் சமூக வலைத்தளங்களும் பரவுவதற்கு முன்பே பெண்களை எப்படி ஏமாற்றுவது, அவர்களுடன் ஹராமான செயல்களை எப்படிச் செய்வது என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். நான் ஒரு கண்ணியமான, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். என்னிடம் ஏராளமான செல்வம் உள்ளது.
​நான் வளர்ந்தபோது, ஒரு வீடு வாங்கினேன், அதில் ஒரு வேலைக்காரரை வைத்தேன். இரண்டு கார்கள் இருந்தன. தினமும் விலைமாதர்களில் ஒருவரை, அவர்களுக்குக் கொடுக்கும் பணத்திற்கு ஈடாக, என் வீட்டிலேயே தங்க வைத்து, அவர்களுடன் இரவுகளைக் கழித்தேன். நான் பயணம் செய்யும்போதும் அல்லது என் சொந்த நாட்டிலும் மனதில் தோன்றக்கூடிய எல்லாவிதமான தீய செயல்களையும் நான் செய்தேன். என் வாழ்நாளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் இப்படியே வாழ்ந்தேன்."
​அவர் பெருமூச்சு விட்டபடி பேச்சை நிறுத்தினார்.
 
நான் அவரிடம் கேட்டேன்: "நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லையா?"

​அவர் சொன்னார்: "நான் உங்களிடம் ஆலோசனை கேட்க வந்த கதையின் ஆரம்பமே இதுதான்.

நான் சொன்னேன்: 'தயவுசெய்து பேசுங்கள். நீங்கள் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும்.'

அவர் சொன்னார்: "நான் ஹராமான செயல்களில் ஈடுபட்டதால் திருமணம் பற்றி ஒருபோதும் நினைக்கவில்லை. ஹலாலையும் ஹராலையும் ஒன்றாகச் சேர்க்க நான் விரும்பவில்லை. ஆனால், நான் தவ்பா (பாவமன்னிப்பு) செய்யத் தீர்மானித்தபோது, ஹராமை விட்டுவிட்டுத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் வாழ்க்கையில் எனக்கு ஓர் அதிர்ச்சியாக இருந்த ஒரு நோய் எனக்கு ஏற்பட்டது. அதனால்தான் நான் உங்களுடன் பேசும்போது என் கட்டுப்பாடில்லாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வருவதைக் கவனிக்கிறீர்கள். இதுதான் என் நிலை. தினமும் இரவு முழுவதும் நான் குர்ஆன் ஓதுகிறேன். அல்லாஹ் என்னை மன்னிக்கவும், எனக்குச் சிறந்ததை ஈடுசெய்யவும் அழுது கொண்டிருக்கிறேன்."

​நான் அவரிடம் கேட்டேன்: "உங்களுக்கு ஏற்பட்ட நோய் என்ன?"

அவர் சொன்னார்: "என் திருமண நாளில், நான் என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை. எனக்கு இயலாமை ஏற்பட்டது, குழந்தைகளைப் பெறுவதற்கான பாக்கியம் மறுக்கப்பட்டது. நான் தவ்பா செய்து, நான் இருந்த பாதையை விட்டு விலக முடிவு செய்த நாளில், எனக்குக் குழந்தைகள் வேண்டும், என் பெயரைச் சொல்ல ஒரு மகன் வேண்டும் என்ற ஆசை இருந்தபோது, இவையனைத்தும் எனக்கு மறுக்கப்பட்டது. நான் மகிழ்ச்சியாக வாழவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் விரும்புகிறேன், ஆனால் என் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இறப்பதற்கு முன்பே இறந்துவிட்டேன் போன்ற உணர்வு எனக்குள் உள்ளது. நான் என் வாழ்நாளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்களுடன் ஹராமான வழியில் கழித்தேன். ஆனால் இன்று ஒரு பெண்ணுடன் ஹலாலான வழியில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன், ஆனால் என்னால் முடியவில்லை."

​பிறகு அவர் திரும்பத் திரும்பச் சொன்னார்: "என் வாழ்க்கை இப்படி இயலாமையுடனும், திருமணம் செய்ய முடியாமலும், என் பெயரைச் சுமந்து என் ஆயுட்காலத்தின் நீட்சியாக இருக்கும் என்றும் அவர்களை வளர்ப்பதில் நான் நன்மையை அடைவேன் என்றும் நான் எதிர்பார்த்த குழந்தைகளைப் பெறும் பாக்கியம் மறுக்கப்பட்டும் முடிவடையும் என்று நான் நினைக்கவில்லை."
​அவர் மௌனமானார்.

நான் அவரிடம் பேசினேன், அவருக்குள் நம்பிக்கையை ஊட்டினேன், அவரிடமிருந்து விரக்தியை அகற்றினேன். அவர் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்விடம் தவ்பா செய்து, தூய்மையான வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் வரை, அல்லாஹ் அவருக்கு உதவுவான், ஆனால் ஹராமின் விளைவுகளையும் அதன் பின்விளைவுகளையும் அவர் சகித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

​பிறகு நான் அவரிடம் சொன்னேன்: "அறிஞர் ஷேக் அலி அல் தன்தாவீ அவர்களிடம், அவர் அதிகம் படித்ததில் இருந்து கற்றுக்கொண்ட மிகச் சிறந்த ஞானம் என்னவென்று கேட்கப்பட்டபோது, அவர் சொன்னதைக் கூறுகிறேன்: 'நான் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாசிக்கிறேன். இப்னுல் ஜவ்ஸி தனது 'சைதுல் காதிர்' (மனதின் வேட்டை) என்ற புத்தகத்தில் கூறியதை விட அழகான ஞானத்தை நான் கண்டறியவில்லை. அவர் கூறுகிறார்: 'கீழ்ப்படிதலின் (தாஆத்தின்) கஷ்டம் மறைந்துவிடும், ஆனால் அதற்கான நன்மை (ஸவாப்) நிலைத்திருக்கும். பாவங்களின் இன்பம் மறைந்துவிடும், ஆனால் அதற்கான தண்டனை நிலைத்திருக்கும். 

அவர் சொன்னார்: "ஆம், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இது உண்மைதான். யாரும் உணர முடியாத ஒரு வேதனையை நான் அனுபவிக்கிறேன்."

​நான் சொன்னேன்: "ஆனால் அல்லாஹ் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கடந்த காலத்தை ஈடுசெய்ய தொடர்ந்து தவ்பா செய்யுங்கள், நற்செயல்கள் செய்யுங்கள், தர்மங்களை அதிகப்படுத்துங்கள். குறிப்பாக நீங்கள் வசதி படைத்தவர் என்பதால்."

அவர் சொன்னார்: "நான் இயலாதவன் என்று என் மனைவி அறிந்ததும், அவளும் என்னைத் தனியே விட்டுச் சென்றுவிட்டாள்."

நான் சொன்னேன்: "இது ஹராமான செயல்களில் ஈடுபட்டதற்கான தண்டனைகளில் ஒன்றாகும். உங்கள் கதை போன்ற பல கதைகள் எனக்குத் தெரியும். ஆனால் விடுதலை அல்லாஹ்விடமிருந்து வருகிறது. 
உங்கள் ஈமான் மற்றும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை பெரியதாக இருக்கட்டும்."

பிறகு சந்திப்பு முடிவடைந்தது.

(அரபு மூலம்: கலாநிதி ஜாஸிம் அல் முதவ்வஃ. தமிழ் வடிவம்: கலாநிதி ஏ. பீ. எம். அப்பாஸ்)

சீதனக் காணியை – கணவன் தனியே விற்கலாமா? | சட்டமும் நீதியும் சொல்லும் உண்மை

 


சீதனக் காணியை – கணவன் தனியே விற்கலாமா? | சட்டமும் நீதியும் சொல்லும் உண்மை!


“மணமகள் பெற்ற சீதனம் கணவனுக்கு உரிமையா?” இல்லை! அது மனைவியின் உரிமை : சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட சொத்து!


முதலில் புரிந்துகொள்ளுங்கள் :


“சீதனம்” என்பது திருமணத்தின் போது மணமகளின் அவரின் திருமண வாழ்வின் நன்மை கருதி பெற்றோரால் அவளுக்கே வழங்கப்படும் காணி, நகை, பணம், சொத்து ஆகியவற்றை குறிக்கும்.


ஆனால் பலர் தவறாக நினைப்பது என்ன தெரியுமா?

“மணமகனுக்கு இதெல்லாம் சொந்தம்தான்” என்று! அது முழுக்க முழுக்க தவறு...! மணமகனுக்கு அதனை நிர்வகிக்கும் உரிமையும் சீவிய உரித்தும் மட்டுமே இருக்கும்.


சட்டம் என்ன சொல்கிறது?


01. Matrimonial Rights and Inheritance Ordinance (Jaffna Tamils) – No. 1 of 1911


இதன்படி, “Dowry property given to the bride remains her exclusive property.

The husband cannot alienate (sell), mortgage, or gift it without her consent.”


அதாவது –

1. சீதனம் காணி மனைவிக்கே முழு உரிமை

2. அதனை கணவன் விற்க முடியாது

3. அதனை கணவன் அடமானம் வைக்க முடியாது

4. அதனை கணவன் நன்கொடையாக கொடுக்க முடியாது


சீதன ஆதனத்தை கணவன் விற்க முயன்றால் என்ன ஆகும்?

👉 அந்த உறுதி சட்டப்படி செல்லுபடியாகாது (Void Transaction)

👉 குறித்த உறுதி இரத்து செய்யப்படும் (Can be cancelled by court)

👉 அதுவே Fraudulent Deed / Cheating ஏமாற்று/மோசடி உறுதி எனக் கருதப்படும்

👉 கணவனுக்கு எதிராக Civil மற்றும் Criminal Action எடுக்கலாம்


நீதிமன்ற தீர்ப்புகள் இதையே உறுதிசெய்கின்றன:


1. Sinnathurai v. Sinnathurai


“Husband has no right to alienate dowry property without the wife’s consent.”


2. Kanapathipillai v. Kanapathipillai


“The husband is merely a custodian or caretaker of dowry property.”


3. Thangarasa v. Nadarasa


“Even if husband manages the dowry land, ownership remains with the wife.”


இதை மீறினால்?


👉 விற்பனை செய்யப்பட்ட உறுதி (deed) இரத்து செய்யப்படும்!

👉 கணவனும் உறுதி வாங்கியவரும் குற்றவாளிகளாகுவர்...!


விதிவிலக்குகள் (Exceptions):


1. மனைவி எழுத்து வடிவில் சம்மதம் அளித்தால் — விற்கலாம்


2. காணி இருவரின் பெயரில் இருந்தால் இருவரும் இணைந்து விற்கலாம்


3. மனைவி மரணமடைந்த பின் – அதனை பிள்ளைகள் விற்கலாம்


ஆனால் மனைவி உயிருடன் இருந்தபோது அவரது சம்மதமின்றி விற்பது சட்டத்துக்கு புறம்பானது...!


நடைமுறையில் என்ன நடக்கிறது?

பல இடங்களில்,

👉 மனைவியின் பெயரில் உள்ள காணியின் உறுதி, கணவன் கையில் இருக்கும்.

👉 பின்னர் “மனைவி ஒப்புதல் தந்தார்” என்று போலி கையெழுத்து போட்டு விற்றுவிடுகிறார்!

இது நேரடியாக மோசடி (Forgery & Cheating) தண்டனைக்குரிய குற்றம்!


மனைவி செய்யக்கூடிய சட்ட நடவடிக்கைகள்:

1️⃣ District Court-இல் Civil Case — Deed cancellation & Declaration of Ownership

2️⃣ Police Complaint / Magistrate Court Case - Cheating / Forgery

3️⃣ Injunction (நீதிமன்ற தடை) காணியை விற்க / மாற்ற தடை


பெண்களின் உரிமையையும் கண்ணியத்தையும் காப்பது சமூகத்தின் கடமை.

அவளுக்குச் சொந்தமானதை பறிப்பது அநீதி மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் தண்டனைக்குரிய குற்றம்!


சுருக்கமாக: முடிவாக சொன்னால்...!

1. சீதனக் காணி மனைவிக்கே சொந்தமானது!

2. அதனை கணவன் தனியாக விற்க முடியாது !

3. மனைவியின் சம்மதம் இல்லாமல் உறுதி நிறைவேற்றுவது மோசடி!

4. சீதன காணியில் கணவனுக்கு சீவிய உரித்து மட்டுமே இருக்கும்.


பெண்களே நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் பெயரில் சீதன உறுதி இருந்தால்,

👉 அதை யாரும் உங்களிடம் இருந்து சம்மதம் இல்லாமல் பெறமுடியாது.

👉 உங்கள் கையெழுத்து இல்லாமல் எதுவும் மாற்றம் செய்ய முடியாது.

👉 அது உங்கள் உரிமை — உங்கள் கண்ணியம்.


இந்த பதிவை பகிருங்கள்

அடுத்த பெண்ணின் உரிமையை காப்பாற்றும் ஒரு முயற்சியாக


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#சீதனம் #DowryLaw #WomenRights #LegalAwareness #SriLankaLaw #TamilLaw #LegalEducation #EmpowerWomen

Monday, 10 November 2025

உங்களுடைய காணி உறுதியில் தவறுகள்



 உங்களுடைய காணி உறுதியில் தவறுகள், பிழைகள் இருந்தால் அது சட்டரீதியாக செல்லுபடியாகுமா...? இதோ சட்டரீதியான தீர்வு இதுதான்...!


நீங்கள் ஒரு காணியை சொந்தமாக வாங்கியிருந்தாலும் அல்லது நன்கொடையாக பெற்றிருந்தாலும், சில சமயங்களில் உறுதியில் சிறியதோ பெரியதோ பிழைகள் (Errors or Mistakes) தோன்றியிருக்கலாம் –


01. பெயர் பிழையாக எழுதப்பட்டிருக்கலாம்,

02. காணியின் பரப்பளவு (Extent) அல்லது எல்லைகள் (Boundaries) தவறாக இருக்கலாம்,

03. காணி அமைந்துள்ள கிராமம், G.N. Division அல்லது நிலஅளவை வரைபட எண் (Plan Number) தவறாக இருக்கலாம்,

04. அல்லது Deed Type itself காணி உறுதியின் வகை தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம்!

05. காணியின் நான்கு பக்க எல்லைகள் தொடர்பான உரிமையாளர்களின் பெயர்கள் பிழையாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம்.


இப்படி ஒரு நிலைமையில் பலர் பதட்டமடைகிறார்கள் —

“இப்போ என்னுடைய உறுதி Deed Cancel ஆகுமா?”

“மீண்டும் புதிதாக உறுதி எழுத வேண்டுமா?”

“இதற்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?”


கவலை வேண்டாம்! இதற்கான சட்டரீதியான தீர்வு நம் நாட்டில் சட்டரீதியாக தெளிவாக உள்ளது.


சட்டத்தில் இதற்கான தீர்வு: Deed of Rectification (திருத்தல் உறுதி)


இது ஒரு திருத்தல் உறுதி (Rectification Deed) எனப்படுகிறது.

இது தவறுகள், எழுத்துப் பிழைகள், விவரப் பிழைகள் போன்றவை திருத்துவதற்காக எழுதப்படும் சட்டபூர்வமான ஆவணம்.


சட்ட அடிப்படை:

“Where through fraud or mutual mistake of the parties, a contract or instrument does not express their real intention, either party may institute an action for rectification.”


அதாவது,

ஒரு உறுதி ஆவணம் (Deed) இருவரின் உண்மையான எண்ணத்திற்கேற்ப எழுதப்படாது இருந்தால், அதனை திருத்துவதற்கான சட்ட உரிமை இருவருக்கும் உண்டு.


இப்படி திருத்தல் உறுதியினை யார் நிறைவேற்றலாம்?


திருத்தல் உறுதி (Rectification Deed) எழுதுவதற்கு மூல உறுதி (Original Deed) இனை எழுதிய அதே தரப்பினர்கள் (Executant & Beneficiary) இணைந்து மூல உறுதியில் கையெழுத்திட்டதைப் போலவே சட்டரீதியாக கையெழுத்திடல் வேண்டும்.


இவ்வாறு திருத்தல் உறுதியானது அறுதி உறுதி, நன்கொடை உறுதி, சீதன உறுதி, வெளிப்படுத்தல் உறுதி, ஆட்சி உறுதி, போன்ற பெரும்பாலானவற்றில் உள்ள பிழைகள் திருத்தம் செய்வதற்காக நிறைவேற்றலாம் (இவற்றில் சட்டரீதியான சில வரையறைகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன) 


அதாவது:

01. விற்பனையாளர் (Vendor) மற்றும் வாங்குபவர் (Purchaser), அல்லது


02. நன்கொடை அளித்தவர் (Donor) மற்றும் நன்கொடை பெற்றவர் (Donee) ஆகிய இருவரும் சேர்ந்து திருத்த ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.


இதனை யார் பதிவு செய்யலாம்?


இது சாதாரண Deed போலவே பிரசித்தி நொத்தாரிசு (Notary Public) மற்றும் சாட்சிகளுடன் (Witnesses) நிறைவேற்றி பதிவு செய்யப்படல் வேண்டும்.


குறித்த திருத்தல் உறுதி நிறைவேற்றத்திற்கு பிறகு காணிப் பதிவகத்தில் (Land Registry) அதே பதிவிலக்கத்தின் (Registration Number) கீழ் திருத்தம் பதிவாகும்.


குறிப்பு:

இந்த உறுதியானது (Deed) பிழைகள் மட்டுமே திருத்துகிறது. உரிமை மாற்றம், புதிய பரிமாற்றம் போன்றவை சேர்க்க முடியாது.


குறித்த பிழையானது பெரியதாக இருந்தால் (எ.கா., வேறு Survey Plan), சில சமயங்களில் நீதிமன்ற உத்தரவு தேவைப்படும் அல்லது பெற்றுக் கொள்ளலாம்.


ஒரு சிறிய உதாரணம்:


உங்கள் Deed-இல் “Survey Plan No. 456/2020” என்று எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் “Plan No. 465/2020” ஆக இருக்க வேண்டும்.

👉 இதனை சரிசெய்ய “Rectification Deed” ஒன்றை எழுதலாம்.


இதன் மூலம் எந்த உரிமையும் மாறாது — பிழை மட்டும் சட்டபூர்வமாக திருத்தப்படும்.


மக்களுக்கான விழிப்புணர்வு:

பலர் Deed-ல் பிழை தெரிந்தாலும் “அது பரவாயில்லை” என நினைத்து அப்படியே விடுகிறார்கள்.

ஆனால், நாளை அந்தக் காணி விற்கும்போது அல்லது வங்கியில் அடமானம் வைக்கும் போது அது பெரிய சட்ட சிக்கலாக மாறும்!


அதனால் —

1. இன்றே உங்கள் Deed-ஐ சரிபாருங்கள்.

2. பிழை இருந்தால் உடனே (Rectification Deed) திருத்தல் உறுதி மூலம் திருத்துங்கள்.

3. எதிர்கால சட்ட சிக்கல்களைத் தவிருங்கள்!


இது ஒரு முக்கியமான சட்ட விழிப்புணர்வு பதிவு.

💬 உங்கள் நண்பர்கள், உறவினர்கள் இதை கண்டிப்பாக அறிய வேண்டும்!

👉 Share பண்ணுங்கள், Comment பண்ணுங்கள் —

ஓர் பிழையால் ஆயுள் முழுக்க நீங்கள் வருத்தப்பட வேண்டாம்!


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#DeedOfRectification #SriLankaLaw #LegalAwareness #KaaniUrudhi #LandLaw #PropertyRights #சட்டவிழிப்புணர்வு #NotaryPublic #LegalFacts #RealEstateSriLanka

Sunday, 9 November 2025

10 வருடம் ஆட்சி செய்தால் காணி உங்களுடையதா?" உண்மையான சட்ட விளக்கம் இதோ...!

 


"10 வருடம் ஆட்சி செய்தால் காணி உங்களுடையதா?" உண்மையான சட்ட விளக்கம் இதோ...!


பலருக்கும் ஒரு தவறான நம்பிக்கை 

“ஒரு காணியை நான் 10 வருடம் ஆட்சி (Possess) செய்தால், அது எனக்கு சட்டப்படி சொந்தமாகிவிடும்!” என்று! ஆனால் உண்மையில் சட்டம் அவ்வாறு சொல்லவில்லை...!


சட்ட அடிப்படை (Legal Basis)


இது Prescription Ordinance (No.22 of 1871) என்ற இலங்கைச் சட்டத்தின் கீழ் வருகிறது.


இதன் படி காணியில் ஆட்சி உரிமை (Prescriptive Title) பெறுவதற்கான விதிகள் மற்றும் வரையறைகள் மிகவும் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.


நீங்கள் ஆட்சி உரிமை பெற வெறுமனே 10 வருடம் ஆட்சி மட்டுமே போதுமானது என்றால்?


நிச்சயமாக இல்லை!


பொது மக்கள் இடையே வெகுவாய் பரவி இருக்கும் “10 வருட ஆட்சி-சொந்த உரிமை” என்ற நம்பிக்கை முழுமையாக தவறு!


சட்டப்படி ஆட்சி உரிமை (Prescriptive Title) பெற தேவையான நிபந்தனைகள்:


1. தொடர்ச்சியான ஆட்சி (Continuous Possession) – குறைந்தது 10 வருடங்கள் இடைவிடாமல் அந்த காணியை தொடர்ச்சியாக நீங்கள் ஆட்சி செய்திருத்தல் வேண்டும்.


2. சொந்த உரிமை போல் ஆட்சி (As of right) – குறித்த காணியில் நீங்கள் இருப்பதற்கான அனுமதி, வாடகை அல்லது விலைக்கு உங்களுக்கு வழங்கப்படாமல், உங்களுடைய சொந்த ஆதனம் போல ஆட்சி செய்திருத்தல் வேண்டும்.


3. வெளிப்படையான ஆட்சியில் இருத்தல் (Open & Notorious) – மற்றவர்களும் நீங்கள் அந்த நிலத்தை உங்களுடைய சொந்த ஆதனம் போன்று உரிமையுடன் பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருத்தல் வேண்டும்.


4. சட்டரீதியான உரிமையாளருக்கு எதிராக (Adverse to the owner) – உண்மையான உரிமையாளரின் அனுமதியில்லாமல் நீங்கள் அந்த ஆதனத்தை அவருடைய ஆட்சிக்கு எதிரான தன்மை கொண்டு உங்களுடைய சொந்த காணி போல் ஆட்சி செய்திருக்க வேண்டும்.


5. உண்மையான உரிமையாளர் (Actual Owner) 10 வருடம் வரை எவ்வித நடவடிக்கையும் எடுத்திராமை – குறித்த காணியின் உண்மையான உரிமையாளர் உங்களை காணியில் இருந்து வெளியேற்ற அல்லது அகற்ற எவ்வித நடவடிக்கையோ வழக்கோ தொடரவில்லையெனில் தான் உங்களுடைய ஆட்சியுரிமை வலுப்படும்.


6. எவ்வித இடையூறுகளும் தடைகளுமற்ற (Undisturbed and Uninterupped) ஆட்சி செய்திரு த்தல் - குறித்த பத்து வருட காலத்தினுள் எவராலும் இடையூறோ தடைகளோ அல்லது உங்களுடைய ஆட்சியில் குழப்பங்களோ ஏற்பட்டிருத்தல் கூடாது.


7. குறித்த காணியின் உரிமையாளரின் முன் அனுமதி வழங்கப்பட்டிருத்தல் கூடாது (No prior permission) - குறித்த காணியின் உண்மையான உரிமையாளர் அந்த காணியில் ஏதேனும் நிபந்தனைகளுடன் உங்களை குடியிருக்க அல்லது ஆட்சிசெய்ய அனுமதித்திருத்தல் கூடாது.


மேலும் சில உட்கிடையான நிபந்தனைகளும் உண்டு.


முக்கிய வழக்குகள் (Case Law Highlights)


01. Gunawardena v. Punchi Banda


“மட்டும் 10 வருடங்கள் ஆட்சி செய்தால் போதாது. அது உண்மையான உரிமையாளரின் அனுமதியில்லாமல், சட்டத்துக்கு எதிராகவும், தொடர்ந்து இருந்தால்தான் உரிமை உருவாகும்.”


02. Abeywardena v. Jayasekara


“Prescription is not a sword but a shield.”

அதாவது – நீயே ஆட்சியுரிமை கோரி வழக்கு தொடங்க முடியாது; ஆனால் யாராவது உன்னைக் காணியில் இருந்து வெளியேற்ற முயன்றால், நீ பாதுகாப்பாக இந்த உரிமையை முன்வைக்கலாம்.


ஆட்சி உறுதி (Deed) என்றால் என்ன?


“ஆட்சி உறுதி” என்பது, நீங்கள் நீண்டகாலமாக ஒரு காணியை உங்களுடையது எனக்கருதி ஆட்சி செய்து வந்ததை குறிப்பிடும் ஒரு சட்ட ஆவணம். ஆனால் இது சட்டத்தால் தானாக உருவாகாது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அல்லது உரிமையாளர் வெளிப்படுத்தல் மூலம் மட்டுமே சொந்த உரிமையாக மாறும்.


உதாரணம் :


"ஒருவர் 12 வருடமாக ஒரு காணியை தன் சொந்த ஆதனமாக கருதி வசித்து வருகின்றார். உண்மையான உரிமையாளர் 12 வருடம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அந்த நபருக்கு “Prescriptive Right” உருவாகலாம். ஆனால் அவர் அந்த காணியை சட்டபூர்வமாக விற்க வேண்டுமானால், நீதிமன்றம் மூலம் அல்லது ஆட்சி உறுதி (Deed) மூலம் உரிமையைப் பெற்றிருத்தல் அல்லது உறுதிப்படுத்தல் வேண்டும்.


விசேட குறிப்பு : 


இந்த சட்டத்தில் ஒரு சில காலவரையறை விலக்களிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வகையில் சட்ட ஏற்பாடு ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடர்பில் விரிவான பதிவு ஒன்றினை மிக விரைவில் தருகின்றேன்.


நீங்கள் கவனிக்க வேண்டியவை :


01. அரச காணி (State Land) மீது Prescription ஆட்சி உரிமை சட்டவலு பெற முடியாது.


02. LDO அல்லது Grant காணிகளும் இதே விதிக்கு உட்படாது.


03. அனுமதியுடன் ஆட்சி செய்தால் (உதாரணம் – வாடகை, lease) ஆட்சி உரிமை கிடையாது.


முடிவாக சொன்னால் : 


“10 வருடம் ஆட்சி செய்தால் காணி என்னுடையது!” என்பது ஒரு சட்ட மூடநம்பிக்கை (Legal Myth)!

உண்மையில் நீண்டகால, அனுமதியில்லாத, வெளிப்படையான, தொடர்ச்சியான ஆட்சி மட்டுமே நீதிமன்றத்தில் Prescriptive Title பெற வழிவகுக்கும்.


சட்டம் அறிந்தால் வாழ்க்கை மாறும்!

கீழே கருத்து பகிருங்கள் – “நீங்கள் இதை முன்பு உண்மை என்று நம்பினீர்களா?”


பகிருங்கள் – மற்றவரும் சட்டத்தின் உண்மை முகத்தை அறியட்டும்!


முக்கிய குறிப்பு : இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


(இந்த சட்ட ஏற்பாடுகள் பல விதிமுறைகள், விதிவிலக்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டது. ஆகவே இந்த சட்டம் சார்ந்து உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் உங்களுடைய சட்டத்தரணியுடன் ஆலோசிக்கவும். மேலும் இந்த பதிவு மட்டும் உங்களுடைய பிரச்சினை தொடர்பில் பொருத்தமான சட்ட ஆலோசனையாக அமையாது என்பதை கருத்தில் கொள்ளவும்.)


நான் சட்டத்தரணி 

குமாரசிங்கம் கம்ஷன் 


#SriLankaLaw #PrescriptionOrdinance #LandDisputes #TamilLawEducation #LegalAwareness #LawPost #KaniUrumai #சட்டவியல் #LegalViralPost

Saturday, 8 November 2025

சுல்தான் சலாஹுத்தீன்

 


#ஹத்தீன் போருக்கு சில நாட்களுக்கு முன்பு, சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) தனது “சாஹிபுல் சுர்தா”வைக் — இன்று நாம் “உள்துறை அமைச்சராக” சொல்வதற்குச் சமமான பதவி அழைத்து கூறினார்கள்:


“ஓ சாஹிபுல் சுர்தா… மக்களிடம் அறிவி: இன்று முதல் யாரும் தங்கள் வீட்டின் கதவுகளை இரவில் மூடி உறங்கக்கூடாது!”


#அந்த அதிகாரி இதைக் கேட்டவுடன் ஆச்சரியப்பட்டார்.

இது மிகவும் வியப்பான உத்தரவு என்பதால் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றான்.

ஆனால் சுல்தான் திடமாகச் சொன்னார்கள்


“நான் உனக்கு உத்தரவிட்டதைச் செய்கின்ற வேலையை மட்டும் பாருங்க.”என்று


🌙 முதல் இரவு… இரண்டாம் இரவு… மூன்றாம் இரவு…


முஅவ்வின்கள் (அழைப்பாளர்கள்) ஊரெங்கும் அறிவித்தனர்:


“இன்றிரவும் உங்கள் வீட்டு கதவுகளை திறந்தே வைக்கவும்.”


#அடுத்த நாள் சுல்தான் அந்த அதிகாரியை அழைத்து மீண்டும் அதே உத்தரவை அறிவிக்கச் சொன்னார்கள்.

மூன்றாம் இரவிலும் அதேபோல் நடந்தது.


🌙 நான்காம் இரவு

சுல்தான் சாஹிபுல் சுர்தாவை மீண்டும் அழைத்து கேட்டார்கள்:


“இவ்வளவு நாட்களில் எந்த ஒரு திருட்டு சம்பவம் உங்களுக்குத் தெரியவந்ததா?”


அதற்கு அவர் பதிலளித்தார்:


“இல்லை, என் அரசே! எதுவும் இல்லை.”


#அந்தச் சிறப்பான தருணத்தில்

சுல்தான் தனது இராணுவத் தலைவர்களை நோக்கி கூறினார்கள்:


“இப்போது போருக்கு அழைப்பை அறிவியுங்கள்!

அல்லாஹ்வின் பெயரில் சொல்கிறேன் 

ஒரு திருட்டு சம்பவம் கூட நடந்திருந்தால், நான் இந்தப் போரை தாமதித்திருப்பேன்!”


🔹 ஏன் இப்படிச் சொன்னார்கள்?


ஏனெனில் ஒரு புத்திசாலி தலைவன் நன்கு அறிந்திருந்தார்கள்

வெற்றி என்பது வலுவான படையால் மட்டும் வராது;

அது உள்ளமைந்த அமைதி, மனஅமைதி,

நியாயம் நிலவும் சமூகத்தால் தான் பெறப்படுகிறது.


சலாஹுத்தீன் (ரஹிமஹுல்லாஹ்) அந்த உள் அமைப்பை நீதி மீது கட்டியிருந்தார்.

அதனால் رعایا அவரை முழுமையாகக் கீழ்ப்படியினர்.

இராணுவம் ஒற்றுமையாக, மன உறுதியுடன் முன்னேறியது.


அவ்வாறே நல்ல தலைவன் சீராக இருந்தால்,

அவரது யாவும் சீராகிவிடும்.


Muhammed Yoosuf Musthafi 

@everyone 

அஸ்டோ நூலகம்

Friday, 7 November 2025

மகத்தான ஸஹாபி

உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு)   அவர்களுக்கு இன்றும் சவூதியில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது என்று!


 #நீங்கள் அறிந்தீர்களா?

மகத்தான ஸஹாபி 


உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு)

 அவர்களுக்கு இன்றும் சவூதியில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது என்று!


🔹 ஆனால் இது எப்படி சாத்தியமானது?

அதற்குப் பின்னால் இருக்கும் “பீர் ரூமா

 (بئر رومة) என்ற கிணறு எப்படி 14 நூற்றாண்டுகளாக தொடரும் ஒரு வஃக் (தன்னார்வச் சொத்து) ஆனது?


🔹 மேலும் இன்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதுக்கு அருகே அவர்களுடைய பெயரில் ஒரு பெரிய ஹோட்டல் எப்படி கட்டப்பட்டது?


இதோ அதன் அற்புதமான வரலாறு 👇


🌴 பீர் ரூமாவின் வரலாறு


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தண்ணீர் மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.


அந்த நேரத்தில் (பீர் ரூமா) என்பது மதீனாவின் மிகப் பெரிய கிணறு. ஆனால் அது ஒரு யூதரின் சொத்து, அவர் தண்ணீரை மக்களுக்குக் கூட ஒரு சொட்டு கூட விலைக்கு மட்டும் விற்பனை செய்தார்!


இதைக் கண்ட உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், அந்தக் கிணற்றை முழுமையாக வாங்க விரும்பினார்கள். ஆனால் யூதர் மறுத்துவிட்டார்.


அப்பொழுது உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

“அப்படியானால், பாதியை எனக்குத் தாருங்கள் ஒரு நாள் எனக்கு, ஒரு நாள் உங்களுக்கு.”


யூதர் அதற்கு சம்மதித்தார்; ஏனெனில் அவர் நினைத்தார், இப்படி செய்தால் விலை மேலும் உயர்ந்து, அதிக லாபம் கிடைக்கும் என்று.


ஆனால் எதிர்பாராத ஒன்று நடந்தது!

உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம் நாளை அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தார்கள் அந்நாளில் மக்கள் இலவசமாக தண்ணீர் எடுக்கலாம் என அறிவித்தார்கள்.


மக்கள் “உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நாள்” அன்று தங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் எடுத்து, “யூதரின் நாள்” அன்று யாரும் போகவில்லை.

இதனால் யூதரின் வியாபாரம் நின்று போனது, அவர் கிணற்றின் மீதிப் பாகத்தையும் விற்க வேண்டிய நிலைக்கு வந்தார்.


அதை உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 20,000 திர்ஹமுக்கு வாங்கி, அல்லாஹ்வுக்காக வக்ப் செய்து விட்டார்கள் முஸ்லிம்கள் இலவசமாக தண்ணீர் பெறுவதற்காக.


ஒரு ஸஹாபி பின்னர் வந்து கிணற்றை அதிக விலைக்கு வாங்க விரும்பினார்கள்.

அதற்கு உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:


 எனக்கு அல்லாஹ் அதிகம் கொடுத்திருக்கிறார் — ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கு நன்மை.”


 🌴 கிணற்றிலிருந்து பேரித்தம் மரங்கள்வரை


காலப்போக்கில் அந்தக் கிணற்றைச் சுற்றி பல பேரீத்தம் மரங்கள் வளர்ந்தன.

முதலில் ஒஸ்மானிய அரசு அதை பராமரித்தது, பின்னர் சவூதி அரசு அதன் கவனிப்பை எடுத்தது.


இப்போது அங்கு 1550 பேரீத்தமரங்கள் உள்ளன.


அந்த மரங்களின் பேரீச்சங்கள் விற்கப்படுகின்றன, அதன் வருமானம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது:


ஒரு பாகம் – ஏழைகளுக்காக

* மற்றொரு பாகம் உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வஃக் கணக்காக வைப்பு செய்யப்படுகிறது.


🏨 பேரீத்தம் மரங்களிலிருந்து ஹோட்டல் வரை


காலப்போக்கில் அந்த வஃக் நிதி பெரிதாக வளர்ந்தது.

பின்னர் அந்த நிதியால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள மையப் பகுதியிலே ஒரு நிலம் வாங்கப்பட்டது.


இன்று அந்த நிலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

அது ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் ரியால்கள் வருமானம் தரும் என மதிப்பிடப்பட்டுள்ளது 

அதில் பாதி ஏழைகள், நலிவுற்றவர்களுக்காக செல்கிறது, மற்ற பாதி மீண்டும் உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வஃக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.


அதிலும் ஆச்சரியமானது 

அந்த நிலம் இன்று வரை அரசுப் பதிவில் “உஸ்மான் இப்னு அஃஃபான் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!


سبحان الله

உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் செய்த ஒரு தானம், இன்னும் இன்றும் நன்மை வழங்கி வருகிறது!


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:


 “ஒவ்வொரு நபிக்கும் ஒரு தோழன் இருக்கிறார்கள், என் தோழன் ஜன்னாவில் உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு.”


 இது நம்மை கண்கலங்கச் செய்யும் ஒரு வரலாறு —

சதகா ஜாரியா (நிலையான நன்மை தரும் தானம்) என்பதின் உண்மையான அர்த்தத்தை இது கற்பிக்கிறது.


Muhammed Yoosuf Musthafi