السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 4 November 2025

பாஸ் பட்டணத்தில் தோன்றிய குத்பு அப்துல் அஸீஸ் அத்-தப்பாஹ்

 


பாஸ் பட்டணத்தில் தோன்றிய குத்பு அப்துல் அஸீஸ் அத்-தப்பாஹ் எனும் வியத்தகு மனிதம்! 


தொகுப்பு: மெளலவீ எச்.எம் அப்துர்றஷீத் றப்பானீ 


பெரியார்களின் பார்வையில் ஒரு குத்பாக போற்றப்படுபவர்கள் அப்துல் அஸீஸ் அத்-தப்பாஹ் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஸுப்ஹானல்லாஹ்!  அவர்கள் பற்றிய அறிமுகம் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் என் பார்வைக்கு தந்த “அல்இப்ரீஸ்” எனும் ஞானக்கிரந்தம் மூலமாக கிடைக்கப் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்! அன்றிலிருந்து அவர்கள் பற்றிய ஆய்வும்,தேடலும் அதிகரித்தது “அல்இப்ரீஸ்” எனும் நூல் ஆழமான தத்துவங்கள் பற்றி விபரிக்கும் ஆய்வு நூலும்,இன்பமான நூலுமாகும் வாசித்துக் கொண்டு செல்லும் போது பல இடங்களில் சொல்லப்படும் தத்துவத்தை புரிந்து கொள்வது மிகக்கடினமானதாக இருக்கும் ஆனாலும் சில இடங்களில் தேன் சுவையாக இருக்கும் என்பது நான் பெற்ற அனுபவமாகும். 


அப்துல் அஸீஸ் தப்பாஹ் எனும் தங்கம் ஹிஜ்ரீ 1095 துல்கஃதா மாதம் பிறை 20 இல் மொரோக்கோவிலுள்ள “பாஸ்” எனும் இடத்தில் பிறந்தார்கள் ஹிஜ்ரீ 1131 ஸபர் மாதம் பிறை 11 இல் பிறந்த இடத்திலேயே வபாத் மறைந்தார்கள். “அபூ பாரிஸ்” (பாரிஸ் நாட்டின் தந்தை) எனும் புனைப்பெயருடையவர்கள் 


சிறு குறிப்பு: 

பாரிஸ் என்பது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும் ஆகும்.  


தப்பாஹ் நாயகம் அவர்கள் மாலிக் மத்ஹபை பின்பற்றியவர்களும், அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையை கொண்டவர்களுமாகும் இப்ரீஸ் எனும் கிரந்தம் அஹ்மத் இப்னுல் முபாறக் எனும் அவர்களது மாணவர் மூலமாக எழுதப்பட்ட ஒன்றாகும் அதற்கு அவர்களிட்ட பெயர் “அல்இப்ரீஸ் பீ மனாகிபி அப்தில் அஸீஸ்”  இப்ரீஸ் எனும் நூல் அப்துல் அஸீஸ் அவர்களின் அகமியம் பற்றியதாகும் என்பது அதன் பொருளாகும் இது அறபு மொழி நூலாகும் அதன் பிரதியை இணையத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் பார்த்து பயனடையுங்கள். 


அப்துல் அஸீஸ் நாயகத்தின் சிறு வாழ்க்கை குறிப்பு அவர்கள் பற்றிய தகவல்களை படிக்கும் ஒவ்வொருவருக்கும் அதிசயமானதாகவே இருக்கும் 


அவர்கள் பாஸ் நகரத்திலுள்ள மிக உயர்ந்த,பரிசுத்தமான குலத்தை சேர்ந்தவர்கள் சிறு வயது முதலே கல்விகள் அவர்களை வந்தடைய ஆரம்பித்தது எவரிடமும் அவர்கள் கால் மடித்து கல்வி கற்கவில்லை 


كان أميًّا، لا يقرأ ولا يكتب، ولكن كان يخوض في العلوم التي تعجز عنها العقول، وذكرت له كرامات ومكاشفات كثيرة.


அவர்கள் ஓதவோ,எழுதவோமாட்டார்கள் ஆனால் மனித புத்திகளால் இயலாத அறிவுஞானங்களில் மூழ்கியவர்களாக இருந்தார்கள் அவர்களுக்கு அற்புதங்களும்,அதிக திரைநீக்க ஆற்றல்களும் இருந்தன.


அவர்கள் குத்பு எனும் கிரீடத்திற்குச் சொந்தக்கார ராகவும் ஒரு ஞானியின் ஆசீர்வாதத்தினால் உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். 


இறைஞான ரகசியங்களை அள்ளி வீசக்கூடியவர்களாகவும்,புரியாத விடயங்களுக்கு ஞானத்தின் ஆழம் சென்று

பதிலளிப்பவர்களாகவும், இருந்தார்கள் இன்னும் அவர்களது மாணவர்களில் மிக முக்கியமானவரும் அல்இப்ரீஸ் எனும் வார்த்தைகளை நூல்

வடிவாக்கியவருமான அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களது ஒவ்வொரு இஸ்லாமிய மதம் சார்ந்த கேள்விகளுக்கும் மிக ஆழமான அற்புதமான விளக்கம் அளிப்பவர்களாகவும் இன்னும் அவர்களது உள்ளத்தில் ஊசலாடுபைவகளுக்கும்,

சிந்தனைகளில் நகர்ந்து செல்லும் வினாக்களுக்கும் பதில் கூறுபவர்களாகவும், பல நாட்களுக்கு, பல வருடங்களுக்கு முன் நடந்தவைகளை பற்றி அறிவிப்பவர்களாகவும் இருந்தார்கள். 


🔹அப்துல் அஸீஸ் நாயகத்தின் தனித்துவமான தன்மை!  


அவர்கள் இஸ்லாமில் உள்ள எவ்வினாக்கள் தொடுக்கப்பட்டாலும் அதற்கு விடையளிப்பதுடன் அவ்விடைகள் எந்நூலில்? எத்தனையாம் பக்கத்தில் ? வரக்கூடியது என்பதையும் தனது குத்பிய்யத் மூலம் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள். 


🔹அவர்களது “மகாம்” உயர் நிலை! 


தன்னைப் பற்றி நாயகம் அவர்கள் கூறும் போது, 


وكان قدس الله سره يقول لتلميذه سيدي ابن المبارك: يا ابن المبارك، لو عاش إبراهيم الدسوقي من زمانه إلى الآن ما أدرك صاحبك عبد العزيز من الصباح إلى الآن.


இப்னுல் முபாரகே! 

இப்றாஹீம் தஸூகீ நாயகம் அவர்கள் (நான்கு குத்புமார்களில் ஒருவர்) அவர்களது காலத்திலிருந்து இப்போது நானிருக்கும் காலத்தின் வரை உயிர் வாழ்ந்திருந்தாலும் உங்களுடைய தோழர் அப்துல் அஸீஸ் அவர்களை எத்திக் கொண்டிருக்கமாட்டார்கள். என்றார்கள் அப்துல் அஸீஸ் தப்பாஹ் நாயகம் அவர்கள். 


🔹நாயகம் அவர்களது பிறப்பிட்கு முன்னால் விலாயத்திற்கான அடித்தளமும்,பெரிய மனிதர் ஒருவரால் பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட அமானித அன்பளிப்பும்.


அப்துல் அஸீஸ் தப்பாஹ் நாயகம் அவர்களை தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ அவர்களை தெரிந்து கொள்ள வேண்டும். 


‎سيدي العربي الفشتالي

ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ 


பெரிய அறிஞரும் இறைஞானியுமாகும் எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணிப்பவர்கள் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகளை எடுத்து வளர்த்து அவர்களுக்கு செலவுகள் பல செய்து அவர்களை மிக அன்பு வைப்பவர்களாகவும்

இருந்தார்கள். பஸ்தாலீ நாகயம் அவர்கள் வலீயாகவும்,சட்டமேதையாகவும்,அறிவை தேடி வருபவர்களுக்கு அறிவுகளை வழங்குபவர்களாகவும் இருந்தார்கள் அவர்களிடம் அறிவு பெற்றவர்களில் ஒருவராக அபூ மஸ்ஊத் தப்பாஹ் இருந்தார்கள் ஒரு நாள் அறிவின் சபை முடிந்ததும் ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ நாயகம் அபூ மஸ்ஊத் தப்பாஹ் அவர்களை அழைத்து அபூ மஸ்ஊதே! நான் உங்களுக்கு எனது சகோதரியின் மகள் பாரிஹாவை திருமணம் செய்து தர விரும்புகின்றேன் அவர்கள் அதை ஒப்புக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது அவர்கள் இருவருக்கும் பிறந்தவர்களே பாஸ் நகரத்து ஜோதி அஷ்ஷெய்க் அல்குத்பு அப்துல்அஸீஸ் தப்பாஹ் நாயகம் அவர்கள். 


 🔹ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ அவர்கள் கொடுத்த அமானித அன்பளிப்பு 


ஷெய்யிதுல் அறபீ பஸ்தாலீ நாயகம் அவர்கள் சில நேரங்களில் அபூ மஸ்ஊத் தப்பாஹ் நாயகம் அவர்களுக்கும் பாரிஹா நாயகி அவர்களுக்கும் 


وكان يقول لنا أنه يتزايد عندكم ولدا اسمه عبد العزيز له شأن عظيم في الولاية . 


உங்கள் இருவருக்கும் அப்துல் அஸீஸ் எனும் பெயருடைய ஒருவர் மகனாகப் பிறப்பார் அவருக்கு விலாயத்தில் பெரிய அந்தஸ்த்து உண்டு என்றார்கள். 


 🔹அமானித அன்பளிப்பு 


وكان قبل ولادته أوصى لأبويه سيدي ومولاي العربي الفشتالي بأمانة، وقال لهما: سيزيد عندكما عبد العزيز، فأعطوه هذه الأمانة، وكانت هذه الأمانة هي شاشيةٌ وسباطٌ، فحفظوهما حتى حملتْ به أمه الشريفة، فلما حملت به، ووضعته، تربى في حجريهما، حتى بلغ سن الرشد، وصام من ذلك العام، وألهم الله سبحانه وتعالى أمه، فأعطته الأمانة التي أوصى بها مولاي العربي، وقال قدس الله سره: فأخذتها، وجعلت الشاشية على رأسي، والسباط في رجلي، فحصلت لي سخانةٌ عظيمة حتى دمعت عيناي، وعرفتُ ما أشار به سيدي العربي، وفهمتُ إشارته والحمد لله رب العالمين،


வபாஃ எனும் நோயில் மரணத்தை எத்திக் கொள்ள முன்னால் பஸ்தாலீ நாயகம் அவர்கள் மகான் அப்துல் அஸீஸ் அவர்களின் பெற்றோரை அழைத்து இந்த அமானித அன்பளிப்பை தங்களது மகன் பிறந்து வளர்ந்து வரும் காலப்பகுதியில் அவர்களிடத்தில் ஒப்படைக்கும் படி தொப்பி ஒன்றும் காலணி ஒன்றையும் ஒப்படைத்தார்கள் அந்த அமானிதத்தை தாய் அவர்கள் பாதுகாத்து அப்துல் அஸீஸ் நாயகத்திடம் ஒப்படைத்தார்கள் அவர்கள் அதைப் பெற்று தலையில் தொப்பியையும்,காலில் காலணியையும் அணிந்து கொண்டார்கள் அதை அணிந்த போது உடல் கடுமையான சூட்டை உணர்ந்தது கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது என்றார்கள். பஸ்தாலீ நாயகம் அவர்கள் கூறிய ரகசியத்தை புரிந்து கொண்டேன் என்றும் சொன்னார்கள் அல்ஹம்துலில்லாஹ். 


( அல்இப்ரீஸ் பக்கம் 4 )


மகானவர்கள் மறையும் போது அவர்களுக்கு வயது 35 ஆகும் . ஸுப்ஹானல்லாஹ்.

மேலும்