#ஹத்தீன் போருக்கு சில நாட்களுக்கு முன்பு, சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹிமஹுல்லாஹ்) தனது “சாஹிபுல் சுர்தா”வைக் — இன்று நாம் “உள்துறை அமைச்சராக” சொல்வதற்குச் சமமான பதவி அழைத்து கூறினார்கள்:
“ஓ சாஹிபுல் சுர்தா… மக்களிடம் அறிவி: இன்று முதல் யாரும் தங்கள் வீட்டின் கதவுகளை இரவில் மூடி உறங்கக்கூடாது!”
#அந்த அதிகாரி இதைக் கேட்டவுடன் ஆச்சரியப்பட்டார்.
இது மிகவும் வியப்பான உத்தரவு என்பதால் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றான்.
ஆனால் சுல்தான் திடமாகச் சொன்னார்கள்
“நான் உனக்கு உத்தரவிட்டதைச் செய்கின்ற வேலையை மட்டும் பாருங்க.”என்று
🌙 முதல் இரவு… இரண்டாம் இரவு… மூன்றாம் இரவு…
முஅவ்வின்கள் (அழைப்பாளர்கள்) ஊரெங்கும் அறிவித்தனர்:
“இன்றிரவும் உங்கள் வீட்டு கதவுகளை திறந்தே வைக்கவும்.”
#அடுத்த நாள் சுல்தான் அந்த அதிகாரியை அழைத்து மீண்டும் அதே உத்தரவை அறிவிக்கச் சொன்னார்கள்.
மூன்றாம் இரவிலும் அதேபோல் நடந்தது.
🌙 நான்காம் இரவு
சுல்தான் சாஹிபுல் சுர்தாவை மீண்டும் அழைத்து கேட்டார்கள்:
“இவ்வளவு நாட்களில் எந்த ஒரு திருட்டு சம்பவம் உங்களுக்குத் தெரியவந்ததா?”
அதற்கு அவர் பதிலளித்தார்:
“இல்லை, என் அரசே! எதுவும் இல்லை.”
#அந்தச் சிறப்பான தருணத்தில்
சுல்தான் தனது இராணுவத் தலைவர்களை நோக்கி கூறினார்கள்:
“இப்போது போருக்கு அழைப்பை அறிவியுங்கள்!
அல்லாஹ்வின் பெயரில் சொல்கிறேன்
ஒரு திருட்டு சம்பவம் கூட நடந்திருந்தால், நான் இந்தப் போரை தாமதித்திருப்பேன்!”
🔹 ஏன் இப்படிச் சொன்னார்கள்?
ஏனெனில் ஒரு புத்திசாலி தலைவன் நன்கு அறிந்திருந்தார்கள்
வெற்றி என்பது வலுவான படையால் மட்டும் வராது;
அது உள்ளமைந்த அமைதி, மனஅமைதி,
நியாயம் நிலவும் சமூகத்தால் தான் பெறப்படுகிறது.
சலாஹுத்தீன் (ரஹிமஹுல்லாஹ்) அந்த உள் அமைப்பை நீதி மீது கட்டியிருந்தார்.
அதனால் رعایا அவரை முழுமையாகக் கீழ்ப்படியினர்.
இராணுவம் ஒற்றுமையாக, மன உறுதியுடன் முன்னேறியது.
அவ்வாறே நல்ல தலைவன் சீராக இருந்தால்,
அவரது யாவும் சீராகிவிடும்.
Muhammed Yoosuf Musthafi
@everyone
அஸ்டோ நூலகம்







